புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_m10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_m10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10 
137 Posts - 43%
ayyasamy ram
ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_m10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_m10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_m10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_m10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10 
8 Posts - 3%
prajai
ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_m10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_m10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_m10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_m10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_m10ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சிறுமி: யாருக்குமே பேச எதுவும் இல்லையா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83969
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 26, 2016 8:25 am

சென்னையில் ஒரு சிறுமி விற்கப்பட்ட கொடுமையான
செய்தி, எந்த அரசியல் கட்சிகளையும் உலுக்கவில்லையா?
-
என் மகள் பிரம்மிக்கு 11 வயது. ஏழாம் வகுப்பு படிக்கிறாள்.
பள்ளிக்குப் போகிற அக்கறை இல்லாமல் காலையில்
சில நாட்கள் வெகுநேரம் தூங்குவாள். அவளைப் பள்ளிக்குக்
கொண்டுசேர்ப்பதற்குள் படாத பாடு பட வேண்டும்.
-
அப்படிப்பட்ட ஒரு நாளில் கண்ணில் பட்டது அந்தச் செய்தி.
தாம்பரம் பேருந்து நிலையத்தில் செப்டம்பர் 26 அன்று
அதிகாலை 4 மணி இருளில் 11 வயதுச் சிறுமி அழுகையோடு
அலைந்திருக்கிறாள். அவளது அம்மாவும் அப்பாவும்
பிரிந்துவிட்டார்கள்.
-
ஏழாம் வகுப்பைப் பாதியில் நிறுத்தி, ஆயிரம் ரூபாய்க்குத்
தன்னை விற்றுவிட்டார்கள் என்றிருக்கிறாள் அந்தச் சிறுமி.
அவளை வாங்கியவன் தன் வீட்டிலும் உறவினர் வீட்டிலும்
அந்தக் குழந்தையை இடுப்பொடிய வேலை
வாங்கியிருக்கிறான்.
-
ஓய்வு ஒழிச்சல் இல்லை. தூங்க நேரம் இல்லை. வயிற்றுக்குப்
போதுமான சோறும் இல்லை. பிஞ்சு இடுப்பை ஒடித்து
அடிமைத்தனத்துக்குள் ஆழ்த்திவிட்டது அந்த ஆயிரம் ரூபாய்.
-
“நான் படிக்கணும்ணா…” என்று அவள் கேட்டிருக்கிறாள்.
தனக்கு உதவிசெய்து காப்பாற்றியவர்களிடம் அந்தப் பிஞ்சு
கேட்ட பிச்சை கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்
தோல்வியாக மட்டும் எனக்குத் தெரிய வில்லை.
-
பேருந்து நிலையத்திலிருந்த சிலரின் உதவியால் மாவட்டக்
குழந்தைகள் நல அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் அவள்
போய்விட்டிருக்கிறாள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83969
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 26, 2016 8:25 am


-
பெற்றோர் மீது புகார்
-
1098 எனும் கட்டணமில்லா தொலைபேசிக்கு ஓராண்டில்
சராசரியாக இந்தியாவில் 20 லட்சம் அழைப்புகள் வருகின்றன.
“இப்படி வரும் அழைப்புகளில் பெரும்பாலானவை கட்டாய
வேலையில் மாட்டிக்கொண்ட குழந்தைகள் பற்றியது தான்”
என்கிறார் குழந்தை உரிமைகள் செயல்பாட்டாளர்
தாமஸ் ஜெயராஜ்.
-
“முதலில் பார்த்தபோது அவள் நடுநடுங்கிப் போயிருந்தாள்.
தற்போது அரசின் காப்பகத்தில் இருக்கிறாள். இனிமேதான்
பள்ளியில் சேர்க்கணும். இவளைக் கட்டாய உழைப்பில்
ஈடுபடுத்தியவர் மீது காவல்துறையில் புகார் தந்துள்ளோம்.
-
குழந்தையை ஆதரவற்ற நிலைக்குத் தள்ளிவிட்ட பெற்றோர்
மீதும் புகார் பதியுமாறு கேட்டுக்கொண்டுள்ளேன்” என்கிறார்
காஞ்சிபுரம் மாவட்டக் குழந்தைகள் நல அமைப்பின்
பொறுப்பாளர் டாக்டர் மணிகண்டன்.
-
சில ஆண்டுகளுக்கு முன்னால் நார்வே நாட்டில் வசித்த இந்திய
மென்பொருள் பொறியாளர், அவரது மனைவியிடமிருந்து
குழந்தைகளை அரசு பறித்து வைத்துக் கொண்டது.

‘குழந்தைக்குத் தேவையான பராமரிப்பைக் கொடுக்கவில்லை’
என்பது குற்றச்சாட்டு. சர்வதேச அளவில் இந்த விவகாரம்
விவாதிக்கப்பட்டது. இந்தியாவின் வெளியுறவுத் துறை போராடி
அந்தக் குழந்தைகளை மீட்டது.
-
ஒரு ஆண்டு காலத்துக்குப் பிறகு, குழந்தைகள் இந்தியா வந்து
சேர்ந்தன. தாயிடம் இணைந்தன. அமெரிக்காவிலும் இதுபோன்ற
ஒரு சம்பவம். குழந்தையை நன்றாகப் பராமரிக்கவில்லை
என்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த பெற்றோர் கைது
செய்யப்பட்டனர்.
-
குழந்தைகள், ஒரு அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மட்டும்
சொந்தமானவர்கள் அல்ல. குழந்தைகள் சமூகத்தின் சொத்துகள்.
மக்கள் நல அரசுகள் அப்படித்தான் பார்க்கின்றன.

குழந்தையைக் கைவிட்டதற்காகப் பெற்றோர் மீது வழக்கு போடும்
நிலை அரசுக்கு இருக்கிற கடமையின் அடையாளம்தான்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83969
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 26, 2016 8:26 am


மனதை உலுக்கும் சூழல்
-
இந்தியச் சூழல் மனதை உலுக்குகிறது. ஆள் கடத்தல் தொடர்பாக
2015-ல் இந்தியாவில் பதிவான குற்றங்களில் பாதிக்கப் பட்டவர்கள்
40% குழந்தைகள். பாலியல் தொழில் உள்ளிட்ட காரணங்களுக்காக
அவர்கள் வாங்கப்பட்டார்கள். விற்கப் பட்டார்கள்.

இது கடந்த ஆண்டைவிட 25% அதிகம். பாதிக்கப்பட்ட 9,127 பேரில்
18 வயதுக்குள்ளானவர்கள் 43% என்கின்றன தேசியக் குற்றப்
பதிவேடுகளின் நிறுவனம் தரும் புள்ளிவிவரங்கள்.

தாம்பரத்திலிருந்து தப்பித்த சிறுமிக்கு உதவும் உள்ளங்கள்
கிடைத்தன. கிடைத் திருக்காவிட்டால்? அப்படிக் கிடைக்காமல்
எத்தனை எத்தனை குழந்தைகள் இந்தப் புள்ளிவிவரங்களுக்குள்
புழுங்கித் தவிக்கும்? கோவில்பட்டியில் சில தினங்களுக்கு முன்புகூட
10 வயதுச் சிறுமியைப் பாய் முடைகிற கம்பெனியினர் கடத்தி,
20 நாட்கள் கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தினர் என்றும்
கடத்தவில்லை, பெற்றோர் சம்மதத்தின்பேரில்தான் வைத்திருந்தோம்
என்றும் மாறுபட்ட செய்திகள் வந்தன.

வெட்கமாக இல்லையா?

எப்படித் தீர்வுகாண்பது இந்தப் பிரச்சினைக்கு?
சமூகத்தில் காணப்படும் மௌனத்தைவிட அரசியல் களத்தில்
காணப்படும் மௌனம்தான் மனதை அரிக்கிறது. ஆளும்
கட்சியான அதிமுகவுக்கு இது ஒரு பிரச்சினை இல்லை.

பிரதான எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இது ஒரு பிரச்சினை
இல்லை. காங்கிரஸுக்கு, கம்யூனிஸ்ட்டுகளுக்கு, பாமகவுக்கு,
விடுதலைச் சிறுத்தைகளுக்கு, மதிமுகவுக்கு எவருக்குமே
பிரச்சினை இல்லை என்றால், யாருக்குத்தான் இது பிரச்சினை?

ஒரு குழந்தையை நடைப்பிணமாக ஆக்கும் இந்தக் கொடுமை
ஏன் யாரையும் உலுக்கவில்லை?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83969
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 26, 2016 8:26 am



உலகின் பெரும்பான்மை நாடுகளின் ஊடகங்களுக்குச்
செய்திகளைப் பரிமாறும் ‘ராய்ட்டர்’ நிறுவனம்
‘15 டாலருக்கு சென்னையில் ஒரு சிறுமி விற்கப்பட்டாள்’
என்ற தலைப்பில் இந்தச் செய்தியை வெளியிட்டிருக்கிறது.
யாருக்குமே வெட்கமாக இல்லையா?

பூனை கருப்பா, சிவப்பா என்பது முக்கியமில்லை.
அது எலியைப் பிடிக்க வேண்டும். காரியம் முக்கியமா, வீரியம்
முக்கியமா என்பார்கள் கிராம மக்கள். காரியம் நடக்க வேண்டும்.
எந்தக் கொள்கையை வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்கள்;
எப்படியான திட்டங்களை வேண்டு மானாலும் வகுத்திடுங்கள்;
குழந்தைகள் விற்கப்படுவதை, பிச்சையெடுக்க அனுப்பப்
படுவதைத் தவிர்க்க வழி காணுங்கள்.

அரசு இதைக் கையில் எடுக்க வேண்டும் என்றால், முதலில்
அரசியல் களத்தில் இதுகுறித்து விரிவான விவாதங்கள் நடக்க
வேண்டும். முதலில் பேசுங்கள்!
-
----------------------------------------------
த.நீதிராஜன்
தி இந்து

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 27, 2016 2:22 pm

தலைகுனியவேண்டிய செய்தி .
மத்திய மாநில அரசு இது போன்ற விஷயத்தில் ஒரு ஆக்கப்பூர்வமான
சட்டத்துடன் வரவேண்டும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக