புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_c10பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_m10பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_c10 
61 Posts - 46%
heezulia
பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_c10பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_m10பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_c10பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_m10பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_c10பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_m10பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_c10பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_m10பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Raji@123
பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_c10பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_m10பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
prajai
பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_c10பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_m10பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_c10பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_m10பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Barushree
பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_c10பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_m10பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_c10பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_m10பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_c10பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_m10பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_c10 
176 Posts - 40%
ayyasamy ram
பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_c10பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_m10பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_c10பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_m10பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_c10பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_m10பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_c10 
21 Posts - 5%
prajai
பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_c10பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_m10பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_c10பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_m10பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_c10பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_m10பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_c10பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_m10பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
Guna.D
பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_c10பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_m10பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
mruthun
பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_c10பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_m10பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !


   
   

Page 2 of 14 Previous  1, 2, 3 ... 8 ... 14  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 14, 2017 1:56 am

First topic message reminder :

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000 மாவது ஆண்டு கொண்டாடப்படுவதால் தினமலரில் 108  நாட்களுக்கு ஒரு தொடர் வருகிறது. அதை இங்கு பகிர விரும்புகிறேன். படித்து மகிழுங்கள் !

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 CVQDaTLrRZS6bKX1DYcx+ramanujar

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 IcQ0c5fS3GOBeFIzAanW+poliga_poliga_ramanujar



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 18, 2017 7:27 pm

சதி யாத்திரை - 6

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 HKpQDmwnRrik8RTKrvXE+Tamil_News_large_1692603_318_219

'இதோ பார், உனக்குத் தெரியாதது இல்லை. நமது குருவுக்கு வயதாகிவிட்டது. அவரால் மாற்றுக் கருத்துகளோடு மல்லுக்கட்ட முடியாது. அதேசமயம், நீ கோபித்துக்கொண்டு வகுப்புக்கு வராதிருந்தால் நஷ்டம் உனக்குத்தான். இவரளவுக்கு வேதமறிந்தவர்கள் இங்கு வேறு யாருமில்லை என்பதை எண்ணிப் பார்.'

ராமானுஜர் யோசித்தார். அவர்கள் சொல்வது சரிதான். ஆனால், கசப்பின் திரையை இடையே படரவிட்டுக் கொண்டு கல்வியை எப்படித் தொடர முடியும்?'அட என்னப்பா நீ! உன்னைக் கோபித்துக் கொண்டதில் அவருக்கே மிகுந்த வருத்தம். வெளியே காட்டிக் கொள்ள அகங்காரம் தடுக்கிறது. ஆனால் நீ பாடசாலைக்கு வருவதை நிறுத்திய பிறகு மனிதர் தவியாய்த் தவிக்கிறார்.

எப்போது வேண்டுமானாலும் அழுதுவிடுவார் போலிருக்கிறது.''ஐயோ...' என்று பதறி எழுந்தார் ராமானுஜர். தன்னால் ஏற்க இயலாத கருத்துகளைச் சொல்லித் தருகிறவர்தான். என்றாலும், அவர் குரு. அவரது நம்பிக்கைகள் அவருக்கு. அல்லது அவரை நம்புகிறவர்களுக்கு. தன்னால் அவரை முற்றிலும் ஏற்க முடியாது போனாலும், முற்றிலும் நிராகரிக்கவும் முடியாது என்று ராமானுஜர் நினைத்தார்.

குரு என்பவர் தெய்வத்துக்கு மேலே.'அதைத்தான் சொல்கிறோம். அவர் சொல்வதைச் சொல்லட்டும். நீ ஏற்பதை ஏற்றுக்கொள். ஏற்க முடியாதவற்றுக்கு இருக்கவே இருக்கிறது உன் சுயபுத்தி. அது கொடுக்கிற அர்த்தங்கள். கிளம்பு முதலில்.' என்றார்கள்.

ராமானுஜர் மீண்டும் வகுப்புக்குப் போன போது, யாதவப் பிரகாசர் அவரைக் கட்டித்தழுவி வரவேற்றார். 'நீ இல்லாமல் இந்த வகுப்பே நிறைவாக இல்லை' என்று சொன்னார். ராமானுஜரைப் பொறுத்தவரை அது பகையல்ல. அபிப்பிராய பேதம் மட்டுமே. குருவுடன் வாதம் செய்து வீழ்த்துவதில் அவருக்குச் சற்றும் விருப்பம் இருக்கவில்லை. அதை ஒரு துரதிருஷ்டமாகவே கருதினார்.

எனவே மீண்டும் குரு தன்னை அரவணைக்க முன்வந்தபோது அவருக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது.மீண்டும் வகுப்புகள் தொடங்கின. சிலநாள்கள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் அமைதியாகவே போனது. யாதவர் மெதுவாக ஆரம்பித்தார்.

'நாம் காசிக்கு யாத்திரை போனால் என்ன?''ஓ... போகலாமே' என்றார்கள் மாணவர்கள். பாவம் கரைக்கிற காசி. முனிவர்கள் வாழ்கிற காசி. முக்தியளிக்கிற காசி.'ராமானுஜா! நீ அவசியம் வரவேண்டும்.

இந்த யாத்திரை சிறப்படைவதே உன்னிடத்தில்தான் உள்ளது.''தங்கள் சித்தம்' என்றார் ராமானுஜர்.வீட்டுக்குப் போய் அம்மாவிடம் சொன்னார். மனைவி தஞ்சம்மாவிடம் சொன்னார். 'குருகுலத்தில் அனைவரும் காசி யாத்திரை போக முடிவாகியிருக்கிறது.''காசி யாத்திரையா? அது வெகுநாள் பிடிக்குமே?' என்றாள் தஞ்சம்மா. 'ஆம் தஞ்சம்மா.

ஆனால், இது ஓர் அனுபவம். எல்லோருக்கும் எளிதில் கிடைத்துவிடாத அனுபவம். நான் தனியாகப் போகப் போவதில்லை. என் குருநாதரும், உடன் படிக்கும் மாணவர்களும் எப்போதும் பக்கத்தில் இருப்பார்கள். என்னைப் பற்றிக் கவலை வேண்டாம்.'அவள் தன்னைப் பற்றித்தான் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள் என்பதை அப்போது ராமானுஜர் எண்ணிப் பார்க்கவில்லை.

அவரது சிந்தனை முற்றிலும் யாத்திரையில் இருந்தது. அது தரப்போகிற பரவசப் பேரனுபவத்தில் இருந்தது. 'கோவிந்தன் வருகிறானோ?' என்றார் தாயார் காந்திமதி. ராமானுஜர் பயின்ற அதே பாடசாலையில்தான் அவரது தமக்கை மகன் கோவிந்தனும் படித்துக் கொண்டிருந்தான். அவன் பக்கத்தில் இருந்தால், ராமானுஜனை பத்திரமாகப் பார்த்துக் கொள்வான்.

பொறுப்பறிந்தவன் என்பது தவிர, அண்ணன் மீது அவனுக்கு அளவற்ற பாசமும் உண்டு.'அத்தனை பேரும் கிளம்புகிறோம் அம்மா. இது குருவின் விருப்பம். முடியாது என்று சொல்ல நாங்கள் யார்?'கிளம்பி விட்டார்கள். வேத மந்திரங்களைச் சொல்லிக்கொண்டே நடக்கத் தொடங்கினார்கள். அதிகாலை சூரிய உதயத்துக்கு முன் கிளம்பி, உச்சி வேளை வரை நடைப் பயணம்.

அதன்பிறகு உணவும் ஓய்வும். மீண்டும் மாலை கிளம்பி இருட்டும் வரை நடப்பது. எங்காவது சத்திரங்களில் படுத்துத் துாங்கி, மீண்டும் காலை நடை. ஆங்காங்கே, குரு வகுப்பு எடுப்பார். அந்தந்தப் பிராந்தியங்களில் வசிக்கும் மக்களோடு உரையாடு வார்கள். எதிர்ப்படும் கோயில்களில் வழிபாடு. நாள்கள் வாரங்களாகி, மாதங்களைத் தொட்டபோது அவர்கள் விந்திய மலைப் பிராந்தியத்தை அடைந்திருந்தார்கள்.

மத்தியப் பிரதேசத்து நிலப்பகுதி. இந்தியாவை வட, தென் பிராந்தியங்களாகப் பிரிக்கிற மலைத்தொடர். நடந்து போகிறவர்களுக்கு அதுதான் பாதை. விந்திய மலையைத் தொட்டு, அதன் வழியாகவே உத்தர பிரதேசத்தில் கங்கை பாயும் வாரணாசியை அடைகிற வழி.இருட்டிய பொழுதில், அவர்கள் மலைக்காட்டில் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து படுக்க ஒதுங்கினார்கள். நடந்த களைப்பில், ராமானுஜர் படுத்தவுடன் உறங்கிவிட்டார்.

ஆனால், கோவிந்தன் உறங்கவில்லை. அவனுக்குச் சில குழப்பங்களும், பல சந்தேகங்களும் இருந்தன. வழி முழுதும் மாணவர்கள் தமக்குள் ரகசியம் பேசியபடியே வந்ததை அவன் கவனித்திருந்தான். அவன் கவனிப்பது தெரிந்தால், சட்டென்று அவர்கள் பேச்சை நிறுத்தி விடுவார்கள். அதேபோல, யாதவருக்கு நெருக்கமான சில மாணவர்கள் அவருடன் தனியே சில சமயம் உரையாடிக் கொண்டிருந்ததை அவன் கவனித்தான்.

வேதபாடம் தொடர்பான உரையாடலாக இருக்குமோ என்று அவன் பக்கத்தில் போனால், அடுத்தக்கணம் அவர்கள் எழுந்து போய்விடுவார்கள்.ஒரு சிலருடன் மட்டும் குரு தனியே பேச வேண்டிய அவசியமென்ன? தான் நெருங்கும் போதெல்லாம் பேச்சு துண்டிக்கப்படுவதன் காரணம் என்ன? அவனது குழப்பத்தின் அடிப்படை அதுதான்.

அதனாலேயே, இரவு நெடுநேரம் துாங்காமல் வெறுமனே கண்மூடிப் படுத்திருப்பதை வழக்கமாக்கிக் கொண்டான். மனிதர்களின் உறக்கத்தை மாய இறப்பாகவே கருதி விடுகிற சக மனிதர்கள். தன்னிலை மறந்து ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள, இரவுப் பொழுதுகளையே அவர்கள் பெரிதும் நம்புகிறார்கள். கோவிந்தன் நினைத்தது பிழையல்ல. அன்று அது நடந்தது. 'நாம் எப்போது கங்கைக் கரையை அடைவோம்?' 'இன்னும் இருபது நாள்கள் ஆக லாம் என்று குருநாதர் சொன்னார்.' 'அதற்குமேல் தாங்காது.

சென்ற டைந்த மறுநாளே ராமானுஜன் கதையை முடித்துவிட வேண்டும்.' கோவிந்தனுக்குத் துாக்கி வாரிப் போட்டு விட்டது. அவர்கள் உறங்கும் வரை காத்திருந்தான். பிறகு பாய்ந்து சென்று ராமானுஜரைத் தட்டி எழுப்பினான். 'அண்ணா, நீங்கள் ஒரு கணம் கூட இனி இங்கே இருக்கக் கூடாது. உங்களைக் கொல்ல சதி நடக்கிறது. ஓடி விடுங்கள்''ஐயோ, நீ?' என்றார்.

ராமானுஜர்.'நீங்கள் காணாமல் போனது பற்றிக் கதைகட்டிவிடவாவது நான் இங்கே இருந்தாக வேண்டும். என்னை நான் பார்த்துக் கொள்வேன். நீங்கள் உடனே கிளம்புங்கள்.''இறைவன் சித்தம்' என்று ராமானுஜருக்குத் தோன்றியது.

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 22, 2017 9:59 am

வேடமிட்டவன் - 7

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 C03I6U4RCe8h7pj8u0Og+dex

பாதையற்ற கானகத்தில் எந்தப் பக்கம் போவது என்று ராமானுஜருக்குப் புரியவில்லை. பகலென்றால் திசை தெரியும். கவிந்த இரவுக்கு கடவுளைத் தவிர வேறு துணையில்லை. ஆனது ஆகட்டும் என்று அவர் புறப்பட்டார். கால் போன போக்கில் நடந்து கொண்டே இருந்தார்.

கோவிந்தன் சொன்ன தகவலும், அவனுக்கு இருந்த பதற்றமும் வேகமும், திரும்பத் திரும்ப அவரது நினைவில் மோதிக்கொண்டே இருந்தன. கொலைத் திட்டம். இவன் இருக்கவே கூடாது என்று நினைக்குமளவுக்கு அப்படி என்ன செய்தேன்? எத்தனை யோசித்தும் புரியவில்லை. 'மீண்டும் வகுப்புக்கு வா' என்று வீட்டுக்கு வந்து அழைத்தவர்கள்தாம், காசிக்கு அழைத்துச் சென்று கங்கையில் அழுத்திக் கொல்லத் திட்டம் தீட்டியிருக்கிறார்கள். குருவுக்குத் தெரியாமலா இது நடக்கும்?

'அண்ணா, என்னை மன்னியுங்கள். திட்டத்தை வகுத்துக் கொடுத்ததே குருவாகத்தான் இருக்கும் என்பது என் சந்தேகம்.' வழி நெடுக யாதவர் அந்தச் சிலபேரைத் தனியே அழைத்துப் பேசியது. தற்செயலாகத் தான் குறுக்கிட்ட போதெல்லாம் பேச்சை நிறுத்தியது. பயணம் முழுதும் கூடியவரை தன்னையும் ராமானுஜரையும் அதிகம் பேசிக்கொள்ள முடியாதபடிக்குப் பிரித்து வைத்தது.

யோசிக்க யோசிக்க கோவிந்தனுக்கு இன்னும் பல காரணங்கள் அகப்பட்டன.'இனி என் முகத்திலேயே விழிக்காதே என்று துரத்தியடித்த குரு, நீங்கள் திரும்பி வந்தபோது ஒன்றுமே நடவாததுபோல எப்படிக் கட்டித் தழுவி வரவேற்றார் என்று யோசித்துப் பாருங்கள் அண்ணா. எனக்கு அதுவே திருதராஷ்டிரத் தழுவலாகத்தான் இப்போது படுகிறது.'ராமானுஜருக்குத் துக்கம் ததும்பியது. வேதத்தில் கரை கண்ட ஞானவித்து. வயதான மனிதர். தன் இருப்பு அத்தனை அச்சத்தைத் தந்திருக்குமா அவருக்கு? அழித்துவிடும் அளவுக்கா?

'இது, நீங்கள் யார் என்று உங்களுக்கே தெரியப்படுத்த நிகழ்ந்த சம்பவமாக இருக்கட்டும். நீங்கள் இருந்தாக வேண்டும் அண்ணா. போய் விடுங்கள். ஓடி விடுங்கள்.'திரும்பத் திரும்பச் செவியில் மோதியது கோவிந்தனின் குரல். ராமானுஜர் நடந்து கொண்டே இருந்தார். அன்றிரவு முழுதும் நடந்து, மறுநாளும் நடந்து, வானம் இருட்டும் முன் கண் இருட்டிக் கீழே விழுந்தார்.

எத்தனை நேர உறக்கமோ. யாரோ எழுப்புவது போலிருந்தது. விழித்தபோது, எதிரே ஒரு வேடர் தம்பதி நின்றிருந்தார்கள்.'வெளியூரா?' 'ஆம் ஐயா. இந்தக் காட்டில் எனக்கு வழி தெரியவில்லை. நான் தெற்கே போக வேண்டியவன்.' 'நாங்கள் சத்யவிரத க்ஷேத்திரத்துக்குத்தான் போய்க் கொண்டிருக்கிறோம். பேச்சுத் துணைக்கு ஆச்சு. புறப்படுங்கள்' என்றான் வேடன். சத்ய விரத க்ஷேத்திரம். ராமானுஜருக்கு சிலிர்த்து விட்டது. காஞ்சிக்கு அதுதான் பெயர். எங்கிருந்தோ வந்தான். நானொரு வேடன் என்றான். இங்கிவனை நான் பெற எப்போதோ தவம் புரிந்திருக்கத்தான் வேண்டும்.

உற்சாகமாக அவர்களுடன் ராமானுஜர் புறப்பட்டு விட்டார்.மறுநாள் இரவு வரை அவர்கள் பேசிக்கொண்டே நடந்தார்கள். அப்போதும் கானக எல்லை வந்தபாடில்லை. அதே விந்தியம். அதே முரட்டுக் காடு. அதே பாதையற்ற பயணம். போய்ச்சேர எத்தனை மாதங்கள் ஆகப் போகிறதோ தெரியவில்லை. அன்றிரவு அவர்கள் மூவருக்குமே பயங்கரப் பசி. ஆனால் உண்ண ஒன்றுமில்லை. பருக நீருமற்ற வறண்ட பகுதியாக இருந்தது அது. சகித்துக் கொண்டு இரவைக் கழிக்கப் படுத்தார்கள்.

விடிவதற்குச் சற்று நேரம் முன்பாக, அந்த வேடுவனின் மனைவியின் முனகல் கேட்டது. தாகம். தாங்க முடியாத தாகம். தண்ணீர் வேண்டும். 'கொஞ்சம் பொறுத்துக்கொள். பொழுது விடிந்து விடட்டும். இங்கிருந்து சிறிது துாரத்தில் ஒரு கிணறு இருக்கிறது. அதன் நீர் அமிர்தத்தினும் மேலானதென்று கேள்விப்பட்டிருக்கிறேன்' என்று வேடுவன் ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்தது ராமானுஜரின் காதில் விழுந்தது. சட்டென்று அவர் உதறிக்கொண்டு எழுந்தார்.

'ஐயா நீங்கள் எனக்கு உதவி செய்தவர்கள். உங்கள் மனைவியின் தாகத்தைத் தணிக்கும் புண்ணியமாவது எனக்குக் கிடைக்கட்டும். இருட்டானாலும் பரவாயில்லை. நீங்கள் திசை சொல்லுங்கள். நான் அந்தக் கிணற்றைத் தேடிச் சென்று நீர் எடுத்து வருகிறேன்' என்றார்.வேடுவன் புன்னகை செய்தான். குத்துமதிப்பாகக் கை காட்டி வழி சொன்னான். ராமானுஜர் நடக்க ஆரம்பித்தார். இந்த அடர் கானகத்தில் யார் கிணறு வெட்டியிருப்பார்கள்? அதுவும் அமிர்தத்தினும் மேலான நீர் உள்ள கிணறாமே?

அரை மணி தேடி அந்தக் கிணற்றைக் கண்டுபிடித்தார். ஆனால், நீர் எடுத்து வர கைவசம் ஒன்றுமில்லை.
ஆனது ஆகட்டும் என்று கிணற்றில் இறங்கி, தன்னிரு கைகளில் நீரை அள்ளி ஏந்திக்கொண்டு அலுங்காமல் மேலேறி வந்தார். வந்த வழியே திரும்பிச் சென்று அந்த வேட்டுவப் பெண்ணின் வாயில் நீரை விட்டார். 'இவ்வளவு தான் முடிந்ததா?' என்றாள் அந்தப் பெண்.

'பிரச்னை இல்லையம்மா! நான் மீண்டும் சென்று நீர் ஏந்தி வருகிறேன்.'இரண்டாவது முறையும் அரை மணி நடந்து நீர் எடுத்து வந்தார் ராமானுஜர். 'ம்ஹும்... தாகம் தணியவில்லை. எனக்கு இன்னும் வேண்டும்.' மூன்றாவது முறை ராமானுஜர் அந்தக் கிணற்றுக்குச் சென்று நீர் எடுத்து வந்து பார்த்தபோது, அந்த வேடர் தம்பதி அங்கே இல்லை.

இருட்டில் நடந்து கொண்டே இருந்த களைப்பு. பசி மயக்கம். அப்படியெங்கே கண் காணாமல் போயிருப்பார்கள் என்கிற குழப்பம் தந்த கிறுகிறுப்பு. ராமானுஜர் அப்படியே கண்சொருகிச் சரிந்தார்.

விழித்தபோது விடிந்திருந்தது. வழிகாட்ட உடன் வந்த வேடுவத் தம்பதி, பாதி வழியில் பரிதவிக்க விட்டுக் காணாமல் போனது பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்க நேரமில்லை. ராமானுஜர் மீண்டும் அந்தக் கிணற்றடியை நோக்கி நடந்தார்.இப்போது அங்கே நாலைந்து பெண்கள் இருந்தார்கள்.

தண்ணீர் எடுக்க வந்த உள்ளூர்க்காரர்கள்.'அம்மா, இது எந்த இடம்?''நீங்கள் எங்கே செல்ல வேண்டும்?' 'நான் தெற்கே காஞ்சிக்குப் போக வேண்டும் தாயே. வழி தெரியாத விந்தியமலை காட்டுப்பாதையில் சிக்கிக்கொண்டு விட்டேன்.'அந்தப் பெண்கள் அவரை வினோதமாகப் பார்த்தார்கள்.'சொல்லுங்கள் அம்மா. இது எந்த ஊர்? எந்த இடம்? இங்கிருந்து நான் எப்படிப் போக வேண்டும்?''என்னப்பா நீ அசடாயிருக்கிறாயே. காஞ்சிக்கே வந்து சேர்ந்துவிட்டு, காஞ்சிக்கு வழி கேட்கிறவனுக்கு என்ன பதில் சொல்ல முடியும்?' என்று கேட்டார்கள்.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 22, 2017 10:03 am

கருணைப் பெருவெள்ளம் - 8


பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 TPHWNctQnOKJRXPhSIzk+Tamil_News_large_1693885_318_219

அற்புதங்கள் எப்போதேனும் நிகழ்கின்றன. அதற்கான நியாயங்களும் காரணங்களும் இறைவனால் தீர்மானிக்கப்படுகின்றன. ஒளியும் நீரும் படைக்கப்பட்டது ஓர் அற்புதமென்று எண்ண முடியுமானால், ஒளிந்திருந்து ஆடும் ஆட்டங்களின் உள்ருசியை உணர்வது சிரமமாக இராது.

ராமானுஜர் ஒரு கணம் சிந்தித்துப்பார்த்தார். தனக்கு நேர்ந்த அற்புத அனுபவத்துக்கு யாருக்கு நன்றி சொல்வது? ஒரே இரவில் விந்திய மலைச் சாரலில் இருந்து காஞ்சி மாநகரத்துக்கு வந்து சேர்வதென்பது கற்பனையிலும் நடக்காத காரியம். ஆனால் நடந்திருக்கிறது. அந்த வேடுவ தம்பதிக்கு நன்றி சொல்வதா? வேடுவர் வடிவில் காஞ்சிப்பேரருளாளனும் பெருந்தேவித் தாயாருமே தனக்கு வழித்துணையாக வர வழி செய்தது எது? யாதவர் மட்டும் காசி யாத்திரைக்கு அழைத்திராவிட்டால் இப்படியொரு அனுபவம் வாய்த்திருக்குமா? அவருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டுமா?

களைப்பு கொடுத்த அயற்சியில் அந்த இரவு துாங்கிக்கொண்டுதான் இருந்திருக்கிறேன். எனக்காக விழித்திருந்து காப்பாற்றிய கோவிந்தன் இல்லாது போனால் இது நடந்திருக்குமா? அவனுக்கு இல்லாத களைப்பா? அவனும் கால் கடுக்க நடந்தவன் தான். உண்மையில் நன்றிக்குரியவன் அவன்தானா? தேவரீர் இன்னும் என் வினாவுக்கு விடை சொல்லவில்லை' என்று மெல்ல நினைவூட்டினான் தாசரதி.

நினைவு மீண்ட ராமானுஜர் மீண்டும் புன்னகை செய்தார். துறவுக் கோலம் பூண்டிருந்த தருணம். தாசரதி என்கிற முதலியாண்டானையும், கூரத்தாழ்வானையும் முதலிரு சீடர்களாக ஏற்று அமர்ந்திருந்த நேரம். 'துறவு கொண்ட கணத்தில் யாரை நினைத்தீர்கள்?' என்று முதலியாண்டான் கேட்கிறான்.

என்ன பதில் சொல்வது? காளஹஸ்தியில் தங்கிவிட்ட கோவிந்தனை மீட்டுக் கொண்டு வந்து பக்கத்தில் இருத்திக்கொண்டாலொழிய எந்த பதிலும் பூரணமடையாது. அது தம்பி உறவு கொடுத்த பாசமல்ல. தடம் மாறிச்சென்றவனை மீட்டாக வேண்டும்என்கிற கடமையுணர்ச்சி கொடுத்த பரிதவிப்பு.உண்மையில் அது கடமைதானா?

விந்தியக் காடுகளில் தடம் மாறிச் சென்ற தன்னை, வேடுவர் தம்பதி காஞ்சிக்குக் கொண்டு வந்து சேர்த்தது அவருக்கு நினைவுக்கு வந்தது. கடமையின் மீது சற்று அன்பை தெளித்தால் அது கருணையாகி விடுகிறது. என்றால், தன்மீது மட்டும் அப்படியொரு கருணைப் பெருமழையைப் பொழிய என்ன காரணம்?அவரால் அப்போதும் நம்ப முடியவில்லை. அந்தக் கிணற்றுக்கு சாலைக் கிணறு என்று பேர்.

காஞ்சியில் இருந்து நாலு கல் தொலைவு (ஏழு கிலோ மீட்டர்). செவிலிமேடு என்று அந்த இடத்தைக் குறிப்பிடுவார்கள்.'அதோ பாருங்கள். வரதர் கோயில் விமானம் தெரிகிறதா?' அந்தப் பெண்கள் சுட்டிக்காட்டிய போதுதான் ராமானுஜருக்கு நடந்தது புரிந்தது.

ஓரிரவில் ஒரு ஒளியாண்டையே கடந்தாற் போன்ற அனுபவம். யாரிடம் சொல்ல முடியும்? யாருக்குப் புரியும்? 'எனக்குப் புரிகிறது மகனே!' என்றார் காந்திமதி. வீட்டுக்கு வந்து நடந்ததை விவரித்த போது, ராமானுஜரின் தாயார் தாங்க முடியாத பரவசப் பெருவெள்ளத்தில் திக்குமுக்காடிப்போனார். தஞ்சம்மாவுக்குக் கணவர் வீடு திரும்பியதே பெரிய விஷயமாக இருந்தது.

அதுவும் ஒரு கொலை முயற்சியில் இருந்து தப்பித்து வந்து சேர்ந்திருக்கிற மனிதர். 'வேண்டாம். இனி அந்த குருகுலத்துக்கு தயவுசெய்து போகாதீர்கள்! கற்றது போதும். இனி எனக்குக் கணவராக மட்டும் இருங்கள்!'ராமானுஜர் புன்னகை செய்தார். கற்பதற்கு அளவேது? போதுமென்ற நிறுத்தற்குறி ஏது? 'ஆனால் அந்த இடம் வேண்டாம் என்றுதான் எனக்கும் தோன்று கிறது மகனே. நீ உடனே கோயிலுக்குச் சென்று திருக்கச்சி நம்பியைப் பார். அவர் உனக்கு வழி காட்டுவார்' என்றார் காந்திமதி.

ஆ! திருக்கச்சி நம்பி, அருளாளனின் அன்பரல்லவா? அவரோடு உரையாடக்கூடிய வல்லமை கொண்ட மகான் அல்லவா? தாயார் சொல்வது சரி. அவர்தான் இனி தன்னை வழி நடத்த வேண்டும். அன்றே, அப்போதே கிளம்பினார் ராமானுஜர். வரதர் கோயிலில் அதே ஆலவட்ட கைங்கர்யம் செய்து கொண்டிருந்த திருக்கச்சி நம்பியை நெருங்கி சாஷ்டாங்கமாக விழுந்து சேவித்தார்.

'ஐயா, என்னைச் சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள். எனக்கு வழி காட்டுங்கள். வேறு போக்கிடம் ஏதும் எனக்கு இனி இல்லை.' 'எழுந்திருங்கள் இளையாழ்வாரே! நீங்கள் யாதவருடன் காசிக்குச் சென்றிருப்பதாக அல்லவா சொன்னார்கள்?' ஒரு கணம் யோசித்த ராமானுஜர் திடமாக நடந்ததை மாற்றிச் சொன்னார்.

'ஆம் ஐயா. ஆனால் வழி தவறிவிட்டேன். எனவே பாதியில் திரும்பும்படியாகி விட்டது.' கொலை நோக்கம் கொண்டவரென்றாலும் குருவாகி விட்டவர். அவர் பெற்றிருக்கிற பெயருக்குக்களங்கம் சேர்ப்பானேன்? பொய்மையும் வாய்மை இடத்து. திருக்கச்சி நம்பி நீண்ட நேரம் யோசித்தார். 'தேவரீர் எனக்குக் கருணை காட்ட மாட்டீர்களா? பேரருளாளனின் நிழலில் வாழ்பவர் நீங்கள். உமது நிழலில் நான் இளைப்பாறக் கூடாதா? எனக்கு அதற்கு இடமில்லையா? அத்தனைக் கீழ்மகனா நான்?'பதில் இல்லை.

'சரி போகட்டும். அருளாளனுக்குச் செய்யும் கைங்கர்யமாகவேனும் எனக்கு எதையாவது ஒதுக்கிக் கொடுங்களேன்!''கேட்டுச் சொல்கிறேன், நாளை வாரும்' என்று சொல்லிவிட்டார் திருக்கச்சி நம்பி. அன்றிரவு நடை சாத்தும் நேரத்துக்கு முன்பாக, ஆலவட்ட கைங்கர்யத்தை முடித்துவிட்டு அவர் அருளாளனிடம் பேச்சுக் கொடுத்தார். 'ராமானுஜர் இன்று என்னைச் சந்தித்தார். என்னை குருபீடம் ஏற்கச் சொல்கிறார். உமக்குக் கைங்கர்யம் செய்யவும் பிரியப்படுகிறார்.

நான் என்ன பதில் சொல்வது?' பேசும் தெய்வம் வாய் திறந்தது. 'அவரைச் சிலகாலம் சாலைக் கிணற்றில் இருந்து திருமஞ்சனத்துக்கும் (அபிஷேகம்), திருவாராதனத்துக்கும் (சமையல்) தினசரி நீர் எடுத்து வரச் சொல்லும். தாயாருக்கு உகந்த தீர்த்தம் அது. அவருக்கேற்ற ஆசாரியர் விரைவில் வந்து சேர்வார்.' மறுநாள் காலை விடியும் நேரமே திருக்கச்சி நம்பியின் இருப்பிடத்துக்குச் சென்று விட்டார் ராமானுஜர்.'அடியேன், பேரருளாளனின் உத்தரவென்ன என்று தெரிந்து செல்ல வந்தேன்.'

'தாயாருக்கு உகந்த சாலைக் கிணற்றிலிருந்து உம்மை தினசரி திருவாராதனத்துக்கும், திருமஞ்சனத்துக்கும் ஒரு குடம் நீர் எடுத்து வரச் சொல்லி உத்தரவாகியிருக்கிறது.'சாலைக் கிணறு. தாயாருக்கு உகந்த தீர்த்தம். அந்தக் கணத்தில்தான் ராமானு ஜருக்கு அது விளங்கியது. வந்த வேடுவர் தம்பதி வேறு யாருமில்லை. பேரருளாளனும், பெருந்தேவித் தாயாருமேதான். எம்பெருமானே! இந்த அற்பன்மீதா இத்தனைக் கருணை! தன்னை மறந்து அவர் கைகூப்பி நின்றார். அவரது கண்களில் இருந்து கரகரவென நீர் சுரந்தபடியே இருந்தது.

தொடரும்..



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 22, 2017 10:08 am

உள்ளங்கைக் கொணர்ந்த நாயனார் - 9

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 KVVQVzmTTPaSDnxUZPUy+Tamil_News_large_1694505_318_219

கங்கைக் கரைக்கு யாத்திரை செல்லலாம் வா என்று யாதவப் பிரகாசர் கூப்பிட்டிருந்தார். ஆனால், ராமானுஜருக்கு வாய்த்தது கிணற்றங்கரை யாத்திரை. அது குருவின் அழைப்பு. இது பேரருளாளனின் உத்தரவு. அது வாழ்விலே ஒருமுறை. இது வாழும் கணமெல்லாம். எத்தனை பேருக்குக் கிடைக்கும்? அவன் பேரருளாளன்தான். ஆனால், தனக்கு வாய்த்த அருள் பெரிதினும் பெரிதல்லவா? இன்னொருவர் எண்ணிப் பார்க்க இயலாததல்லவா?

திருக்கச்சி நம்பியை மானசீகமாக வணங்கிவிட்டு, மறுநாள் காலை முதலே ராமானுஜர் தமது கைங்கர்யத்தை ஆரம்பித்து விட்டார். விடிகிற நேரம் குளித்து, திருமண் தரித்து சாலைக் கிணற்றுக்குச் சென்றுவிட வேண்டியது ஒரு குடம் நீர். அதில்தான் திருமஞ்சனம் நடக்கும். தாயாருக்கு உகந்த நீர். இரண்டு முறை தன் கைகளால் அள்ளி ஏந்தி வந்ததை வாங்கிப் பருகிய பெருந்தேவித் தாயார். மூன்றாம் முறை நீர் எடுத்துச் சென்றபோது தான் இருவருமே மறைந்து நின்று மாயம் காட்டினார்கள்.நல்லது. நீரின்றி எதுவுமில்லை. எல்லாம் தொடங்குவது நீரில்தான். நிறைவடைவதும் அதிலேயேதான்.

ராமானுஜரின் மிக நீண்ட யாத்திரை அங்கே தொடங்கியது.மறுபுறம் விந்திய மலைக்காட்டில் யாதவர் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தார். 'எங்கே ராமானுஜன்? எங்கே போனான்? எப்படித் தவறவிட்டோம்?''பதறாதீர்கள் குருவே. நாம் கங்கைக்கு அழைத்துச் சென்று செய்ய நினைத்ததை இங்கே காட்டு மிருகம் ஏதாவது செய்திருக்கும்.' என்றார்கள் சீடர்கள்.யாதவப் பிரகாசர் கோவிந்தனைத் தனியே அழைத்தார்.

'கோவிந்தா, நீ சொல். எங்கே உன் அண்ணன்? உன்னிடம் சொல்லாமல் அவன் எங்கும் போயிருக்க முடியாது.''என் கவலையும் அதுதான் ஐயா. விடிந்தது முதல், இக்காடு முழுவதும் அவரைத் தேடித் திரிந்துவிட்டு வருகிறேன். எங்குமே அவர் கண்ணில் படவில்லை. எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. என் பெரியம் மாவுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்?'கண்ணீரும் கவலையுமாக கோவிந்தன் பேசியது யாதவருக்கு மேலும் கவலையளித்தது.

கோவிந்தன் அதை முன்னதாகத் தீர்மானித்திருந்தான். ஆத்ம சுத்தியுடன் நடந்ததை மறைத்துவிடுவது. தன் மூலம்தான் அண்ணன் தப்பித்தார் என்பது தெரிந்தால் தன்னை பலி கொடுத்து விடுவார்கள். உதட்டில் வேதமும் உள்ளத்தில் குரோதமுமாக என்ன பிழைப்பு இது! 'சரி, நாம் போகலாம்' என்றார் யாதவப் பிரகாசர். வழி முழுதும் கோவிந்தனுக்கு அவர் ஆறுதல் சொல்லிக்கொண்டே வந்தார். உள் மனத்தில் ஓர் உறுத்தல் இருந்தது.

ராமானுஜரைக் கொல்ல நினைத்துத்தான் அவர் அந்த யாத்திரைத் திட்டத்தையே வகுத்தார். ஆனால், பாதி வழியிலேயே தான் நினைத்தது நடந்துவிட்டது. கொன்ற பாவம் தன்னைச் சேராதுதான். ஆனால் மனச்சாட்சி எப்படிக் கொல்லாதிருக்கும்? வெளியிலும் காட்டிக்கொள்ள முடியாது.

கோவிந்தன் இருக்கிறபோது மற்ற மாணவர்களிடம் மனம் விட்டுப் பேசவும் முடியாது. வெப்பம் கவிந்த யோசனைகளுக்குத் தன்னைத் தின்னக்கொடுத்தவராக வாரணாசியை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.இரு வாரப் பயணத்துக்குப் பிறகு அவர்கள் காசியை அடைந்தார்கள்.

'என் அன்புக்குரிய மாணவர்களே, நமது ராமானுஜன் இன்று நம்மோடு இல்லை. அவனுக்கும் நல்ல கதி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டு கங்கையில் நீராடுங்கள்.'அவர்கள் வேத மந்திரங்களை முழங்கிக்கொண்டு கங்கையில் இறங்கினார்கள். கோவிந்தனும் இறங்கினான். அவர்கள் மும்முறை மூழ்கி எழுந்தார்கள். கோவிந்தனும் மூழ்கி எழுந்தான்.

அவர்கள் கரை ஏறியபோது கோவிந்தன் மட்டும் ஏறவில்லை.அங்கே சாலைக் கிணற்றில் இருந்து மூன்றாவது முறையாக வேடுவப் பெண்ணுக்கு நீர் ஏந்திக்கொண்டு ராமானுஜர் வந்தபோது பேரருளாளனின் லீலாவினோதம் அரங்கேறிய மாதிரி, இங்கே கங்கையில் மூன்றாவது முறை மூழ்கி எழுந்த கோவிந்தனின் கரங்களில் ஒரு சிவலிங்கம் வந்து சேர்ந்திருந்தது!'ஆஹா! ஆஹா!' என்று பரவசப்பட்டுப் போனார் யாதவப் பிரகாசர்.

'இது எல்லோருக்கும் வாய்க்காது கோவிந்தா. லட்சம் பேர் தினமும் கங்கையில் குளித்தெழுகிறார்கள். அவர்களில் எத்தனை பேரின் கரங்களில் சிவபெருமான் வந்து சேர்ந்திருக்கிறார்? ஒருவருக்கும் இல்லை; நான் உள்பட! உன்னை அவன் தேர்ந்தெடுத்திருக்கிறான். உன் பிறப்பு அர்த்தமுள்ளது. இனி நீ 'உள்ளங்கைக் கொணர்ந்த நாயனார்' என்று அழைக்கப்படுவாய்!'அவரது பரவசம் ஒரு வகையில் உண்மையானதுதான்.

மறுபுறம் ராமானுஜரின் தம்பியை ஒரு பூரணமான, நிரந்தரமான சிவபக்தனாக்கி விடக் கிடைத்த சந்தர்ப்பத்தைத் தவறவிடக்கூடாது என்ற எண்ணமும் அவருக்கு இருந்தது. பரபரவென்று கணக்குப் போட்டார். ஊருக்குப் போனதும் அத்தனை பேரும் ராமானுஜனைப் பற்றித்தான் விசாரிக்கப் போகிறார்கள்.

விந்திய மலைக்காட்டில் அவன் மிருகத்தின் பசிக்கு இரையான கதையைச் சொல்ல வேண்டும். ஐயோ என்று ஊரும் உறவும் கதறுகிற நேரம், கோவிந்தனுக்கு சிவபெருமான் அளித்த மாபெரும் அங்கீகாரத்தை எடுத்துச் சொல்லி சமாதானப்படுத்த வேண்டும். சர்வேஸ்வரனேதான் வழி காட்டியிருக்கிறான். இத்தனைக் காலம் வேதம் சொன்னதன் பலன் என்று எண்ணிக் கொண்டார்.கோவிந்தனும் மிகுந்த பரவச நிலையில்தான் இருந்தான். விவரிக்க முடியாத பேரானந்த நிலை.

அன்றிரவு அவனுக்குக் கனவில் ஒருகுரல் கேட்டது. 'கோவிந்தா, காளஹஸ்திக்கு வா.' அதே குரல்,காளஹஸ்தியில் இருந்த கோயில் குருக்களுக்கும் உத்தரவாக ஒலித்தது. 'என் பக்தன் என்னை ஏந்தி வருகிறான். அவனை இந்த ஊர் ஏந்திக் கொள்ளட்டும்.'யாதவரின் குழு காஞ்சிக்குத் திரும்பியபோது கோவிந்தன் மட்டும் காளஹஸ்தியிலேயே தங்கிவிட்டான். தன் உள்ளங்கையில் கொண்டுவந்த லிங்கத்தை அங்கே பிரதிஷ்டை செய்து அங்கேயே அமர்ந்துவிட்டான். இனி இதுவே என் இடம்.

இனி சிவனே என் சுவாசம்.நடந்ததையெல்லாம் ராமானுஜர் எண்ணிப் பார்த்தார்.'நான் எப்படி கோவிந்தனை மறப்பேன்? எப்படி அவனை இனியும் இங்கே வரவழைக்காமல் இருப்பேன்? நான் பரப்ப விரும்பும் வைணவ சித்தாந்தத்தின் வேர்தாங்கிகளுள் ஒருவனாக அவன் இருந்தாக வேண்டும். பேரருளாளனின் பிள்ளை வேறொரு கைங்கர்யம் செய்து கொண்டிருக்கலாகாது.' முதலியாண்டானுக்குப் புரிந்தது.

கூரத்தாழ்வானுக்குப் புரிந்தது. நடாதுாராழ்வான் என்று ராமானுஜரால் அழைக்கப்பட்ட வரத தேசிகனுக்குப் புரிந்தது. மூன்று சீடர்களுக்கும் குருவின் மனம் புரிந்த மறுகணம்முதலியாண்டான் சட்டென்று கேட்டான். 'எப்படி வரவழைப்பீர்?'ராமானுஜர் உடனே பதில் சொல்லவில்லை. கண்மூடி அமைதியாக இருந்தார். பெயர் வைத்தவரைத் தவிர உயர் வழியைச் சுட்டிக்காட்ட யாரால் முடியும் என்று அவருக்குத் தோன்றியது.

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 22, 2017 10:15 am

பெயரிட்ட பெரியவர் - 10

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 Am3rKpC1SMuodbokMCBF+Tamil_News_large_1695097_318_219

அவருக்கு இந்த உலகம் என்பது திருப்பதி மலையடிவாரத்தில் தொடங்கி, ஏழாவது மலை உச்சியில் உள்ள வேங்கடேசப் பெருமாளின் சன்னிதியில் முடிகிற பரப்பளவு கொண்டது. அவரது உலகத்தில் ஒருவர் மட்டுமே வசித்துக் கொண்டிருந்தார். வேங்கடம் எனும் அம்மலையின் பதியான எம்பெருமான். பெருமாளுக்கு தினசரி தீர்த்த கைங்கர்யம் செய்து கொண்டிருந்த அவரைப் பிராந்தியத்தில் பெரிய திருமலை நம்பி என்று அழைத்தார்கள்.

திருவரங்கத்தில் வைணவ நெறி தழைக்கச்செய்து கொண்டிருந்த ஆளவந்தாரிடம் சீடராக இருந்தவர் அவர். ஆளவந்தார்தான் ஒருநாள் கேட்டார். 'வேங்கடமலைப் பெருமானுக்குக் கைங்கர்யம் செய்ய, பொறுப்பாக யாராவது அங்கு இருக்க வேண்டியுள்ளதப்பா. நமது மடத்தில் இருந்து யார் போகத் தயார்?'சீடர்கள் எதிரே அமர்ந்திருந்தார்கள்.

குரு சொன்னால் எதுவும் செய்யச் சித்தமாயிருந்த சீடர்கள். திருக்கோட்டியூர் நம்பி அவர்களுள் ஒருவர். திருமலையாண்டான் இன்னொருவர். திருவரங்கப் பெருமாளரையர் மற்றவர். பெரிய நம்பி. மாறனேர் நம்பி. இன்னும் எத்தனையோ பேர். எப்போதும் குருவின் சொல் வெளிப்பட்டு முடிவதற்குள், 'நான் தயார்' என்று எழுந்து நிற்கும் அவர்கள், அன்றைக்கு அவர் கேட்டு முடித்து நெடுநேரம் ஆன பிறகும் யோசித்தபடியே இருந்தார்கள்.காரணம், சிறிது அச்சம். அவர்கள் திருப்பதி மலையைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார்கள்.

ஆளரவமற்ற அபாயகரமான பிராந்தியம். ஏழு மலைகளுள் எது ஒன்றிலும் பாதை கிடையாது. ஏறிச் செல்வதும், இறங்கி வருவதும் எளிய விஷயங்களல்ல. மலைமீது கோயில் கொண்டிருந்த எம்பெருமானுக்குக் காவலாக நுாற்றுக்கணக்கான மிருகங்கள் மலையில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. பசித்த மிருகங்கள். பெரும்பாலும் அவை மனிதர்களை அங்கு நடமாடக் கண்டதில்லை. காண நேர்ந்தால் சும்மா விட்டு வைக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.

ஒரு ஆத்திர சகாயத்துக்கு நாலு பேர் உடன் இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.'என்ன யோசிக்கிறீர்கள்?' என்றார் ஆளவந்தார்.யாரும் பதில் சொல்லாதிருந்த அச்சமயத்தில் ஒரு குரல் மட்டும் ஓங்கி ஒலித்தது. 'இன்றே கிளம்புவதா அல்லது நாளை கிளம்ப உத்தரவாகுமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் சுவாமி!'அவர்தாம் ஸ்ரீசைல பூர்ணர் என்று அழைக்கப்பட்ட பெரிய திருமலை நம்பி. ஆளவந்தார் புன்னகை செய்தார்.

அவரிடம் ராமாயணத்தின் உட்பொருள் பயில வந்தவர் அவர். தீயின் செஞ்சுடைப் போன்ற புத்திக் கூர்மை. புல்லின் மேல் படர்ந்த பனியின் உள்ளே ஊடுருவி, பிரபஞ்சத்தையே தரிசிக்கத் தெரிந்த பெரும் தெளிவு. ஆளவந்தாரின் பிரிய மாணாக்கர்.அன்றைக்குத் திருவரங்கத்தை விட்டுக் கிளம்பி திருமலைக்குச் சென்று சேர்ந்தவர்தான். அதன்பிறகு அவர் இறங்கி வந்தது, தமது தமக்கைக்குக் குழந்தை பிறந்திருக்கிறது என்று கேள்விப்பட்டபோதுதான்.

திருப்பெரும்புதுாரில் இருந்து மைத்துனர் ஆசூரி கேசவ சோமயாஜி தகவல் அனுப்பியிருந்தார். 'உமக்கு மருமகன் பிறந்திருக்கிறான். வந்து பார்த்து, பெயர் வைத்து ஆசீர்வதித்துச் செல்லவும்.'திருமலை நம்பிக்கு அதுவரை தனக்கு இரு தங்கைகள் இருக்கிற விஷயமே கூட நினைவில்லை. நாளும் பொழுதும் நாரணன் சேவையிலேயே கழிந்து கொண்டிருந்தது அவருக்கு. சட்டென்று மருமகன் பிறந்திருக்கிற செய்தி கிடைத்ததும் மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. உடனே ஜாதகத்தைக் கணித்துப் பார்த்தார்.

அது பிங்கள வருஷம் (கி.பி.1017). சித்திரை மாதம் பன்னிரண்டாம் தேதி வளர்பிறை பஞ்சமி திதி கூடிய வியாழக்கிழமை.

திருவாதிரை நட்சத்திரத்தில் மருமகன் மதியம் பன்னிரண்டு மணிக்கு ஜனித்திருக்கிறான்.ஆ..., ராகுவின் நட்சத்திரத்தில் அல்லவா பிறந்திருக்கிறான்? இவ்வுலகில் மாபெரும் மகான்கள், ஞானஸ்தர்கள் அத்தனை பேரும் இதுவரை ராகு அல்லது கேதுவின் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். தவிரவும் கடக லக்னம்.

அது தலைமைப் பதவிக்கான நுழைவாயில். லக்னாதிபதி சந்திரன் விரய ஸ்தானத்தில் இருக்கிறான். ஆக, ஆலயப் பணிகளில் நாட்டம் கொண்டவன். ஐந்தாம் இடத்தில் கேது உட்கார்ந்திருக்கிறான். சந்தேகமேயில்லை. ஒன்று சாம்ராஜ்ஜியம் அல்லது சன்னியாசம்தான்!பெரிய திருமலை நம்பி அன்றே கிளம்பி திருப்பெரும்புதுாருக்கு விரைந்தார்.

தங்கையின் மகனை அள்ளி ஏந்தி உச்சிமோந்து சீராட்டி னார். அவரது உள்ளுணர்வு அவருக்கு அனைத்தையும் சொன்னது. அது ஆதிசேஷன் அம்சம். வாராது வந்த மாமணி. குழந்தைக்கு இளையாழ்வான் என்று அவர்தான் பெயரிட்டது. 'காந்திமதி! உன் மகன் உலகை ஆளப் போகிறவன். அறத்தின் காவலனாக நின்று தழைக்கப் போகிறவன். இது அவதாரம். நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்.

' காந்திமதியும், கேசவ சோமயாஜியும் நெக்குருகிப் போனார்கள். பெரிய திருமலை நம்பியின் தாள் பணிந்து மகிழ்ந்தார்கள். அன்றைக்கு ராமானுஜருக்குப் பெயர் வைத்துவிட்டுப் போன பெரிய திருமலை நம்பி மீண்டும் மலையை விட்டு இறங்கி வந்தது, ஏழு வருடங்கள் கழித்து அடுத்த தங்கைக்கு பிள்ளை பிறந்தபோதுதான். அவள் காந்திமதிக்கு இளையவள்.

பெரிய பிராட்டி என்று பேர். அவள் பிள்ளைக்கு கோவிந்தன் என்று பெயர் வைத்தார் நம்பி.'இவன் இளையாழ்வானுக்குப் பிந்தி பிறந்தவன் மட்டுமல்ல தங்கையே. அவனுக்கு நிழலே போல் எப்போதும் உடனிருக்கப் போகிறவனும் கூட. அவனால் தழைக்கப் போகிற அறங்களுக்கு இவன் காவலனாக இருக்கப் போகிறான்.' என்று சொல்லிவிட்டுப் போனார். அதைத்தான் ராமானுஜர் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அதனால் வந்ததுதான் அந்தப் புன்னகை. அதனாலேயேதான் அவர் கோவிந்தனை மீட்டுக் கொண்டு வரும் பொறுப்பைப் பெரிய திருமலை நம்பியிடம் விட்டுவிடலாம் என்று நினைத்தார்.விவரம் தெரியாத ஒருவன் என்றால் யார் வேண்டுமானாலும் பேசி, மனத்தை மாற்றிவிட முடியும். கோவிந்தன் அப்படியல்ல. வேத வேதாந்தங்கள் பயின்றவன். பெரிய ஞானஸ்தன். ஒரு தரிசனம் போல் அவனுக்கு ஏதோ நேர்ந்திருக்கிறது. கங்கையில் கிடைத்த சிவலிங்கம்.

ஒரு பெரும் பரவச நிலையில் காளஹஸ்தியில் சிவஸ்மரணையில் லயித்துப் போனவன்.'எனக்கு அவன் வேண்டும் முதலியாண்டான்! வைணவ தரிசனம் வையம் முழுதும் பரவ வேண்டுமென்றால் அதற்கு வைராக்கிய சீலர்களின் தோள் வேண்டும். கோவிந்தனை மீட்டு வர நான் பெரிய திருமலை நம்பியைத்தான் நம்பியாக வேண்டும்' என்றார் ராமானுஜர். பேசிக்கொண்டிருந்தபோது மடத்தின் வாயிலில் யாரோ வருவது தெரிந்தது. 'யாரது...?' என்றார் ராமானுஜர்.உள்ளே நுழைந்தவர் ஒரு வயதான பெண்மணி. யாதவப் பிரகாசரின் தாயார்.

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 24, 2017 10:33 pm

அம்மா, நலமா? 11

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 NDKb41pcRzuyj7qj79Kj+Tamil_News_large_1695462_318_219

என்னைத் தெரிகிறதா மகனே? நினைவிருக்கிறதா?'நெருங்கி வந்து கரம் கூப்பிக் கேட்ட அந்தக் கிழவியைக் கண்டதும், துள்ளி எழுந்தார் ராமானுஜர்.

'அம்மா, வரவேண்டும். நலமாக இருக்கிறீர்களா? யாதவர் நலமாக உள்ளாரா?' அவள் பதில் சொல்லவில்லை. தன்னெதிரே தகதகவென ஆன்ம ஒளி மின்னப் புன்னகையுடன் நின்றிருந்த ராமானுஜரைத் தலைமுதல் கால் வரை விழுங்கிவிடுவது போலப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

'என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்? உட்காருங்கள்.''என்னை மன்னிக்க வேண்டும். பழைய நினைவில் உங்களை மகனே என்று அழைத்து விட்டேன். குரு ஸ்தானத்தில் இருக்கிறவர் தாங்கள். தவிரவும் சன்னியாசி. என்னை ஆசீர்வதியுங்கள்' என்று தாள் பணியப் போனவரை ராமானுஜர் தடுத்தார்.

'அப்படிச் சொல்லாதீர்கள் தாயே. இப்பூவுலகைத் தாங்குவதும் பெண்கள்தாம், உலகு தழைப்பதும் பெண்களால்தான். சாட்சாத் பெருந்தேவித் தாயாரேதான், இவ்வுலகில் தோன்றும் அத்தனை பெண்களாகவும் இருக்கிறவள். உமது மகனும், எனது பழைய குருவுமான யாதவரைக் கேட்டுப்பாருங்கள். அவர் நம்பும் அத்வைத சித்தாந்தத்தை வகுத்தளித்த ஆதிசங்கரர், எப்பேர்ப்பட்ட துறவி!

ஆனாலும், தமது தாயார் காலமானபோது அவருக்குச் செய்ய வேண்டிய அத்தனைச் சடங்குகளையும் சிரத்தையாகச் செய்து முடித்தவர். தாயாரைத் துறக்கத் திருமாலாலும் முடியாது; திருமால் அடியார்களாலும் முடியாது!'சிலிர்த்துவிட்டது அந்தக் கிழவிக்கு. பேச்செழவில்லை. திருப்புட்குழியில் இருந்து கிளம்பி காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வந்திருந்தாள் அவள். கோயிலுக்கு வந்ததாகச் சொன்னது ஒரு பாவனைதான்.

உண்மையான நோக்கம் ராமானுஜரைச் சந்திப்பதுதான். அவளது மகனுக்கு இருந்ததோ என்னவோ. அவளுக்குக் குற்ற உணர்ச்சி நிறையவே இருந்தது.ராமானுஜருக்குத் தனது மகன் செய்த கொடுமைகள். சொல்லிக் கொடுக்கிற இடத்தில் இருந்துகொண்டு, எந்த விவாதத்துக்கும் இடம் தர மறுத்த ஏகாதிபத்தியம்.

சுயமாகச் சிந்திக்கத் தெரிந்த மாணாக்கனைத் தட்டி வைக்க நினைத்த சிறுமை. அது முடியாதபோது கொல்லவே நினைத்த கொடூரம்.ஆனால், விந்திய மலைக் காட்டில் இருந்து ராமானுஜர் காஞ்சிக்கு வந்து சேர்ந்த கதையை ஊரே வியந்து பேசியபோது, அந்தக் கிழவி தன் மகனிடம் எடுத்துச் சொன்னாள். 'மகனே, நீ செய்தது தவறு. செய்ய நினைத்தது மிகப் பெரிய தவறு.

நாள் முழுதும் வேதம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறவன் இப்படியொரு ஈனச் செயலை மனத்தாலும் நினைப்பது பெரும் பாவம். நீ நினைத்தது மட்டுமின்றி செயல்படுத்தவும் பார்த்திருக்கிறாய். இப்போது இளையாழ்வான் உனக்குப் பல மாதங்கள் முன்னதாகக் காஞ்சிக்கு வந்து சேர்ந்துவிட்டான். பேரருளாளனின் பெருங்கருணைக்குப் பாத்திரமானவன் அவன் என்பது நிரூபணமாகிவிட்டது. எப்படியாவது சென்று மன்னிப்புக் கேட்டுவிடு.'யாதவர் ஒன்றும் சொல்லவில்லை.

கண்மூடி அமைதியாக யோசித்தபடி இருந்தார். நடந்ததை அவரால் நம்பவும் முடியவில்லை; ஜீரணிக்கவும் முடியவில்லை. தமது சீடர்களுடன் அவர் யாத்திரை முடித்து ஊர் திரும்பிக் கொண்டிருந்த அன்றே, ஊர் எல்லையிலேயே ராமானுஜரை அவர் சந்தித்திருந்தார். தன் தாயிடம் அதைப் பற்றி அவர் சொல்லியிருக்கவில்லை.

மறக்கமுடியாத தினம். சாகிற வரை மட்டுமல்ல. எத்தனை பிறப்பெடுத்தாலும் மறக்கக்கூடாத தினமும் கூட.ராமானுஜர் அப்போது சாலைக் கிணற்றில் இருந்து நீர் எடுத்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்தார். அதேசமயம் யாதவரின் குழு காஞ்சி எல்லையை நெருங்கியிருந்தது.'அதோ, அங்கே வருவது யார்? ராமானுஜன் மாதிரி தெரிகிறதே?' யாதவர் பரபரப்பானார்.

'ஆம் குருவே. ராமானுஜனேதான். விந்தியக் காட்டில் இறந்து போனவன் இங்கு எப்படி வந்திருக்க முடியும்? நம்பவே முடியவில்லை.' மாணவர்கள் வாய் பிளந்தார்கள்.மேற்கொண்டு ஓரடி எடுத்து வைக்கவும் யாதவரால் முடியவில்லை. கால்கள் உதறின. உதடு உலர்ந்து போனது. நெஞ்சுக்குள் நடுக்கப் பந்தொன்று துள்ளிக் குதித்தது. பேயடித்த மாதிரி நின்றவரை ராமானுஜர் நெருங்கினார்.

ஒரு கணம்தான். சட்டென்று குடத்து நீரைக் கீழே வைத்துவிட்டு அப்படியே தாள் பணிந்தார். 'குருவே வணக்கம். யாத்திரை முடிந்து நலமாகத் திரும்பினீர் களா?''ராமானுஜா, நீ... நீயா?!'ராமானுஜர் எதையும் மறைக்கவில்லை.

பேரருளாளனின் கருணையால் தாம் ஊர் திரும்பிய கதையை அவரிடம் அப்படியே விவரித்தார். 'காட்டில் வழி தவறிய என்னை அருளாளன் உங்களிடம் கொண்டு வந்து சேர்த்திருந்தால் நானும் காசிக்கு வந்திருப்பேன். எனக்கு அந்தக் கொடுப்பினை இல்லாமல் போய்விட்டது.'மறந்தும் அவரது கொலைத் திட்டம் தனக்குத் தெரிந்து போனதைப் பற்றி அவர் வாய் திறக்கவில்லை. யாதவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அழுகையும் வெட்கமும் அவரைப் பிடுங்கித் தின்றன.

மொழி கைவிட்டு நிராயுதபாணியாக நின்றவர், அப்படியே ராமானுஜரைக் கட்டியணைத்துக் கொண்டார். 'நீ காட்டு மிருகங்களால் வேட்டையாடப் பட்டிருப்பாய் என்று நினைத்து விட்டோம். நல்லவேளை, நீ சாகவில்லை. உனக்கு மரணமில்லை ராமானுஜா!'யாதவரின் சீடர்களால் நம்பவே முடியவில்லை. அவர்கள் உண்மையில் பயந்திருந்தார்கள். பேரருளா ளனே வேடமிட்டு வந்து காத்திருக்கிறான் என்றால், இவன் சாதாரணமானவனாக இருக்க முடியாது.

ஊர் திரும்பியதும் பிராந்தியம் முழுதும் இதே பேச்சாக இருப்பதை அவர்கள் கவனித்தார்கள். விந்திய மலையில் ராமானுஜர் காணாமல் போனதற்குச் சரியாக மூன்று தினங்களுக்குள் அவர் காஞ்சிக்கு வந்து சேர்ந்த விவரம். எப்படி முடியும், எப்படி முடியும் என்று திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டு, ராமானுஜர் சொன்னதே உண்மை என்ற முடிவுக்கு வந்தார்கள்.'நல்லதப்பா! நாளை முதல் நீ மறுபடியும் பாடசாலைக்கு வந்துவிடு.

நீ இருந்தால்தான் வகுப்பு களை கட்டுகிறது' என்றார் யாதவர்.'நீ எப்படி அதை அன்று ஏற்றுக் கொண்டு மீண்டும் வகுப்புக்கு வந்தாய் என்பது இப்போதும் எனக்கு வியப்புத்தான்' என்றாள் யாதவரின் தாயார்.ராமானுஜர் புன்னகை செய்தார். அது திருக்கச்சி நம்பியின் உத்தரவு.அன்றைக்கு வீட்டுக்குப் போனதும் நடந்ததை ராமானுஜர் தனது தாயிடம் சொன்னார். 'என்னிடம் கேட்காதே; திருக்கச்சி நம்பியிடம் கேள்' என்று அவள்தான் திருப்பி விட்டது.

'ராமானுஜரே! உமக்கான பாதை போடப்படும் வரை நீர் எங்காவது வாசித்துக் கொண்டிருப்பதுதான் நல்லது. யாதவர் வேதம்தானே சொல்கிறார்? போய் பாடம் கேளும். அர்த்தம் தவறாகத் தோன்றுமானால் அதை உமக்குள் குறித்துக்கொண்டு வாரும். அவரிடம் விவாதிக்க வேண்டாம்!' திருக்கச்சி நம்பி சொன்னதை யாதவரின் தாயாரிடம் எப்படிச் சொல்ல முடியும்?எனவே அவர் புன்னகை செய்தார்.

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jan 24, 2017 10:36 pm

பதினோரு பதிவுகள் கடந்து விட்டதா? நிதானமாக படிக்கவேண்டும்.
விமந்தனி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி



பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 24, 2017 10:40 pm

பேய்ப்பெண் ! -12

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 2 XgSTxYdzTtRY0VsZs6OG+images

யாதவப் பிரகாசரின் தாயார் உள்ளுக்குள் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தாள். ஒரு விஷயம் இருக்கிறது. நெடுநாள் உறுத்தல். அதை ராமானுஜரிடம் சொல்ல வேண்டும். அதன்மூலம் என்னவாவது நல்லது நடக்க வேண்டும். முடியுமா?

'அம்மா, உங்கள் மனக்குறையைச்சொல்லுங்கள். எதற்காகத் தயக்கம்?' என்று ராமானுஜர் திரும்பத் திரும்பக் கேட்டார். ஆனாலும், அவளால் சொல்ல முடியவில்லை. ஏனெனில் சம்மந்தப்பட்டிருந்தது அவளது மகன் யாதவப்பிரகாசர். அவருக்குத் தெரியாமல்தான் அவள் காஞ்சிக்கு வந்திருந்தாள். கேட்டால், கோயிலுக்குப் போனதாகச் சொல்லிக் கொள்வதில் பிரச்னை இல்லை. ஆனால் ராமானுஜரை தரிசிப்பதே அவளது காஞ்சி வருகையின் நோக்கம் என்று சொன்னால் அவன் தாங்குவானா? யாதவர் சில காலமாக மிகுந்த மனக்குழப்பத்தில் ஆழ்ந்திருந்த தருணம் அது.

பாடசாலை சரிவர இயங்கவில்லை. அவரால் முடியவில்லை என்பதுதான் காரணம். வயது கொடுத்த தள்ளாமை ஒருபுறம். குற்ற உணர்ச்சிகள் அளித்த குறுகுறுப்பு மறுபுறம். திருப்புட்குழியில் இருந்தபடிக்கு காஞ்சியில் ராமானுஜரின் செல்வாக்கு வளர்ந்து கொண்டிருந்ததை அவர் கவனித்தபடியேதான் இருந்தார்.

ராமானுஜரின் செல்வாக்கு வளர்கிறது என்றால், அத்வைதம் என்னும் மகாதத்துவத்தின் ஆணிவேர் அசைக்கப்படுவதாக அர்த்தம். இது சரியா? இப்படித்தான் இது நிகழ்ந்தாக வேண்டுமா? ஜகத்குருவான ஆதிசங்கரரின் தீர்மானங்களையே ஒருவன் நிராகரிப்பானா! அவனது வாதங்களும் வலுவாக இருந்துவிட முடியுமா! அதையும் மக்கள் ஆமோதிப்பார்களா?

என்னதான் நடக்கிறது இங்கே?குழப்பம் அவரைக் கொன்று கொண்டிருந்தது. நேரே போய் சிண்டைப் பிடித்து ஆட்டிவிட ஒரு நிமிடம் ஆகாது. ஆனால் ராமானுஜரை நினைக்கும்போதெல்லாம் அவருக்கு இரண்டு விஷயங்கள் முதலில் நினைவுக்கு வந்துவிடும். கொல்ல நினைத்த கொடும் தருணம். வெல்ல முடியாமல் வாதங்களில் வீழ்ந்த பல தருணங்கள்.

'ரொம்ப யோசிக்க வேண்டாம் தாயே. நமக்கு அப்பால், நன்மை தீமைகளுக்கு அப்பால், தத்துவங்களுக்கு அப்பால், சித்தாந்தங்களுக்கு அப்பால், வேதாந்தங்களுக்கும் அப்பால் விவரிக்க முடியாத பெரும் பொருளாகப் பரந்தாமன் வீற்றிருக்கிறான்.

அனைத்தையும் உதிர்த்துவிட்டு அவன் தாள்களை மானசீகத்தில் பற்றிக்கொண்டால் போதும். ஜீவாத்மா துவண்டு விழும் தருணம் உண்டு. அறிவும், ஞானமும் உதிரும் கணம் உண்டு. மாயை கண்ணைக் கட்டுகிறதென்றால், செருக்கே மாயையின் வித்து. சரணாகதி ஒன்றே அனைத்தையும் அகற்றி அவனிடம் கொண்டு சேர்க்கும் வழி.'

அந்தக் கிழவிக்குப் புரிந்தது. ஆனால், அவள் மகனுக்குப் புரிய வேண்டுமே?ஒரு சம்பவம். அவளால் சாகிற வரைக்கும் மறக்க முடியாத சம்பவம். அப்போது வட தமிழகத்தில் காஞ்சியின் சுற்றுவட்டாரப் பிராந்தியத்தை ஆண்டு கொண்டிருந்த சோழச் சிற்றரசன் ஒருவனது மகளுக்குப் பேய் பிடித்துவிட்டது என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

வராத மருத்துவரில்லை, பார்க்காத வைத்திய மில்லை. பூஜைகள், யாகங்கள் ஒரு பக்கம். மந்திர தந்திரவாதிகளின் பேயோட்டப் பிரயத்தனங்கள் ஒரு பக்கம். எதுவும் பலனளிக்காமல் அந்த இளவரசி ஆட்டமான ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தாள். யாரோ அரசனிடம் போய்ச் சொன்னார்கள்.

'திருப்புட்குழி யாதவப் பிரகாசர் பெரும் ஞானஸ்தர். தவிரவும், அவருக்கு மந்திரப் பிரயோகங்கள் தெரியும்.

மாந்திரிகம் அறிந்தவர். அரசர் அவரை அரண்மனைக்கு வரவழைத்து இளவரசியைக் காட்டலாமே?'உத்தரவு ஊருக்கு வந்து சேர்ந்தபோது யாதவருக்குக் கட்டுக்கடங்காத அகங்காரம் தலைக்கேறிவிட்டது. 'நான் எதற்கு வரவேண்டும்? யாதவப் பிரகாசன் உன்னைப் போகச் சொன்னான் என்று அந்த பிரம்ம ராட்சசனிடம் போய்ச் சொல்லுங்கள். ஓடியே விடுவான்' என்று அரசு ஊழியர்களிடம் சொல்லி அனுப்பி விட்டார்.

இது பெரிய இடத்து விவகாரம், நமக்கு பிரம்ம ராட்சசனையும் தெரியாது; யாதவப் பிரகாசரையும் தெரியாது; எதற்கு வம்பு என்று, அவர்களும் அதேபோல அரண்மனைக்குத் திரும்பி அவர் சொன்னதை அப்படியே சொன்னார்கள்.படுத்திருந்த இளவரசி சீறி எழுந்து கத்தினாள். 'அவனை ஓடிப் போகச் சொல்லுங்கள். நான் அடித்தால் நார்நாராகக் கிழிந்து விடுவான்.' செய்தி கேட்டு அதிர்ந்து போனார் யாதவர்.

இது அவமானமல்லவா? விடமுடியாது. தனது மாணவர் பரிவாரத்துடன் அரண்மனைக்கு வந்து சேர்ந்தார். 'கூப்பிடுங்கள் உங்கள் மகளை' என்றார் அரசரிடம். சேடிகள் இளவரசியை சபைக்கு அழைத்து வந்தார்கள். பேய் பிடித்த இளவரசி. தலைவிரிகோல இளவரசி. சங்கிலி போட்டுப் பிணைத்திருந்தார்கள். அதை அறுத்தெறிந்து சீறிப் பாயும் வேகம் அவளது ஒவ்வொரு அசைவிலும் தெரிந்தது.

யாதவர் அவள் எதிரே வந்து நின்று மந்திரங்களை உச்சரிக்கத் தொடங்கினார்.'டேய், எனக்கு உன்னையும் தெரியும், நீ சொல்லும் மந்திரங்களும் பொருளோடு தெரியும். என்னை விரட்ட உன்னால் முடியாது. உயிர்மீது ஆசை இருந்தால் ஓடிவிடு' என்றது அந்தப் பேய்ப்பெண்.

'என்னைத் தெரியுமா? என்ன தெரியும் உனக்கு?''போன ஜென்மத்தில் மதுராந்தகம் ஏரிக் கரையில் ஓர் உடும்பாகப் பிறந்தவன் நீ. பரம பக்தர்கள் சிலர் சாப்பிட்டு மீந்த உணவைத் தின்றபடியால் இந்த ஜென்மத்தில் வேதம் சொல்லித்தரும் உயரிய பிறப்பு உனக்கு வாய்த்திருக்கிறது. ஆனால், இந்த ஜென்மத்துப் பாவங்கள் உன்னை இன்னும் இரண்டு ஜென்மங்களுக்கு ஆட்டிப் படைக்கப் போகிறது மூடா! ஓடிப் போ!'

அதிர்ந்து விட்டார் யாதவர். வந்திருந்த அவரது மாணவர்களுக்குப் பேச்சு மூச்சில்லை. ராமானுஜருக்கு ரொம்ப சங்கடமாகப் போய்விட்டது. குருவல்லவா? மன்னனின் சபையில் அவருக்கு இது எப்பேர்ப்பட்ட அவமரியாதை?சட்டென்று அவர் முன்னால் வந்து நின்றார். 'பேயே' என்று தொடங்காமல் 'பெண்ணே' என்று பேச ஆரம்பித்தார். ஒரு நிமிடம்.

ஐந்து நிமிடம். பத்து நிமிடங்கள். மந்திரங்கள் இல்லை. மாயம் ஏதுமில்லை. வெறும் பேச்சு. ஆனால் சாத்விகத்தின் சாறு பூசிய பேச்சு. பரமாத்மாவான நாராயணனின் பாத கமலங்களை முன்வைத்து, அந்தப் பெண் குணமாக மனப்பூர்வமாக வேண்டிக்கொண்டார் ராமானுஜர். அன்று அது நடந்தது. அவள் குணமானாள்.தொண்டை மண்டலம் முழுதும் ராமானுஜரின் புகழ் தீயெனப் பரவத் தொடங்கிய தருணம் அது.

'செய்தது நானில்லை; நாராயணனே' என்றார் ராமானுஜர். அந்தப் பணிவு அவரை இன்னும் உயரத்துக்கு எடுத்துச் சென்றது. யாதவர் மட்டும் புழுக்கத்தில் வெந்து கொண்டிருந்தார். தாங்க முடியவில்லை அவரால். 'வேண்டாமப்பா! என்னினும் பெரியவன் என்னிடம் படிக்க அவசியமில்லை. இனி பாடசாலைக்கு வராதே' என்று சொல்லிவிட்டார்.தன் மகன் தரம் தாழ்ந்து போனது அன்றே அத்தாய்க்கு புரிந்துவிட்டது.

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 24, 2017 10:41 pm

விமந்தனி wrote:பதினோரு பதிவுகள் கடந்து விட்டதா? நிதானமாக படிக்கவேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1232220

ம்ம்... பொறுமையாக படியுங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 26, 2017 12:12 am

நன்மை பயக்கும் எனில்...13

யாதவப் பிரகாசரின் தாய் என்னவோ பேசுவதற்காக வந்தாள். ஆனால், என்னென்னவோ பழைய ஞாபகங்களைக் கிளறிவிட்டுப் போய்விட்டாள். ராமானுஜர் வெகுநேரம் அமைதியாகக் கண்மூடி அமர்ந்திருந்தார்.

'வாழ்வில் சில சம்பவங்கள் ஏன் நடக்கின்றன என்பதற்கு நமக்குக் காரணங்கள் புரிவதில்லை. நடக்கிற காரியத்தின் சரியான பக்கத்தில் நிற்கிறோமா, எதிர்ப்புறம் இருக்கிறோமா என்று அந்தக் கணத்தில் முடிவு செய்யவும் முடிவதில்லை. மனித வாழ்க்கை என்பதே சம்பவங்களின் சாட்சிக்கூண்டில் ஏறி நிற்பதுதானே? ராமானுஜருக்கே அந்த வினா இருந்தது. ஒரு பத்து நிமிஷப் பேச்சில் பேய் பிடித்த பெண்ணைச்சரி செய்துவிட முடிகிறது.

பூணுால் அறுத்து, சிகை கழித்து சன்னியாசியான பரம அத்வைத சிரேஷ்டரின் தாயாருக்கு,'பரம்பொருளை நெருங்கச் சரியான பாதை உமது மகன் காட்டுவதல்ல' என்று எடுத்துச் சொன்னால் புரிந்து விடுகிறது. கோடீஸ்வரரான கூரத்தாழ்வான் தமது சொத்து சுகங்கள் அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டுத் தன்னிடம் சீடராக வந்து பணிந்து நிற்கிறார். காஞ்சி மாநகரமே கைகட்டி நிற்கிறது.

ஆனால், பதினாறு வயதில் மணந்துகொண்டு, பன்னிரண்டு வருடங்களுக்கு மேலாக உடன் வாழ்ந்த தஞ்சம்மாவை ஏன் தன்னால் சரி செய்ய இயலவில்லை?எத்தனையோபேர் என் பேச்சைக் கேட்கிறார்கள். பரம்பொருளான நாரணனின் பாதம் பற்ற முன்வருகிறார்கள். பிறப்பால் ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்று சொன்னால் சரி என்கிறார்கள். ஆண்டவன் சன்னிதானத்தில் அந்தணனா, பஞ்சமனா என்ற கேள்விக்கே இடமில்லை என்றால் ஒப்புக்கொள்கிறார்கள்.

சரணாகதியை விஞ்சிய உபாயமில்லை என்று சொல்லும் போதெல்லாம், தலைக்குமேலே கரம் கூப்பிக் கண்மூடி நீர் சொரிகிறார்கள். தஞ்சம்மாவை ஏன் அது தொடவில்லை? கடைசிவரை தனது குலப் பெருமை ஒன்றைத் தவிர இன்னொன்றை அவள் ஏன் ஏற்க மறுத்துவிட்டாள்? ஒரு முழுநீள வாழ்வில் ஒரு கட்டத்தில் கூடவா தனது அஞ்ஞானத்தை அறிய முடியாமல் போய்விடும்? அவருக்கு வேதனை சுட்டது. வைணவ சாம்ராஜ்ஜியம் ஒன்றை நாளை நான் கட்டியெழுப்பலாம்.

அது முடியாத காரியமல்ல. ஆனால் எனது எளிய முயற்சிகள் யாவும் தஞ்சம்மாவிடம் தோற்றுத்தான் போயிருக்கின்றன. இதனை எப்படி விழுங்கி ஜீரணிப்பது?ராமானுஜருக்கு நினைத்துப் பார்க்கவும் சங்கடமாக இருந்தது. தஞ்சம்மாவை விட்டு விலகுவது, பற்றுகள் அறுத்துத் துறவறம் ஏற்பது என்று முடிவு செய்தபோதுகூட, அவர் அவளை நினைத்துக் கொஞ்சம் அஞ்சவே செய்தார்.

எதுவும் அவளுக்குப் புரியாது என்பதல்ல. எதையும் புரிந்துகொள்ளக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பவள். காலம் முழுதும் கட்டுண்டு அவதிப்பட்டு மடிவதற்கா இப்பிறப்பு? அமைதியாக யோசித்தார். ஓர் உபாயம் தோன்றியது. தவறுதானா? சட்டென்று தர்ம சாஸ்திரங்களின் பக்கம் மனம் ஓடத் தொடங்கியது.

பொய்மையும் வாய்மை இடத்து. ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் எழுதியவன் என்னமோ ஒரு அவஸ்தைப்பட்ட பிறகுதான் இதைச் சொல்லியிருக்க வேண்டும். ஆயிரம் பேர் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பாராமல் எழுதி வைக்க வாய்ப்பில்லை. மனத்தை திடப்படுத்திக்கொண்டு அம்முடிவை எடுத்தார். வைணவர் ஒருவரை அழைத்தார். குலத்தால் தாழ்ந்தவர் என்று சொல்லப்பட்டாலும் குணத்தால் உயர்ந்த மனிதர் அவர்.

ஒரு சமயம் அவருக்குச் சாப்பாடு போட மறுத்து தஞ்சம்மா விரட்டியடித்த சம்பவம் ராமானுஜருக்கு நினைவில் வந்து போனது.'ஐயா, இன்று நீங்கள் என் வீட்டுக்கு உணவருந்தச் செல்ல வேண்டும்!'ராமானுஜர் கேட்டபோது அவர் பயந்தார். 'ஐயோ திரும்பவுமா? வேண்டாமே?''இல்லை. இம்முறை என் மனைவி உங்களை நடத்துகிற விதமே வேறாக இருக்கும்.

அதற்கு நான் பொறுப்பு.''புரியவில்லையே.'ராமானுஜர் விறுவிறுவென்று ஒரு கடிதம் எழுதினார். அது தஞ்சம்மாவுக்கு அவளது அப்பா எழுதுவது போன்ற கடிதம்.அருமை மகளே, உன் தம்பிக்குத் திருமணம் நிச்சயமாகியிருக்கிறது. மாப்பிள்ளையை அழைத்துக்கொண்டு நீ உடனே ஊருக்கு வந்து சேர். இக்கடிதம் கொண்டு வரும் பாகவதோத்தமர் எனக்கு வேண்டப்பட்டவர்தான். களைப்போடு வருவார். அவரை உபசரித்து அனுப்பிவிட்டு ஊருக்குக் கிளம்பு.'இதைக் கொண்டுபோய் தஞ்சம்மாவிடம் கொடுங்கள்.' என்று ஒரு தட்டு நிறைய பழங்கள், வெற்றிலை பாக்கு, புடைவை, வேட்டியுடன் கொடுத்து அனுப்பி வைத்தார் ராமானுஜர்.

அந்த மனிதர் ராமானுஜரின் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டினார். 'அம்மா நான் உங்கள் அப்பாவின் ஊரில் இருந்து வருகிறேன்.'தஞ்சம்மாவுக்குக் குழப்பமாக இருந்தது. ஏற்கெனவே விரட்டியடித்த மனிதர். இப்போது பழம் பூ மரியாதைகளோடு வந்து நிற்கிறாரே?

'உங்கள் தகப்பனார் இக்கடிதத்தை உங்களிடம் கொடுக்கச் சொன்னார்.'அவள் படித்துப் பார்த்தாள். தம்பிக்குத் திருமணம். உடனே கிளுகிளுப்பாகிவிட்டது.

'ஐயா நிற்கிறீர்களே, உட்காருங்கள்.''அவகாசமில்லை தாயே. நான் கிளம்ப வேண்டும்.''முடியவே முடியாது. அன்று உங்களுக்கு நான் செய்தது பெரும் அபசாரம். அதற்குப் பரிகாரமாக இன்று என் கையால் நீங்கள் சாப்பிட்டுத்தான் போக வேண்டும்' என்று சொல்லி கணப் பொழுதில் இலை போட்டாள்.

பரபரவென்று பரிமாற ஆரம்பித்தாள். அவர் சாப்பிட்டு விடைபெற்றுப் போய்விட்டார்.அன்று மாலை ராமானுஜர் வீடு திரும்பியபோது தஞ்சம்மா ஓடோடி வந்து வரவேற்றாள். 'அப்பா கடிதம் அனுப்பியிருக்கிறார். தம்பிக்குத் திருமணம் நிச்சயமாகியிருக்கிறது.''நல்ல விஷயம் தஞ்சம்மா. நீ இன்றே புறப்பட்டுவிடு.''நீங்கள்?''சில வேலைகள் இருக்கின்றன. முடித்துவிட்டு வருகிறேன்.'அவள் ஊருக்குப் போன மறுகணமே ராமானுஜர் பேரருளாளன் சன்னிதியை நோக்கி ஓடத் தொடங்கினார்.

'வந்துவிட்டேன் பெருமானே! இதைத் தவிர வேறு உபாயமில்லை என்று தெளிந்தேதான் அவளை ஊருக்கு அனுப்பிவிட்டு உன் தாள்தேடி வந்தேன். இந்தக் கணமே எனக்குத் துறவு தாருங்கள். இனி தாங்கமாட்டேன்.'அதற்குமேல் அவரைக் கதறவைத்துப் பார்க்கப் பேரருளாளனுக்கும் விருப்பமில்லை. அதனால்தான் அவன் திருக்கச்சி நம்பிக்கு உத்தரவு கொடுத்தான்.

அதனால்தான் அன்று அது நிகழ்ந்தது. ஊரே வியந்தது. உறவு துறந்து, பற்று துறந்து, பந்தம் அறுத்து, காஷாயம் தரித்த ராமானுஜரைக் கைகூப்பி வணங்கி நின்றது.'தஞ்சம்மாவைப் போன்ற ஒரு பேரழகி இத்தேசத்திலேயே கிடையாது. அவளையே துறக்கிறா ரென்றால் இவரது வைராக்கியம் எப்பேர்ப்பட்டது!' என்று வியக்காத வாயில்லை. ராமானுஜர் பெருமூச்சு விட்டார்.

அன்று மறந்த தஞ்சம்மாவை அதற்குப் பிறகு யாதவரின் தாயார் வந்து போனபோதுதான் அவர் நினைக்க நேர்ந்தது.

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 14 Previous  1, 2, 3 ... 8 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக