புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோணங்கள் எதிரெதிராய்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
'வாத்தியார் உத்தியோகத்தில், 'அதை சாதிச்சேன்; இதை சாதிச்சேன்'னு தம்பட்டமடிக்க என்ன இருக்குது... 'அவன், என்கிட்ட படிச்சான்; இவன் முளைக்கும் போதே, பகாசூரனாக விளங்க போறான்னு எனக்கு தெரியும்...' இப்படி அசட்டு பெருமை வேண்டுமானால் பேசிக்கலாம்...' என்று அடிக்கடி அலுத்துக் கொள்வார், வாத்தியார், கல்யாணம்.
வேண்டாததை கழித்து, குப்பையில் கொட்டுவது போன்றதுதான், 'ரிடையர்மென்ட்' என்பதை, பணி ஓய்வுக்கு பின், புரிந்து கொண்ட கல்யாணம், 'பென்ஷன் போதவில்லை; பொழுதும் போகவில்லை...' என்று தான், கல்யாண தரகர் வேலையை ஆரம்பித்தார்.
ஆனால், அதற்குபின், பல சமயங்களில், இத்தொழிலில் இருக்கும், 'த்ரில்'லை நினைத்து, 'அடடடா... இந்த தொழில் தான் எத்தனை சுவாரசியங்கள்... சில நிமிடங்களுக்கு முன் வரை, இவனுக்கு இவள் தான்னு நிச்சயித்து வைத்திருக்கும் பெண்ணை, சதுரங்கக்காயை நகர்த்துவது போல், அடுத்த சில நிமிடங்களில், இன்னொருத்தனுக்கு பொண்டாட்டியாக மாறி விடும் சுவாரசியம் தான் என்ன...
'கமிஷனுக்கு தான் என்றாலும் சின்னாளம்பட்டி பெண்ணை, ஷில்லாங் மாப்பிள்ளைக்கு பேசி முடிச்சுப் போடும் போது, கடவுள், 'ராங்க்' கிட்டியது போல், ரகசிய பெருமை உண்டாகிறதே... அதோடு, எந்த எழுத்தாளரும், கற்பனை செய்ய முடியாத திடீர் திருப்பங்கள், அரசியல்வாதிகளையும் மிஞ்சும் கட்சி மாறல்கள் போன்ற விஷயங்களை எதிர்கொள்ளும் வாய்ப்பு இந்த தொழில்ல தானே இருக்கு. இது முன்கூட்டியே தெரிந்திருந்தா, ஆசிரியர் உத்தியோகத்தில, காலத்தை வீணாக்கியிருக்க மாட்டோமே...' என்று ஆதங்கப்படுவார், கல்யாணம்.
சில சமயங்களில், அவரிடம் படித்த மாணவர்களுக்கே, திருமண முடிச்சு போடும் போது, மகிழ்ச்சி இரட்டிப்பாகும்; அதில், அந்த ஆதங்கம் மறைந்துவிடும்.
காலை காபிக்கு மனசு ஏங்க, 'எப்போதாடா மனைவி காபி தருவாள்...' என காத்திருந்தார், கல்யாணம். அப்போது, மளிகை கடை நாராயணமூர்த்தி, தம் பெரிய உடம்பை தூக்கியவாறு, வீட்டிற்குள் நுழைந்தார். சாட்சாத் கடவுள் நாராயணமூர்த்தியே வீட்டிற்கு வந்துவிட்டது போல், பதறி, எழுந்து நின்றார், கல்யாணம். காரணம், நாராயணமூர்த்தி, தன் மளிகைக் கடையில் கல்யாணத்திற்கு அக்கவுண்டில், மளிகை பொருள் கொடுப்பவர்.
''வாங்க... என்ன அபூர்வமாயிருக்கு... சொல்லியனுப்பியிருந்தா ஓடி வந்திருக்க மாட்டேனா... இவ்வளவு தூரம் நீங்களே வரணுமா... உட்காருங்க,'' என்றார்.
''நீங்க உட்காருங்க,'' என்று, கல்யாணத்தின் தோளை அழுத்தி, அமர வைத்து, அவரை ரட்சிப்பது போல், புன்முறுவலை தவழ விட்டவாறு, நாற்காலியில் உட்கார்ந்தார், நாராயணமூர்த்தி.
''பக்கத்து தெருவில, ஒரு கல்யாணத்திற்கு வந்தேன்; உம்மை பாக்கணும் போல் தோணிச்சு. கல்யாணம்... உம்மால ஒரு காரியம் ஆகணுமே...''
''சொல்லுங்க,'' என்று, இரண்டு கைகளையும் கூப்பி, 'அடியேன் சித்தம்...' என்ற பாவனையில் இருந்தார் கல்யாணம்.
தொடரும்.......
வேண்டாததை கழித்து, குப்பையில் கொட்டுவது போன்றதுதான், 'ரிடையர்மென்ட்' என்பதை, பணி ஓய்வுக்கு பின், புரிந்து கொண்ட கல்யாணம், 'பென்ஷன் போதவில்லை; பொழுதும் போகவில்லை...' என்று தான், கல்யாண தரகர் வேலையை ஆரம்பித்தார்.
ஆனால், அதற்குபின், பல சமயங்களில், இத்தொழிலில் இருக்கும், 'த்ரில்'லை நினைத்து, 'அடடடா... இந்த தொழில் தான் எத்தனை சுவாரசியங்கள்... சில நிமிடங்களுக்கு முன் வரை, இவனுக்கு இவள் தான்னு நிச்சயித்து வைத்திருக்கும் பெண்ணை, சதுரங்கக்காயை நகர்த்துவது போல், அடுத்த சில நிமிடங்களில், இன்னொருத்தனுக்கு பொண்டாட்டியாக மாறி விடும் சுவாரசியம் தான் என்ன...
'கமிஷனுக்கு தான் என்றாலும் சின்னாளம்பட்டி பெண்ணை, ஷில்லாங் மாப்பிள்ளைக்கு பேசி முடிச்சுப் போடும் போது, கடவுள், 'ராங்க்' கிட்டியது போல், ரகசிய பெருமை உண்டாகிறதே... அதோடு, எந்த எழுத்தாளரும், கற்பனை செய்ய முடியாத திடீர் திருப்பங்கள், அரசியல்வாதிகளையும் மிஞ்சும் கட்சி மாறல்கள் போன்ற விஷயங்களை எதிர்கொள்ளும் வாய்ப்பு இந்த தொழில்ல தானே இருக்கு. இது முன்கூட்டியே தெரிந்திருந்தா, ஆசிரியர் உத்தியோகத்தில, காலத்தை வீணாக்கியிருக்க மாட்டோமே...' என்று ஆதங்கப்படுவார், கல்யாணம்.
சில சமயங்களில், அவரிடம் படித்த மாணவர்களுக்கே, திருமண முடிச்சு போடும் போது, மகிழ்ச்சி இரட்டிப்பாகும்; அதில், அந்த ஆதங்கம் மறைந்துவிடும்.
காலை காபிக்கு மனசு ஏங்க, 'எப்போதாடா மனைவி காபி தருவாள்...' என காத்திருந்தார், கல்யாணம். அப்போது, மளிகை கடை நாராயணமூர்த்தி, தம் பெரிய உடம்பை தூக்கியவாறு, வீட்டிற்குள் நுழைந்தார். சாட்சாத் கடவுள் நாராயணமூர்த்தியே வீட்டிற்கு வந்துவிட்டது போல், பதறி, எழுந்து நின்றார், கல்யாணம். காரணம், நாராயணமூர்த்தி, தன் மளிகைக் கடையில் கல்யாணத்திற்கு அக்கவுண்டில், மளிகை பொருள் கொடுப்பவர்.
''வாங்க... என்ன அபூர்வமாயிருக்கு... சொல்லியனுப்பியிருந்தா ஓடி வந்திருக்க மாட்டேனா... இவ்வளவு தூரம் நீங்களே வரணுமா... உட்காருங்க,'' என்றார்.
''நீங்க உட்காருங்க,'' என்று, கல்யாணத்தின் தோளை அழுத்தி, அமர வைத்து, அவரை ரட்சிப்பது போல், புன்முறுவலை தவழ விட்டவாறு, நாற்காலியில் உட்கார்ந்தார், நாராயணமூர்த்தி.
''பக்கத்து தெருவில, ஒரு கல்யாணத்திற்கு வந்தேன்; உம்மை பாக்கணும் போல் தோணிச்சு. கல்யாணம்... உம்மால ஒரு காரியம் ஆகணுமே...''
''சொல்லுங்க,'' என்று, இரண்டு கைகளையும் கூப்பி, 'அடியேன் சித்தம்...' என்ற பாவனையில் இருந்தார் கல்யாணம்.
தொடரும்.......
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
''நம்ப பொண்ணு ஜாதகத்துக்கு, நாலஞ்சு, 'ஆபர்' வந்திருக்கு; இந்த ஆவணியில எப்படியும் முடிச்சுரலாம்ன்னு நினைக்கிறேன்,'' என்றார்.
''வாஸ்தவம்,'' என்று, ஒத்து ஊதினார், கல்யாணம். மனதிற்குள், 'இதில் கிடைக்கிற கமிஷனில், தான் கொடுக்க வேண்டிய மளிகை கடன், தள்ளுபடியாகி விடும்...' என்ற சந்தோஷம் எழுந்தது.
''ஒரு வரனை பத்தி, எல்லாரும் நல்ல அபிப்பிராயம் சொல்றாங்க; பையன், 'ஹையர் செகண்டரி ஸ்கூல்'ல வாத்தியாரா இருக்கானாம். பையன நீங்க நேர்ல போய் பாத்துட்டு வரணும். நான் போனா, 'செலவாகாத சரக்கை, தள்ளி விட வந்தோம்'ன்னு கோபுரத்தில ஏறி உட்காந்துக்குவாங்க,'' என்றார்.
மளிகை கடை வியாபாரியல்லவா... தன் பிசினஸ், 'டெக்னிக்'கை இதிலும் காட்டுகிறார்.
''அதற்கென்ன பேஷா போயிட்டு வர்றேன்,'' என்றவர், மனதுக்குள், 'நாமாக கொண்டு போகாத ஐட்டம் என்பதால், கமிஷன் அவ்வளவு தேறாது...' என்று, உற்சாகம் மட்டுப்பட்டது.
''வெளியே கார் நிக்குது... நீங்க, கார்ல போய், பையன பள்ளிக் கூடத்துலயே பாத்துட்டு வந்துடுங்க,'' என்றார்.
மணி, 9:00 ஆகியும் இன்னும் காபி குடிக்காத ஏக்கத்தோடு, சட்டையை மாட்டி, வெளியே வந்தார், கல்யாணம்.
''சார்... உங்கள பாத்து எவ்வளவு நாளாச்சு,'' என்று கூறி, கை கூப்பி வணங்கினான், சுந்தரம்.
கதர் வேட்டி, கதர் ஜிப்பாவில் இருந்த சுந்தரம், சராசரிக்கும் கூடுதலான உயரம்; நல்ல நிறம்; கண்களில் தீட்சண்யம்; முகத்தில் கம்பீரத்தோடு காணப்பட்டான்.
எங்கோ பார்த்தது போல் தோன்ற, யோசனையோடு நின்றார், கல்யாணம்.
''சார்... என்னை தெரியலயா... நான், உங்க பழைய ஸ்டூடண்ட். உங்ககிட்ட எட்டாவது படிச்சேன்; சுந்து... சுந்துன்னு கூப்பிடுவீங்களே...'' என்று ஞாபகப்படுத்தினான்.
'பளிச்'சென்று ஞாபகம் வர, ''ஏய் சுந்தரம்... நீ தானா அது... பெரிய கலெக்டரா வருவேன்னுல எதிர்பாத்தேன்; பி.ஏ.,விலே, 'யூனிவர்சிட்டி ரேங்க்' வாங்கினதா கேள்விப்பட்டேனே... அவ்வளவு, 'பிரைட்டா' இருந்துட்டு, ஏம்பா இந்த தரித்திரம் பிடிச்ச உத்யோகத்தில நுழைஞ்சே...'' என்றார்.
''என்ன சார் இப்படி சொல்றீங்க... இது என்ன தரித்திர உத்தியோகமா...
ஒரு ஞான தீபம், நூறு ஞான தீபங்களை ஏத்தி வைக்கணும்ன்னு, அன்னிக்கு நீங்க சொன்ன ஒரு சொல் தான், பசு மரத்தாணி போல, நெஞ்சுல பதிஞ்சிருக்கு...'' என்றதும், 'என்ன பிள்ளையாண்டான் இப்படி அசடாட்டம் இருக்கான்...' என்று, அவனையே, கவலையோடு பார்த்தவர், ''நான், அந்த அர்த்ததில்ல சொல்லல...'' என்று அசடு வழிந்தார்.
''எங்கப்பாவோட தொந்தரவு தாங்க முடியாமத் தான், எம்.ஏ., முடிச்சதும், 'குரூப் ஒன்' தேர்வு எழுதினேன். பாசாகி,
'செலக் ஷன் ஆர்டர்' எதிர்பாத்திருக்கையில தான், வாத்தியார் வேலைக்கான, 'ஆர்டர்' வந்துச்சு. உடனே, வாத்தியார் வேலைக்கு வந்துட்டேன். அன்னிக்கு, நீங்க என் மனசில விதைத்த லட்சியங்கள, இன்னிக்கு, நான், இங்கே விதைச்சுக்கிட்டிருக்கிறேன்,'' என்றான்.
அவன் பேசப் பேச கொட்டாவி வந்தது; சிரமப்பட்டு அடக்கினார், கல்யாணம். நல்ல காலம், பள்ளிக்கூட பியூன், டபராவில் காபி கொண்டு வந்தான். அதை வாங்கி, ஆசிரியருக்காக, ஆற்ற துவங்கினான், சுந்தரம்.
''அப்பழுக்கற்ற, தனி மனிதர்களை உருவாக்குவது தான், சுதந்திர இந்தியாவின் இன்றிமையாத கடமைன்னு அன்னிக்கு நீங்க சொன்னது, இன்னும் என் மனசில, 'தக தக'ன்னு எரிஞ்சுகிட்டிருக்கு,'' என்றான்.
தொடரும்...............
''வாஸ்தவம்,'' என்று, ஒத்து ஊதினார், கல்யாணம். மனதிற்குள், 'இதில் கிடைக்கிற கமிஷனில், தான் கொடுக்க வேண்டிய மளிகை கடன், தள்ளுபடியாகி விடும்...' என்ற சந்தோஷம் எழுந்தது.
''ஒரு வரனை பத்தி, எல்லாரும் நல்ல அபிப்பிராயம் சொல்றாங்க; பையன், 'ஹையர் செகண்டரி ஸ்கூல்'ல வாத்தியாரா இருக்கானாம். பையன நீங்க நேர்ல போய் பாத்துட்டு வரணும். நான் போனா, 'செலவாகாத சரக்கை, தள்ளி விட வந்தோம்'ன்னு கோபுரத்தில ஏறி உட்காந்துக்குவாங்க,'' என்றார்.
மளிகை கடை வியாபாரியல்லவா... தன் பிசினஸ், 'டெக்னிக்'கை இதிலும் காட்டுகிறார்.
''அதற்கென்ன பேஷா போயிட்டு வர்றேன்,'' என்றவர், மனதுக்குள், 'நாமாக கொண்டு போகாத ஐட்டம் என்பதால், கமிஷன் அவ்வளவு தேறாது...' என்று, உற்சாகம் மட்டுப்பட்டது.
''வெளியே கார் நிக்குது... நீங்க, கார்ல போய், பையன பள்ளிக் கூடத்துலயே பாத்துட்டு வந்துடுங்க,'' என்றார்.
மணி, 9:00 ஆகியும் இன்னும் காபி குடிக்காத ஏக்கத்தோடு, சட்டையை மாட்டி, வெளியே வந்தார், கல்யாணம்.
''சார்... உங்கள பாத்து எவ்வளவு நாளாச்சு,'' என்று கூறி, கை கூப்பி வணங்கினான், சுந்தரம்.
கதர் வேட்டி, கதர் ஜிப்பாவில் இருந்த சுந்தரம், சராசரிக்கும் கூடுதலான உயரம்; நல்ல நிறம்; கண்களில் தீட்சண்யம்; முகத்தில் கம்பீரத்தோடு காணப்பட்டான்.
எங்கோ பார்த்தது போல் தோன்ற, யோசனையோடு நின்றார், கல்யாணம்.
''சார்... என்னை தெரியலயா... நான், உங்க பழைய ஸ்டூடண்ட். உங்ககிட்ட எட்டாவது படிச்சேன்; சுந்து... சுந்துன்னு கூப்பிடுவீங்களே...'' என்று ஞாபகப்படுத்தினான்.
'பளிச்'சென்று ஞாபகம் வர, ''ஏய் சுந்தரம்... நீ தானா அது... பெரிய கலெக்டரா வருவேன்னுல எதிர்பாத்தேன்; பி.ஏ.,விலே, 'யூனிவர்சிட்டி ரேங்க்' வாங்கினதா கேள்விப்பட்டேனே... அவ்வளவு, 'பிரைட்டா' இருந்துட்டு, ஏம்பா இந்த தரித்திரம் பிடிச்ச உத்யோகத்தில நுழைஞ்சே...'' என்றார்.
''என்ன சார் இப்படி சொல்றீங்க... இது என்ன தரித்திர உத்தியோகமா...
ஒரு ஞான தீபம், நூறு ஞான தீபங்களை ஏத்தி வைக்கணும்ன்னு, அன்னிக்கு நீங்க சொன்ன ஒரு சொல் தான், பசு மரத்தாணி போல, நெஞ்சுல பதிஞ்சிருக்கு...'' என்றதும், 'என்ன பிள்ளையாண்டான் இப்படி அசடாட்டம் இருக்கான்...' என்று, அவனையே, கவலையோடு பார்த்தவர், ''நான், அந்த அர்த்ததில்ல சொல்லல...'' என்று அசடு வழிந்தார்.
''எங்கப்பாவோட தொந்தரவு தாங்க முடியாமத் தான், எம்.ஏ., முடிச்சதும், 'குரூப் ஒன்' தேர்வு எழுதினேன். பாசாகி,
'செலக் ஷன் ஆர்டர்' எதிர்பாத்திருக்கையில தான், வாத்தியார் வேலைக்கான, 'ஆர்டர்' வந்துச்சு. உடனே, வாத்தியார் வேலைக்கு வந்துட்டேன். அன்னிக்கு, நீங்க என் மனசில விதைத்த லட்சியங்கள, இன்னிக்கு, நான், இங்கே விதைச்சுக்கிட்டிருக்கிறேன்,'' என்றான்.
அவன் பேசப் பேச கொட்டாவி வந்தது; சிரமப்பட்டு அடக்கினார், கல்யாணம். நல்ல காலம், பள்ளிக்கூட பியூன், டபராவில் காபி கொண்டு வந்தான். அதை வாங்கி, ஆசிரியருக்காக, ஆற்ற துவங்கினான், சுந்தரம்.
''அப்பழுக்கற்ற, தனி மனிதர்களை உருவாக்குவது தான், சுதந்திர இந்தியாவின் இன்றிமையாத கடமைன்னு அன்னிக்கு நீங்க சொன்னது, இன்னும் என் மனசில, 'தக தக'ன்னு எரிஞ்சுகிட்டிருக்கு,'' என்றான்.
தொடரும்...............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கல்யாணமோ, 'பயப்படுகிற அளவுக்கு, காபி பாடாவதியாக இருக்குமோ...' என்று, யோசனையோடு, டபராவை கவனித்தார்.
''உங்கள மாதிரி ஒரு ஆசிரியர் எனக்கு வாய்க்கலேன்னா, நானும், எல்லாரையும் போல, வெந்ததை தின்னு, வேளை வரும் போது சாகும், சாமான்ய மனிதர்களை போல் மாறிருப்பேன் சார்,'' என்றான், உணர்ச்சியுடன்!
காபியை குடிக்க ஆரம்பித்த கல்யாணத்தின் மனமோ, 'ஏ ஒன்...' என்று சிலாகித்தது.
''உங்க மாணவர்கள்ல, எத்தனையோ பேர்...'' என்று பேச்சை சுந்தரம் தொடர்ந்த போது, ''உனக்கு, 'லெஷர்' பீரியடா,'' என்று, அவனை தக்க இடத்தில் கத்தரித்தார், கல்யாணம்.
''இல்ல... ஏன் சார்?''
''அப்போ, அரை நாள் லீவு போட்டு என்னோட வர முடியுமா... இங்கே, ரங்கநாதர் கோவிலும், ரெண்டு கையிலும், வெண்ணை உருண்டை வச்சிட்டு நிக்கற கண்ணன் சிலையும் ரொம்ப அழகுன்னு கேள்விப் பட்டிருக்கேன்... பாக்கணும், கார் கொண்டு வந்திருக்கேன்,'' என்றார்.
''ஆகட்டும் சார்...'' என்றவன், லீவு சொல்ல, தலைமையாசிரியர் அறைக்கு சென்றான்.
ரங்கநாதர் கோவிலை, கார் நெருங்கிய போது, எதிரே வந்த, 'ஆடி' காரை பார்த்து, ''சார்... கொஞ்சம் காரை நிறுத்தச் சொல்லுங்க,'' என்றான் சுந்தரம்.
''ஏம்பா?''
''எதிர்ல வர்ற கார்ல கோபு வர்றான் சார்.''
''கோபுவா... எந்த கோபு?''
''அவன் தான் சார்... ஜகதலப்பிரதாபன்னு நீங்க கிண்டல் செய்வீங்களே... நாங்க கூட, 'புளுகு மூட்டை கோபு'ன்னு கலாட்டா செய்வோமே...'' என்று ஞாபகப்படுத்தியவாறு, காரிலிருந்து இறங்கி, கையை அசைக்க, அருகில் வந்து நின்றது, கார்.
கதவை திறந்து, கீழே இறங்கிய கோபு, பேன்ட், சர்ட், கூலிங்கிளாஸ், தங்க செயின் மாட்டிய டிஜிட்டல் வாட்ச், வைர மோதிரம் என, பகட்டாக இருந்தான். கோபுவை பார்த்ததுமே கல்யாணத்திற்கு பிடித்து விட்டது.
''டேய் சுந்தரம்... எப்படி இருக்க?'' என்று ஆர்வமாக கேட்டு, அவன் கைகளை பிடித்தான், கோபு.
''நான் நல்லா இருக்கேன்; நீ எப்படி இருக்க...'' என்றான், சுந்தரம்.
''இருக்கேம்பா... உங்க ஸ்கூல் இலக்கிய மன்ற பத்திரிக்கை கிடைச்சுது. சாரி சுந்தரம்... என்னால வரமுடியாது; தொழிற்சாலையில இரண்டாவது தளத்துல வேலை நடந்துட்டு இருக்கு; வேலை விஷயமாக ஓய்வு ஒழிச்சல் இல்லாமல், மிஷின் மாதிரி அலைய வேண்டியிருக்கு,'' என்றான்.
''கோபு... சாரை தெரியுதா...''
அப்போது தான், வாத்தியார் கல்யாணத்தை திரும்பிப் பார்த்தான்.
'' ஓ... நம்ப கல்யாணம் வாத்தியார்... வணக்கம் சார்; சவுக்கியமா இருக்கீங்களா?''
''இருக்கேம்பா.''
''உங்க பேச்சை கேட்டு உருப்பட்டிருந்தா, சுந்தரம் மாதிரி, வாழ்க்கை அமைதியா இருந்திருக்கும்; அடிக்கடி உங்கள நினைச்சுக்குவேன் சார்... என் தலையில தான் படிப்பு நுழையலியே... நீங்க, எவ்வளவு கஷ்டப்பட்டீங்க...''
கல்யாணம் வாத்தியாரோ, காரியத்திலேயே கண்ணாக இருந்தார்.
''கல்யாணமாயிடுச்சா கோபு?''
''இல்லே சார்... பாத்துக்கிட்டிருங்காங்க.''
''என்ன தொழில் செய்றே?''
''கெமிக்கல் தொழிற்சாலையில, 'மேனேஜிங் பார்ட்னரா' இருக்கேன்; ஒருநாள் வீட்டுக்கு வாங்க சார்.''
''வர்றேம்பா... வீடு எங்க இருக்கு?'' என்று கேட்டார்.
விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினான் கோபு.
''அவசியம் வரணும் சார்... வெறும், உபசார வார்த்தையா நினைக்கப்படாது,'' என்று கூறி, விடைபெற்றான்.
கார் கிளம்பியதும், சுந்தரத்திடம், ''எப்படி இவன் இவ்வளவு முன்னுக்கு வந்தான்?'' என்று கேட்டார், கல்யாணம்.
தொடரும்.........
''உங்கள மாதிரி ஒரு ஆசிரியர் எனக்கு வாய்க்கலேன்னா, நானும், எல்லாரையும் போல, வெந்ததை தின்னு, வேளை வரும் போது சாகும், சாமான்ய மனிதர்களை போல் மாறிருப்பேன் சார்,'' என்றான், உணர்ச்சியுடன்!
காபியை குடிக்க ஆரம்பித்த கல்யாணத்தின் மனமோ, 'ஏ ஒன்...' என்று சிலாகித்தது.
''உங்க மாணவர்கள்ல, எத்தனையோ பேர்...'' என்று பேச்சை சுந்தரம் தொடர்ந்த போது, ''உனக்கு, 'லெஷர்' பீரியடா,'' என்று, அவனை தக்க இடத்தில் கத்தரித்தார், கல்யாணம்.
''இல்ல... ஏன் சார்?''
''அப்போ, அரை நாள் லீவு போட்டு என்னோட வர முடியுமா... இங்கே, ரங்கநாதர் கோவிலும், ரெண்டு கையிலும், வெண்ணை உருண்டை வச்சிட்டு நிக்கற கண்ணன் சிலையும் ரொம்ப அழகுன்னு கேள்விப் பட்டிருக்கேன்... பாக்கணும், கார் கொண்டு வந்திருக்கேன்,'' என்றார்.
''ஆகட்டும் சார்...'' என்றவன், லீவு சொல்ல, தலைமையாசிரியர் அறைக்கு சென்றான்.
ரங்கநாதர் கோவிலை, கார் நெருங்கிய போது, எதிரே வந்த, 'ஆடி' காரை பார்த்து, ''சார்... கொஞ்சம் காரை நிறுத்தச் சொல்லுங்க,'' என்றான் சுந்தரம்.
''ஏம்பா?''
''எதிர்ல வர்ற கார்ல கோபு வர்றான் சார்.''
''கோபுவா... எந்த கோபு?''
''அவன் தான் சார்... ஜகதலப்பிரதாபன்னு நீங்க கிண்டல் செய்வீங்களே... நாங்க கூட, 'புளுகு மூட்டை கோபு'ன்னு கலாட்டா செய்வோமே...'' என்று ஞாபகப்படுத்தியவாறு, காரிலிருந்து இறங்கி, கையை அசைக்க, அருகில் வந்து நின்றது, கார்.
கதவை திறந்து, கீழே இறங்கிய கோபு, பேன்ட், சர்ட், கூலிங்கிளாஸ், தங்க செயின் மாட்டிய டிஜிட்டல் வாட்ச், வைர மோதிரம் என, பகட்டாக இருந்தான். கோபுவை பார்த்ததுமே கல்யாணத்திற்கு பிடித்து விட்டது.
''டேய் சுந்தரம்... எப்படி இருக்க?'' என்று ஆர்வமாக கேட்டு, அவன் கைகளை பிடித்தான், கோபு.
''நான் நல்லா இருக்கேன்; நீ எப்படி இருக்க...'' என்றான், சுந்தரம்.
''இருக்கேம்பா... உங்க ஸ்கூல் இலக்கிய மன்ற பத்திரிக்கை கிடைச்சுது. சாரி சுந்தரம்... என்னால வரமுடியாது; தொழிற்சாலையில இரண்டாவது தளத்துல வேலை நடந்துட்டு இருக்கு; வேலை விஷயமாக ஓய்வு ஒழிச்சல் இல்லாமல், மிஷின் மாதிரி அலைய வேண்டியிருக்கு,'' என்றான்.
''கோபு... சாரை தெரியுதா...''
அப்போது தான், வாத்தியார் கல்யாணத்தை திரும்பிப் பார்த்தான்.
'' ஓ... நம்ப கல்யாணம் வாத்தியார்... வணக்கம் சார்; சவுக்கியமா இருக்கீங்களா?''
''இருக்கேம்பா.''
''உங்க பேச்சை கேட்டு உருப்பட்டிருந்தா, சுந்தரம் மாதிரி, வாழ்க்கை அமைதியா இருந்திருக்கும்; அடிக்கடி உங்கள நினைச்சுக்குவேன் சார்... என் தலையில தான் படிப்பு நுழையலியே... நீங்க, எவ்வளவு கஷ்டப்பட்டீங்க...''
கல்யாணம் வாத்தியாரோ, காரியத்திலேயே கண்ணாக இருந்தார்.
''கல்யாணமாயிடுச்சா கோபு?''
''இல்லே சார்... பாத்துக்கிட்டிருங்காங்க.''
''என்ன தொழில் செய்றே?''
''கெமிக்கல் தொழிற்சாலையில, 'மேனேஜிங் பார்ட்னரா' இருக்கேன்; ஒருநாள் வீட்டுக்கு வாங்க சார்.''
''வர்றேம்பா... வீடு எங்க இருக்கு?'' என்று கேட்டார்.
விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினான் கோபு.
''அவசியம் வரணும் சார்... வெறும், உபசார வார்த்தையா நினைக்கப்படாது,'' என்று கூறி, விடைபெற்றான்.
கார் கிளம்பியதும், சுந்தரத்திடம், ''எப்படி இவன் இவ்வளவு முன்னுக்கு வந்தான்?'' என்று கேட்டார், கல்யாணம்.
தொடரும்.........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
'ஜகஜால புரட்டு தான் சார்... முதல்ல சீட்டு கம்பெனி தான் ஆரம்பிச்சான்; அதிலே, ஏகப்பட்ட கோல்மால்... அப்புறமா, தவணையில, 'வெள்ளி பாத்திரமும், பட்டு புடவையும் கொடுக்கறே'ன்னு கிளம்பினான்... கணிசமா பணம் சேர்த்தான்; இன்டஸ்ட்ரீஸ்ல போட்டான். நீங்க, எதெல்லாம் பாவம்ன்னு சொல்வீங்களோ, அதில, ஒண்ணு பாக்கி வைக்கல,'' என்றான்.
''இருந்தாலும், ரொம்ப சாமர்த்தியசாலியா இருக்கானே!''
''இதுவா சார் சாமர்த்தியம்...'' அருவருப்போடு கேட்டான் சுந்தரம். அவன் குரலில், பள்ளிக்கூடத்து பழைய அசட்டுத்தனம் தெரிந்தது, கல்யாணத்திற்கு!
''மாப்பிள்ளை பையன் எப்படியிருக்கான்?'' என்று ஆர்வத்துடன் விசாரித்தார், நாராயணமூர்த்தி.
''நல்லவன் தான்... யோக்கியமானவன்; ஆனா, அசடு. பொழைக்கிற வழியோ, சாமர்த்தியமோ தெரியாதவன்.
அதைவிட, நல்ல வரன் ஒண்ணு வழியிலே மாட்டுச்சு; 'டைமண்ட்' கெமிக்கல் தொழிற்சாலையில பார்ட்னர். பையன் எங்கிட்ட படிச்சவன்; ஆள், வாட்ட சாட்டமா, நல்லா இருப்பான்; அசகாய சூரன். இப்போ, பிரமாதமா ஷைனாகி இருக்கான்,'' என்று விலாவாரியாக விவரித்தார்.
உள்ளுக்குள், தன் சொல்லைக் கேட்டு, கெட்டுப் போன சுந்தரத்தின் மீது, வருத்தம் ஏற்பட்டாலும், 'அதற்கென்ன செய்ய... அவனவனுக்கு, சொந்த புத்தி வேண்டாமோ...' என்று, சமாதானப்படுத்திக் கொண்டார்.
இரு நாட்களுக்கு பின், தன்னைத் தேடி வந்த நாராயண மூர்த்தியிடம், ''என்ன நாராயண மூர்த்தி... அந்த இன்டஸ்ட்ரி பையன போய் பாத்துட்டு வந்துடுவோமா,'' என்று, கேட்டார், கல்யாணம்.
''அதை பத்தி தான் பேச வந்தேன்... நாம, அந்த வாத்தியார் பையனையே பாத்துடுவோம்...''
''என்ன திடீர் மாற்றம்?''
''என் பொண்ணு தான், 'பணம், பதவிங்கிற மயக்கம் இல்லாம, நேர் வழியில போறவன் தான், கடைசி வரை, எந்த ஊழல் மோசடியிலும் சிக்காம, நிலைச்சு நிப்பான்'னு சொல்லிட்டா...'' என்றார், நாராயணமூர்த்தி.
மனித மனங்களில் விசித்திரங்களை உணர்ந்திருந்த வாத்தியாருக்கு, பெரிய அதிர்ச்சி ஏற்படவில்லை.
பெண், புத்திசாலி என்பதை மட்டும் புரிந்து கொண்டார்.
சுதந்திரப்பிரியா
''இருந்தாலும், ரொம்ப சாமர்த்தியசாலியா இருக்கானே!''
''இதுவா சார் சாமர்த்தியம்...'' அருவருப்போடு கேட்டான் சுந்தரம். அவன் குரலில், பள்ளிக்கூடத்து பழைய அசட்டுத்தனம் தெரிந்தது, கல்யாணத்திற்கு!
''மாப்பிள்ளை பையன் எப்படியிருக்கான்?'' என்று ஆர்வத்துடன் விசாரித்தார், நாராயணமூர்த்தி.
''நல்லவன் தான்... யோக்கியமானவன்; ஆனா, அசடு. பொழைக்கிற வழியோ, சாமர்த்தியமோ தெரியாதவன்.
அதைவிட, நல்ல வரன் ஒண்ணு வழியிலே மாட்டுச்சு; 'டைமண்ட்' கெமிக்கல் தொழிற்சாலையில பார்ட்னர். பையன் எங்கிட்ட படிச்சவன்; ஆள், வாட்ட சாட்டமா, நல்லா இருப்பான்; அசகாய சூரன். இப்போ, பிரமாதமா ஷைனாகி இருக்கான்,'' என்று விலாவாரியாக விவரித்தார்.
உள்ளுக்குள், தன் சொல்லைக் கேட்டு, கெட்டுப் போன சுந்தரத்தின் மீது, வருத்தம் ஏற்பட்டாலும், 'அதற்கென்ன செய்ய... அவனவனுக்கு, சொந்த புத்தி வேண்டாமோ...' என்று, சமாதானப்படுத்திக் கொண்டார்.
இரு நாட்களுக்கு பின், தன்னைத் தேடி வந்த நாராயண மூர்த்தியிடம், ''என்ன நாராயண மூர்த்தி... அந்த இன்டஸ்ட்ரி பையன போய் பாத்துட்டு வந்துடுவோமா,'' என்று, கேட்டார், கல்யாணம்.
''அதை பத்தி தான் பேச வந்தேன்... நாம, அந்த வாத்தியார் பையனையே பாத்துடுவோம்...''
''என்ன திடீர் மாற்றம்?''
''என் பொண்ணு தான், 'பணம், பதவிங்கிற மயக்கம் இல்லாம, நேர் வழியில போறவன் தான், கடைசி வரை, எந்த ஊழல் மோசடியிலும் சிக்காம, நிலைச்சு நிப்பான்'னு சொல்லிட்டா...'' என்றார், நாராயணமூர்த்தி.
மனித மனங்களில் விசித்திரங்களை உணர்ந்திருந்த வாத்தியாருக்கு, பெரிய அதிர்ச்சி ஏற்படவில்லை.
பெண், புத்திசாலி என்பதை மட்டும் புரிந்து கொண்டார்.
சுதந்திரப்பிரியா
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|