புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம் நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 30, 2017 4:28 am

 பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்  நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி Atfbp5IiQiyui28jf1UA+Kannan_Kusehlar_14135
-
இறைவனுக்கு நாம் பக்தியுடன் படைக்கும் நைவேத்தியம்
நமக்கு பிரசாதமாகக் கிடைப்பதன் பின்னணி பற்றி
உங்களுக்குத் தெரியுமா?

-
துவாரகையில் கண்ணன் அரசாண்ட காலம்.

ஒருநாள் கண்ணனைக் காண அவருடைய பால்ய சிநேகிதன்
குசேலர் துவாரகைக்கு வந்தார்.

கண்ணனும் குசேலனும் சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில்
ஒன்றாகக் கல்வி பயின்றவர்கள். குருகுல வாசம் முடிந்ததும்
இருவரும் பிரிந்தனர்.

கண்ணன் துவாரகையின் அரசராக செல்வச் செழிப்புடன்
இருந்தார். ஆனால், அவருடைய தோழன் குசேலரோ
வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தார்.

வறுமைத் துன்பம் நீங்க வழி தெரியாமல் தடுமாறிய குசேலரிடம்
அவருடைய மனைவி, 'நீங்கள் உங்கள் நண்பரும் துவாரகையின்
அரசருமான கண்ணனை சென்று பார்த்தால், அவர் நம் வறுமைத்
துன்பம் தீர வழி செய்வாரே'' என்று கூறினாள்.
ஆனால், நண்பனிடம் சென்று உதவி கேட்க குசேலருக்குத் தயக்கம்.

கடைசியில் வேறு வழி இல்லாமல், மனைவி கூறியபடியே
துவாரகைக்குச் செல்ல முடிவெடுத்தார் குசேலர். ஆனால், பால்ய
சிநேகிதனைப் பார்க்கப் போகும்போது ஏதேனும் கொண்டு செல்ல
வேண்டுமே. எதைக் கொண்டு செல்வது என்று குசேலர் யோசித்துக்
கொண்டிருந்தபோது, அவருடைய மனைவி, ''உங்கள் சிநேகிதருக்கு
மிகவும் பிடித்த அவல் கொஞ்சம் இருக்கிறது. அதை கொண்டு
சென்று உங்கள் சிநேகிதருக்குக் கொடுங்கள்'' என்று கூறி,
கொஞ்சம் அவலை எடுத்துக் கொடுத்தாள்.

அவரும் தன் கந்தல் உடையின் ஒரு முனையில் அவலை
முடிந்துகொண்டு நடைப் பயணமாக துவாரகைக்கு சென்றார்.

துவாரகை அரண்மனை வாயிலில் இருந்த காவலர்கள் குசேலரின்
வறுமை நிலையையும் அவருடைய கந்தல் உடையையும் பார்த்து,
அவரை உள்ளே விட மறுத்தனர்.

குசேலர் மிகவும் வற்புறுத்தவே வேறு வழி இல்லாமல் காவலர்கள்
உள்ளே சென்று கண்ணனை வணங்கி, குசேலரின் வருகையைத்
தெரிவித்தனர்.

பால்ய சிநேகிதன் குசேலர் வந்திருக்கிறார் என்ற தகவலைக்
கேட்டதுதான் தாமதம், பரபரப்பாக எழுந்த கண்ணன், காவலர்களுக்கு
முன்பாகச் சென்று குசேலரை கட்டித் தழுவி வரவேற்றார்.

அவரை உள்ளே அழைத்துச் சென்று ருக்மிணியுடன் சேர்ந்து
பாதபூஜை செய்து, விருந்தளித்து உபசரித்தார்.


உபசாரங்கள் முடிந்ததும் கண்ணனும் குசேலரும் ஓய்வாக அமர்ந்து
பேசிக்கொண்டிருந்தனர். அருகில் ருக்மிணி தேவியும் இருந்தார்.

''குசேலா, என்னைக் காண இவ்வளவு தொலைவு வந்த நீ,
எனக்கு எதுவும் கொண்டு வரவில்லையா?'' என்று கேட்டார்.

செல்வச் செழிப்புடன் இருக்கும் கண்ணனுக்கு அவலை எப்படித் தருவது
என்று குசேலருக்குத் தயக்கம். ஆனால் கண்ணன் மேலும் மேலும்
கேட்கவே, குசேலர் தான் கொண்டு வந்த அவலை தயக்கத்துடன்
கண்ணனிடம் நீட்டினார்.

கண்ணன் ஒரு பிடி எடுத்து தன் வாயில் போட்டுக்கொண்டார்.
அவ்வளவில், குசேலரின் வீட்டில் அனைத்து செல்வங்களும்
குவிந்துவிட்டன. இரண்டாவது பிடி அவலை எடுத்து வாயில்
போட்டுக்கொண்டார். உடனே குசேலருக்கு மறுமைக்கான பலன்கள்
கிடைத்துவிட்டன.

மூன்றாவது பிடியை கண்ணன் தன் வாயில் போட்டுக்கொள்ளப்
போன நேரம், ருக்மிணி அதைத் தடுத்தாள். அவளுக்குள் ஒரு
தயக்கம். காரணம், கண்ணன் வாமனனாக வந்தபோது ஓரடியால்
விண்ணையும், மறு அடியால் மண்ணையும் அளந்துமுடித்த
நிலையில், மூன்றாவது அடிக்கு மகாபலியையே ஆட்கொண்டு
விட்டானே,

அதேபோல் மூன்றாவது பிடி அவலை உண்டு கண்ணன் எங்கே
குசேலருக்கு ஆட்பட்டு விடுவானோ என்பதுதான்.

ருக்மிணி தடுத்ததற்கான காரணம் பற்றி கண்ணன் கேட்டபோது,
''சுவாமி, தங்களுக்கு அளிக்கப்படும் எதுவும் மகா பிரசாதமாக
ஆகிவிடுகிறது. உங்களுடைய தூய பக்தன் அன்புடன் கொண்டு
வந்த அவல் மொத்தத்தையும் தாங்களே உண்டுவிட்டால் எப்படி?

பிரசாதமாக எனக்கும் கொஞ்சம் தரக்கூடாதா? என்றுதான்
தடுத்தேன்'' என்றார். கண்ணன் மீதம் இருந்த அவலை
ருக்மிணிக்குத் தந்தார்.

இந்தச் சம்பவம்தான், பகவானுக்கு நாம் படைக்கும் நைவேத்தியம்
பிரசாதமாக நமக்குக் கிடைப்பதன் பின்னணியில்
அமைந்திருக்கிறது
.-
----------------------
-புவனா கண்ணன்
-விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக