புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சடங்கின் பெயரால் சீரழியும் பெண்கள் Poll_c10சடங்கின் பெயரால் சீரழியும் பெண்கள் Poll_m10சடங்கின் பெயரால் சீரழியும் பெண்கள் Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
சடங்கின் பெயரால் சீரழியும் பெண்கள் Poll_c10சடங்கின் பெயரால் சீரழியும் பெண்கள் Poll_m10சடங்கின் பெயரால் சீரழியும் பெண்கள் Poll_c10 
77 Posts - 36%
i6appar
சடங்கின் பெயரால் சீரழியும் பெண்கள் Poll_c10சடங்கின் பெயரால் சீரழியும் பெண்கள் Poll_m10சடங்கின் பெயரால் சீரழியும் பெண்கள் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
சடங்கின் பெயரால் சீரழியும் பெண்கள் Poll_c10சடங்கின் பெயரால் சீரழியும் பெண்கள் Poll_m10சடங்கின் பெயரால் சீரழியும் பெண்கள் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சடங்கின் பெயரால் சீரழியும் பெண்கள் Poll_c10சடங்கின் பெயரால் சீரழியும் பெண்கள் Poll_m10சடங்கின் பெயரால் சீரழியும் பெண்கள் Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
சடங்கின் பெயரால் சீரழியும் பெண்கள் Poll_c10சடங்கின் பெயரால் சீரழியும் பெண்கள் Poll_m10சடங்கின் பெயரால் சீரழியும் பெண்கள் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
சடங்கின் பெயரால் சீரழியும் பெண்கள் Poll_c10சடங்கின் பெயரால் சீரழியும் பெண்கள் Poll_m10சடங்கின் பெயரால் சீரழியும் பெண்கள் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சடங்கின் பெயரால் சீரழியும் பெண்கள் Poll_c10சடங்கின் பெயரால் சீரழியும் பெண்கள் Poll_m10சடங்கின் பெயரால் சீரழியும் பெண்கள் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சடங்கின் பெயரால் சீரழியும் பெண்கள் Poll_c10சடங்கின் பெயரால் சீரழியும் பெண்கள் Poll_m10சடங்கின் பெயரால் சீரழியும் பெண்கள் Poll_c10 
2 Posts - 1%
prajai
சடங்கின் பெயரால் சீரழியும் பெண்கள் Poll_c10சடங்கின் பெயரால் சீரழியும் பெண்கள் Poll_m10சடங்கின் பெயரால் சீரழியும் பெண்கள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சடங்கின் பெயரால் சீரழியும் பெண்கள்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 10, 2017 3:19 pm

சடங்கின் பெயரால் சீரழியும் பெண்கள்; இன்னமும் தொடர்கிறது 'மாத்தம்மா' வாழ்க்கைமுறை: அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

சடங்கின் பெயரால் சீரழியும் பெண்கள் V0MA6MwZQIKGwIk6FedL+mathamamajpg

திருப்பதி பகுதியில் உள்ள மாத்தம்மா கோவில் | புகைப்படம்: உமாசங்கர் கலிவிகொடி

பல ஆண்டுகளுக்கு முன்பே கைவிடப்பட்டதாக பரவலாக நம்பப்பட்ட ஒரு வழக்கம் இன்னமும்கூட நடந்துகொண்டிருக்கிறது. கடவுள் பெயரைச் சொல்லி பெண்குழந்தைகளின் வாழ்வை சுரண்டும் இந்த 'மாத்தம்மா' நடைமுறையைத் தொடர்ந்துகொண்டிருப்பவர்கள் யார்? இதில் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனைபேர்? போன்ற கேள்விகளுக்கு விடைகளைத் தேடத் தொடங்கும்போது அதிர்ச்சியூட்டும் உண்மைகள் பல வெளிவரத் தொடங்கியுள்ளன.

ஆந்திரா மற்றும் திருவள்ளூரை ஒட்டியுள்ள சித்தூர் மாவட்டங்களில் மாத்தம்மா தேவி கோவிலுக்கு ''பெண்குழந்தைகளை விடுவது'' நடைமுறையில் உள்ளது, தேசிய மனித உரிமைகள் ஆணையம் இரண்டு மாநிலங்களில் இருந்து அறிக்கை பெற வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது.

சடங்கின் ஒரு பகுதியாக, அச்சிறுமிகள் மணப்பெண்ணாக உடையணிந்து விழா முடிந்தவுடன், அவர்களின் ஆடைகள் ஐந்து சிறுவர்களால் அகற்றப்படுகின்றன, கிட்டத்தட்ட நிர்வாணமாக அங்கேயே விடப்படுகின்றனர். பின்னர் அச்சிறுமிகள் மாத்தம்மா கோவில்களில் வசிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதோடு பொது சொத்து என்று கருதப்பட்டு பாலியல் சுரண்டலை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவதாக தேசிய மனித உரிமை ஆணையம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முடியவில்லை “மாத்தம்மா” நடைமுறை

சித்தூர் மாவட்டத்தின் கிராமங்களில், தமிழ்நாட்டின் எல்லைப் பகுதியிலும், திருப்பதி நகரின் மையத்திலும் மாத்தம்மா கோவில்களைக் காணமுடியும். சித்தூர் மாவட்டத்தில் 22 மண்டலங்களில், இதில் அதிகமாக பெரும்பாலும் புட்டூர், நகரி, நாகலாபுரம், பிச்சாத்தூர், கே.வி.பி. புரம் மற்றும் ஸ்ரீகாளஹஸ்தி, எர்பேடு, தொட்டம்பேடு, பி.என். கந்த்ரிகா, நாராயணவனம். ஆகிய இடங்களில் இவ்வழக்கம் உள்ளது. மேற்கு மண்டலங்களான பாயிரெட்டிபள்ளி மற்றும் தவனம்பலே மற்றும் பங்காருபாலெம் ஆகிய இடங்களிலும் தற்போது இவ்வழக்கம் நடைமுறையில் உள்ளது.

மாத்தம்மா வழக்கம் ஆந்திரப் பிரதேசத்திலும், தெலுங்கானா பகுதியிலும் சம அளவில் உள்ளது. தமிழ்நாட்டில் தேவதாசி என அழைக்கப்படும் இவ்வழக்கம் என்றோ வழக்கொழிந்துபோனது. ஆனால் மாத்தம்மா என்ற நடைமுறை பெயரில் இன்றும் தொடர்கிறது. இவர்களின் எண்ணிக்கையை சில அரசு சாரா அமைப்புகளாலும் சில தன்னார்வலர்களாலும் வெளிச்சத்திற்கு வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன.

கர்னூல் மற்றும் அனந்தபூர் மாவட்டங்களில் 'பாசிவி', கிருஷ்ணா, கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் 'சானி', விஜயநகரம் மற்றும் ஸ்ரீகாகுளம் மாவட்டங்களில் 'பார்வதி' என்று இவ்வழக்கம் வேறுவேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. சமூக அழுத்தங்கள் காரணமாக பெண்கள்மீதான இச்சுரண்டல் முறையை விட்டு வெளியேற முடியாத நிலை அவர்களுக்கு உள்ளது.

திருமணம் இல்லாத வாழ்க்கை

கே.வி.பி.புரம் மண்டலத்தைச் சேர்ந்த மாத்தம்மாவாக நேர்ந்துவிடப்பட்ட ஒரு பெண் வயது 40, வீட்டு வேலை செய்வதன் நிமித்தம் ஸ்ரீகாளஹஸ்தியில் குடியேற தன் கிராமத்தைவிட்டு வெளியேற விரும்பினாலும், அங்குள்ள இளைஞர்கள் வெளியேற அனுமதிக்காததோடு, எஜமானரிடமே தங்கியிருக்கும்படி திருப்பி அனுப்பப்பட்டதாகக் கூறுகிறார்.

திருப்பதி மண்டலத்தின் எம்.ஆர்.பள்ளியைச் சேர்ந்த ஒரு தினக்கூலியான 14 வயது மாத்தமாவின் தந்தை மாத்தையா, தனது மகள் பிறந்ததிலிருந்து இதற்காக நேர்ந்துவிட்டு விடவேண்டும் என்ற மனநிலையில் இருந்ததாகக் கூறுகிறார்.

''மாத்தம்மா தெய்வத்திற்கு நாங்கள் அவளை நேர்ந்துவிட்டோம். அப்போது அவளுக்கு வயது 3, அப்போதிலிருந்தே அவள் அங்குதான் வளர்ந்தாள். திருமணம் இல்லாமலே வாழ்ந்துகொண்டிருக்கிறாள். ஒருவகையில் இது வேதனையானதுதான். ஆனால் நாங்கள் தெய்வீக சக்திக்குக் கட்டுப்பட்டிருந்தோம்'' என்கிறார்.

சமூக ஆர்வலர்களோ, இவ்வழக்கத்தினால் பெண்கள் சுரண்டப்படுவதாகவும், அவர்கள் வாழ்நாள் முழுவதும் பாலியல் தொழிலாளர்களாக இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.

இதில் நிறைய பெண்கள் வயதாகி தனிமையில் இறந்துபோகிறார்கள். அதற்குக் காரணம் மாத்தம்மா கோவில்களிலேயே அவர்கள் தினமும் உறங்கவேண்டும். ஆனால் கோவிலுக்கு வெளியே உள்ள வீடுகளில் அவர்கள் வேலை செய்யவேண்டும் என்ற கட்டாயம்தான்.

சித்தூர் மாவட்டத்தில் உள்ள 'கிராமப்புற ஆதரவற்றவர்களுக்கான மதர்ஸ் கல்விக் கழகம் என்ற ஒரு அமைப்பின் ஆய்வின்படி, 1990 மற்றும் 1992 க்கு இடையில் தன்னார்வக் குழுக்களால் பல விழிப்புணர்வு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. பெண்கள் கோவிலுக்கு நேர்ந்துவிடுதலுக்கான தடுப்புச் சட்டம் 1988ல் உருவானபிறகுஇந்த அமைப்புகள் தொடர்ந்து இந்த பெண்கள் மத்தியில் கடந்த 25 ஆண்டுகளாக வேலை தொண்டாற்றியது.

மும்பை சிவப்பு விளக்குப் பகுதிகளிலும் பிற மெட்ரோபாலிடன் நகரங்களிலும் பல மாத்தம்மாக்கள் இருப்பதை இந்த தன்னார்வ அமைப்பு ஒரு துணிகர முயற்சி மேற்கொண்டு கண்டுபிடித்தது. 2011லிருந்து, சித்தூர் மாவட்டத்தில் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டு ஏழு பேர் இறந்துள்ளனர். தற்சமயம், இதே மாவட்டத்தில் 1000க்கும் மேற்பட்டவர்கள் மாத்தம்மாக்களாக உள்ளனர். அதில் 363 குழந்தைகள் 4-15 வயதுக்குள் உள்ளவர்கள். பெண்கள் கோவிலுக்கு நேர்ந்து விடுதலுக்கு எதிரான சட்டம் இந்த மாவட்டத்தில் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இதுவரை, 2016ல் புத்தூரில் குறைந்தபட்சம் ஒரே ஒரு வழக்கு மட்டும் பதிவாகியுள்ளது.

அடுத்ததாக தொட்டம்பேடுவில் ஒரு வழக்கு அவ்வளவுதான். 2016 ஆம் ஆண்டில் மட்டுமே இந்த சட்டத்திற்கான விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. இம்மாவட்டத்தின் சட்டமன்ற உறுப்பினர்களான ஆர்.கே.ரோஜா, சுகுணாம்மா மற்றும் டி.கே.சத்யபிரபா ஆகிய மூவரும் ஆந்திர சட்டப்பேரவையில் இப்பிரச்சனையை எழுப்பினர்.

மறுவாழ்வுப் பணிகளில் சுணக்கம்

புத்தூர் மற்றும் ஸ்ரீகாளஹஸ்தி கோட்டங்களைச் சேர்ந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், இந்த மாத்தம்மா முறை இன்னும் பல மண்டலங்களில் நடைமுறையில்தான் உள்ளது. இருந்தாலும், முறையான தரவு இல்லாமை மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்தும் கிராமப் பெரியவர்களிடமிருந்தும் ஒத்துழைப்பு இல்லாததால் அறிவியல் ரீதியான மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

ஆந்திரப் பிரதேசம் இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு, சட்டத்தை அமல்படுத்துவதற்கு எந்த வழிகாட்டுதல்களும் நிர்ணயிக்கப்படவில்லை. இது சமூகத்தின் உணர்வுகளோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ள விதத்தில், அரசு இயந்திரங்களும் மற்றும் அரசியல் கட்சிகள் பாரம்பரியத்தை எடுத்துக்கொள்வதற்கு வெட்கப்படுவதில்லை. மேலும் கூடுதலாக, பாதிக்கப்பட்ட சமூகத்தை சிறுபிரிவு மக்களாகவே பெரும்பான்மை மக்களால் பார்க்கப்படுகின்றனர். அதோடு அம்மக்களிடம் பெரிய ஓட்டுவங்கியும் இல்லை என்கிறார் மதர்ஸ் கிராமப்புற ஆதரவற்றவர்களுக்கான கல்விக்கழக தலைவர் என்.விஜயகுமார்.

முப்பது ஆண்டுகளாக திருப்பதி நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சிந்தா மோகன், தி இந்துவிடம் தெரிவிக்கையில், பல நூற்றாண்டுகளாக மாதிகா சமூகத்தினரை சுரண்டுவதற்கான ஒரு சாட்சியமாக மாத்தம்மா முறை உள்ளது. இதனால் இச்சமூகம் பொருளாதார வளர்ச்சி இன்றி நீண்டகாலமாகவே நலிவடைந்த நிலையில் உள்ளது. மறுவாழ்வு என்ற பெயரில் அரசுகளும் சிறு தொகையை வழங்கி நிறுத்திக்கொள்கிறது. இதனால் இந்த பெண்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இது இவர்களை இந்நிலையில் வைத்துள்ள சமூக அமைப்புமுறையைப் போலவே மோசமானது" என்று முன்னாள் எம்.பி. கூறினார்.

சித்தூர் காவல் கண்காணிப்பாளர் எஸ்.வி.ராஜசேகர் பாபு, தான், மாத்தம்மாக்களின் வாழ்வுநிலையை ஆராய்ந்துவருவதாகவும், உண்மைகளைக் கண்டறிந்து அரசின் கவனத்திற்கு எடுத்துச்செல்ல உள்ளதாகவும் கூறினார்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கொடுத்துள்ள தகவல்கள்படி, மாதிகா சமூகத்தினர் வாழும் கிராமங்கள் பலவற்றிலும் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாத்தம்மாக்கள் உள்ளதாகத் கூறுகின்றன. இவர்களில் 19 வயதிலிருந்து 30 வயதுக்குட்ட நிலையில் 400 பேரூம், 15 வயதுக்கு குறைவான சிறுமிகளாக 350 பேரும் உள்ளனர்.

மாற்று வாழ்வாதாரங்கள்

எனினும் வரதப்பள்ளம் மற்றும் சத்யவேடு போன்ற சில மண்டலங்களில் இயங்கிவரும் ஸ்ரீ சிட்டி சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் பெண்களும் சிறுமிகளும் வேலைக்கு அனுமதிக்கப்படுவதால் இந்த நடைமுறை, மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. ஸ்ரீகாளஹஸ்தி மற்றும் கேவிபி புரம் மண்டலங்களில் நடக்க இருந்த சிறார் திருமணங்கள் தன்னார்வக் குழுக்களின் தலையீடுகளால் தடுத்துநிறுத்தப்பட்டன. 2000 க்கும் 2010க்கும் இடைப்பட்ட காலங்களில் குறைந்த எண்ணிக்கையிலான மாத்தம்மாக்கள் சிறிய அளவு பொருளாதார பயன்களைப் பெற்றனர்.

தமிழ்நாட்டிலுள்ள திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூர்மவிலாசபுரம் கிராமத்தில், அருந்ததியர் பாளையத்தில் உள்ள மாத்தம்மா கோவிலுக்கு வெளியே கிராமத்தின் ஒரு பிரிவினர் கூடிவிவாதித்தனர். "ஜமதக்னி முனிவர் மற்றும் ரேணுகா தேவி (மாத்தம்மா)வின் வாழ்க்கையில் ஒரு விவாதமாக இருந்தது. அது சர்ச்சையைத் தூண்டியது.

மாத்தம்மா கோவிலுக்கு நேர்ந்துகொண்டு பெண் குழந்தைகளை பொட்டி கட்டிவிட்டுவிடும் இந்த நடைமுறை 50 ஆண்டுகளுக்கு முன் மூடநம்பிக்கையாக இருந்தது. ஆனால் அது இங்கு நீண்டநாள் தொடரவில்லை பெண்குழந்தைகளை மாத்தம்மாவாக விடும் வழக்கம் தவிர, தங்கள் உடல்நலக்குறை தீர்வதற்காக கன்றுக்குட்டிகளை கோவிலுக்கு நேர்ந்துவிடுவதும் இங்கு வழக்கத்தில் உண்டு. அது மற்ற சாதியினரிடம்கூட வழக்கத்தில் உள்ளது. " என்றார் கூர்மவிலாசபுர கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஏ.கே.வெங்கடேசன்.

இக்கிராமத்தில் ஆகஸ்ட் 2 முதல் 6ந்தேதி வரை மாத்தம்மா திருவிழா நடைபெற்றது. ஐந்தாம் நாள் திருவிழாவில் மாத்தம்மா வாழ்க்கையைப் பற்றிய நாடகம் ஒன்றை இளைய தலைமுறைக்கு விளக்கும்விதமாக நடத்தப்பட்டது. ஒரு சிறிய பெண் இதில் ரேணுகா தேவி வேடத்தில் வருகிறார். ஜமதக்னி முனிவருக்கு சாப்பாடு எடுத்துச்செல்லப்படும் காட்சிஅது. அந்த நேரம் நான்கு சிறுவர்கள் கடத்தல்காரர்களைப் போல செயல்படுகிறார்கள், இதனால் அவளை வேறு விதமாகக் கையாள்வதும், அவளைத் துன்புறுத்தும் முயற்சியும் கூட நடக்கிறது. இக்காட்சியைப் பற்றிய பேசிய அருந்ததியர் விடுதலை முன்னணி தலைவர் ஏ.எஸ்.தண்டபாணி இது நமது தொன்மத்தின் ஒரு பகுதி. இந்த நாடகத்தின் இக்காட்சி மக்களை சிறுமியின் ஆடைகளைக் களைவதாக தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என்று கூறுகிறார்.

மாத்தம்மா நடைமுறைகுறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கிணங்க விரிவான விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணைக்குப் பிறகாவது மாத்தம்மாக்களுக்கு விடிவுகாலம் ஏற்படுகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

(திருவள்ளூரில் விவேக் நாராயணனுடன்)

தமிழில்: பால்நிலவன்
நன்றி தமிழ் ஹிந்து

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 10, 2017 3:21 pm

விழிப்புணர்வு தேவை.
மூட நம்பிக்கைகளை ஒழிக்கவேண்டும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Oct 10, 2017 8:07 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக