புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண் தானம்: சந்தேகங்களுக்கு விடை Poll_c10கண் தானம்: சந்தேகங்களுக்கு விடை Poll_m10கண் தானம்: சந்தேகங்களுக்கு விடை Poll_c10 
366 Posts - 49%
heezulia
கண் தானம்: சந்தேகங்களுக்கு விடை Poll_c10கண் தானம்: சந்தேகங்களுக்கு விடை Poll_m10கண் தானம்: சந்தேகங்களுக்கு விடை Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
கண் தானம்: சந்தேகங்களுக்கு விடை Poll_c10கண் தானம்: சந்தேகங்களுக்கு விடை Poll_m10கண் தானம்: சந்தேகங்களுக்கு விடை Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
கண் தானம்: சந்தேகங்களுக்கு விடை Poll_c10கண் தானம்: சந்தேகங்களுக்கு விடை Poll_m10கண் தானம்: சந்தேகங்களுக்கு விடை Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
கண் தானம்: சந்தேகங்களுக்கு விடை Poll_c10கண் தானம்: சந்தேகங்களுக்கு விடை Poll_m10கண் தானம்: சந்தேகங்களுக்கு விடை Poll_c10 
25 Posts - 3%
prajai
கண் தானம்: சந்தேகங்களுக்கு விடை Poll_c10கண் தானம்: சந்தேகங்களுக்கு விடை Poll_m10கண் தானம்: சந்தேகங்களுக்கு விடை Poll_c10 
6 Posts - 1%
sugumaran
கண் தானம்: சந்தேகங்களுக்கு விடை Poll_c10கண் தானம்: சந்தேகங்களுக்கு விடை Poll_m10கண் தானம்: சந்தேகங்களுக்கு விடை Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
கண் தானம்: சந்தேகங்களுக்கு விடை Poll_c10கண் தானம்: சந்தேகங்களுக்கு விடை Poll_m10கண் தானம்: சந்தேகங்களுக்கு விடை Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கண் தானம்: சந்தேகங்களுக்கு விடை Poll_c10கண் தானம்: சந்தேகங்களுக்கு விடை Poll_m10கண் தானம்: சந்தேகங்களுக்கு விடை Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
கண் தானம்: சந்தேகங்களுக்கு விடை Poll_c10கண் தானம்: சந்தேகங்களுக்கு விடை Poll_m10கண் தானம்: சந்தேகங்களுக்கு விடை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண் தானம்: சந்தேகங்களுக்கு விடை


   
   
prajai
prajai
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 609
இணைந்தது : 19/06/2016

Postprajai Tue Oct 18, 2016 6:30 pm

நாமக்கல் மாவட்டப் பார்வையிழப்பு தடுப்பு சங்கத் திட்ட மேலாளர் டாக்டர் பெ. ரங்கநாதன் தமிழ் ஹிந்துவில் எழுதிய கட்டுரை

இந்தியாவில் கருவிழி பாதிப்பால் முழுவதும் பார்வையிழந்தவர்கள் ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர். இதில் 20,000 பேர் ஒவ்வோர் ஆண்டும் புதிதாகச் சேருகின்றனர்.

இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் அரசு, அரசுசாராக் கண் வங்கிகள் மூலம் 50,000 முதல் 55,000 கண்கள் தானமாகப் பெறப்படுகின்றன. தேவையில் ஐம்பது சதவீதக் கண்களை மட்டுமே தானமாகப் பெற முடிகிறது. கண் தானம் பற்றிய விழிப்புணர்வு கிராமப்புற மக்களிடையே மட்டுமின்றி, நகர்ப்புற மக்களிடையேயும் குறைவாக உள்ளதே இதற்குக் காரணம்.

கண் தானம் என்றால் என்ன?

இறந்தவரின் குடும்பத்தினருடைய விருப்பத்தின் பேரிலோ அல்லது ஒருவர் வாழும் காலத்தில் விருப்பம் தெரிவித்திருந்தாலோ இறந்த ஒருவரின் கண்களை எடுத்துப் பார்வையற்றவருக்குப் பொருத்த அனுமதிப்பதே கண் தானம்.

கருவிழி (Cornea) என்றால் என்ன?

கண்ணின் மையப் பகுதியில் கறுப்பாகத் தெரியும் கண்ணாடி போன்ற ஒளி ஊடுருவக் கூடிய கண்ணின் மேல் படலமே கருவிழி.

எப்படிக் கருவிழி பாதிப்பு ஏற்பட்டுப் பார்வையிழப்பு (Corneal blindness) ஏற்படுகிறது?

கருவிழியில் அடிபடுவது, பிறவிக் குறைபாடு, கிருமி பாதிப்பு, கருவிழிப் புண் மற்றும் குழந்தைப் பருவத்தில் சத்து குறைபாடு (வைட்டமின் ஏ சத்து குறைபாடு) போன்ற காரணங்களால் கருவிழி தழும்பு (Corneal scar) உண்டாகிக் கருவிழியின் ஒளி ஊடுருவும் தன்மை பாதிக்கப்பட்டால் பார்வையிழப்பு ஏற்படும்.

கருவிழி பாதிப்பால் பார்வையிழந்த வர்களுக்குப் பார்வையை எப்படித் திரும்பக் கொடுப்பது?

கண் தானம் பெறப்படும் கருவிழியை, கருவிழி பாதிப்பால் பார்வையிழந்தவர்களுக்குக் கருவிழி மாற்று அறுவைசிகிச்சை (Corneal Transplantation) மூலம் பார்வையைத் திரும்பக் கொடுக்கலாம்.

யார் கண் தானம் செய்யலாம்?

ஒரு வயதுக்கு மேல் உள்ள யாரும் கண் தானம் செய்யலாம். நாம் வாழும்போதே கண்களைத் தானம் செய்ய விருப்பப் படிவம், உறுதிமொழி எடுத்துக்கொள்ளலாம்.

நம்முடைய விருப்பத்தை உறவினர்களிடம் கூறி நம் வாழ்நாளுக்குப் பிறகு கண்களைத் தானமாகக் கொடுக்கலாம்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் கண் தானம் செய்யலாமா?

நீரிழிவு நோய், ரத்தக்கொதிப்பு நோய், இதய நோய் உள்ளவர்கள் கண்களைத் தானமாகக் கொடுக்கலாம்.

கண்களில் நரம்பு பாதிப்பு (Optic nerve disease), விழித்திரை பாதிப்பு (Retinal disease) உள்ளவர்கள்கூடக் கண் தானம் செய்யலாம்.

கண்புரை அறுவை சிகிச்சை (Cataract surgery) செய்துகொண்டவர்களும், கிட்டப்பார்வை, தூரப்பார்வை கண்ணாடி அணிந்திருப்பவர்களும் கண் தானம் செய்யலாம்.

யாரால் கண்களைத் தானம் செய்ய இயலாது?

காரணம் தெரியாத இறப்பு, கண்ணில் கிருமி பாதிப்பு உள்ளவர்கள், கருவிழி பாதிப்பு உள்ளவர்கள் (Corneal disease), கருவிழி அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள், வெறி நாய்க் கிருமி நோய் (Rabies), எய்ட்ஸ் நோய், சிபிலிஸ் நோய், மஞ்சள்காமாலை கிருமி நோய் உள்ளவர்கள் (Hepatitis), புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், நச்சுக்குருதி நோய் (Septicemia) தாக்கியவர்கள் கண்களைத் தானம் செய்ய இயலாது .

இறந்தவர்களின் கண்களைத் தானமாக எடுக்கும்போது அவர்கள் ரத்த மாதிரிச் சேகரிக்கப்பட்டு, அவர்களுக்கு எச்.ஐ.வி., மஞ்சள்காமாலை கிருமி, மற்றக் கிருமிகள் உள்ளனவா எனப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகுதான் கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும்.

இறந்த பிறகு எத்தனை மணி நேரத்துக்குள் கண்களை எடுக்க வேண்டும்?

ஒருவர் இறந்த ஆறு மணி நேரத்துக்குள் கண்கள் எடுத்துப் பாதுகாக்கப்படவேண்டும்.

கண் தானம் செய்ய, நாம் செய்ய வேண்டியவை என்ன?

கண்களைத் தானம் செய்ய விருப்பம் இருந்தால், அதற்கான விருப்பப் படிவத்தை அருகில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கண் வங்கியில் பெற்றுப் பதிவு செய்துகொள்ள வேண்டும். நம் பதிவு செய்த விவரத்தை, நம் விருப்பத்தைக் குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவிக்க வேண்டும். அந்தக் கண் வங்கியின் தொலைபேசி எண் நமக்கும், நம் குடும்ப உறுப்பினர்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும். நாம் இறக்க நேரிட்டால், குடும்ப உறுப்பினர்கள் உடனடியாகக் கண் தான வங்கிக்குத் தொடர்புகொண்டால், அவர்கள் நம் கண்களைத் தானமாகப் பெற்றுக்கொள்வார்கள்.

மருத்துவமனை கருவிழி வேட்டை (Hospital Corneal Retrieval) என்றால் என்ன?

மருத்துவ மனைகளில் விபத்து, அவசரச் சிகிச்சைப் பிரிவு, இதய அவசரச் சிகிச்சைப் பிரிவுகளில் ஆபத்தான தறுவாயில் உள்ள நோயாளிகள் இறக்க நேரிட்டால், அங்குள்ள கண் தான ஆலோசகர்கள் இறந்தவரின் குடும்பத்தினரிடம் கண் தானம் பற்றி விளக்கிக் கருவிழியைத் தனமாகப் பெறும் செயலே மருத்துவமனை கருவிழி வேட்டை (Hospital Corneal Retrieval). மருத்துவமனைகளில் மூளை சாவு ஏற்பட்டு உடல் தானம் செய்யும்போதும் கண்களைத் தானமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

கண் தானம் எடுப்பதற்கு முன் நாம் செய்ய வேண்டியது என்ன?

கண் தானம் பெறுவதற்கான அரசு, அரசு உதவி பெறும் கண் வங்கியிலிருந்து மருத்துவக் குழு வருவதற்கு முன் இறந்தவர்களின் கண்களின் இமைகளை மூடி இருக்கும்படி வைக்க வேண்டும்.

கண்களின் மீது ஈரமான பஞ்சை வைத்து மூடி வைக்க வேண்டும்.

இறந்தவர்கள் அருகில் இருக்கும் மின்விசிறியை அணைக்க வேண்டும்.

தலைப் பகுதியை அரையடி உயர்த்தி வைக்க வேண்டும்.

கண்களை எடுத்த பிறகு எப்படிப் பாதுகாக்கிறார்கள்?

எடுக்கப்பட்ட கண்களைக் கண் தான மையம் (Eye donation centre) அல்லது கண் வங்கியில் (Eye Bank) கிருமி தொற்று இல்லாத அறையில் கண்களின் கருவிழியை மட்டும் தனியாகப் பிரித்தெடுத்து, பாதுகாக்கக் கூடிய திரவத்தில் வைத்துக் கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்துகிறார்கள். கருவிழியை ஒரு வருடம்வரை கண் வங்கியில் பாதுகாத்து வைக்க முடியும்.

கண் தானம் மூலம் கிடைத்த கண்களை எப்படி அறுவைசிகிச்சைக்குப் பயன் படுத்துகிறார்கள்?

தானம் பெற்ற கண்ணின் கருவிழி, கண்ணின் வெளிப்புற வெண்படலம் (sclera) மட்டுமே பயன்படுத்தக் கூடியவை.

கருவிழியால் ஏற்படும் பார்வையிழப்பை மட்டுமே கருவிழி மாற்று அறுவைசிகிச்சையால் சரிசெய்ய இயலும்.

கண்ணின் வெளிப்புற வெண்படலம் (sclera) செயற்கை கண் பொருத்தும் அறுவைசிகிச்சையில் பயன்படுத்தப்படும்.

கருவிழியைத் தவிரக் கண்ணின் மற்ற பகுதிகள் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

கருவிழி மாற்று அறுவைசிகிச்சை மூலம் ஒருவருக்கு நிச்சயம் பார்வை கிடைக்குமா?

இந்தியாவில் கருவிழி மாற்று அறுவைசிகிச்சைகள் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன. அவர்களில் 90 சதவீதம் பேருக்குப் பார்வை திரும்பக் கிடைக்கிறது. ஒருவர் தானம் செய்யும் ஒரு ஜோடிக் கண்கள் மூலம், பார்வையற்ற இருவருக்குப் பார்வை கிடைக்கிறது.

தற்போது தமிழகத்தில் கண் தானம் செய்வதற்கு 104 என்ற எண்ணை அழைக்கலாம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 20, 2016 7:12 pm

நல்ல தகவல்கள் .
நாம் அறிந்துகொள்வதைவிட நம் குடும்பத்தினர் இதை அறிந்து கொண்டால் , நமக்கு ஏதாவது ஆகும் தருணத்தில் அவர்கள் விழித்துக்கொண்டு , நம் கண்களை மற்றவர்களுக்கு தானமாக தந்து உதவலாம்.
நாமும் அதற்கான கண்தான உரிமையை எழுத்துமூலம் தெரியப்படுத்தலாம் .

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக