புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_c10 
61 Posts - 45%
heezulia
குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_c10 
41 Posts - 30%
mohamed nizamudeen
குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_c10 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_c10 
6 Posts - 4%
Raji@123
குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_c10 
4 Posts - 3%
prajai
குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_c10 
2 Posts - 1%
Barushree
குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_c10 
2 Posts - 1%
Saravananj
குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_c10 
21 Posts - 5%
prajai
குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_c10 
7 Posts - 2%
Guna.D
குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_c10 
5 Posts - 1%
Raji@123
குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_c10குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_m10குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குருதி ஆட்டம்(9-11) - வேல ராமமூர்த்தி


   
   
kumarv
kumarv
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 17/04/2017

Postkumarv Tue May 16, 2017 1:43 pm

வேல ராமமூர்த்தி தமிழ் ஹிந்து நாளிதழில் தொடராக எழுதிய " குருதி ஆட்டம் " நாவல் 27 வார தொடரில்( 9 - 11 )தொடர்


9
ங்ங்ஙஅ...

பெருங்குடி தெருக்களில் உடையப்பனின் கால்பட்டு, எத்தனையோ வருடங்கள் ஆகி இருக்கும். உடையப்பனை ‘அரண்மனை’ என்று ஊரார் சொல்ல ஆரம்பித்ததில் இருந்து ‘நடை’மறந்துப் போச்சு. ஏறுனா… கூட்டு வண்டி. எறங்குனா… அரண்மனை. வர்றது, போறது எல்லாம் கூட்டு வண்டியிலேதான்.
அரண்மனைக்குள்ளே ரெண்டு கூட்டு வண்டி நிற்கும். ஒண்ணு… ‘அரண்மனை’ உடையப்பனுக்கு. இன்னொன்னு அன்றாடம் வந்து போகும் வைப்பாட்டிகளுக்கு.
அரண்மனைக் கூட்டு வண்டி அலங்காரம், ஊர்க் கண்ணைப் பறிக்கும். வண்ண வண்ணப் பட்டு வஸ்திரங்களால் போர்த்தப்பட்ட வண்டிக் கூண்டு. ஜிகினா வேலைப்பாடுகளுடன் முன்னும் பின்னும் தொங்கும் திரை மறைப்புகள். வண்டிச் சக்கர ஆரக்கால்களில் எல்லாம் வெண்கலக் குறுமணிகள். சக்கரம் உருள உருள, வேகத்துக்கேற்ப நாதம் குழையும். தலை நிமிர்த்தி இழுத்துப் போகும் காளைகள், ‘பூரணி’ இனக் காளைகள். பந்தயக் குதிரை உயரம். வெண்பட்டு நிறம். இரண்டடி உயர, மஞ்சள் பூத்தக் கொம்புகள். கழுத்து மணிகள், ‘சலங்… சலங்… சலங்…’ என ஒலி பிசைந்து அடுத்த ஊரை எழுப்பும்.
‘அரண்மனை போறாரு… அரண்மனை போறாரு!’ ஊர்ச் சனமெல்லாம் தெருவோரம் கண் கொட்டி நிற்கும். திரை மறைப்பு விலகாமல் வண்டி போகும். எவர் கண்ணும் அரண்மனையைப் பார்த்திருக்காது.
இன்னொரு வண்டி, நீலம் போர்த்திய கூட்டு வண்டி. திரை மறைப்புகளும் நீலம். பொழுது இருட்டினால் வண்டி தெரியாது. வண்டிச் சக்கரத்து இரும்பு பட்டைகளுக்குப் பதிலாக, கனத்து உருண்ட ரப்பர் சுற்று. குண்டு, குழியில் விழுந்து போனாலும் பொட்டுச் சத்தம் கேட்காது. அலுங்காமல் குலுங்காமல் இழுத்துச் செல்லும் குட்டைக் காளைகள், நாட்டு மாடுகள். வருவதும் போவதும் தெரியாமல் இருப்பது, வைப்பாட்டிகளுக்கு வசதி.
‘திடு திப்’பென தெருவில் இறங்கி நடந்து வரும் அரண்மனையைக் கண்டதும் ஊர் திகைச்சுப் போச்சு. ஊருலே முக்கால்வாசி சனம், இதுநாள் வரை அரண்மனையை பார்த்ததே இல்லே. அவரவர் வீட்டு வாசலில் ஆம்பளைகள் கைகூப்பி நின்றார்கள். எட்டிப் பார்த்த பொம்பளைகளை, ‘போடீ… உள்ளே…’ என, கண்ணால் மிரட்டினார்கள்.
“இவருதான்… அரண்மனையா? வயசே… தெரியலையே!” என, விழி அகலப் பார்த்த புதுப் பெஞ்சாதியை வீட்டுக்கு உள்ளே தள்ளி, கதவை தாழ்ப்பாள் இட்டதும் வெளுக்குறான் ஒருத்தன்.
தரை புரளும், கை அகல வெள்ளி ஜரிகைக் கரைப் பட்டு வேட்டி. ஒட்டகத் தோல் செருப்பு. இடுப்பில், பச்சை நிற கொழும்பு பெல்ட். மார்பு ரோமத்தையும் மைனர் செயினையும் துலங்கக் காட்டும் சந்தனப் பட்டு ஜிப்பா. தெரு நெடுகத் தலை வணங்கும் ஊர்ச் சனங்களை சட்டை செய்யாத தலைச் சிலுப்பல். வெட்டுப் பார்வை.
உடையப்பனை ஓரடி முன்னே விட்டு, இடதுபுறம், ஓட்டமும் நடையுமாக வந்தார் கணக்குப்பிள்ளை ரத்னாபிஷேகம். வலதுபுறம், ஈரடி முன்னே விட்டு, குலுங்கு நடையில் ‘லோட்டா’ வந்தான். கைகட்டி நிற்கும் தெருவோர இருபுறத்துக் கண்களும் தன்னைப் பார்க்க வேண்டும் என மெனக்கெட்டான். எல்லாச் சனத்துக்கும் அரண்மனை மேலே… அரைக் கண்ணு. ‘லோட்டா’ மேலே அரைக் கண்ணு.
‘லோட்டா’ எப்படிடா அரண்மனைகிட்டே ஒட்டுனான்?’ வாய்க்குள் முணுமுணுத்தார்கள். தோள் குலுக்கி நடந்தான் ‘லோட்டா’. இருபுறமும் கண் பாவாமல் நடந்த உடையப்பன், பெரியவர் நல்லாண்டியின் வீட்டு முன் வந்ததும் நின்றான்.
“கும்பிடுறேன் அரண்மனை...” தலைக்கு மேல் கை உயர்த்தினார் நல்லாண்டி.
பதிலுக்கு தலையைக் கூட ஆட்டாத உடையப்பன், கண்ணசைத்தான். அரைக் கூனலாய் ஓடி வந்த பெரியவர் நல்லாண்டியைப் பின்னால் விட்டு முன்னால் நடந்தார். ரத்னாபிஷேகம் பிள்ளை, ‘லோட்டா’, நல்லாண்டி மூவரும் தொடர்ந்தார்கள்.
திரும்பாமலே, “திருவிழா ஏற்பாடுகள் எல்லாம் எப்படி இருக்கு நல்லாண்டி?” என்றான்.
“அரண்மனை உத்தரவுக்கு அட்டி ஏது? எல்லாம் சீரும் சிறப்புமா இருக்குது!”
“ஊருச் சனம் என்ன பேசுது?”
“சனம் என்ன சொல்றது? திருவிழாச் சந்தோஷத்திலே… திக்கு முக்காடிப் போயி நிக்குது. அதுலேயும்… இப்போ உங்களை நேரிலே கண்ட சனம், அந்த இருளப்பசாமியே எறங்கி நடந்து வர்றதா… நெனைக்குது அரண்மனை!”
உடையப்பனின் தலைச் சிலுப்பல் கூடியது. கடைசி தெருவுக்குள் நுழைந்தவன், “ஆமா… பொம்பளைகளே இல்லாத ஊரா, இது? ஒருத்தியையும் காணோம்!” என்றான்.
ரத்னாபிஷேகம் பிள்ளை, நல்லாண்டி, ‘லோட்டா’ மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
‘அதுதானே… பார்த்தேன். கள்ளப் பருந்து, காரணம் இல்லாம வட்டமடிக்காதே’ன்னு’ என, லோட்டாவும், ‘அரண்மனையை ஆவி பிடிச்சு ஆட்டாம… என்ன செய்யும்?’ என, ரத்னாபிஷேகம் பிள்ளையும் முனகினார்கள்.
“அது ஒண்ணுமில்லே அரண்மனை. பொம்பளைக எல்லாம் வீட்டுக்குள்ளே, நேர்த்திக்கடன் மாவிளக்கு மாவு இடிப்பாளுக. அதுதான் ஒருத்தியையும் வெளியிலே காணோம்” எனச் சொல்லிச் சமாளித்தார் நல்லாண்டி.
இருளப்பசாமி கோயில் வாசல் வந்தது.
கப்பலின் மேல்தளத்தைத் தலை சுழற்றிப் பார்த்தாள் அரியநாச்சி. யாரையும் காணோம்.
‘ம்ஹ்ஹா… ம்ஹ்ஹா…’ ஏதோ சொல்லத் தவித்தான் ஊமையன் துரைசிங்கம். அரியநாச்சிக்கு ஒண்ணும் புரியலே.
“துரைசிங்கம்… என்ன? ஏன், என்னை இங்கே இழுத்துட்டு வந்தே?”
ஸ்காட்டும் சைமனும் நின்று கொண்டிருந்த கப்பலின் கைபிடி ஓரத்தைக் காட்டினான். உள்ளங்கைகளைத் தொப்பி போல் குவித்து, தன் தலையில் வைத்தான். வலது கையை நெஞ்சுக்கு நேராக நீட்டி, ஆட்காட்டி விரலால் துப்பாக்கி சுடுவது போல் சுட்டுக் காட்டினான்.
‘ப்ப்பா…ப்ப்பா…’ அடி வயிற்றிலிருந்து குரலெடுத்து, தன் தொண்டையை தானே நெறித்து, கண் செருக நாக்கை நீட்டி, செத்தது போல் நடித்துக் காட்டினான்.
‘ங்ங்ஙஅ…’ கப்பலின் ஓரத்துக்கு அரியநாச்சியை இழுத்துக் கொண்டு ஓடினான். ‘ங்ங்ஙஅ…’ ஸ்காட் நின்ற இடத்தை ஓங்கி மிதித்தான்.
ஏதும் புரியாமல் அரியநாச்சி முழித்தாள்.
நின்றவாக்கில், கிழக்கே கண் ஓட்டினான். கப்பலின் மையத்தில், முதல் வகுப்பு அறைகளுக்கான நுழைவு வாயிலின் திரைச் சீலை ஆடியது. வேகமாய் ஓடினான். திரைச்சீலையை விலக்கி பார்த்தான். கனத்த கண்ணாடிக் கதவு, உள்பக்கம் தாழிட்டிருந்தது. கதவோடு நெற்றியை பொருத்தி, கூர்ந்து நோக்கினான். ஸ்காட்டும் சைமனும் கைகுலுக்கிவிட்டு, அவரவர் அறைகளுக்குப் பிரிந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
10
பைத்தியமா..?

உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த துரைசிங்கம், கனத்த கண்ணாடிக் கதவை ஓங்கி ஓங்கித் தட்டினான். கதவை தட்டும் சத்தம் தனக்கே கேட்காதது மேலும் அவனுக்கு கோபமூட்டியது.
துரைசிங்கம் பிறவியிலேயே வாய் பேச முடியாதவன் அல்ல; காது கேட்கும். ஆனால், வான் வெளியும் வங்கக் கடலும் கைக்கோத்துக் கிடக்கும் பெரும்பரப்பில் பேரிடிச் சத்தமே இறங்கினாலும் வெறும் தும்மல் சத்தமாக நசிந்து போகும். கடல் கீறிப் போகும் கப்பலின் இரைச்சல் வேறு சேர்ந்துகொள்ள, கதவை குத்தியவனின் கைதான் வலித்தது. காது கேட்கவில்லை.
கைக்குக் கிடைத்த இரை… கண்முன் தப்பி விட்ட துயரமும் கொலைவெறியும் கண்ணில் ஆட, வாயை அகலத் திறந்து கண்ணாடியைக் கடித்தான். பல் வழுக்கிக் கொண்டு போனது.
தலையால் முட்டி கதவை உடைக்க நினைத்தவன், நொடி யோசனையில் மேற்கே திரும்பி அரியநாச்சியைப் பார்த்தான்.
துரைசிங்கத்தை நோக்கி, அரியநாச்சி வந்து கொண்டிருந்தாள். வேகமாக வரும்படி கை அசைத்தான்.
ஏதும் புரியாதவளாக அருகே வந்தவள், “ஏய்… துரைசிங்கம், இங்கே என்ன பண்றே?” என்றாள்.
சொல்ல முடியாத சோகத்தோடும் ஏமாற்றத்தோடும் திரைச்சீலையை விலக்கி, கண்ணாடிக் கதவைக் காட்டினான்.
கதவில் நெற்றியைப் பொருத்தி, கண்ணாடி வழியாக ஊடுருவிப் பார்த்தாள்.
பச்சைக் கம்பள விரிப்பு, ‘மெத் மெத்…’ என நீண்டு கிடக்க, முதல் வகுப்பு அறைகள் ஆடம்பர மிடுக்குக் காட்டின. உள்ளிருப்பவர்கள் ஊதித் தள்ளும் புகை, கூடம் நிறைந்து மண்டியது. கப்பல் சிப்பந்திகள் பணிவுமிக்க சேவக நடை நடந்து ஊழியம் செய்தார்கள்.
போதையில் நடை பிரளும் மனைவியைத் தாங்கிப் பிடித்தவாறு, ஒரு வெள்ளையன் தன் அறைக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்து கொண்டிருந்தான்.
முழுக் கோழிச் சப்பையை இடது கையில் வைத்து கடித்துக் கொண்டே, வலதுகை குவளை மதுவை தழும்பிச் சிந்தவிடாமல் லாகவமாக நடந்து திரிந்தான் ஒரு போதைக்காரன்.
முகம் சுழித்துத் திரும்பிய அரியநாச்சி, துரைசிங்கத்தை ஏறிட்டுப் பார்த்தாள். “துரைசிங்கம்… இங்கே என்ன வேடிக்கை?” என்றாள்.
‘தகப்பனைக் கொன்ற வெள்ளை அதிகாரி ஸ்காட் இந்தக் கப்பலில்தான் இருக்கிறான். அதோ… அந்த அறைக்குள் நுழைந்தான். நான் பார்த்தேன்’ என்று சொல்ல ‘வாய்’ வரவில்லை அவனுக்கு.
“வா… நம்ம கமராவுக்கு போகலாம்” என்று சொன்ன அரியநாச்சிக்குள் ஏதோ உறுத்தியது. துரைசிங்கம் விளையாட்டுப் பிள்ளை இல்லை. விவரம் தெரிந்த நாளில் இருந்து தன் கைப் பக்குவத்தில் வளர்ந்தவன். தான் ஊட்டி வளர்த்த லட்சியத்தைத் தவிர, வேறொன்றும் அறியாதவன். குறி வைத்த ரத்தம் குடிக்கும் வரை, ஓய்தல் வேண்டாதவன். அவன் இங்கே எதைக் கண்டான்? யாரைக் கண்டு உறுமுகிறான்?
துருவி நோக்கினாள். துரைசிங்கத்தின் மிருகக் கண்களில் இயலாமை வழிந்தது. இருபது வருட வளர்ப்பில் இப்படி இவனைப் பார்த்ததே இல்லை. ஏதோ இருக்கு. துரைசிங்கத்தின் தோள் குலுக்கிக் கேட்டாள். “சொல்லு துரைசிங்கம்… யாரைப் பார்த்தாய்?”
அரியநாச்சியின் கேள்வியால் கொஞ்சம் உயிர் வந்தவனாக, முதலில் இருந்து தொடங்கினான். அடி வயிற்றில் இருந்து குரலெடுத்து, ‘ப்ப்பா… ப்ப்பா…’ என்றான். தன் தொண்டையைத் தானே நெறித்து, கண் செருக நாக்கை நீட்டி, செத்தது போல் நடித்துக் காட்டினான்.
அரியநாச்சிக்கு ஏதோ புரிவது போல் தென்பட்டதும் உற்சாகமானான். உள்ளங்கைகளைத் தொப்பி போல் குவித்து தன் தலையில் வைத்தான். வலது கையை நெஞ்சுக்கு நேராக நீட்டி, ஆட்காட்டி விரலால் துப்பாக்கிச் சுடுவது போல் சுட்டுக் காட்டினான். இரண்டு கண்களையும் விரல்களால் ஒற்றி, “ங்ஞா… ஆத்தேன்…” என்றான்.
“ஐய்யோ… நீ சொல்றது ஒண்ணுமே புரியலே. வா… போகலாம்” கையைப் பிடித்து இழுத்தாள்.
துரைசிங்கத்தின் சகலமும் ஒடுங்கியது. அரியநாச்சியின் கைப்பிடியில் ரெண்டு எட்டு நடந்து கொண்டே, முதல் வகுப்பு கண்ணாடிக் கதவைத் தலை திருப்பிப் பார்த்தான். மங்கலாய்த் தெரிந்த கண்ணாடியின் உட்பகுதியில் தன் அறைக்குள்ளிருந்து வெளி யேறிக் கொண்டிருந்தான் டி.எஸ்.பி. ஸ்காட். அரியநாச்சியின் கைப்பிடியை உதறிவிட்டு, கண்ணாடிக் கதவுப் பக்கம் பாய்ந்தான். மதுபானக் கூடம் நோக்கி நடந்து போய்க் கொண்டிருந்தான் ஸ்காட்.
வடிவான குடிசையை வேய்ந்து முடித் திருந்தான் தவசியாண்டிக் கோடாங்கி. தானும் தன் மகள் செவ்வந்தியும் வசிக்கும் குடிசையை விட விஸ்தாரமான குடிசை. தெற்கே பார்த்த வாசல். மச்சு குளிரும் மாசி மாதப் பனி கூட இறங்காத வகையில் தென்னங்கிடுகுகளை, கொல்லம் ஓடுகள் போல் வரிந்து வேய்ந்திருந்தான். தாழ்வாரத் திண்ணைகளை, சாணிப் பாலால் நெய் பதத்துக்கு மெழுகி இருந்தான். உள் வீட்டு மண் தளத்தை, வாழை இலையாய் இழைத்திருந்தான். கண்ணுக்குள் பொத்திப் பொத்தி வார்த்த காரியங்களில் இன்னும் ஏதோ மிச்சமிருப்பதாக எண்ணி, உறக்கம் தொலைத்து அலைந்தான்.
“புதுக் குடிசைக்கு யாருப்பா வர்றா…?” என்கிற செவ்வந்தியின் கேள்வியைக் காதிலேயே வாங்கவில்லை.
தகப்பனும் பேசாத தனித்த காட்டில், வண்ணப் பூக்களோடும், வண்ணத்துப் பூச்சிகளோடும், ஓடை நீரோடும், ஓங்கி உயர்ந்த மரங்களோடும்… சந்தனம் பிசைந்த நிலவொளியாய் கானக வலம் வந்தாள் செவ்வந்தி.
அரியநாச்சியும் ஓடி வந்து கண்ணாடி வழியாக பார்த்தாள். கூடத்து புகை மண்டலத்துக்குள் புகுந்திருந்த ஸ்காட், அரியநாச்சியின் கண்ணில் படவில்லை. கண்ணாடியை ஓங்கி குத்தி, கத்தினான் துரைசிங்கம். அரியநாச்சியின் தோள்களைப் பிடித்துக் குலுக்கி அலறினான்.
கப்பலின் மேல்தளத்தில் வலம் வந்து கொண்டிருந்த ஓர் அதிகாரி நெருங்கி வந்தான். துரைசிங்கத்தைக் கூர்ந்து பார்த்தான். மேலும் இரண்டு கப்பல் சிப்பந்திகள் வந்து கூடினார்கள்.
அரியநாச்சியைப் பார்த்து, “இங்கே உங்களுக்கு என்ன வேலை? இவன் உன் மகனா? ஏன் கத்துகிறான்… பைத்தியமா?” என்றான் அதிகாரி. அரியநாச்சியின் பதிலை எதிர்பாராமலே, “பைத்தியத்தை எல்லாம், ஏன் கப்பலில் அழைத்து வருகிறாய்? கரை இறங்கும் வரை உன்னால் இவனுக்கு காவல் இருக்க முடியுமா? போ… போ. உன் அறைக்கு அழைத்துப் போ…” என, பாந்தமாக புத்தி சொல்லிவிட்டு, சிப்பந்திகளுடன் கிழக்கே நடந்து போனான்.
உடுப்பணிந்தவர்கள் விலகி போனதும், துரைசிங்கம் முதல் வகுப்பு அறை வாசலிலேயே, இரண்டு கால்களையும் பரப்பி அமர்ந்து கொண்டான். அரியநாச்சி கெஞ்சியும் துரைசிங்கம் எழுவதாக இல்லை.


11
சாமியாடி!

பெரியவர் நல்லாண்டியை முன்னேவிட்டு, ஊர் ஆட்கள் காட்டுக்குள் நுழைந்து நடந்தார்கள். கணக்குப்பிள்ளை ரத்னா பிஷேகமும் உடன் வந்து கொண்டிருந்தார்.
பெருங்குடிக்கு மேற்கே செண்பகத் தோப்பை தாண்டி நடந்தால், காடு. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரம். மனித நடமாட்டம் அற்ற வனம். யானைகளும் சிறுத்தைப் புலிகளும் காட்டுப் பன்றிகளும் தன் போக்கில் அலையும். பாம்பும், தேளும், பூரானும் கால்களுக்குள் ஊறித் திரியும். மேற்கே மலை ஏறி இறங்கினால், மலையாள மண்.
பெருங்குடி சனம் யாரும் இந்தக் காட்டுக்குள் நுழைந்தது இல்லை. பெரியவர் நல்லாண்டி மட்டும் ஓரிரு முறை உள்ளே போய் வந்திருக்கிறார்.
“காட்டுக்குள் போய் வர வேண்டும்” என ரத்னாபிஷேகம் பிள்ளை சொன்னதும், நல்லாண்டிக்கு மனசு ஒப்பலே.
“காடு, கனத்த காடு. உள்ளே நுழையிறவங்க உயிருக்கு உத்தரவாதம் இல்லே” என்றார்.
“எனக்கும் தெரியும் நல்லாண்டி. என்ன செய்யிறது? அரண்மனை உத்தரவு. உயிருக்குப் பயந்தா ஊழியப் பிசகு வரும். விசுவாசமா… இருந்தே பழகிட்டேன். சரியோ, தப்போ… நம்ம ஆயுசுக்கும் அரண்மனைச் சேவகம்தான் விதி. மேற்கொண்டு, இது குலசாமி காரியமா வேற இருக்கு. சாமியாடி தவசியாண்டி இல்லாம திருவிழா நடத்துறது ஊருக்கு நல்லதில்லே. ஊரு ஆளுகள் பத்துப் பேரைக் கூட்டிக்கிட்டுப் போயிட்டு வருவோம்.”
நல்லாண்டி, கவிழ்ந்தபடி சிரித்துக் கொண்டார். “இந்த ஊரு ஆட்களை கூட்டிக்கிட்டு, எந்த முகத்தோட போயி தவசியாண்டி முன்னாடி நிக்கிறது? தாயில்லாப் பொம்பளைப் பிள்ளை யைத் தூக்கிக்கிட்டு ஊரை வெறுத்து அவன் ஒதுங்கி, இருவது வருஷத்துக்கிட்டே ஆவுது. ‘கோவில் சாமியாடி, கோவிச்சுக்கிட்டுப் போனானே... உயிரோட இருக்கானா, செத் தானா’ன்னு இத்தனை வருஷமாத் தேடாத ஊரு, இப்போ போயி நின்னா எப்பிடி வருவான்?” என்றவர், “உங்களுக்காக வர்றேன் கணக்குப் பிள்ளை” என்று சொல்லிவிட்டுத்தான் கிளம்பியிருந்தார்.
நல்லாண்டிக்கு அடுத்து ரத்னாபிஷேகம் பிள்ளை வந்தார். அடுத்து ‘லோட்டா’. ஊர் இளவட்டங்களில் ‘லோட்டா’ மட்டும்தான் வந்தான். அரண்மனையோடு ஒட்டிக் கொண்டதில் இருந்து, ‘லோட்டா’வுக்கு இளவட்டங்களோடு சேர்க்கையில்லை. தோரணை கூடிப் போச்சு. ‘லோட்டா’வுக்குப் பின்னால் வந்த ஏழெட்டுப் பேரில், முனியாண்டியும் ஒருவர். ‘லோட்டா’வுக்கு சித்தப்பன் முறை. ‘லோட்டா’வை இடக்கு குத்து குத்துறதிலே கெட்டிக்காரர். எல்லோர் கையிலும் கம்பு இருந்தது. கால் தடம் பார்த்து நடந்தார்கள்.
நல்லாண்டிக்கு ஓரடி முன்னால், செடி செத்தைகளோடு கொடுக்கை தூக்கிக் கொண்டு ஒரு நட்டுவாக்களி நின்றது. கால் வைத்திருந்தால் போட்டுத் தள்ளியிருக்கும். கையில் இருந்த கம்பால், நட்டுவாக்களியை ஓரமாய் தள்ளிவிட்டார்.
“கொடுக்கைப் பார்த்தாலே… புல்லரிக்குது! அடிச்சுக் கொல்லாமத் ஓரமா தள்ளிவிடுறீங்களே!” என்றபடி, தன் கையில் இருந்த கம்பால் அடிக்கப் போனான் ‘லோட்டா’.
நல்லாண்டி தடுத்தார். “டேய்… ‘லோட்டா’! காட்டுக்குள்ளே இப்போதானே நுழைஞ்சிருக்கிறே? இன்னும் எத்தனை நட்டுவாக்களி, எத்தனை பாம்பு வருதுன்னு பாரு. கண்ணுலே படுற எல்லாத்தையும் அடிச்சுக் கொல்லணும்னா, ஆயுசு பத்தாது. கடி படாமப் போயிக்கிட்டே இருக்கணும்.” சொல்லி வாய் மூடலே. பாதையின் குறுக்கே போன ஒரு பாம்பு, திரும்பி பார்த்துவிட்டு கடந்து போனது. திகைத்து நின்றார்கள்.
“இதுக்கு பேரு… வெள்ளை நாகம். இது, அருந்தலான சாதிப் பாம்பு. வேற எந்தக் காட்டுலயும் பார்க்க முடியாது. நாகப் பாம்புகள்லேயே விஷம் கூடுன சாதி!” என்றார் நல்லாண்டி.
‘லோட்டா’வுக்குக் கண்ணைக் கட்டியது. “சித்தப்பூ… ஏதாவது பேசிக்கிட்டே நடங்களேன்” என்றவன், எல்லோருக்கும் ஊடே நடந்தான்.
“ஏன்டா… பயந்தாங்கொள்ளிப் பயலே! எலிக்கும் பூனைக்கும் பயப்புடுற பய நீ. எங்க ளோட ஜோடி போட்டுட்டு, ஏன்டா காட்டுக்குள்ள வந்தே?” முனியாண்டி, ‘லோட்டா’வின் தலையில் ஒரு தட்டு தட்டினார்.
கணக்குப் பிள்ளைக்கும் அடிமடியைக் கலக்கியது. வெளிக்காட்டிக் கொள்ளாமல் நடந் தவர், “இந்த வனாந்தரத்துக்குள்ள தவசியாண்டி எப்புடி குடியிருக்கான்?” என்றார்.
“வயசுக்கு வந்த அவன் மகளும் இந்தக் காட்டுக்குள்ளதானே துணிச்சலா இருக்குது!”
“தவசியாண்டிக்கு யாரு மேலே… என்ன கோபம்?”
“ரணசிங்கம் சாகவும், ‘இனி இந்த ஊருலே… குடி இருக்க மாட்டேன்’னு தவசியாண்டி வெளியேறிட்டான்.”
“ரணசிங்கத்தைத் தெய்வமா மதிச்சவன் தவசியாண்டி!”
“தவசியாண்டி மட்டுமா? இந்த ஆப்பநாடேதான் ரணசிங்கத்தைக் ‘குலசாமி’யாக் கும்பிட்டுச்சு!”
“ரணசிங்கம் எப்படி செத்தான்? யாரு கொன்னது?”
“படை படையா வந்த வெள்ளைக்காரப் போலீஸுகளே ரணசிங்கத்தை நெருங்கப் பயந்தானுங்க. எல்லா போலீஸுகளையும் அழிச்சான். அப்படிப்பட்ட ஒரு மாவீரனை, எவன் கொன்னது?”
“யாருக்குத் தெரியும்?”
“அதுலதான் மர்மம் இருக்கு!”
“தவசியாண்டிக்குத் தெரியுமோ?”
“தவசியாண்டிக்குத் தெரி யுமான்னு… நல்லாண்டிக்குத்தான் தெரியும்.”
“நல்லாண்டி... ஒனக்குத் தெரி யுமா?”
“நான்… ரெண்டு தடவை காட்டுக் குள்ளே போயிருந்தப்ப, தவசியாண்டி வாயைக் கிண்டிப் பார்த்தேன். ம்ஹூம்… மூச்சுக் காட்டல. ஆனா, ஏதோ ஒரு வைராக்கியத்தில இருக்கான். அது மோசமான வைராக்கியமா தெரியுது” என்றார் நல்லாண்டி.
“கணக்குப் பிள்ளைக்குத் தெரியும். சொல்ல மாட்டேங்கிறாரு”.
குறுஞ்சிரிப்புச் சிரித்த ரத்னாபிஷேகம் பிள்ளை, “என்னை ஏம்பா இழுக்குறீங்க? நானும் உங்கள மாதிரிதான். ஒரே வித்தியாசம்… நீங்க சம்சாரிங்க, நான் அரண்மனைச் சேவகன். அவ்வளவுதான்”. வாயை இறுக்கிக் கொண்டார்.
“ஏன் சித்தப்பூ… தவசியாண்டி காட்டுக்குள்ள வந்ததுல இம்புட்டு ரகசியம் இருக்கா!” என்றான் ‘லோட்டா’.
“அப்பாடி! தவசியாண்டி குடிசை கண்ணுல தட்டுப்படவும்தான், என் மகன் ‘லோட்டா’வுக்குப் பேச்சு வந்திருக்கு!” என்ற முனியாண்டி, “மகனே… குடிசையில குடி இருக்க நீ வரல. திரும்பி ஊருக் குப் போவணும். போற வழியில… குறுக்கே, யானை வருதோ, புலி வருதோ. உன்னை மாதிரி எளவட்டத்தைதான் காடு ‘காவு’ கேக்குமாம்!”
எல்லோரும் சிரித்தார்கள். ஆனாலும் குடிசை நெருங்க நெருங்க, உள்ளுக்குள் உறுத்தியது. ‘ஊர் ஆளுகளைப் பார்த்து தவசியாண்டி பேசுவானோ, மாட்டானோ?’
ஓடையைக் கடந்து, கையில் கம்புகளோடு கரை ஏறினார்கள்.
அடர்ந்த காடே அதிரும்படி, ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது.
“அப்பா….!”


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக