புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 9:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:07 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Today at 8:04 pm

» கருத்துப்படம் 05/08/2024
by mohamed nizamudeen Today at 8:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:13 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Today at 3:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:20 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:06 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:05 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:04 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 12:04 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 03, 2024 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:50 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்? Poll_c10பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்? Poll_m10பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்? Poll_c10 
14 Posts - 56%
ayyasamy ram
பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்? Poll_c10பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்? Poll_m10பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்? Poll_c10 
6 Posts - 24%
mohamed nizamudeen
பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்? Poll_c10பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்? Poll_m10பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்? Poll_c10 
2 Posts - 8%
mini
பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்? Poll_c10பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்? Poll_m10பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்? Poll_c10 
1 Post - 4%
Barushree
பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்? Poll_c10பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்? Poll_m10பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்? Poll_c10 
1 Post - 4%
சுகவனேஷ்
பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்? Poll_c10பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்? Poll_m10பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்? Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்? Poll_c10பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்? Poll_m10பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்? Poll_c10 
67 Posts - 49%
ayyasamy ram
பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்? Poll_c10பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்? Poll_m10பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்? Poll_c10 
53 Posts - 38%
mohamed nizamudeen
பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்? Poll_c10பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்? Poll_m10பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்? Poll_c10 
6 Posts - 4%
சுகவனேஷ்
பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்? Poll_c10பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்? Poll_m10பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்? Poll_c10 
3 Posts - 2%
prajai
பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்? Poll_c10பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்? Poll_m10பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்? Poll_c10 
2 Posts - 1%
mini
பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்? Poll_c10பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்? Poll_m10பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்? Poll_c10 
2 Posts - 1%
Barushree
பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்? Poll_c10பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்? Poll_m10பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்? Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்? Poll_c10பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்? Poll_m10பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்? Poll_c10 
1 Post - 1%
Rutu
பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்? Poll_c10பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்? Poll_m10பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்? Poll_c10 
1 Post - 1%
Guna.D
பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்? Poll_c10பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்? Poll_m10பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 30, 2016 10:16 pm

யாருக்கு, என்ன விபத்து ஏற்பட்டாலும், அதைப் பற்றி, நான் விலாவரியாக விசாரிப்பது உண்டு. அவர்களும், 'இந்தாள், சொல்லாமல் விட மாட்டார் போலிருக்கிறது...' என்கிற மனநிலைக்கு மாறி, நான் கேட்கிற நுணுக்கமான கேள்விகளுக்கெல்லாம், மனம் சலிக்காமல், பதில் சொல்வர்.

அதேபோல், நோயில் சிக்கி, பாயில் படுத்தவர்களும், நீண்ட நாள் சிகிச்சையில் இருப்பவர்களும், என்னிடம் சிக்கினால், 'ஏண்டா நமக்கு நோய் வந்தது...' என்று, எண்ணும் அளவிற்கு என் கேள்விகள் இருக்கும்.

விபத்துகள், வியாதிகள் என்றில்லை; எதிராளி பேசும் எல்லா விஷயங்களும், நாம் பயணிக்கும் வாழ்க்கைப் பாதைகளில், எச்சரிக்கை செய்யும் அறிவிப்பு பலகைகளே!

நோயாளிகளையோ, விபத்தில் சிக்கி, சிகிச்சை பெறுவோரையோ பார்க்கச் செல்பவர்கள், பெயருக்கு நான்கு கேள்விகளை கேட்டு, சாத்துக்குடி பழத்தை கொடுத்து வந்தால், இரு தவறுகளை செய்கின்றனர் என்று பொருள்.

முதலாவது, பாதிப்பின் தன்மைகள் என்ன என்பதை அறியாதவர்களாக இருப்பதால், 'இத்தகைய தவறுகளை, நாம் செய்யாதிருக்க வேண்டும்...' என்கிற பாடத்தை, இவர்களால் மனதில் பதித்து கொள்ள முடியாமல் போகிறது.

இரண்டாவது, 'நம் மீது, இவருக்கு அக்கறையில்லை; பெயருக்கு கேள்வி கேட்டு, வந்தேன் என்று பெயர் செய்து விட்டு போகவே வந்திருக்கிறார்...' என்கிற முடிவிற்கு வருகின்றனர், பாதிக்கப்பட்டோர்.

நம் அனுபவத்திலிருந்து, பாடங்களை பெறுவது புத்திசாலித்தனம் என்றால், பிறருடைய அனுபவங்களில் இருந்து, பாடம் படிப்பது, அதிபுத்திசாலித்தனம்.

நஷ்டப்படாமலேயே, அனுபவ பாடங்களை கற்பது, உதவித் தொகையில், படிக்கிற மாணவனின் அனுபவத்திற்கு சமம்.

எந்த ஒரு விஷயத்திலும், பிறர் பேசுவதை, காது கொடுத்து கேட்க வேண்டும். 'இவன் கதையை கேட்டு, எனக்கென்ன ஆகப் போகிறது...' என்று எண்ணுகிற மனோபாவத்தால், பிறர் வாய்களையும், நம் காதுகளையும், நாமே அடைத்து விடுகிற தவறுகள், நிகழ்ந்து விடுகின்றன.

ரயிலில், ஜன்னலோரம் அமர்ந்திருந்தேன். பிளாட்பாரத்தில் இரண்டு, 'போர்ட்டர்'கள் பேசி கொண்டு நிற்கின்றனர்...

'இந்த காலத்து பிள்ளைங்க, எங்க நம்ம பேச்சை கேக்குது...' முதலாமவர்.
'கேக்கும் கேக்கும்... முதல்ல நீ, பிள்ளைங்ககிட்டே தோழனா இரு; அப்புறம் அப்பனா நடந்துக்கோ...' என்கிறார் இரண்டாமவர்.

ஒரு அமெரிக்க நூலாசிரியர் எழுதிய, 'தி ஆர்ட் ஆப் பேரண்டிங்' (பெற்றோராக நடந்து கொள்ளும் கலை) என்கிற இக்கருத்து, நம், போர்ட்டருக்கு எப்படி தெரிந்தது என, வியந்து போனேன். ஒவ்வொரு மனிதனும், வாழ்ந்து அனுபவித்து, அவற்றின் அடிப்படையில், சில வாழ்க்கை தத்துவங்களை உதிர்க்கிறான். இவற்றை காதில் வாங்கி, உள்ளத்தில் பதித்தால், நஷ்டப்படாமலும், கஷ்டப்படாமலும், வாழ்க்கையை சேதாரம் இன்றியும், சுவையாகவும் கொண்டு செல்ல முடியும்.

'அறுத்து தள்ளிட்டான்; பேசிப் பேசியே கொல்றான்; செம ராவு ராவிட்டான்; இப்படியா, 'லெக்சர்' அடிக்கிறது...' என்றெல்லாம், சலிப்பு வாசகங்களை உதிர்த்து, மற்றவர்களின் பேச்சுக்களையெல்லாம் தவிர்க்கிறோம்.

என்னை பொறுத்தவரை, 'ரிசர்வ்ட் டைப்' அல்லது 'இன்ட்ராவேர்ட் கேரக்டர்ஸ்' எனப்படும், உள்ளுக்குள் சிந்திப்பவர்களோடு உரையாடுவது தான் ரொம்ப கஷ்டம்.

பல் பிடுங்குகிற மருத்துவர் போல், இவர்களிடம், சொல் பிடுங்குகிற மனிதர்களாய், நம்மை ஆக்கி விடும் போது, இவர்களை கண்டாலே, எரிச்சல் வருகிறது. 'ஆமா... இல்லை... ஹி ஹி...' என்று மிகக் குறுகிய வெளிப்பாடுகளால், நம்மை இம்சிக்கின்றனர். 'இவர்களது மனதில், என்ன ரேகைகள் ஓடுகின்றன...' என்று, பிடிபடுவதே இல்லை.

நேரமும், அவகாசமும் இருந்தால், பிறரை பேச விட்டு கேளுங்கள்; தூண்டுதல் கேள்விகளை, தூண்டிலாய் போட்டு, பதில்களை வரவழையுங்கள். அந்தந்த துறை மனிதர்களின், அறிவாற்றலை கறந்து விடுங்கள். 'பிளாட்டிங் பேப்பராய்' மாறி, அவர்களது அறிவை, ஒற்றி எடுங்கள். 'ஐயோ... அறுவை வருது...' என, தலைதெறிக்க ஓடாதீர்.

எதிராளி, சுவாரசியமற்ற விஷயங் களை பேசினால், அவர்களை திசை திருப்புங்கள். குடும்ப உறுப்பினர்களுக்கு, இன்னும் கூடுதல் சலுகை காட்டுங்கள். ஆனால், இப்போதெல்லாம் குடும்ப உறுப்பினர்களுக்குள்ளேயே ஒருவர் கதையை மற்றொருவர் கேட்க தயாராக இல்லை.

சிறு வயதில், உணவுகளை பகிர்ந்து கொள்ள முன் வராதது போலவே, பெரியவர்களானதும், உணர்வுகளை பகிர்ந்து கொள்ளாமல் விட்டு விடுகிறோம்
.
'சொல்ல விரும்புகின்றனரா...' என்று நாடி பிடித்து பாருங்கள். 'ஆம்...' என்றால், துணை கேள்வி போடுங்கள். பகிர்ந்து கொள்ளாத குறையால் தான், இன்று, பல குடும்ப உறவுகள், சீக்கு பிடித்து கிடக்கின்றன.
குடும்ப உறுப்பினர்களை, நன்கு பேச விட்டு, கேளுங்கள்; நேசமும், நல்லுறவும் வளரும்!

லேனா தமிழ்வாணன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக