புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 2 Poll_c10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 2 Poll_m10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 2 Poll_c10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 2 Poll_m10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 2 Poll_c10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 2 Poll_m10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 2 Poll_c10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 2 Poll_m10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 2 Poll_c10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 2 Poll_m10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 2 Poll_c10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 2 Poll_m10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 2 Poll_c10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 2 Poll_m10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 2 Poll_c10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 2 Poll_m10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 2 Poll_c10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 2 Poll_m10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 2 Poll_c10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 2 Poll_m10   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு)


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 01, 2017 5:01 am

First topic message reminder :

   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 2 Ni2PTeMrQbKK67CGHNIH+E_1456046546
-
கம்ப ராமாயணம் எழுதிய கம்பரைப் பற்றிச் சில செய்திகள்…

-
ஊர் : தேரழுந்தூர்
தந்தை : ஆதித்தன், காளி கோவில் பூசாரி
மகன் : அம்பிகாபதி
மகள் : காவிரி

சிறப்புப் பெயர்கள்

கவிச்சக்ரவர்த்தி
கவிப்பேரரசர்
கவிக்கோமான்
கம்ப நாடுடைய வள்ளல்

படைப்புகள்

கம்ப ராமாயணம்
ஏர் எழுபது
சிலை எழுபது
திருக்கை வழக்கம்
சரஸ்வதி அந்தாதி
சடகோபர் அந்தாதி
(நம்மாழ்வார் பற்றியது)

கம்ப ராமாயணத்தின் சிறப்பு பெயர்கள்

கம்பச் சித்திரம்
கம்ப நாடகம்
தோமறுமாக்கதை
இயற்கை பரிணாமம்

கம்ப ராமாயணம் நூல் அமைப்பு


6 காண்டங்கள்

113 – படலங்கள்

10569 – பாடல்கள்

முதல் படலம் – ஆற்றுப்படலம்

இறுதிப்படலம் – திருமுடிசூட்டுப் படலம்

6 காண்டங்கள்
பால காண்டம்
அயோத்தியா காண்டம்
ஆரண்ய காண்டம்
கிட்கிந்தா காண்டம்
சுந்தர காண்டம்
யுத்த காண்டம்

பொதுவான குறிப்புகள்:

-
• கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர் ‘இராமாவதாரம்’
• கம்பர் இறந்த இடம், சமாதி உள்ள இடம்: நாட்டரசன் கோட்டை,
சிவகங்கை மாவட்டம்
• வான்மீகி எழுதாத ‘இரணியன் வதைப் படலம்’ கம்ப ராமாயணத்தின்
மிகச் சிறந்த பகுதியாகக் கருதப்படுகிறது.
• கம்பர் தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளலை,
1000 பாடல்களுக்கு ஒரு முறை பாடி உள்ளார்.
• கம்பர் தன் காப்பியத்தை அரங்கேற்றிய இடம் திருவரங்கம்
(ஸ்ரீரங்கம்தான்!).
• கம்பருக்கு தமிழக அரசு தேரழுந்தூரில் மணி மண்டபம் அமைத்து
சிறப்பித்துள்ளது.
• கம்பர் மூன்றாம் குலோத்துங்க சோழனின் அவைப் புலவராக இருந்தவர்.

தினமலர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 03, 2017 1:10 pm

   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 2 D8cjJBFLQUyii2tDCUiC+9


சிறந்த விஞ்ஞானியான பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்
ஒரு புத்தகக்கடை நடத்தி வந்தார். அவருடைய கடைக்குப்
புத்தகம் வாங்க வந்த ஒருவர், ஒரு புத்தகத்தைத்
தேர்ந்தெடுத்து, அதன் விலை என்ன என்று கேட்டார்.

அதற்கு ஃப்ராங்க்ளின், ""ஒரு டாலர்...'' என்றார்.

வாடிக்கையாளர், புத்தகத்தின் விலையைக் குறைக்க
15 நிமிடங்கள் பேரம் பேசினார்... பொறுமையிழந்த
பெஞ்சமின், ""புத்தகத்தின் விலை இப்போது ஒன்றரை
டாலர்'' என்றார்.

அதிர்ச்சியுற்ற அந்த மனிதர், ""நான் புத்தகத்தின்
விலையைக் குறைக்க முயற்சிக்கிறேன்... நீங்களோ,
விலையை ஏற்றிவிட்டீர்களே..!'' என்று கேட்டார்.

""உன்னோடு பேசியதால் எனக்கு 15 நிமிடங்கள்
வீணாகிவிட்டது. அதனால் புத்தகத்தின் விலை
அதிகமாகிவிட்டது'' என்றார் ஃப்ராங்க்ளின்.
-
---------------------------------
-வீ.இராமலிங்கம், முத்துப்பேட்டை.
dinamani

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 03, 2017 1:10 pm

   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 2 YAMgW3UaQTedWRJ9DPFp+C_V_Raman

சர்.சி.வி.ராமன் பாரத் ரத்னா விருதுக்குத் தேர்வு
செய்யப்பட்டிருந்தார். விருது பெற வரும்போது தனது
சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் மாளிகையில்
தங்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்,
அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்.

ஆனால், ""டாக்டர் பட்டம் பெற இருக்கும் எனது மாணவன்
ஒருவனின் ஆய்வறிக்கையை நெறிப்படுத்தி உதவும் பணிக்கு
அவருடன் தங்கவிருப்பதால், தங்கள் அழைப்பை என்னால்
ஏற்க இயலாது'' என்று தெரிவித்துவிட்டார் ராமன்.

குடியரசுத் தலைவரின் விருந்தினராகும் கௌரவத்தைவிடத்
தன்னுடைய மாணவனின் வளர்ச்சியில் அக்கறை காட்டிய
சர்.சி.வி.ராமனின் கடமை உணர்ச்சியை எல்லோரும் மெச்சிப்
பாராட்டினார்கள்.
-
----------------------------------

-ஆ.பிரியதர்ஷினி, திருநெல்வேலி.
dinamani

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 03, 2017 1:11 pm

   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 2 OhY4AsifSfG3BQy1b3ma+barathi_by_kabil

ஒருமுறை நாவலர் சோமசுந்தர பாரதியார் அமரகவி
பாரதியாருக்கு ஒரு பட்டுத் துண்டை அன்புடன் வழங்கினார்.
அதனைப் போர்த்திக்கொண்டு உலாவப் போனார் பாரதியார்.

அவர் சென்ற வழியில் ஒருவன் உடையின்றிக் கிடப்பதைப்
பார்த்த பாரதியார் அப்பட்டுத் துண்டை அவனுக்குப் போர்த்தி
விட்டார்.

துண்டு இல்லாமல் திரும்பி வந்த பாரதியாரைக் கண்ட
நாவலர்,""துண்டு எங்கே?'' என்று கேட்டார். பாரதியார்
நாவலரை அழைத்துக்கொண்டு போய்த் தெருவில்
உடையின்றிக் கிடந்தவனைச் சுட்டிக் காட்டினார்.

இந்தச் செயலைக் கண்டு உருகிய நாவலர்,""பாரதி நன்றாக
இருக்க வேண்டுமானால் இந்த உலகம் நன்றாக இருக்க
வேண்டும்'' என்று உளம் கசிந்தார்.
-
-----------------------------

ஜி.அருள்குமார், மன்னார்குடி
dinamani

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 03, 2017 1:14 pm

   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 2 22FxCS4ARRWKsN2sfX7v+images

ஒருமுறை வடலூரில் வள்ளலார் பிரசங்கம் செய்த
சமயம், அவருடைய சொற்பொழிவைக் கேட்க
அக்கம் பக்கத்து கிராமத்தில் இருந்தவர்கள் எல்லாம்
கூடினார்கள்.

மாட்டு வண்டியில் வந்த செல்வந்தர் வள்ளலார்
பிரசங்கத்தை ஆரம்பிக்கும் முன்னால் அங்கு சென்று
விட வேண்டும் என்ற ஆர்வத்தில் மாட்டை அடித்து
வேக வேகமாக ஓட்டி வந்தார்.

பிரசங்கம் செய்ய வந்த வள்ளலார், நுரை தள்ளியபடியே
மூச்சிரைத்தப்படி நின்று கொண்டு இருந்த மாட்டைப்
பார்த்தார். உடனே மேடையைவிட்டு இறங்கி மாட்டருகே
சென்றார்.

அதன் கழுத்தை கட்டிப்பிடித்துக்கொண்டு,
""என்னால் அல்லவோ உங்களுக்கு இந்தக் கதி'' என்று
கண்ணீர் பெருகினார்.

செல்வந்தர் வெட்கித் தலைகுனிந்தார்.

வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலார், கண்ணீர்
சிந்திய அற்புதத்தை என்னவென்பது?
-
------------------------------

மா.பா.சங்கர நாராயணன், முத்துப்பேட்டை.
dinamani

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 03, 2017 1:15 pm

   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 2 Qp787ZvQ3yge0vKfcxk3+vivekanandar

விவேகானந்தரின் தந்தை இறந்தபோது வீட்டில்
சாப்பிடுவதற்குக்கூட ஒன்றும் இல்லை. அப்போது
ராமகிருஷ்ணர் விவேகானந்தரிடம்,""நீ கோயிலுக்குச்
சென்று அன்னையிடம் முறையிடு.

அவள் அனைத்தையும் கவனித்துக் கொள்வாள்,
கவலைப்படாதே!'' என்று கூறி தான் வாசற்படியில்
அமர்ந்து கொண்டு அவரைக் கோயிலுக்குள்
அனுப்பினார்.

பல மணி நேரம் கழித்து வெளியில் வந்தவரிடம்,

"முறையிட்டாயா?'' எனக் கேட்டார். விவேகானந்தர்,
"அடடா! அதை நான் மறந்தேவிட்டேன்'' என்றார்.
இவ்வாறே மூன்று நாட்கள் நடந்தது.

இறுதியாக அவர் கூறினார்,
"இது என்னால் முடியாது. நான் அன்னையின் முன்
சென்றதுமே என் கவலைகள் பறந்தோடிவிடுகின்றன.
நானே அங்கே இருப்பதில்லை. என் கவலைகள்
எப்படி இருக்கும்?'' என்றார்.

இராமகிருஷ்ணரும்,""நீ வீணாகவில்லை, எங்கே
வேண்டுதல் உள்ளதோ அங்கே பிரார்த்தனை இல்லை''
என்றார்.
-
---------------------------
அ.கருப்பையா, பொன்னமராவதி.
dinamani

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 03, 2017 5:01 pm

எல்லாமே பயனுள்ள பதிவுகள் !

நன்றி ஐயா !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 03, 2017 10:10 pm

நல்லதோர் ஆரம்பம்.
தொடருங்கள் ayyasami ram .
ரசித்தேன்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 04, 2017 6:14 am

நடிகர் சிவகுமார் சொன்னது :

" எனக்கு பக்தி உண்டு ; ஆனால் கோவிலுக்கு நான் செல்வது இல்லை "



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 04, 2017 6:22 am

அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை .

மற்ற உயிர்கள் படும் துன்பத்தை தன் துன்பமாக பாவிக்காதவன் துறவி அல்ல !

காலொடிந்த ஆட்டுக்காகக் கண்ணீர் விட்டவர் புத்தர் .

வள்ளலாரும் , புத்தரும் உண்மையான துறவிகள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 05, 2017 11:27 am

ayyasamy ram wrote:
   புகழ் பெற்றவர்களின் வாழ்வில்...(தொடர் பதிவு) - Page 2 1xKpAq79REyMNh8JSYCz+download(1)

வழக்கு!

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆப்ரகாம் லிங்கன்
வழக்கறிஞராக இருந்தபோது, ஒருநாள் பணக்காரர் ஒருவர்
லிங்கனிடம் வந்தார். அவருக்கு ஏழை ஒருவர் ஐந்து டாலர்
கடன் கொடுக்க வேண்டியிருந்தது.

பணக்காரர் விவரத்தைச் சொல்லி, வழக்குப் போட
வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

""வெறும் ஐந்து டாலர்களுக்காகவா வழக்கு போடப்
போகிறீர்கள்?'' என்று லிங்கன் எவ்வளவோ எடுத்துச்
சொல்லிப் பார்த்தும் அந்தப் பணக்காரர் கேட்பதாக இல்லை.

""சரி, எனக்கு வழக்காடுவதற்காக 10 டாலர் கட்டணமாக
நீங்கள் தர வேண்டும்'' என்று லிங்கன் கேட்டார்.

பணக்காரரும் 10 டாலர்களை உடனே லிங்கனிடம்
கொடுத்தார்.

அதைப் பெற்றுக் கொண்ட லிங்கன் அந்த ஏழையை
அழைத்து அவரிடம் 5 டாலர்களைக் கொடுத்துக் கடனை
அடைக்கச் சொன்னார்.

பணக்காரரும் கடன் கிடைத்த மகிழ்ச்சியில் தமது
இல்லம் திரும்பினார்.
-
-------------------------------
-இராதை இரா.பாரதிதாசன், தஞ்சாவூர்.
dinamani

பணக்காரரின் Ego என்று சொல்வதா இதை? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக