புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆரோபம்
Page 1 of 1 •
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
![ஆரோபம் MIS1gjEuTLWRDqsHhiJG+kai1](https://www.filepicker.io/api/file/MIS1gjEuTLWRDqsHhiJG+kai1.jpg)
அத்யாரோபம் என்றும் அபவாதம் என்றும் சொல்லும்
உத்தியால் பந்தம் வீடு என்று உணரும் வேதாந்தம் எல்லாம்
மித்தையாம் ஆரோபத்தால் பந்தமாம் அபவாதத்தால்
முக்தியாம் இவ்விரண்டில் முந்தி ஆரோபம் கேளாய்
--கைவல்ய நவநீதம் -19
அத்தியாரோபம் என்றும் அபவாதம் என்றும் சொல்லும் உத்தியால் பந்தம், வீடு என்று உரைக்கும் வேதாந்தமெல்லாம். மித்தையாம் (இல்லாத) ஆரோபத்தால் பந்தமாம். அபவாதத்தால் முத்தியாம். இவ்விரண்டில் முந்தி ஆரோபம் கேளாய்.
வேதாந்த தத்துவம் பரிபூரண ஞானத்தை இரண்டு படிவகைகளில் வைத்து விளக்கும் .
1) ஆரோபம்எனும் நிலையற்ற மாயநிலைப் பொருள்களை
பற்றிய தத்துவ விளக்கம் .
2) அபவாதம் எனும் நிலைத்த ( பரம் பொருள் ) பொருள் பற்றிய தத்துவ விளக்கம் .
ஒன்றன்மேல் மற்றொன்றன் தன்மையை யேற்றிக்கூறுவதை ஆரோபம் என்பர் .
இருட்டில் சுருண்டு கிடைக்கும் கயிற்றை பாம்பு என நினைப்பது ஆரோபம்.
ஆரோபம் எப்போது வரும்?
அந்த விஷயம் முதலில் இருக்கவேண்டும் . இது ஆதாரம்.என்பது
இது மேலே அதனுடைய உண்மை சொரூபம் தெரியாம ஒரு மறைப்பு இருக்கவேண்டும். இதுவே ஆரோபம்
கயிறாக தோன்றும் பிரமம் சாமான்ய ஆதாரம். பாம்பாக தோன்றும் கயிறு விசேட ஆதாரம்.
சுருக்கமாக சொன்னால் ,அத்தியாரோபம் = ஆரோபம். என்பது இல்லூஷன் (illusion).எனப்படும் .
அபவாதம் எனும் நிலைத்த உண்மைகளே பந்த பாசங்களில் இருந்து உயிர்களை விடுவித்து முக்தி எனும் பிறவா நிலைக்கு அழைத்து செல்லும் .
இப்போது ஆரோபம் என்பதை உங்களுக்கு விளக்குகிறேன் என்று அடுத்தப்பாடலுக்கு முன்னுரை கூறுகிறார் ஆசிரியர் .
--
அண்ணாமலை சுகுமாரன்
30/5/17
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
'கைவல்ய நவநீதம்' பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த, தாண்டவராயன் சுவாமிகளால் அருளிச் செய்யப் பெற்ற அத்வைத தத்துவநூல் ஆகும்.
'கைவல்யம்' என்ற சொல் முக்தி அல்லது மோட்சம் என்று பொருள்படும். 'நவநீதம்' என்பது வெண்ணெயைக் குறிக்கும்.
கைவல்ய நவநீதம் என்ற நூல் தலைப்பை, வெண்ணெய் போலத் திரட்டித் தரப்பட்டமுக்திக்கான வழி என நேராகப் பொருள் கொள்ளலாம்.
வேதாந்தம் என்ற பாற்கடலில் இருந்து, முந்தய நூல்களாகிய குடங்களில் நிரப்பி வைத்த ஞானப் பாலை, சற்குருவின் கருணை எனும் தீயில் காய்ச்சி, அநுபூதி என்னும் மத்தால் கடைந்து,
கைவல்யம் என்னும் வெண்ணெயைத் திரட்டி அளித்ததாக நூலாசிரியரே குறிப்பிடுகின்றார்.
உள்ளங்கை நெல்லிக்கனி போல மேலான தத்துவ கருத்துக்களை வெண்ணையாக திரட்டித் தருகிறார்
அடுத்து அடுத்தப்பாடலிலும் ஆரோபம் குறித்து என்ன கூறுகிறார் என்று பார்ப்போம் .
இப்படி போல நாம ரூபங்கள் இரண்டும் இன்றி
ஒப்பமாய் இரண்டு அற்று ஒன்றாய் உணர் ஒளி நிறைவாய் நிற்கும்
அப்பிரமத்தில் தோன்றும் ஐம்பூத விகாரம் எல்லாம்
செப்பு கற்பனையினாலே செனித்தன என்றறிந்து கொள்ளே !
கைவல்ய நவநீதம் --21
ஒருநாமம் ஓர்உருவம் ஒன்றுமில் லார்க்கு ஆயிரம்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ"
என்கிறார் மாணிக்க வாசகர்,
இவ்வாறு உருவமோ பெயரோ இல்லாமல் உணர்வாகவும் ,ஒளியாகவும்
எங்கும் நீக்கமற நிறைந்த பரம்பொருளே பிரமம் .
பிரிக்கமுடியாத இந்த பிரம்மத்தில் இருந்தே நிலம் ,நீர் ,காற்று ,நெருப்பு ஆகாயம்
எனும் ஐம்பூதங்களும் வெவேறு மாயத்தோற்றங்களாக உருவாயின .
பிரிக்கமுடியாத மண் என்ற மூல பொருளில் இருந்து பானை ,சட்டி , குவளை
என பல பொருள்கள் பல்வேறு உருவங்களில் பொருள்கள் உருவாக்குவது போல் ,
பரம்பொருள் எனும் இறை இந்த பூதங்களை உருவாக்கி அதன்மூலம்
பஞ்சீகரணம் எனும் வித்தை மூலம் உலகை உருவாக்கியது .
இதுவே ஆரோபம் என்போம் .
அண்ணாமலை சுகுமாரன்
2/6/௧௭
![ஆரோபம் RhxRdpgySUq7IxhCqjSb+kaii9](https://www.filepicker.io/api/file/RhxRdpgySUq7IxhCqjSb+kaii9.png)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
பிரிக்கமுடியாத மண் என்ற மூல பொருளில் இருந்து பானை ,சட்டி , குவளை
என பல பொருள்கள் பல்வேறு உருவங்களில் பொருள்கள் உருவாக்குவது போல் ,
பரம்பொருள் எனும் இறை இந்த பூதங்களை உருவாக்கி அதன்மூலம்
பஞ்சீகரணம் எனும் வித்தை மூலம் உலகை உருவாக்கியது .
இதுவே ஆரோபம் என்போம் .
நன்றி
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
![ஆரோபம் VrCwilfRcSm1v7XFsnWA+KAIVALYAM](https://www.filepicker.io/api/file/vrCwilfRcSm1v7XFsnWA+KAIVALYAM.jpg)
அதுதானெப்படி என்றக்கா லநாதியாஞ் சீவரெல்லாம்
பொதுவான சுழுத்திபோல பொருந்து மவ்வியந்தன்னில்
இதுகால தத்துவப் பேரீசனுட் பார்வையாலே
முதுமூல சுபாவம்விட்டு முக்குணம் வியத்தமாமே
கைவல்ய நவநீதம் -22
அதுதான் எப்படி என்றக்கால் அநாதியாம் சீவரெல்லாம்
பொதுவான சுழுத்திபோலப்பொருந்தும் அவ்வியத்தம் தன்னில் இது காலத் தத்துவப் பேர் ஈசனுட பார்வையாலே !
முதுமூல சுபாவம் விட்டு முக்குணம் வியத்தமாமே !
இத்தகைய கற்பனை எப்படி எழுத்ததெனில் ,
ஆதியும் அந்தமும் இல்லாத நிலையான பரம் பொருளான பிரமத்துள் உறக்கநிலையில் இருக்கும் விதையைப்போல
அனைத்து உயிர்களையும் தன்னுள் பொதித்து வைத்திருக்கிறது .
பிரம்மத்தில் பொதிந்து கிடைக்கும் தத்துவங்களில் ஒன்றான காலம் உயிர்களின் யோகநித்திரையைக் கலைத்து , ஆணவம் கன்மம் மாயை
எனும் மும்மலங்களை உயிருடன் இணைத்து இப்புவியில் பிறப்பெடுக்க வைத்து ,
பரம்பொருளின் அருட்சொரூபமான ,ஈஸ்வரத் தத்துவம் அந்த உயிர்களுக்குள் ஆன்மாவாக நிறைந்து ,
சத்துவகுணம் ,இரசோ குணம் , தமோ குணம் என்ற
மூன்று குணங்களுடன்அந்த உயிரை செயல்படவைக்கிறது .
எக்குணமும், இல்லாத ஆன்மா முக்குணத்துடன்
இயங்கி மாயையின் வளர்ச்சிக்கு காரணம் ஆகிறது .
இந்தப்பாடலுக்கான பொருளை முடிந்தவரை எளிமையாகவே கூற முயன்றிருக்கிறேன் .
நண்பர்கள் சிலர் , படிக்க சற்று கடினமாக இருப்பதாக கூறுகிறார்கள் .இயன்றவரை இன்னமும் எளிமைப் படுத்த
முயற்சிக்கிறேன் .
மூன்று நாட்களாக குடந்தை வரை ஒரு பயணம் ,நிறைய
புதிய நடப்புகள் அனுபவங்கள்கிடைத்தது
விரைவில் பகிர்கிறேன்
அண்ணாமலை சுகுமாரன்
8/6/17
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
தமிழில் நிறைய பழமையான வேதாந்த ,தத்துவ நூல்கள் உள்ளன .அவர்களின் பெரும்பாலானவற்றின் பெயர்களைக் கூட தற்போது நாம் அறிந்திராதது தமிழின் துர்பாக்கியம்
பலரும் வேதாந்தமும் தத்துவமும் இளமையில் அறியவேண்டிய அவசியமில்லை என நினைக்கிறார்கள் .
, நமக்கு இளமையும் வலிமையையும் இருக்கும் போதே வாழ்வின் போக்கில் வலிமைபெற உதவும் உண்மைகளைத் தெளிவாக அறிந்து கொள்வது ,வாழ்வில் சந்திக்கும் சிக்கல்களை விடுவிக்க உதவும் .
உண்மை எது பொய்மை எது என்று அறியும் தெளிவு
கிடைக்கும் .
இந்த தொடர் கைவல்லிய நவநீதம் எனும் பழமையான
நூலின் ஒரு சுருக்கமான அறிமுகம் .
அறிமுகத்திற்குப்பிறகு அந்த நூல் நவநீதம் போல் நமக்கு
இனிக்க ஆரமிக்கும் .
இன்று கூட ஒரு நண்பர் தொலைபேசியில் அழைத்தார் .
கட்டுரை படிக்க கடினமாக இருப்பதாகக் கூறினார் .
தத்துவத்தில் வரும் பல கலை சொற்களைஎழுதும் போது எளிமைக்கருதி மாற்ற இயலாது .இதே சொற்கள் அனைத்து தத்துவ நூல்களிலும் ஒரேவிதமாக இடம் பெறும் ,இதில் மாற்றி உரைத்தால் மற்றநூல்களை படிக்கும் போது தெளிவு இராது .
நான் மிகவும் சுருக்கமாகவே எழுதுகிறேன் .தயை கூர்ந்து
பொறுமையாக அனைத்து சொற்களையும் உள்வாங்கிப்படித்தால் தானே கூறப்பட்டிருக்கும் பொருள் தங்களுக்கு விளங்கும் .
புரியவேண்டும் என்பதில் எனக்கும் அக்கறை உண்டு ,
புரியாத ஒன்றை எழுதுவதில் என்ன பயன் இருக்கிறது ?
இவைகள் தமிழில் உள்ள தத்துவ நூல்களில் சில
ஜீவப்பிரம்ம ஐக்கியம்
ஞானவாசிட்டம்
கைவல்லிய நவநீதம்
சசி வர்ண போதம்
வேதாந்த சூளாமணி
விசார சாகரம்
அஷ்டாவக்ர கீதை -அஷ்டாவக்ரர்
விவேக சூடாமணி
விசார சந்திரோதயம்
சொரூப சாரம்
தத்துவாமிர்தம் -தத்துவராயர்
ரிபு கீதை
வாசுதேவ மனனம்
ஒழிவில் ஒடுக்கம்
முத்தி சோபானம்
ஞான வெட்டியான்
ஜீவன் முக்திப் பிரகரணம்
விருத்திப் பிரபாகரம்
தத்துவ அனுசந்தானம்
அத்துவித உண்மை
வேதாந்த பரிச்சேதம்
பிரபோத சந்திரோதயம்
குறுந்திரட்டு -தத்துவராயர்
நாநா ஜீவ வாதக் கட்டளை
மகாராஜா துறவு
வார்த்திகாமிர்தம்
பெருந்திரட்டு -தத்துவராயர்
வேதாந்த பரிபாசை
இனி கைவல்லிய நவநீதம்-23 கூறுவதைக் காணலாம்
உத்தம் வெளுப்புச் செம்மை உரைத்திடும் கருப்பும் ஆகும்
சத்துவ குணத்தினோடு ரசோகுணம் தமோ குணந்தான்
சுத்தமோடு அழுக்கு இருட்டாச் சொல்லும் முக்குணமும்
மூன்றாம்
ஒத்துளவேனும் தம்முன் ஒரு குணம் அதிகமாமே
-கைவல்லிய நவநீதம்-23
சத்துவ குணம் என்னும் உத்தம குணம் வெண்மை நிறத்திற்கு ஒப்பானது .
வேகம் கொண்ட ரஜோ குணம் சிவப்பு நிறத்திற்கு ஒப்பானது .
உலகஇன்பங்கள்மீதுவெறிகொண்டுஅலையும் தமோகுணம் கருமை நிறத்திற்கு ஒப்பானது .
இந்த மூன்று குணங்களும் உலகில் வாழும் உயிர்களில்
வெவ்வேறு விகிதத்தில் இடம்பெற்றிருக்கும் .
சத்துவ குணம் அதிகம் உள்ளவர்கள் அன்பு ,கருணை ,
நிதானம் அமைதி இவ்வைகளை கொண்டவர்களாகவும் ,
இறை வழி ,ஞான நாட்டம் கொண்டவர்களாகவும் இருப்பர் .
வேகம் நிறைந்த ரஜோகுணம் மிக்கவர்கள் மற்றவர்களை அடக்கியாள விரும்புவார்கள் ,அதிகாரம் புகழ் ,பெருமை ,மற்றவர்களை தவறாக புரிந்துகொண்டு கோபம் கொள்ளல் ,கடும் முயற்சி , வெற்றி வேட்க்கை என ஆளுமைச் செயல்களில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பர் .
மந்த நிலை கொண்ட தாமசகுணம் அதிகம் கொண்டவர்கள்
இகலோக இச்சைகளில் வேடிக்கை கொண்டவர்களாக இருப்பர் .உணவு ,மது இவைகளின் மேல் வேட்க்கை ,உழைப்பை விரும்பாமை ,முதலிய குணங்கள் மிகுந்திருக்கும் .
இந்த மூன்று குணங்களும் இல்லாத மனிதர்கள் யாரும் இல்லை .ஆயினும் இந்த மூன்று குணங்களும் பல்வேறு விகிதத்தில் இடம்பெற்றிருக்கும் .
ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு குணம் மிகுந்திருக்கும் .
ரஜோ குணம் செயல் நிறைந்தது ,கவர்ச்சி கொண்டது .எனினும் அது வினைகளினால் வரும் எதிர்வினைகளை
ஏற்படுத்தும் கர்ம பதிவுகளை உண்டாக்கும் .
ஆனால் செயல் குறைந்த தாமஸகுணமும் விரும்பத்தக்கது அல்ல .அது உணவில்லாமல் பட்டினி இருப்பதை[போன்றது .விரதம் ஆகாது நமது வாழ்க்கையின் போக்கு ஒரு விரதமாக இருக்கவேண்டும் .
இயன்ற வரை சத்துவம் எனும் உயர் குணங்களை படிப்படியாக நம்முள் வளர்த்துக்கொள்வதே உசிதம்
அண்ணாமலை சுகுமாரன்
11/6/17![ஆரோபம் XeVZ1lYSlqVrcYussKnO+9](https://www.filepicker.io/api/file/XeVZ1lYSlqVrcYussKnO+9.jpg)
பலரும் வேதாந்தமும் தத்துவமும் இளமையில் அறியவேண்டிய அவசியமில்லை என நினைக்கிறார்கள் .
, நமக்கு இளமையும் வலிமையையும் இருக்கும் போதே வாழ்வின் போக்கில் வலிமைபெற உதவும் உண்மைகளைத் தெளிவாக அறிந்து கொள்வது ,வாழ்வில் சந்திக்கும் சிக்கல்களை விடுவிக்க உதவும் .
உண்மை எது பொய்மை எது என்று அறியும் தெளிவு
கிடைக்கும் .
இந்த தொடர் கைவல்லிய நவநீதம் எனும் பழமையான
நூலின் ஒரு சுருக்கமான அறிமுகம் .
அறிமுகத்திற்குப்பிறகு அந்த நூல் நவநீதம் போல் நமக்கு
இனிக்க ஆரமிக்கும் .
இன்று கூட ஒரு நண்பர் தொலைபேசியில் அழைத்தார் .
கட்டுரை படிக்க கடினமாக இருப்பதாகக் கூறினார் .
தத்துவத்தில் வரும் பல கலை சொற்களைஎழுதும் போது எளிமைக்கருதி மாற்ற இயலாது .இதே சொற்கள் அனைத்து தத்துவ நூல்களிலும் ஒரேவிதமாக இடம் பெறும் ,இதில் மாற்றி உரைத்தால் மற்றநூல்களை படிக்கும் போது தெளிவு இராது .
நான் மிகவும் சுருக்கமாகவே எழுதுகிறேன் .தயை கூர்ந்து
பொறுமையாக அனைத்து சொற்களையும் உள்வாங்கிப்படித்தால் தானே கூறப்பட்டிருக்கும் பொருள் தங்களுக்கு விளங்கும் .
புரியவேண்டும் என்பதில் எனக்கும் அக்கறை உண்டு ,
புரியாத ஒன்றை எழுதுவதில் என்ன பயன் இருக்கிறது ?
இவைகள் தமிழில் உள்ள தத்துவ நூல்களில் சில
ஜீவப்பிரம்ம ஐக்கியம்
ஞானவாசிட்டம்
கைவல்லிய நவநீதம்
சசி வர்ண போதம்
வேதாந்த சூளாமணி
விசார சாகரம்
அஷ்டாவக்ர கீதை -அஷ்டாவக்ரர்
விவேக சூடாமணி
விசார சந்திரோதயம்
சொரூப சாரம்
தத்துவாமிர்தம் -தத்துவராயர்
ரிபு கீதை
வாசுதேவ மனனம்
ஒழிவில் ஒடுக்கம்
முத்தி சோபானம்
ஞான வெட்டியான்
ஜீவன் முக்திப் பிரகரணம்
விருத்திப் பிரபாகரம்
தத்துவ அனுசந்தானம்
அத்துவித உண்மை
வேதாந்த பரிச்சேதம்
பிரபோத சந்திரோதயம்
குறுந்திரட்டு -தத்துவராயர்
நாநா ஜீவ வாதக் கட்டளை
மகாராஜா துறவு
வார்த்திகாமிர்தம்
பெருந்திரட்டு -தத்துவராயர்
வேதாந்த பரிபாசை
இனி கைவல்லிய நவநீதம்-23 கூறுவதைக் காணலாம்
உத்தம் வெளுப்புச் செம்மை உரைத்திடும் கருப்பும் ஆகும்
சத்துவ குணத்தினோடு ரசோகுணம் தமோ குணந்தான்
சுத்தமோடு அழுக்கு இருட்டாச் சொல்லும் முக்குணமும்
மூன்றாம்
ஒத்துளவேனும் தம்முன் ஒரு குணம் அதிகமாமே
-கைவல்லிய நவநீதம்-23
சத்துவ குணம் என்னும் உத்தம குணம் வெண்மை நிறத்திற்கு ஒப்பானது .
வேகம் கொண்ட ரஜோ குணம் சிவப்பு நிறத்திற்கு ஒப்பானது .
உலகஇன்பங்கள்மீதுவெறிகொண்டுஅலையும் தமோகுணம் கருமை நிறத்திற்கு ஒப்பானது .
இந்த மூன்று குணங்களும் உலகில் வாழும் உயிர்களில்
வெவ்வேறு விகிதத்தில் இடம்பெற்றிருக்கும் .
சத்துவ குணம் அதிகம் உள்ளவர்கள் அன்பு ,கருணை ,
நிதானம் அமைதி இவ்வைகளை கொண்டவர்களாகவும் ,
இறை வழி ,ஞான நாட்டம் கொண்டவர்களாகவும் இருப்பர் .
வேகம் நிறைந்த ரஜோகுணம் மிக்கவர்கள் மற்றவர்களை அடக்கியாள விரும்புவார்கள் ,அதிகாரம் புகழ் ,பெருமை ,மற்றவர்களை தவறாக புரிந்துகொண்டு கோபம் கொள்ளல் ,கடும் முயற்சி , வெற்றி வேட்க்கை என ஆளுமைச் செயல்களில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பர் .
மந்த நிலை கொண்ட தாமசகுணம் அதிகம் கொண்டவர்கள்
இகலோக இச்சைகளில் வேடிக்கை கொண்டவர்களாக இருப்பர் .உணவு ,மது இவைகளின் மேல் வேட்க்கை ,உழைப்பை விரும்பாமை ,முதலிய குணங்கள் மிகுந்திருக்கும் .
இந்த மூன்று குணங்களும் இல்லாத மனிதர்கள் யாரும் இல்லை .ஆயினும் இந்த மூன்று குணங்களும் பல்வேறு விகிதத்தில் இடம்பெற்றிருக்கும் .
ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு குணம் மிகுந்திருக்கும் .
ரஜோ குணம் செயல் நிறைந்தது ,கவர்ச்சி கொண்டது .எனினும் அது வினைகளினால் வரும் எதிர்வினைகளை
ஏற்படுத்தும் கர்ம பதிவுகளை உண்டாக்கும் .
ஆனால் செயல் குறைந்த தாமஸகுணமும் விரும்பத்தக்கது அல்ல .அது உணவில்லாமல் பட்டினி இருப்பதை[போன்றது .விரதம் ஆகாது நமது வாழ்க்கையின் போக்கு ஒரு விரதமாக இருக்கவேண்டும் .
இயன்ற வரை சத்துவம் எனும் உயர் குணங்களை படிப்படியாக நம்முள் வளர்த்துக்கொள்வதே உசிதம்
அண்ணாமலை சுகுமாரன்
11/6/17
![ஆரோபம் XeVZ1lYSlqVrcYussKnO+9](https://www.filepicker.io/api/file/XeVZ1lYSlqVrcYussKnO+9.jpg)
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
![ஆரோபம் 4JVRvDXeSOmRvmmKJvp8+nool](https://www.filepicker.io/api/file/4JVRvDXeSOmRvmmKJvp8+nool.jpg)
பிறப்பின் தோற்றம் -
ஒருவழி இதுவாம் இத்தை ஒருவழி வேறாச் சொல்வர்
மருவும் அவ்வியத்தந்தானே மக தத்துவமாகும் அந்த
அருள் மகத்துவம் தான் அகங்காரம் ஆகும் என்றும்
கரு அகங்காரம் மூன்றாகக் காட்டிய குணமாம் என்றும்
கைவல்ய நவநீதம் -24
பிரபஞ்ச பிறப்பு விதிகளில் இதை ஒன்றாகக்கூறுவார்கள்
மேலும் இத்தை ஒரு வழி வேறாய் சொல்வர்.
பிறப்பெடுக்கும் சீவர்களிடம் மருவும் அல்லது அடங்கியுள்ள அவ்வியத்தந்தானே மகதத்துவமாகும்
அந்த அருள் மக தத்துவந்தான் அகங்காரமாகும் என்றும், கருவ என்பது பிரபஞ்ச உற்பத்திக்கு காரணமான அகங்கார தத்துவம்அகங்கார மூன்றாக காட்டிய குணமாம் என்றும் சொல்லுவார்கள்
இதை சற்று எளிதாகப்பார்க்கலாம்
மகத் எனும் ஆன்மத் தத்துவம் சுழுத்தி எனும் ஆழ்ந்த உறக்கத்தில் பரம்பொருள் எனும் பிரமத்துடன் ஐக்கியப்பட்டிருக்கும் போது அவ்வியத்தம் எனும் மாசு இல்லாத நிலையில் இருக்கிறது .
காலம் எனும் பிரகிருதி தத்துவதால் மகத் எனும் ஆன்மத் தத்துவம்எனும் விதை தூண்டப்படும்போது ,விதை முளைத்து ஐம்பூதங்களுடன் இணைந்து வளரத்தொடங்கியதுபோல் ,அது மும்மலங்களுடன் ,மூன்று குணங்களுடன் மூன்று காலங்களுடன் பிணைந்து வளரத்தொடங்கியது
இதனால் அவ்வியத்தம் என்ற மாசுபடாத நிலையில் இருந்த ஆன்மா ,வியக்தம் எனும் மும்மல ,முக்குண மாசுகளுடன் ,
நனவு , கனவு ,கனவற்றை ஆழ்ந்த நித்திரை எனும் மூன்று அவஸ்த்தைகளுடன் பிறப்பு இறப்பு எனும் போராட்ட
சுழற்ச்சியை தொடங்குகிறது .
இத்தகைய எளிய விளக்கத்தை தந்தவர் கவனகர் கனக சுப்புரத்தினம் அதை சிறிய மாறுதலுடன் நான் தந்திருக்கிறேன் .
அண்ணாமலை சுகுமாரன்
17/6/17
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
![ஆரோபம் 4JVRvDXeSOmRvmmKJvp8+nool](https://www.filepicker.io/api/file/4JVRvDXeSOmRvmmKJvp8+nool.jpg)
பிறப்பின் தோற்றம் -
ஒருவழி இதுவாம் இத்தை ஒருவழி வேறாச் சொல்வர்
மருவும் அவ்வியத்தந்தானே மக தத்துவமாகும் அந்த
அருள் மகத்துவம் தான் அகங்காரம் ஆகும் என்றும்
கரு அகங்காரம் மூன்றாகக் காட்டிய குணமாம் என்றும்
கைவல்ய நவநீதம் -24
பிரபஞ்ச பிறப்பு விதிகளில் இதை ஒன்றாகக்கூறுவார்கள்
மேலும் இத்தை ஒரு வழி வேறாய் சொல்வர்.
பிறப்பெடுக்கும் சீவர்களிடம் மருவும் அல்லது அடங்கியுள்ள அவ்வியத்தந்தானே மகதத்துவமாகும்
அந்த அருள் மக தத்துவந்தான் அகங்காரமாகும் என்றும், கருவ என்பது பிரபஞ்ச உற்பத்திக்கு காரணமான அகங்கார தத்துவம்அகங்கார மூன்றாக காட்டிய குணமாம் என்றும் சொல்லுவார்கள்
இதை சற்று எளிதாகப்பார்க்கலாம்
மகத் எனும் ஆன்மத் தத்துவம் சுழுத்தி எனும் ஆழ்ந்த உறக்கத்தில் பரம்பொருள் எனும் பிரமத்துடன் ஐக்கியப்பட்டிருக்கும் போது அவ்வியத்தம் எனும் மாசு இல்லாத நிலையில் இருக்கிறது .
காலம் எனும் பிரகிருதி தத்துவதால் மகத் எனும் ஆன்மத் தத்துவம்எனும் விதை தூண்டப்படும்போது ,விதை முளைத்து ஐம்பூதங்களுடன் இணைந்து வளரத்தொடங்கியதுபோல் ,அது மும்மலங்களுடன் ,மூன்று குணங்களுடன் மூன்று காலங்களுடன் பிணைந்து வளரத்தொடங்கியது
இதனால் அவ்வியத்தம் என்ற மாசுபடாத நிலையில் இருந்த ஆன்மா ,வியக்தம் எனும் மும்மல ,முக்குண மாசுகளுடன் ,
நனவு , கனவு ,கனவற்றை ஆழ்ந்த நித்திரை எனும் மூன்று அவஸ்த்தைகளுடன் பிறப்பு இறப்பு எனும் போராட்ட
சுழற்ச்சியை தொடங்குகிறது .
இத்தகைய எளிய விளக்கத்தை தந்தவர் கவனகர் கனக சுப்புரத்தினம் அதை சிறிய மாறுதலுடன் நான் தந்திருக்கிறேன் .
அண்ணாமலை சுகுமாரன்
17/6/17
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|