புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிரடியான 50 அறிவிப்புகள்!   Poll_c10அதிரடியான 50 அறிவிப்புகள்!   Poll_m10அதிரடியான 50 அறிவிப்புகள்!   Poll_c10 
91 Posts - 62%
heezulia
அதிரடியான 50 அறிவிப்புகள்!   Poll_c10அதிரடியான 50 அறிவிப்புகள்!   Poll_m10அதிரடியான 50 அறிவிப்புகள்!   Poll_c10 
36 Posts - 25%
வேல்முருகன் காசி
அதிரடியான 50 அறிவிப்புகள்!   Poll_c10அதிரடியான 50 அறிவிப்புகள்!   Poll_m10அதிரடியான 50 அறிவிப்புகள்!   Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அதிரடியான 50 அறிவிப்புகள்!   Poll_c10அதிரடியான 50 அறிவிப்புகள்!   Poll_m10அதிரடியான 50 அறிவிப்புகள்!   Poll_c10 
6 Posts - 4%
viyasan
அதிரடியான 50 அறிவிப்புகள்!   Poll_c10அதிரடியான 50 அறிவிப்புகள்!   Poll_m10அதிரடியான 50 அறிவிப்புகள்!   Poll_c10 
1 Post - 1%
eraeravi
அதிரடியான 50 அறிவிப்புகள்!   Poll_c10அதிரடியான 50 அறிவிப்புகள்!   Poll_m10அதிரடியான 50 அறிவிப்புகள்!   Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
அதிரடியான 50 அறிவிப்புகள்!   Poll_c10அதிரடியான 50 அறிவிப்புகள்!   Poll_m10அதிரடியான 50 அறிவிப்புகள்!   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிரடியான 50 அறிவிப்புகள்!   Poll_c10அதிரடியான 50 அறிவிப்புகள்!   Poll_m10அதிரடியான 50 அறிவிப்புகள்!   Poll_c10 
283 Posts - 45%
heezulia
அதிரடியான 50 அறிவிப்புகள்!   Poll_c10அதிரடியான 50 அறிவிப்புகள்!   Poll_m10அதிரடியான 50 அறிவிப்புகள்!   Poll_c10 
233 Posts - 37%
mohamed nizamudeen
அதிரடியான 50 அறிவிப்புகள்!   Poll_c10அதிரடியான 50 அறிவிப்புகள்!   Poll_m10அதிரடியான 50 அறிவிப்புகள்!   Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
அதிரடியான 50 அறிவிப்புகள்!   Poll_c10அதிரடியான 50 அறிவிப்புகள்!   Poll_m10அதிரடியான 50 அறிவிப்புகள்!   Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அதிரடியான 50 அறிவிப்புகள்!   Poll_c10அதிரடியான 50 அறிவிப்புகள்!   Poll_m10அதிரடியான 50 அறிவிப்புகள்!   Poll_c10 
19 Posts - 3%
prajai
அதிரடியான 50 அறிவிப்புகள்!   Poll_c10அதிரடியான 50 அறிவிப்புகள்!   Poll_m10அதிரடியான 50 அறிவிப்புகள்!   Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அதிரடியான 50 அறிவிப்புகள்!   Poll_c10அதிரடியான 50 அறிவிப்புகள்!   Poll_m10அதிரடியான 50 அறிவிப்புகள்!   Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அதிரடியான 50 அறிவிப்புகள்!   Poll_c10அதிரடியான 50 அறிவிப்புகள்!   Poll_m10அதிரடியான 50 அறிவிப்புகள்!   Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அதிரடியான 50 அறிவிப்புகள்!   Poll_c10அதிரடியான 50 அறிவிப்புகள்!   Poll_m10அதிரடியான 50 அறிவிப்புகள்!   Poll_c10 
7 Posts - 1%
mruthun
அதிரடியான 50 அறிவிப்புகள்!   Poll_c10அதிரடியான 50 அறிவிப்புகள்!   Poll_m10அதிரடியான 50 அறிவிப்புகள்!   Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிரடியான 50 அறிவிப்புகள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 27, 2017 9:13 pm

முதல்வர் யோகி ஆதித்யநாத், 50 அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.
இந்த அறிவிப்புகள் குறித்த விவாதங்கள் மாநிலம் முழுவதும் பலமாக
விவாதிக்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் கூடும் இடங்களில் கூட இந்த அறிவிப்புகள் பற்றி பட்டிமன்றம்
நடத்தாத குறையாக விவாதங்கள் நடக்கின்றன.

அந்த அறிவிப்புகள் இதோ...


ஆதித்யநாத்1. இந்துக்கள் புனிதப் பயணமாகச் செல்லும் கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு இதுவரை 50,000 ரூபாய் மானியம் வழங்கப்பட்டுவந்தது. அந்தத் தொகை இனிமேல் ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.  

2. உத்தரப்பிரதேச மாநில நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. அந்த சாலைகள் அனைத்தும் செப்பனிடப்படும். மாநிலம் முழுவதும் உள்ள சாலைகள் வரும் ஜூன் 15&ம் தேதிக்குள் போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் குழிகள் அற்றதாக மாற்றி அமைக்கப்படும்.

3. பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு சாலைகளிலும் போக்குவரத்தின்போதும் சாலையோர ரோமியோக்களால் பெரும் சிரமங்கள் ஏற்படுகின்றன. அதனால் இந்த ரோமியோக்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க சிறப்பு காவல்படை அமைக்கப்படும்.

4. பெண்களைப் பாதிக்கும் ஈவ்&டீசிங் செயல் நடைபெற்றால் அல்லது இது தொடர்பான புகார் ஏதேனும் வருமானால், அதற்கு அந்தப் பகுதியில் உள்ள அதிகாரியே பொறுப்பேற்க வேண்டும். தொடர்ந்து அவர் மீது துறை ரீதியில£ன நடவடிக்கையும் எடுக்கப்படும்.

5. ஒருமித்த கருத்து கொண்ட ஆணும் பெண்ணும் பொது இடத்தில் அமர்ந்து இருந்தால் அவர்கள் மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள்.

6. காவல் நிலையத்துக்கு புகார் செய்ய வருபவர்களின் மனுவைப் பெற்றுக் கொண்டு காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக உடனடியாக முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்ய வேண்டும்.

7. உத்தரப்பிரதேச காவல்நிலையங்களுக்கு வரக்கூடிய சாமான்ய மக்களிடம் காவலர்கள்பொறுப்பு உணர்வுடன் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும்.

8. காவல்நிலையத்துக்கு புகார் அளிக்க வருபவர்கள் அமர இடம் இருக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான அமரும் இடம் மற்றும் குடிநீர் வசதி செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

9. காவல்நிலையங்களில் ரிசப்ஷன் அமைக்கப்பட வேண்டும். அதில் ஒரு ஆண் மற்றும் பெண் காவலர்கள் இடம் பெற்று இருக்க வேண்டும். ஒரு இன்ஸ்பெக்டரும் அங்கே இருந்து புகார் அளிக்க வருபவரின் குறைகளைக் கேட்க வேண்டும்.

10. காவல்நிலையங்களில் கூடுதல் வசதிகள் உடனடியாக செய்யப்படும்.

11. காவல் நிலையங்களில் உள்ள பெண் காவலர்களின் வசதிக்காக கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்படும்.
   
12. மாநிலம் முழுவதும் பெண் காவலர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இதற்காக பெண் காவலர் தேர்வு நடத்தப்படும்.

13. மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளையும் அறியும் வகையில் சைபர் குற்றப்பிரிவு போலீஸார் மூலமாக புளூப்ரிண்ட் தயாரிக்கப்படும். இதன் மூலம் மாநிலத்தில் எந்த இடம் எங்கு இருக்கிறது என்பதை உடனடியாக அறிய  வசதி செய்யப்படும்.

14. மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் பான், குட்கா போன்ற பொருட்களுக்கு உடனடியாக தடை விதிக்கப்படுகிறது.

15. மாநிலம் முழுவதும் இருக்கும் அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுகிறது.

16. அரசு அலுவலகங்கள் அனைத்தும் சுத்தமாகவும் சுகாதாரத்துடனும் பராமரிக்கப்படும்.

17. அரசு அலுவலகங்களில் இனி ஃபைல்கள் காத்திருப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. உடனடியாக அனைத்துக் கோப்புகளும் பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும்.

18. மக்களின் குறைகளை விரைந்து தீர்க்கும் வகையில் கூடுதல் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

19. அரசு அலுவலகங்களில் இனிமேல் ஊழியர்கள் தாமதமாக வர முடியாது. அனைத்து அரசு அலுவலகங்களிலும் வருகைப் பதிவுக்காக பயோமெட்ரிக் எனப்படும் கைவிரல் ரேகை பதிவு செய்யும் கருவி பொருத்தப்படும்.

20. அனைத்து அரசு அலுவலகங்களின் அறைகளிலும் சி.சி.டி.வி கேமரா பொருத்தப்படும்.

21. அமைச்சர்கள் தங்களின் துறை சார்ந்த அலுவலகக் கோப்புகள் எதையும் வீடுகளுக்கு எடுத்துச் செல்லக் கூடாது.

22. அமைச்சர்கள் தங்களின் துறை சார்ந்த பணிகள் குறித்து ஒவ்வொரு வாரமும் அறிக்கை தயார் செய்து தாக்கல் செய்ய வேண்டும்.

23. அனைத்து அமைச்சர்களும் தங்களின் துறை குறித்து முழுமையாக அறிந்து வைத்து இருக்க வேண்டும். இது தொடர்பாக அனைவருக்கும் மூன்று நாட்கள் கருத்தரங்கம் நடத்தப்படும். அதில் துறை சார்ந்த விவரங்கள் குறித்துப் பேச வேண்டும்.

24. ஒருவேளை மின்சார டிரான்ஸ்ஃபார்மர்கள் எங்காவது எரிந்துவிட்டால், சம்பவ இடத்துக்கு அதிகாரிகளே நேரில் செல்ல வேண்டும். அவர்களின் முன்னிலையிலேயே அதனை மாற்றுவதற்கான பணிகள் நடக்க வேண்டும்.

25. பசுக்கள் திருடப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
-
-----------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 27, 2017 9:13 pm

26. அனுமதி பெறாத இடங்களில் இறைச்சியை விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது. அவை உடனடியாக மூடப்படும்.  

27. அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்து மறுபரிசீலனை செய்யப்படும். அவசியம் இருந்தால் மட்டுமே பாதுகாப்பு வழங்கப்படும்.

28. அதிகாரிகளும், அமைச்சர்களும் தங்களது சொத்துப் பட்டியலை அளிக்க வேண்டியது அவசியம்.

29. சொத்துப் பட்டியலை அடுத்த 15 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டியது அவசியம்.

30. அமைச்சர்களும், அதிகாரிகளும் தினமும் 10 மணிக்குள் அலுவலகத்துக்கு வந்துவிட வேண்டும்.

31. பா.ஜ&வின் தேர்தல் அறிக்கையின் அடிப்படையில் அதிகாரிகள், தங்களுடைய துறை சார்ந்து மக்கள் நலத் திட்டங்களை தயாரிக்க வேண்டும்.

32. நவராத்திரி, ராமநவமி போன்ற விஷேச தினங்களில் 24 மணி நேரமும் மின்சாரம் இருக்குமாறு அதிகாரிகள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

33. நவராத்திரியின் போது பக்தர்கள் தங்களுடைய பிரார்த்தனைகளை மேற்கொள்ள தேவையான அனைத்து வசதிகளையும் அதிகாரிகள் செய்து கொடுக்க வேண்டும்.

34. ராமநவமி விழாவின்போது, அயோத்தியாவில் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை அதிகாரிகள் முடிந்த அளவுக்கு நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்.

35. ஒவ்வொரு கிராமத்திலும் மின் வசதி கிடைப்பதற்கு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

36. அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் தங்களது பணி நேரத்தில் கட்டாயமாக மருத்துவமனையில் இருக்க வேண்டும்.

37. அனைவருக்கும் மருத்துவ வசதி கிடைக்கும் வகையில், சாமான்ய மக்கள் மருந்துப் பொருட்களை வாங்கும் வகையில் 3,000 புதிய மருந்தகங்கள் தொடங்கப்படும்.

38. சுகாதாரத் துறை சார்பாக தனியாக ஆப் உருவாக்கப்படும். இதன் மூலம், நோயாளிகள் தங்கள் குறைகளை தெரியப்படுத்த வசதி கிடைக்கும்.

39. அலாகாபாத், மீரட், ஆக்ரா, கோரக்பூர், ஜான்சி உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும்.

40. விவசாயிகள் விளைவிக்கும் கோதுமையின் 100 சதவிகிதத்தையும் அரசே நியாயமான விலைக்கு கொள்முதல் செய்யும்.

41. சட்டிஸ்கரில் விவசாயிகளின் விளை பொருட்களை கொள்முதல் செய்வது போன்ற நடைமுறை உத்தரப்பிரதேசத்திலும் பின்பற்றப்படும்.

42. கரும்பு விவசாயிகளிடம் இருந்து கரும்பை கொள்முதல் செய்த ஆலைகள் 14 தினங்களுக்குள் அதற்கான பணத்தை கொடுக்க வேண்டும்.

43. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களும் மீண்டும் செயல்படத் தொடங்கும்.

44. நல்ல முறையில் தரமான வகையில் பணிகளைச் செய்பவர்களுக்கு மட்டுமே அரசின் காண்ட்ராக்ட் பணிகள் செய்ய வாய்ப்பு கொடுக்கப்படும்.

45. வெள்ளம், வறட்சி போன்ற இக்கட்டான காலகட்டங்களில் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் கிடைக்கச் செய்ய வேண்டும்.

46. பாரதப் பிரதமரின் அவாஸ் யோஜனா திட்டத்தின் பணிகள் அனைத்தும் மாநில வீட்டுவசதி வாரியத்தின் மூலமாகவே செய்யப்படும்.

47. கல்வித் துறையைப் பொறுத்தவரையிலும், ஆசிரியர்கள் தாங்கள் கற்பிக்கும் இடங்களில் குரு&சிஷ்யன் உறவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

48. ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும்போது டி ஷர்ட் அணிந்து வரக்கூடாது.

49. ஆசிரியர்கள் பள்ளிகளிலும் வகுப்பறைகளிலும் அவசியம் இல்லாமல், செல்போன்களை பயன்படுத்தக் கூடாது.

50. அனைத்து கிராமங்களும் சாலை வழியாக இணைக்கப்படும். சாலை வசதி இல்லாத எந்த கிராமமும் இருக்கக் கூடாது.  

இந்த அதிரடி அறிவிப்புகளால் பொதுமக்கள் இடையே சூடான
விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்தச் சூழலில்,
யோகி ஆதித்யநாத் நல்லவரா? கெட்டவரா? என்கிற விவாதமும்
பொதுமக்களால் எழுப்பப்பட்டு வருவதே உண்மை.

-
பதில் சொல்லுங்கள் முதல்வர் யோகி ஆதித்யநாத்!
-
----------------------
விகடன்

இரா.மூர்த்தி
இரா.மூர்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 08/07/2014

Postஇரா.மூர்த்தி Mon Mar 27, 2017 9:56 pm

அறிவிப்புகள் எல்லாம் நல்லாதான் இருக்கிறது,ஒரு வருடம் கழித்து பார்த்தால் தெரியும்,எத்தனை நடைமுறைக்கு படுத்தினார் என்று.



வெல்க தமிழ் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 28, 2017 10:43 am

அதிரடியான 50 அறிவிப்புகள்!   3838410834 அதிரடியான 50 அறிவிப்புகள்!   3838410834 அறிவிப்புகள் எல்லாம் நல்ல தான் இருக்கும் , இதை முறையாக நடைமுறைப்படுத்தினா இந்தியாவுக்கே முன்னுதாரணமான ஆகும் உபி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 28, 2017 11:23 pm

ஆமாம், படிக்க நன்றாக இருக்கிறது............அமுல் படுத்தினால் மிக நன்றாக இருக்கும்....புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக