புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இதுவும் கடந்து போகும்...- தலையங்கம் -   (தினமணி) Poll_c10இதுவும் கடந்து போகும்...- தலையங்கம் -   (தினமணி) Poll_m10இதுவும் கடந்து போகும்...- தலையங்கம் -   (தினமணி) Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
இதுவும் கடந்து போகும்...- தலையங்கம் -   (தினமணி) Poll_c10இதுவும் கடந்து போகும்...- தலையங்கம் -   (தினமணி) Poll_m10இதுவும் கடந்து போகும்...- தலையங்கம் -   (தினமணி) Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
இதுவும் கடந்து போகும்...- தலையங்கம் -   (தினமணி) Poll_c10இதுவும் கடந்து போகும்...- தலையங்கம் -   (தினமணி) Poll_m10இதுவும் கடந்து போகும்...- தலையங்கம் -   (தினமணி) Poll_c10 
3 Posts - 6%
prajai
இதுவும் கடந்து போகும்...- தலையங்கம் -   (தினமணி) Poll_c10இதுவும் கடந்து போகும்...- தலையங்கம் -   (தினமணி) Poll_m10இதுவும் கடந்து போகும்...- தலையங்கம் -   (தினமணி) Poll_c10 
2 Posts - 4%
Baarushree
இதுவும் கடந்து போகும்...- தலையங்கம் -   (தினமணி) Poll_c10இதுவும் கடந்து போகும்...- தலையங்கம் -   (தினமணி) Poll_m10இதுவும் கடந்து போகும்...- தலையங்கம் -   (தினமணி) Poll_c10 
2 Posts - 4%
Rutu
இதுவும் கடந்து போகும்...- தலையங்கம் -   (தினமணி) Poll_c10இதுவும் கடந்து போகும்...- தலையங்கம் -   (தினமணி) Poll_m10இதுவும் கடந்து போகும்...- தலையங்கம் -   (தினமணி) Poll_c10 
1 Post - 2%
சிவா
இதுவும் கடந்து போகும்...- தலையங்கம் -   (தினமணி) Poll_c10இதுவும் கடந்து போகும்...- தலையங்கம் -   (தினமணி) Poll_m10இதுவும் கடந்து போகும்...- தலையங்கம் -   (தினமணி) Poll_c10 
1 Post - 2%
viyasan
இதுவும் கடந்து போகும்...- தலையங்கம் -   (தினமணி) Poll_c10இதுவும் கடந்து போகும்...- தலையங்கம் -   (தினமணி) Poll_m10இதுவும் கடந்து போகும்...- தலையங்கம் -   (தினமணி) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதுவும் கடந்து போகும்...- தலையங்கம் -   (தினமணி) Poll_c10இதுவும் கடந்து போகும்...- தலையங்கம் -   (தினமணி) Poll_m10இதுவும் கடந்து போகும்...- தலையங்கம் -   (தினமணி) Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
இதுவும் கடந்து போகும்...- தலையங்கம் -   (தினமணி) Poll_c10இதுவும் கடந்து போகும்...- தலையங்கம் -   (தினமணி) Poll_m10இதுவும் கடந்து போகும்...- தலையங்கம் -   (தினமணி) Poll_c10 
2 Posts - 15%
Rutu
இதுவும் கடந்து போகும்...- தலையங்கம் -   (தினமணி) Poll_c10இதுவும் கடந்து போகும்...- தலையங்கம் -   (தினமணி) Poll_m10இதுவும் கடந்து போகும்...- தலையங்கம் -   (தினமணி) Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுவும் கடந்து போகும்...- தலையங்கம் - (தினமணி)


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 17, 2016 7:53 am

-
ஹிஜ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி பர்ஹான் வானியின்
மரணத்தைத் தொடர்ந்து, கடந்த ஐந்து மாதங்களாக
காஷ்மீர் பள்ளத்தாக்கில் வன்முறை, கலவரங்கள் என்று
தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வந்தது.

சையத் அலி ஷா கிலானி தலைமையிலான
பிரிவினைவாதிகள் வன்முறையைத் தூண்டிவிட்டுக்
கொண்டிருந்தார்கள். அரசு அலுவலகங்கள் எதுவும்
செயல்படவில்லை என்பது மட்டுமல்ல, பள்ளிக்கூடங்களும்
கல்லூரிகளும்கூட முற்றிலுமாக செயல்படாத நிலைமை.

கடந்த ஐந்து மாதங்களில் முப்பத்தைந்துக்கும் அதிகமான
பள்ளிக்கூடங்கள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன.
குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை முற்றிலுமாகத் தடுத்து
விட வேண்டும் என்பதில் பயங்கரவாதிகள் முனைப்பாக
இருந்து வெற்றியும் கண்டனர்.

நமது ஊரில் ஆங்காங்கே இளநீர் விற்பதுபோல, காஷ்மீர்
பள்ளத்தாக்கில் கற்கள் விற்பனை செய்யப்பட்டன.
அந்தக் கற்களை வாங்கிப் பாதுகாப்புப் படையினர் மீது
எறிவதற்கு சிறுவர்களுக்கும், மாணவர்களுக்கும்
பாகிஸ்தானில் அச்சடிக்கப்படும் கள்ள நோட்டுகள்
வழங்கப்பட்டன.

கல்வி நிலையங்களைக் குறிவைத்துத் தாக்குவதும் எரிப்பதும்,
மாணவர்களைப் பள்ளிக்குச் செல்லவிடாமல் தடுப்பதும்
பிரிவினைவாதிகளின் திட்டமிட்ட செயல்பாடு. பள்ளிகளில்
வகுப்பு நடக்காமல் தடுப்பது மட்டுமல்ல, தேர்வுகள் நடத்தப்
படாமல் முடக்குவதும் அவர்களது குறிக்கோள். அப்படிச்
செய்வதன் மூலம், நிர்வாகம் முழுமையாக சீர்கெட்டு ஸ்தம்பித்து
விட்டது போன்ற தோற்றத்தை மக்களிடம் ஏற்படுத்த
பிரிவினைவாதிகள் முயற்சிக்கிறார்கள்.

பொதுமக்கள் மத்தியில் தங்களது குழந்தைகளின் வருங்காலம்
பாதிக்கப்படுகிறது என்கிற அச்சமும், அதன் விளைவாக அரசின்
மீது ஆத்திரமும் ஏற்பட வேண்டும் என்பதுதான்
பிரிவினைவாதிகளின் நோக்கம்.

முக்கிய அரசியல்வாதிகளின் குழந்தைகளும்,
பிரிவினைவாதிகளின் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளும்
பதற்றம் காணப்படாத ஜம்மு பகுதியிலும், காஷ்மீருக்கு
வெளியிலும், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற வெளி
நாடுகளிலும் படிக்க அனுப்பப்பட்டு விடுகிறார்கள்.

வசதியில்லாத ஏழை, நடுத்தர வர்க்க காஷ்மீரிகளின்
குழந்தைகள்தான் பள்ளிக்கூடங்கள் முடக்கப்படுவதால்
பாதிக்கப்படுகிறார்கள்.

1990-இல் இதேபோல வன்முறை தலைவிரித்தாடியபோதும்
நூற்றுக்கணக்கான பள்ளிக்கூடங்கள் தகர்க்கப்பட்டன;
தீக்கிரையாக்கப்பட்டன. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு
அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவின் ஆட்சியில் நிலைமை
கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இயல்பு நிலை திரும்பியும்கூட,
மாணவர்கள் அமர்ந்து படிப்பதற்குப் பள்ளிகள் இல்லாத
நிலைமை காணப்பட்டது.

அத்தனை பள்ளிக்கூடங்களும் ராணுவத்தின் உதவியுடன்
போர்க்கால அடிப்படையில் மீண்டும் கட்டப்பட்டு வகுப்புகள்
தொடங்குவதற்கு மேலும் ஓராண்டு ஆயிற்று. அந்த மூன்று
வருடங்களும் மாணவர்களின் படிப்பு தடைபட்டது.

பலர் படிப்பைத் தொடராமல் விட்டனர். அவர்களில் சிலர்தான்
இப்போது பிரிவினைவாத இயக்கங்களில் தீவிரமாக செயல்
படுகிறார்கள்.

ஜம்மு - காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து
அரசு பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான
தேர்வுகளை அறிவித்தபோது, யாரும் தேர்வு எழுத வேண்டாம்
என்று பிரிவினைவாதிகள் அறிவித்தனர்.

அப்படித் தேர்வு எழுதத் தங்கள் குழந்தைகளை அனுப்ப முற்படும்
பெற்றோர் எச்சரிக்கப்பட்டனர். யாரும் தேர்வு எழுத
வரமாட்டார்கள் என்றுதான் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

அந்த எதிர்பார்ப்பு பொய்த்திருக்கிறது. பாகிஸ்தானின்
பின்துணையுடன் பிரிவினைவாதிகள் விடுத்த எச்சரிக்கையை மீறி,
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை 10, 12-ஆம் வகுப்பு அரசுத்
தேர்வுக்கு அனுப்பி இருக்கிறார்கள். காஷ்மீரிலிருந்து கிடைக்கும்
தகவலின்படி, 12-ஆம் வகுப்புத் தேர்வுக்குப் பதிவு செய்யப்பட்ட
மாணவர்களில் 94% பேர் தேர்வு எழுதியிருக்கிறார்கள்.

பலத்த பாதுகாப்புகளுடன் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய
10-ஆம் வகுப்புத் தேர்விலும் இதேபோல மாணவர்கள் தேர்வு எழுத
முற்பட்டிருக்கிறார்கள்.

பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருப்பது குறித்து, பாகிஸ்தான்
ஆதரவாளரான பிரிவினைவாதி சையது அலி கிலானியிடம்
மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறதே' என்று கேட்டபோது
அவர் அளித்த பதில்,

"காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள மாணவர்கள் படிக்கவும்,
தேர்வு எழுதவுமான மனநிலையில் இல்லை' என்பதுதான்.
இப்போது, அவருடைய பேத்தியே தேர்வு எழுதுகிறார். அதை
அவர் தடுக்கவில்லை. இந்தப் போலித்தனம்தான் இப்போது
காஷ்மீர் பள்ளத்தாக்கில் பரவலாகக் கேலி பேசப்படும் செய்தி.

காஷ்மீரில் ஏற்பட்டிருக்கும் எதிர்பாராத திருப்பம்
பயங்கரவாதிகளுக்குத் திகைப்பையும், மற்றவர்களுக்கு
வியப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஐந்து மாதங்களாக
இயல்புநிலை முற்றிலுமாக ஸ்தம்பித்துப் போய் இருந்த காஷ்மீர்
பள்ளத்தாக்கு இப்படி திடீரென்று உயிர்த்தெழுந்து
பயங்கரவாதிகளின் எதிர்ப்பையும், தடையையும் மீறி செயல்படும்
என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை.

இதேபோல, முன்பு உள்ளாட்சி, பொதுத் தேர்தல்களிலும் மக்கள்
பிரிவினைவாதிகளின் அச்சுறுத்தலையும் மீறித் தேர்தலில்
கலந்துகொண்டு வாக்களித்தனர். மக்கள் அமைதியை
விரும்புகிறார்கள்; வளர்ச்சியை எதிர்பார்க்கிறார்கள்;
பிரிவினைவாதிகளை வெறுக்கிறார்கள். ஆனால், அவர்களது
எதிர்பார்ப்புக்கு ஏற்ப நமது அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும்
செயல்படுவதில்லை.

இதுதான் காஷ்மீர் வன்முறை தொடர்வதற்குக் காரணம்.
இனிமேலாவது, அதை மத்திய - மாநில அரசுகள் புரிந்து
கொண்டால் நல்லது!

-
----------------------------------------
-ஆசிரியர், தினமணி

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Nov 19, 2016 5:43 am

அய்யா உங்க பதிவுகள்   பக்கம் பக்கமாக உள்ளது. படித்துபார்க்க>>>>>>>>>>>>

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக