புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘‘என்னை சீண்டாத எதையும் சினிமாவாக எடுப்பதில்லை…’’ . Poll_c10‘‘என்னை சீண்டாத எதையும் சினிமாவாக எடுப்பதில்லை…’’ . Poll_m10‘‘என்னை சீண்டாத எதையும் சினிமாவாக எடுப்பதில்லை…’’ . Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
‘‘என்னை சீண்டாத எதையும் சினிமாவாக எடுப்பதில்லை…’’ . Poll_c10‘‘என்னை சீண்டாத எதையும் சினிமாவாக எடுப்பதில்லை…’’ . Poll_m10‘‘என்னை சீண்டாத எதையும் சினிமாவாக எடுப்பதில்லை…’’ . Poll_c10 
2 Posts - 6%
heezulia
‘‘என்னை சீண்டாத எதையும் சினிமாவாக எடுப்பதில்லை…’’ . Poll_c10‘‘என்னை சீண்டாத எதையும் சினிமாவாக எடுப்பதில்லை…’’ . Poll_m10‘‘என்னை சீண்டாத எதையும் சினிமாவாக எடுப்பதில்லை…’’ . Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
‘‘என்னை சீண்டாத எதையும் சினிமாவாக எடுப்பதில்லை…’’ . Poll_c10‘‘என்னை சீண்டாத எதையும் சினிமாவாக எடுப்பதில்லை…’’ . Poll_m10‘‘என்னை சீண்டாத எதையும் சினிமாவாக எடுப்பதில்லை…’’ . Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

‘‘என்னை சீண்டாத எதையும் சினிமாவாக எடுப்பதில்லை…’’ .


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 13, 2017 7:05 am

நிதானமாக பேசுகிறார் இயக்குநர் ராதாமோகன்

‘‘ஒவ்வொரு மனுஷனும் ஒரு கதைதான்.
அவனோட கனவு, ஆசை, நிராசை, கொண்டாட்டம்
எல்லாத்தையும் பொத்தி வச்சிருக்கிற அனுபவமும்,
அழகுமே சொல்லி மாளாது. சினிமாவாக எடுத்தும்
தீராது.

நிறைய படிச்சிட்டோம் என்பதோ, நிறைய சினிமா
எடுத்திட்டோம் என்பதோ விஷயமே இல்லை.
எழுதுவதோ, படிப்பதோ, படம் எடுப்பதோ நமக்குள்
ஒரு சிறு மாற்றத்தையாவது ஏற்படுத்தணும்.

அந்த உள்மாற்றம்தான் மன விசாலம். என் ‘பிருந்தாவனம்’
அப்படிப்பட்டது.
-
‘‘என்னை சீண்டாத எதையும் சினிமாவாக எடுப்பதில்லை…’’ . RJMy24XvTDCjz3HFOAJS+13

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 13, 2017 7:06 am

என்னை சீண்டாத எதையும் சினிமாவாக எடுப்பதில்லை.
‘பிருந்தாவனம்’ மெல்லிய உணர்வுகளைப் பேசும்.
சொல்ற விஷயத்தை அழகா, ஜாலியா, சந்தோஷமா,
நெகிழ்ச்சியா, உணர்த்திட்டுப் போற மாதிரி சொல்லும்…’’
அமைதியின் முழு வடிவில் பேசுகிறார் இயக்குநர்
ராதாமோகன்,
‘மொழி’யின் வழி ஆழப் பதிந்தவர்.

‘பிருந்தாவனம்’ –
உங்கள் இயல்புக்கேற்ப மென்மையாக இருக்கு…
எனக்கு உணர்வுகள் பேசப்படணும். பெயருக்கேற்ற மாதிரி
ஒரு சந்தோஷம், மன உணர்வு கிளரும். வேகமாகிவிட்ட
வாழ்க்கையில் நமக்கான ஆறுதலுக்கும், புரிதலுக்கும்
ஏங்கி நிற்குது நமது இருப்பு. இதிலும் அப்படித்தான்.

அருள்நிதி முடிதிருத்தும் கலைஞராக வருகிறார்.
வாய் பேச, காது கேட்க முடியாதவர்.
-
‘‘என்னை சீண்டாத எதையும் சினிமாவாக எடுப்பதில்லை…’’ . FntZfNneTjCMaCNmj3NT+28a

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 13, 2017 7:07 am

எளியவர்களிடம் ததும்பும் ஒரு பிரியம் இருக்கும்
இல்லையா, அது இருக்கிற ஆள். நாடோடி மாதிரி,
தாயும் தகப்பனும் இல்லாமலேயே சந்தோஷமாக
வாழ முடிகிற அற்புதன்.

அவர் நடிகர் விவேக்கோட ரசிகர். உணர முடியாமலேயே
அவர் சினிமா சேட்டைகளில் மயங்கின ஆள். ஊட்டியில்
விவேக்கோட ஓர் எதிர்பாராத சந்திப்பு நடக்குது.

தனக்கு இப்படியொரு ரசிகரான்னு விவேக் ஆச்சர்யத்தில்
மூழ்க, நட்பு அடுத்த கட்டத்திற்கு போகுது. அருள்நிதிக்கு
இருக்கிற மாற்றுக் குறைவினால் கைவசப்படாத
பிரியங்கள், அவரோட பெண் நட்புன்னு கதை போகுது.

உடனே ‘மொழி’ ஜோதிகா ஞாபகம் வரவேண்டாம்.
இது ஜோதிகாவின் மாற்று இல்லை.
-
‘‘என்னை சீண்டாத எதையும் சினிமாவாக எடுப்பதில்லை…’’ . TfVeaavqQLqXZWwiEiz7+28a

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 13, 2017 7:07 am

அதில் ஜோ தைரியமான, படித்த, தனக்கென பிடிவாதமான கொள்கைகள் உள்ள பொண்ணு. இதில் அருள்நிதி பாமரன், பிரியம் தேடுறவர், நிராகரிக்கப்பட்டு, புறம் தள்ளப்பட்ட எளிய மனிதன். அன்புன்னா அன்பு… கோபம்னா கோபம். ஒண்ணுக்குள்ள ஒண்ணு ஒளிஞ்சு நின்னு குரோதம் பார்க்காத மனுஷன். இப்படியொரு மனுஷனைக் கண்டறிய தவறி இருக்கோமேன்னு ஒவ்வொருத்தருக்கும் எண்ணம் எழும். அதற்கான இடங்கள் படத்தில் தொடர்ச்சியாக வருது.

இந்தப் படத்தில் அருள்நிதி வந்தது எப்படி..?
இரண்டு பேரும் எப்ப சந்தித்தாலும் சேர்ந்து படம் ெசய்யணும்னு பேசிக்கிட்டே இருப்போம். இந்தக் கதை மனதில் இருந்தபோதும் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. எப்பவும் அருள்நிதியின் அந்த கம்பீர உயரத்திற்குப் பின்னாடி, அவரோட சிரிப்பில ஒரு இன்னொசென்ஸ் இருக்கும். பணிவும் இருக்கும். இதை யாரும் பயன்படுத்தலைன்னு தோணுச்சு.

இந்தக் கதையை அவர்கிட்டே சொன்னதும், ‘ஆஹா’னு சம்மதிச்சார். அதோட நிற்காமல் வாய் பேச முடியாதவர்களின் பேச்சு அறிதலைத் தெரிந்துகொண்டார். விடாத ஒரு மாதப்பயிற்சி. அது கூடவே ஷூட்டின்போது அந்த மொழி தெரிந்தவர்களையும் பக்கத்தில் வைத்துக் கொண்டார். அவர் எடுத்துக்கொண்ட அக்கறையில் அந்த கேரக்டர் இன்னும் துலங்கியது. வெறும் பாவனைகளில் நடிப்பைக் கொண்டு வருவது சவால் நிரம்பியது. அதை அழகா எடுத்து செய்திருக்கார் அருள்.

ஹீரோயின்களுக்கு உங்கள் படத்தில் நல்ல இடம் இருக்கு…
அப்படித்தானே இருக்கணும்? அதெல்லாம் சிறப்பு இயல்பா என்ன… ரவிச்சந்திரனின் பேத்தி தான்யாதான் கதைநாயகி. ஆபீஸுக்கு வரவழைச்சு, ஒரு பயிற்சி மாதிரி கொடுத்து, படத்திற்குள்ளே அவங்களை கொண்டு வந்தோம். ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டில் வெகு இயல்பாக அருமையாக பொருந்திட்டாங்க. அந்த வகையில் அவங்க புதுமுகம்னு யாரும் கண்டுபிடிக்கவே முடியாது.

அவ்வளவு சிறப்பு. ஏதோ வந்திட்டு போற மாதிரி, வெறும் பாடலுக்கான பெண் மாதிரியான படைப்பல்ல. அவங்களுக்கான நல்ல இடம் இருக்கு. எனக்கு எப்பவும் பெண்களை சித்தரிக்கும்போது அதிகம் கவனம் இருக்கும். அவங்க போகப்பொருள் அல்ல. உணர்ச்சிகளோடும், வலிகளோடும் வாழ்ந்துகொண்டு இருக்கிற சக ஜீவன்தான். அதை நான் புரிந்துகொண்ட மாதிரி, பூமியில் எல்லோரும் புரிஞ்சுக்கணும் என்பது என் ஆசை. அது என் படங்களில் ஊடாடி தொடர்ந்து வந்துகொண்டே இருப்பது உண்மைதான்.

விவேக் – விவேக்காகவே வருவது…
இந்தக் கதையை அவர்கிட்டே சொன்னதும் சந்தோஷமாகிட்டார். ‘எனக்கான பிரத்யேகமான இடங்கள் இருக்கு’ன்னு சொன்னார். அவருடைய நகைச்சுவை மட்டுமல்ல, பிறகான அவருடைய நல்ல பக்கங்களும் திறக்கப்படுகிறது. அவர் அனுபவித்து நடித்தார். அவரும், அருள்நிதியும் அன்பைப் பரிமாறிக் கொள்கிற இடங்கள் நல்லாயிருக்கும்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 13, 2017 7:08 am


அப்புறம் எனது ஆஸ்தான நடிகர் எம்.எஸ். பாஸ்கரும் வருகிறார். இன்னிக்கு அவருக்கு பெரும் பாராட்டுகள் வந்து சேர்கிற இடத்தில் இருக்கார். அவர்கிட்டே நீங்க எஸ்.வி.ரங்காராவ் மாதிரியான இடத்தை சுலபமாக முயற்சி இல்லாமல் கைப்பற்ற முடியும்னு சொல்லியிருக்கேன். ஒரு நல்ல படம், பார்க்கிற அனுபவத்தோட முடிஞ்சிடக்கூடாது. அது பார்க்கிறவர் மனதில் தொடர்ந்து வளரணும். மற்றவர்களை நோக்கி ஒரு புன்னகை, ஒரு கையசைப்பு, ஒரு கைபற்றுதல்கூட இல்லாமப் போயிடுச்சேன்னு ஏக்கம் சேர்ந்ததுகூட இந்தப் படம்.
-
மியூசிக்…
விஷால் சந்திரசேகர். இன்னும் கொஞ்ச நாட்களில் ஒரு தெளிவான இடத்திற்கு வந்து நிற்பார் பாருங்க. மூணு பாடல்கள்தான். வகையான இடத்தில் மட்டுமே இருக்கு. பி.சி.ஸ்ரீராம் அசோசியேட் விவேகானந்தன் முதல் தடவையாக தனித்து செய்கிறார். பயின்று வந்த இடத்தின் பக்குவம், நேர்த்தி, அழகு, கச்சிதம் தெரியுது. எனக்கு சினிமா வெறும் பொழுதுபோக்கு இல்லை. இந்தப்படம் பார்க்கும்போது போகிற போக்கில் உணர்த்து கிற செய்திகள் அதைச் சொல்லும். பயன்பாடான பொழுதுபோக்குக்கு பிருந்தாவனம் நிச்சயம் கியாரண்டி.

-நா. கதிர்வேலன்
குங்குமம்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat May 13, 2017 6:50 pm

:நல்வரவு: :நல்வரவு: புன்னகை புன்னகை



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக