புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_m10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_m10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_m10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_m10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10 
11 Posts - 4%
prajai
காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_m10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10 
9 Posts - 4%
Jenila
காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_m10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_m10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_m10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_m10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_m10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10 
2 Posts - 1%
jairam
காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_m10காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காத்திருக்கிறான் கமலக்கண்ணன்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 27, 2016 8:48 am


கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு,
மதுசூதனன், த்ரிவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன், ஹ்ருஸ்ரீகேசன்,
பத்மநாபன், தாமோதரன் என்பவைகள் திருமாலின் பன்னிரு
நாமாக்களாகும். இவைகள் நாம் நித்யகர்மாக்கள்
புரிவதற்காக வேதத்தில் சொல்லப்பட்டுள்ள "துவாதச நாமாக்கள்'
என அழைக்கப்படும்.

இவைகளிலோ அல்லது வேறு திருநாமங்களிலோ திருமால்
அர்ச்சாவதாரரூபியாய் கோயில் கொண்டிருந்தாலும்,
ஸ்ரீநிவாஸன் என்ற திருநாமத்துடன் திருமால் கோயில்
கொண்டிருப்பது விசேஷமாகக் கருதப்படுகின்றது.

இந்த திருநாமம் திருமால் மனித வடிவில் அவதரித்து தன்
உடலை மக்களின் கண்களுக்கு இலக்காக்கிய "செளலப்பியம்'
எனச் சொல்லப்படும் எளிமை குணத்தின் அடையாளமாக
உண்டாகியது.

கலியுகம் காக்க வேண்டி வைகுண்டத்திலிருந்து பூவுலகம்
மேவி அடையாளம் ஏதுமின்றி திரிந்தவர்க்கு அவருடைய
வளர்ப்புத் தாயாகிய வகுளாதேவியால் சூட்டப்பட்ட பெயரே
"ஸ்ரீநிவாஸன்' என்கின்றது வேங்கடேச புராணம்.

அந்த ஸ்ரீநிவாஸனே பின் திருவேங்கடவனாக திருமலையில்
கோயில் கொண்டு அருளுகின்றார். எனவே ஸ்ரீநிவாஸன்
என்ற திருநாமத்துடன் திருமால் கோயில் கொண்டுள்ள
அனைத்து தலங்களுமே சிறப்பானவை.

ஏனென்றால் திருவேங்கடவனின் சாந்நித்யம் அத்தலங்களுக்கும்
உண்டு. திருமகளை திருமார்பில் தரித்த காரணத்தினால்
அமைந்த திவ்யமான திருநாமம் ஸ்ரீநிவாஸன் என்பதாகும்.

அவ்வகையில் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி
வட்டத்தில் உள்ள ஓசூர் கிராமத்தில் உள்ளது பழைமையான
ஸ்ரீநிவாஸப்பெருமாள் ஆலயம். இந்த கிராமம் முன்பு
"பிரம்மபுரம்' என்று அழைக்கப்பட்டு வந்திருக்கின்றது.

கிருதயுகத்தில், படைப்புக் கடவுளான நான்முகன்
இத்திருத்தலத்திற்கு வந்து பெரியவேள்வி ஒன்று நடத்தியதால்
பிரும்மபுரம் எனப்பெயர் அமைந்திருக்கலாம் என்கின்றது
கர்ண பரம்பரையாகக் கூறப்பட்டு வரும் தலவரலாற்றுத்
தகவல்.
-
--------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 27, 2016 8:51 am

கல்வெட்டுத் தகவல்களின்படி, இப்பகுதியை ஆண்டு வந்த
சம்புவராய மன்னர் இத்தலத்திற்கு வந்து பெருமாளின்
அழகில் மனம் பறிகொடுத்து இந்த ஊரை அந்தணர்களுக்குத்
தானமளித்து நித்ய பூஜைகள் குறைவர நடந்திட உதவியதாகத்
தெரிய வருகிறது.

இவ்வூரில் கோயிலுக்கு அருகில் காணப்படும் பாறையில்
பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில் காலிங்கராயன் என்பவர்
இக்கோயிலில் ஆடி மாதத்தில் சிறப்பு வழிபாட்டிற்காக
தானம் அளித்த செய்தி குறிப்பிடப்படுகின்றது.

இக்கல்வெட்டு 17, 18- ஆம்நூற்றாண்டைச் சேர்ந்ததாக
விளங்குகின்றது. விஜயநகர காலத்து ஆலய கட்டட அமைப்பு,
சந்நிதி, தெருவீதிகளின் தோற்றம், நடைபெற்று வந்த
பாரம்பரிய விழாக்கள் போன்றவை இத்தலத்தின் பழைமையை
பறைசாற்றுகின்றன.

பார்வைத் திறனுடன் கண்களுக்கு சில சமயம் பருகும் திறனும்
உண்டு என்பதை நிரூபிப்பதுபோல் இத்தலத்து பெருமாளின்
திருமேனி அழகை பார்த்து பார்த்து ரசித்து கண்களால் பருக
வேண்டும். அபய, வரத ஹஸ்தத்துடன் சங்கு சக்ரதாரியாய்
ஸ்ரீதேவி, பூதேவிமார்களுடன் காட்சியளிக்கும் எம்பெருமானின்
திருமேனி அவ்வளவு செளந்தர்யம் வாய்ந்தது! நினைவில்
வைத்தால் கனவில் காட்சி தருவது இந்த பங்கஜ நயனனின்
(கமலக்கண்ணன்) அற்புதக்கோலம்.

அலர்மேல் மங்கை உறை மார்பன் என்று ஆழ்வார்கள் பாடியது
போல் இத்திருக்கோயிலில் ஸ்ரீஅலர்மேல் மங்கை தாயார்
மூலவரின் அருகிலேயே அமர்ந்து இருப்பதும் இத்திருத்தலத்திற்கு
சிறப்பம்சமாகும்.

மூலவருக்கு இணையாக உற்சவ விக்ரகங்களும் அழகுற
அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுதர்ஸன ஆழ்வார் என்று அழைக்கப்படும் சக்கரத்தாழ்வார்
உற்சவமூர்த்தி அருமையாகவும், நுட்பமாகவும் வேலைப்பாடுகளுடன்
அமைந்துள்ளது. வைணவ ஆசார்யர் சுவாமிதேசிகர், பக்த ஆஞ்சநேயர்,
மூலவ மூர்த்திகளாகவும், உற்சவ மூர்த்திகளாகவும் இத்தலத்திற்கு
அமைந்துள்ளது மற்றொரு சிறப்பு. பலி

பீடம், விளக்குத்தூண், முன் மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை
என ஒரு பெருமாள் ஆலயத்திற்கு உரிய அனைத்து அம்சங்களுடன்
மிகவும் சிறப்பாக ஒரு காலத்தில் அமைந்து, மன்னர்களால் திருப்பணி
செய்யப்பட்டு, விழாக்கோலம் கொண்டிருந்த இவ்வாலயம், காலப்
போக்கில் சிதிலமடைந்துவிட்டது. வழிபாடுகளில் தொய்வு நிலை
ஏற்பட்டது.

கடைசி பிரம்மோற்சவம் பத்து நாள்களுக்கு 1947-இல் நடந்ததையும்,
1994-ஆம் வருடம் அகோபில மடத்து 45-ஆவது பட்டத்து ஜீயர் இங்கு
விஜயம் செய்து ஸ்ரீமாலோல நரசிம்மருக்கு ஊஞ்சல் உற்சவத்தை
நடத்தியதையும் ஊர்மக்கள் நினைவு கூறுகின்றனர்.

திருவரங்கத்தில் நடைபெற்று வருவதுபோல் மட்டையடி உற்சவம்
ஒரு காலத்தில் இங்கு நடைபெற்று வந்ததாம்.

காத்திருக்கிறான் கமலக்கண்ணன்! Kqjj3D3PTgKmjEzXli99+v7
-

ஆலயம் அவல நிலைக்குத் தள்ளப்பட்டாலும் பெருமாளின்
சாந்நித்யம் சிறிதும் குறையவில்லை. நலிவுற்ற ஆலயத்தை
பழைமை பொலிவுடன் மாற்றுவதற்கு ஊர்மக்கள்
ஓசூர் ஸ்ரீ ஸ்ரீநிவாஸ பெருமாள் டெம்பிள் டிரஸ்ட், என்ற அமைப்பை
ஏற்படுத்தி திருப்பணி வேலைகளை துவக்கியுள்ளனர்.

தற்போது கொடிமரம் அமைத்துக் கொடுக்க ஓர் அன்பர்
முன்வந்துள்ளார். இதர பணிகள் நடைபெற்று ஒப்பற்ற ஓசூர் திருப்பணி
முழுவதும் நிறைவு பெறுவதற்கு திருமால் பக்தர்களின் உதவி அவசியம்
தேவையாக உள்ளது.

எதிர்வரும் நவம்பர் 27-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருப்பணி
வேலைகள் விரைவில் நடைபெற வேண்டி உற்சவமூர்த்திகளுக்கு
சிறப்பு திருமஞ்சனமும், கூட்டுப் பிரார்த்தனை, பஜனை, பாராயண
நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றது.

பக்தர்கள் இத்திருப்பணியில் பங்குகொண்டு பெருமாளின் திருவருள்
பெறலாம்.
இத்திருத்தலம் காஞ்சிக்கு தெற்கே 40 கி.மீ. தொலைவிலும்
வந்தவாசியிலிருந்து 12 கி.மீ. தூரத்திலும் உள்ளது.

தொடர்புக்கு: 98844 47570 / 74185 21400.
-
-------------------------------------------

- எஸ்.வெங்கட்ராமன்
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக