புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு அப்பா... ரெண்டு அம்மா...  Poll_c10ஒரு அப்பா... ரெண்டு அம்மா...  Poll_m10ஒரு அப்பா... ரெண்டு அம்மா...  Poll_c10 
48 Posts - 51%
heezulia
ஒரு அப்பா... ரெண்டு அம்மா...  Poll_c10ஒரு அப்பா... ரெண்டு அம்மா...  Poll_m10ஒரு அப்பா... ரெண்டு அம்மா...  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
ஒரு அப்பா... ரெண்டு அம்மா...  Poll_c10ஒரு அப்பா... ரெண்டு அம்மா...  Poll_m10ஒரு அப்பா... ரெண்டு அம்மா...  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ஒரு அப்பா... ரெண்டு அம்மா...  Poll_c10ஒரு அப்பா... ரெண்டு அம்மா...  Poll_m10ஒரு அப்பா... ரெண்டு அம்மா...  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஒரு அப்பா... ரெண்டு அம்மா...  Poll_c10ஒரு அப்பா... ரெண்டு அம்மா...  Poll_m10ஒரு அப்பா... ரெண்டு அம்மா...  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு அப்பா... ரெண்டு அம்மா...  Poll_c10ஒரு அப்பா... ரெண்டு அம்மா...  Poll_m10ஒரு அப்பா... ரெண்டு அம்மா...  Poll_c10 
48 Posts - 51%
heezulia
ஒரு அப்பா... ரெண்டு அம்மா...  Poll_c10ஒரு அப்பா... ரெண்டு அம்மா...  Poll_m10ஒரு அப்பா... ரெண்டு அம்மா...  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
ஒரு அப்பா... ரெண்டு அம்மா...  Poll_c10ஒரு அப்பா... ரெண்டு அம்மா...  Poll_m10ஒரு அப்பா... ரெண்டு அம்மா...  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ஒரு அப்பா... ரெண்டு அம்மா...  Poll_c10ஒரு அப்பா... ரெண்டு அம்மா...  Poll_m10ஒரு அப்பா... ரெண்டு அம்மா...  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஒரு அப்பா... ரெண்டு அம்மா...  Poll_c10ஒரு அப்பா... ரெண்டு அம்மா...  Poll_m10ஒரு அப்பா... ரெண்டு அம்மா...  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு அப்பா... ரெண்டு அம்மா...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 18, 2016 5:31 pm

மூன்று பேருக்குப் பிறந்த குழந்தை
-
ஒரு அப்பா... ரெண்டு அம்மா...  Km5JZMJ3TT6P5DmzHm0e+31a
-

‘இருவரின் உறவினிலே பிறப்பது மழலையடா’ என
இனி கவிஞர்கள் பாட்டெழுத முடியாது; பரவசப்பட
முடியாது. ஒரு அப்பாவும் இரண்டு அம்மாக்களும்
இணைந்து உருவாக்கிய ‘உலகின் முதல் மூன்று பெற்றோர்
குழந்தை’ பிறந்தாயிற்று.

வாடகைத் தாய் கருவைச் சுமப்பதைச் சொல்லவில்லை.
இருவரின் பிரதிபலிப்பாக இல்லாமல், மூன்று பேரின்
அம்சங்கள் கலந்த குழந்தையாக இது உருவாகியுள்ளது.

அந்தக் குழந்தையின் மரபணுவைத் திருத்தி, கடவுளின்
வேலையை தாங்கள் கையில் எடுத்துக்கொண்டுவிட்டார்கள்
மருத்துவர்கள்.

இந்தப் புதிய கருத்தரிப்பு முறையை அறிமுகம்
செய்திருப்பவர்கள் அமெரிக்க மருத்துவர்கள்.
‘Spindle Nuclear Transfer’ எனப்படும் இந்த அணுகு
முறை இப்போது மருத்துவ உலகில் பெரும் சர்ச்சையைக்
கிளப்பியிருக்கிறது.

சர்ச்சைகளில் நுழைவதற்கு முன்பாக, ‘ஏன் இதை  
உருவாக்கினார்கள்?’ என பார்த்து விடுவோம்...
-
------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 18, 2016 5:32 pm

ஒரு அப்பா... ரெண்டு அம்மா...  BLTZBWWZSjK7NFPLu4Mk+31
-

ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதி, நீண்ட காலமாக
குழந்தை ஏக்கத்தில் தவித்தனர். அந்தப் பெண்ணுக்கு
நரம்பு மண்டல வளர்ச்சியைப் பாதிக்கும் அபாயகரமான
‘லே’ என்கிற நோயின் தாக்கம் இருந்திருக்கிறது.

இந்நோய், செல்களுக்கு சக்தி அளிக்கும் டி.என்.ஏ.விலுள்ள
மைட்டோகாண்ட்ரியாவை பாதிக்கும் தன்மையுடையது.
அது தாயின் வழியே குழந்தைக்கும் பரவும். இதனால், நான்கு
கருச் சிதைவுகளுக்கு ஆளாகி, பின்பு 2005ல் ஒரு பெண்
குழந்தையைப் பெற்றெடுத்தார் அவர்.

துரதிர்ஷ்டவசமாக ஆறு வயதில் அந்தக் குழந்தை மரணமடைய,
இரண்டாவது குழந்தைப் பேறு கிடைத்திருக்கிறது. அந்தக்
குழந்தையும் எட்டு மாதத்தில் இறந்துவிட, அப்போதுதான்
மருத்துவர்கள் அவரின் நான்கில் ஒரு பங்கு மைட்டோகாண்ட்ரியா
‘லே’ நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதைக்
கண்டறிந்தனர்.

அவருக்குப் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கவும்
முடியாது; நீண்ட நாள் வாழவும் செய்யாது. நொந்துபோன
அந்தத் தம்பதி, அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள
‘நியூ ஹோப் கருவுறுதல் மைய’த்தை அணுகினர்.

அங்கு, டாக்டர் ஜான் சாங் தலைமையிலான குழு,
சர்ச்சைக்குரிய இந்த முறை மூலம் குழந்தைப்பேறை
சாத்தியமாக்கி இருக்கிறது. இந்த முறையில் சம்பந்தப்பட்ட
தாயின் கருமுட்டை மற்றும் தானம் தரும் பெண்ணின் கரு
ஆகியவற்றுடன் தந்தையின் உயிரணு இணைகிறது.

தாயின் கருமுட்டையிலிருந்து, அவரின்
மைட்டோகாண்ட்ரியாவை எடுக்கவில்லை; மரபணுக்கள்
அடங்கிய நியூக்ளியஸ் மட்டும் தனியாக எடுக்கப்பட்டு,
தானம் தந்த பெண்ணின் கருமுட்டையில் சேர்க்கப்பட்டது.

இப்படி இரண்டு பெண்களின் கருமுட்டையை இணைத்து,
அதில் தந்தையின் உயிரணுவை சேர்த்து, தாயின் கர்ப்பப்
பையில் பொருத்தி குழந்தை பெற வைத்திருக்கிறார்கள்.

இப்படி ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் அனுமதி
இங்கிலாந்தில் மட்டுமே இருக்கிறது. அமெரிக்காவில் இதைச்
செய்ய தடை உள்ளது. பக்கத்து நாடான மெக்சிகோவில்
அனுமதியும் இல்லை; தடையும் இல்லை.

அதனால் மெக்சிகோ நாட்டிற்குச் சென்று இந்த முறையை
வெற்றி கரமாக முடித்திருக்கிறார்கள். கடந்த ஏப்ரல் 6ம் தேதி
அந்தப் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

ஐந்து மாதங்கள் கழித்தே வெளி உலகிற்குத்
தெரிவித்திருக்கிறார்கள். ‘‘பல விமர்சனங்களைத் தாண்டி
இது புரட்சிகரமானதும், புதியதுமாகும்’’ என உற்சாகமாகச்
சொல்கிறார், டாக்டர் ஜான் சாங்.

குழந்தைக்கு வர இருக்கும் நோய்களைத் தடுப்பதோடு,
குழந்தையின் தோற்றம் மற்றும் திறமை என எதையும் இந்த
டெக்னாலஜி மூலம் மாற்ற முடியும். உதாரணமாக பில் கேட்ஸ்
மாதிரியோ, விராட் கோஹ்லி மாதிரியோ நிபுணனாக ஒரு
குழந்தையை உருவாக்கலாம்;

ஐஸ்வர்யா ராய் போன்ற அழகில் ஒரு பெண் குழந்தையைப்
பெறுவதும் சாத்தியம். அதோடு, எத்தனை வயதானாலும்
ஒரு பெண் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்.

‘‘இப்போதைக்கு நாங்கள் நோய்களைத் தவிர்க்கவே
இதைச் செய்ய இருக்கிறோம்’’ என்கிறது டாக்டர் ஜான் சாங்
குழு. ஆனால் ‘இந்த முறை ஆபத்தானது’ என எச்சரிக்கும்
சில மருத்துவர்கள், ‘‘இனி குழந்தைகளை எளிதாக இவர்களே
டிசைன் செய்யத் துவங்கிவிடுவார்கள். எந்த நிறத்தில்,
எவ்வளவு அழகில், என்ன அறிவில் வேண்டுமோ,
அப்படியெல்லாம் பெற்றெடுக்க வைத்துவிடுவார்கள்’
என்கிறார்கள் காட்டமாக!
-
-------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 18, 2016 5:32 pm




இந்த முறை குறித்து சென்னையைச் சேர்ந்த குழந்தையின்மை
சிகிச்சை மருத்துவர், டாக்டர் காமராஜிடம் பேசினோம்.
இதை வெகுவாக வரவேற்றார் அவர்.

‘‘இப்போது இந்தியாவில் ஆண்மைக்குறைவு
7 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாக அதிகரித்துவிட்டது. இன்னும்
சில வருடங்களில் இது 25 சதவீதமாகக்கூட மாற வாய்ப்பிருக்கிறது.
காரணம், அந்தளவுக்கு பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்ட
உணவுகளை உட்கொண்டு வருகிறோம். இதனால், நிறைய
தம்பதிகளுக்கு குழந்தையின்மை பிரச்னை வந்துவிட்டது.

இன்று செயற்கைக் கருவூட்டல் மூலம் குழந்தை பெற்றெடுக்கும்
முறையில் நிறைய தோல்விகள். கிட்டத்தட்ட 40 சதவீதத்திற்குள்
தான் வெற்றியை ஈட்ட முடிகிறது. அதனால், இந்த நவீனமுறையைப்
பயன்படுத்தும்போது சக்சஸ் ரேட் நன்றாக இருக்கும்’’
என்கிறவரிடம் சர்ச்சைகள் பற்றிக் கேட்டோம்.

‘‘எந்த புதிய கண்டுபிடிப்பு வந்தாலும் ஆரம்பத்தில் சர்ச்சைகள்
வருவது இயல்புதான். ‘டெஸ்ட் டியூப் பேபி’ கான்செப்ட் வந்த
போது ‘இது கடவுள் நிர்ணயித்த விதிகளுக்கு எதிரானது’
என்றெல்லாம் கொதித்தார்கள். இன்றைக்கு அந்த வாதமே
அடிபட்டுப் போய்விட்டது. பொதுவாக, ‘புத்திசாலியான
குழந்தைகள் வேண்டும்’ என்ற சிந்தனை பழங்காலத்திலிருந்தே
மக்களிடம் இருக்கிறது.

இப்போது குழந்தையின் தோற்றத்தைக்கூட தீர்மானிக்க முடியும்
என்ற நிலை இருந்தாலும், அதை மட்டுமே இதில் பார்க்க
வேண்டியதில்லை.

கருவில் இருக்கும் சிசுவுக்கு என்னென்ன பிரச்னைகள்
இருக்கின்றன என கண்டுபிடிக்க முடிகிற அளவுக்கு பரிசோதனை
வசதிகள் வந்துவிட்டன. சிகிச்சைகளும் முன்னேற வேண்டும்
தானே!

புற்றுநோயோ, உடல் குறைபாடுகளோ இல்லாத ஒரு ஆரோக்கியமான
குழந்தையைப் பெற்றெடுக்க முடியும் என்பதுதான் இப்படியான
முறையின் மூலம் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி’’
என்கிறார் அவர் தெளிவாக!

ஆனால், டாக்டர் புகழேந்தி இதனை வரவேற்கவோ,
எதிர்க்கவோ செய்யாமல், ‘‘அடிப்படையை சரி செய்தாலே
இதுபோன்ற டெக்னாலஜி மனித குலத்திற்குத் தேவையிருக்காது’’
என வலியுறுத்துகிறார்.

‘இங்கே நோய்த் தடுப்பு என்பதே முரண்பாடான விஷயமாக மாறி
விட்டது. புற்றுநோய்த் தடுப்பு என்றால் அதன் அடிப்படைக்
காரணத்தைக் கண்டறிந்து சரி செய்வதுதான். ஆனால், இங்கு
அடிக்கடி டெஸ்ட் எடுத்துப் பார்த்துவிட்டு, ஆரம்ப நிலையில் கட்டியை
வெட்டி அகற்றுகிறார்கள்.
அதாவது, வந்த பிறகு எடுக்கும் நடவடிக்கை தீர்வாகாது.

இதுமாதிரிதான் பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்ட உணவு முதல்
பிளாஸ்டிக் கழிவுகள் வரை பல்வேறு காரணிகள் மலட்டுத்
தன்மைக்குக் காரணமாக இருக்கிறது. அதனைச் சரிப்படுத்தாமல்
புதிய டெக்னாலஜி மூலம் குழந்தையின்மையைச் சரி செய்வது
என்பது ஏற்புடையதல்ல.

நாம் மரத்தின் உச்சியில் அமர்ந்துகொண்டு, மரத்தை வெட்டும்
தவறான காரியத்தைச் செய்துகொண்டிருக்கிறோம்.

இம்மாதிரி டெக்னாலஜி கண்டுபிடிப்புகளால், புதிதாக சாய்ஸ்கள்
கிடைக்குமே தவிர, அடிப்படைப் பிரச்னை சரி செய்யப்படாமலே
போய் விடும்.

அடுத்து, பரவலாகப் பேசப்படும் இந்த டெக்னாலஜிக்கு ஆகும்
செலவு என்ன? அதில் இருக்கும் சிக்கல் என்ன? பாதுகாப்பு என்ன
இருக்கிறது? பிரச்னை வந்தால் கொடுக்கப்படும் இழப்பீடு என்ன?
இவை எல்லாவற்றையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது
அவசியமாகிறது.

அதனால், இதையெல்லாம் ஆய்வு ரீதியில் நிறுத்திக்கொண்டாலே
நல்லது’’ என்கிறார் புகழேந்தி நிறைவாக!
-
------------------------------------------------
பேராச்சி கண்ணன், அன்பரசு
குங்குமம்


















விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Oct 18, 2016 11:48 pm

ஆனால், டாக்டர் புகழேந்தி இதனை வரவேற்கவோ,
எதிர்க்கவோ செய்யாமல், ‘‘அடிப்படையை சரி செய்தாலே
இதுபோன்ற டெக்னாலஜி மனித குலத்திற்குத் தேவையிருக்காது’’
என வலியுறுத்துகிறார்.
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



ஒரு அப்பா... ரெண்டு அம்மா...  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒரு அப்பா... ரெண்டு அம்மா...  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒரு அப்பா... ரெண்டு அம்மா...  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக