புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Today at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்! Poll_c10விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்! Poll_m10விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்! Poll_c10 
9 Posts - 56%
heezulia
விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்! Poll_c10விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்! Poll_m10விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்! Poll_c10 
5 Posts - 31%
mruthun
விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்! Poll_c10விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்! Poll_m10விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்! Poll_c10 
1 Post - 6%
Sindhuja Mathankumar
விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்! Poll_c10விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்! Poll_m10விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்! Poll_c10விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்! Poll_m10விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்! Poll_c10 
80 Posts - 50%
ayyasamy ram
விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்! Poll_c10விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்! Poll_m10விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்! Poll_c10 
54 Posts - 34%
mohamed nizamudeen
விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்! Poll_c10விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்! Poll_m10விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்! Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்! Poll_c10விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்! Poll_m10விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்! Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்! Poll_c10விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்! Poll_m10விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்! Poll_c10விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்! Poll_m10விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்! Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்! Poll_c10விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்! Poll_m10விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்! Poll_c10 
2 Posts - 1%
manikavi
விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்! Poll_c10விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்! Poll_m10விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்! Poll_c10 
2 Posts - 1%
mruthun
விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்! Poll_c10விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்! Poll_m10விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்! Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்! Poll_c10விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்! Poll_m10விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 02, 2016 11:00 am

விலங்கு குணத்திற்கு விலங்கு போடுவோம்! GfAZPqXTlitwfYuod1Pw+E_1477633202
-
இந்தோனேஷியக் காடுகளில் ஒன்றில் தங்களது
பெண் குழந்தையை தொலைத்தது ஒரு குடும்பம்.
கடைசி வரை குழந்தையை கண்டு பிடிக்க முடியாமல்,
‘நரிகளுக்கு, என் மகள் இரையாகியிருக்க கூடும்…’
என்று பேட்டி கொடுத்து, தலைமுழுகி விட்டார்,
அக்குழந்தையின் தந்தை.

அக்குழந்தை, நரிக்கூட்டம் ஒன்றில் சிக்கிக் கொண்டது
உண்மை தான் என்றாலும், குழந்தையை, நரிகள் கடித்துக்
குதறவில்லை; பேணி வளர்த்தன. நம்ப முடியவில்லை
அல்லவா… ஆனால், இது உண்மைச் சம்பவம்.

பருவ வயதில் மனிதர்களின் பார்வையில் தென்பட்டாள்,
அப்பெண். குடும்பமே புறப்பட்டுப் போய், நரிகளிடமிருந்து மீட்டு,
அவளை வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

ஆனால், பரிதாபம், அவளது பழக்க வழக்கங்கள் அனைத்தும்,
நரித்தனமாகவே இருந்தன. பேசத் தெரியவில்லை; எப்போதும்
வெறித்த பார்வையோடு, ஊளை இடுவதுமாக இருந்தாள்;
பச்சை மாமிசம் மட்டுமே உண்டாள். மனிதர்களை வெறுத்தாள்;
சிறிது கூட, சிநேக பாவமே காட்டவில்லை.

சில வேளைகளில் முரட்டுத்தனமாகவும் நடந்து கொண்டாள்.
அவளை, திருத்த முடியவில்லை என்று, பெற்றோர் மனம்
வெறுத்துப் பேசிய செய்தி, அப்பெண்ணின் புகைப்படத்துடன்,
இந்தோனேஷிய செய்தித்தாள்களில் வெளியானதை நான்
பார்த்தேன்.

விலங்குகள் மத்தியில் வளர்ந்த இப்பெண்ணிடம் மட்டுமல்ல,
நமக்குள்ளேயும் விலங்கு குணங்கள், எப்படியோ ஊறிப்
போயியுள்ளன.

யானை புகுந்த சோளக் காட்டை, கரும்புக் கொல்லையை,
வாழைத் தோப்பை பார்த்திருக்கிறீர்களா… தின்றது கால்;
அழித்தது முக்கால்!

அநியாயமாய் ஒன்றை அடைய வேண்டும் என்கிற எண்ணம்,
நமக்குள் வளர்கிற போது, அதை, கட்டுக்குள் கொண்டு வர
வேண்டும்; இல்லாவிட்டால், கால் பகுதியை அடைய, முக்கால்
பகுதியை, அழித்து விடுகிற யானை குணம், நமக்குள் வந்து
விடும்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 02, 2016 11:00 am

சிங்கத்தின் வயிறு நிரம்பி விட்டால், அது மற்ற உயிர்களுக்கு,
தீங்கு செய்யாது. புலி அப்படி அல்ல; அதற்கு தேவையோ,
இல்லையோ கண்ணில் படுகிற எல்லா உயிரினங்களையும்
கடித்துக் குதறி, கொன்று விட்டுத் தான், மறு வேலை
பார்க்கும்.

‘போனால் போறான் விடு…’ என்கிற குணம், எப்படி புலிக்கு
இல்லையோ, அப்படியே மனிதர்களுள் பலரும், தங்களுக்கு
இடையூறு செய்யாதவர்களையும் அழித்து, ஒழிக்கிற குணத்தை
கொண்டுள்ளனர்.

நம் வழியில் குறுக்கிட்டாலும், நம்மை அசைக்க முடியாது
என்கிற நம்பிக்கையோடு, அவர்களை பார்த்து, மந்தகாசப்
புன்னகை சிந்த முடியும்; ஆனால், இது நிகழ்வது இல்லை.

திருடியே தின்பது பூனையின் குணம்; பிறர் பொருளை
கவர்வதற்கு, நாம் ஆயிரம் நியாயங்களை சொல்லலாம்;
ஆனால், அது அவசியமில்லை. அவை அவமானங்களை
சேர்க்கும் என்பதுடன், அதல பாதாளத்தில் தள்ளி விடக்
கூடியது.
எனவே, பூனை குணம் புறக்கணிக்கப்பட வேண்டிய
ஒன்று!

நாயை, நன்றியுள்ள பிராணி என்கிறோம்;
கடந்த சில மாதங்களுக்கு முன், தினசரி நாளிதழ்களில்,
வேலூரை அடுத்த சோளிங்கரில், தன் எஜமானையே
கடித்துக் குதறி, கொன்று விட்டது ஒரு நாய் என்ற செய்தி
வெளியாகி இருந்தது.

இவர், அந்த நாய்க்கு எந்த தவறும் செய்யவில்லை;
உணவு சார்ந்த பிரச்னை தான், இது!

எக்கட்டத்திலும், நம் நன்றிக்குரியவர்களிடம் அடங்கிப் போக
வேண்டுமே தவிர, ஏதோ ஒரு தவறை அவர்கள் செய்தனர்
என்பதற்காக, அவர்கள் செய்த முக்கிய நன்மையையோ,
பல நன்மைகளையோ மறந்து, சொல்லால், செயலால்,
அவர்களை காயப்படுத்தி விடக்கூடாது.

பாம்பு, பழி வாங்காமல் விடாது என்கின்றனர் சிலர்.
விலங்கின மருத்துவர்கள், இக்கருத்தை ஏற்கின்றனரா என்று
தெரியாது. ஆனாலும், வழி வழி நம்பிக்கையை எடுத்துக்
கொள்வோம்…

பழி வாங்கும் உணர்ச்சி நல்லதல்ல; பழி வாங்கும் செயல்
என்பது, ஒரு தொடர்கதையின் ஆரம்பமே தவிர, முற்றுப்புள்ளி
அல்ல.

பெரிய பெரிய தொடர் கொலைகளிலிருந்து, குடும்ப உறவுச்
சிக்கல்கள் வரை, பழி வாங்கல் எண்ணத்திற்கு, முற்றுப்புள்ளி
வைப்பவர்களே புத்திசாலிகள்!

வல்லவனோடு வம்பு வேண்டாம், துஷ்டனைக் கண்டால் தூர
விலகு என்று மனதைச் சமாதானப்படுத்தியபடி விலகி நின்றால்,
ஒரு துன்பத்தோடு முடித்து விடலாம். தொடர்ந்த துன்பங்கள்
வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கே, பழி வாங்கல்கள்
பொருந்தும்!

ஓரிடத்தில் இருப்புக் கொள்ளாதது, குரங்கு; ‘மனித மனம்
ஒரு குரங்கு…’ என்று பாடினார் கண்ணதாசன். இலக்கின்றி
அலையும் மனதை கட்டுப்படுத்தி, ஒருமுகப்படுத்த, ஆன்மிகம்
நிறைய வழிகளை சொல்லித் தருகிறது.

தியானமும் இதற்கு உதவும். ஏன்… ஒரு விளையாட்டில்
ஈடுபடுதல்; யோகா போன்றவையும், லேசர் கதிராய்,
ஒரு நுணுக்கப் புள்ளியில் நம் எண்ணங்களைக் குவிக்குமாம்.
இதில் வெற்றி பெற்றால், மற்ற விஷயத்திலும் இலக்கு தைக்கிற
பார்வை சாத்தியம்.

விலங்கின குணங்களை வெளியேற்ற முடியாவிட்டாலும்,
விலங்கிட்டு, அவற்றை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும்
சாமர்த்தியம், நமக்குத் தேவை; இல்லாவிடில் வம்பு தான்!

————————————-

லேனா தமிழ்வாணன்
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக