புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளி மாணவர்களை குறி வைக்கும் புகையிலை வியாபாரிகள் Poll_c10பள்ளி மாணவர்களை குறி வைக்கும் புகையிலை வியாபாரிகள் Poll_m10பள்ளி மாணவர்களை குறி வைக்கும் புகையிலை வியாபாரிகள் Poll_c10 
6 Posts - 60%
heezulia
பள்ளி மாணவர்களை குறி வைக்கும் புகையிலை வியாபாரிகள் Poll_c10பள்ளி மாணவர்களை குறி வைக்கும் புகையிலை வியாபாரிகள் Poll_m10பள்ளி மாணவர்களை குறி வைக்கும் புகையிலை வியாபாரிகள் Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
பள்ளி மாணவர்களை குறி வைக்கும் புகையிலை வியாபாரிகள் Poll_c10பள்ளி மாணவர்களை குறி வைக்கும் புகையிலை வியாபாரிகள் Poll_m10பள்ளி மாணவர்களை குறி வைக்கும் புகையிலை வியாபாரிகள் Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளி மாணவர்களை குறி வைக்கும் புகையிலை வியாபாரிகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 01, 2017 4:01 am

புகையிலை வியாபாரிகள் என்று சொல்வது புகையிலை
பொருட்களை குடிசைத் தொழிலாக செய்து லட்சங்களை
சம்பாதிப்பவர்களை மட்டுமல்ல கோடிகளை குவிக்கும்
பெரு நிறுவனங்களையும் சேர்த்துதான்.

இவர்கள் ஒற்றை இலக்கு ‘யார் எக்கேடு கெட்டாலும் நமக்கு
வருவாய் குவிய வேண்டும்’ என்பதுதான். அதனால் இவர்கள்
இலக்காக வைத்து செயல்படுவது பள்ளி, கல்லூரி
மாணவர்களைதான். அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்களைதான்.

காரணம் மாணவர்களை புகையிலை பழக்கத்திற்கு
அடிமையாக்குவதன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை
பெருக்குவதுடன், நீண்ட காலத்திற்கு வாடிக்கையாளர்களை
நிரந்தரமாக்கிக் கொள்ளும் திட்டம்தான், ‘அதற்காக
விதவிதமாக, குறைந்த விலையில் புகையிலை பொருட்களை
பள்ளி, கல்லூரி அருகில் விற்கின்றனர்’ என்கிறார் புகையிலைக்கு
எதிரான குழந்தைகளின் அமைப்பின் செயல் இயக்குனர்
சிரில் அலெக்சாண்டர்.

அவர் மேலும் ‘தமிழக பள்ளிகளில் அருகில் ‘கூல் லிப்’ என்ற
பெயரில் தடை செய்யப்பட்ட புகையிலை தூள் விற்பனை
செய்யப்படுகிறது. ஒரு பாக்கெட்டில் 10 உறைகள் இருக்கும்.

விலை ரூ.15. பல வகையான புகையிலை பொருட்கள்
மாணவர்களை குறி வைத்து விற்கப்பட்டாலும் இந்த
கூல் லிப்தான் மாணவர்களை மட்டுமல்ல மாணவிகளையும்
அதிகம் ஈர்க்கிறது.

சென்னையில் பள்ளிகளில் இருக்கும் கடைகளில் இந்த புகையிலை
பொருட்கள் தடையின்றி கிடைக்கிறது. கடைக்காரர்களே அதன்
பெருமைகளை சொல்லி மாணவர்களிடம் விற்கின்றனர்.

சென்னையில் கோடம்பாக்கம், அண்ணா மேம்பாலம், வடபழனி,
திநகர், கல்லூரிசாலை, கோபாலபுரம், எழும்பூர், திருவல்லிக்கேணி,
மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, வேளச்சேரி, ராயப்பேட்டை,
கேகேநகர் பகுதிகளில் உள்ள 22 மாநகராட்சி, பிரபல தனியார்
பள்ளிகளின் சுற்றுப்புறத்தை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம்.

எல்லா பள்ளிகளுக்கும் 100 கெஜத்திற்குள் புகையிலை பொருட்கள்
தாராளமாக கிடைக்கின்றன. ‘எங்கும் புகைப்பிடிக்காதீர்;
புகைப்பிடிப்பது குற்றம்’ என்ற அறிவிப்புகள் இல்லை.

மேலும் 18 வயதுக்கு குறைவானவர்கள் அதிலும் சீருடையில்
இருக்கும் மாணவர்கள் கேட்டாலும் புகையிலை பொருட்களை
விற்கின்றனர். அதிலும் 66.7 சதவீத கடைகளில் புகையிலை
பொருட்களை பளிச்சென தெரியும் வகையில் வைத்து விற்கின்றனர்.
மேலும் பள்ளிக்கு அருகில் இருக்கும் 84 சதவீத கடைகளில் முன்பாக
நின்று பலரும் புகைத்தபடி இருக்கின்றனர். மேலும் 62 சதவீத
கடைகளில் நோட்டு புத்தகங்கள், தின்பண்டங்களுடன் புகையிலை
பொருட்களையும் சேர்த்து விற்கின்றனர். பெரும்பான்மையான
கடைகளில் சிகரெட்களை 1, 2 என்று தனித்தனியாகவே விற்கின்றனர்.

ஏதோ ஒன்றிரண்டு பேர் இதற்கு பழகியிருக்கலாம் என தோன்றலாம்.
ஆனால் ஒரு வகுப்பில் 100 பேர் இருக்கிறார்கள் என்றால் ஜூன்
மாதம் பள்ளி தொடங்கும் போது ஒரு மாணவனுக்கு புகையிலை
பொருட்களை பயன்படுத்தும் பழக்கம் ஏற்பட்டால் மார்ச் மாதம் பள்ளி
முடிவடையும் போது குறைந்தது 30 மாணவர்கள் புகையிலை
பழக்கத்திற்கு ஆளாகிவிடுகின்றனர்’’ என்று எச்சரிக்கிறார்.

புகார் தெரிவிக்க...

புகையிலை பொருட்கள் விற்பனை, விளம்பரம், விநியோகம்
செய்வது தொடர்பான சட்ட மீறல்கள் நடந்தால் தமிழ்நாடு
அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின்
1800-110-456 என்ற இலவச அழைப்பு எண்ணையோ
அல்லது 044-24320802 என்ற தொலைபேசி எண்ணையோ தொடர்பு
கொண்டு தெரிவிக்கலாம்.

- சஞ்ஜெயா இரகுநாதன்
தினகரன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jun 01, 2017 4:03 am

ஆன்லைன் ஆபத்து

இந்தியாவில் தடை செய்யப்பட்ட பல புகையிலை பொருட்கள்
இப்போது ஆன்லைன் மூலம் வாங்க முடிகிறது.

ஈ சிகரெட், போதை சாக்லெட்கள், புகையிலை பொடிகள் என
எல்லாவிதமான பொருட்களையும் இப்படி வீட்டிற்கே வரவழைக்க
முடியம். அதனால் அரசு தடையிருந்தாலும், அதை அமல்படுத்தும்
அரசு அதிகாரிகள், காவல்துறையினருக்கு தெரியாமல் எளிதில்
அச்சமின்றி வாங்கி பயன்படுத்துகின்றனர்.

இந்த விஷயத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால்
புகையிலைக்கே தடை விதித்தாலும் பயன் இருக்காது என்று
ஆதங்கப்படுகிறார் டாக்டர் விதுபாலா.

- சஞ்ஜெயா இரகுநாதன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக