புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொருளாதாரத்தின் ஆணிவேராக இந்திய   குடும்பப் பெண்கள் Poll_c10பொருளாதாரத்தின் ஆணிவேராக இந்திய   குடும்பப் பெண்கள் Poll_m10பொருளாதாரத்தின் ஆணிவேராக இந்திய   குடும்பப் பெண்கள் Poll_c10 
366 Posts - 49%
heezulia
பொருளாதாரத்தின் ஆணிவேராக இந்திய   குடும்பப் பெண்கள் Poll_c10பொருளாதாரத்தின் ஆணிவேராக இந்திய   குடும்பப் பெண்கள் Poll_m10பொருளாதாரத்தின் ஆணிவேராக இந்திய   குடும்பப் பெண்கள் Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
பொருளாதாரத்தின் ஆணிவேராக இந்திய   குடும்பப் பெண்கள் Poll_c10பொருளாதாரத்தின் ஆணிவேராக இந்திய   குடும்பப் பெண்கள் Poll_m10பொருளாதாரத்தின் ஆணிவேராக இந்திய   குடும்பப் பெண்கள் Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
பொருளாதாரத்தின் ஆணிவேராக இந்திய   குடும்பப் பெண்கள் Poll_c10பொருளாதாரத்தின் ஆணிவேராக இந்திய   குடும்பப் பெண்கள் Poll_m10பொருளாதாரத்தின் ஆணிவேராக இந்திய   குடும்பப் பெண்கள் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
பொருளாதாரத்தின் ஆணிவேராக இந்திய   குடும்பப் பெண்கள் Poll_c10பொருளாதாரத்தின் ஆணிவேராக இந்திய   குடும்பப் பெண்கள் Poll_m10பொருளாதாரத்தின் ஆணிவேராக இந்திய   குடும்பப் பெண்கள் Poll_c10 
25 Posts - 3%
prajai
பொருளாதாரத்தின் ஆணிவேராக இந்திய   குடும்பப் பெண்கள் Poll_c10பொருளாதாரத்தின் ஆணிவேராக இந்திய   குடும்பப் பெண்கள் Poll_m10பொருளாதாரத்தின் ஆணிவேராக இந்திய   குடும்பப் பெண்கள் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
பொருளாதாரத்தின் ஆணிவேராக இந்திய   குடும்பப் பெண்கள் Poll_c10பொருளாதாரத்தின் ஆணிவேராக இந்திய   குடும்பப் பெண்கள் Poll_m10பொருளாதாரத்தின் ஆணிவேராக இந்திய   குடும்பப் பெண்கள் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பொருளாதாரத்தின் ஆணிவேராக இந்திய   குடும்பப் பெண்கள் Poll_c10பொருளாதாரத்தின் ஆணிவேராக இந்திய   குடும்பப் பெண்கள் Poll_m10பொருளாதாரத்தின் ஆணிவேராக இந்திய   குடும்பப் பெண்கள் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
பொருளாதாரத்தின் ஆணிவேராக இந்திய   குடும்பப் பெண்கள் Poll_c10பொருளாதாரத்தின் ஆணிவேராக இந்திய   குடும்பப் பெண்கள் Poll_m10பொருளாதாரத்தின் ஆணிவேராக இந்திய   குடும்பப் பெண்கள் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பொருளாதாரத்தின் ஆணிவேராக இந்திய   குடும்பப் பெண்கள் Poll_c10பொருளாதாரத்தின் ஆணிவேராக இந்திய   குடும்பப் பெண்கள் Poll_m10பொருளாதாரத்தின் ஆணிவேராக இந்திய   குடும்பப் பெண்கள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொருளாதாரத்தின் ஆணிவேராக இந்திய குடும்பப் பெண்கள்


   
   
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Thu Oct 13, 2016 5:13 pm

இந்திய பொருளாதாரத்தின் ஆணிவேராக குடும்பப் பெண்கள் உள்ளனர் - எஸ்.குருமூர்த்தி

அமெரிக்கா போன்று நாம் வாழ வேண்டும் என்று பெரிய தலைவர்கள், அறிவுஜீவிகள் நினைக்கிறார்கள்.
ஆனால் அந்த நாட்டின் நிலைமையைப் புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்காவில் 55 சதவீத திருமணங்கள், முதல் 10 ஆண்டுகளுக்குள் விவாகரத்தில் முடிகிறது. சரி அடுத்த திருமணம்தான் சிறப்பாக அமையுமா என்றால், இரண்டாவது திருமணம் 67 சதவீதமும், மூன்றாவது திருமணங்கள் 74 சதவீதமும் விவாகரத்தில் முடிகின்றன. இதனால் 51 சதவீத குடும்பங்களில் தந்தையும், தாயும் சேர்ந்து இல்லை. தந்தை இல்லாத நாடு ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது என 1998-இல் அந்த நாட்டின் சமூகவியல் நிபுணர் ஒருவர் ஒரு பெரிய நூலாக எழுதினார்.

மேலும் அமெரிக்க மக்களிடையே சேமிக்கும் பழக்கமே இல்லாமல் போய்விட்டது.

1960-இல் அமெரிக்க குடும்பங்களின் சேமிப்பு 80 சதவீதம்; ஆனால் தற்போது அது மைனஸ் 20 சதவீதமாக சரிந்து விட்டது. 9 கோடி அமெரிக்கக் குடும்பங்களில் 120 கோடி கிரெடிட் கார்டுகள் உள்ளன. அதன் மூலம் ஏறத்தாழ 300 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர். வீட்டுக்காக அவர்கள் வாங்கியிருக்கும் கடன் 10 டிரில்லியன் டாலர் (ஒரு டிரில்லியன் 65 லட்சம் கோடி).
உறவு இல்லாத சமுதாயம்: உலகப் பொருளாதார சரிவு ஏற்பட்டதற்கு அமெரிக்க குடும்பங்கள் வாங்கிய கடன்தான் காரணம். நான் எப்படி வேண்டுமானாலும் இருப்பதற்கு சட்டம் உரிமை கொடுக்கிறது என்ற போக்குதான் இதற்குக் காரணம். குடும்பப் பிறப்புகள் குறைந்ததால் ஏற்பட்டதாகும்.

சேமிப்பதற்கு ஏதாவது ஒரு லட்சியம் அல்லது தூண்டுதல் இருக்க வேண்டும்; அதுதான் குடும்பம்.
அமெரிக்காவில் தாய், தந்தையைப் பாதுகாக்க வேண்டும், பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும். பிடித்தால் ஏற்றுக் கொள்ளலாம்; இல்லாவிட்டால் விட்டு விடலாம் என முழுமை இல்லாத ஒப்பந்த உறவுமுறைகள்தான் இருக்கின்றன.

கடமையற்ற உரிமை ஒரு குடும்பத்தை மட்டுமல்ல, சமூகத்தை மட்டுமல்ல நாட்டையே அழித்துவிடும் என்பதற்கு மேற்கத்தியநாடுகள் உதாரணம். உலகத்துக்கே கடன் கொடுத்த அமெரிக்கா, இன்று உலகத்திலேயே அதிகம் கடன் வாங்கும் நாடாக மாறி விட்டது.

நமது உறவு முறைகளை முறிக்கும் எந்தவித சட்டம், சிந்தனை, கல்வி, அரசியல் கட்சிகள், தலைவர்கள் இந்த நாட்டின் விரோதிகளாகக் கருதப்பட வேண்டும்.
அமெரிக்காவிலிருந்து கெல்லிஸ் பகவதி என்ற பொருளாதார நிபுணர் அப்போதைய நிதியமைச்சர் மன்மோகன் சிங்கை சந்தித்தார். அப்போது அவரிடம் மன்மோகன்சிங் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு ஆலோசனை கேட்டபோது, "உங்கள் நாடு முன்னேற வேண்டுமானால் இந்திய குடும்பங்களின் பழக்கவழக்கங்கள் மாற வேண்டும். மொத்த வருமானத்தில் 20 சதவீதம் பெண்கள் சேமிக்கிறார்கள். அதைக் குறைக்க வழி செய்யுங்கள். செலவீனத்தை அதிகரிக்கச் செய்யுங்கள்.

வெளிநாடுகளிலிருந்து கண்ணைப் பறிக்கும் பொருள்களை கொண்டு வந்து பெரிய வணிக வளாகங்களில் (Malls) வியாபாரத்தில் தொடங்கினால் அவர்களது வாங்கும் பழக்கம் அதிகரிக்கும். பெண்கள் கஞ்சத்தனத்திலிருந்து விடுபட்டு செலவழிக்கத் தொடங்கி விடுவார்கள். இதன் மூலம் வியாபாரம், உற்பத்தி, வேலைவாய்ப்பு அதிகமாகும் என்று 72 பக்கங்களில் ஆலோசனை வழங்கினார்.

அவர் சொன்னது அனைத்தும் இந்தியாவில் நடந்தது. ஆனால் அத்தனை வணிக வளாகங்களையும் ரசித்த குடும்பப் பெண்கள் அங்கு விற்ற பொருள்களை வாங்கவில்லை. 1992-இல் 20 சதவீதமாக இருந்த இந்திய குடும்பப் பெண்களின் சேமிப்பு 2009-இல் 27 சதவீதமாக உயர்ந்தது.

நாட்டின் மொத்த சேமிப்பு 23 சதவீதத்திலிருந்து 38 சதவீதமாக உயர்ந்தது. நமது குடும்பப் பெண்களின் பொறுப்புணர்வும், கட்டுப்பாடும்தான் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் ஆணிவேர். பொறுப்பான குடும்பங்களுக்கு நமது பெண்கள்தான் மையம்.




"குடும்பம் " என்ற அமைப்பைக் கட்டிக்காப்போம்!
இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்துவோம்!
-------------------------------------------------------------------
கட்செவிப் பகிர்வில் காணக் கிடைத்தது.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Oct 15, 2016 6:12 am

நான் வேலைக்கு போறேன்..என் மனைவி வீட்டுல சும்மாதான் இருக்கா - வாட்ஸ் அப்பில் பரவிவரும் நெஞ்சை தொடும் உரையாடல் !

''நான் வேலைக்கு போறேன்...

என் மனைவி வீட்டுல சும்மாதான் இருக்கா!''

கணவன் ஒருவர், உளவியல் நிபுணரை சந்தித்தபோது, நடந்த உரையாடல்...

நிபுணர் : நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?
கணவர்: ஒரு வங்கியில் அக்கவுண்டன்ட் ஆக பணிபுரிகிறேன்.

நிபுணர் : உங்கள் மனைவி?
கணவர் : அவள் வேலை செய்வது கிடையாது. வீட்டில்தான் இருக்கிறாள்.

நிபுணர் : குடும்பத்தினர் சாப்பிடுவதற்கு காலை உணவை தினமும் யார் தயாரிக்கிறார்கள்?
கணவர்: என் மனைவிதான். ஏனென்றால் அவள்தான் வேலைக்கு செல்வதில்லையே.

நிபுணர் : தினமும் காலை உணவு சமைப்பதற்காக உங்கள் மனைவி எப்போது எழுவார்?
கணவர்: அவள் காலை 5 மணிக்கு எழுவாள். ஏனென்றால் சமைப்பதற்கு முன்பாக வீட்டைச் சுத்தம் செய்வாள். அவள்தான் சும்மா இருக்கிறாளே!

நிபுணர் : உங்கள் குழந்தைகளை யார் பள்ளிக்கு அழைத்துச் செல்வார்கள்?
கணவர்: என் மனைவிதான் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வாள். அவளுக்குதான் வேலையில்லையே.

நிபுணர்: பள்ளியில் விட்டுவந்தது பிறகு உங்கள் மனைவி என்ன செய்வார்?
கணவர்: மார்க்கெட்டுக்கு செல்வாள், பின்னர் வீட்டிற்கு வந்து சமைப்பாள், துணி துவைப்பாள். உங்களுக்கு தெரியுமா... அவளுக்குதான் வேலையில்லையே

நிபுணர்: மாலையில் வீடு திரும்பியதும் நீங்கள் என்ன செய்வீர்கள்?
கணவர்: நாள் முழுக்க ஆபீஸில் இருப்பதால் மிகவும் களைப்பாக இருக்கும். அதனால் நான் ரெஸ்ட் எடுப்பேன்.

நிபுணர்: பிறகு உங்கள் மனைவி என்ன செய்வார்?
கணவர்: இரவு உணவு தயார் செய்வாள், குழந்தைகளுக்கு ஊட்டுவாள் பிறகு எனக்கான உணவு தயார் செய்து பாத்திரங்களை கழுவுவது, வீட்டை சுத்தம் செய்து குழந்தைகளை படுக்க வைப்பாள்.

ம்... காலை முன் எழுந்தது முதல் இரவு வரை வேலை வேலை வேலை... என ஓடும் பெண், 'வீட்டுல சும்மாதானே இருக்கா... வேலையே செய்யாம' என்று பேசுவது எத்தனை கொடுமை?

மனைவியை பாராட்டுங்கள், ஏனென்றால் அவளின் தியாகங்கள் எண்ணிலடங்காதது. ஒவ்வொருவரையும் மதித்து அவர்களை பாராட்ட, புரிந்து கொள்ள இது உங்களுக்கான ஒரு சந்தர்ப்பம்.

''நீங்கள் வேலை செய்கிறீர்களா அல்லது வீட்டில் சும்மாயிருக்கிறீர்களா?' என்று ஒரு பெண்ணிடம் கேட்க, அந்தப் பெண் தந்த பதிலையும் பாருங்கள்.

''ஆம் நான் முழுநேரம் பணியாற்றும் வீட்டிலிருக்கும் பெண்.
ஒரு நாளின் 24 மணி நேரங்களும் பணியாற்றுகிறேன்.
நான் ஒரு மகள்
நான் ஒரு மனைவி
நான் ஒரு மருமகள்
நான் ஒரு தாய்
நான் ஒரு அலாரம்
நான் ஒரு சமையல்காரி
நான் ஒரு வேலைக்காரி
நான் ஒரு ஆசிரியர்
நான் ஒரு செவிலியர்
நான் ஒரு பணியாளர்
நான் ஒரு ஆயா
நான் ஒரு பாதுகாவலர்
நான் ஒரு ஆலோசகர்
நான் ஒரு நலன் விரும்பி
எனக்கு விடுமுறைகள் கிடையாது.

உடல்நிலை சரியில்லை என்றாலும் விடுமுறை எடுக்க முடியாது. இரவும் பகலும் வேலை செய்ய வேண்டும். எப்போதும் வேலை செய்வதற்கு தயாராகவே இருக்க வேண்டும். எப்போதும் என்னை நோக்கி வீசப்படும் 'நாள் பூரா வீட்டுல சும்மாதானே இருக்கே?' என்கிற கேள்வியை எதிர்கொண்டபடி!

-------------------------------------
கட்செவியில் கண்டது



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 15, 2016 10:12 am

உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா ?
இது மாதிரி 14 வேலைகள் செய்யவேண்டாம் என்று ,
பல பெண்கள் வேலைக்குப் போய்விடுகிறார்கள் .
பாவம் மாமியார்கள் . சோகம் சோகம்
பொருளாதார தேவைக்காக பெண்கள்
வேலைக்கு சென்றது,அந்த காலத்தில் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Oct 15, 2016 10:44 am

அட , தெய்வமே !

இப்படியும் கூடவா

இக்காலத்தில் குலதேவதைகள் !!!

மாமியார் மட்டுமா ஐயா - முழு குடும்பமும் பாவம்தான் - அப்படியானால் ...!!!



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக