புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 ! Poll_c10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 ! Poll_m10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 ! Poll_c10 
21 Posts - 66%
heezulia
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 ! Poll_c10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 ! Poll_m10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 ! Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 ! Poll_c10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 ! Poll_m10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 ! Poll_c10 
63 Posts - 64%
heezulia
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 ! Poll_c10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 ! Poll_m10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 ! Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 ! Poll_c10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 ! Poll_m10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 ! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 ! Poll_c10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 ! Poll_m10இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 ! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !


   
   
seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Wed Oct 18, 2017 8:29 pm

(இந்த தொடர் வாசக மனநிலையில் தான்  எழுதப்படுகிறது. அதனால் குறைபாடுகள் இருக்கலாம். மன உளவியல் நிபுணர் ஷாலினி அவர்களின் தாக்கம் அதிகமாகவே இருக்கும்.  பாலியல் சிக்கல்கள் குறித்தான விவாதங்களை முன்னெடுப்பதே இதன் நோக்கம் )

மனிதக்குழந்தை 1 1/2   வயதில் தான் முழுவளர்ச்சியை எட்டுகிறது. அதாவது ஆடு, மாடு போன்ற உயிரினங்களின் குட்டிகள் பிறக்கும்போதே பெற்றிருக்கும் வளர்ச்சி அது. அதனாலேயே குழந்தைகளை இந்த ஒன்றரை வயது வரை மிக கவனமாக கையாள வேண்டிய சூழல் உருவாகிறது. இன்றைய சூழலில் குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் சவாலானதாக உள்ளது. அளவில்லாத பொறுமையும் , கவனமும், நேரமும் தேவைப்படுகிறது. கூட்டுக்குடும்ப அமைப்பு சிதைவடைந்த நிலையில்  தனிக்குடித்தனங்களில் இது இன்னும் சவாலானது.

இயற்கையின் நியதிப்படி   குழந்தைகள் பிறப்பதற்கு நாம் வெறும் கருவிதான். நமக்கு பிறந்ததாலேயே நமது அடிமைகள் போல படிப்படியாக நமது விருப்பங்களை, கனவுகளைத் திணிக்கிறோம். குழந்தைகளை அதன் போக்கில் வளர அனுமதித்தாலே போதும் அவர்கள் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவார்கள்.

வளர வளர குழந்தைகளின் சிறகுகளை வெட்டிக்கொண்டே இருக்கிறோம். அப்புறம் என் குழந்தைக்கு பறக்கவே தெரியவில்லை என்று குறைபட்டுக் கொள்கிறோம். இன்றைய குழந்தைகளின் விளையாடும் நேரம்  அவர்களிடமிருந்து பிடுங்கப்பட்டிருக்கிறது. முதலில் அவர்கள் விளையாடுவதற்கான வெளி இல்லை. குழந்தைகள் மட்டுமல்ல இளைஞர்கள் , பெண்கள் , முதியவர்கள் என யாருக்குமே அவர்களுக்கான வெளிகள் இல்லை. என்ன தான் பார்த்து பார்த்து கட்டினாலும் வீடு ஒரு கூண்டுதான். கூண்டுக்குள் இருந்து கொண்டு சுதந்திரத்தைப் பற்றி பேச முடியுமா ? முன்பு வீட்டிற்கு வெளியே அமைக்கப்பட்ட திண்ணைகள் ஒரு பொது வெளியை உண்டாக்கின. ஆயிரம் பேருக்கு ஒரு விளையாட்டு அரங்கத்தையும் , ஒரு நூலகத்தையும் உறுதி செய்யுங்கள் சமூகத்தில் குற்றங்கள் பெருமளவு குறைந்து விடும். ஒரு ஆரோக்கிய சமூகம் உருவாகும்.

கதைகள். நமது தாத்தாக்களும் , பாட்டிகளும் ஏன் நமது அப்பாக்களும் , அம்மாக்களும் கூட படிக்காதவர்களாக இருக்கலாம்.  ஆனால் இரவில் கதைகள் சொல்லாத நாட்களே இருந்ததில்லை. எல்லாவற்றுக்கும் கதைகள் இருந்தன. இக்கதைகள் நமது கற்பனை குதிரைகளை ஓட விட்டன. அக்கதைகளின் வாயிலாக நாம் பெற்றவை ஏராளம். பெரும்பாலான கதைகளில் ராஜாவும் , அரக்கனும் தவறாமல் இடம்பெறுவார்கள். அப்புறம் மனிதர்களின் பேராசை குறித்து நிறைய கதைகள் சொல்லப்பட்டன. உண்மையையும் , நேர்மையையும் , நீதியையும் , தர்மத்தையும் வலியுறுத்தியே நிறைய கதைகள் சொல்லப்பட்டன. இக்கதைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நம் கடமை. இரவு இருட்டிற்கானது. இங்கே நிலவிற்கும் , நட்சத்திரங்களுக்கும் மட்டுமே இடமுண்டு. வேறு ஒளிகளுக்கு இடமில்லை. அப்படியான இரவுகளில் நட்சத்திரங்களின் ஊடாக கதைகள் கேட்ட தருணங்கள் அற்புதமானவை. கடைசியாக எப்போது நட்சத்திரங்களைப் பார்த்தீர்கள் ?

வானம் பார்த்தல் என்பது அவ்வளவு அலாதியானது. சூரிய உதயம் ,  சூரிய மறைவு , வெவ்வேறு நிறங்களாலான,  வடிவங்களையுடைய மேகங்கள், வளர்பிறை நிலவு , தேய்பிறை நிலவு, பறவைகள்  என அவ்வளவு இருக்கின்றன. எதற்கும் நேரமில்லாமலேயே நமது பயணம் இருக்கிறது. நாமே பார்க்காத போது நமது பிள்ளைகளுக்காச் சொல்லிக் கொடுக்கப்போகிறோம் ? குழந்தைப் பருவத்தில் கேட்கும் கதைகளுக்கும் , அதன் பிறகான வாழ்விற்கும் தொடர்பிருப்பதாகச் சொல்கிறார்கள். விளையாடத்தான் அனுப்ப மாட்டேங்கிறோம். குறைந்தபட்சம் கதைகளாவது சொல்வோம். அதற்கு முதலில் நாம் கதைகள் படிக்கத் தொடங்க வேண்டும். தேடினால உள்ளூர் கதைகள் முதல் உலக கதைகள் வரை கிடைக்கக்கூடிய காலகட்டத்தில் தான் வாழ்கிறோம்.

அறிவியல்படி 14 வயதுவரை பிள்ளைகளை குழந்தைகள் என்றே வகைப்படுத்த வேண்டும் என்கிறார்கள். 14 வயதுவரை குழந்தைகள் பெற்றோர்களின் தொடுதலையும் , அரவணைப்பையும் எதிர்ப்பார்க்கிறார்கள். அவ்வாறு கிடைக்காத போது ஏங்குகிறார்கள். உண்மையில் குழந்தை வளர்ப்பு என்ற பெயரில் வன்முறை தான் குழந்தைகள் மீது ஏவப்படுகிறது. மூன்று வயதிலேயே தனக்கு வேண்டியதை தானே செய்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

சிறிய வயதிலேயே அறிவாகவும் தெளிவாகவும் பேசுகிறார்கள் தான். அதற்காக எல்லா வேலைகளையும் அவர்களே செய்து கொள்ள வேண்டும் , எல்லாவற்றையும் புரிந்து கொள்ள வேண்டும் , தவறுகளே செய்யக்கூடாது என எதிர்பார்ப்பது முட்டாள்தனம். ஆனால் இதைப் படிப்படியாக பேசித்தான் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். 14 வயதிற்குள்ளாக ஆணாக இருந்தாலும் , பெண்ணாக இருந்தாலும் அவர்களுடைய பணிகளை அவர்களே செய்து கொள்ளும் வகையில் பழக்க வேண்டும். ஆனால் ஒவ்வொன்றாக. வீட்டு வேலைகள் உட்பட. இன்று வரை வீட்டு வேலைகள் ஆண் வேலைகள் , பெண் வேலைகள் என்று பிரிந்தேதான் கிடக்கின்றன. இதில் முதலில் மாற்றம் நிகழ வேண்டும். வீட்டு வேலைகளில் பேதங்கள் ஏதும் இல்லை. எல்லா வேலைகளையும் எல்லோரும் பகிர்ந்து செய்ய வேண்டும். ஆண் குழந்தைகளுக்கும் சமையல் கற்றுத்தர வேண்டும் , பெண் குழந்தைகளையும் பொருட்கள் வாங்க கடைகளுக்கு அனுப்ப வேண்டும். இன்றைய பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளிடம் பேசுவதற்கு கூட நேரம் ஒதுக்க முடியாத பரபரப்பில் இருக்கிறார்கள். ஆனாலும் நேரம் ஒதுக்கித்தான் ஆக வேண்டும். குழந்தைகளிடம் படிச்சயா ? சாப்பிட்டயா ? இதை தவிர நாம் அதிகம் பேசுவதேயில்லை. இதை தாண்டியும் அவர்களிடம் பேச வேண்டும். அந்தந்த வயதில் உருவாகும் சிக்கல்களை, பிரச்சனைகளை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

கேள்விகள். குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதில்களை அளிக்க வேண்டும். தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்பது தான் அவர்கள் இயல்பு. மற்ற கேள்விகளுக்கு கொடுக்கும் மரியாதையை அவர்களின் உடல் சார்ந்த கேள்விகளுக்கும் தர வேண்டும்.குழந்தைக்கு கண், காது, மூக்கு பற்றி சொல்லித்தரும் போதே பால் உறுப்புகள் பற்றியும் எளிய மொழியில் சொல்லித்தர வேண்டும். இது அசிங்கம் இதை தொடக்கூடாது என விரட்டாமல் , ' இந்த உறுப்பு இதற்காக உள்ளது.  கண் , காது போல இதுவும் ஒரு உறுப்பு தான். நீ தொடக் கூடாது. ஏதேனும் பிரச்சனை னா அம்மா கிட்ட தான் சொல்லனும். அம்மா தொடலாம் ; மத்தவங்க தொடக்கூடாது ' என்று புரிய வைக்க வேண்டும். ஆண் குழந்தை , பெண் பாலுறுப்பை பற்றி கேள்வி கேட்பதும் , பெண் குழந்தை , ஆண் பாலுறுப்பை பற்றி கேள்வி கேட்பதும் ( நான் உச்சா போறது இப்படி இருக்கு , என் பிரண்டுக்கு மட்டும் அப்படி இருக்கு ?) இயல்பு. நாம் தான், நீ ஆண் , அவள் பெண் , நீ பெண் , அவன் ஆண் அப்படி தான் இருக்கும் என்று சொல்லித்தர வேண்டும்.  அதைவிட்டு விட்டு மூனு இலை விடலை கேட்கிற கேள்விய பாரு ? என முடக்க கூடாது. யாராக இருந்தாலும்  தானாக கற்றுக்கொள்வது முதலில் தவறாகவே இருக்கும்.  அதன் பிறகு தான் எது சரி என்று தெரிய வரும். சரியான வழிகாட்டி இருந்தால் ஆரம்ப தவறுகளுக்கு இடமிருக்காது. நாம் தான் நம் பிள்ளைகளுக்கு வழிகாட்டிகள்.

உடைகள். உடைகள் விசயத்தில் நாம் பெரும் தவறு செய்கிறோம்.பாலின சமத்துவம் வேண்டும் என கொடி பிடிக்கிறோம். ஆனால் நாம் அணிகின்ற உடைகள் கூட சமமாக இல்லை. ஆண்களுக்கும் , பெண்களுக்கும் பாலுறுப்பில் மட்டுமே வேறுபாடு.ஆனால் உடைகளில் எதற்கு இவ்வளவு வேறுபாடு ? நமது சமூகத்திலும் சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரை கூட ஆண் , பெண் இருபாலரும் பொதுவான ஒரே மாதிரியான உடைகளையே அணிந்திருக்கிருக்கிறார்கள். இப்போதும் பழங்குடி சமூகங்கள் , பல மேற்கத்திய நாடுகளில் ஆண் , பெண் உடைகளில் வேறுபாடுகள் இல்லை. அப்புறம் ஏன் இந்தியாவில் மட்டும் இவ்வளவு வேறுபாடுகள் ? அரசியல் இருக்கிறது. அதை நீங்கள் தான் கண்டறிய வேண்டும். பொதுவான உடைகள் அணிவதை நோக்கி நகர வேண்டும். இதேயேதான் பெரியார் அப்போதே சொல்லியிருக்கிறார். இன்றைய ஆண்களுக்கான ஆடைகள் ,  குழந்தைகளானாலும் பெரியவர்களானாலும் உடலை மறைக்கும் வகையிலும் , அணிவதற்கு எளிதாகவும் , சவுகரியமாகவும் இருக்கிறது. அதே சமயம் பெண்களுக்கான ஆடைகள் உடலை வெளிக்காட்டும் வகையிலும் , அணிவதற்கு சிரமமாகவும் , சவுகரியமற்றதாகவும் இருக்கிறது.  காரணமென்ன?  தேடுங்கள் . அதிலும் பெண் குழந்தைகளுக்கென தயாரிக்கப்படும் ஆடைகள் அவர்களின் உடலை முழுதாக மறைப்பதேயில்லை. ஆண் , பெண் சமத்துவத்தை போதிப்பதாக நம்பப்படும் பள்ளிகள் , கல்லூரிகளில் கூட ஆண்கள் , பெண்களுக்கு தனித்தனி உடைகள் தான். ஆண்களுக்கும் , பெண்களுக்கும் தனித்தனி பள்ளிகளும் , கல்லூரிகளும் நடத்தப்படும் சூழலில் இதெல்லாம் சாதாரணம் என்கிறீர்களா ? அதுவும் சரிதான். அப்புறம் எப்படி புரிதலை உண்டாக்குவது ? நண்பர்களே முடிந்தவரை பொதுவான உடைகளுக்கு மாறுவோம் !

சாதி , மதம்.சாதியின் பெயரிலும் , மதத்தின் பெயரிலும் பள்ளி , கல்லூரிகளின் பெயர்களை வைத்துக்கொண்டு நாம் படிப்பின் மூலம் சாதியையும் , மதத்தையும் ஒழிக்க நினைக்கிறோம். கடவுள் இருக்காரா ? இல்லையா ? என்ற புரிதல் நமக்கே இல்லாத நிலையில் மதத்தை குழந்தைகளுக்கு திணிப்பது மிகப்பெரிய வன்முறை. மதம் வேண்டுமா ? வேண்டாமா ? என்பதை அவர்களே முடிவு செய்து கொள்ளட்டும். இன்றைய சூழலில் சாதியை கடப்பது தான் நமது முதல் இலக்காக இருக்கிறது. எக்காரணத்தைக் கொண்டும் குழந்தைகளின் மனங்களில் சாதியை  விதைக்காதீர்கள் , வளர்க்காதீர்கள். மற்ற நாடுகள் புதிய கண்டுபிடிப்புகள் , சாதனைகள் என நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில் இன்னமும் சாதியையும் , மதத்தையும் பிடித்துக்கொண்டு அலைகிறோம். பிடித்துக்கொண்டு அலைவதோடு நில்லாமல் அது சார்ந்த வன்முறைகள் மிகவும் அச்சம் தருவதாக இருக்கின்றன. இவ்வளவு நீதி நூல்கள் , அற நூல்கள் , தொன்மையான மொழி , அறிவு எல்லாம் இருந்து என்ன பயன் ? எவ்வளவோ மனிதர்கள் தங்களின் வாழ்க்கையின் மூலம் எவ்வளவோ படிப்பினைகளை கொடுத்துவிட்டு போயிருக்கிறார்கள். துளியும் மாற்றமில்லை. காட்டுமிராண்டிகளை விட கேவலமாக நடந்து கொள்கிறோம். சாதியையும் , மதத்தையும் வைத்து இன்னொருவரை ஒடுக்க நினைக்கும் , வன்முறையை ஏவும் எவருமே மனிதரில்லை.

இயற்கை. இயற்கையை புரிந்து கொள்வதன் மூலமே வேறுபாடுகளை எளிதாக கடக்கும் பக்குவம் உண்டாகும். தான் யார் என்பதை உணர வைத்தல் மூலமே பாதி மாற்றத்தைக் கொண்டு வந்து விட முடியும் . உலகில் வாழும் கோடிக்கணக்கான உயிரினங்களில் தானும் ஒரு சாதாரண விலங்கு ( பல நேரங்களில் தானும்  ஒரு மிருகம் தான் என்பதை மனிதன் மறந்து விடுகிறான் ) இனம் தான் என்பதையும் , இயற்கையின் ஒரு சிறு பகுதி தான் மனிதர்கள் என்பதையும் , மரங்கள் ,பறவைகள் ,விலங்குகள் என்று இயற்கையின் பங்களிப்பில்லாமல் நம்மால் வாழவே முடியாது என்பதையும்  உணர வைக்க வேண்டும்.

இப்படி இந்த 14 வயதிற்குள் நமது பிள்ளைகளுக்குச் சொல்லித்தர வேண்டியது நிறைய இருக்கிறது. இந்த 14 வயதிற்கு பிறகுதான் வயதிற்கு வருதல் நிகழ்கிறது.

பேசுவோம் ...



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 19, 2017 9:38 am

உங்கள் பதிவின் பின்பகுதி நீக்கப்பட்டுள்ளது.
ஈகரை விதிகளின் படி இணையதள சுட்டி கொண்டதாலும் ,
வியாபார நோக்கம் கொண்டு சந்தாதாரர் சேர கூறுவதாலும்
தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

jeevakumar sumithira இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 19, 2017 9:39 am

அருமை தொடருங்கள் ,செல்வராஜ்.

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Sat Oct 28, 2017 8:06 pm

T.N.Balasubramanian wrote:அருமை தொடருங்கள் ,செல்வராஜ்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1249162

நன்றி ஐயா !

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jul 14, 2018 9:42 pm

:நல்வரவு:



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jul 16, 2018 9:43 am

அருமையான ஒரு பதிவு ஆரம்பித்து பாதியில் நின்றிருக்கிறது  இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 ! 3838410834 இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 ! 3838410834



seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Sat Jul 21, 2018 7:06 am

Dr.S.Soundarapandian wrote::நல்வரவு:
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 ! 1571444738

seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Sat Jul 21, 2018 7:10 am

SK wrote:அருமையான ஒரு பதிவு ஆரம்பித்து பாதியில் நின்றிருக்கிறது  இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 ! 3838410834  இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 ! 3838410834

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 ! 1571444738

அடுத்த பதிவு போட்டாச்சு வாசித்துவிட்டு சொல்லுங்கள் ஐ லவ் யூ

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக