புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதநேயத்தோடு வாழ்வதுதானே உன்னதம்! – வாணி ஜெயராம் நேர்காணல் Poll_c10மனிதநேயத்தோடு வாழ்வதுதானே உன்னதம்! – வாணி ஜெயராம் நேர்காணல் Poll_m10மனிதநேயத்தோடு வாழ்வதுதானே உன்னதம்! – வாணி ஜெயராம் நேர்காணல் Poll_c10 
284 Posts - 45%
heezulia
மனிதநேயத்தோடு வாழ்வதுதானே உன்னதம்! – வாணி ஜெயராம் நேர்காணல் Poll_c10மனிதநேயத்தோடு வாழ்வதுதானே உன்னதம்! – வாணி ஜெயராம் நேர்காணல் Poll_m10மனிதநேயத்தோடு வாழ்வதுதானே உன்னதம்! – வாணி ஜெயராம் நேர்காணல் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
மனிதநேயத்தோடு வாழ்வதுதானே உன்னதம்! – வாணி ஜெயராம் நேர்காணல் Poll_c10மனிதநேயத்தோடு வாழ்வதுதானே உன்னதம்! – வாணி ஜெயராம் நேர்காணல் Poll_m10மனிதநேயத்தோடு வாழ்வதுதானே உன்னதம்! – வாணி ஜெயராம் நேர்காணல் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனிதநேயத்தோடு வாழ்வதுதானே உன்னதம்! – வாணி ஜெயராம் நேர்காணல் Poll_c10மனிதநேயத்தோடு வாழ்வதுதானே உன்னதம்! – வாணி ஜெயராம் நேர்காணல் Poll_m10மனிதநேயத்தோடு வாழ்வதுதானே உன்னதம்! – வாணி ஜெயராம் நேர்காணல் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மனிதநேயத்தோடு வாழ்வதுதானே உன்னதம்! – வாணி ஜெயராம் நேர்காணல் Poll_c10மனிதநேயத்தோடு வாழ்வதுதானே உன்னதம்! – வாணி ஜெயராம் நேர்காணல் Poll_m10மனிதநேயத்தோடு வாழ்வதுதானே உன்னதம்! – வாணி ஜெயராம் நேர்காணல் Poll_c10 
19 Posts - 3%
prajai
மனிதநேயத்தோடு வாழ்வதுதானே உன்னதம்! – வாணி ஜெயராம் நேர்காணல் Poll_c10மனிதநேயத்தோடு வாழ்வதுதானே உன்னதம்! – வாணி ஜெயராம் நேர்காணல் Poll_m10மனிதநேயத்தோடு வாழ்வதுதானே உன்னதம்! – வாணி ஜெயராம் நேர்காணல் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மனிதநேயத்தோடு வாழ்வதுதானே உன்னதம்! – வாணி ஜெயராம் நேர்காணல் Poll_c10மனிதநேயத்தோடு வாழ்வதுதானே உன்னதம்! – வாணி ஜெயராம் நேர்காணல் Poll_m10மனிதநேயத்தோடு வாழ்வதுதானே உன்னதம்! – வாணி ஜெயராம் நேர்காணல் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மனிதநேயத்தோடு வாழ்வதுதானே உன்னதம்! – வாணி ஜெயராம் நேர்காணல் Poll_c10மனிதநேயத்தோடு வாழ்வதுதானே உன்னதம்! – வாணி ஜெயராம் நேர்காணல் Poll_m10மனிதநேயத்தோடு வாழ்வதுதானே உன்னதம்! – வாணி ஜெயராம் நேர்காணல் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மனிதநேயத்தோடு வாழ்வதுதானே உன்னதம்! – வாணி ஜெயராம் நேர்காணல் Poll_c10மனிதநேயத்தோடு வாழ்வதுதானே உன்னதம்! – வாணி ஜெயராம் நேர்காணல் Poll_m10மனிதநேயத்தோடு வாழ்வதுதானே உன்னதம்! – வாணி ஜெயராம் நேர்காணல் Poll_c10 
7 Posts - 1%
mruthun
மனிதநேயத்தோடு வாழ்வதுதானே உன்னதம்! – வாணி ஜெயராம் நேர்காணல் Poll_c10மனிதநேயத்தோடு வாழ்வதுதானே உன்னதம்! – வாணி ஜெயராம் நேர்காணல் Poll_m10மனிதநேயத்தோடு வாழ்வதுதானே உன்னதம்! – வாணி ஜெயராம் நேர்காணல் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதநேயத்தோடு வாழ்வதுதானே உன்னதம்! – வாணி ஜெயராம் நேர்காணல்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 08, 2016 8:57 am

மனிதநேயத்தோடு வாழ்வதுதானே உன்னதம்! – வாணி ஜெயராம் நேர்காணல் YabiIg0TBOL6iOKh4Tln+vani_3013951h
-
இன்றய வைஃபை சூழ் வையகத்தில் இப்போதும் மாறாமல் இருப்பது இசை ரசனைதான். இன்னமும் இவர் பாடிய ‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை’ பாடலும், ‘ஆடி வெள்ளி தேடி உன்னை’யும் நம் மனதில் தோரணம் கட்டிக்கொண்டே இருக்கின்றன. தமிழ்ப் பின்னணிப் பாடகிகளில் கர்னாடக இசையும் ஹிந்துஸ்தானியும் கஜலும் அறிந்தவர் இவர் ஒருவர்தான். 19 மொழிகளில் பாடியிருப்பவர். பெரும்பாலும் அங்காடிக் கூச்சல்களாகவும், வாகன ஹாரன் ஒலிகளாகவும் திரையிசை மாறிவிட்ட சூழலில், சந்தோஷங்களின் குரலாக இருக்கும் வாணி ஜெயராம் அவர்களுடன் ஓர் உரையாடல்:

பல நுண்கலைகளில் முதன்மையானது இசைக் கலை.
இதில் நீங்களும் ஒரு பங்களிப்பாளர் என்பதில் உங்களுக்குள்ள
உணர்வு என்ன?


`அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்று நமது அவ்வைப் பாட்டி சொன்னதுதான் ஞாபகத்துக்கு வருகிறது. இப்படி அரிதாகக் கிடைத்திருக்கிற இந்த மனிதப் பிறவியில் மனிதநேயத்தோடு வாழ்வதுதான் மிக உன்னதமான விஷயம். சமூகத்தில் எல்லோருக்கும் நல்லவராக வாழ்கிற வாழ்க்கையைத்தான் நம் முன்னோர்கள் ‘இசைபட வாழ்தல்’ என்றழைத்தார்கள். இசை என்பது சமூகத்தை இணைக்கிற நல்லதொரு பாலம். அத்தகைய இசைத் துறையில் நானும் ஒரு பங்களிப்பாளராக, பார்வையாளராக இருப்பதை எண்ணி கர்வப்படவில்லை. பெருமைப்படுகிறேன். பெருமைப்படலாம்; கர்வப்படக் கூடாது.

உங்கள் இசை ஆற்றலின் ஆரம்பப் பல்லவி…


எனது இசையின் தொட்டில், அகரம், பல்லவி எல்லாமே என் குடும்பம்தான். இசையால் ஆனது என் வீடு. என் தாயார் பத்மாவதி வீணை இசைக் கலைஞர். ரங்கராமனுஜ அய்யங்காருடைய சிஷ்யை என் தாயார். ஒரு விளக்கால் இன்னொரு விளக்கை ஏற்றலாம் என்பார்கள் அல்லவா? அது போல என் அம்மாவிடம் இருந்துதான் எனக்கும் அந்த ஒளி கடத்தப்பட்டது. மூன்று வயதிலேயே எனக்கு இசை நாட்டம் வந்துவிட்டதாகப் பின்னாட்களில் என் தாய் சொல்லக் கேட்டிருக்கிறேன். எனது ஐந்தாவது வயதில் வேலூரில் முறைப்படி இசை கற்க ஆரம்பித்தேன். அந்த ஒலி ஊர்வலம் இன்னமும் தொடர்கிறது. இதைத் தொடர்ந்து மும்பையில் ஹிந்துஸ்தானியை முறைப்படி கற்றுக்கொண்டேன். கஜலும் அத்துப்படியானது. இவை எல்லாம் எனக்கு வெவ்வேறு பரிமாணங்களில் பயணிக்கப் பெரிதும் பயன்பட்டன.

செவ்விசை அறிந்தவர் நீங்கள். நாட்டார் பாடல்களைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன?


இசையின் பல பரிமாணங்களில் ஒன்று நாட்டார் பாடல்கள். மக்கள் இசை அது. எனக்கும் பிடிக்கும். இன்னும் சொல்லப்போனால் திரையிசைக்கு மிக நெருக்கமாக கிராமியப் பாடலும் இருக்க வேண்டும். பிரபல இசையமைப்பாளர் நவுஸத் உத்தரப் பிரதேச கிராமியப் பாடல்களையும், எஸ்.டி.பர்மன் வங்காள மொழி கிராமியப் பாடல்களையும் எடுத்துத் திரையிசையில் கலந்திருக்கிறார்கள். நம் தமிழ்த் திரையிசையிலும் நாட்டார் பாடல்கள் கவனிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 08, 2016 8:58 am

அங்கீகாரத்தின் அடையாளம்தான் விருதுகள்.
இந்த விருதுகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?


குழந்தைக்குக்கூடப் பாராட்டுவது பிடிக்கும். விருதுகள் இன்னும் இன்னும் உற்சாகத்தைக் கூட்டும். 1977-ல் `அபூர்வ ராகங்கள்’ படத்தில் எம்.எஸ்.வி. சார் இசையில் பாடிய ‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்?’ பாடலுக்கு தேசிய விருது தொடங்கி ஏகப்பட்ட விருதுகள் வாங்கியிருக்கிறேன். சமீபக் காலங்களில் 2014-ல் ‘1983’ என்ற மலையாளப் படத்தில் நான் பாடிய ‘நலன் ஞாலி குருவி’ என்ற பாடலுக்கும் இந்த வருஷத்தில் ‘ஆக்‌ஷன் ஹீரோ பீஜு’ என்ற நிவின் பாலி நடித்த படத்தில் நான் பாடிய ‘பூக்கள் பன்னீர் பூக்கள்’ பாடலுக்கும் விருதுகள் கொடுத்திருக்கிறார்கள். இந்த அங்கீகாரங்கள், தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்கான டானிக். இதில் இன்னொரு விஷயம் விருது நம்மைத் தேடி வரணும். நாம் தேடிப் போகக் கூடாது.

ஞாபக அலமாரியில் பத்திரமாக இருக்கும் உங்கள் முதல் திரையிசைப் பயணம்?


1970-ல் ‘குட்டி’ என்ற இந்திப் படத்தில் என்னை முதன்முதலாக வசந்த் தேசாய் பின்னணிப் பாடகியாக அறிமுகம் செய்தார். தமிழில் 1973-ல் எஸ்.எம்.சுப்பையா நாயுடு, ‘தாயும் சேயும்’ என்ற படத்தில் அறிமுகம் செய்தார். அந்தப் படம் வெளிவரவே இல்லை. அதே வருஷத்தில் சங்கர்-கணேஷ் இசையில் `வீட்டுக்கு வந்த மருமகள்’ படத்தில் ‘ஓரிடம்…’ என்ற ஒரு டூயட் பாடலை டி.எம்.எஸ். அவர்களுடன் இணைந்து பாடினேன். அதே வருஷத்தில் எம்.எஸ்.வி. சார் இசையில், எனக்குப் பெரிய பேர் வாங்கித் தந்த ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’ பாடலைப் பாடினேன். என்னை உச்சத்துக்குக் கொண்டு சென்றுவிட்டது அந்தப் பாடல்.

ஹிந்துஸ்தானியும், கஜலும் நீங்கள், இத்தகைய இசைப் படிமங்களைக் கொண்ட ‘மேகமே மேகமே’, ‘யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது’ போன்ற ஒரு சில பாடல்களை மட்டுமே தந்திருக்கிறீர்கள்…

நீங்கள் தமிழில் மட்டும் விரல் விட்டு எண்ணுகிறீர்கள். இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளிலும் இத்தகைய நுட்பங்களைக் கொண்ட பாடல்களைப் பாடியிருக்கிறேன்.

உங்களுக்கே உங்களுக்கென்று பிடித்த ராகம்?


‘த்விஜாவந்தி’ என்ற ராகம் ரொம்பப் பிடிக்கும். ஒரு பாட்டு சொல்றேன். உங்களுக்கும் பிடிக்கும். இந்த ராகத்தின் அடிப்படையை வைத்துக்கொண்டு எம்.எஸ்.வி. சார் ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’ படத்தில் ‘அமுதத் தமிழில் கவிதை எழுதும் புதுமைப் புலவன் நீ’ என ஒரு பாடல் போட்டிருப்பார். உண்மையிலேயே இசையும் தமிழும் அமுதம்தான்.

மானா பாஸ்கரன்
நன்றி- தி இந்து

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 08, 2016 11:13 am

நானறிந்த ஒருவரின் உறவினர் இவர்.
பழக இனிமையானவர் .
ஒன்றுமில்லாதவர்கள் எல்லாம் ego காய்ச்சலில்
அல்லாடிக் கொண்டு இருக்கும் இவ்வுலகில் ,
பல பெருமைகளுக்கு உரிய ,
ஜெயராம் அவர்களும் வாணி அவர்களும்,
ஒரு விதிவிலக்கு .

நல்ல பதிவு .நன்றி ayyasami ram அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 08, 2016 11:28 am

‘அமுதத் தமிழில் கவிதை எழுதும் புதுமைப் புலவன் நீ’ --
த்விஜாவந்தி ராகத்தில் வாணி ஜெய்ராம் அவர்கள் பாடிய பாடல் ,
MSV அவர்கள் இசை . பாடல் புலமைப்பித்தன்
ஈகரை உறவுகளுக்காக .  




ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 08, 2016 1:25 pm

பாடல்- வாலி
பாடியவர்: வாணி ஜெயராம், ஜெயச்சந்திரன்

-

அமுதத் தமிழில் எழுதும் கவிதை புதுமைப் புலவன் நீ
அமுதத் தமிழில் எழுதும் கவிதை புதுமைப் புலவன் நீ - புவி
அரசர் குலமும் வணங்கும் புகழின் புரட்சித் தலைவன் நீ
புரட்சித் தலைவன் நீ
-
இதழில் எழுதி விழியில் படிக்கும் கவிதை லயமும் நீ
இதழில் எழுதி விழியில் படிக்கும் கவிதை லயமும் நீ - பிறை
இடையில் உலகின் சுகத்தை உணர்த்தும் விளக்க உரையும் நீ
விளக்க உரையும் நீ
-
நாணம் ஒரு புறமும் ஆசை ஒரு புறமும் நெஞ்சில் மிதப்பதென்ன?
நாணம் ஒரு புறமும் ஆசை ஒரு புறமும் நெஞ்சில் மிதப்பதென்ன?
உன்னை ஒரு கணமும் என்னை மறு கணமும் மேலும் நினைப்பதென்ன?
மேலும் நினைப்பதென்ன?
-
நாதம் இசைத்து வரும் பாத மணிச் சிலம்பு என்னை அழைப்பதென்ன?
நாதம் இசைத்து வரும் பாத மணிச் சிலம்பு என்னை அழைப்பதென்ன?
ஊஞ்சல் அசைந்துவரும் நீல விழியிரண்டில் வண்ணம் சிவப்பதென்ன
வண்ணம் சிவப்பதென்ன?
-
எதுகை அது உனது இரு கை அதில் எனது பெண்மை ஆடட்டுமே
எதுகை அது உனது இரு கை அதில் எனது பெண்மை ஆடட்டுமே
ஒரு கை குழல் தழுவ மறு கை உடல் தழுவ இன்பம் தேடட்டுமே
இன்பம் தேடட்டுமே
-
வைகை அணை திறந்து வைகை அடை மதுரை வைகை அணை போலவே
மங்கை எனும் அமுத கங்கை பெருகுவது நீந்திக் கரை காணவே
நீந்திக் கரை காணவே
-
அமுதத் தமிழில் எழுதும் கவிதை புதுமைப் புலவன் நீ புவி
அரசர் குலமும் வணங்கும் புகழின் புரட்சித் தலைவன் நீ
புரட்சித் தலைவன் நீ
-
---------------------------------------------------



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Oct 08, 2016 4:17 pm

பாடல் புலமைபித்தனா அல்லது வாலியா ?
நான் படித்தது புலமைப்பித்தன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sun Oct 09, 2016 12:29 am

அந்தப் பாடலை எழுதியது புலவர் புலமைப்பித்தன். வாலி அல்ல.

வாணி ஜெயராமின் வளர்சசிக்கு தடையாக இருந்தவர் ஒரு பிரபலமான வட நாட்டு இந்திப் பாடகி.
இந்தப் பாடகி சில வருடங்களுக்கு முன்னர் காமன்வெல்த் தொடக்கப் பாடலை இசை அமைத்து உருவாக்கிய ஏ.ஆர் ரகுமானை கடுமையாக விமர்சித்திருந்தார். தொடக்கப் பாடல் ரகுமானுக்கு சரிவை தந்து விட்டது என்றும் தனக்கு அந்த இசை பிடிக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

கலைஞர்களிடையே போட்டி இருக்கலாம். பொறாமை கூடாது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 09, 2016 7:01 am

மூர்த்தி wrote:அந்தப் பாடலை எழுதியது புலவர் புலமைப்பித்தன். வாலி அல்ல.

வாணி ஜெயராமின் வளர்சசிக்கு தடையாக இருந்தவர் ஒரு பிரபலமான வட நாட்டு இந்திப் பாடகி.
இந்தப் பாடகி சில வருடங்களுக்கு முன்னர் காமன்வெல்த் தொடக்கப் பாடலை இசை அமைத்து உருவாக்கிய ஏ.ஆர் ரகுமானை கடுமையாக விமர்சித்திருந்தார். தொடக்கப் பாடல் ரகுமானுக்கு சரிவை தந்து விட்டது என்றும் தனக்கு அந்த இசை பிடிக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

கலைஞர்களிடையே போட்டி இருக்கலாம். பொறாமை கூடாது.
மேற்கோள் செய்த பதிவு: 1223879

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Oct 09, 2016 1:35 pm

மூர்த்தி wrote:

கலைஞர்களிடையே போட்டி இருக்கலாம். பொறாமை கூடாது.
மேற்கோள் செய்த பதிவு: 1223879

ஆராய்ந்து பார்த்தால் போட்டிக்கு ஆதாரமே பொறாமையாகத்தான் இருக்கும்.
பொறாமையே உபாதான காரணமாகும்போது போட்டி எப்படி பொறாமை இல்லாமல் !
ஆனால் இந்த பொறாமை பகைமைக்கு வித்தாகாமல் பார்த்துக் கொண்டால் ஆனந்தம்தான்.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 09, 2016 7:51 pm

போட்டியில் முன்னோடியாக இருப்பவர்களை கண்டு ,
மற்றவர்கள் பொறாமை படுவது ,நடைமுறை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக