புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனசெல்லாம் நீ !  நூல் ஆசிரியர் : கவிதாயினி செல்வகீதா !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மனசெல்லாம் நீ !  நூல் ஆசிரியர் : கவிதாயினி செல்வகீதா !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மனசெல்லாம் நீ !  நூல் ஆசிரியர் : கவிதாயினி செல்வகீதா !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனசெல்லாம் நீ !  நூல் ஆசிரியர் : கவிதாயினி செல்வகீதா !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மனசெல்லாம் நீ !  நூல் ஆசிரியர் : கவிதாயினி செல்வகீதா !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மனசெல்லாம் நீ !  நூல் ஆசிரியர் : கவிதாயினி செல்வகீதா !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
94 Posts - 41%
ayyasamy ram
மனசெல்லாம் நீ !  நூல் ஆசிரியர் : கவிதாயினி செல்வகீதா !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மனசெல்லாம் நீ !  நூல் ஆசிரியர் : கவிதாயினி செல்வகீதா !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மனசெல்லாம் நீ !  நூல் ஆசிரியர் : கவிதாயினி செல்வகீதா !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
88 Posts - 39%
i6appar
மனசெல்லாம் நீ !  நூல் ஆசிரியர் : கவிதாயினி செல்வகீதா !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மனசெல்லாம் நீ !  நூல் ஆசிரியர் : கவிதாயினி செல்வகீதா !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மனசெல்லாம் நீ !  நூல் ஆசிரியர் : கவிதாயினி செல்வகீதா !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
மனசெல்லாம் நீ !  நூல் ஆசிரியர் : கவிதாயினி செல்வகீதா !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மனசெல்லாம் நீ !  நூல் ஆசிரியர் : கவிதாயினி செல்வகீதா !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மனசெல்லாம் நீ !  நூல் ஆசிரியர் : கவிதாயினி செல்வகீதா !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மனசெல்லாம் நீ !  நூல் ஆசிரியர் : கவிதாயினி செல்வகீதா !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மனசெல்லாம் நீ !  நூல் ஆசிரியர் : கவிதாயினி செல்வகீதா !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மனசெல்லாம் நீ !  நூல் ஆசிரியர் : கவிதாயினி செல்வகீதா !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
மனசெல்லாம் நீ !  நூல் ஆசிரியர் : கவிதாயினி செல்வகீதா !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மனசெல்லாம் நீ !  நூல் ஆசிரியர் : கவிதாயினி செல்வகீதா !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மனசெல்லாம் நீ !  நூல் ஆசிரியர் : கவிதாயினி செல்வகீதா !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
மனசெல்லாம் நீ !  நூல் ஆசிரியர் : கவிதாயினி செல்வகீதா !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மனசெல்லாம் நீ !  நூல் ஆசிரியர் : கவிதாயினி செல்வகீதா !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மனசெல்லாம் நீ !  நூல் ஆசிரியர் : கவிதாயினி செல்வகீதா !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மனசெல்லாம் நீ !  நூல் ஆசிரியர் : கவிதாயினி செல்வகீதா !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மனசெல்லாம் நீ !  நூல் ஆசிரியர் : கவிதாயினி செல்வகீதா !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மனசெல்லாம் நீ !  நூல் ஆசிரியர் : கவிதாயினி செல்வகீதா !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மனசெல்லாம் நீ !  நூல் ஆசிரியர் : கவிதாயினி செல்வகீதா !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மனசெல்லாம் நீ !  நூல் ஆசிரியர் : கவிதாயினி செல்வகீதா !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மனசெல்லாம் நீ !  நூல் ஆசிரியர் : கவிதாயினி செல்வகீதா !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
மனசெல்லாம் நீ !  நூல் ஆசிரியர் : கவிதாயினி செல்வகீதா !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மனசெல்லாம் நீ !  நூல் ஆசிரியர் : கவிதாயினி செல்வகீதா !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மனசெல்லாம் நீ !  நூல் ஆசிரியர் : கவிதாயினி செல்வகீதா !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனசெல்லாம் நீ ! நூல் ஆசிரியர் : கவிதாயினி செல்வகீதா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Dec 09, 2016 2:55 pm

மனசெல்லாம் நீ !

நூல் ஆசிரியர் : கவிதாயினி செல்வகீதா !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

வானம் வெளியீடு, A49 லட்சுமி சுந்தரம் என்கிளேவ்,
சம்மட்டிபுரம் மெயின் ரோடு, மதுரை 625016.
64 பக்கங்கள் விலை ரூ.90.
******
நூல் ஆசிரியர் கவிதாயினி செல்வகீதா அவர்கள் ஹலோ எப்.எம். பண்பலை வானொலியில் முதுநிலை அறிவிப்பாளர். ‘டைரி’ என்ற நிகழ்ச்சியின் மூலம் மதுரை வானொலி நேயர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டு வருபவர். இனிமையான குரலுக்கு சொந்தக்காரர். எனது கவிதைகளையும் அவரது குரலில் வாசித்து பெருமை சேர்த்தவர். அவரது முந்தைய நூல், பொது அறிவு தொடர்பான நூல். இந்த நூல் முழுக்க முழுக்க காதல் கவிதை நூல்.

நூல் ஆசிரியர் கவிதாயினி செல்வகீதா அவர்கள் அவரது கணவர் M. காளீஸ்வரன் அவர்களுக்கு காணிக்கை ஆக்கி உள்ளார் .
" நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் அல்லர்.பெரியோர் பார்த்து நிச்சயித்த திருமணம்.பதினெட்டு ஆண்டுகளாகக் கட்டுக் குலையாமல் எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் துணிந்து எதிர்கொண்டு இல்லற வாழ்வை வெற்றியாக்கி உள்ளதில் அதிகப் பங்கு எனது கணவருக்கே.அதனாலேயே அவருக்கு இந்த நூல் சமர்ப்பணம்."
. பெற்றோர் பார்த்து வைத்த திருமணங்களும் மணமுறிவில் முடிவதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன. ஆனால் நூலாசிரியர் , பெரியோர் பார்த்து நிச்சயித்த திருமண வெற்றிக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றார். திருமணமாகி பதினெட்டு வருடங்கள் ஆன போதும் இன்றும் அவரது கணவரை தொடர்ந்து காதலித்து வருகிறார். அக்கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார். பாராட்டுகள்.
நான் நேசிக்கும் கவிஞர் கவிதாசன் அவர்களின் அணிந்துரையும், இனிய நண்பர் கவிஞர் ஆத்மார்த்தி அவர்களின் பதிப்புரையும் மிக நன்று. நூலிற்கு வரவேற்பு தோரணங்களாக அமைந்துள்ளன.
அட்டைப்பட வடிவமைப்பு, உள் அட்டை யாவும் மிக நேர்த்தியாக உள்ளன. பாராட்டுகள். மதுரை புத்தகத் திருவிழாவில், உயிர்மை பதிப்பக அரங்கில் இந்நூல் வெளியிடப்பட்டது. நூலாசிரியரின் அன்புக் கணவர், சகோதரர், அண்ணி என குடும்பத்தினர் பலரும் வந்து வாழ்த்திப் பாராட்டினார்கள். நானும் சென்று கலந்து கொண்டு நூல் வாங்கி வந்தேன்.
சங்க காலத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண் கவிஞர்கள் இருந்து உள்ளனர். இன்றைய காலத்தில் பெண் கவிஞர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர். திருமணத்திற்கு பின் கவிதை எழுதி நூல் வெளியிடும் பெண் கவிஞர்கள் மிகவும் குறைவு. குடத்து விளக்காக உள்ள திறமைகளை குன்றத்து விளக்காக ஒளிர்த்திட வைப்பது நூல்களே. எனவே பல பெண் கவிஞர்கள் நூல் வெளியிட முன் வர வேண்டும்.

நூலின் முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது.
சண்டையிட்ட பொழுதுகளில் கூட
உன்னை வெறுக்க மனம் வரவில்லை
இருக்கமாகிக் கிடக்கிறாய் எப்போதும் நீ!


காதலில் ஊடல் வரலாம் ஆனால் அது வெகுவிரைவில் கூடலாகி விட வேண்டும். வெறுக்கும் அளவிற்கு செல்லுதல் கூடாது என்பதை நன்கு உணர்த்தி உள்ளார். காதல் திருமண வெற்றிக்கு மந்திரமாகக் கொள்ளும் வைர வரிகள். பாராட்டுகள்.

என் இதயத்தை திருடிய
குற்றத்திற்கு தண்டனையாக
ஆயிரம் முத்தங்கள் உனக்கு
அப்போதுதான் அந்தத் தவறை
மீண்டும் மீண்டும் செய்வாய் நீ !


காதலனுக்கு காதலி தரும் முத்தம், தண்டனை அல்ல பரிசு என்றே ஏற்றுக் கொள்வான். இந்த நூல் படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் காதல் நினைவுகளை மலர்விக்கும் விதமாக கவிதைகள் உள்ளன. சங்க காலத்து அகப்பாடல்கள் போல தலைவி கூற்றாக கவிதைகள் உள்ளன. எல்லோருக்கும் புரியும் விதமாக எளிமையான சொற்கள் மட்டுமே பயன்படுத்தி இருப்பதற்கு பாராட்டுகள்.

இரவு நேரங்களில் !
உன் நினைவுகள் சுகம் தான்
இது இரவென்பதால் அல்ல
நினைவுகளில் நீ என்பதால் !


சொல் விளையாட்டு விளையாடி கவிதை படித்து வாசகர்களின் உள்ளம் தொட்டு உள்ளார். அவரவர் துணை பற்றிய நினைவுகளை வரவழைத்து வெற்றி பெற்றுள்ளார்.

உனது தொலைதூரப் பயணங்களில்
உன்னோடு பயணிக்கிறது
என் உள் மனசு !
பணி காரணமாக, சுழ்நிலை காரணமாக, தலைவி தலைவனை பிரிய நேர்ந்தால், பிரிய மனமின்றி பிரிந்தாலும் தலைவியின் மனம் தலைவனுடனே பயணிக்கும் என்ற சங்ககாலக் காட்சியை நினைவுபடுத்தி விடுகின்றது கவிதை.
காதல் கவிதை ஆண் எழுதினாலும் சரி பெண் எழுதினாலும் சரி ,அதில் நிலவு என்ற கருப்பொருள் வந்தே தீரும். நூலாசிரியர் கவிதாயினி செல்வகீதாவும் விதி விலக்கின்றி நிலவையும் குறிப்பிட்டுள்ளார்
.
உனதன்பில் நான் மயங்கிய நேரங்களிலும்
எனதன்பில் நீ மயங்கிய நேரங்களிலும்
வேடிக்கை பார்த்த நிலா
தன்னை மறந்து மயங்கியே நின்றது !


மனைவி கவலையோடு இருந்தால் கண்டு கொள்ளாமல் இருக்கும் கணவன்தான் சமுதாயத்தில் பெருகி உள்ளனர். ஆனால் நூலாசிரியரின் அன்புக் கணவர், மனைவி கவலையுறும் நேரங்களில் மிக அன்பாக, ஆதரவாக, இருந்து ஆறுதல் தந்த நிகழ்வை ஆண்மை, தாய்மை என்று ,இறுதி எழுத்து ஒன்றிவரும் இயைபுச் சுவையுடன் மிக இயல்பாக எழுதி உள்ளார். பாராட்டுகள்.

நான் கவலையுறும் போதெல்லாம்
என் கரம் கோர்த்து !
என் சிரம் கோதும்
உன்னில் நான் காண்பது!
ஆண்மை மட்டுமல்ல
அதையும் தாண்டிய தாய்மை!


வீட்டுக்கு வீடு வாசப்படி என்பதைப் போல மிகப்பிரபலமானவர்களும், திறமையானவர்களும், எழுத்தாளர்களும், கவிஞர்களும் வெளி உலகில் எவ்வளவோ நல்ல பெயர் எடுத்தாலும் கட்டிய மனைவியிடம் நல்ல பெயர் எடுப்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றது. நூல் ஆசிரியர்
கவிதாயினியிடம் நல்லபெயர் எடுத்துள்ள அவரது கணவர் திரு. M. காளீஸ்வரனுக்கு பாராட்டுகள்.
பெரியோர் பார்த்து நிச்சயித்த திருமணம் . 18 ஆண்டுகள் கடந்த பின்னும் இன்னும் இன்றும் என்றும் காதலிக்கும் இணையராக உள்ளனர் என்பதற்கு சான்று இந்தக் கவிதை.
காதல் செய்து! காதல் செய்து!
கோடிமுறை களித்திருந்தாலும்
தேடித்தேடி அலைந்து
இன்னும் விழித்தே
இருக்கிறது மனசு!
மீண்டும் உன்னைக் காதல் செய்யவே!


புத்தகத்திருவிழாவில் வெளியிட்ட புத்தகம் இது. அதில் புத்தகம் பற்றி மிக உயர்வாக பதிவு செய்துள்ள கவிதை. இதோ!
வாங்கிப்படித்து! படித்து ரசித்து!
ரசித்துச் சுவைத்த விலை மதிப்பற்ற
புத்தகம் நீ! பொக்கிஷம் நீ!
நூலாசிரியர் கவிதாயினி செல்வ கீதா அவர்களுக்கு சிரித்தால் கன்னத்தில் குழி விழும் அதனை உணர்ந்து எழுதிய கவிதை நன்று.
எனது கன்னக்குழியில் !
எல்லாம் நிறைந்து கிடைக்கும்
உன் நினைவு முத்தங்களை!
வைத்து பல்லாங்குழி ஆடுகிறேன்.
எல்லாமுமாய் நீ இருக்கும்
நிறைவோடு !
மனைவி கவிதை நூல் வெளியிட உள்ளார். அதுவும் காதல் கவிதை நூல் என்றால், எதற்கு உனக்கு இந்த வேண்டாத வெட்டி வேலை என்று திட்டும் சராசரி கணவனாக இல்லாமல், வெளியீட்டு விழாவில் நூலாசிரியரை விட கூடுதலாக மகிழ்வோடு நின்று வரவேற்ற திரு. M. காளீஸ்வரன் அவர்களுக்கு பாராட்டுகள். பெரியோர் பார்த்து நிச்சயித்த திருமண வெற்றிக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் இணையருக்கு வாழ்த்துகள்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக