புதிய பதிவுகள்
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 14:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:54
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:46
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 14:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:15
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:38
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 13:30
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:21
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:48
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54
» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14
by ayyasamy ram Today at 14:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:54
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:46
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 14:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:15
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:38
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 13:30
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:21
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:48
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54
» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
VENKUSADAS |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
VENKUSADAS |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- தமிழ்நேயன் ஏழுமலைபண்பாளர்
- பதிவுகள் : 75
இணைந்தது : 11/06/2016
ஜெயமோகன் வெண்முரசு நாவல் அவர் இணையத்தில் இருந்து யாராவது pdf கோப்பாக சேமித்து இருந்தால் கொடுக்கவும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
“என்னையும் ஒருவனாக்கி இருங்கழல்
சென்னியில் வைந்த சேவக போற்றி”
எனது தளம்
![:arrow_heading_down: ⤵️](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/2935.png?v=2.2.7)
![:arrow_heading_down: ⤵️](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/2935.png?v=2.2.7)
![:arrow_heading_down: ⤵️](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/2935.png?v=2.2.7)
http://ezhumalaimfm.blogspot.in/
- anuradhamvபுதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 23/06/2016
I have mudhalkanal saved as pdf (21MB).
edensubu இந்த பதிவை விரும்பியுள்ளார்
- esamyபுதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 26/04/2015
வெண்முரசு நாவல பிடிஎப் வடிவில இருந்தால் கொடுக்கவும்
மேற்கோள் செய்த பதிவு: 1244720 என்னுடைய மடலுக்கு அனுப்பவும் நண்பா மணிஅஜித்007@ஜிமெயில்.காம்anuradhamv wrote:I have mudhalkanal saved as pdf (21MB), Kindly email me at
- aeroboy2000இளையநிலா
- பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
தமிழ்நேயன் ஏழுமலை
டியர் தமிழ் மற்றும் அனைவருக்கும்
உங்கள் ஈமெயில் எனக்கு அனுப்பவும்
லிங்க் அனுப்புகிறேன்
இங்கு நீங்கள் பதிவு செய்யவும்...தேவைப்பட்டால்
KLNHerbals@gmail.com
முதல் ஒன்பது புத்தகங்கள் மட்டும்
ஜெய மோகன் கொஞ்சம் கறார் பேர்வழி
அன்புடன்
கே எல் என்
டியர் தமிழ் மற்றும் அனைவருக்கும்
உங்கள் ஈமெயில் எனக்கு அனுப்பவும்
லிங்க் அனுப்புகிறேன்
இங்கு நீங்கள் பதிவு செய்யவும்...தேவைப்பட்டால்
KLNHerbals@gmail.com
முதல் ஒன்பது புத்தகங்கள் மட்டும்
ஜெய மோகன் கொஞ்சம் கறார் பேர்வழி
அன்புடன்
கே எல் என்
- kuloththunganபண்பாளர்
- பதிவுகள் : 112
இணைந்தது : 24/01/2017
எனது ஈமெயில்: kuloththungan@யாஹூ.காம்
எனக்கும் தயவு செய்து லிங்கை அளிக்கவும். நன்றி!
அன்புடன்
குலோத்துங்கன்
எனக்கும் தயவு செய்து லிங்கை அளிக்கவும். நன்றி!
அன்புடன்
குலோத்துங்கன்
- aeroboy2000இளையநிலா
- பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
அன்பர் ஜெயமோகன்
எம்மைப் பொறுத்தருள்வாராக ....
இது ஏற்கனவே இணைய தளங்களில் உலா வரும் மின் புத்தகங்கள் தான்
அன்பு ஈகரை உறவுகளே ...
அடியேன் தந்தையின் புத்தக அறையில் 5000 புத்தகங்களுக்கும் மேலாக இருந்தன ...
எமது தந்தை எங்களுக்கு விட்டுச் சென்ற சொத்தே புத்தகங்கள் தான் ...
ராமபாணம் என்ற வெண்ணிற வெள்ளிப் பூச்சு கொண்ட மீன் உருவ சிறு பூச்சிகளின் தொந்தரவு தாங்க முடியாமல் (ஒரு நாளைக்கு ஒரு பக்கத்தை மிச்சமே இல்லாமல் உண்டு விடும்) ...
சில புத்தகங்களை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை பள்ளி நூலகங்களுக்கு அன்பளிப்பாகவும், குறைந்த விலையிலும் வழங்கி விட்டோம் ...
எந்த பாட்சா உருண்டைக்கும் அந்த பூச்சிகள் அசைந்து கொடுக்கவில்லை
அந்தப் புத்தகங்கள் வாங்கிய 1970 – 1990 ஆண்டுகளில் 20 புத்தகங்கள் வாங்கும் பணத்திற்கு எங்கள் ஊரில் திருவண்ணாமலை மாவட்டம் - ஒரு மூன்று கிரவுண்ட் இடத்தோடு கூடிய ஓட்டு வீடு வாங்கலாம் ... ஒன்றரை ஏக்கர் நிலம் ரூ 900 – 1200 தான் ...
(எங்கள் ஊர் நிலங்கள் இன்று சினிமா - நாடக நடிகர்கள் வசம் உள்ளது)
ஆனால்
இலக்கிய புத்தகங்கள் கம்ப இராமாயணம், பத்துப்பாட்டு எட்டுத்தொகை வாங்க ஒரு முறை ஆர்டர் செய்தால் ரூ 1200 ஆகும் ...
வர்த்தமானன் பதிப்பகம் தவிர மற்ற பதிப்பகத்தார் முழு விலையில் புத்தகம் போடுவார்கள். இதில் என்ன அற்புதம் என்றால் ... வர்த்தமானன் பதிப்பக குறைந்த விலை புத்தகங்கள் இன்றும் புத்தகமாக உள்ளன ...
மற்ற பதிப்பக புத்தகங்கள் நொறுங்கிய அப்பளங்களாக மாறி வருகின்றன....
எடைக்குக் கூட போட முடியாது ...
இதைக் குறிப்பிடும் காரணம் ...
இன்று வசதி உள்ளவர்கள் பலர் மற்றவர்களுக்கு உதவி செய்வதை மறந்தே போய் விட்டனர் ...
இரவு வாகனம் ஓட்டும் போது லோ பீம் போட்டு ஓட்டுவதை கௌரவக் குறைச்சலாக நினைக்கின்றனர். ஹாலோஜென் விளக்குகளைப் பொருத்தி எதிரே வரும் வாகன ஓட்டிகளின், முன் சீட்டு பயணிகளின் கண்களை குருடு ஆக்குவதோடு நில்லாமல், அவர்களை மலடு ஆக்கும் செய்கையும் மறைமுகமாக நடப்பதை அறிய மறுக்கும் அவல நிலைதான் நிலவுகிறது.
பணம் அளவுக்கு மிஞ்சி இருப்பதால்,
பார்க்கும் பொருள் களையெல்லாம் வெறித்தனமாக (அதான் நுகர்வு வெறி) வாங்கி விட்டு பின்னர் ஓ எல் எக்ஸ் ஸில் அடிமாட்டு விலைக்கு விற்றுக்கொண்டு ...
இருக்கும் இவர்கள்
(நல்லோர்கள், உதவி செய்து வரும் அன்பர்கள் மன்னிக்கவும்)
குறைந்தது புத்தகங்கள் வாங்கியாவது அந்தத் துறையை வதங்க விடாமல் பார்த்துக் கொள்ளலாம் ...
உங்கள் பகுதி மாணவ மாணவிகளுக்கு
பேச்சு போட்டி கட்டுரை போட்டி நடத்தி
நல்ல புத்தகங்கள் பரிசு தரலாம் ...
இவை அடியெனின் உளக்கருத்தே ...
புண் பட்டவர்கள் மன்னிக்கவும்
பண் பட்டவர்கள் நூறாண்டு காலம் வாழ்ந்து மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள் ...
அன்புடன்
கே எல் என்
எம்மைப் பொறுத்தருள்வாராக ....
இது ஏற்கனவே இணைய தளங்களில் உலா வரும் மின் புத்தகங்கள் தான்
அன்பு ஈகரை உறவுகளே ...
அடியேன் தந்தையின் புத்தக அறையில் 5000 புத்தகங்களுக்கும் மேலாக இருந்தன ...
எமது தந்தை எங்களுக்கு விட்டுச் சென்ற சொத்தே புத்தகங்கள் தான் ...
ராமபாணம் என்ற வெண்ணிற வெள்ளிப் பூச்சு கொண்ட மீன் உருவ சிறு பூச்சிகளின் தொந்தரவு தாங்க முடியாமல் (ஒரு நாளைக்கு ஒரு பக்கத்தை மிச்சமே இல்லாமல் உண்டு விடும்) ...
சில புத்தகங்களை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை பள்ளி நூலகங்களுக்கு அன்பளிப்பாகவும், குறைந்த விலையிலும் வழங்கி விட்டோம் ...
எந்த பாட்சா உருண்டைக்கும் அந்த பூச்சிகள் அசைந்து கொடுக்கவில்லை
அந்தப் புத்தகங்கள் வாங்கிய 1970 – 1990 ஆண்டுகளில் 20 புத்தகங்கள் வாங்கும் பணத்திற்கு எங்கள் ஊரில் திருவண்ணாமலை மாவட்டம் - ஒரு மூன்று கிரவுண்ட் இடத்தோடு கூடிய ஓட்டு வீடு வாங்கலாம் ... ஒன்றரை ஏக்கர் நிலம் ரூ 900 – 1200 தான் ...
(எங்கள் ஊர் நிலங்கள் இன்று சினிமா - நாடக நடிகர்கள் வசம் உள்ளது)
ஆனால்
இலக்கிய புத்தகங்கள் கம்ப இராமாயணம், பத்துப்பாட்டு எட்டுத்தொகை வாங்க ஒரு முறை ஆர்டர் செய்தால் ரூ 1200 ஆகும் ...
வர்த்தமானன் பதிப்பகம் தவிர மற்ற பதிப்பகத்தார் முழு விலையில் புத்தகம் போடுவார்கள். இதில் என்ன அற்புதம் என்றால் ... வர்த்தமானன் பதிப்பக குறைந்த விலை புத்தகங்கள் இன்றும் புத்தகமாக உள்ளன ...
மற்ற பதிப்பக புத்தகங்கள் நொறுங்கிய அப்பளங்களாக மாறி வருகின்றன....
எடைக்குக் கூட போட முடியாது ...
இதைக் குறிப்பிடும் காரணம் ...
இன்று வசதி உள்ளவர்கள் பலர் மற்றவர்களுக்கு உதவி செய்வதை மறந்தே போய் விட்டனர் ...
இரவு வாகனம் ஓட்டும் போது லோ பீம் போட்டு ஓட்டுவதை கௌரவக் குறைச்சலாக நினைக்கின்றனர். ஹாலோஜென் விளக்குகளைப் பொருத்தி எதிரே வரும் வாகன ஓட்டிகளின், முன் சீட்டு பயணிகளின் கண்களை குருடு ஆக்குவதோடு நில்லாமல், அவர்களை மலடு ஆக்கும் செய்கையும் மறைமுகமாக நடப்பதை அறிய மறுக்கும் அவல நிலைதான் நிலவுகிறது.
பணம் அளவுக்கு மிஞ்சி இருப்பதால்,
பார்க்கும் பொருள் களையெல்லாம் வெறித்தனமாக (அதான் நுகர்வு வெறி) வாங்கி விட்டு பின்னர் ஓ எல் எக்ஸ் ஸில் அடிமாட்டு விலைக்கு விற்றுக்கொண்டு ...
இருக்கும் இவர்கள்
(நல்லோர்கள், உதவி செய்து வரும் அன்பர்கள் மன்னிக்கவும்)
குறைந்தது புத்தகங்கள் வாங்கியாவது அந்தத் துறையை வதங்க விடாமல் பார்த்துக் கொள்ளலாம் ...
உங்கள் பகுதி மாணவ மாணவிகளுக்கு
பேச்சு போட்டி கட்டுரை போட்டி நடத்தி
நல்ல புத்தகங்கள் பரிசு தரலாம் ...
இவை அடியெனின் உளக்கருத்தே ...
புண் பட்டவர்கள் மன்னிக்கவும்
பண் பட்டவர்கள் நூறாண்டு காலம் வாழ்ந்து மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள் ...
அன்புடன்
கே எல் என்
- aeroboy2000இளையநிலா
- பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
வியாசனின் பாதங்களில்…
இந்தப்புத்தாண்டு முதல் ஒருவேளை என் வாழ்க்கையில் இதுவரை நான் ஏற்றுக்கொண்டதிலேயே மிகப்பெரிய பணியைத் தொடங்குகிறேன். மகாபாரதத்தை ஒரு பெரும் நாவல்வரிசையாக எழுதவிருக்கிறேன். இளவயதின் கனவு.அப்படி பல கனவுகள் தொடர்ந்து ஒத்திப்போடப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இதுவும் அப்படித்தானிருந்தது.
நேற்று [டிசம்பர் 24-ஆம் தேதி] இரவில் விஷ்ணுபுரம் விழா முடிந்து வந்து சைதன்யாவிடமும் அஜிதனிடமும் பேசிக்கொண்டிருந்தபோது தற்செயலாக மகாபாரதம் பற்றிய பேச்சு எழுந்தது. நள்ளிரவுக்குப்பின்னரும் அந்த உரையாடல் நீடித்தது. பாரதத்தின் உத்வேகம் மிக்க கதையோட்டம். கண் ததும்பவைக்கும் விதிமுகூர்த்தங்கள். சைதன்யா “அப்பா எனக்காக இதையெல்லாம் எழுது” என்றாள்.
இன்று கிறிஸ்துமஸ். சிறுவயதிலிருந்தே எனக்கேயான அந்தரங்கமான கொண்டாட்டம் கொண்ட நாள் இது. நெகிழ்வும் தனிமையும் நிறைந்தவனாக இருப்பேன். காலையில் எழுந்ததும் சட்டென்று தோன்றியது, ‘இந்தநாளில் மகாபாரதத்தை தொடங்கினாலென்ன?”
திட்டத்தை நினைத்தால் எனக்கு பிரமிப்பாகவே இருக்கிறது. ஐநூறு பக்கங்கள் கொண்ட பத்து நாவல்கள். இன்றிலிருந்து ஒவ்வொருநாளும் ஓர் அத்தியாயம் என பத்துவருடங்கள். ஆனால் எந்த பெரும் பயணமும் ஒரு காலடியில்தான் தொடங்குகிறது. தொடங்கிவிட்டால் அந்தக் கட்டாயமும், வாசகர்களின் எதிர்வினைகளும் என்னை முன்னெடுக்குமென நினைக்கிறேன். இப்போது தொடங்காவிட்டால் ஒருவேளை இது நிகழாமலேயே போய்விடக்கூடும்.
நாவல்வரிசைக்கான பொதுத்தலைப்பு ‘வெண்முரசு’. ஏன் இந்தத் தலைப்பு என சொல்லத்தெரியவில்லை, தலைப்பு தோன்றியது, அவ்வளவுதான். அறத்தின் வெண்முரசு. எட்டு சுவைகளும் இணைந்து ஒன்றாகும் சாந்தத்தின் நிறம்கொண்ட முரசு. அந்தப்பெருநாவலின் முதல் நாவல் ‘முதற்கனல்’.
இது ஒரு நவீன நாவல். தொன்மங்களையும் பேரிலக்கியங்களையும் மறு ஆக்கம் செய்யும் இன்றைய இலக்கியப்போக்குக்குரிய அழகியலும் வடிவமும் கொண்டது. ஓர் இலக்கிய வாசகனுக்கு இது உள்விரிவுகளை திறந்துகொண்டே செல்லக்கூடும். ஆனால் எந்த ஒரு எளிய வாசகனும் உணர்ச்சிகரமான ஈடுபாட்டுடன் வாசிக்கக்கூடியதாகவே இது இருக்கும். மகாபாரதத்தின் மகத்தான நாடகத்தருணங்களையே அதிகமும் கையாளும். அதன் கவித்துவத்தையும் தரிசனத்தையும் தீண்டிவிடவேண்டுமென்ற கனவுடன் இது எழும். வியாசனெழுதிய ஒவ்வொன்றையும் இன்று இங்கே என உள்வாங்கிக்கொள்ளவேண்டுமென இது முயலும்
மரபிலிருந்து ஒரு வினா எழலாம். வியாசபாரதத்தை இப்படி மீறிச்செல்ல அனுமதி உண்டா என. புராணங்கள் மெய்மையைச் சித்தரிப்பதற்கான படிமத்தொகையையே நமக்களிக்கின்றன. ஆகவே அனைத்துப் புராணங்களும் பல்லாயிரம் வருடங்களாக தொடர்ந்து மறு ஆக்கம் செய்யப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. மகாபாரதக்கதையை மறு ஆக்கம்செய்யாத பெருங்கவிஞர்களே இந்தியாவில் இல்லை என்பார்கள்.
இந்நாவல் மகாபாரதத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டதல்ல. மகாபாரதக் கதைகளையும் கதைமாந்தர்களையும் வெவ்வேறு திசைகளில் வளர்த்தெடுத்த பிற புராணங்களையும் கருத்தில்கொண்டிருக்கிறது. மகாபாரதத்துக்குப்பின் குறைந்தது ஈராயிரம் வருடங்கள் கழித்து எழுதப்பட்ட பாகவதம், மேலும் ஐநூறு வருடங்கள் கழித்து உருவான தேவிபாகவதம் ஆகியநூல்களின் மகாபாரதக் கதைகளும் பல நாட்டார் பாரதக்கதைகளும் இந்நாவலில் உள்ளன என்பதை வாசகர்கள் காணலாம்.
நண்பர்களில் ஒரு சாரார் நான் தொடர்கள் எழுதும்போது ‘எடுத்து வச்சிருக்கேன். படிக்கணும்’ என்பார்கள். இது அவர்களுக்குரிய நாவல் அலல. அவர்கள் ஒருபோதும் வாசிக்கப்போவதில்லை. இது ஒவ்வொருநாளும் கொஞ்சமேனும் வாசிக்கக்கூடியவர்களுக்கான படைப்பு. ஒவ்வொருநாளும் வாசித்தவற்றைப்பற்றி தியானிக்கக்கூடியவர்களுக்கானது. அவர்களின் வாழ்க்கையை மேலும் சிலவருடங்கள் வியாசனின் மானுடநாடகம் ஒளியேற்றுவதாக! அவர்கள் தங்கள் வியாசனை எனது வியாசனிலிருந்து கண்டுகொள்ள நேர்வதாக!
அன்புடன்
ஜெயமோகன்
25-12-2013
இந்தப்புத்தாண்டு முதல் ஒருவேளை என் வாழ்க்கையில் இதுவரை நான் ஏற்றுக்கொண்டதிலேயே மிகப்பெரிய பணியைத் தொடங்குகிறேன். மகாபாரதத்தை ஒரு பெரும் நாவல்வரிசையாக எழுதவிருக்கிறேன். இளவயதின் கனவு.அப்படி பல கனவுகள் தொடர்ந்து ஒத்திப்போடப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இதுவும் அப்படித்தானிருந்தது.
நேற்று [டிசம்பர் 24-ஆம் தேதி] இரவில் விஷ்ணுபுரம் விழா முடிந்து வந்து சைதன்யாவிடமும் அஜிதனிடமும் பேசிக்கொண்டிருந்தபோது தற்செயலாக மகாபாரதம் பற்றிய பேச்சு எழுந்தது. நள்ளிரவுக்குப்பின்னரும் அந்த உரையாடல் நீடித்தது. பாரதத்தின் உத்வேகம் மிக்க கதையோட்டம். கண் ததும்பவைக்கும் விதிமுகூர்த்தங்கள். சைதன்யா “அப்பா எனக்காக இதையெல்லாம் எழுது” என்றாள்.
இன்று கிறிஸ்துமஸ். சிறுவயதிலிருந்தே எனக்கேயான அந்தரங்கமான கொண்டாட்டம் கொண்ட நாள் இது. நெகிழ்வும் தனிமையும் நிறைந்தவனாக இருப்பேன். காலையில் எழுந்ததும் சட்டென்று தோன்றியது, ‘இந்தநாளில் மகாபாரதத்தை தொடங்கினாலென்ன?”
திட்டத்தை நினைத்தால் எனக்கு பிரமிப்பாகவே இருக்கிறது. ஐநூறு பக்கங்கள் கொண்ட பத்து நாவல்கள். இன்றிலிருந்து ஒவ்வொருநாளும் ஓர் அத்தியாயம் என பத்துவருடங்கள். ஆனால் எந்த பெரும் பயணமும் ஒரு காலடியில்தான் தொடங்குகிறது. தொடங்கிவிட்டால் அந்தக் கட்டாயமும், வாசகர்களின் எதிர்வினைகளும் என்னை முன்னெடுக்குமென நினைக்கிறேன். இப்போது தொடங்காவிட்டால் ஒருவேளை இது நிகழாமலேயே போய்விடக்கூடும்.
நாவல்வரிசைக்கான பொதுத்தலைப்பு ‘வெண்முரசு’. ஏன் இந்தத் தலைப்பு என சொல்லத்தெரியவில்லை, தலைப்பு தோன்றியது, அவ்வளவுதான். அறத்தின் வெண்முரசு. எட்டு சுவைகளும் இணைந்து ஒன்றாகும் சாந்தத்தின் நிறம்கொண்ட முரசு. அந்தப்பெருநாவலின் முதல் நாவல் ‘முதற்கனல்’.
இது ஒரு நவீன நாவல். தொன்மங்களையும் பேரிலக்கியங்களையும் மறு ஆக்கம் செய்யும் இன்றைய இலக்கியப்போக்குக்குரிய அழகியலும் வடிவமும் கொண்டது. ஓர் இலக்கிய வாசகனுக்கு இது உள்விரிவுகளை திறந்துகொண்டே செல்லக்கூடும். ஆனால் எந்த ஒரு எளிய வாசகனும் உணர்ச்சிகரமான ஈடுபாட்டுடன் வாசிக்கக்கூடியதாகவே இது இருக்கும். மகாபாரதத்தின் மகத்தான நாடகத்தருணங்களையே அதிகமும் கையாளும். அதன் கவித்துவத்தையும் தரிசனத்தையும் தீண்டிவிடவேண்டுமென்ற கனவுடன் இது எழும். வியாசனெழுதிய ஒவ்வொன்றையும் இன்று இங்கே என உள்வாங்கிக்கொள்ளவேண்டுமென இது முயலும்
மரபிலிருந்து ஒரு வினா எழலாம். வியாசபாரதத்தை இப்படி மீறிச்செல்ல அனுமதி உண்டா என. புராணங்கள் மெய்மையைச் சித்தரிப்பதற்கான படிமத்தொகையையே நமக்களிக்கின்றன. ஆகவே அனைத்துப் புராணங்களும் பல்லாயிரம் வருடங்களாக தொடர்ந்து மறு ஆக்கம் செய்யப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. மகாபாரதக்கதையை மறு ஆக்கம்செய்யாத பெருங்கவிஞர்களே இந்தியாவில் இல்லை என்பார்கள்.
இந்நாவல் மகாபாரதத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டதல்ல. மகாபாரதக் கதைகளையும் கதைமாந்தர்களையும் வெவ்வேறு திசைகளில் வளர்த்தெடுத்த பிற புராணங்களையும் கருத்தில்கொண்டிருக்கிறது. மகாபாரதத்துக்குப்பின் குறைந்தது ஈராயிரம் வருடங்கள் கழித்து எழுதப்பட்ட பாகவதம், மேலும் ஐநூறு வருடங்கள் கழித்து உருவான தேவிபாகவதம் ஆகியநூல்களின் மகாபாரதக் கதைகளும் பல நாட்டார் பாரதக்கதைகளும் இந்நாவலில் உள்ளன என்பதை வாசகர்கள் காணலாம்.
நண்பர்களில் ஒரு சாரார் நான் தொடர்கள் எழுதும்போது ‘எடுத்து வச்சிருக்கேன். படிக்கணும்’ என்பார்கள். இது அவர்களுக்குரிய நாவல் அலல. அவர்கள் ஒருபோதும் வாசிக்கப்போவதில்லை. இது ஒவ்வொருநாளும் கொஞ்சமேனும் வாசிக்கக்கூடியவர்களுக்கான படைப்பு. ஒவ்வொருநாளும் வாசித்தவற்றைப்பற்றி தியானிக்கக்கூடியவர்களுக்கானது. அவர்களின் வாழ்க்கையை மேலும் சிலவருடங்கள் வியாசனின் மானுடநாடகம் ஒளியேற்றுவதாக! அவர்கள் தங்கள் வியாசனை எனது வியாசனிலிருந்து கண்டுகொள்ள நேர்வதாக!
அன்புடன்
ஜெயமோகன்
25-12-2013
- aeroboy2000இளையநிலா
- பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 1
Brand: கிழக்கு பதிப்பகம்
Product Code:
Authors: ஜெயமோகன் (ஆசிரியர்)
Edition: 1
Year: 2015
Format: Paper Back
Language: Tamil
Availability: In Stock
(Rs 400)
முதற்கனல் (1) - வெண்முரசு நாவல்(மகாபாரதம் நாவல் வடிவில்) - ஜெயமோகன் :
தொட்டு நின்ற மாடங்கள்கொண்ட அஸ்தினபுரியின் மாளிகை முற்றத்தில் விழுந்த முதல் கண்ணீர்த்துளியின் கதை இது. மகாபாரதத்தை ஆக்கிய அடிப்படை வன்மங்கள் முளைவிட்டெழுகின்றன. அநீதியிழைக்கப்பட்டவர்களின் கண்ணீர் காய்ந்து மறைவதேயில்லை. கண்ணீர்த்துளி ரத்தப்பெருக்காக மாறியதன் கதையே மகாபாரதம் எனலாம்.
ஆனால் அது அநீதியா என்பது மிகமிகச் சிக்கலான வினா. அது மகத்தான அறச்சிக்கலின் தருணம் என்று மட்டுமே சொல்லமுடியும். ஆகவேதான் மகாபாரதம் முடிவடையாத அறப்புதிர்களின் களமாக இன்றும் உள்ளது. அதில் நல்லவர்களோ கெட்டவர்களோ இல்லை. மாமனிதர்களின் மகத்தான இக்கட்டுகளே உள்ளன. அந்த களத்தைத் தொடங்கிவைக்கும் நாவல் இது.
மகாபாரதம் இந்தியப்பண்பாட்டின் ஒட்டுமொத்த ஞானமும் ஒரே நூலில் திரண்டிருப்பது. ஆகவேதான் அது ஐந்தாம் வேதம் என அழைக்கப்படுகிறது. இந்நூல் அந்த ஞானக்களஞ்சியத்திற்குள் செல்லும் தோரணவாயில்.
வடிவ அளவில் இது ஒரு முழுமையான தனிப்படைப்பு. இதன் மொழியும் கட்டமைப்பும் இதற்குள்ளேயே நிறைவை அடைகின்றன. ஆனால் வெண்முரசு என்ற பெயரில் மகாபாரதத்தை ஜெயமோகன் விரிவாக எழுதிவரும் நாவல்தொடரின் தொடக்கநாவலும்கூட.
இயன்றவர்கள் பிரிண்ட் புத்தகம் வாங்கி ஆதரிக்கவும்...
(https://www.mediafire.com/file/23r98ir27vun53e/Venmurasu-Nool-1-Mutharkanal.pdf)
http://www.mediafire.com/file/23r98ir27vun53e/Venmurasu-Nool-1-Mutharkanal.pdf
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
Brand: கிழக்கு பதிப்பகம்
Product Code:
Authors: ஜெயமோகன் (ஆசிரியர்)
Edition: 1
Year: 2015
Format: Paper Back
Language: Tamil
Availability: In Stock
(Rs 400)
முதற்கனல் (1) - வெண்முரசு நாவல்(மகாபாரதம் நாவல் வடிவில்) - ஜெயமோகன் :
தொட்டு நின்ற மாடங்கள்கொண்ட அஸ்தினபுரியின் மாளிகை முற்றத்தில் விழுந்த முதல் கண்ணீர்த்துளியின் கதை இது. மகாபாரதத்தை ஆக்கிய அடிப்படை வன்மங்கள் முளைவிட்டெழுகின்றன. அநீதியிழைக்கப்பட்டவர்களின் கண்ணீர் காய்ந்து மறைவதேயில்லை. கண்ணீர்த்துளி ரத்தப்பெருக்காக மாறியதன் கதையே மகாபாரதம் எனலாம்.
ஆனால் அது அநீதியா என்பது மிகமிகச் சிக்கலான வினா. அது மகத்தான அறச்சிக்கலின் தருணம் என்று மட்டுமே சொல்லமுடியும். ஆகவேதான் மகாபாரதம் முடிவடையாத அறப்புதிர்களின் களமாக இன்றும் உள்ளது. அதில் நல்லவர்களோ கெட்டவர்களோ இல்லை. மாமனிதர்களின் மகத்தான இக்கட்டுகளே உள்ளன. அந்த களத்தைத் தொடங்கிவைக்கும் நாவல் இது.
மகாபாரதம் இந்தியப்பண்பாட்டின் ஒட்டுமொத்த ஞானமும் ஒரே நூலில் திரண்டிருப்பது. ஆகவேதான் அது ஐந்தாம் வேதம் என அழைக்கப்படுகிறது. இந்நூல் அந்த ஞானக்களஞ்சியத்திற்குள் செல்லும் தோரணவாயில்.
வடிவ அளவில் இது ஒரு முழுமையான தனிப்படைப்பு. இதன் மொழியும் கட்டமைப்பும் இதற்குள்ளேயே நிறைவை அடைகின்றன. ஆனால் வெண்முரசு என்ற பெயரில் மகாபாரதத்தை ஜெயமோகன் விரிவாக எழுதிவரும் நாவல்தொடரின் தொடக்கநாவலும்கூட.
இயன்றவர்கள் பிரிண்ட் புத்தகம் வாங்கி ஆதரிக்கவும்...
(https://www.mediafire.com/file/23r98ir27vun53e/Venmurasu-Nool-1-Mutharkanal.pdf)
http://www.mediafire.com/file/23r98ir27vun53e/Venmurasu-Nool-1-Mutharkanal.pdf
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
- aeroboy2000இளையநிலா
- பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
மழைப்பாடல்(2) - வெண்முரசு நாவல்
Brand: கிழக்கு பதிப்பகம்
Product Code:
Authors: ஜெயமோகன் (ஆசிரியர்)
Edition: 1
Year: 2015
Page: 1016
Format: Paper Back
Language: Tamil
Availability: In Stock
(Rs. 900)
மழைப்பாடல்(2) - வெண்முரசு நாவல்(மகாபாரத நாவல் வடிவில்):
மகாபாரத்தின் துன்பியல் உச்சத்துக்கு காரணமாக அமைந்த அடிப்படை மனநிலைகள் எப்படி உருவாகி வந்தன என்பதை ஆராயும் நாவல் இது. புயல்களால் அலைக்கழிக்கப்படும் பாலைவனமான காந்தாரம் , மழைபெய்தபடி இருக்கும் புல்வெளியான யாதவர்நாடு . காந்தாரியும் குந்தியும் இருமுனைகளாக நின்று மகாபாரதத்தின் பிரமாண்டமான் சதுரங்கக் களத்தை அமைப்பதை விரிவாகச் சித்தரிக்கிற்து. அவர்களுக்குப் பின்னால் அம்பிகையும் அம்பாலிகையும் சத்யவதியும் நின்றுகொண்டிருக்கிறார்கள் அன்னையர் உணர்ச்சிக்களத்தில் நிகழ்த்தி முடித்த போரைதான் பின்னர் மைந்தர் சமர்களத்தில் நிகழ்த்தினார் என்று சொல்லலாம். ஒவ்வொரு சிற்றோடையும் ஒன்றுடன் ஒன்று கலந்து நதியாக மாறி பெருகிச்செல்லும் மாபெரும் சித்திரத்தை உணர்ச்சிகரமான தருணங்கள் மூலமும், அழகிய கவிதுவம் வழியாகவும் காட்டுகிறது மழைப்பாடல். பாரதத்தின் நிலம், சமூகங்கள் வாழ்க்கைமுறை, சிந்தனைமுறைகள் அனைத்தையும் உள்ளடக்கி விரியும் பெருநாவல்.
இயன்றவர்கள் பிரிண்ட் புத்தகம் வாங்கி ஆதரிக்கவும்...
(https://www.mediafire.com/file/kuosx2ho6m2vswk/Venmurasu-Nool-2-MazhaiPadal.pdf)
https://www.mediafire.com/file/kuosx2ho6m2vswk/Venmurasu-Nool-2-MazhaiPadal.pdf
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
Brand: கிழக்கு பதிப்பகம்
Product Code:
Authors: ஜெயமோகன் (ஆசிரியர்)
Edition: 1
Year: 2015
Page: 1016
Format: Paper Back
Language: Tamil
Availability: In Stock
(Rs. 900)
மழைப்பாடல்(2) - வெண்முரசு நாவல்(மகாபாரத நாவல் வடிவில்):
மகாபாரத்தின் துன்பியல் உச்சத்துக்கு காரணமாக அமைந்த அடிப்படை மனநிலைகள் எப்படி உருவாகி வந்தன என்பதை ஆராயும் நாவல் இது. புயல்களால் அலைக்கழிக்கப்படும் பாலைவனமான காந்தாரம் , மழைபெய்தபடி இருக்கும் புல்வெளியான யாதவர்நாடு . காந்தாரியும் குந்தியும் இருமுனைகளாக நின்று மகாபாரதத்தின் பிரமாண்டமான் சதுரங்கக் களத்தை அமைப்பதை விரிவாகச் சித்தரிக்கிற்து. அவர்களுக்குப் பின்னால் அம்பிகையும் அம்பாலிகையும் சத்யவதியும் நின்றுகொண்டிருக்கிறார்கள் அன்னையர் உணர்ச்சிக்களத்தில் நிகழ்த்தி முடித்த போரைதான் பின்னர் மைந்தர் சமர்களத்தில் நிகழ்த்தினார் என்று சொல்லலாம். ஒவ்வொரு சிற்றோடையும் ஒன்றுடன் ஒன்று கலந்து நதியாக மாறி பெருகிச்செல்லும் மாபெரும் சித்திரத்தை உணர்ச்சிகரமான தருணங்கள் மூலமும், அழகிய கவிதுவம் வழியாகவும் காட்டுகிறது மழைப்பாடல். பாரதத்தின் நிலம், சமூகங்கள் வாழ்க்கைமுறை, சிந்தனைமுறைகள் அனைத்தையும் உள்ளடக்கி விரியும் பெருநாவல்.
இயன்றவர்கள் பிரிண்ட் புத்தகம் வாங்கி ஆதரிக்கவும்...
(https://www.mediafire.com/file/kuosx2ho6m2vswk/Venmurasu-Nool-2-MazhaiPadal.pdf)
https://www.mediafire.com/file/kuosx2ho6m2vswk/Venmurasu-Nool-2-MazhaiPadal.pdf
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|