புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2 - Page 2 Poll_c10என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2 - Page 2 Poll_m10என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2 - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2 - Page 2 Poll_c10என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2 - Page 2 Poll_m10என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2 - Page 2 Poll_c10 
137 Posts - 43%
ayyasamy ram
என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2 - Page 2 Poll_c10என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2 - Page 2 Poll_m10என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2 - Page 2 Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2 - Page 2 Poll_c10என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2 - Page 2 Poll_m10என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2 - Page 2 Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2 - Page 2 Poll_c10என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2 - Page 2 Poll_m10என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2 - Page 2 Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2 - Page 2 Poll_c10என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2 - Page 2 Poll_m10என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2 - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2 - Page 2 Poll_c10என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2 - Page 2 Poll_m10என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2 - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2 - Page 2 Poll_c10என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2 - Page 2 Poll_m10என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2 - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2 - Page 2 Poll_c10என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2 - Page 2 Poll_m10என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2 - Page 2 Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2 - Page 2 Poll_c10என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2 - Page 2 Poll_m10என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2 - Page 2 Poll_c10 
3 Posts - 1%
mruthun
என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2 - Page 2 Poll_c10என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2 - Page 2 Poll_m10என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2 - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2


   
   

Page 2 of 2 Previous  1, 2

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 12, 2017 7:14 pm

First topic message reminder :

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 2 - Page 2 ZTMUWeh8RiupsEVIXf5J+8p1
ஒரு வாரமாகக் கடும் காய்ச்சல். வழக்கமான காய்ச்சல்தான். சென்னை நகரவாசிகளுக்குப் பழகிப்போன காய்ச்சல். இங்கு சாதி மத பேதமின்றி அரசாங்க உதவியுடன் தவறாமல் வருடா வருடம் விநியோகிக்கப்படுவது தொற்று நோய்தான். கோடீஸ்வரனாகவே இருந்தாலும், சாக்கடைக்கு ஒன்றரை கிலோமீட்டர்தாண்டி வாழ்ந்துவிடமுடியாத அளவுக்கு திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஊழல் மாநகர் சென்னை. இது அரை நூற்றாண்டுக் காலமாய்ப் பெருகிவரும் மாசு. இன்று சுத்தம் செய்யும் வேலையைத் தொடங்கினால் இதைச் சரிசெய்துவிடலாம் என்ற நம்பிக்கை வருவதற்கே 20ஆண்டுகளாகும். நிற்க.

சாக்கடையாற்றின் (பழைய அடையாறு) அருகே செவாலியே சிவாஜி அவர்களின் மணிமண்டபத் திறப்பு விழாவில் நண்பர் ரஜினி அவர்கள் பேசியதற்கான என் விளக்கம். இது, ‘ரஜினிக்குக் கமல் சூளுரை’ பாணி விளக்கம் அல்ல. இதை நீங்கள் அப்படி எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. அவரும் அப்படி எடுத்துக்கொள்ளமாட்டார். ஏனெனில் எங்களுக்குள் உள்ள நட்பு, மூன்றாமவர் புகுந்து கெடுத்துவிட முடியாத புரிதல். ‘வாங்க ரஜினி, வாங்க கமல்’ என அறிமுகமாகி, காலப்போக்கில் ‘வா... போ...’ என்று நெருங்கி, இன்று மீண்டும் ‘வாங்க... போங்க’வில் வந்து நிற்கிறோம். அப்படியென்றால் இருவருக்குமான அந்த ‘வா போ’ இணக்கம் இப்போது இல்லையா என்று கேட்டால், அப்படி அல்ல. இருவரும் ஒருவர்மீது மற்றவர் கொண்ட மரியாதையால்... பிற்காலத்தில் பெரிய மனிதர்களாக மாறக்கூடும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு. அந்த வயதிலேயே நாங்கள் அதைப் புரிந்துகொண்டு ஆயத்தமானது, இந்த வயதை எட்டியபின் திரும்பிப்பார்த்தால் எங்களுக்கே வியப்புதான்.
நன்றி
விகடன்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 12, 2017 7:25 pm

கிராமத்தில் எத்தனையோ இளைஞர்கள் பிசினஸ் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு, ‘அதற்கேற்ற வேலை கிடைத்தால்தான் போவேன்’ எனக் காத்திருக்கிறார்கள். எந்த வேலை கிடைத்தாலும் செய்வதில் தவறில்லை. ஆனால், நான் சொல்வது குலத்தொழிலை அல்ல. ‘எங்கப்பா செஞ்சார், அதுக்காக நான் செய்கிறேன்’ என்று செய்யாதீர்கள். அது வேறுவழி. அதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். பரம்பரைத்தொழிலில் இஷ்டம் இருந்தால் செய்யுங்கள். அப்படிப்பார்த்தால் நான் வக்கீலாக வந்திருக்க வேண்டும். இல்லையென்றால், புரோகிதம் செய்திருக்க வேண்டும். ஆனால், அவற்றில் எனக்கு ஆர்வம் இல்லை.

சில கலைத்தொழிலாளர்களை ஊருக்குள் விடாமல் மந்தைவெளிகளில் நிறுத்தி வைத்திருந்தனர். அந்த வம்சத்துக்குள்போய் நான் சேர்ந்துகொண்டேன். நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். ‘இவ்வளவு சம்பளம் கொடுத்தா நாங்ககூடத்தான் சந்தோசமா வருவோம்’ என்று சிலர் கேலி பேசலாம். நான் வரும்போது அவ்வளவு கொடுக்கவில்லையே. `அரங்கேற்றம்’ படத்தில் 60 நாள்கள் வேலைக்குப் போனேன். சம்பளம் 500 ரூபாய். நான் சேர்ந்த புதிதிலும் கூத்தாடி என்றுதானே கேலி பேசினார்கள். சினிமா உலகிலிருந்து பல முதல்வர்கள் வந்தபிறகும் அப்படித்தானே பேசுகிறார்கள். பேசுபவர்கள் பேசட்டும், தொழிலில் அவமானமே கிடையாது. ‘தெர்மாகோல்’ தொழில்நுட்ப வாதிகள் தொழில் சார்ந்த பயிற்சிப்பட்டறைகள் இதுவரை எத்தனை நடத்தியிருக்கிறார்கள்?

ஆனால், இவை எவற்றையும் மனதில் கொள்ளாமல் அதே கூவத்தூர் மனநிலையிலேயே இவர்கள் இருப்பது எங்கு கொண்டுபோய் விடும் தெரியுமா? ‘ஓ அப்படித்தான் போலிருக்கு உலக நடப்பும். இனி இதில் என்ன அடிச்சு எடுக்க முடியுமோ எடுக்கலாம்’ என மக்களும் நினைத்துவிட்டால், நாம் எப்படிப்பட்ட கூட்டமாக மாறுவோம். நான் என்னையும் சேர்த்தேதான் சொல்கிறேன்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 12, 2017 7:26 pm

இதை நேற்றே ஏன் பேசவில்லை’ என்கிறார்கள். பேசியிருக்கிறேன். அன்று என்னைவிடப் பெரிய குரல்கள் இருந்ததால் அந்தச் சத்தம் போதவில்லை. ஆனால், இன்று என்னைப்போல் பல குரல்கள் சேர்ந்து கேட்கும்போது, அவை ஒரே பெரிய குரலாக உங்களுக்குத் தெரிகிறது. அதற்கு உங்களால் பதில் பேச முடியாத நிலையில் இருக்கிறீர்கள். அதனால், கேள்விக்கு மறுப்பு சொல்வதை விட்டுவிட்டு, ‘இவன்ட்டல்லாம் போய்...’ என்று தரம்தாழ்ந்து சத்தம் போடுகிறீர்கள். எம்.ஜி.ஆர் எந்தக் காலகட்டத்திலாவது தரம்தாழ்ந்து பேசியிருக்கிறாரா? அதேபோல், அண்ணாவும் சரி. தரம்தாழ்ந்து பேசுபவர்களை அதட்டுவார்கள். அந்தத்தன்மைகள் குறைந்துகொண்டே வருகின்றன.

‘`அம்மா செத்துப்போனதுல இருந்து இந்த ஆட்சி வேண்டாம் வேண்டாம்னு இந்தாளு சொல்லிக்கிட்டே இருக்கார்’’ என்கிறார்கள். நான் மட்டுமா சொல்கிறேன், ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் சொல்கிறது. அவர்களுக்குக் காதுகொடுத்திருந்தால், அண்ணாயிசத்தைப் படித்திருந்தால், இந்நேரம் நீங்கள் ஆட்சியை விட்டு இறங்கியிருப்பீர்கள். ‘அண்ணாயிசமா’ என்று உங்களில் பலர் அதிர்ச்சியாவீர்கள் என்று எனக்குத் தெரியும்.

‘குடும்பத்துடன் பார்க்கவேண்டிய அனைவரையும் மகிழ்விக்கும் ஜனரஞ்சகமான படம்...’ என்ற அறிவிப்பு சினிமா போஸ்டர்களில் இருக்கும். ஆனால் படம், குடும்பத்துடன் பார்க்க முடியாதவாறு இருக்கும். டிக்கெட் வாங்கிப் படத்தைப் பார்த்து முடித்தபிறகு ‘ஏன் அப்படிச் சொன்னீர்கள்’ என்று கேட்கமுடியாது. இ்ன்றைய அரசியல் கட்சிகளின் கொள்கை விளக்கங்கள், தேர்தல் அறிக்கைகள் அப்படித்தான் உள்ளன.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 12, 2017 7:27 pm

ஆனால், எம்.ஜி.ஆர், அ.தி.மு.க-வின் கொள்கை விளக்கத்தை ‘அண்ணாயிசம்’ என்ற பெயரில் ஒரு நூலாக வெளியிட்டார். அதில் மொழி, அரசியல், பொருளாதாரம், நெசவாளர், விவசாயம்... எனப் பல துறைகளுக்குமான தங்களின் அரசியல் கொள்கைகளைக் குறிப்பிட்டிருந்தார். அவர் அதை வெளியிடும்போது, ‘இது பத்தவே பத்தாது’ எனச் சொல்லி அண்ணாயிசத்தைக் கிண்டலடித்தனர். முக்கியமாக, கிண்டலடித்தவர் சோ. ஒருவேளை அது வக்கீல் மொழியில் இல்லாமல் பாமர மொழியில் இருந்ததால்கூட அது கிண்டலுக்கு உள்ளாகியிருக்கலாம். 395 ஷரத்துகளுடன் கூடிய இந்திய அரசியலமைப்பைப் படிக்கும்போது அவர் வெளியிட்டது சின்ன புத்தகம்தான். ஆனால், அவருக்கு நிறைய ஆசைகள் இருந்தன என்பதை அண்ணாயிசத்தின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. நடக்கும், நடக்காது, இயலும், இயலாது எனப் பல விஷயங்களை அதில் ஆசைப்பட்டுச் சொல்லியிருக்கிறார். அதில் சொல்லப்பட்டிருக்கிற விஷயங்கள் எதையுமே அவருக்குப் பிறகு வந்தவர்கள் கடைப்பிடிக்கவில்லை. கட்சியின் கொள்கை விளக்கப்புத்தகம் வேர்க்கடலை மடிக்கும் பேப்பர் ஆகிக்கொண்டிருக்கிறது. அதில் ஒரு ஆசையைக்கூட நிறைவேற்றுவதற்கான முயற்சியை எடுக்கவில்லை, தற்போதைய ஆட்சியாளர்கள்.

அதில் குறிப்பிட்டிருக்கும் ஒரு முக்கியமான கொள்கை விளக்கக் குறிப்பை அவர் வார்த்தைகளிலேயே சொல்கிறேன்...


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 12, 2017 7:27 pm

‘மக்களாட்சித் தத்துவத்தில் மக்களே இறுதி எஜமானர்கள். அவர்களால் நாடாளுமன்றத்திற்கோ சட்டமன்றத்திற்கோ அல்லது அதுபோன்ற, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படுகின்ற எல்லா அமைப்பு முறைகளிலும் மக்கள் பிடிப்பு இறுதியானது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், தேர்ந்தெடுத்த மக்களின் நம்பிக்கையை இழந்துவிடும்போது, அல்லது மேற்கொள்ளப்பட்ட கடமைகளிலிருந்தோ, பொறுப்புகளிலிருந்தோ வழுவிவிடும்போது அவர்களைத் திருப்பி அமைக்கின்ற உரிமை, அவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும். அதற்கு வழிவகை செய்யத்தக்க முறையில் இன்றைய அரசியல் சட்டத்தில் தகுந்த திருத்தம் தேவை என்று அண்ணா தி.மு.கழகம் வலியுறுத்துகிறது.’

அதாவது, தாங்கள் தேர்ந்தெடுத்த ஓர் எம்.எல்.ஏ, ஓர் எம்.பி-யின் மீது அவருக்கு வாக்களித்த மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டால், அவரைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் உரிமை அந்த மக்களுக்கு உண்டு என்பதுதான் அ.தி.மு.க.வின் கொள்கை. அப்படியென்றால் டாஸ்மாக், நீட், ஹைட்ரோ கார்பன், குடிநீர்த் தட்டுப்பாடு... இப்படி எங்கெங்கு காணினும் போராட்டம், ஆர்ப்பாட்டம். கூடவே ஊழல், குதிரை பேரம்... என்று ஒட்டுமொத்தத் தமிழக மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட, எம்.ஜி.ஆரின் பெயரைச்சொல்லி ஆட்சி நடத்தும் இவர்கள் ‘அண்ணாயிச’த்தின்படி இந்நேரம் ஆட்சியைத் துறந்திருக்க வேண்டும்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 12, 2017 7:28 pm

‘எம்.ஜி.ஆர் சொன்னதற்கு இப்ப என்ன வேல்யூ, அவர்தான் இல்லையே’ என்று கேட்கலாம். அவர் உருவாக்கி வைத்த கட்சி இருக்கிறதே. அவரின் பெயரைச் சொன்னால் வீறுகொண்டு எழுபவர்கள் யாரும் கட்சிப் பொறுப்புகளில், ஆட்சியில் இல்லாமலிருக்கலாம். இவர்களை எழுந்து உட்காரவைக்கக்கூடிய விஷயம் பதவியும் பதவிமூலம் வரக்கூடிய பொருளும் என்று மக்கள் புரிந்துகொண்டுவிட்டார்கள்.

இந்தச் சோகத்தை, துரோகத்தை அவர்களின் கூடாரத்துக்குள் போய்த்தான் பேசியாக வேண்டும். அந்தக் கூடாரத்தை எந்த உலோகத்தை வைத்துச் செய்திருக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. அது எஃகாக இருந்தாலும் சரி, இரும்பாக இருந்தாலும் சரி, எதில் கட்டியிருந்தாலும் அதை உருக்கி வேறொரு அரசியல் கருவி செய்துவிடவேண்டும். அதற்கான காலம் வந்துவிட்டது. அதை மக்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதைச் சொல்ல நீ யார் என்று கேட்கும் ஆட்சியாளர்களுக்கு என் பதில்: நான் மக்களில் ஒருவன், அவர்களே நான்.

- உங்கள் கரையை நோக்கி!
நன்றி
விகடன்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக