புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னுள் மையம் கொண்ட புயல்! - 4 - தயாராகுங்கள்... நவம்பர் 7 மொத்தமும் சொல்கிறேன்!
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அமெரிக்க ஃபார்மா கம்பெனிகளின் கைக்கூலியைப்போல் என்னைச் சித்திரிப்பது அரசியல் பித்துக்குளித்தனம். காழ்ப்போ பொறாமையோ, காசு வாங்கிவிட்ட விசுவாசமோ எனக்கில்லை. மானுடச் சேவை எனப் போற்றப்படும் கல்வி, மருத்துவம், அரசியல் இவையனைத்தையும் கண்மண் தெரியாது வியாபாரமாக மாற்றிவிட்ட கயவர்கள்பால் மாளாக் கோபமுண்டு எனக்கு.
அலோபதிபால் அசைக்க முடியாத நம்பிக்கையோ, மற்ற ஆசிய மருத்துவ முறைகள்பால் வெறுப்போ உள்ளவன் அல்ல நான். 21 வயதுமுதல் 12 வருடங்களாக அல்சர் எனப்படும் குடல் புண்ணால் அவதிப்பட்டவன் நான். அலோபதி மருந்துகளை நம்பி 12 வருடங்கள் காத்திருந்தேன். மருந்துகளின் பெயர்களும் வீரியமும் மாறி மாறி வந்தவண்ணமிருந்தன. வலி போனபாடில்லை. இது நோயல்ல, பிணி. வாழ்நாள் முழுக்கவும் அனுபவிக்க வேண்டியதுதான் என்றது அலோபதி விதி. அறுவை சிகிச்சைக்குத் தயாராக இருக்கும்படி அறிவுரைகள் தந்தனர். நானும் தயாரானேன். வலி என்னைத் தயார்ப்படுத்திவிட்டது என்பதே உண்மை.
நன்றி
விகடன்
அலோபதிபால் அசைக்க முடியாத நம்பிக்கையோ, மற்ற ஆசிய மருத்துவ முறைகள்பால் வெறுப்போ உள்ளவன் அல்ல நான். 21 வயதுமுதல் 12 வருடங்களாக அல்சர் எனப்படும் குடல் புண்ணால் அவதிப்பட்டவன் நான். அலோபதி மருந்துகளை நம்பி 12 வருடங்கள் காத்திருந்தேன். மருந்துகளின் பெயர்களும் வீரியமும் மாறி மாறி வந்தவண்ணமிருந்தன. வலி போனபாடில்லை. இது நோயல்ல, பிணி. வாழ்நாள் முழுக்கவும் அனுபவிக்க வேண்டியதுதான் என்றது அலோபதி விதி. அறுவை சிகிச்சைக்குத் தயாராக இருக்கும்படி அறிவுரைகள் தந்தனர். நானும் தயாரானேன். வலி என்னைத் தயார்ப்படுத்திவிட்டது என்பதே உண்மை.
நன்றி
விகடன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அதற்கும் ஒரு வருடம் முன்பாக கேரளம் சென்றபோது என் நண்பர் ஒருவரின் கேரள நாட்டு வைத்தியர் எனக்கு வாழைக்காய்ப் பொடி தந்தார். நிவாரணம் தேடி அலைந்த எனக்கு ஒரு Placebo Effect-ல் வலி குறைந்ததுபோல் ஒரு மனமாயை. உடல் பருமன் கூடியதே அன்றி வலி மீண்டும் குடலைக் கலக்கியது. திருநெல்வேலிக்கு ஒரு கார் ஷோரூம் திறப்பு விழாவிற்கு வலியோடு சென்று திரும்பிய என்னுடன், ஒரு டாக்டர் அம்மையார் பிரயாணம் செய்தார். நான் பல மாத்திரைகள் விழுங்குவதைப் பார்த்த அவர், நலம் விசாரித்தார். விரைவில் அறுவை சிகிச்சைக்குத் தயார் ஆகிக்கொண்டிருப்பதைச் சொன்னேன். தயவுசெய்து அறுவைசிகிச்சை வேண்டாம் என்றதோடு நிறுத்தாமல், என்னை அடுத்த நாள் பரிசோதித்தார்.
தான் அலோபதி படித்திருந்தாலும் தற்போது ஆயுர்வேத ஆராய்ச்சியில் முழுமையாக ஈடுபட்டிருப்பதையும் சொன்னார். அறுவை சிகிச்சை, அலோபதி மாத்திரைகளுக்கு மாற்றாக ஒரு பத்தியமும் சொன்னார். மாட்டுப்பால் சார்ந்த பண்டங்களை உண்பதை அறவே தவிர்க்கச் சொன்னார். ஒரு வாரம் பூசணிக்காய்ச் சாறு குடிக்கச் சொன்னார். அவர் அறிவுரைப்படி செய்தேன், பக்க விளைவுகள் ஏதும் இருக்காது என்ற நம்பிக்கை இருந்ததனால். ஒரே வாரத்தில் அறுவை சிகிச்சையைத் தள்ளிப் போடும் தைரியம் வந்தது. ஒரே மாதத்தில் வலி மறந்தே போனது. இது நடந்து 29 வருடங்கள் ஆகின்றன. இன்றுவரை அல்சர் திரும்பவில்லை.
தான் அலோபதி படித்திருந்தாலும் தற்போது ஆயுர்வேத ஆராய்ச்சியில் முழுமையாக ஈடுபட்டிருப்பதையும் சொன்னார். அறுவை சிகிச்சை, அலோபதி மாத்திரைகளுக்கு மாற்றாக ஒரு பத்தியமும் சொன்னார். மாட்டுப்பால் சார்ந்த பண்டங்களை உண்பதை அறவே தவிர்க்கச் சொன்னார். ஒரு வாரம் பூசணிக்காய்ச் சாறு குடிக்கச் சொன்னார். அவர் அறிவுரைப்படி செய்தேன், பக்க விளைவுகள் ஏதும் இருக்காது என்ற நம்பிக்கை இருந்ததனால். ஒரே வாரத்தில் அறுவை சிகிச்சையைத் தள்ளிப் போடும் தைரியம் வந்தது. ஒரே மாதத்தில் வலி மறந்தே போனது. இது நடந்து 29 வருடங்கள் ஆகின்றன. இன்றுவரை அல்சர் திரும்பவில்லை.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இப்போதுவரை நான் பாலை உணவில் சேர்ப்பதில்லை. எப்போதாவது மோர், அதுவும் சமீபமாகச் சேர்த்துக்கொள்கிறேன். இதனால் பால் வியாபாரிகள் என்பால் கோபப்படத் தேவையில்லை. என் அனுபவத்தின்மூலம் நான் சொல்ல வருவது எல்லோரும் பாலைத் தவிர்க்க வேண்டும் என்பதல்ல. சிலருக்கு, பால் உடலுக்கு ஒவ்வாத விஷயமாகிறது என்பதே. இதை lactose intolerance என்று அலோபதி சொல்கிறது. உணவே மருந்தாக வேண்டும் என்ற கூற்றை நம்புபவன்தான் நான். ஆனால், அதைப் பிரித்தறியும் பகுத்தறியும் வைத்தியரும் வேண்டும் என்று வலியுறுத்துபவன்.
சரியான ஆதாரங்கள் இல்லாமல் திடீர் வைத்தியர்களாகுபவர்கள் அபாயமானவர்கள். அவர்கள் அலோபதிக்கு வக்காலத்து வாங்கினாலும் சரி, வேறு வைத்திய முறைகளுக்கு வக்காலத்து வாங்கினாலும் சரி, மருந்து விநியோகம் வரைமுறையின்றித் தனிமனிதர்கள் தண்ணீர்ப் பந்தல் போல் வைத்து அளவின்றி விநியோகம் செய்வது ஏற்புடையதல்ல. அதனாலேயே நிலவேம்புக் கஷாய விநியோகத்தை வைத்தியர் துணையின்றி நாமே விநியோகம் செய்ய வேண்டாம் என்று என் நற்பணி இயக்கத்தாரிடம் வேண்டிக்கொண்டேன்.
சரியான ஆதாரங்கள் இல்லாமல் திடீர் வைத்தியர்களாகுபவர்கள் அபாயமானவர்கள். அவர்கள் அலோபதிக்கு வக்காலத்து வாங்கினாலும் சரி, வேறு வைத்திய முறைகளுக்கு வக்காலத்து வாங்கினாலும் சரி, மருந்து விநியோகம் வரைமுறையின்றித் தனிமனிதர்கள் தண்ணீர்ப் பந்தல் போல் வைத்து அளவின்றி விநியோகம் செய்வது ஏற்புடையதல்ல. அதனாலேயே நிலவேம்புக் கஷாய விநியோகத்தை வைத்தியர் துணையின்றி நாமே விநியோகம் செய்ய வேண்டாம் என்று என் நற்பணி இயக்கத்தாரிடம் வேண்டிக்கொண்டேன்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அலோபதி ஃபார்மாக்கள் உலக அளவில் செய்யும் பல ஊழல்கள் இன்று வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுவிட்டன. எந்த நோயையும் பூரணமாய் குணப்படுத்திவிடும் மருந்துகளில் மேற்கத்திய ஃபார்மாக்கள் ஆர்வம் காட்டாததன் காரணம் எல்லையற்ற பேராசைதான். மேற்கத்திய ஆராய்ச்சி மையங்கள் சில வெளியிடும் எல்லாத்தகவல்களையும் நம்பிவிட முடியாது. காரணம், அந்த ஆராய்ச்சிமையங்களுக்குப் பல ஃபார்மா கம்பெனிகளே பண உதவிகள் செய்கின்றன என்பதுதான்.இதனால், பச்சைப் பொய் சொல்லாவிடினும், இந்த ஆராய்ச்சி மையங்கள் சொல்லாமல் விட்டுவிடும் உண்மைகள் பொய்களைவிட அபாயம் விளைவிக்கும். எத்தகைய மருத்துவமாயினும் மக்கள் விழிப்புடன் கேள்விகேட்டு, தேவையென்றால் மட்டுமே மருந்துகளை உட்கொண்டால் போதும்.
காய்ச்சல் வராதிருக்க முன்னேற்பாடாக, தேவையற்ற மருந்துகளை உண்பதை தயவாய்த் தவிர்க்கவும். நீரிழிவு நோய் (Diabetes) இல்லாதவர்கள் எதற்கு இன்சுலின் போட்டுக்கொள்ள வேண்டும்? சில மருந்துகள் வரும்முன் காக்காது. இதுவே என் கருத்து.
சரி, மூன்று வாரமாக 30, 40 வருட முனகல்களை முனகியாகிவிட்டது. குறைகளையும் கொள்ளைகளையும் பட்டியலிட்டுப் பிரயோஜனமில்லை. ஆவன செய்வோம் என்ற அதிகாரிகளின் குரல் நம்மை சாந்தப்படுத்தாது. `ஆவன ஆகும்போது ஆகும்’ என்று காத்திருந்தது போதும். ஆகவேண்டியதையெல்லாம் அவசர சிகிச்சையாகச் செய்யவேண்டிய தருணம் வந்துவிட்டது. ஆயுதப் புரட்சி ஒரு புராதன வழி. ஆள்சேதமும் அதிகமாகக்கூடும். அதைவிட நவீன முயற்சிகள்மூலம் சமுதாய சாதனைகள் செய்து காட்டப்பட்டு, கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாகிவிட்டது.
காய்ச்சல் வராதிருக்க முன்னேற்பாடாக, தேவையற்ற மருந்துகளை உண்பதை தயவாய்த் தவிர்க்கவும். நீரிழிவு நோய் (Diabetes) இல்லாதவர்கள் எதற்கு இன்சுலின் போட்டுக்கொள்ள வேண்டும்? சில மருந்துகள் வரும்முன் காக்காது. இதுவே என் கருத்து.
சரி, மூன்று வாரமாக 30, 40 வருட முனகல்களை முனகியாகிவிட்டது. குறைகளையும் கொள்ளைகளையும் பட்டியலிட்டுப் பிரயோஜனமில்லை. ஆவன செய்வோம் என்ற அதிகாரிகளின் குரல் நம்மை சாந்தப்படுத்தாது. `ஆவன ஆகும்போது ஆகும்’ என்று காத்திருந்தது போதும். ஆகவேண்டியதையெல்லாம் அவசர சிகிச்சையாகச் செய்யவேண்டிய தருணம் வந்துவிட்டது. ஆயுதப் புரட்சி ஒரு புராதன வழி. ஆள்சேதமும் அதிகமாகக்கூடும். அதைவிட நவீன முயற்சிகள்மூலம் சமுதாய சாதனைகள் செய்து காட்டப்பட்டு, கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாகிவிட்டது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பழைய பெரியவர்களை அப்படியே நகலெடுக்காமல் அவர்களின் கருத்துகளை வடிகட்டி இன்றைய உலகுக்கு ஏற்றபடி வடிவமைத்துக்கொள்ள சிற்பிகள் தயாராகிவிட்டனர். அவர்கள் 18 வயது முதல் 35 வயதுக்குள்ளானவர்கள். அவர்கள்பால் எனக்குப் பெருநம்பிக்கை உண்டு. என் வாழ்க்கையில் பெருமையாக நான் நினைத்துக்கொள்ளும் சிந்தனைகள், லட்சியங்கள் எல்லாம் இந்த வயது வரம்புக்குள் எனக்கு ஏற்பட்டவைதாம். அனுபவமும் வயதும் கூடக் கூட அச்சிந்தனைகளை, லட்சியங்களை மற்றவருக்கும் புரியும்படி வார்த்தைப்படுத்தும் பக்குவம் அல்லது நயம் வந்திருக்கலாம்.
ஆகவே, இளைஞர் படை ஒன்று காத்திருப்பதை என்னால் உணரமுடிகிறது. அவர்களை ஒருங்கிணைக்க வேண்டிய கடமையும் தேவையும் எனக்கு வந்துவிட்டது. வரும் நவம்பர் 7-ம் தேதி அவர்களுடன் தொடர்புகொள்ளத் தடையில்லாமல் உரையாடும் வழி ஒன்றை ஏற்படுத்தி அறிவிக்கவுள்ளேன். அவர்களுடன் அளவளாவுவதற்கல்ல; பாசறைகள், பயிற்சி முகாம்கள் ஏற்படுத்தி ஆகவேண்டிய காரியங்களுக்கான செயல்திட்டம் தீட்ட. திறமையாளர்கள், படிப்பாளிகள், உழைப்பாளிகள் அனைவரையும் சாதிவரையறைகள் தாண்டி ஒன்றுகூட வைக்கும் சங்கநாதம் தனியே தேவையில்லை. அது ஏற்கெனவே நம் மனங்களில் ரீங்கரிக்கத் துவங்கி நாள்கள் பல ஓடிவிட்டன.
ஆகவே, இளைஞர் படை ஒன்று காத்திருப்பதை என்னால் உணரமுடிகிறது. அவர்களை ஒருங்கிணைக்க வேண்டிய கடமையும் தேவையும் எனக்கு வந்துவிட்டது. வரும் நவம்பர் 7-ம் தேதி அவர்களுடன் தொடர்புகொள்ளத் தடையில்லாமல் உரையாடும் வழி ஒன்றை ஏற்படுத்தி அறிவிக்கவுள்ளேன். அவர்களுடன் அளவளாவுவதற்கல்ல; பாசறைகள், பயிற்சி முகாம்கள் ஏற்படுத்தி ஆகவேண்டிய காரியங்களுக்கான செயல்திட்டம் தீட்ட. திறமையாளர்கள், படிப்பாளிகள், உழைப்பாளிகள் அனைவரையும் சாதிவரையறைகள் தாண்டி ஒன்றுகூட வைக்கும் சங்கநாதம் தனியே தேவையில்லை. அது ஏற்கெனவே நம் மனங்களில் ரீங்கரிக்கத் துவங்கி நாள்கள் பல ஓடிவிட்டன.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இனியும் தாமதியாது கூடுவோம். பட்டிமன்றம் போட்டுப் பேச அல்ல; செயல் திட்டங்கள் தீட்ட. திட்டங்களுடன் நான் கூட்ட நினைப்பது வெறும் தொண்டர் கூட்டத்தை மட்டுமல்ல; தலைவர்களின் பெருங்குழுவை. இதை ஒரு தியாகமாக நினைத்து முன்வருபவர்கள் இப்போதே தயவுசெய்து ஒதுங்கிக் கொள்ளுங்கள். தியாகமாக நினைத்து வருபவர்கள் எதையோ இதற்காக இழப்பது போன்ற உணர்வுடன் வந்து எம்மைத் தேவையில்லாமல் கடன்படச் செய்வார்கள். தமிழகத்திற்குச் செய்ய வேண்டிய கடமையாக நினைத்து வருபவர்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன். செய்வார்கள் எனக் காத்திருந்தது போதும். நம்மால் முடியும், என்னால் முடியும். என்னால் முடியும் என்றால் உன்னாலும் முடியும்.
நமது இயக்கத்துடன் சேர்ந்து பணி செய்யப் பல இயக்கங்கள் தயாராக உள்ளன. அவர்களுடன் பேசியதில் வந்த புரிதலும் அடக்கமும், நாம் அவர்களுடன் சேர்ந்து பணி செய்து தமிழகத்திற்கு பலம் சேர்க்கவேண்டும் என்பதே. உதாரணமாக, இரண்டு வருடங்களாக இயங்கிவரும் அறப்போர் இயக்கம் பல கோணங்களில் ஊழலை நேர்கொண்டு தாக்கும், நீக்கும் இயக்கம். இதற்குப் பின்னால் வெறும் வீரம் மட்டுமல்ல... அயராத துப்பறிவும் புலனாய்வும் தீராத்தேடலும் இருக்கின்றன.
நமது இயக்கத்துடன் சேர்ந்து பணி செய்யப் பல இயக்கங்கள் தயாராக உள்ளன. அவர்களுடன் பேசியதில் வந்த புரிதலும் அடக்கமும், நாம் அவர்களுடன் சேர்ந்து பணி செய்து தமிழகத்திற்கு பலம் சேர்க்கவேண்டும் என்பதே. உதாரணமாக, இரண்டு வருடங்களாக இயங்கிவரும் அறப்போர் இயக்கம் பல கோணங்களில் ஊழலை நேர்கொண்டு தாக்கும், நீக்கும் இயக்கம். இதற்குப் பின்னால் வெறும் வீரம் மட்டுமல்ல... அயராத துப்பறிவும் புலனாய்வும் தீராத்தேடலும் இருக்கின்றன.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
உதாரணத்திற்கு... சென்னை, எழும்பூர்க் கண் மருத்துவமனையின் இயக்குநர் கையும் களவுமாய்ப் பிடிபட்ட தொலைபேசி உரையாடலின் தொகுப்பு. ஒலிப்பதிவு செய்த அறப்போர் இயக்கத்திற்கு நன்றி.
நாம் தொடர்பில் இருக்கவும், நம் இயக்கத்தார் மக்களுடனும் என்னுடனும் தொடர்புகொள்ள வசதியாக இருக்கவும் சில ஏற்பாடுகள் நடக்கின்றன. அதைப் பற்றிய அறிவிப்பு, வரும் நவம்பர் 7-ம் தேதி வெளியாகும்.
`இந்த வாரம் எழுத அதிகமில்லையா... என்ன இப்படிச் சுருக்கிவிட்டீர்கள்?’ எனக் கேட்கலாம். அதற்கான பதில் கேள்விகளாய் வரும். நானே பேசிக்கொண்டிருப்பதைவிட, கேள்விகளுக்குப் பதில் சொல்ல யத்தனிப்பது ஒரு விதத்தில் கொள்கை விளக்கமாக மாற வாய்ப்புண்டு. ஒத்த சிந்தையுள்ள பல நண்பர்களும், மாற்றுச் சிந்தைகளைக் கொண்ட சில தோழர்களும் கேள்வி மாலையைத் தொடுக்கத் துவங்குவார்கள். அவர்களின் கேள்விகளுக்கு இணையாகவோ அல்லது அத்தரத்தையும் விஞ்சியோ கேள்விகள் கேட்க நீங்களும் முற்படலாம். அடுத்த வாரத்திற்கு அடுத்த வாரம் முதல் நீங்களும் நானும் உரையாட, என் புயல் நம் புயலாகும். வாருங்கள், நியாயத்தூள் கிளப்புவோம்!
- உங்கள் கரையை நோக்கி!
நன்றி
விகடன்
நாம் தொடர்பில் இருக்கவும், நம் இயக்கத்தார் மக்களுடனும் என்னுடனும் தொடர்புகொள்ள வசதியாக இருக்கவும் சில ஏற்பாடுகள் நடக்கின்றன. அதைப் பற்றிய அறிவிப்பு, வரும் நவம்பர் 7-ம் தேதி வெளியாகும்.
`இந்த வாரம் எழுத அதிகமில்லையா... என்ன இப்படிச் சுருக்கிவிட்டீர்கள்?’ எனக் கேட்கலாம். அதற்கான பதில் கேள்விகளாய் வரும். நானே பேசிக்கொண்டிருப்பதைவிட, கேள்விகளுக்குப் பதில் சொல்ல யத்தனிப்பது ஒரு விதத்தில் கொள்கை விளக்கமாக மாற வாய்ப்புண்டு. ஒத்த சிந்தையுள்ள பல நண்பர்களும், மாற்றுச் சிந்தைகளைக் கொண்ட சில தோழர்களும் கேள்வி மாலையைத் தொடுக்கத் துவங்குவார்கள். அவர்களின் கேள்விகளுக்கு இணையாகவோ அல்லது அத்தரத்தையும் விஞ்சியோ கேள்விகள் கேட்க நீங்களும் முற்படலாம். அடுத்த வாரத்திற்கு அடுத்த வாரம் முதல் நீங்களும் நானும் உரையாட, என் புயல் நம் புயலாகும். வாருங்கள், நியாயத்தூள் கிளப்புவோம்!
- உங்கள் கரையை நோக்கி!
நன்றி
விகடன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|