புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 குருதி ஆட்டம்(6-8) - வேல ராமமூர்த்தி Poll_c10 குருதி ஆட்டம்(6-8) - வேல ராமமூர்த்தி Poll_m10 குருதி ஆட்டம்(6-8) - வேல ராமமூர்த்தி Poll_c10 
11 Posts - 35%
heezulia
 குருதி ஆட்டம்(6-8) - வேல ராமமூர்த்தி Poll_c10 குருதி ஆட்டம்(6-8) - வேல ராமமூர்த்தி Poll_m10 குருதி ஆட்டம்(6-8) - வேல ராமமூர்த்தி Poll_c10 
9 Posts - 29%
Dr.S.Soundarapandian
 குருதி ஆட்டம்(6-8) - வேல ராமமூர்த்தி Poll_c10 குருதி ஆட்டம்(6-8) - வேல ராமமூர்த்தி Poll_m10 குருதி ஆட்டம்(6-8) - வேல ராமமூர்த்தி Poll_c10 
6 Posts - 19%
i6appar
 குருதி ஆட்டம்(6-8) - வேல ராமமூர்த்தி Poll_c10 குருதி ஆட்டம்(6-8) - வேல ராமமூர்த்தி Poll_m10 குருதி ஆட்டம்(6-8) - வேல ராமமூர்த்தி Poll_c10 
3 Posts - 10%
mohamed nizamudeen
 குருதி ஆட்டம்(6-8) - வேல ராமமூர்த்தி Poll_c10 குருதி ஆட்டம்(6-8) - வேல ராமமூர்த்தி Poll_m10 குருதி ஆட்டம்(6-8) - வேல ராமமூர்த்தி Poll_c10 
1 Post - 3%
Jenila
 குருதி ஆட்டம்(6-8) - வேல ராமமூர்த்தி Poll_c10 குருதி ஆட்டம்(6-8) - வேல ராமமூர்த்தி Poll_m10 குருதி ஆட்டம்(6-8) - வேல ராமமூர்த்தி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 குருதி ஆட்டம்(6-8) - வேல ராமமூர்த்தி Poll_c10 குருதி ஆட்டம்(6-8) - வேல ராமமூர்த்தி Poll_m10 குருதி ஆட்டம்(6-8) - வேல ராமமூர்த்தி Poll_c10 
103 Posts - 42%
ayyasamy ram
 குருதி ஆட்டம்(6-8) - வேல ராமமூர்த்தி Poll_c10 குருதி ஆட்டம்(6-8) - வேல ராமமூர்த்தி Poll_m10 குருதி ஆட்டம்(6-8) - வேல ராமமூர்த்தி Poll_c10 
88 Posts - 36%
i6appar
 குருதி ஆட்டம்(6-8) - வேல ராமமூர்த்தி Poll_c10 குருதி ஆட்டம்(6-8) - வேல ராமமூர்த்தி Poll_m10 குருதி ஆட்டம்(6-8) - வேல ராமமூர்த்தி Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
 குருதி ஆட்டம்(6-8) - வேல ராமமூர்த்தி Poll_c10 குருதி ஆட்டம்(6-8) - வேல ராமமூர்த்தி Poll_m10 குருதி ஆட்டம்(6-8) - வேல ராமமூர்த்தி Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
 குருதி ஆட்டம்(6-8) - வேல ராமமூர்த்தி Poll_c10 குருதி ஆட்டம்(6-8) - வேல ராமமூர்த்தி Poll_m10 குருதி ஆட்டம்(6-8) - வேல ராமமூர்த்தி Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
 குருதி ஆட்டம்(6-8) - வேல ராமமூர்த்தி Poll_c10 குருதி ஆட்டம்(6-8) - வேல ராமமூர்த்தி Poll_m10 குருதி ஆட்டம்(6-8) - வேல ராமமூர்த்தி Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
 குருதி ஆட்டம்(6-8) - வேல ராமமூர்த்தி Poll_c10 குருதி ஆட்டம்(6-8) - வேல ராமமூர்த்தி Poll_m10 குருதி ஆட்டம்(6-8) - வேல ராமமூர்த்தி Poll_c10 
7 Posts - 3%
Guna.D
 குருதி ஆட்டம்(6-8) - வேல ராமமூர்த்தி Poll_c10 குருதி ஆட்டம்(6-8) - வேல ராமமூர்த்தி Poll_m10 குருதி ஆட்டம்(6-8) - வேல ராமமூர்த்தி Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
 குருதி ஆட்டம்(6-8) - வேல ராமமூர்த்தி Poll_c10 குருதி ஆட்டம்(6-8) - வேல ராமமூர்த்தி Poll_m10 குருதி ஆட்டம்(6-8) - வேல ராமமூர்த்தி Poll_c10 
2 Posts - 1%
Jenila
 குருதி ஆட்டம்(6-8) - வேல ராமமூர்த்தி Poll_c10 குருதி ஆட்டம்(6-8) - வேல ராமமூர்த்தி Poll_m10 குருதி ஆட்டம்(6-8) - வேல ராமமூர்த்தி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குருதி ஆட்டம்(6-8) - வேல ராமமூர்த்தி


   
   
kumarv
kumarv
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 23
இணைந்தது : 17/04/2017

Postkumarv Tue May 16, 2017 1:38 pm

வேல ராமமூர்த்தி தமிழ் ஹிந்து நாளிதழில் தொடராக எழுதிய " குருதி ஆட்டம் " நாவல் 27 வார தொடரில்( 6 - 8 )தொடர்

6
தேசம் திரும்பி, பழி முடி!

இடுப்புக் கத்தியை உருவிய அரியநாச்சி, நீண்டு தொங்கிய தன் கூந்தலை, கை நிறையக் கோதி, ஒரு முழ அளவுக்கு நுனிமுடியை அறுத்தாள். இரண்டு கைகளிலும் ஏந்தி, உஸ்தாத் அப்துற் றஹீமை ஏறிட்டுப் பார்த்தாள்.
“அண்ணேன்… இது எங்க குரு காணிக்கை!”
கைக் கூந்தலை உஸ்தாத்தின் காலடி யில் வைத்தாள்.
உதட்டோரம் சிரித்துக் கொண்ட உஸ்தாத், “அரியநாச்சி… நான் மலேசிய மண்ணில் பிறந்து வளர்ந்தவன்தான். ஆனாலும் எனது வேர்கள், ராமநாதபுரத்து சேது மண்ணின் வேர்கள். வெள்ளைக் கொடும்பாவி எரிக்க, லாவிச் சுழன்ற விடுதலை வேள்வித் தீயின் நாவுகளுக்கு, ஆயிரமாயிரம் வீர மறவர்களை அள்ளிக் கொடுத்த என் சேது பூமிக்குச் செய்ய வேண்டிய கடமையைத்தான் நான் செய்தேன்.”
அரியநாச்சியின் உச்சந்தலையில் கை அழுத்தி, “அடிமைப்பட்ட தேசத்தி லிருந்து நாடு கடத்தப்பட்ட நீங்கள், சுதந்திர இந்தியாவுக்குள் நுழையப் போகிறீர்கள். வெள்ளையன் வெளியேறி விட்டாலும் நம் எதிரிகள் தழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். துரைசிங்கத் தோடு தேசம் திரும்பி, உன் பழி முடி. வஞ்சகன் எவனையும் மன்னிக்காதே.” ஆசீர்வதித்துவிட்டு எழுந்தார்.
அந்தியில் கூடினார்கள். பொழுது இருட்டியும் கதவு திறந்தபாடில்லை.
அரண்மனை அழைத்தவுடன், வாசலில் வந்து கூடுவதும் சொரணையற்று காத்துக் கிடப்பதும் பெரிய ஆம்பளைகளுக்கு பழகிப் போச்சு. இதுநாள் வரை, இளவட்டப் பயலுகள் எவனும் வந்ததில்லை. இன்னைக்கு எல்லா இளவட்டங்களும் கூடி வந்திருக்கான்னா… அதுக்குக் காரணம், இருளப்பசாமி கோயில் திருவிழா.
காலையில் ‘லோட்டா’தமுக்கு அடித்து கூவியதிலிருந்து, ஊரே துள்ளாட்டத்தில் இருந்தது. பதினாறு வருஷமா நின்னு போயிருந்த இருளப்பசாமி கோயில் கொடை, இந்த வருஷம் நடக்கப் போகுது. பத்து நாளைக்கு ஆட்டம் பாட்டம், எருதுகட்டு, இடைச்சியூரணி முருகேசன் நாடகம், பாவலர் ஓம் முத்துமாரி கூத்துன்னு… ஊரே களைகட்டும்!
கூடிக் கிடக்கிற விடலைப் பயல்களில் பல பேரு, ஊர்த் திருவிழாவை பார்த்த தில்லை. பெரிய ஆட்கள் சொல்லிக் கேட்டதுதான்.
இளவட்டங்களின் கூட்டத்துக் குள்தான் ‘லோட்டா’வும் இருந்தான். வயசுப்படி பார்த்தால், ‘லோட்டா’ இளவட்டமுமில்லே, பெரிய ஆளுமில்லே. ஊடு தட்டு வயசு.
காத்துக் கிடந்து பொறுமை இழந்த விடலைகள், “கதவு தெறக்குமா, தெறக்காதா?” வாய்க்குள் மொசு மொசுத்தார்கள்.
“அடலேய்! நம்ம அவசரத்துக்குத் தெறக்கவும் மூடவும் அரண்மனைக் கதவு என்ன… நம்ம வீட்டு அஞ்சறைப் பெட்டியா? அரண்மனையைப் பார்க் கணும்னா பொறுமையாத்தான் காத்துக் கிடக்கணும்” விடலைகளின் தலையில் பெரியவர்கள் தட்டி வைத்தார்கள்.
வந்து வெகுநேரமாகியும் ‘லோட்டா’ வாய் திறக்கக் காணோம். விடலைகளும் இளவட்டங்களும் ‘லோட்டா’வின் காது படவே பேசினார்கள்.
“இருளப்பசாமி… நம்ம ஊருக்கே குலசாமியா? இல்லே, அரண்மனைக்கு மட்டும்தான் குலசாமியா?”
“தெரியலே...”
“ஊருக்கு ‘முதல் கரை’ யாரு?”
“முதல் கரைன்னா…?”
“தெரியலையே…”
எல்லா விவரமும் ‘லோட்டா’வுக்குத் தெரியும். உதடு தங்காமல் வார்த்தைகள் துள்ளுது. ம்… ஹூம்ம்… இறுக்கிக் கொண்டான். வாயைத் திறந்தால் வம்பு வந்து சேருது. நேத்து வாயைத் தெறந்துட்டுத்தான் தமுக்கு அடிச்சு கேவலப்பட்டது போதாதா?
“பதினாறு வருஷமா திருவிழா ஏன் நின்னுச்சு… யாரு காரணம்?”
“தெரியலையே…”
“ ‘லோட்டா’வுக்குத் தெரியுமே!”
இதுக்கும் மேலே ‘லோட்டா’வுக்குப் பொறுக் கலே. இளவட்டங்களையும் விடலைகளையும் சைகைக் காட்டி, கூட்டத்திலிருந்து ஒதுக்கிக் கொண்டு போனான். இருட்டுக்குள் மெதுவாகப் பேசினான்.
“அடேய் கீரை மண்டைகளா! ஊரு விவரம் தெரிஞ்ச என்னை மாதிரி ஒரு ஆளைப் பக்கத்தில வெச்சிக்கிட்டு, கேக்குற கேள்விக்கெல்லாம் ‘தெரியலே… தெரியலே’ன்னு பதில் சொன்னா எப்பிடிடா?”
தோள்ப்பட்டையை சிலுப்பிக் கொண்டு, பெரிய மனுசத் தோரணையில் பேசினான் ‘லோட்டா’.
“ ‘லோட்டா’ வாயைத் தொறந்துட் டான்டா!” இளவட்டம் ஒருவன் இடையில் செருகியதை ‘லோட்டா’ கவனிக்கலே.
‘லோட்டா’ தன்னைச் சுற்றி இருந்தவர்களுக்கு மட்டும் கேட்கும்படி வாய்க்குள் பேசினான். பெரியவர் நல்லாண்டி, அங்கிருந்தே காது கொடுத்தார். ஒண்ணும் கேட்கலே.
“………… ………. ……..”
“அப்போ… அரண்மனை?”
“……… …….. …….”
“இப்போ என்ன வந்துச்சாம்?”
“ம்… ம்… காட்டுக் கோடாங்கிச் சத்தம் அரண்மனை அஸ்திவாரத்தையே ஆட்டுதுலே?”
“ஆக, அரண்மனை நெனைச்சாத் தான்… திருவிழா. இல்லேன்னா கிடையாதுன்னு சொல்லு!”
பெரியவர் நல்லாண்டி கத்தினார்.
“அரண்மனை வெளியே வந்துட்டாரு… எல்லாரும் வாங்கடா.”
ஆட்டத்தைக் கலைத்து விட்டு, எல்லோரும் வாச லுக்கு ஓடினார்கள்.
சிங்கப்பூர் துறைமுகத்தில் இருந்து, போர்ட் கில்லாங் வழியாக, பினாங்கு தீவுக்கு வந்து நின்ற கப்பலில் அமர்ந்திருந்தார்கள். கப்பலின் மையப் பகுதியில் அறை ஒதுக்கப்பட்டிருந்தது.
ஊமையன் துரைசிங்கத்தை அறைக் குள் உட்கார வைக்க பெரும்பாடுபட்டாள் அரியநாச்சி. கயிறு போட்டுக் கட்டி வைக்காத குறைதான். கப்பலின் மேல் தளத்துக்கு ஓடுவதிலேயே குறியாய் இருந்தான். பினாங்கு தீவை விட்டு, மேற்கு நோக்கி கப்பல் கிளம்பியது.
அரியநாச்சியின் கைப்பிடியை முறித்துக் கொண்டு, இரும்பு ஏணிப் படி வழியே ஓட்டமாய் ஏறி, மேல் தளத்துக்கு வந்தான்.
கப்பல் ஓரக் கைப்பிடியை இரண்டு கைகளாலும் பற்றிக் கொண்டு, அருகில் நிற்கும் இன்னொரு வெள்ளையனுடன் கடல் பார்த்து பேசிக் கொண்டிருந்தான் டி.எஸ்.பி. ஸ்காட்.
ஊமையன் துரைசிங்கத்தின் கண்களை, தனுஷ்கோடி தீவுக் குறுமணல் உறுத்தியது.
7
ஆப்ப நாட்டு ‘மசாய்’

பினாங்கு தீவை, ‘புலாவ் பினாங்’ என்பார்கள்.
‘புலாவ்’ என்றால் மலாய் மொழியில் ‘பாக்கு’. கழுகுப் பார்வையில் கொட் டைப் பாக்கு வடிவில் படுத்திருக்கும் தீவு. கரும்பச்சை நிறக் காடுகளால் போர்த்தப்பட்ட சொர்க்க பூமி. சீனர்களும் மலாய்க்காரர்களும் தமிழர்களும் பிணைந்த தீவு. மங்கோலிய ஜாடை நிறைந்த மலாய்க்காரர்களே பூர்வ தீவுக்காரர்கள்.
துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட கப்பல், பினாங்கு தீவை விட்டு வெகுதூரம் வந்திருந்தது. கண்களை விட்டு, மெல்ல மெல்ல விலகிப் போய்க் கொண்டிருந்தன கரும்பச்சை நிலப் பரப்புகள். காட்சிக்கு எட்டிய தூரம் கடல் விரிந்திருந்தது.
அதிசயப் பேருலகை அடி மடியில் மறைத்து வைத்துக் கொண்டு, கருநீல நீராய்த் திமிறிக் கிடக்கும் கடலை, கீறிப் பிளந்து போகும் கப்பலின் மேல் தளத்தில் நின்றிருந்தான் டி.எஸ்.பி. ஸ்காட். வாயிலிருந்து வெளியேறியதும் கடற்காற்றில் கலந்தது சுருட்டுப் புகை. கடல் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தான்.
“ஓய்வுக்கு பின், லண்டன் வாழ்க்கை சலிப்பூட்டுகிறது. அடிமை தேசங்களுக்கு சுதந்திரம் கொடுத்து தொலைத்ததால், நம்மைப் போன்றவர்கள் லண்டனுக்கு மூட்டை முடிச்சுகளுடன் கிளம்ப வேண் டியதாயிற்று. தேட்டமின்றி ரத்தம் குடித்த நாக்கு, வீட்டு ரொட்டிகளை சீண்ட மாட்டேன் என்கிறது.” புகையை விட்டான்.
அருகில் நிற்கும் வெள்ளை அதிகாரி சைமன், “எனக்கும் லண்டனில் இருக்கவே பிடிக்கவில்லை. உலகம் சுற்றக் கிளம்பிவிட்டேன்” என்றான்.
“மிஸ்டர் சைமன்! நீங்கள் பிரிட்டானிய நிர்வாகப் பிரிவில் பணிபுரிந்தவர். அறைக்குள் அமர்ந்து, காகித உத்தர வுகள் மூலம் அடிமைகளைக் கண்காணித் தவர். என் பணி வேறு வகை. நாடு, தேசங்கள் சுற்றி நரவேட்டை ஆடியவன் நான். பிரிட்டிஷ் காலனிய நாடுகளில், எங்கெல்லாம் கலவரக்காரர்கள் முளைக் கிறார்களோ, அங்கெல்லாம் கப்பல் ஏறிப் போய், சுட்டுச் சுடுகாடாக்கி முடித்ததும் அடுத்த வேட்டைக்கு அனுப்பப்பட்டவன்.”
ஊருக்கு வடக்கே, கண்மாய்க்கரை இறக்கத்தில் இருளப்பசாமி கோயில். படிகளுடன் கூடிய எட்டடி உயர பீடம். உச்சியில் நின்றார் இருளப்பசாமி. அள்ளி முடிந்த கொண்டை. வலது கை ஓங்கிய அரிவாள். இடதுகை அணைந்த சிம்ம வாகனம். திரண்ட புருவம். தெறிக்கும் விழிகள். கூர்த்த மூக்கு. கொடுவாள் மீசை.
எந்த தலைமுறையில் இந்தக் கோயில் உருவானது என எவனுக்கும் தெரியலே. காவல்காரன்பட்டியில் இருந்து பிடிமண் எடுத்து வந்து கோயில் உருவானது என சொல்லி வைத்துவிட்டு பெருசுகள் செத்துப் போனார்கள்.
திருவிழா சாட்டி, காப்புக் கட்டிய திலிருந்து ஊரே பரபரத்து திரிந்தது. பொழுது விடியவுமே, கொட்டுக்கார பாலு கூட்டம் காற்சலங்கை மணி கட்டி, இடுப்புக்கொட்டுச் சத்தத்தோடு, ஊரைக் கிளப்பி விட்டுவிடுவார்கள். தெருத் தெருவாய்… சந்து சந்தாய்… மாவிலைத் தோரணம், கீற்றுப் பந்தல், ரேடியோ சத்தம். கணக்குப்பிள்ளை ரத்னா பிஷேகம் மேற்பார்வையில் அரண் மனைக் காசு, தெருவெல்லாம் ஓடுது!
‘அரண்மனை’ன்னா அரண்மனை தான்! காசை அள்ளி எறியிறாரே…’ ஊரே வாய்ப்பாறியது.
ஸ்காட்டை ஓரக் கண்ணால் கோதினான் சைமன். “மிஸ்டர் ஸ்காட்! போன நாடுகளில் எல்லாம் நரவேட்டை மட்டும்தான் நடந்ததா? இல்லை… ‘அந்த’ வேட்டையும்…” உதட் டோரம் இளித்தான்.
கடற்காற்றுச் சுகம், உள் ரகசியங்களை சொல்லத் தூண்டியது. நெஞ்சு நிறைய மூச்சுக் காற்றை இழுத்து விட்ட ஸ்காட், வானும் கடலும் சேரும் அரூபக் கோட்டை கூர்ந்து பார்த்தான்.
“அதில்லாமல் எப்படி? லண்டனை விட்டு, தனி ஆளாய் கிளம்புபவன், வீடு திரும்ப ஆண்டுக் கணக்காகும். போகிற இடங்களில் புழங்கிக் கொள்ள வேண்டியதுதான்.” பழைய நினைவுகளில் திளைத்தான்.
சைமன் கிளுகிளுத்தான்.
பேச்சுவாக்கில் அணைந்து போன சுருட்டை, மறுபடியும் பற்ற வைத்தான் ஸ்காட். புகையை இழுத்து, காற்றில் ஊதி னான். “ஆப்பிரிக்காவின் கென்யா நாட்டில், எனக்கு ஒரு மகள் இருக்கி றாள். அவளுடைய தாய் ‘மசாய்’ இனத்தைச் சேர்ந்தவள்.”
ஸ்காட்டை விழி அகல பார்த்தான் சைமன்.
“ஆப்பிரிக்க ‘மசாய்’ இனம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா சைமன்? உலக நாட்டுச் சிங்கங்களிலேயே ஆப்பி ரிக்கச் சிங்கங்கள் கொடூரமானவை. அந்தச் சிங்கங்கள், இந்த ‘மசாய்’ இனத்தவரைக் கண்டு பதறி ஓடும். இவர் கள் சிங்கத்தைத் துரத்தி ஓடுவார்கள்…” நிறுத்தினான்.
“சிங்கத்தைத் துரத்தியவள், என் வெள் ளைத் தோல் மயக்கத்தில் விழுந்து விட்டாள்.” குறுஞ்சிரிப்பு சிரித்தான்.
“அப்புறம் கீழைநாடுகளில்… இலங்கையில் ஒரு மகன் இருக்கிறான்.”
“இலங்கையிலுமா? இந்தியக் கப்பலில் செல்லுகிறீர்களே… அங்கும் வாரிசு உண்டோ?”
“இருந்திருக்கும். எங்கே விட்டான் அந்தக் காதகன்?”
“எவன்?”
“ஆப்பிரிக்க ‘மசாய்’போல்… இவன் ஆப்பநாட்டு ‘மசாய்’. அவனைக் கொன்றொழிப்பதற்குள் என் ரத்தம் சுண்டிப் போனது. விட்டிருந்தால் வெள்ளை ஆதிக்க வேரை வெட்டிச் சாய்த்திருப்பான். ‘ரணசிங்கம்’ அவனது பெயர். அவனுடைய மகனைக் கூட இந்த மலேசியத் தீவுக்குத்தான் நாடு கடத்திவிட்டேன்.”
அடுத்த கேள்வியை சைமன் யோசித்துக் கொண்டிருக்க, ஸ்காட் தொடர்ந்தான். “லண்டன் வேல்ஸ் இளவரசர், நம்மைப் போன்ற நாடு சுற்றிகளுக்கு சிறப்பான ஒரு சலுகையை வழங்கி இருந்தார். அடிமை தேசங்களை அடக்கப் போகிறவர்களுக்கு, அங்கங்கு பிறக்கும் எந்த இனத்துக் குழந்தையானாலும் அது… பிரிட்டிஷ் பிரஜையே! ‘வெள்ளை ரத்தம் ஓடும் குழந்தைகள் எல்லாம் வேல்ஸ் தேசத்துக் குழந்தைகளாகவே வளர்க்கப்பட வேண்டும்’ என்பது கிரேட் பிரிட்டனின் உத்தரவு. இலங்கையில் பிறந்த என் மகன், சென்னை மாகாணத்து வெலிங்டன் கான்வென்டில் வெள்ளைக்காரனாகவே வளர்கிறான்!” பெருமிதத்தோடு சொன்னான் ஸ்காட்.
கண்களை விட்டு பினாங்கு தீவு மறைந்துவிட்டது. ஸ்காட்டின் பிடறியில் பதிந்திருந்த ஊமையன் துரைசிங்கத்தின் கண்கள் அகலவே இல்லை.
8
ஆவி ஆட்டுது!

வெகுநாட்களுக்குப் பின்னால் கணக்குப்பிள்ளை ரத்னாபிஷே கம், சென்னைப் பட்டணத்தில் வந்திறங்கினார். ரயிலேறி வந்த களைப்பு முகத்தில் அப்பியிருந்தது. வாசலில் நுழைந்தபோது பரபரவென வெளி யேறிக் கொண்டிருந்தான் கஜேந்திரன்.
ரத்னாபிஷேகம் பிள்ளையின் முகம் பார்க்காமலே, "வாங்க கணக்கு…" வரவேற்றவன், தலை கவிழ்ந்தவாறு காலணிகளை மாட்டினான்.
இத்தனை நெருக்கத்தில் கஜேந்தி ரனைப் பார்த்திராத பிள்ளைவாள், "அய்யா… நல்லா இருக்கீங்களா..?" சந்தோஷம் பொங்கக் கேட்டார்.
விசாரிப்புகளைக் காதில் வாங்கிக் கொள்ளாதவன், "உள்ளே போங்க... பாட்டி இருக்காங்க. நான் அவசரமா வெளியே போறேன்…" எனச் சொல்லிக் கொண்டே, வாசலில் நிற்கும் வெள்ளை நிற காரை நோக்கி நடந்து போனான்.
முன்னே நடக்கவிட்டு அவனது பின்னழகைப் பார்த்த ரத்னாபிஷேகம் பிள்ளை, உறைந்து போய் நின்றார். இதுநாள்வரை கஜேந்திரனைக் கண் குளிரப் பார்க்கவிட்டதில்லை வெள் ளையம்மா கிழவி. 'இப்படி ஒரு மகனைப் பெற்ற பொம்மி… இருந்து வாழ முடியாமல் போய்விட்டாளே. காலச் சுழி எப்படியெல்லாம் விளை யாடுது'
வாசலையே பார்த்துக் கொண்டிருந்த வரை, "வாங்க கணக்குப்பிள்ளை...'' வீட்டின் மைய அறையிலிருந்து வெள்ளையம்மாவின் குரல் திருப்பியது.
"கும்பிடுறேன் தாயீ…" கொண்டு வந்திருந்த கைப் பையை இருக்கையின் மீது வைத்தார்.
எதிர் இருக்கையைக் காட்டி, "உக்காருங்க…" என்றதோடு தானும் ஒரு இருக்கையில் அமர்ந்தாள்.
"இருக்கட்டும் தாயீ…" உள் தொண்டையில் பேசியவர், இருக்கை யின் நுனியில் ஒடுங்கி அமர்ந்தார்.
சேலை முந்தானைத் தலைப்பால் கழுத்து வியர்வையை ஒற்றியவள், "ஆவணி மாசம்… வெக்கையைப் பாருங்களேன். சித்திரை, வைகாசி மாதிரில்லே வேவுது!" உதடு குவித்து மூச்சுவிட்டாள்.
கணக்குப்பிள்ளை, பாதி வாய்க் குள்ளும் பாதி வெளியிலுமாக பேசினார். "இந்த வேக்காடெல்லாம் பட்டணக் கரையிலேதான். நம்ம ஊரு எப்பவும் போல 'குளு குளு'ன்னுதான் இருக்கு!"
பிள்ளைவாள் பேச்சில் ஊரைத் தொட்டுப் பேசியதும் வெள்ளை யம்மாவின் கண்களில் வெறுமை மிதந்தது.
"அது கெடக்கட்டும். வேற என்ன விசேஷம்?" பேச்சுத் தடத்தை மாற்றி னாள்.
"ஏகப்பட்ட விசேஷம் இருக்கு தாயீ..!"
ரத்னாபிஷேகம் பிள்ளையை ஊன்றிப் பார்த்தாள்.
"பதினாறு வருஷமா நின்னு போயி ருந்த பெருங்குடி இருளப்பசாமி கோயில் திருவிழா, இந்த வருஷம் நடக்கப் போகுது!"
மூச்சுக் காட்டாமல் செவி கொடுத் தாள்.
"அரண்மனையை ஏதோ ஆவி பிடிச்சு ஆட்டுதாம். இருளப்பசாமிக்கு இருபத்தியோரு கிடாய் வெட்டி பரிகாரம் தேடணுமாம். வயசுக்கு வராத ஏழு சின்னப் பொண்ணுகளைச் சாமி யாக்கி, காப்புக் கட்டி, முளைப்பாரி வளர்க்கிறாங்க. வைக்கோல் பிறி சுத்தி வாளெடுத்து ஆடிவர, நேர்த்திக்கடன் வெச்சு இளவட்டங்கள் விரதம் இருக் கானுங்க. ஊரே திருவிழா கோலம்தான்! ஒரே ஒரு குறை மட்டும் இருக்கு" நிறுத்தினார்.
வாய் திறக்காமலே, 'என்ன குறை?' எனக் கேட்பது போல் ஏறிட்டுப் பார்த்தாள்.
"தாயீ… நீங்க வந்து தலை காட்டுனீங் கன்னா, அரண்மனைக்குப் பரிகாரம் கிட்டும்." பதறிப் பதறிச் சொல்லிவிட்டார்.
"கணக்கு…!" தீக்கங்காய் பார்த்தாள்.
"மன்னிக்கணும் தாயீ. அரண் மனைக்குள்ளே ஆயிரம் குத்தம் குறை இருக்கு. இருந்தாலும் இது 'சாமி' காரியம். வாழப் போற உங்க பேரப் பிள்ளை கஜேந்திரனுக்குக் குலசாமி கடாட்சம் வேணும். உங்க உப்பைத் திங்கிற எனக்கு, இதைச் சொல்ல வேண் டிய பொறுப்பும் கடமையும் இருக்கு தாயீ..."
இருக்கையை விட்டு எழுந்த வெள்ளையம்மா, புறங்கைகளைக் கட்டிக் கொண்டு யோசனையில் நடை போட்டாள். அரை பாதி தலை கவிழ்ந்தி ருந்த கணக்குப்பிள்ளை, விழிகளை மட்டும் மேலுயர்த்தி இமையாமல் வெள்ளையம்மாவைப் பார்த்தார்.
நின்றவள், திரும்பிச் சொன்னாள். "பத்தாம் நாள் திருவிழாவுக்கு நான் மட்டும் பெருங்குடிக்கு வருவேன். அரண்மனைக்குள் நுழைய மாட்டேன். திருவிழா முடிஞ்சதும் சென்னைப் பட்டணத்துக்குக் கிளம்பிருவேன்."
"நீங்க மட்டுமா… நம்ம சின்னவரு?"
"கஜேந்திரன் வர மாட்டான். இருபது வருஷமா அவன் மேலே படாத அந்த ஊர்க் காத்து, இனிமேலும் பட வேண் டாம்." மறுபுறம் திரும்பினாள்.
ஒற்றை
ஆளாய் ஓடியாடித் திரிந்தான் தவசியாண்டிக் கோடாங்கி. குடிசைக்கு நேர் எதிரே இருபதடி தூரத்தில், இடுப்பளவு மண்சுற்றுக் கோட்டையை எழுப்பியிருந்தான். வெட்டிக் காயப் போட்டிருந்த பச்சைப் பனை ஓலை கள் வெயிலில் இளமஞ்சள் நிறத் துக்கு முறுகி இருந்தன. பல கன, உயர மூங்கில்கள் காய்ந்து கொண் டிருந்தன. கீறிப் பிளந்தத் தெப்பை களாகவும் மலர்ந்திருந்தன. கிடுகுகளாக வணையப்பட்ட தென்னங்கீற்றுகள், அம்பாரமாகக் குவிந்திருந்தன. பாதித் திண்ணையை அடைத்து, தென்னம் பாளை ஈக்கிகளும் மணிக்கயிறுகளும் குத்தூசியும் சாற்றிக் கிடந்தன.
குடிசை வாசலில் அமர்ந்து, ஏதும் புரியாதவளாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் செவ்வந்தி. மண் குழைக்க, குடம் குடமாய் ஓடைநீர் அள்ளி வந்ததோடு சரி.
"இன்னொரு குடிசை எதுக்குப்பா? யாருக்குப்பா?"
தவசியாண்டி வாய் திறக்கலே.
கப்பலின் மேல் தளத்திலிருந்து, ஸ்காட்டையும் சைமனையும் பார்த் துக் கொண்டிருந்த ஊமையன் துரை சிங்கம், இரும்பு ஏணிப் படிகளில் விறுவிறுவென கீழிறங்கினான். நடுப் பகுதி அறைகளைக் கடந்து ஓடினான். அரியநாச்சி, உட்தாழ்ப்பாள் இட்டிருந்த அறைக் கதவைத் தட்டினான். திறக்கும் வரை தட்டினான். திறந்ததும் உள்ளே நுழையாமலே, அரியநாச்சியின் வலது கையைப் பிடித்து வெளியே இழுத் தான்.
"ஏய்… துரைசிங்கம்! என்னாச்சு உனக்கு?" கையை உதறிவிட்டு, துரை சிங்கத்தை உள்ளே இழுத்தாள். கதவை பூட்டினாள்.
ஊமையன், கப்பலின் நடுப்பகுதி அதிர கத்தினான்.
'ஹ்ஹா… ஆஹ்… ஹ்வ்… ஹா…'
அரியநாச்சி மிரண்டு போனாள்.
கதவை திறந்தான். அரியநாச்சியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு இரும்பு ஏணியை நோக்கி ஓடினான். இரண்டு, இரண்டு படிகளாகத் தாவி ஏறி மேல்தளத்துக்கு வந்ததும் கப்பலின் ஓரம் பார்த்தான்.
படியேறி வந்து சேர்ந்த அரியநாச்சி, துரைசிங்கத்தின் பார்வை பதிந்த இடம் நோக்கினாள்.
யாரையும் காணோம்.
சுற்றிலும் கடல்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக