புதிய பதிவுகள்
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_c10அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_m10அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_c10 
64 Posts - 44%
ayyasamy ram
அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_c10அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_m10அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_c10 
48 Posts - 33%
i6appar
அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_c10அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_m10அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_c10அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_m10அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_c10 
6 Posts - 4%
Anthony raj
அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_c10அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_m10அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_c10அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_m10அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_c10அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_m10அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_c10 
4 Posts - 3%
Guna.D
அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_c10அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_m10அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_c10அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_m10அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_c10அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_m10அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_c10 
64 Posts - 44%
ayyasamy ram
அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_c10அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_m10அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_c10 
48 Posts - 33%
i6appar
அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_c10அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_m10அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_c10அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_m10அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_c10 
6 Posts - 4%
Anthony raj
அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_c10அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_m10அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_c10அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_m10அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_c10அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_m10அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_c10 
4 Posts - 3%
Guna.D
அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_c10அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_m10அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_c10அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_m10அந்தநாள் ஞாபகம்  - வீடுகளும் உறவுகளும்!      Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தநாள் ஞாபகம் - வீடுகளும் உறவுகளும்!


   
   
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Thu May 11, 2017 11:16 am

அந்தநாள் ஞாபகம் - வீடுகளும் உறவுகளும்! - பா.வெ.

தபால்காரர் கண்ணில் பட தவறிய
தனிக்குடும்பம் ஏதும்
புதிதாய் ஊருக்குள்
புகுவதில்லை!

வாழையடி வாழையாய்
வாழ்ந்த வீடுகள்
வரிசையாய் நின்று தெரு போக
வழிவிடும்!

அனேக வீடுகள்
அரைவட்ட வாசலுடன்
வெயில் தாங்கும் ஓடுகளையும்
குளிர் வாங்கும் கூரைகளையும்
அணிந்து நிற்கும்!

சாணக் குளியல் போடும்
சகதியற்ற வாசல்களில்
காற்றில் திரியும்
கணக்கற்ற கிருமிகள் கூட
காணாமல் போகும்!

மக்களின் விருந்தோம்பலை
மாக்கோலம் தின்னும்
எறும்புகளும் எண்ணும்!
வாசலில் தொடங்கும்
விருந்தோம்பல்
கொல்லைப்புற காக்கை வரை
கொண்டுபோய் விடும்!

வாசலில் விசாலமாய் பூத்த
தெளிந்த புள்ளிகள் தழுவி
தெரிந்தே விழுந்த சிக்கல் -
அழகிய சிக்கு கோலங்கள்!

சிக்கல் விழுந்த கோலங்களில்
சிக்கித் தவிக்கும் வாசல்கள்
சிறிதும் வெளிவர துடிப்பதில்லை -
சிதையாத கோல அழகில்!

வாசலில் இறைத்த கோல அழகு
வரிசையாய் உயரும்
படிகளின் மீதும்
படிந்திருக்கும்!

வாசலில் பதித்த
வரைகலையை மதித்த விழிகள்
வழி தவறி மிதித்த
வரலாறு சிக்கியதில்லை
கோலங்களில்!

தெளிவாய் இழைத்த
தேக்கு மர தூண்கள்
திண்ணை தோறும்
திரண்டு நிற்கும்!

அக்கம் பக்கத்தினர்
அமர்ந்து பேச
அந்தி வேளைகளில்
அரட்டை நீள
அமர்களமாகும் அனேக
திண்ணைகள்!

கூரை முனையில் முளைத்த
கூடை சுமந்த குண்டு பல்பின்
கூசாத ஒளிக்கீற்று
இரவு பொழியும் இருள் மீது
இதமான மஞ்சள் பூசும்!
இரவெல்லாம் பகல் பேசும்!

விழாக்கால வழிபோக்கரும்
வேண்டுதல் நிறைவேற்ற
வெகுதூரம் நடக்கும் பக்தரும்
வேண்டிய நேரம் இளைப்பாற
வெகுநேரம் இடம் தரும்
திண்ணைகள்!

திண்ணை நிலை அருகில்
தெளிவாய் குடைந்த மாடங்கள்
அந்தி நேர தீபங்களை
அணையாமல் ஏந்தி நிற்கும்!

மின்கம்பம் நடாத
மின்சாரம் தொடாத
இரவு பயணங்களில்
மாட விளக்குகளின்
மங்கிய ஒளிகளில்
மீண்டன வழிகள்!

கனமாய் இழைத்த
கதவுகளின் காதுகளில்
கடின வளையங்கள்
கவனமாய் தாழிடும்!

வீட்டின் நடுவே
விளைந்த முற்றத்தில்
காற்றும் ஒளியும்
கடை போட மறுப்பதில்லை!

வெயிலும் மழையும்
வீட்டை தழுவ
முற்றத்தில் முயன்று
தோற்கும்!

இரவு வானம்
இறைத்த விண்மீன்களை
முற்றம் மெல்ல
அள்ள பார்க்கும்!

வடகம் தின்ற வெயிலை
விரட்ட தெரியாத
வெள்ளந்தி முற்றம்
வீட்டுக்குள் விட்டு விடும்!

அடுக்களை மேடையின் கீழ்
அடுக்கிய விறகு இடுக்கில்
அனுபவித்து உறங்கும்
அழகான பூனைக்குட்டி ஒன்று!

வெள்ளிதோறும் வீடு அலசி
விறகு நிறைத்த சாம்பல் நீக்கி
சாண மொழுகலும் கோலமும்
சூடிய அடுப்புக்கொண்டையில்
சுவையாக தொடங்கும்
பசியின் பொறுமை!

கோடை வீசும்
கொடூர க(கா)னல் மீது
குளிராடை போர்த்தும்
கொல்லைப்புற கிணற்று நீர்!

மா, பலா,வாழை,தென்னை,
கொய்யா,எலுமிச்சை என
கொல்லை கொஞ்சம்
கொழுத்திருக்கும்!

அடுத்த வீட்டு கீரை விதைப்பினை
அடுத்தடுத்து சரி பார்க்கும் கோழி
அடிவாங்காத குறையாய்
ஓடி வரும்!

நலமாய் பசு ஈன்ற
நாட்டு கன்றுக்குட்டி
துள்ளித் திரியும் அழகை
துரத்தித் திரியும்
தும்புக் கயிறு!

வீட்டுத்தேவை குடிக்காத பாலை
வீடு தேடி விரும்பிக் குடிக்கவே
பால்காரர் வண்டி கலன்
பெரும்பாலும் வாய் திறக்கும்!

காளையோடு இணை சேர
களைத்த வயலில் எரு சேர
கணக்கெடுத்து விடப்பட்ட
கிடைய மாட்டு மந்தையில்
நம் வீட்டு பசுவை தேடும் கண்களில்
நாளும் மகிழ்ச்சிதான்!

ஊர் சென்று வீடு திரும்பும்
உடையவரை கண்டு
உள்ளன்பில் வாலாட்டி அழும்
நாட்டு நாய்கள்...
பழைய சோற்றில் கூட
பசியாறும்!

“சிசேரியன்” என்ற வார்த்தை
சிறிதும் மனதை கீறாத
நாட்கள் அவை!

வீட்டு வேலைகளே
வீட்டில் தந்த
சுலபமான சுகப்பிரசவம் -
சுப ஜனனம்!

அழுதாலும் சிரித்தாலும்
அனைவரும் கூடும் அழகு
குழந்தையுடன் கூட வந்த
முதல் சொத்து!

காது குத்த மடி கொடுக்கவும்
காலத்தில் பருவமடைந்தால்
பச்சைக்கீற்று பின்னவும்
முதலும் கடைசியுமாய் –
தாய்மாமன்!

“தாய்”மாமன் - சிலநேரம்
முதலிரு எழுத்துகள் சேர்ந்து
குழந்தையை வளர்ப்பதும் உண்டு!

உறவுகள் கூடி வாழ்ந்த
உறைவிடத்தில்
இல்லுறை இறை கூட
மகிழ்வாய் உறையும்!

அப்பா, அம்மா,
தாத்தா , பாட்டி,
பெரியப்பா,பெரியம்மா,
சித்தப்பா,சித்தி,
அத்தை, மாமா,
அண்ணன்,தம்பி,
அக்காள்,தங்கை –
முழு நிறைவில் வீடு...
முழுமை பெறாத
குழந்தை அழுகை...!

பசி மறந்து சோறூட்டும் அன்னை,
பகல் இரவாய் பாடுபடும் தந்தை,
கடை செல்ல தோளில் சுமக்கும் தாத்தா,
காதோரம் கதை சொல்லும் பாட்டி,
கருவிலேயே மணமுடிக்கும் அத்தை-மாமா,
விளையாட்டில் சேர்த்துக்கொள்ள
வெளியில் சண்டையிடும் அண்ணன்,
வீம்பாய் பொம்மை பிடுங்கும் தம்பி,
அடிக்கடி பரிந்து பேசும் அக்காள்,
அன்போடு தின்பண்டம் பகிரும் தங்கை –
இவர்கள் மத்தியில் என்றும்
இன்னொரு முறை குழந்தையாய்...!


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 11, 2017 3:07 pm

நல்ல கவிதை... படிக்கும் போதே பின்னோக்கி சென்று வாழமாட்டோமா என ஏக்கம் வருகிறது

அந்தக் காலத்தில வாழ்ந்தவர்கள் எல்லாம் வரம் வாங்கி வந்து வாழ்ந்தவர்கள் ...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Thu May 11, 2017 3:32 pm

மிக்க நன்றி ! உண்மைதான்...



எண்ணம் போல் வாழ்வு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக