புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மதுப்பழக்க மாயையிலிருந்து மீள்வது எப்படி? Poll_c10மதுப்பழக்க மாயையிலிருந்து மீள்வது எப்படி? Poll_m10மதுப்பழக்க மாயையிலிருந்து மீள்வது எப்படி? Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுப்பழக்க மாயையிலிருந்து மீள்வது எப்படி? Poll_c10மதுப்பழக்க மாயையிலிருந்து மீள்வது எப்படி? Poll_m10மதுப்பழக்க மாயையிலிருந்து மீள்வது எப்படி? Poll_c10 
284 Posts - 45%
heezulia
மதுப்பழக்க மாயையிலிருந்து மீள்வது எப்படி? Poll_c10மதுப்பழக்க மாயையிலிருந்து மீள்வது எப்படி? Poll_m10மதுப்பழக்க மாயையிலிருந்து மீள்வது எப்படி? Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
மதுப்பழக்க மாயையிலிருந்து மீள்வது எப்படி? Poll_c10மதுப்பழக்க மாயையிலிருந்து மீள்வது எப்படி? Poll_m10மதுப்பழக்க மாயையிலிருந்து மீள்வது எப்படி? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மதுப்பழக்க மாயையிலிருந்து மீள்வது எப்படி? Poll_c10மதுப்பழக்க மாயையிலிருந்து மீள்வது எப்படி? Poll_m10மதுப்பழக்க மாயையிலிருந்து மீள்வது எப்படி? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மதுப்பழக்க மாயையிலிருந்து மீள்வது எப்படி? Poll_c10மதுப்பழக்க மாயையிலிருந்து மீள்வது எப்படி? Poll_m10மதுப்பழக்க மாயையிலிருந்து மீள்வது எப்படி? Poll_c10 
19 Posts - 3%
prajai
மதுப்பழக்க மாயையிலிருந்து மீள்வது எப்படி? Poll_c10மதுப்பழக்க மாயையிலிருந்து மீள்வது எப்படி? Poll_m10மதுப்பழக்க மாயையிலிருந்து மீள்வது எப்படி? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மதுப்பழக்க மாயையிலிருந்து மீள்வது எப்படி? Poll_c10மதுப்பழக்க மாயையிலிருந்து மீள்வது எப்படி? Poll_m10மதுப்பழக்க மாயையிலிருந்து மீள்வது எப்படி? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மதுப்பழக்க மாயையிலிருந்து மீள்வது எப்படி? Poll_c10மதுப்பழக்க மாயையிலிருந்து மீள்வது எப்படி? Poll_m10மதுப்பழக்க மாயையிலிருந்து மீள்வது எப்படி? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மதுப்பழக்க மாயையிலிருந்து மீள்வது எப்படி? Poll_c10மதுப்பழக்க மாயையிலிருந்து மீள்வது எப்படி? Poll_m10மதுப்பழக்க மாயையிலிருந்து மீள்வது எப்படி? Poll_c10 
7 Posts - 1%
mruthun
மதுப்பழக்க மாயையிலிருந்து மீள்வது எப்படி? Poll_c10மதுப்பழக்க மாயையிலிருந்து மீள்வது எப்படி? Poll_m10மதுப்பழக்க மாயையிலிருந்து மீள்வது எப்படி? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுப்பழக்க மாயையிலிருந்து மீள்வது எப்படி?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 04, 2016 6:53 am


மது... மயக்கம் என்ன?- டாக்டர் ஷாம்


துப்பாக்கிக் குண்டுகளை விட கொடூரமானது மொடாக்குடியின் பின் விளைவுகள்! குடியின் காரணமாக ஏற்படும் உடல் ரீதியான பிரச்னைகளுக்கு மட்டுமே வேறு வழியில்லாமல் சிகிச்சை எடுத்துக்கொள்வது அப்பழக்கத்தினரின் இயல்பு. அப்பிரச்னைகளுக்கு மூல காரணமாக குடி இருப்பது பற்றி அவர்கள் ஒருபோதும் கவலைப்படுவதில்லை. தற்காலிக நிவாரணம் கிட்டினாலே மன நிறைவு அடைந்து, குடிக்கிற பணியை தொடரச் சென்று விடுவார்கள். இப்படிப்பட்டவர்கள் பூரணமாக மதுவை மறக்க என்னதான் வழி?

மதுப்பழக்க மாயையிலிருந்து விடுபட 3 நிலைகள் உள்ளதாக
மனவியல் நிபுணர்கள் வரையறுத்துள்ளனர்.

1. மது காரணமாக சிக்கல்கள் ஏற்படுகின்றன என்பதை ஒப்புக்கொள்ளுதல்.

2. மது அருந்துவதை உறுதியாகக் குறைத்தல் மற்றும் முழுமையாக கைவிடுதல்.

3.மது அருந்தாமலே வாழ்க்கையை தொடர்தல்.


மதுவினால் பிரச்னைதான் என்று அவரே ஒப்புக்கொள்வதை நல்ல விஷயமாகக் கருதி, குடும்பத்தினரும் நண்பர்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். அவர்களிடம் கோபம் கொள்வது எந்த விதத்திலும் பலனளிக்காது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். குடியைப் பற்றியே எப்போதும் பேசிக்கொண்டே இராமல், அவரது வேலை, உடல்நலம் பற்றி உரையாடலாம். அதோடு, சிறிது சிறிதாக குடியினால் குடும்பத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் பணிக்கும் ஏற்படக்கூடிய தடுமாற்றங்களை புரிய வைக்க வேண்டும்.
-
தனது பிரச்னையை புரிந்து கொள்கிறவர்களால் மட்டுமே, அப்பழக்கத்திலிருந்து மீள முடியும். அது புரியாமலே இருக்கிறவர்களுக்கு மது மீட்பு சிகிச்சை அளித்தால் கூட பலன் கிட்டுவது சந்தேகமே. உடல்நலம், மனைவி, குழந்தைகளுடன் குதூகலமான வாழ்வு, பொருளாதார ரீதியாக வலுப்படுதல் போன்ற காரணங்கள் அவருக்கு ஊக்கம் அளிக்கக்கூடும்.

எல்லை எது?

பிரச்னையை புரிந்துகொண்டு, அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என்கிற மனநிலைக்கு வருகிறவர்கள் அடுத்து ஒரு முடிவெடுக்க வேண்டும். முழுமையாக நிறுத்துவது அல்லது உடல்நலத்துக்குப் பாதகம் இல்லாத நிலை என்கிற எல்லைக்குள் மது எடுத்துக் கொள்ளத் தொடங்குவது. இதை தீர்மானிப்பது எளிதான செயல் அல்ல.

எனினும் மொடாக்குடியில் இருக்கிற ஒருவர், நிலைமையை உணர்ந்து, அதை கட்டுக்குள் கொண்டு வருவது கூட நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் முதல் படியே. இப்போதைய உடல்நலம், எவ்வளவு காலமாக மதுப்பழக்கம், குடும்பம் மற்றும் புறச்சூழல் ஆகிய காரணிகளைக் கொண்டு இதை முடிவெடுக்கத் தூண்டலாம். அவர் மது அருந்துவதை படிப்படியாகக் குறைப்பதாகக் கூறினால் என்ன செய்ய வேண்டும்?

ஒரு நாளில் மது அருந்தும் முறை... எத்தனை தடவைகள், எவ்வளவு? இதை ஒரு குறிப்பேட்டில் தேதி, நேரம் வாரியாக பதிவு செய்யும்படி கூறுங்கள்.

தினமும் மது அருந்துபவராக இருக்கிறவர் எனில்,
அதை வாரம் 23 முறை என மாற்றும்படி கூறுங்கள்.

ஒரேநாளில் அதிக அளவோ, ஒரு முறைக்கு அதிகமாகவோ
(காலை, மதியம், இரவு என...) குடிக்க வேண்டாம் என
வலியுறுத்துங்கள்.

இதே காலகட்டத்தில் போதை அளிக்காத தரமான வேறுவகை
மது பானங்களுக்கு (நல்ல ஒயின் போன்றவை) மாறச் செய்யுங்கள்.
இதிலும் அளவு முக்கியம்.

மதுவை அப்படியே Raw ஆக ஒரு போதும் குடிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கச் செய்யுங்கள். தண்ணீர் அல்லது சோடா கலந்து நீண்ட நேரம் எடுத்து மெல்ல மெல்ல மடக்கு மடக்காகப் பருகச் சொல்லுங்கள்.

பகலில் ஒருபோதும் மதுவை நாடுவதில்லை என உறுதி
எடுக்கச் சொல்லுங்கள்.


குடிப்பதற்கு முன் கொஞ்சம் சாப்பிடவும் செய்யுங்கள்.

தாகம் தணிக்க பியர் அருந்துவது சிலரது பழக்கம். இது மிகத் தவறான விஷயம். தாகத்துக்கு தண்ணீர் அல்லது இயற்கை பானங்களே நல்லது. பியர் உள்பட மதுபானங்கள் அனைத்தும் உடலில் வறட்சியையே உருவாக்கும்.

பார் செல்வதைத் தவிர்க்க வேண்டும். மதுப்பழக்கம் உடைய நண்பர்களோடு நேரம் செலவழிப்பதைக் குறைக்க வேண்டும்.

எல்லை தாண்டிய நிலையில்..?


இனி ஒருபோதும் மது அருந்துவதில்லை என முடிவெடுக்க
வேண்டிய கட்டாயம் சிலருக்கு உண்டு. குறிப்பாக...

மஞ்சள் காமாலை உள்பட மதுப்பழக்கம் காரணமாக கடுமையான நோய்களால் தாக்கப்பட்டிருத்தல். ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட பிறகும் மதுவைத் தொடர்ந்தால் மரணமே எஞ்சும்.

வீட்டில், வெளியில், தொழிலகம் அல்லது அலுவலகத்தில் கட்டுப்படுத்த முடியாதபடி கடுஞ்சொற்களைப் பயன்படுத்துதல், வன்முறைகளில் ஈடுபடுதல், குடும்பத்தினருக்கு மனக்காயம் அல்லது உடற்காயம் ஏற்படுத்துதல்.... இந்த அளவு நிலைமை முற்றிய நபர்களுக்கு படிப்படியாக குறைத்தல் என்பது தீர்வல்ல. உடனடியாக முழுமையாக மதுவை தீண்டாமையே ஒரே வழி.

ஒவ்வொரு  புத்தாண்டு தினத்திலோ, பிறந்த தினத்திலோ மதுவை விடுகிறேன் என உறுதிமொழி எடுத்து, சிலபல நாட்களுக்குப் பிறகு மீண்டும் தொடர்வது சிலரது வழக்கம். இவர்களுக்கும் படிப்படி வழிமுறை வழிகாட்டாது. ஒட்டுமொத்தமாக ஒரேநாளில் நிறுத்துவது ஒன்றே இவர்களைக் காப்பாற்றும். குடும்பம் மற்றும் நட்புகளிடம்...
மதுப்பழக்கத்தை கைவிட விரும்புகிற நபர் குடும்பத்தினர் (குழந்தைகள் உள்பட)

மற்றும் நண்பர்களிடம் தனது குறிக்கோளைக் கூறிவிட வேண்டும். அவர்களின் ஒத்துழைப்பு நிச்சயம் கிடைக்கும். அவர்களால் கண்காணிக்கப்படுவது எளிது என்பதால், மதுவுக்கு மீண்டும் அடிமையாவதையும் தவிர்க்கலாம். மொடாக்குடி நிலையில் இருக்கிறவர்கள் சட்டென ஒரேநாளில் பழக்கத்தைக் கைவிடுவது பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஆனால், பயம் கொள்ள வேண்டாம். மது நிறுத்த பின்விளைவுகளை நிச்சயம் சமாளிக்க முடியும்!

-நன்றி குங்குமம் டாக்டர் 

(தகவல்களைப் பருகுவோம்!)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக