புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காமம் எதனால் உண்டாகிறது? Poll_c10காமம் எதனால் உண்டாகிறது? Poll_m10காமம் எதனால் உண்டாகிறது? Poll_c10 
57 Posts - 45%
ayyasamy ram
காமம் எதனால் உண்டாகிறது? Poll_c10காமம் எதனால் உண்டாகிறது? Poll_m10காமம் எதனால் உண்டாகிறது? Poll_c10 
52 Posts - 41%
T.N.Balasubramanian
காமம் எதனால் உண்டாகிறது? Poll_c10காமம் எதனால் உண்டாகிறது? Poll_m10காமம் எதனால் உண்டாகிறது? Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
காமம் எதனால் உண்டாகிறது? Poll_c10காமம் எதனால் உண்டாகிறது? Poll_m10காமம் எதனால் உண்டாகிறது? Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
காமம் எதனால் உண்டாகிறது? Poll_c10காமம் எதனால் உண்டாகிறது? Poll_m10காமம் எதனால் உண்டாகிறது? Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
காமம் எதனால் உண்டாகிறது? Poll_c10காமம் எதனால் உண்டாகிறது? Poll_m10காமம் எதனால் உண்டாகிறது? Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
காமம் எதனால் உண்டாகிறது? Poll_c10காமம் எதனால் உண்டாகிறது? Poll_m10காமம் எதனால் உண்டாகிறது? Poll_c10 
2 Posts - 2%
prajai
காமம் எதனால் உண்டாகிறது? Poll_c10காமம் எதனால் உண்டாகிறது? Poll_m10காமம் எதனால் உண்டாகிறது? Poll_c10 
2 Posts - 2%
Manimegala
காமம் எதனால் உண்டாகிறது? Poll_c10காமம் எதனால் உண்டாகிறது? Poll_m10காமம் எதனால் உண்டாகிறது? Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
காமம் எதனால் உண்டாகிறது? Poll_c10காமம் எதனால் உண்டாகிறது? Poll_m10காமம் எதனால் உண்டாகிறது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காமம் எதனால் உண்டாகிறது? Poll_c10காமம் எதனால் உண்டாகிறது? Poll_m10காமம் எதனால் உண்டாகிறது? Poll_c10 
418 Posts - 48%
heezulia
காமம் எதனால் உண்டாகிறது? Poll_c10காமம் எதனால் உண்டாகிறது? Poll_m10காமம் எதனால் உண்டாகிறது? Poll_c10 
293 Posts - 34%
Dr.S.Soundarapandian
காமம் எதனால் உண்டாகிறது? Poll_c10காமம் எதனால் உண்டாகிறது? Poll_m10காமம் எதனால் உண்டாகிறது? Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
காமம் எதனால் உண்டாகிறது? Poll_c10காமம் எதனால் உண்டாகிறது? Poll_m10காமம் எதனால் உண்டாகிறது? Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
காமம் எதனால் உண்டாகிறது? Poll_c10காமம் எதனால் உண்டாகிறது? Poll_m10காமம் எதனால் உண்டாகிறது? Poll_c10 
28 Posts - 3%
prajai
காமம் எதனால் உண்டாகிறது? Poll_c10காமம் எதனால் உண்டாகிறது? Poll_m10காமம் எதனால் உண்டாகிறது? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
காமம் எதனால் உண்டாகிறது? Poll_c10காமம் எதனால் உண்டாகிறது? Poll_m10காமம் எதனால் உண்டாகிறது? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
காமம் எதனால் உண்டாகிறது? Poll_c10காமம் எதனால் உண்டாகிறது? Poll_m10காமம் எதனால் உண்டாகிறது? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
காமம் எதனால் உண்டாகிறது? Poll_c10காமம் எதனால் உண்டாகிறது? Poll_m10காமம் எதனால் உண்டாகிறது? Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
காமம் எதனால் உண்டாகிறது? Poll_c10காமம் எதனால் உண்டாகிறது? Poll_m10காமம் எதனால் உண்டாகிறது? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமம் எதனால் உண்டாகிறது?


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Sun Oct 23, 2016 7:00 pm

ஒருவன் வண்டியை திறந்த வெளியில் அல்லது தனது வீட்டில் எப்படியெல்லாமோ ஓட்டி மகிழ்கிறான். விபத்து ஏற்பட்டாலும் அவனுடன் முடிகிறது. அதுவே வீதிக்கு வந்தால் எத்தனை அப்பாவி உயிர்கள் பாதிக்கப்படும்.

அதே போல் காதல் காமம் ஒரு உயிரினத்தின் உன்னதமான உணர்வாகும். காமம் அவனளவில்-அவளளவில் இருந்து விட்டால் அது இன்பம்,உன்னதமான உணர்வுமாகும்.

காமம் பற்றி வள்ளுவன் சொல்கிறான்.........

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.

அது அவனை மீறி வெறியாகி வெளியே சென்று விட்டாலோ? இன்றைய நாளில் உலகெங்கும் குழந்தை முதல் முதியவர் வரை பாதிப்புக்குள்ளாகி கொலை,கடத்தல், ஆசிட் வீச்சு, இணையங்களில் பரவும் கொடூரங்கள் என பயங்கர ஆயுதமாகி அழித்து விடும்.இப்படி அழித்துக் கொண்டிருப்பதை நாம் தினமும் காண்கிறோம்.

பாலியல்வன்புணர்வு,பாலியல் முறைகேடுகள், காம வெறி உலகையே ஆட்டிக் கொண்டிருக்கிறது. பாதிக்கப்படும் ஆண்களும் பெண்களும் குடும்பங்களும் சமூகமும்  இந்த அரக்கப் பிடியில் இருந்து தப்ப முடியாமல் தவிக்கிறது.

தற்போதய அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் எல்லா பிரச்சனைகளையும் விட  பாலியல் குற்றச்சாட்டுகள் முக்கிய விடயமாக இருந்து வருகிறது. பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் சுமத்தும் பாலியல் குற்றச்சாட்டுகள் ஒருபுறம் இருக்க, நான் பாதிக்கப்பட்டேன் என்று பிரச்சாரத்தில் குரல் கொடுக்கும் பெண்களின் எண்ணிக்கை இன்னொருபுறமாக அதிகமாகி வருகிறது.

காதலைப் போல் காமமும் ஒரு உன்னதமான மென்மையான உணர்வு.ஒருவர் விரும்பினால் மட்டுமே காதலும் காமமும் ஏற்புடையது என்கிறார் வள்ளுவர்.

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.

பொதுவாக, காமம் என்ற சொல் உடலின்பத்தையோ வெறியையோ உணர்த்தும் வகையில் புரிந்து கொள்ளப்படுகிறது. இதனால்தான் காமத்துப்பால் எனக் கேட்டவுடனே சிலர் மருட்சி அடைகின்றனர். ஊடல் காமத்திற்கு இன்பம்.வள்ளுவன் என்ன சொல்கிறான்.............

உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.

இந்தக் காமம் ஒருவனது உள்மனதில் தோன்றும் விகாரங்களால் ஏற்படுகிறது என்பது புத்தர் கொள்கை. எனவே காமத்திற்குக் காரணம் மனம்தான் என்கிறது பௌத்தம்.

காமத்திற்குக் காரணம் மனம் இல்லை. அதற்குக் காரணம் வெளியில் இருந்து மனதைப் பாதிக்கும் புறப்பொருட்கள்தான் என்கிறது, ஆசீவகம்.

தமிழகத்தில் எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்து விட்டன,இனி எதுவுமே இல்லை என தொலைக்காட்சிகள், ரெமோ நாயகன் அழுததற்காக விவாதம் நடத்துகிறது.  
பிரச்சனைகள் தீர்ந்து விட்டது என்கிறீர்களா? இல்லை என்கிறீர்களா?

இன்று நடந்து வரும் காமத்திற்கு(காமவெறிக்கு) ஆளாகி உயிரைப் பறி கொடுப்போர்,பாலியல் கொடுமைகளை அனுபவிப்போர்,இவர்களை எண்ணிப் பார்த்து,இதற்கு என்ன காரணம்?  
மனமா,புறச்சூழலா அல்லது வேறு காரணங்களா?  நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Oct 23, 2016 7:08 pm

காமம் என்பது எல்லா உயிர்களுக்கும் இயற்கை அளித்த உணர்வு.

காமம் இன்றேல் உலகமும் உயிர்களும் ஏது - உலகமே சூன்யமாகிவிடும்

காமம் என்பது ஆசை .

உடலின்பமும் ஒரு வகை ஆசையால் உண்டாவதே.

பயமும் சந்தர்ப்பமின்மையும் இருக்கும் வரை எல்லாம் சிறப்பாகவே இருக்கும் - காமம் உட்பட.

சந்தர்ப்பமும் கிடைத்து , பயமும் இல்லை எனில் அங்குதான் அனர்த்தம் உருவாகிறது



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 23, 2016 7:12 pm

இன்று நடந்து வரும் காமத்திற்கு(காமவெறிக்கு) ஆளாகி உயிரைப் பறி கொடுப்போர்,பாலியல் கொடுமைகளை அனுபவிப்போர்,இவர்களை எண்ணிப் பார்த்து,இதற்கு என்ன காரணம்?  
மனமா,புறச்சூழலா அல்லது வேறு காரணங்களா?  நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
மூர்த்தி

மிகவும் யோசிக்க வேண்டிய ,அலச வேண்டிய ,தலைப்புதான் .
மனதிற்கு ,புறச்சூழலுக்கும் பங்கு உண்டு .
மற்ற காரணங்கள் விழுக்காடு விகிதத்தில் குறைவாகவே இருக்கும் .  

சிறிது வெளிவேலை இருப்பதால் ,சிறிது நேரம் கழித்து தொடர்கிறேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Oct 23, 2016 9:12 pm

Man is a social animal என்று சொல்வார்கள் .விலங்குகளுக்குத் தாய் ,தங்கை , தமக்கை என்ற பாகுபாடு இல்லை . மனிதனும் , தோன்றிய காலத்தில் இவ்வாறே இருந்தான் . தற்போதும் செய்தித்தாள்களில் தந்தை மகள் உறவு , அண்ணன் தங்கை உறவு என்ற செய்திகள் வருவதைப் பார்க்கலாம் . இவையெல்லாம் இதைக் காட்டுகிறது ? மனிதன் விலங்கு நிலையிலிருந்து இன்னமும் விடுபடவில்லை என்பதையே காட்டுகிறது .

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு .

என்ற குறட்பாவில் சான்றோரை வள்ளுவர் ஏன் இழுக்கவேண்டும் ? " சான்றோர்க்கு " என்ற வார்த்தைக்குப் பதிலாக " மாந்தர்க்கு " என்று இருந்தாலும் வெண்பா இலக்கணம் தளை தட்டாது . பின் ஏன் " சான்றோர்க்கு "
என்ற சொல்லைப் பெய்தார் ?

" புறப்பகைகளை அடக்கும் ஆண்மையுடையார்க்கும் உட்பகையாகிய காமம் அடக்குதற்கு அருமையின் , அதனை அடக்கிய ஆண்மையைப் பேராண்மை என்கிறார் "

என்று உரை எழுதுகிறார் பரிமேலழகர் .

ஆகவே காமத்தை நெறிப்படுத்த முடியுமேயன்றி அடக்க முடியாது. அது படித்தவன் ,படிக்காதவன் , மேதை முட்டாள் என்று யாரையும் விடாது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 23, 2016 9:15 pm

சிறு வயது காதல் ,அதாவது பள்ளி வயது காதல் , ஈர்ப்பு ,(infatuation ) என்ற பிரிவில் வரும்
என்றே எண்ணுகிறேன் . விடலைப்பருவம் ,கன்னிப் பருவம் சுலபமாக ஒருவர் பால் ஒருவருக்கு ஈர்ப்பு ஏற்பட்டுவிடும் . அது காதலா , காதலின் அர்த்தம் என்ன என்று பகுத்து அறிய கூற முடியாத பருவம் .
அதை காதல் என  இரு பாலாறும் நினைத்து உருகுவதும் சில சமயம் தொடுதலில் ஆரம்பித்து ,  அதரபானம் வரை நீடிப்பது முதலியன மனம் சம்பந்தப்பட்டதே .
படிப்பெல்லாம் முடிந்து ,ஒரே அலுவலகத்திலிலோ , ஒரே துறையிலோ வேலை செய்யும் ஆண் பெண் இருவருமே யோசித்து மணம் முடித்தால் வாழ்க்கை நல்லமுறையில் அமையும் என்று பேசி முடிவு எடுத்து மணம் புரிவது ..மனம் சம்பந்தப்பட்டதே .  
அதே சமயம் வேறு சில காரணங்களால் , மனமுறிவு ,ஏற்படும் போது ,  அந்த சோகத்தை தாங்க முடியாமல் , அவசரமாக எடுக்கும் முடிவுகள் , தனக்கு கிடைக்காதது மற்றவருக்கும் கிடைக்கக் கூடாது என்ற எதிர் மறை எண்ணங்களால் கொலைகளில் முடிகின்றது . அழகு சம்பந்தப்பட்டது எனில் அந்த அழகை அழிக்க ஆசிட் கைக்கு வருகிறது .இதுவும் மனம் சம்பந்தப்பட்டதே .  

ஒரே துறையில் வேலை செய்பவர்கள் , உதாரணத்திற்கு சினிமா துறையை எடுத்துக் கொள்வோம் .
இது 90 % ஆணாதிக்கம் உடைய துறை . ஆண்கள் ஊதியம் பெறுவது அதிகம் . அதிக  சமயங்களில் ,
தன்னுடன் நடிக்க வேண்டிய நடிகை ,X அல்லது Y அல்லது Z என்று தேர்ந்து எடுக்கும் உரிமை ஆணுக்கே இருக்கிறது .  வேறு பல காரணங்களால் அதை ஒத்துக்கொள்ளும் இயக்குனர்களும் ,பட தயாரிப்பாளர்களும் உண்டு.  அந்த இடத்தில் , அந்த x ,Y ,Z தானாகத்தான் இருக்கவேண்டும்  என போட்டி மனப்பான்மையில் , சில பல தியாகங்களை, பல விதங்களில்  நடிகைகள் செய்ய தயாராக இருக்கிறார்கள் . வெற்றியும் பெறுகிறார்கள் . வேறொன்றை பார்க்கலாம் . தனியார் கம்பெனி . தனக்கு மேல் உள்ள அதிகாரி அவர் வைத்ததுதான் சட்டம் . அவருடன் வளைந்து கொடுத்துப் போனால்தான் , குடும்ப பொருளாதாரத்திற்கு , கொஞ்சம் உயர்வு கிடைக்கும் , கவனமாக பாதுகாப்பாக அப்பிடி நடந்து கொள்வதால் , பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும் என தியாகங்கள் செய்வதும் சூழ்நிலை காரணம்தான் . பல விஷயங்கள் இக்காலங்களில் இப்பிடித்தான் நடக்கின்றன . சம்பந்தப்பட்டவர்கள்
கவலை படுவதாக தெரிவதில்லை .  
ஆனால் சில சமயங்களில் ,சிலர் ஏமாறுவதால் , சிலர் ஏமாற்றுவதால் , பழிக்குப்பழியாக ,நேரிடையாகவோ அல்லது வேறு /மூன்றாம் ஆட்கள் மூலமாகவோ கணக்கு தீர்த்துக் கொள்கிறார்கள் . இங்கு சூழ்நிலை /மனம் ரெண்டுமே சம்பந்தப்படுகிறது .

ஆசிட் வீச்சு  / கொலை புரிதல் தவிர்க்கவே முடியாதா ? 90 % முடியாது என்றே எண்ணுகிறேன் .
better wisdom prevails ...சிறிதே புத்திக்கூர்மையுடன் , கிடைக்காவிட்டால் என்ன , உயிர் வாழ்வே முடியாதா , போன்ற சிந்திக்கும் குணமுள்ள 10% ,வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள் .

காமவெறிக்கு ஆளாகும் பெண்கள் , பாதுகாப்பு இல்லாதவர்கள் . அவர்களை குறி வைத்தே சில காமவெறியர்கள் காலத்தில் இறங்குகிறார்கள் . விதவிதமாக அனுபவிக்க துடிக்கும் வெறி . இவர்கள் நோயாளிகள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Oct 24, 2016 7:16 am

பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு கற்கும்/கற்பிக்கப்படும் கல்வி முறை,

மாறிவரும் உணவு மற்றும் உடை கலாச்சாரம்,

ஆணும் பெண்ணும் சமம் என்று பேசிகொண்டு இருபாலரும் தேவையற்ற நிலைகளில் உரிமை கோருதல்,

தன்னைக் கெடுத்துக் கொள்வதற்கும், தான் கெட்டுப்போவதற்கும் கிடைக்கும் ஏராளமான சூழ்நிலை வாய்ப்புக்கள்,

பயமின்மை,

எதுவானாலும் பார்த்துக் கொள்ளலாம் என்னும் மருத்துவ வசதி,

தாராளமான பணப்புழக்கம்,

தட்டிக்கேட்கவும், கண்காணிக்கவும் ஆள் இல்லாத வகையில் தனிக்குடித்தனம்,

உடன் பிறந்த உறவுகள் இல்லா பிள்ளைகள்.

உரிமை/ சுதந்திரம் என்னும் பெயரில் இருபாலருக்கும் இடையே நட்பு முறை,

உழைக்காமல் உண்டு களிக்கலாம் என்னும் மனப்பான்மை,

இதுபோன்றவையும் இன்னும் பல காரணிகளும்,

இயற்கையின் இயல்பான உந்தாற்றலும் இன்றைய இதுபோன்ற அவலநிலைக்குக் காரணிகள் என்றும் கொள்ளலாம்.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
avatar
Guest
Guest

PostGuest Mon Oct 24, 2016 1:22 pm

ஆங்கிலத்தில் இன்ட்ரானெட்டில் ,இதன் அடிப்படையில் Lust and Love என்ற தலைப்பிட்டு கொடுத்தோம். அவர்கள் கருத்து என்ன? பார்க்கலாம்.


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Mar 11, 2017 11:22 am

காமம் எதனால் உண்டாகிறது? 103459460



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82727
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 11, 2017 11:55 am

காமம் எதனால் உண்டாகிறது? 103459460 காமம் எதனால் உண்டாகிறது? 3838410834
-
காதலை விளையாட்டாய்க்
கருதாதே தம்பி!
உண்மைக் காதலை உணராமற் போனால்
ஒழிந்து போவாய்! அழிந்து போவாய்!
ஆன்மபலம் கொண்டவர்க்கும்
அஞ்சாமை பெற்றவர்க்கும்
உரிய பாதையது
ஆபத்தான அவ்வழியில்
விளையாட்டாய்ப் போகாதே!
-
-------------------------
உமர்கய்யாம் (ருபாயத்)


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 11, 2017 12:24 pm

4 1 /2  மாதம் அடங்கி இருந்து,
பிறகு காமம் மறுமுறை தலைதூக்கியுள்ளதே, முதியோர்களிடமிருந்து  புன்னகை புன்னகை .  


அது சரி மூர்த்தியின் intranet   கருத்துக்கள் என்ன ஆச்சு ?
ரமணியன்  



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக