புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாணவன் எப்படி இருக்க வேண்டும் என சாக்ரடீஸ் சொல்வதை கேளுங்கள் !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மாணவன் எப்படி இருக்க வேண்டும் என சாக்ரடீஸ் சொல்வதை கேளுங்கள் !
சாக்ரடீஸிடம் ஒரு மாணவன் வந்தான்.
”ஐயா, மாணவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்?” என்று கேட்டான்.
அதற்கு சாக்ரடீஸ், ”மாணவன் என்பவன், கொக்கைப்போல இருக்க வேண்டும்.
கோழியைப் போல இருக்க
வேண்டும்.
உப்பைப் போல இருக்க வேண்டும்.
உன்னைப்போல இருக்க வேண்டும்” என்றார்.
மாணவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
”கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்” என்றான்.
”கொக்கு, ஒற்றைக் காலில் நீண்டநேரம் பொறுமையாக நிற்கும்.
மீன்கள் வந்தவுடன் விரைந்து செயல்பட்டுப் பிடித்துவிடும்.
அதுபோல, ஒரு மாணவன் சரியான வாய்ப்புக் கிடைக்கும்போது அதைப் பயன்படுத்தி, அரிய செயல்களைச் செய்ய வேண்டும்” என்றார்.
”கோழியைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே அதற்கு என்ன அர்த்தம்?” என்று கேட்டான் மாணவன்.
”கோழி என்ன செய்யும்?
குப்பையைக் கிளறும்.
ஆனால், அந்தக் குப்பைகளை விட்டுவிட்டு தனக்குத் தேவையான உணவை மட்டும் எடுத்துக்கொள்ளும்.
அதுபோல, மாணவர்கள் தாம் சந்திக்கும் தீமைகளைத் தூரம் தள்ளி, நன்மைகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார் சாக்ரடீஸ்.
”அடுத்தது, உப்பைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே…”
”ஆமாம்.
உப்பை எந்த உணவோடு கலக்கினாலும், அது இருக்கிறது என்று கூற முடியும்.
ஆனால், கலக்கிய உணவில் உப்பு கண்ணுக்குத் தெரியாது.
அதன் சுவையை மட்டுமே உணர முடியும்.
அதுபோல, மாணவர்கள் எந்தத் துறையில் இறங்கினாலும் அதில் சிறப்பான தனித்தன்மையை வெளிப்படுத்தி, தனது மறைவுக்குப் பின்னும் அதை இவர்தான் செய்தார் என்று கூறும்படி விளங்க வேண்டும்” என்றார்.
”எல்லாம் சரி, உன்னைப் போல இருக்க வேண்டும் என்றீர்களே… அதற்கு என்ன அர்த்தம்?” என்று கேட்டான்.
”மாணவன் என்பவன் தனக்குள் எழக்கூடிய சந்தேகங்களை, எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும்.
அதற்காகத்தான் உன்னைப்போல இருக்க வேண்டும் எனச் சொன்னேன்” என்று புன்னகைத்தார் சாக்ரடீஸ்.
நன்றி whatsup!
சாக்ரடீஸிடம் ஒரு மாணவன் வந்தான்.
”ஐயா, மாணவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்?” என்று கேட்டான்.
அதற்கு சாக்ரடீஸ், ”மாணவன் என்பவன், கொக்கைப்போல இருக்க வேண்டும்.
கோழியைப் போல இருக்க
வேண்டும்.
உப்பைப் போல இருக்க வேண்டும்.
உன்னைப்போல இருக்க வேண்டும்” என்றார்.
மாணவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
”கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்” என்றான்.
”கொக்கு, ஒற்றைக் காலில் நீண்டநேரம் பொறுமையாக நிற்கும்.
மீன்கள் வந்தவுடன் விரைந்து செயல்பட்டுப் பிடித்துவிடும்.
அதுபோல, ஒரு மாணவன் சரியான வாய்ப்புக் கிடைக்கும்போது அதைப் பயன்படுத்தி, அரிய செயல்களைச் செய்ய வேண்டும்” என்றார்.
”கோழியைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே அதற்கு என்ன அர்த்தம்?” என்று கேட்டான் மாணவன்.
”கோழி என்ன செய்யும்?
குப்பையைக் கிளறும்.
ஆனால், அந்தக் குப்பைகளை விட்டுவிட்டு தனக்குத் தேவையான உணவை மட்டும் எடுத்துக்கொள்ளும்.
அதுபோல, மாணவர்கள் தாம் சந்திக்கும் தீமைகளைத் தூரம் தள்ளி, நன்மைகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார் சாக்ரடீஸ்.
”அடுத்தது, உப்பைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே…”
”ஆமாம்.
உப்பை எந்த உணவோடு கலக்கினாலும், அது இருக்கிறது என்று கூற முடியும்.
ஆனால், கலக்கிய உணவில் உப்பு கண்ணுக்குத் தெரியாது.
அதன் சுவையை மட்டுமே உணர முடியும்.
அதுபோல, மாணவர்கள் எந்தத் துறையில் இறங்கினாலும் அதில் சிறப்பான தனித்தன்மையை வெளிப்படுத்தி, தனது மறைவுக்குப் பின்னும் அதை இவர்தான் செய்தார் என்று கூறும்படி விளங்க வேண்டும்” என்றார்.
”எல்லாம் சரி, உன்னைப் போல இருக்க வேண்டும் என்றீர்களே… அதற்கு என்ன அர்த்தம்?” என்று கேட்டான்.
”மாணவன் என்பவன் தனக்குள் எழக்கூடிய சந்தேகங்களை, எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும்.
அதற்காகத்தான் உன்னைப்போல இருக்க வேண்டும் எனச் சொன்னேன்” என்று புன்னகைத்தார் சாக்ரடீஸ்.
நன்றி whatsup!
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஒரு மாணவன் எப்படி இருக்கவேண்டும் என்பதை சாக்ரடீஸைவிட , நம்முடைய நன்னூல் ஆசிரியர் பவநந்தியார் மிகவும் அழகாகச் சொல்லுகிறார் .
அன்ன மாவே - தலை மாணவனுக்கு இலக்கணம் .
அன்னம் , ஆ என்று இதைப் பிரிக்கவேண்டும் .
அன்னம் பாலையும் தண்ணீரையும் பிரித்து அருந்தும் இயல்பு உடையது. அது போல சிறந்த மாணவர்கள் தேவை இல்லாததை விட்டு விட்டு தேவையானதை படிப்பார்கள்.
பசு, புல் கண்ட இடத்தில் வயறு முட்ட வேகமாக நிரப்பிக் கொண்டு,பின் ஆற அமர அசை போடும். அது போல சிறந்த மாணவர்கள் நல்ல ஆசிரியனையோ , புத்தகத்தையோ கண்டால் வேகமாக முடிந்த வரை அறிவை பெற்றுக் கொண்டு பின் தனிமையில் அதைப் பற்றி ஆராய்ந்து,சிந்தித்து தெளிவு பெறுவான்.
இது இரண்டும் முதல் தரமான மாணவனின் இலக்கணம்.
மண்ணோடு கிளியே - இடை மாணவனுக்கு இலக்கணம்.
மண் என்றால் நிலம் .
ஒரு உழவன் எவ்வளவு பாடு படுகிறானோ அந்த அளவுக்கு நிலம் பலன் தரும். அது போல இடை மாணவன், ஒரு ஆசிரியர் எவ்வளவு கஷ்டப் பட்டு சொல்லித் தருகிறாரோ அந்த அளவு அவனும் படிப்பான்.அதுக்கு மேல படிக்க மாட்டான். பாட நூலில் எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவு தான் படிப்பான். மேற்கொண்டு படிப்பது எல்லாம் கிடையாது.
கிளி சொன்னதை திருப்பிச் சொல்லும். அது போல இடை மாணவன் ஆசிரியர் சொன்னதை அப்படியே வாங்கி , மனப்பாடம் பண்ணி மீண்டும் ஒப்பிப்பான். அவ்வளவுதான்.
இந்த இரண்டும் இடை மாணவனுக்கு இலக்கணம்.
இல்லிக் குடமா டெருமை நெய்யரி - கடை மாணவர்
இதை இல்லிக்குடம் , ஆடு , எருமை , நெய்யரி என்று பிரிக்கவேண்டும் .
இல்லிக் குடம் என்றால் உடைந்த குடம். அதில் எவ்வளவு நீர் விட்டாலும் நிறையாது. நீர் வெளியேறிக் .கொண்டே இருக்கும். கடை மாணவனுக்கு எவ்வளவு சொல்லித் தந்தாலும் மண்டையில் ஒன்றும் நிற்காது.மறந்து போவான்.
ஆடு - ஒரு செடியிலும் முழுவதும் தின்னாது. ஒவ்வொரு செடியிலும் கொஞ்சம் கொஞ்சமாக தின்னும். எல்லா செடியிலும் வாய் வைக்கும். ஒன்றையும் முழுமையாக உண்ணாது.அது போல கடை மாணவன் ஒன்றையும் ஒழுங்காகப் படிக்க மாட்டான். இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம்.... இந்த ஆசிரியனிடம் கொஞ்சம் அந்த ஆசிரியனிடம் கொஞ்சம் என்று உருப்படியாக ஒன்றும் படிக்க மாட்டான்.
எருமை - குளத்தில் நீர் தெளிவாக இருந்தாலும் அது குளத்தில் இறங்கி, அதை கலக்கி சேறும் நீருமாக சேர்ந்து குடிக்கும். அன்னம் நீரை விலக்கி பாலை மட்டும் குடிக்கும். எருமையோ தெளிந்த நீரோடு சேற்றையும் சேர்த்து குடிக்கும்.
நெய்யரி என்பது வடி கட்ட உபயோகப் படுத்தும் துணி. வடிகட்டும் துணி நல்லதை எல்லாம் விட்டு விட்டு கசடை தன்னுள் தக்க வைத்துக் கொள்ளும். அது போல, கடை மாணவன், நல்லதை எல்லாம் விட்டு விட்டு, தேவை இல்லாததை பிடித்து வைத்துக் கொள்வான்.
அன்ன மாவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடமா டெருமை நெய்யரி
அன்னர் தலையிடை கடைமா ணாக்கர்.
எவ்வளவு அருமையான பாடல் !
இது தவிர தலை மாணவனுக்குக் கற்பூரத்தையும் ,
இடைப்பட்ட மாணவனுக்குக் கரித்துண்டையும் ,
கடைநிலை மாணவனுக்கு வாழைத் தண்டையும்
எடுத்துக்காட்டாகக் கூறுவார்கள் .
அன்ன மாவே - தலை மாணவனுக்கு இலக்கணம் .
அன்னம் , ஆ என்று இதைப் பிரிக்கவேண்டும் .
அன்னம் பாலையும் தண்ணீரையும் பிரித்து அருந்தும் இயல்பு உடையது. அது போல சிறந்த மாணவர்கள் தேவை இல்லாததை விட்டு விட்டு தேவையானதை படிப்பார்கள்.
பசு, புல் கண்ட இடத்தில் வயறு முட்ட வேகமாக நிரப்பிக் கொண்டு,பின் ஆற அமர அசை போடும். அது போல சிறந்த மாணவர்கள் நல்ல ஆசிரியனையோ , புத்தகத்தையோ கண்டால் வேகமாக முடிந்த வரை அறிவை பெற்றுக் கொண்டு பின் தனிமையில் அதைப் பற்றி ஆராய்ந்து,சிந்தித்து தெளிவு பெறுவான்.
இது இரண்டும் முதல் தரமான மாணவனின் இலக்கணம்.
மண்ணோடு கிளியே - இடை மாணவனுக்கு இலக்கணம்.
மண் என்றால் நிலம் .
ஒரு உழவன் எவ்வளவு பாடு படுகிறானோ அந்த அளவுக்கு நிலம் பலன் தரும். அது போல இடை மாணவன், ஒரு ஆசிரியர் எவ்வளவு கஷ்டப் பட்டு சொல்லித் தருகிறாரோ அந்த அளவு அவனும் படிப்பான்.அதுக்கு மேல படிக்க மாட்டான். பாட நூலில் எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவு தான் படிப்பான். மேற்கொண்டு படிப்பது எல்லாம் கிடையாது.
கிளி சொன்னதை திருப்பிச் சொல்லும். அது போல இடை மாணவன் ஆசிரியர் சொன்னதை அப்படியே வாங்கி , மனப்பாடம் பண்ணி மீண்டும் ஒப்பிப்பான். அவ்வளவுதான்.
இந்த இரண்டும் இடை மாணவனுக்கு இலக்கணம்.
இல்லிக் குடமா டெருமை நெய்யரி - கடை மாணவர்
இதை இல்லிக்குடம் , ஆடு , எருமை , நெய்யரி என்று பிரிக்கவேண்டும் .
இல்லிக் குடம் என்றால் உடைந்த குடம். அதில் எவ்வளவு நீர் விட்டாலும் நிறையாது. நீர் வெளியேறிக் .கொண்டே இருக்கும். கடை மாணவனுக்கு எவ்வளவு சொல்லித் தந்தாலும் மண்டையில் ஒன்றும் நிற்காது.மறந்து போவான்.
ஆடு - ஒரு செடியிலும் முழுவதும் தின்னாது. ஒவ்வொரு செடியிலும் கொஞ்சம் கொஞ்சமாக தின்னும். எல்லா செடியிலும் வாய் வைக்கும். ஒன்றையும் முழுமையாக உண்ணாது.அது போல கடை மாணவன் ஒன்றையும் ஒழுங்காகப் படிக்க மாட்டான். இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம்.... இந்த ஆசிரியனிடம் கொஞ்சம் அந்த ஆசிரியனிடம் கொஞ்சம் என்று உருப்படியாக ஒன்றும் படிக்க மாட்டான்.
எருமை - குளத்தில் நீர் தெளிவாக இருந்தாலும் அது குளத்தில் இறங்கி, அதை கலக்கி சேறும் நீருமாக சேர்ந்து குடிக்கும். அன்னம் நீரை விலக்கி பாலை மட்டும் குடிக்கும். எருமையோ தெளிந்த நீரோடு சேற்றையும் சேர்த்து குடிக்கும்.
நெய்யரி என்பது வடி கட்ட உபயோகப் படுத்தும் துணி. வடிகட்டும் துணி நல்லதை எல்லாம் விட்டு விட்டு கசடை தன்னுள் தக்க வைத்துக் கொள்ளும். அது போல, கடை மாணவன், நல்லதை எல்லாம் விட்டு விட்டு, தேவை இல்லாததை பிடித்து வைத்துக் கொள்வான்.
அன்ன மாவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடமா டெருமை நெய்யரி
அன்னர் தலையிடை கடைமா ணாக்கர்.
எவ்வளவு அருமையான பாடல் !
இது தவிர தலை மாணவனுக்குக் கற்பூரத்தையும் ,
இடைப்பட்ட மாணவனுக்குக் கரித்துண்டையும் ,
கடைநிலை மாணவனுக்கு வாழைத் தண்டையும்
எடுத்துக்காட்டாகக் கூறுவார்கள் .
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மிக்க நன்றி ஐயா, விரிவான விளக்கமான பதிவு ! .............இப்போது தான் மூர்த்தி இன் பதிவுக்கு பதில் போட்டேன், நிறைய பேசுவதில்லை , கற்பது இல்லை என்று ....உடனே ஒரு அருமையான பதிவை பார்த்துவிட்டேன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|