புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குவளை-- மரகத லிங்கம் மாயம்: Poll_c10திருக்குவளை-- மரகத லிங்கம் மாயம்: Poll_m10திருக்குவளை-- மரகத லிங்கம் மாயம்: Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குவளை-- மரகத லிங்கம் மாயம்: Poll_c10திருக்குவளை-- மரகத லிங்கம் மாயம்: Poll_m10திருக்குவளை-- மரகத லிங்கம் மாயம்: Poll_c10 
137 Posts - 43%
ayyasamy ram
திருக்குவளை-- மரகத லிங்கம் மாயம்: Poll_c10திருக்குவளை-- மரகத லிங்கம் மாயம்: Poll_m10திருக்குவளை-- மரகத லிங்கம் மாயம்: Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
திருக்குவளை-- மரகத லிங்கம் மாயம்: Poll_c10திருக்குவளை-- மரகத லிங்கம் மாயம்: Poll_m10திருக்குவளை-- மரகத லிங்கம் மாயம்: Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
திருக்குவளை-- மரகத லிங்கம் மாயம்: Poll_c10திருக்குவளை-- மரகத லிங்கம் மாயம்: Poll_m10திருக்குவளை-- மரகத லிங்கம் மாயம்: Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
திருக்குவளை-- மரகத லிங்கம் மாயம்: Poll_c10திருக்குவளை-- மரகத லிங்கம் மாயம்: Poll_m10திருக்குவளை-- மரகத லிங்கம் மாயம்: Poll_c10 
8 Posts - 3%
prajai
திருக்குவளை-- மரகத லிங்கம் மாயம்: Poll_c10திருக்குவளை-- மரகத லிங்கம் மாயம்: Poll_m10திருக்குவளை-- மரகத லிங்கம் மாயம்: Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருக்குவளை-- மரகத லிங்கம் மாயம்: Poll_c10திருக்குவளை-- மரகத லிங்கம் மாயம்: Poll_m10திருக்குவளை-- மரகத லிங்கம் மாயம்: Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திருக்குவளை-- மரகத லிங்கம் மாயம்: Poll_c10திருக்குவளை-- மரகத லிங்கம் மாயம்: Poll_m10திருக்குவளை-- மரகத லிங்கம் மாயம்: Poll_c10 
4 Posts - 1%
mruthun
திருக்குவளை-- மரகத லிங்கம் மாயம்: Poll_c10திருக்குவளை-- மரகத லிங்கம் மாயம்: Poll_m10திருக்குவளை-- மரகத லிங்கம் மாயம்: Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
திருக்குவளை-- மரகத லிங்கம் மாயம்: Poll_c10திருக்குவளை-- மரகத லிங்கம் மாயம்: Poll_m10திருக்குவளை-- மரகத லிங்கம் மாயம்: Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குவளை-- மரகத லிங்கம் மாயம்:


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 11, 2016 10:05 am

திருக்குவளை-- மரகத லிங்கம் மாயம்:பக்தர்கள் கடும் அதிர்ச்சி

திருக்குவளை, பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் இருந்த, 1,000 ஆண்டுகள் பழமையான மரகத லிங்கம் மாயமானது, பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சொந்த ஊரான, நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான, பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. ஏழாம் நுாற்றாண்டை சேர்ந்த இக்கோவில், தேவார மூவரால் பாடல் பெற்றது. இக்கோவிலில், ராஜேந்திர சோழன் காலத்தைச் சேர்ந்த, விலைமதிப்பற்ற மரகத லிங்கம் உள்ளது.

இக்கோவிலில் உள்ள சுயம்பு லிங்கத்திற்கு, காலை, 9:30, மாலை 6:30 மணிக்கு, பூஜை செய்யப்படுவது வழக்கம். தற்போது, விஜய தசமி விழாக்காலம் என்பதால், கடந்த ஒரு வாரமாக, தினமும் மரகத லிங்கத்திற்கும், பூஜை செய்யப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் காலை பூஜை முடிந்து, மரகத லிங்கத்தை, இரும்பு பெட்டியில் வைத்து, இரண்டு பூட்டுகளால் பூட்டி விட்டு, அர்ச்சகர் சென்றார். மாலை, விநாயகருக்கு பூஜை செய்த பின், மரகத லிங்கத்தை எடுக்கச் சென்ற அர்ச்சகர், பெட்டியின் பூட்டு உடைக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

கோவில் நிர்வாகம் மற்றும், நாகப்பட்டினம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் கைரேகை நிபுனர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
மரகத லிங்கம் குறித்து, தொல்லியல் ஆய்வாளர்கள் கூறியதாவது: மரகதம் நம் நாட்டில் கிடைக்காது, கிழக்காசிய நாடுகளில் மட்டுமே கிடைக்க கூடிய, அரிய வகை கல். திருக்குவளை, பிரம்மபுரீஸ்வரர் கோவில், ஏழாம் நுாற்றாண்டில் கட்டப்பட்டதாக இருந்தாலும், பின், வந்த ராஜேந்திர சோழன், கிழக்காசிய நாடுகளை வென்ற போது, அங்கிருந்து, மரகத கல்லை கொண்டு வந்து, இந்த கோவிலுக்கு லிங்கம் செய்திருக்கலாம் என, நம்பப்படுகிறது.

இந்திரனை துன்புறுத்திய அசுரர்களை, முசுகுந்த சக்கரவர்த்தி போரிட்டு வென்றால், தன்னிடம் இருக்கும், புகழ்வாய்ந்த மரகத லிங்கத்தை, அவனுக்கு தருவதாக கூறினார். முசுகுந்தன் போரில் வென்றும், மரகத லிங்கத்தை தர மனமில்லாமல், தேவ சிற்பியான மயன் மூலம், 6 லிங்கங்களை செய்து, தேவையானதை எடுத்துக்கொள்ள சொன்னார்.

இந்த நிலையில், இறைவனின் துணையோடு, உண்மையான லிங்கத்தை முசுகுந்தன் எடுத்துவிட, அனைத்து லிங்கங்களையும் அவனிடமே கொடுத்தார், இந்திரன். அவற்றை ஒவ்வொரு இடங்களில் வைத்து, கோவில் எழுப்பி, முசுகுந்தன் வழிபட்டதாக ஐதீகம் உள்ளது. அவையே, சப்த விடங்க தலங்கள்.

மரகத லிங்கத்தின் சிறப்பு:மரகத லிங்கம் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இதன் மீது, பால், தேன், தண்ணீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வர். அந்த தீர்த்தத்தை, தொடர்ந்து, 48 நாட்கள் பருகினால், பல்வேறு உடல் பிரச்னைகள் சரியாகும். மாயமான லிங்கத்திற்கு 1,000 ஆண்டுகளுக்கும் மேல், அபிஷேகம் செய்யப்பட்டிருப்பதால், அதன் மருத்துவ குணம்
அதிகரித்திருக்கும்.

திருடு போவது எப்படி? பொதுவாக, இந்த சிலைகளை உள்ளூர் சிலை திருடர்கள் திருடுவதில்லை. இதன் மதிப்பை உணர்ந்த, சர்வ தேச கொள்ளையர்கள் மட்டுமே இவ்வாறான திருட்டில் ஈடுபடுகின்றனர். இந்த லிங்கம், மிகச்சிறியது. அதனால், அதை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். இது, தொல்பொருள் ஆய்வுக் கழகத்தில், கலைப்பொருளாக பதிவு செய்யப்பட்டிருந்தால், மாவட்ட காவல்துறை, புதுடில்லியில் உள்ள 'கிரைம் ரெக்கார்டு பீரோ'வுக்கு, அதன் பதிவு எண், படம் ஆகியவற்றை அனுப்பி இருக்கும்.

அங்கிருந்து, அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்படும். இவ்வாறு, தொடர் கண்காணிப்பில் இருந்தால், இரண்டு வாரங்களுக்குள், திருடனை பிடித்து விடலாம். பொதுவாக, கோவில் திறக்காத போது, தன் ஊருக்கு, வரும் வெளியூர்க்காரர்களைப் பற்றி, பொதுமக்கள் விசாரித்து, சந்தேகம் இருந்தால், போலீசுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

ஏனெனில், தமிழகத்தில், 58 ஆயிரம் கோவில்கள் உள்ளன. அவற்றில், 38 ஆயிரம் கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. அனைத்திலும், புகழ் வாய்ந்த பொக்கிஷங்கள் உள்ளன. அவற்றை அரசால் காப்பது, சாத்தியமில்லை. பொதுமக்களிடமும் விழிப்புணர்வு வர வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது: இந்த கோவிலில் உள்ள மரகத லிங்கம், 1983ம் ஆண்டு, தொல்பொருள் ஆய்வுக் கழகத்தால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், விசாரித்தால், கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

எவற்றை பதிவு செய்யலாம்?
நுாறு ஆண்டுகள் பழமையான பொருட்கள், தொல்லியல் துறையால், கலைப்பொருளாக பதிவு செய்யப்பட்டு, இந்திய அரசின் ஆவணக் காப்பகத்தில், அதன் விபரங்கள் காக்கப்படும்.

இது ஒரு தொடர் கதை!

மரகத லிங்கம் மாயமானது குறித்து, ஆலய வழிபடுவோர் சங்கத்தை சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் கூறியதாவது: திருத்துறைபூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவில் திருவாரூர் திருக்காரவாசல் தியாகராஜ சுவாமி கோவில்களில் இருந்த மரகத லிங்கங்களும்; நாகப்பட்டினம் நீலாயி தாட்சாயிணி அம்மன் கோவிலில் இருந்த கோமேதக லிங்கமும் திருடுபோயுள்ளன. அந்த வரிசையில் தற்போது திருக்குவளை கோவில் மரகத லிங்கமும் இணைந்துள்ளது. இந்த கோவில் தர்மபுர ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மரகத லிங்க திருட்டிற்கு காவல் துறையும், கோவில்
நிர்வாகமும் பொறுப்பு ஏற்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நன்றி தினமலர்

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Oct 11, 2016 10:51 am

அடக் கொடுமையே !

கடவுளையே திருடும் மனிதன் மகத்தானவன்தான்.

தன்னைத் திருடச்செய்து திருடனை வாழவைக்கும் கடவுள் திருவுடையோன்தான். இதுவும் அவனது திருவிளையாடல் என்று திருப்தி அடைவது நமது மானுட தர்மம்- திடமான முடிவும் கூட.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 11, 2016 11:12 am

அதே மாதிரிதான் வேறொரு சம்பவம் சொல்லுகிறேன் .

ஒரு சமயம் நான் சென்னையில் இருந்து திருச்சி போவதாக இருந்தது . வீட்டிற்கு வந்த சகலை,திருச்சி பக்கத்தில் உள்ள திருப்பட்டூர் ஊரில் குடியிருக்கும் ப்ரம்ம ஸ்தலம் சென்று வர கூறியிருந்தார். மேலும்,
எல்லோருக்கும் அங்கே போகும் பாக்கியம் கிடைக்காது , நமக்கு போக விதித்திருந்தால் மட்டுமே போகமுடியும் என்றும் கூறி 5/6 வெளி நாட்டில் வாழ் தமிழக பக்தர்கள் அனுபவங்கள் சமாச்சாரங்கள் கூறினார் .
நானும் அங்கே சென்று தரிசனம் செய்து வந்தேன் .

நான் சென்று வந்த 10 /15 நாட்களுக்குப் பிறகு , திருடர்கள் சுவரேறி குதித்து உண்டியலை உடைத்து சென்றதாக செய்தி .  

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Oct 11, 2016 11:19 am

நிச்சயமாக ஏதாவது உள்குத்து இருக்கும் .
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Oct 11, 2016 11:59 am

பரம்பொருளின் பவித்ரமும், சூட்சுமமும் யாரால்தான் அறிய முடியும் !

ஆனால் ஒன்று மட்டும் உண்மை ஐயா !

தோன்றியதெல்லாம் கடவுள் திருமேனி உட்பட ஒருநாள் மறைந்தாகவேண்டும்.
நமது மரகத லிங்கமும் இந்த இயற்கையின் நியதிக்குத் தன்னை ஆட்படுத்தி கொண்டுள்ளது.

விதியை நிர்ணயித்தவனே அதனை மீறக்கூடாது என்னும் தன்மையைக் கூட இந்த வைபவத்தின் மூலம் கூறாமல் நமக்கு உணர்த்தி இருக்கலாம்.

ஏதோ திருக்குவளையின் மரகத லிங்கம் காட்சியாகி இருக்கும்போதே காணும் பாக்கியத்தை அடியனும் பெற்றேன் 2001 இல் அடியேன் நாகப்பட்டினம் அஞ்சல் கோட்டத்தின் கண்காளிப்பாளராக இருந்தபோது. அது போதும் என்ற அளவில் திருப்தி அடைந்து கொண்டேன் இப்போது . இந்த விஞ்ஞான முன்னேற்ற காலத்தில் திட்டமிட்டே திருடப்பட்டிருக்கும் பரம்பொருள் மீண்டும் யதாஸ்தானம் திரும்புவாரா!





+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Oct 11, 2016 12:33 pm

என்னது திருக்குவளையிலா?! புன்னகை புன்னகை அது இத்தனை நாள் கோவிலில் இருந்ததா ?!



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 11, 2016 12:45 pm

ராஜா wrote:என்னது திருக்குவளையிலா?! புன்னகை புன்னகை அது இத்தனை நாள் கோவிலில் இருந்ததா ?!

மேற்கோள் செய்த பதிவு: 1224101

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Oct 11, 2016 1:37 pm

முதல்வர் மருத்துவ மனையில் உள்ள நிலையில் , ஆறலைக் கள்வர்கள் அகப்பட்டதைச் சுருட்ட ஆயத்தமாகிவிட்டனர் .

அரசை வழிநடத்தவும் ,சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கவும் , வலுவான தலைமை இப்போது தேவை . அதிகாரிகளை ஆட்சி செய்ய அனுமதிக்கலாகாது .அதிமுகவினர் தங்களுக்குள் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்கவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது .

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு .

என்பார் ஐயன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக