புதிய பதிவுகள்
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_c10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_m10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram
 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_c10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_m10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_c10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_m10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_c10 
5 Posts - 4%
prajai
 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_c10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_m10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_c10 
4 Posts - 3%
jairam
 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_c10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_m10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Jenila
 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_c10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_m10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_c10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_m10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_c10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_m10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_c10 
1 Post - 1%
M. Priya
 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_c10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_m10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_c10 
1 Post - 1%
kargan86
 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_c10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_m10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_c10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_m10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_c10 
97 Posts - 55%
ayyasamy ram
 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_c10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_m10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_c10 
51 Posts - 29%
mohamed nizamudeen
 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_c10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_m10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_c10 
9 Posts - 5%
prajai
 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_c10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_m10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_c10 
6 Posts - 3%
Jenila
 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_c10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_m10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_c10 
4 Posts - 2%
Rutu
 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_c10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_m10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_c10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_m10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_c10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_m10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
jairam
 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_c10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_m10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_c10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_m10 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Fri Jan 13, 2017 7:04 pm

First topic message reminder :


ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் – பகுதி 1



முகப்புரை
குறள் என்றதும் பலருக்கும் குறளுக்கு முன்னால் திரு என்பது போடாவிட்டாலும் திருக்குறளையும் அதை எழுதிய திருவள்ளுவருமே நினைவுக்கு வரும் .

ஆனாலும் ஔவை பிராட்டி இயற்றிய குறள் மற்றும் விநாயகர் அகவல்,சித்தர் இலக்கியத்தில் மிகத்தொன்மையானவைகளாக மதிக்கப்பட்டு ஞானப் பொக்கிஷம் என ஞானத்தைத் தேடும் சாதகர்களால் போற்றப்பட்டு வருகிறது . ஆனால் போற்றப்படவேண்டிய பல விஷயங்கள் இன்னமும் சற்று மறைவாகவே இருக்கிறது .பொது மக்களிடையே பரவலாக்கப்படவில்லை.

திருவள்ளுவரைப்போலவே ஔவைப் பிராட்டியும் இம்மானிடம் உய்வுபெற அரிய கருத்துக்களை இரு அடிகளில் ,குறள் வெண்பாக்களாக மொத்தம் 310 எண்ணிக்கையில் வீட்டு நெறிப்பால் ,திருவருட்பால் ,தன்பால் என்று மூன்று அதிகாராங்களாகப் பிரித்து இயற்றி இருக்கிறார்.

திருக்குறள் எடுத்தியம்பும் அறம் ,பொருள் ,இன்பம் போன்றே இக்குறள்களும் மானுட தேக அமைப்பு ,அதனுள் துலங்கும் ஆதி அறிவு , வாழ்வியல் குறிக்கோள் இவைகளை தெளிவுற எடுத்தியம்புகிறது.

அத்தனை உலக மதங்களும் வாழ்வின் முடிவில் சொர்க்கம் சென்று சேர்வதையே குறிக்கோளாகக் கொண்டு இயங்குகையில் ,நமது சனாதன நெறிதானே வீடுபேறு அல்லது முக்தி என்பதை வாழ்வின் இறுதிப பயனாகக் கூறுகிறது .

இதனை அடிப்படையாகக் கொண்டே ஔவையின் குறளும் ஒரு உத்தமமான யோகசாஸ்திரத்தின்,அத்துனை பரிமாணங்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது .மனதை ஆராய்ந்து அறியும் கருவியாகக் கொண்டு ,மனதைப் பற்றியும் அதன் தன்மைகளைபற்றியும் ,அதன் மேன்மைகளை அறிந்துகொண்டு ,வாழ்வின் குறிக்கோளை அடைவது எப்படி என்பதை இயம்புகிறது .இன்னும் ஜனன மரணம் என்றால் எனன ? பஞ்சபூத சேர்க்கையால் இந்த உடம்பு எவ்வாறு உருவாகி ,செயல்பட்டுக் கொண்டிருக்கிறது ?அதன் தலையாய குறிக்கோள் என்னவாக இருக்கவேண்டும் அதை அடையும் வழி முறைகள் எனன ? வாசியோக நிலை , சரவோடுக்கம் இவைகளைப் பற்றியெல்லாம் விளக்குகிறது.

யோகத்தில் திளைத்த பல அனுபவபூதிகள் அருளாளர்கள் காட்டிய மார்கங்களைவிட ,ஔவைக்குறள் மிக இலகுவாக யோகத்தின் தன்மையைப் பற்றி விளக்குகிறது .

சங்கத் தமிழ் பாடல் தொகுப்பில் ஏறத்தாழ 457 புலவர்கள் பாடிய பாடல்கள் இடம் பெற்றிருக்கிறது .கி .மூ இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து கி .பி மூன்றாம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை சுமார் நானூறு ஆண்டுகளில் சுமார் ஐநூறு புலவர்கள் பாடிய அருமையான தமிழ் பாடல்கள் தொகுக்கப்பட்டிருப்பதும் ,அத்துணை தகுதி வாய்ந்த புலவர்கள் தொடர்ச்சியாக அந்தக்காலக்கட்டத்தில் வாழ்ந்திருப்பதும் ,தமிழின் சிறப்பினையும் ,அந்த காலகட்டத்தில் இடம்பெற்றிருந்த தமிழர் தம் அறிவின் திறனையும் ,தகுதியையும் எடுத்துக்காட்டுகிறது.

இன்னும் சொல்லப்போனால் அவர்கள் வெறும் தமிழ்படித்த புலவர்கள் மட்டுமல்லர் ,அவர்களில் ,சமுதாயத்தின் எல்லா பிரிவினைச் சேர்ந்த அனைத்து தரப்பினரும் இருந்திருக்கின்றனர் . பாடல்கள் புனைந்திருக்கின்றனர் .அந்தணர் ,வணிகர் ,கணக்கர் ,வேடர் ,குயவர் ,மருத்துவர் எல்லாபிரிவினரும் புலவர்களில் இருந்திருக்கின்றனர் .அத்துனைபேரும் தமிழில் புலமைபெற்று பாடல் புனையும் வல்லமை பெற்றிருக்கின்றனர்.

சங்கப்புலவர்களில் முப்பதுக்கும் மேல்பட்டவர்கள் பெண்கள் .அதாவது ஏறத்தாழ 7 % சதவிகித புலவர்கள் பெண்களாக இருந்திருக்கின்றனர் .அத்துணை உயர்கல்வி படைத்திருந்தனர் .

ஆனால் சங்ககாலம் தாண்டிப் பல்லவர் காலம் ,பாண்டியர் ,சோழர் ,நாயக்கர் ,முகமதியர் ,மராட்டியர் ,மேலை நாட்டவர் ஆட்சிக் காலங்களில் அத்துணை பெண் புலவர்கள் இடம்பெறவில்லை. ஏன் விடுதலைக்குப் பின் கூட அதிக அளவில் பெண் புலவர்கள் இடம் பெறவில்லை என்பது தெரியவில்லை.

ஆனால் சங்ககாலத்தில் ஔவையார் பாரி ,அதியமான் போன்றவர்க்கு அரசவை தூதர் போலும் அறிவுரை கூறிடும் அமைச்சர் போலும் இருந்திருக்கின்றனர் .அச்சமின்றி காடு மேடு சுற்றி அலைந்திருக்கின்றனர்.

தமிழில் பாடி அறநெறிக் காவலர்களாக இருந்திருக்கின்றனர் .ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஔவையார் ,காரைக்கால் அம்மையார,சித்தர்களில் திலோத்தமை மற்றும் பல பெண் ஞானிகள் தமிழ் நாட்டில் வாழ்திருப்பது ஒரு பெருமையளிக்கும் செய்தியே ..

அந்தக் காலகட்டத்தில் உலகின் எந்தப்பகுதியிலும் பெண்கள் இத்துனை உயர்வு பெற்றிருந்தார்களா என்பது சந்தேகமே .ஆனால் இடையில் இங்கு என்னதான் நடந்தது என்பதும் ஆய்வுக்குரியதே .

அந்த சங்ககால ஔவையார் தான் இந்த ஔவையின் ஞானக் குறளை எழுதினாரா என்பது ஆய்வுக்குரியதே . இன்னும் சொல்லப் போனால் விநாயகர் அகவல் எழுதிய ஔவையும் குறள் எழுதிய ஔவையும் ஒருவரேவா ? என்பதுக் கூட உறுதியில்லை.

ஆனால் சங்கக்காலத்தில் திருக்குறள் எழுதப்பட்டது .ஔவையின் குறளும் குறள் வெண்பாவிலே இருக்கிறது .பிற்காலத்தில் ஏனோ குறள் வெண்பாவில் எந்த இலக்கியமும் இயற்றப்படவில்லை.

இவற்றை எல்லாம் புலவர் பெருமக்கள் பார்த்துக்கொள்ளட்டும் .அவர்கள் விடுவிக்கவேண்டிய வரலாற்று புதிர்கள் நிரம்ப இருக்கிறது .நாம் ஔவையின் குறளில் கூறப்பட்டிருக்கும் ஞானத்தை மட்டும் பார்க்க மேலே செல்வோம்.நாம் இவ்வுலகில் வந்த வேலையை விரைவில் பார்க்கவேண்டும் அல்லவா ?

மனிதராய்ப் பிறந்தவர் அனைவரும் மனிதர் ஆகிவிடமுடியுமா ?
மனதை உடையவன் மனிதன் ,ஆனால் அதை கருவியாகப் பயன் படுத்தவேண்டும் .அதன்வழி போகக் கூடாது .உறங்குவது,உண்பது, மக்களைப் பெறுவது, உலாவுவது முதலியவை யாவையும் ,விலங்குகளும் தான் செய்கின்றன .இருவருக்கும் இவை பொதுவானவையே. பின் நாம் எப்படி விலங்கைக்காட்டிலும் மேல்?நினைக்க வேண்டும்.

நான் யார் ,எனது மனம் யார் , எதற்குப் பிறந்தேன் , எங்கிருந்துவந்தேன் , இந்த உடம்பு தானே வந்ததா ,ஒருவன் தந்ததா , அந்த ஒருவன் யார் , அந்த ஒருவன் தன்மை எனன , இவைகளை நினைக்க வேண்டும். இவைகளுக்கு விடையறிய அறவழியில் நிற்கவேண்டும் .நமது பிறப்பே, பிறப்பறுக்கும் வழி காணத்தான் .

விலங்குக்கும் ,மனிதனுக்கும் இருக்கும் எல்லைக் கோடு,இந்த இறைபற்றிய எண்ணம் தான் .விலங்கு இரை மட்டும் தேடுகிறது .மனிதன் இறையைத் தேடுகிறான் .



பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பதறிவு —திருக்குறள் -358



அஞஞானம தான் பிறப்பைத் தருகிறது ,எனவே பிறப்பையே
அஞஞானம என்கிறார் திருவள்ளுவர் .

மனிதரிலும் பறவையுண்டு விலங்குண்டு
கல்லுண்டு மரமுண்டு
மனிதரிலும் நீர்வாழும் சாதியுண்டு
அநேககுல மனிதருண்டு
மனிதரிலும் மனிதருண்டு வானவரும்
மனிதராய் பிறப்பதுண்டு
மனிதரிலே பிறப்பறுக்க வந்ததுவே
அருமைஎன வகுத்தார் முன்னோர்

இது சிவானந்த போதம் அளிக்கும் அறிவு

இனி ஔவை கூறும் உடம்பு எனும் சடப்பொருள் பற்றிய அறிவையும் ,மனம் எனும் சூக்ஷும பொருள் பற்றியும் ,உயிர் எனும் அதிஷுக்ஷும பொருள் பற்றியும் விளக்கும் அறிவியலோடு இணைந்த ஆன்மீகப் பார்வையை அடுத்தப் பகுதியில் இருந்து பார்ப்போமா ? சித்தர்களின் சித்தாந்த தொன்மை விளக்கத்தைப் படிப்படியாகக் காணலாம்.



-தொடரும்


sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Mon Aug 14, 2017 8:42 pm


 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 PTTS4SWGQ3KpDUzU1V9H+24aa

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் -24
- -அண்ணாமலை சுகுமாரன்

அதிகாரம் 3 = உள்ளுடம்பின் நிலை


28 )
பொய்க்கெல்லாம் பாசனமாயுள்ள அதற்க்கு ஓர் வித்தாகும்
மெய்க்குஉள்ளாம் மாயஉடம்பு

பொய்க்கெல்லாம் = எல்லாவித பொய்களுக்கு ,
பாசனமாயுள்ள = விளை நிலமாக உள்ள ,
அதற்க்கு = இந்த தூல தேகத்திற்கு ,
மெய்க்குஉள்ளாம் = அந்த தூல தேகத்திற்கு உள்ளே இருக்கின்ற ,

மாயஉடம்பு = சூக்ஷும தேகமானது ,
ஓர் வித்தாகும் = ஒரு விதை போல ஆகிறது

யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே”
– திருவாசகம்
என மாணிக்க வாசகர் நமது சார்பில் அவர் அழுவதுபோல்
மாற்றிக் கூறுகிறார் .
யானே பொய் என ஏன் சொல்லுகிறார் ?
யான் என்று பெருமைக்கொள்ளும் , மெய் என்று கூறப்படும் இந்த தூல உடம்பு பொய்யானது .
என்றாவது ஒரு நாள் மறையக்கூடியது .ஒருநாள் மண்ணோடு மண்ணாக போகவேண்டியது
ஒரு நாள் இந்த தூல உடல் தீக்கு இரையாகும்

இப்படி பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யிலே வாழும் நாம், ஞானம் பெற முயலவேண்டும்
பல்வேறுவிதமான பிறப்புக்களில், பல்வேறு வடிவுடன் கிடைக்கும் இவ் உடம்பு அனைத்துமே தோல், சதை, எலும்பு, மஜ்ஜை முதலான கலந்த ஒன்றாகும். அமீபா தொடங்கி,
ஆறறிவு மனிதன்வரை எல்லா உடல்களுக்கும்,
"வேற்று, விகார, விடக்கு " அமைந்திருந்தல் எனும் உண்மை உணர்ந்து " ஆற்றேன், எம் ஐயா, அரனே'" என்று கதறுகிறார்.
மாணிக்கவாசகர் தனது சிவபுராணத்தில் .
மேலும் " போற்றிப் புகழ்ந்திருந்து பொய் கெட்டு மெய்யானார் மீட்டு இங்கு வந்து வினைப் பிறவி சாராமே கள்ளப்
புலக் குரம்பை கட்டு அழிக்க வல்லானே" என உருகுகிறார் .
சிவபுராணம் ஒரு ஞான பிரவாகம் .
உடம்பில் கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகிய ஞானேந்திரியங்கள் ஐந்தும்
கை, கால், வாய், எருவாய், கருவாய் ஆகிய கர்மேந்திரி யங்கள் ஐந்தும் உள்ளன
ஞானேந்திரியங்கள் , கர்மேந்திரி யங்கள் தூல உடம்பில் இருந்தாலும் , அவைகளை இயக்கம் அறிவு உள்ளுடம்பில் தான் அமைந்துள்ளது .அத்தகைய இயக்கம் அறிவுக்கெல்லாம் பெயர்கள் கூட உள்ளது .
ஸ்ரோத்திரம் என்பது காது கேட்க செய்யும் அறிவு .
ரஸ்னா நாக்கின் சுவை !
ஏன் ரஸ்னாவுக்கு இந்த பெயர் புரிகிறதா ?
ஷாசுகு கண் பார்வை
இவ்வாறு அனைத்து ஞானேந்திரியங்கள் , கர்மேந்திரி யங்கள்ஆகியவற்றிற்கு உள்ளுடம்பில் தனித்தனியே கண்ணுக்குத்தெரியாத அறிவு மொட்டுகளை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது

இவ்வாறு தூல உடம்பிற்கு அதன் உள்ளே இருக்கும் ,உள்ளுடம்பு ஆதாரமாக ,ஒரு வித்தைப்போல் இருப்பதாக இந்தக் குறளில் கூறுகிறார் .

ஔவையின் குறள் மொத்தமாக 310
இப்படி ஒருகுறளுக்கு ஒரு பதிவுக்குப்பதிலாக இரண்டு
குறள் சேர்த்து எழுதலாமா என நினைக்கிறேன் .
சற்று பெரிதாக இருக்கும் , படிப்பவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என தெரியவில்லை .
முடிந்தால் உங்கள் எண்ணத்தை தெரிவியுங்கள் .
அண்ணாமலை சுகுமாரன்
14/8/17

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 14, 2017 8:56 pm


எனது footer இல் கொடுத்தபடி "கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால் ",
"சுருக்கமாக விளக்கம் இருந்தால் படிக்காத தோன்றும்."
இரு குறளை ஒரு பதிவில் போட்டாலும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தால் ,
யாவரும் படிப்பர் என்றே எண்ணுகிறேன்.
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Thu Aug 17, 2017 8:34 am


 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 N5exn2WdSjGaYl76fRzH+25

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் -25
- -அண்ணாமலை சுகுமாரன்
அதிகாரம் 3 = உள்ளுடம்பின் நிலை

29 ) வாயுவினால் ஆய உடம்பின் பயனே
ஆயுளின் எல்லை அது

-- வாயுவினால் ஆய உடம்பின் பயனே என்பதின் பொருள் நாம் முன்பே கண்டபடி , உள்ளுடம்பு மனோ மய கோசம் பிராண மய கோசத்தால் ஆகியவற்றால் ஆகியது .
இதில் பிராண மய கோசம் பிராணனுடன் ,பிராண வாயு
ஆகிய தச வாயுவைக் கொண்டது .
இந்த பிராண வாயு உடலைவிட்டு நீங்கும் போது ,
உயிரும் தூல உடலைவிட்டு நீங்கிவிடும் .
உயிர் நீங்குவதை 'ஆயுளின் எல்லை அது ' என்கிறார் .
உள்ளுடம்பு இருக்கும் வரையே தூல உடம்பு வாழும் .

மனித உடலில் பத்துவித வாயுக்கள் உண்டு .
இவை தச வாயுக்கள் எனப்படும்.
பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், தனஞ்செயன், கிரிகரன், தேவதத்தன்
பிராணன் அபானன், உதானன் , சமானன் , வியானன் முதலிய இவையே மனிதனின் அனைத்து இயக்கத்தையும் நிர்வகிக்கின்றன
உயிர் வெளியே புறப்படும் நேரம் நெருங்கியுடன் உடலின் அனைத்து செயல்களும் ஒவ்வொன்றாக முடக்கப்படும் , எல்லாவித வாயுக்களின் வழிகளும் ஒவ்வொன்றாக அடைக்கப்பட்டுக் கொண்டே வரும்.
பிறகு .சிலருக்கு கண்களின் வழியாகவும், சிலருக்கு வாயின் வழியாகவும், வேறு சிலருக்கு உச்சிமண்டையின் வழியாகவும் , இன்னும் சிலருக்கு ஆசன துவாரத்தின் வழியாகவும் , மூத்திர வாசல் வழியாகவும் , காதின் வழியாகவும் , மூக்கின் வழியாகவும், தொப்புள் குழி வழியாகவும் உயிர் வெளியேறும் .
இவ்வாறு உள்ளுடம்பில் இடம்பெற்ற வாயு வெளியேறியவுடன் ,தூல உடம்பும் வாழ்வும் முடிந்துவிடும்
என்பதை இந்தக் குறளில் கூறுகிறார் .
அடுத்து வரப்போகும் குறள் மிக அரிய உண்மைகளைக் கூறப்போகிறது .அதை ஆடுத்துக் காணலாம்
அண்ணாமலை சுகுமாரன்
17/8/17

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 17, 2017 9:27 pm

நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82038
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 18, 2017 10:28 am

 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 103459460  ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 3838410834

-
தனஞ்ஜயன் வாயு: 
-
இது தாயின் கர்ப்பத்தின் இருக்கும் சிசுவை வெளித்தள்ளும். 
மேலும் தசவித வாயுக்களில் தனஞ்சய வாயுவைத் தவிர மற்ற 
வாயுக்கள் எல்லாம் மரணத்தின் போது பிராணனுடன் 
சேர்ந்து உடனே வெளியேறிவிடும். 


இந்த தனஞ்சய வாயு உடனே வெளியேறாமல் உடம்பை.
வீங்கச் செய்தல். நவதுவாரங்களில் நுரை, நீர் வரச்செய்தல், 
உடம்பைப் நாற்றம் எடுக்கச் செய்தல் போன்றவற்றைச் 
செய்து கொண்டே இருக்கும்.


 உடம்பை இடுகாட்டிற்குக் கொண்டுபோய் தீ மூட்டியவுடன் 
பாதி உடம்பு வெந்த பிறகு 'டப்' என்ற சப்தத்துடன் 
வெடித்துத்தான் போகும்.

---
உடம்பை எரியூட்டாமல் புதைத்தால் உடம்பை மண்ணோடு 
மண்ணாகச் செய்து பிறகுதான் தனஜய வாயு வெளியேறும்.


---
இறந்த நபரை உயிருடன் மீண்டு வரச் செய்த யோகிகள் 
இந்த தனஜய வாயுயின் உதவி கொண்டுதான் அப்படிச்
 செய்துள்ளார்கள்.


---ஜீவசமாதி எய்திய யோகியின் உடலில் இருந்து இந்தப் பத்துவித 
வாயுக்களுமே வெளிவருவது இல்லை.

-
---------------------------------------------

நன்றி- இணையம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 18, 2017 8:13 pm

இவ்வளவு விஷயமா????

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Tue Aug 22, 2017 2:48 pm

 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 KMRqjBKzRLKPZGMRLUBp+26


ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் -26
- -அண்ணாமலை சுகுமாரன்
அதிகாரம் 3 = உள்ளுடம்பின் நிலை

30 ) ஒன்பது வாசலும் ஓக்க அடைத்தாக்கால்
அன்பதிலொன்றாம் அரன்
உள்ளுடம்புப் பற்றிய அதிகாரத்தின் கடைசிப் பாடல் இது .
அடுத்து நாடி தாரணை என்று நம் உடலில் உள்ள நாடிகளை பற்றி நமக்கு கூறப்போகிறார் ஔவைப்பிராட்டி
இந்தக்குறளில் உள்ளுடம்பின் முக்கிய பபண்பைக் கூறுகிறார்

ஒன்பது வாசலும் = உள்ளுடம்பில் இடம்பெற்ற ஒன்பது வாசல் எனும் ,நவதுவாரங்களையும் ,
ஓக்க = ஒருமிக்க
அடைத்தாக்கால் = மனத்தால் எண்ணி தியானித்தால் ,
அன்பதிலொன்றாம் = 50 ரகசிய அட்ஷரங்களையும் ,மற்றும் முக்கிய பிரணவத்தின் மூலமாக ஒன்றும் ஆக 51.,
அரன் = சிவத்தை உணரலாம்
ஒன்பது வாசல் என்பது தூல உடம்பில் இருக்கும் கண்கள் இரண்டு, காதுகள் இரண்டு, நாசித் துவாரங்கள் இரண்டு, கருவாய் ஒன்று,உணவு செல்லும் வாய் ,கழிக்கும்கழிவுக்கு எருவாய் ஆக ஒன்பது வாசல்களின் மேல் மனத்தை குவிப்பதின் மூலம் உள்ளுடம்பில் இடம்பெற்றிருக்கும்
இவைகளுக்கு ஆதாரமான இடங்களைத் தியானிப்பதால் , ,
உடம்பில் இடம்பெற்றிருக்கும் ரகசிய 50 எழுத்துக்களையும் ,அத்துடன் சேர்ந்த பிரணவத்தின் தன்மையையும் சேர்த்து 51 அட்சரம் மூலமாக சிவத்தை உணரலாம் என்கிறார் ,

இந்த அண்டத்தின் சப்தம் நம் பிண்டத்தில்இடம்பெற்ற சக்கரங்களின் ஒவ்வொரு இதழ்களிலும் ஒலிப்பதை ஞானத்தால் கண்டு, அவை 51 அட்சரங்கள் என்பதையும் கண்டு அதில் இருந்து மொழியை வடிவமைத்தார்கள் நம் சித்தர்கள்

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன் றாகத் தமிழ்செய்யு மாறே என்று பாடிய திருமூலர் கூட தமிழில் 51 எழுத்துக்கள் என்கிறார் .அவர் காலத்தில் 51 இருந்திருக்கலாம் ஆனால் இப்போது 31 தான் உள்ளன . தற்போது உள்ள எழுத்துக்களின் மாறுதல்குறித்துபின்பு விரிவாக தனியேவேறு பதிவில் பேசலாம் .

இப்போது ஔவையும் 51 எழுத்துக்களைபற்றிக்கூறுகிறார்
எனவே 51 எழுத்துக்களைப்பற்றி சிறிது அறிவது அவசியமாகிறது .
சுருக்கமாக சில செய்திகளைமட்டும் இப்போது பார்க்கலாம்

எழுத்துக்கள் உருவாகும் முறைப்பற்றி தொல்காப்பியர் பிறப்பியலின் முதல் நூற்பாவில் எழுத்துகளின் பொதுப் பிறப்பு முறையை விளக்குகிறார்.

உந்தி முதலா முந்துவளி தோன்றித்
தலையினும் மிடற்றினும் நெஞ்சிலும் நிலைஇப்
பல்லும் இதழும் நாவும் மூக்கும்
அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்
உறுப்புற்று அமைய நெறிப்பட நாடி
எல்லா எழுத்தும் சொல்லுங் காலைப்
பிறப்பின் ஆக்கம் வேறு இயல
திறம்படத் தெரியும் காட்சியான
(தொல். எழுத்து. பிறப்பு. 1)

எழுத்துக்கள் பொதுவாக எவ்வாறு பிறக்கின்றன என விளக்குவது பிறப்பியல் இலக்கணம். தொல்காப்பியர் பிறப்பியலின் முதல் நூற்பாவில் எழுத்துகளின் பொதுப் பிறப்பு முறையை விளக்குகிறார்.
1. கொப்பூழ் அடியாகத் தோன்றி மேலே எழுகின்ற உதானன் எனும் காற்று தலையிலும், கழுத்திலும், நெஞ்சிலும் தங்குகிறது.
2. பின்னர்த் தலை, கழுத்து, நெஞ்சு எனும் அம்மூன்றுடன் பல், இதழ், நாக்கு, மூக்கு, அண்ணம் உட்பட எட்டு இடங்களிலும் ஓர் உறுப்போடு ஓர் உறுப்பு பொருந்தி அமைய ஒலிகள் உருவாகின்றன.
3. இவ்வாறு காற்று எழுந்து வெவ்வேறு உறுப்புகளின் வெவ்வேறு முயற்சிகளால் எழுத்துகள் பிறப்பதால் அவ்வெழுத்துகள் வெவ்வேறாகத் தோன்றுகின்றன என்கிறார் .
நமது சித்தர்களோஉடலின் இயக்கங்களுக்கு ஆதாரமான சக்கரங்களையும் அதில் இடம்பெற்றுள்ள இதழ்கள் எனும் 4,6,10,12,16,2 மொட்டுக்களை காரணமாக் கூறுகின்றனர் .
1. மூலாதாரம் 4
2. சுவாதிட்டானம் 6
3. மணிபூரகம் 10
4. அநாகதம் 12
5. விசுத்தி 16
6. ஆக்ஞை 2
இந்த ஆறு ஆதாரங்களில் மூச்சு பொருந்தும் போது அந்தந்த ஆதாரங்களைச் சுற்றியுள்ள இதழ்களில் 4,6,10,12,16,2 என அதிர்வின் விளைவாக ஒலி தோன்றும். இவ்வொலியைக் குறிக்கும் வகையில் வரி வடிவங்களைக் குறித்து வருகின்றனர். 50 இதழ்களுக்கு 50 எழுத்துக்கள் விளங்குகின்றன. பிரணவம் எனப்படும் ‘ஓம்’ எனும் ஒலியே அனைத்து ஒலிகளுக்கும் காரணமாகின்றது. ஆக, 50+1 = 51 எழுத்துக்கள். சித்தர்களின் பாடல்களில் 51 அட்சரம் எனக் குறிப்பிடப்படுபவைஇவையேயாகும். ஆறு ஆதாரங்களில் ஏற்படும் அதிர்வுகளே 51 ஒலிகள். அவற்றின் வடிவங்களே 51 அட்சரங்கள்.
இதையே இந்தக்குறளில் ஔவை கூறுகிறார் .
"ஔவையார்" என்பதே ஒரு மந்திரச்சொல் என்று நம்புபவர்கள் இருக்கிறார்கள் .
உடலில் இடம்பெற்றிருக்கும் இந்த சக்கரங்கள் கண்ணுக்குத்தெரியாதவை . அவை உள்ளுடம்பின் பகுதிகள் ஆகும் .
இன்னமும் 51 அட்சரங்களைப்பற்றி நிறைய செய்திகள்
மற்றும் உண்மைகள் சொல்வதற்கு நிறைய உள்ளன .
அத்தனையும் இங்கே இப்போது கூற இடமில்லை .

அடுத்து வரும் குறள்களில் சிறுக சிறுகக் காணலாம் .
அண்ணாமலை சுகுமாரன்
22/8/17

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Mon Aug 28, 2017 9:21 am


 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 1rzyXbG4Ql2g7ySxlGzt+26

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் -26
--அண்ணாமலை சுகுமாரன்

ஒளவையின் குறளில் அடுத்ததற்கு போவதற்குமுன் நான் சில செய்திகளை .பகிர எண்ணுகிறேன் .
3 ஆம் பகுதியில் உள்ளுடம்பு பற்றி 10 குறள்களில் விளக்கம் கூறியுள்ளார் .அடுத்தப் பகுதி நாடி தாரணை பற்றியது .
அண்மையில் வந்த விநாயகர் சதுர்த்தியின் போது ஒளவை எழுதிய விநாயகர் அகவல் படித்தேன்
அப்போது அதில் வந்த சிறப்பான ஒரு வரி என்னை ஈர்த்தது .
- புரியட காயம் புலப்பட எனக்கு
தெரியெட்டு நிலையும் தெரிசனபடுத்தி----என்கிறார்
புரியட காயம் என்பது உள்ளுடம்பு .
அதைப்பற்றி உள்ளுடம்பு பற்றி எழுதியசமயத்தில் குறிப்பிடமறந்தோமே என்ற எண்ணம் வந்தது .இதைப்பற்றியும் எழுதி பின் அடுத்த பகுதி போவதே உசிதம்
என்ற எண்ணம் வந்தது .
புரி - முடிச்சு
அட்டம் - எட்டு
காயம் - உடம்பு

அதாவது உள்ளுடம்பு எட்டு முடிச்சி கொண்டது இவை அனைத்தும் முடிச்சு போன்று பரு உடலில் ஓர் இடத்தில் கட்டப்பட்டு இருக்கின்றது
இதை சித்தர்கள் எட்டு ( அ ) என்பர்
அசபை, எண்குணம் என்றெல்லாம் கூறியுள்ளார்கள்.
இட பிங்களா நாடிகள் மூன்று இடத்தில் மார்டி மாறி சென்று கிரந்தி மூலம் மூன்று மண்டலங்களை ஏற்படுத்துகிறது .
அது வேறு இந்த எட்டு முடிச்சு வேறு .
எனவே உள்ளுடம்பு என்பது புரியட்ட காயம் எனப்படுகிறது இந்த உடலானது மறைவாக இருந்து இந்த பரு உடலை நடத்தி வருகின்றது.
இந்த புரியட்ட காயத்தை குரு நாதர் மூலம் தெரிந்து கொள்ளுதலே தீட்சை எனப்படுகிறது. இதை சித்தர்கள் மாற்றி பிறத்தல் என்கிறார்கள் .
அழுகண்ணி சித்தரும்
ஊத்தை சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றி பிறக்க மருந்தெனக்கு கிட்டுதில்லை
மாற்றி பிறக்க மருந்தெனக்கு கிட்டுமென்றால்
ஊத்தை சடலம் விட்டு உன் பாதம் சேரேனோ என்கிறார் .
எனவே உள்ளுடம்பினைஉணர்வதின் வழியே மாற்றி பிறக்க மருந்து எனலாம் .
இனி நாடிகளைப்பற்றி பார்க்கலாம்
அண்ணாமலை சுகுமாரன்
28/8/17

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 28, 2017 8:20 pm

"புரியட காயம் " & "மாற்றி பிறத்தல்"

நன்றி ,சுகுமாரன் அவர்களே.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 372
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Thu Aug 31, 2017 8:02 pm


 ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் - Page 4 DFp3LDBISmKkrAIG5R8Q+26a

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள் -27
- -அண்ணாமலை சுகுமாரன்
அதிகாரம் 4 = நாடி தாரணை
31 ) எழுபத்தீராயிர நாடி அவற்றுள்
முழுப்பத்து நாடி முதல்
எழுபத்தீராயிர நாடி = நமது உடலில் 72000 நாடிகள் இருக்கிறது
அவற்றுள் = அந்த 72000 நாடிகளுக்குள்
முழுப்பத்து நாடி = முழுமையான முக்கியமான
பத்து நாடிகள் உள்ளன .
முதல் = அந்த 10 நாடிகளில் முதன்மையான முக்கிய நாடி ஒன்று இருக்கிறது .
நமது உடலில் உள்ள 72000 நாடிகளில் தச நாடிகள் எனும் பத்து நாடிகள் முக்கியமானவை அவை
1-இடா –
2- பிங்களா –
3- சுழுமுனை –
4 – சிங்குவை –
5 – புருடன்
6 – காந்தாரி –
7 – அத்தி –
8 – அலம்புடை –
9 – சங்கினி –
10 – குரு எனப்படும் .இவைகளில்
1-இடா – வலதுகால் பெருவிரல் தொடக்கி கத்தரிக்கோல் போல் மாறிசென்று இடது மூக்கைச் சென்று அடையும்
2- பிங்களா – இடது கால் பெரு விரலில் ஆரம்பித்து மாறிச் சென்று வலது புற மூக்கை பற்றி நிற்கும்
3- சுழுமுனை – மூலாதாரத்தில் தொடங்கி எல்லா நாடிகளுக்கும் ஆதாரமாக நடுநிலையாய் இருந்து ஆறு ஆதாரங்களின் வழியே சிரசில் போய் முட்டி நிற்கும்
இதுவே இங்கு ஔவைசொல்லும் முதன்மையான முக்கியஒரு நாடி ஆகும் .
இதில் இப்போது நாம் முக்கியமாக உணரவேண்டிய விடயம் ஒன்று உண்டு .அது நாடிகள்என்பது நரம்புகள் அல்ல என்பதுவே .
நாடிகள் சூக்ஷுமமானவை , கண்ணுக்குத்தெரியாதது .
இது உடம்பினுள் உயிராற்றல் எனும் பிராணனை உடல் முழுவதும் கடத்த பயன்படுகிறது .
மனித உடம்பில் நரம்பு மண்டலம் ஓர் அதிசயம்தான்
மூளையும், தண்டுவடமும், அவற்றில் இருந்து புறப்படும் பல நரம்புகளும் இதில் முக்கியமானவை .தண்டுவடம், மூளை, அவற்றின் நரம்புகள் உணர்ச்சிகளையும், அசைவுகளையும் தீர்மானிக்கின்றன
நரம்புகளின் இயக்கம் பயன் இவர்களைப்பற்றி மருத்துவ நூல்கள் விவரிக்கின்றன .
ஞான நூல்கள் கண்ணுக்குத்தெரியாத சூக்ஷுமமான நாடிகளை ஆயகின்றன .
இடகலை , பிங்கலை என்று சிலர் கூறுவது உண்டு .
ஆனால் இடகலை என்பது இடது மூக்கு துவாரம் ,
பிங்கலை என்பது வலது மூக்கு துவாரம் .
கலை என்பது காற்றைக் குறிப்பிடும் வார்த்தை ஆகும் .
அது நாடிகளை குறிக்காது .
நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள பிராணனை அந்தந்த மூக்குத்துளைகளில் உள்ள நாடிகள் எடுத்து சென்று
சேமிக்கும் .
இன்னும் பல நாடிகள் பற்றிய செய்திகளை அடுத்ததாக குறளில் காணலாம் .
அண்ணாமலை சுகுமாரன்
31/8/17

Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக