புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  Poll_c10ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  Poll_m10ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  Poll_c10 
2 Posts - 50%
ayyasamy ram
ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  Poll_c10ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  Poll_m10ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  Poll_c10 
1 Post - 25%
வேல்முருகன் காசி
ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  Poll_c10ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  Poll_m10ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  Poll_c10ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  Poll_m10ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  Poll_c10 
285 Posts - 45%
heezulia
ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  Poll_c10ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  Poll_m10ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  Poll_c10ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  Poll_m10ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  Poll_c10ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  Poll_m10ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  Poll_c10ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  Poll_m10ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  Poll_c10 
20 Posts - 3%
prajai
ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  Poll_c10ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  Poll_m10ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  Poll_c10ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  Poll_m10ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  Poll_c10ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  Poll_m10ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  Poll_c10ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  Poll_m10ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  Poll_c10ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  Poll_m10ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 02, 2017 10:33 pm

ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!

ஆணின் ஆட்டம்
பதினாறு வரைதான்

பிறந்த போது மட்டுமே கொண்டாடப் பட்டு

வாழ்நாள் முழுவதும் திண்டாட்டத்தை சந்திக்கும் பிறவிதான் ஆண்மகன்.

பத்து வயது வரை பறந்து திரியும்
பறவைபோல இருப்பவன்...

பள்ளிக்கல்வியில் மேலே படிக்கத் தொடங்கும் போது தொடங்குகிறது... சோதனை
"
டேய் இப்போருந்தே ஒழுங்கா படி. இல்லேன்னா 10 க்கு அப்புறம் காலேஜெல்லாம் கெடையாது ஐடிஐ தான்.... தெரிதா?"

ப்ளஸ்1 போகும்போது....
"ரெண்டே ரெண்டு வருஷம் உயிரை விட்டு படிச்சேன்னா... இன்ஜினீயரிங்.

இல்லேன்னா ஏதாவது ஒர்க்ஷாப்தான்.."

உயிரைவிட்டு படித்து ஒரு என்ஜினியரிங் காலேஜில் சேர்ந்தபின்...

" ஒங்க பாட்டன் பூட்டன் எவனும் சொத்து சேத்து வச்சிட்டுப் போகல..

2 லட்சம் பேங்கு லோன்லதான் படிக்கிறங்கற நெனப்பு இருக்கட்டும்...

சும்மா மைனர்களின் வேஷம் போட்டீன்னா குடும்பம் நடுத்தெருவுலதான்.."

நான்கு வருஷம் படிப்பு படிப்பு என உயிரை விட்டால்...
ஏழாவது செம்மில் 'கிலி' பிடிக்கும். Placement ல புடிங்கிடுச்சுன்னா.. எல்லாமே போச்சு.

உசிரோட இருந்து பிரயோஜனமில்ல.(

அப்பா, அம்மா இருவரின் வசனம் அவ்வப்போது மிரட்டும்.
"
பொட்டை புள்ளைன்னா பரவால்ல.

கடனை ஒடனை வாங்கி 10 ங்கறது 20 பவுனா போட்டா எவன் கையிலயாவது புடிச்சுக் குடுத்துட்டு வெடுக்குன்னு இருக்கலாம்.

நீ ஆம்பளை! நாளைக்கு ஒரு நல்ல வேலையிருந்தாத்தான் ஒரு மனுசனா ஊருக்குள்ள தலைநிமிந்து நடக்கமுடியும்.

வாங்குன கடனைக் கட்டனும் உங்க அக்காளை ஒரு நல்ல எடத்துல புடிச்சுக் குடுக்கனும்.

எல்லாம் உங்கையுலதான் இருக்குது..."

ஒரு வழியாக வேலைக்கு சேர்ந்தால்....

பெருநகரத்தில் அகப்பட்ட சிறுமீனாக மிரண்டு அந்த ஆடம்பரங்களில் கரைந்து போகாமல் குடும்பத்தின் கனவுகளை கலைத்துப் போடாமல்..

எந்த ஓட்டலில் குறைந்த விலையில் சோறுகிடைக்கும் என்று அலைந்து..

இரண்டு நாள் விடுமுறைக்கு பஸ்கட்டணத்தை பயத்துடன் கணக் கிட்டு மலிவு கட்டண பஸ்சில் இடுப்பொடிய பயணம் செய்து

கவலையோட விசாரிக்கும் பெற்றோரிடம் மகிழ்ச்சியாக இருப்பதாக நடித்துக் கொண்டு...

உள்ளுக்குள் தனியாக எல்லாவற்றையும்
சமாளித்து....

கல்விக்கடன், குடும்பக்கடன் அனைத்தையும் சமாளித்து மீள்வதற்குள்

"எத்தனை நாளைக்கு இப்படி ஓட்டல்ல சாப்பிட்டு ஒடம்பைக் கெடுத்துக்கவ..

சீக்கிரம்
ஒரு கல்யாணத்தைப் பண்ணீட்டா.. எங்க கடமை முடிஞ்சுறும்..."
இங்கேதான் தொடங்குகிறது..

ஒரு ஆணின் இரண்டாம் கட்டம் ...

திருமணம் நடந்து
மனைவியிடம் அன்பாக நடந்து
கொண்டால்!!!!

"அய்யோ சாமி காணாதக் கண்டவன் மாதிரி இந்தத் தாங்கு தாங்கறான்"
என்று குடும்பத்தினரிடமும்

அதே நேரத்தில் குடும்பத்தில் கொஞ்சம் அக்கறை காட்டினாலும்....

" ஒங்களுக்குன்னு ஒரு குடும்பமாயிருச்சு...

இத்தனை காலம் சம்பாதிச்சதைப் பூராம்
தொடைச்சிப் புடுங்கியாச்சு.. இனிபோதும்"
என்று பெண்டாட்டியிடமிருந்து புறப்படும்
ஒரு உத்தரவு....

வேலை செய்யும் இடத்தில் இருக்கும் நெருக்கடியை வீட்டில் சொல்லக்கூடாது.

வீட்டில் கிளம்பும் புகைச்சலை வெளியில் சொல்லக்கூடாது.

ஆசை 60 நாள் மோகம்30 நாள்...

திருமண வாழ்வில் சிறு சிறு ஊடல்கள் சண்டையாகும் .

பெண்ணின் குரல் ஓங்கும்போது ஆணின் கவுரவம் குன்றிப்போகும்

என்கிற அச்சத்தில் வளைந்து கொடுத்து வளைந்து கொடுத்து முதுகெலும்பு காணாமல் போகும்

பெற்றவர்களையும் விட்டுக் கொடுக்காமல்,

மனைவி பேச்சையும் தட்ட முடியாமல்

இரண்டு பக்கமும் ஆதரவு கொடுத்து

இரண்டுபக்கமும் கெட்ட பெயர் வாங்கி..

பிள்ளைகள் பெற்று வம்சத்தை விருத்திசெய்து,

அவர்களை வளர்த்து ஆளாக்கி அவர்களது ஆசைகளை தேவைகளைப் பூர்த்தி செய்ய அல்லாடும்போது

மனைவியே 'கஞ்சன் ' என்று சொன்னாலும் அதையும் புன்சிரிப்புடன் ஏற்றுக் கொள்ளவில்லை யெனில்

'சிடுமூஞ்சி'யைக் கட்டிகிட்டு சீரழிகிறேன் என்னும் புலம்பலையும் சகித்துக் கொள்ளவேண்டும்.

குடும்பத்தில் விசேஷம் என்றால்

மனைவி மக்களுக்கு நல்லதாய் தேடி தேடி துணிமணி வாங்கிக் கொடுக்கும் ஆண்பிள்ளை

தனக்கு துணி எடுக்க தள்ளுபடிக்காக அலைவான்.

தீபாவளி திருநாள் என்றால் எல்லாருக்கும்
நல்லபடியாக செய்து..

உறவு & நட்பில் வரும்....

கல்யாணம் கருமாதிக்கு மொய் எழுத பொய்சொல்லி கடன் வாங்கி,,

வட்டி கனவில் வந்து மிரட்ட கனவில் கூட பயந்து ஒடுங்க...

கடன் தொல்லைகளால் மனைவியிடம் கலவி மறந்தாலோ?

"ம்க்கும் இந்த வூட்ல நான் ஒரு மனுஷி இருக்கேங்கற நெனப்பே இல்ல...

இந்த ஆம்பளைக்கு..," என்கிற மாபெரும் பழிவரும்.

உறவில் யாராவது சொந்தமாக

ஒரு வீடு வாங்கினாலோ?

கார் வாங்கினாலோ?

அந்த நிமிஷம் புறப்படும் விமரிசனக் கனைகள்...

"ஊரு ஒலகத்துல ஒவ்வொரு ஆம்பளைக எப்படியெல்லாம் சாமர்த்தியமா பொளைச்சு குடும்பத்த மேலுக்குக் கொண்டு வராங்க..

எனக்கும் வாச்சுதே ஒன்னு...

அரைக்காசுக்கு பொறாத மனுசன்...

எல்லாம் நான் வாங்கி வந்த வரம்..

"என்கிற தலைக்கணம் தொடங்கும்.

குடும்பத்தில் குழந்தைகளிடம் கரிசனையாக நடந்து கொண்டால்... '

பிள்ளைகளை செல்லம் கொடுத்து கெடுக்கிறாய்'

கண்டிப்பாக நடந்து கொண்டாலோ?... '

பெத்த புள்ளைங்கன்னு துளியாவது பாசம் இருக்கா???

எப்பப் பாரு கரிச்சுக் கொட்டறது'

அப்பா.. அம்மாவுக்கு வயதாகி அவர்கள் படுக்கையில் விழுந்து

அதை பார்க்கும் நிலை வந்தால்

பெண்களுக்கு
அப்போது வரும் ஒரு தர்ம ஆவேசம்.

'ஒங்க அப்பா அம்மா காடு தோட்டம் காரு பங்களான்னு வாங்கி வெச்சிருக்காங்களா?
என்னால முடியாது ..
வழிக்க..
*
உங்க தம்பிய பாக்கச் சொல்லுங்க..

அமைதியான ஒரு ஆண்மகனுக்கு வாழ்நாளெல்லாம் வசவுதான்,

பழியும், தூசனமும், நிந்தனையும் நிழல் போல அவனைத் தொடர்ந்து வரும்.

ஒருபெண் தன்பிள்ளையை பத்து மாதம் சுமந்து பெற்றுத்தருகிறாள்

அதன் பெருமையையும் உரிமையையும் காலமெல்லாம் அவள் அனுபவிப்பாள்.

ஆனால் வாழ்நாள் முழுவதும்

ஒரு குடும்பத்தையே தன் நெஞ்சில் சுமக்கும்
ஒரு ஆணுக்கு

எந்தக் பெருமையும் இல்லை .

எந்தப்புகழும் இல்லை.

புகழ் வேண்டாம், பழிவராமல் இருந்தால் போதாதா?

இத்தனை சோதனைகளையும் தாண்டி ஒருவன் வாழ்க்கையில் வெற்றி பெற்றால் அப்போதும்
"
நான் மட்டும் இந்த ஆளை கட்லேன்னா.. இந்த மனுசன் ரோடு ரோடா பொறுப்பில்லாம சுத்திகிட்டிருந்திருப்பாரு

இன்னிக்கு இந்த வீடு காரு சொத்து சொகம் எல்லாம் என்னோட ராசி..

என் சாமர்த்தயத்தில நான் கொண்டு வந்தேன் என்பர்!!!!

ஆணாய்ப் பிறந்தவனின் ஆட்டமெல்லாம் *
25 வயது வரைதான்

அதன்பிறகு அவன் சாகும்வரையிலும்

"கண்ணுக்குத் தெரியாத ஒரு நுகத்தடி

அவன் கழுத்தின்மீது ஏறி அமர்ந்து அவனை அழுத்திக் கொண்டேயிருக்கும்...................

whatsup இல் வந்தது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 04, 2017 7:50 pm

அடப்பாவமே.............யாரும் பின்னூட்டம் போடவில்லையா?.........ஆண்கள் பாவம் என்று பதிவு போட்டிருக்கிறேன், யாரும் சப்போர்ட் செய்ய வில்லையே? ......ஆச்சர்யம் தான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sat Feb 04, 2017 7:58 pm

அருமையான பகிர்வு ,படிக்கும்போதே பயமாக இருக்கிறது.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Hari Prasath




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sat Feb 04, 2017 8:02 pm

krishnaamma wrote:அடப்பாவமே.............யாரும் பின்னூட்டம்   போடவில்லையா?.........ஆண்கள் பாவம் என்று பதிவு போட்டிருக்கிறேன், யாரும் சப்போர்ட் செய்ய வில்லையே? ......ஆச்சர்யம் தான் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1233226

ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  AGJxXSeNmYZvAAAAAElFTkSuQmCC நான் இருக்கேன்.
சசி அக்கா வந்துரப்போறாங்க..எஸ்கேப்அய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லை




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 04, 2017 8:04 pm

Hari Prasath wrote:அருமையான பகிர்வு ,படிக்கும்போதே பயமாக இருக்கிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1233231

பயந்து ஒன்றும் ஆகாது ஹரி...........தைரியமாய் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டியது தான்..........
"உரலில் தலை கொடுத்தாகிவிட்டது.......உலக்கைக்கு பயந்தால் ஆகுமா".....புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Feb 07, 2017 12:02 am

Hari Prasath wrote:
krishnaamma wrote:அடப்பாவமே.............யாரும் பின்னூட்டம்   போடவில்லையா?.........ஆண்கள் பாவம் என்று பதிவு போட்டிருக்கிறேன், யாரும் சப்போர்ட் செய்ய வில்லையே? ......ஆச்சர்யம் தான் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1233226

ஆண் மகனின் வாழ்வியல் சோதனை !!!  AGJxXSeNmYZvAAAAAElFTkSuQmCC நான் இருக்கேன்.
சசி அக்கா வந்துரப்போறாங்க..எஸ்கேப்அய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லை

நன்றி ஹரி, சசி இதுவரை இதை பார்க்கவில்லை ஜாலி ஜாலி ஜாலி......@சசி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 07, 2017 1:54 pm

ஞாயிறு அன்றும் பிசி .
திங்களன்றும் பிசி. 
இப்போதுதான் இதை பார்த்தேன்.
வாழ்க்கையை அனுபவித்து யதார்த்த உண்மையை 
கஷ்டப்பட்டு பெற்றோருக்கு தெரியாமல், மனைவிக்கு தெரியாமல் 
எழுதி இருக்கிறார் மனுஷர் பாவம் .
அடுத்த ஜென்மத்தில் பெண்ணாக பிறக்கட்டும் அவர்  அழுகை அழுகை
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 19, 2017 12:00 pm

T.N.Balasubramanian wrote:ஞாயிறு அன்றும் பிசி .
திங்களன்றும் பிசி. 
இப்போதுதான் இதை பார்த்தேன்.
வாழ்க்கையை அனுபவித்து யதார்த்த உண்மையை 
கஷ்டப்பட்டு பெற்றோருக்கு தெரியாமல், மனைவிக்கு தெரியாமல் 
எழுதி இருக்கிறார் மனுஷர் பாவம் .
அடுத்த ஜென்மத்தில் பெண்ணாக பிறக்கட்டும் அவர்  அழுகை அழுகை
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1233489

ஜாலி ஜாலி ஜாலி ............... ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ................ சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Feb 19, 2017 2:49 pm


ஆணுக்கு இருக்கின்ற சோதனைகளைக் காட்டிலும் , பெண்ணுக்கு இருக்கின்ற சோதனைகள்தான் அதிகம் . பிறக்கும்போதே ஒரு பெண் வெறுக்கப்படுகிறாள் . கருவறையில் தொடங்கும் அவளது சோதனைகள் , கல்லறை வரையிலும் நீண்டு கொண்டே செல்கிறது .

பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால் -- மிகப்
பீழை யிருக்குதடி தங்கமே தங்கம் .

என்ற பாரதியின் வரிகளைத் தாங்கள் படித்ததில்லையா கிருஷ்ணம்மா ?




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 19, 2017 7:22 pm

M Jagadeesan wrote:ஆணுக்கு இருக்கின்ற சோதனைகளைக் காட்டிலும் , பெண்ணுக்கு இருக்கின்ற சோதனைகள்தான் அதிகம் . பிறக்கும்போதே ஒரு பெண் வெறுக்கப்படுகிறாள் . கருவறையில் தொடங்கும் அவளது சோதனைகள் , கல்லறை வரையிலும் நீண்டு கொண்டே செல்கிறது .

பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால் -- மிகப் 
பீழை யிருக்குதடி தங்கமே தங்கம் .

என்ற பாரதியின் வரிகளைத் தாங்கள் படித்ததில்லையா கிருஷ்ணம்மா ? 



பாரதி காலம் வேறு 
பார் ரதி நான் .என் சொல் படி நட ......என்கின்ற பெண்கள் காலமிது அய்யா.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக