புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
Geethmuru |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம் செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். பகுதி - 2
Page 1 of 1 •
சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம் செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். பகுதி - 2
#1223278- GuestGuest
அதன் பின்னர் தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்கள் துண்டாடப்பட்டன. அவை ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுடன் இணைக்கப்பட்டன. இதனால் தமிழகம் மொத்தம் 70 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பகுதிகளை இழந்தது. தமிழ்நாட்டில் அப்போதைய வட ஆற்காடு மாவட்டத்தின் ஓர் அங்கமாக விளங்கிய 9 வட்டங்களும் ஆந்திராவுடன் இணைக்கப்பட்டன.
தெலுங்கு பேசும் மக்களுக்காக மட்டுமே ஆந்திரா உருவாக்கப்பட்டது. ஆனால் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட மக்கள் அதிகமாக வாழும் 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் ஆந்திராவுடன் இணைக்கப்பட்டன என்பது வருத்தமான செய்தி. இதை எதிர்த்து தமிழகத்தில் உள்ள தமிழர்கள் போராட்டம் செய்தனர். ஆர்ப்பாடங்களில் இறங்கினர்.
அதன் விளைவாக 1961-ஆம் ஆண்டில் திருத்தணி வட்டமும், பள்ளிப்பட்டு பகுதியும் மீண்டும் தமிழகத்துடன் இணைக்கப்பட்டன. மீதமுள்ள 8 வட்டங்களும் இன்று வரை ஆந்திராவில் ஓர் அங்கமாகவே இருந்து வருகின்றன.
ஆந்திராவில் இப்போது தெலுங்கு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கே கல்வி வாய்ப்புகள். வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை. இருந்தாலும் இந்தப் பகுதிகளில் வாழும் மக்களில் 95 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் தமிழர்கள். அடுத்து இன்னும் ஒரு வேதனையான செய்தி. ஆந்திர சட்டச் சபைக்குத் தமிழர்கள் போட்டியிட முடியாது. அதே போல நடுவண் மக்களவைக்கும் போட்டியிட முடியாது.
(வந்தாரை வாழ வைக்கிறது வெட்கம் கெட்ட தமிழகம்.தமிழகத்தில் எல்லாமே முடியும்.)
ஆந்திர மாநிலம் பிரிக்கப்படுவதற்கு முன்பு வரை இந்தப் பகுதிகளின் மக்கள் பிரதிநிதிகளாகத் தமிழர்களே தேர்வு செய்யப்பட்டு வந்தனர். இப்போது தமிழர்கள் தங்களின் அரசியல் உரிமைகளை இழந்து விட்டனர். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதால் ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்கள் இவை.இது இந்திய வரலாற்றுத் தகவல்.
தமிழக நிலப்பகுதிகளைத் தக்க வைத்துக் கொள்ள ம.பொ.சி, மார்சல் நேசமணி போன்ற தலைவர்கள் அரும்பெரும் முயற்சிகள் எடுத்துக் கொண்டனர். பற்பலப் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களின் அந்த முயற்சியினால் தான் சென்னை, திருத்தணி, செங்கோட்டை, கன்னியாகுமரி போன்ற பகுதிகள் மீட்கப்பட்டன. இல்லை என்றால் அவையும் அப்படியே பறந்து போய் இருக்கும்.
இன்றைய தமிழகத்தின் பரப்பளவு 1,30,609 சதுர கிலோ மீட்டர்கள். அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப் பகுதியின் அளவு ஏறக்குறைய 70,000 சதுர கிலோமீட்டர்கள். இவை மட்டும் இன்றைக்கு இருந்து இருந்தால் தமிழகம், கர்நாடகாவைவிட இன்னும் பெரிய மாநிலமாக மாறி இருக்கும். மற்ற தென்னிந்திய மாநிலங்களைவிட வளமான மாநிலமாகவும் மாறி இருக்கும்.
தமிழகம் பல்லாயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப் பகுதிகளை இழந்தது. அதற்கு காரணமாக இருந்தவை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தான். இன்று ஒத்துப் போகாத அரசியல் கட்சிகள், அன்று நான் இந்தக் கட்சி, நீ அந்தக் கட்சி என்று பேதம் பார்க்காமல் கைகோர்த்து அந்த இழப்புகளுக்குத் துணை போனார்கள்.
தெலுங்கு பேசும் மக்களுக்காக மட்டுமே ஆந்திரா உருவாக்கப்பட்டது. ஆனால் தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட மக்கள் அதிகமாக வாழும் 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் ஆந்திராவுடன் இணைக்கப்பட்டன என்பது வருத்தமான செய்தி. இதை எதிர்த்து தமிழகத்தில் உள்ள தமிழர்கள் போராட்டம் செய்தனர். ஆர்ப்பாடங்களில் இறங்கினர்.
அதன் விளைவாக 1961-ஆம் ஆண்டில் திருத்தணி வட்டமும், பள்ளிப்பட்டு பகுதியும் மீண்டும் தமிழகத்துடன் இணைக்கப்பட்டன. மீதமுள்ள 8 வட்டங்களும் இன்று வரை ஆந்திராவில் ஓர் அங்கமாகவே இருந்து வருகின்றன.
ஆந்திராவில் இப்போது தெலுங்கு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கே கல்வி வாய்ப்புகள். வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை. இருந்தாலும் இந்தப் பகுதிகளில் வாழும் மக்களில் 95 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் தமிழர்கள். அடுத்து இன்னும் ஒரு வேதனையான செய்தி. ஆந்திர சட்டச் சபைக்குத் தமிழர்கள் போட்டியிட முடியாது. அதே போல நடுவண் மக்களவைக்கும் போட்டியிட முடியாது.
(வந்தாரை வாழ வைக்கிறது வெட்கம் கெட்ட தமிழகம்.தமிழகத்தில் எல்லாமே முடியும்.)
ஆந்திர மாநிலம் பிரிக்கப்படுவதற்கு முன்பு வரை இந்தப் பகுதிகளின் மக்கள் பிரதிநிதிகளாகத் தமிழர்களே தேர்வு செய்யப்பட்டு வந்தனர். இப்போது தமிழர்கள் தங்களின் அரசியல் உரிமைகளை இழந்து விட்டனர். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதால் ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்கள் இவை.இது இந்திய வரலாற்றுத் தகவல்.
தமிழக நிலப்பகுதிகளைத் தக்க வைத்துக் கொள்ள ம.பொ.சி, மார்சல் நேசமணி போன்ற தலைவர்கள் அரும்பெரும் முயற்சிகள் எடுத்துக் கொண்டனர். பற்பலப் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களின் அந்த முயற்சியினால் தான் சென்னை, திருத்தணி, செங்கோட்டை, கன்னியாகுமரி போன்ற பகுதிகள் மீட்கப்பட்டன. இல்லை என்றால் அவையும் அப்படியே பறந்து போய் இருக்கும்.
இன்றைய தமிழகத்தின் பரப்பளவு 1,30,609 சதுர கிலோ மீட்டர்கள். அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப் பகுதியின் அளவு ஏறக்குறைய 70,000 சதுர கிலோமீட்டர்கள். இவை மட்டும் இன்றைக்கு இருந்து இருந்தால் தமிழகம், கர்நாடகாவைவிட இன்னும் பெரிய மாநிலமாக மாறி இருக்கும். மற்ற தென்னிந்திய மாநிலங்களைவிட வளமான மாநிலமாகவும் மாறி இருக்கும்.
தமிழகம் பல்லாயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப் பகுதிகளை இழந்தது. அதற்கு காரணமாக இருந்தவை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தான். இன்று ஒத்துப் போகாத அரசியல் கட்சிகள், அன்று நான் இந்தக் கட்சி, நீ அந்தக் கட்சி என்று பேதம் பார்க்காமல் கைகோர்த்து அந்த இழப்புகளுக்குத் துணை போனார்கள்.
Re: சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம் செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். பகுதி - 2
#1223279- GuestGuest
இந்தியா சுதந்திரம் பெற்றதும் மொழிவாரி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்று மூலைக்கு மூலை ஆர்ப்பாட்டக் குரல்கள். அப்படிக் குரல் எழுப்பியவர்கள் பிரிவினைவாதிகள் அல்ல. சுதந்திரப் போராட்டவாதிகள் தான். குறிப்பாக காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தவர்கள் தான் முழுமூச்சாகக் களம் இறங்கினார்கள்.
முதன் முதலில் மராத்தி மொழி பேசும் மக்களுக்குத் தனியாக மராட்டிய மாநிலம் வேண்டும் என்று போராட்டம் தொடங்கியது. ‘சம்யுக்த மகாராஷ்டிரா சம என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்திய விடுதலைப் போராட்டத் தியாகி சங்கர்ராவ் தேவ் தலைமை தாங்கினார். அடுத்து குஜராத் மாநிலத்தில் ‘மகா குஜராத் ஜனதா பர என்ற அமைப்பு வந்தது. அதன் மூலம் அதன் தலைவர் இந்துலால் யக்னிக் போராட்டங்களைத் தொடங்கினார்.
அதன் பிறகு எல்லாவற்றையும் விட பெரிய அளவில் தென்னிந்தியாவில் தனி ஆந்திர மாநிலப் போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. அடுத்து கர்நாடகா, கேரளாவிலும் போராட்டங்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் அப்படி ஒரு போராட்டம் மட்டும் தலைகாட்டவே இல்லை. அப்போது தமிழகத்தில் இருந்த தேசிய உணர்வு, திராவிட உணர்வுகள் தான் முக்கியக் காரணங்கள்.
வெள்ளைக்காரர்கள் ஆட்சி செய்த போது சென்னை ராஜதானி எனும் பெயரில் சென்னைப் பெருநிலம் பெருமையாக விளங்கியது. அந்தக் கட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய நான்கு மாநிலங்களும் சென்னை நிர்வாகத்தின் கீழ் தான் இருந்தன. அதனால் சென்னை மாநிலமும் சென்னையைச் சார்ந்த தமிழ் மண்ணும் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பேதம் பார்க்கவில்லை.
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, தென் இந்தியாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தவர்கள் தங்கள் உரிமைகளைக் கேட்டார்கள், போராடினார்கள். விடாமல் முயற்சி செய்தார்கள். வெற்றியை விரட்டிக் கொண்டு போனார்கள். அதனால், அவர்கள் கேட்டது அவர்களுக்கு கிடைத்தது.
உண்மையிலேயே கேரள அரசியல்வாதிகளைப் பாராட்ட வேண்டும். அந்தச் சமயத்தில் கேரளா ஒரு சின்ன மாநிலமாகத் தான் இருந்தது. அவர்கள் தங்களுக்குக் கூடுதலான நிலம் தேவை என்று ஆர்ப்பரித்ததில் நியாயம் இருக்கவே செய்கிறது. எடுத்த இலட்சியத்தில் வெற்றி அடைந்து இருக்கிறார்கள்.
கர்நாடகா அப்படி இல்லையே. தமிழ்நாட்டில் இருக்கிறதை எல்லாம் பிடுங்கிக் கொண்டு போவதில்தானே கண்ணும் கருத்துமாய் இருந்தது. கர்நாடகா அரசியல்வாதிகளும் நிலம்... நிலம் என்று பித்துப் பிடித்துத் அலைந்து திரிந்து இருக்கிறார்கள். ம.பொ.சி., ஜீவா போன்ற தமிழ்த் தலைவர்கள் சொன்னார்கள்.
முதன் முதலில் மராத்தி மொழி பேசும் மக்களுக்குத் தனியாக மராட்டிய மாநிலம் வேண்டும் என்று போராட்டம் தொடங்கியது. ‘சம்யுக்த மகாராஷ்டிரா சம என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்திய விடுதலைப் போராட்டத் தியாகி சங்கர்ராவ் தேவ் தலைமை தாங்கினார். அடுத்து குஜராத் மாநிலத்தில் ‘மகா குஜராத் ஜனதா பர என்ற அமைப்பு வந்தது. அதன் மூலம் அதன் தலைவர் இந்துலால் யக்னிக் போராட்டங்களைத் தொடங்கினார்.
அதன் பிறகு எல்லாவற்றையும் விட பெரிய அளவில் தென்னிந்தியாவில் தனி ஆந்திர மாநிலப் போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. அடுத்து கர்நாடகா, கேரளாவிலும் போராட்டங்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் அப்படி ஒரு போராட்டம் மட்டும் தலைகாட்டவே இல்லை. அப்போது தமிழகத்தில் இருந்த தேசிய உணர்வு, திராவிட உணர்வுகள் தான் முக்கியக் காரணங்கள்.
வெள்ளைக்காரர்கள் ஆட்சி செய்த போது சென்னை ராஜதானி எனும் பெயரில் சென்னைப் பெருநிலம் பெருமையாக விளங்கியது. அந்தக் கட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய நான்கு மாநிலங்களும் சென்னை நிர்வாகத்தின் கீழ் தான் இருந்தன. அதனால் சென்னை மாநிலமும் சென்னையைச் சார்ந்த தமிழ் மண்ணும் அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பேதம் பார்க்கவில்லை.
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, தென் இந்தியாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தவர்கள் தங்கள் உரிமைகளைக் கேட்டார்கள், போராடினார்கள். விடாமல் முயற்சி செய்தார்கள். வெற்றியை விரட்டிக் கொண்டு போனார்கள். அதனால், அவர்கள் கேட்டது அவர்களுக்கு கிடைத்தது.
உண்மையிலேயே கேரள அரசியல்வாதிகளைப் பாராட்ட வேண்டும். அந்தச் சமயத்தில் கேரளா ஒரு சின்ன மாநிலமாகத் தான் இருந்தது. அவர்கள் தங்களுக்குக் கூடுதலான நிலம் தேவை என்று ஆர்ப்பரித்ததில் நியாயம் இருக்கவே செய்கிறது. எடுத்த இலட்சியத்தில் வெற்றி அடைந்து இருக்கிறார்கள்.
கர்நாடகா அப்படி இல்லையே. தமிழ்நாட்டில் இருக்கிறதை எல்லாம் பிடுங்கிக் கொண்டு போவதில்தானே கண்ணும் கருத்துமாய் இருந்தது. கர்நாடகா அரசியல்வாதிகளும் நிலம்... நிலம் என்று பித்துப் பிடித்துத் அலைந்து திரிந்து இருக்கிறார்கள். ம.பொ.சி., ஜீவா போன்ற தமிழ்த் தலைவர்கள் சொன்னார்கள்.
Re: சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம் செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். பகுதி - 2
#1223280- GuestGuest
ஆக, தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இனம் சார்ந்து பார்க்கவில்லை. அரசியல் நிலைமையும் அப்படித்தான் இருந்தது. காமராசர் ஒரு தமிழர்தான். ஆனால், அவருக்குத் தமிழ்நாட்டைவிட இந்தியாதான் பெரிதாக தெரிந்தது. காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைமைப் பொறுப்பில் இருந்தார். அதனால், அடுத்த மாநிலங்களுடன் அனுசரித்துப் போக வேண்டிய கட்டாய நிலை.
அகஸ்தீஸ்வரம், தோவாளை, நெய்யாற்றுப் பகுதி, நெடுமங்காடு, இடுக்கி மாவட்டம், வண்டிப் பெரியாறு, தேவிகுளம், பீர்மேடு, குமுளி, கொச்சின், சித்தூர், பாலக்காடு போன்ற இடங்கள் இப்போது கேரளாவில் இருக்கின்றன. ஆனால், இன, மொழி, வரலாற்று, இலக்கிய ரீதியில் பார்த்தால், அவை தமிழகத்துடன் நெருங்கிய தொடர்பு உடையவை. அந்த வகையில் அவை தமிழகத்துடன் தான் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லையே.
கன்னியாகுமரியில் தமிழர்களைவிட கேரளத்தவர்கள் தான் அதிகம். அந்த வகையில் அவை கேரளத்துடன் தான் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லையே. ஏன். எல்லாமே அரசியல்வாதிகள் போட்ட தாறுமாறான கணக்குகள்.
1956-ஆம் ஆண்டு பசல் கமிஷன் என்ற ஒரு கமிஷனை மத்திய அரசு நியமித்தது. அந்தக் கமிஷனிடம் மேலே சொன்ன அகஸ்தீஸ்வரம், தோவாளை, நெய்யாற்றுப் பகுதி, நெடுமங்காடு, இடுக்கி மாவட்டம், வண்டிப் பெரியாறு, தேவிகுளம், பீர்மேடு, குமுளி, கொச்சின், சித்தூர், பாலக்காடு பகுதிகளை எல்லாம் கேரளா கேட்டது. தவிர கோவை மாவட்டத்தின் மேற்குப் பகுதி, நீலகிரி, கூடலூர், ஊட்டி பகுதிகளையும் சேர்த்துக் கேட்டது.
மற்றவை எல்லாம் கிடைத்தன. ஆனால், நீலகிரி, கூடலூர், ஊட்டி பகுதிகள் கிடைக்கவில்லை. நீலகிரியையும் ஊட்டியையும் கொடுத்து இருந்தால், ஒரு கப் தேயிலைத் தூளுக்கு தமிழ்நாடு அடுத்த மாநிலத்தைக் கெஞ்ச வேண்டிய நிலை வந்தாலும் வந்து இருக்கலாம்.
இந்த நிலங்கள் எல்லாம் இந்தியாவில் தானே இருக்கிறது. வேறு ஒரு நாட்டுக்காரன் வந்து பிடுங்கிக் கொண்டு போகவில்லையே. அப்புறம் ஏன் இப்படி அடித்துக் கொள்கிறீர்கள் என்று கேட்கலாம். காரணம் இருக்கிறது. அந்த மாதிரி இடுக்கியைக் கொடுத்ததால் தானே பெரியாறு பிரச்சினை பெரிய கோளாறு பண்ணுகிறது. கொடகு நாட்டைக் கொடுத்ததால் தானே காவேரிப் பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது.
அதனால் தானே இலட்சக் கணக்கான தமிழர்களின் நிலங்கள் வானம் பார்த்த பூமியாய்க் கிடக்கின்றன. தண்ணீர் இல்லாமல், தங்களின் பயிர்பச்சைகள் வாடி வதங்கிச் செத்துப் போவதைப் பார்த்து, ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதற்கு எல்லாம் யார் காரணம். ஆரம்பத்திலேயே கொஞ்சம் பிடிவாதமாக இருந்து இருந்தால் இந்த நிலை வந்து இருக்குமா?
அகஸ்தீஸ்வரம், தோவாளை, நெய்யாற்றுப் பகுதி, நெடுமங்காடு, இடுக்கி மாவட்டம், வண்டிப் பெரியாறு, தேவிகுளம், பீர்மேடு, குமுளி, கொச்சின், சித்தூர், பாலக்காடு போன்ற இடங்கள் இப்போது கேரளாவில் இருக்கின்றன. ஆனால், இன, மொழி, வரலாற்று, இலக்கிய ரீதியில் பார்த்தால், அவை தமிழகத்துடன் நெருங்கிய தொடர்பு உடையவை. அந்த வகையில் அவை தமிழகத்துடன் தான் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லையே.
கன்னியாகுமரியில் தமிழர்களைவிட கேரளத்தவர்கள் தான் அதிகம். அந்த வகையில் அவை கேரளத்துடன் தான் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லையே. ஏன். எல்லாமே அரசியல்வாதிகள் போட்ட தாறுமாறான கணக்குகள்.
1956-ஆம் ஆண்டு பசல் கமிஷன் என்ற ஒரு கமிஷனை மத்திய அரசு நியமித்தது. அந்தக் கமிஷனிடம் மேலே சொன்ன அகஸ்தீஸ்வரம், தோவாளை, நெய்யாற்றுப் பகுதி, நெடுமங்காடு, இடுக்கி மாவட்டம், வண்டிப் பெரியாறு, தேவிகுளம், பீர்மேடு, குமுளி, கொச்சின், சித்தூர், பாலக்காடு பகுதிகளை எல்லாம் கேரளா கேட்டது. தவிர கோவை மாவட்டத்தின் மேற்குப் பகுதி, நீலகிரி, கூடலூர், ஊட்டி பகுதிகளையும் சேர்த்துக் கேட்டது.
மற்றவை எல்லாம் கிடைத்தன. ஆனால், நீலகிரி, கூடலூர், ஊட்டி பகுதிகள் கிடைக்கவில்லை. நீலகிரியையும் ஊட்டியையும் கொடுத்து இருந்தால், ஒரு கப் தேயிலைத் தூளுக்கு தமிழ்நாடு அடுத்த மாநிலத்தைக் கெஞ்ச வேண்டிய நிலை வந்தாலும் வந்து இருக்கலாம்.
இந்த நிலங்கள் எல்லாம் இந்தியாவில் தானே இருக்கிறது. வேறு ஒரு நாட்டுக்காரன் வந்து பிடுங்கிக் கொண்டு போகவில்லையே. அப்புறம் ஏன் இப்படி அடித்துக் கொள்கிறீர்கள் என்று கேட்கலாம். காரணம் இருக்கிறது. அந்த மாதிரி இடுக்கியைக் கொடுத்ததால் தானே பெரியாறு பிரச்சினை பெரிய கோளாறு பண்ணுகிறது. கொடகு நாட்டைக் கொடுத்ததால் தானே காவேரிப் பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது.
அதனால் தானே இலட்சக் கணக்கான தமிழர்களின் நிலங்கள் வானம் பார்த்த பூமியாய்க் கிடக்கின்றன. தண்ணீர் இல்லாமல், தங்களின் பயிர்பச்சைகள் வாடி வதங்கிச் செத்துப் போவதைப் பார்த்து, ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதற்கு எல்லாம் யார் காரணம். ஆரம்பத்திலேயே கொஞ்சம் பிடிவாதமாக இருந்து இருந்தால் இந்த நிலை வந்து இருக்குமா?
Re: சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம் செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். பகுதி - 2
#1223281- GuestGuest
1956-ஆம் ஆண்டு கம்யூனிஸ்டுக் கட்சியின் அகில இந்திய மாநாடு சென்னையில் நடக்க வேண்டி இருந்தது. ஆனால், செல்வாக்கு காரணமாகக் கேரளாவுக்கு மாற்றப்பட்டது. அந்த மாநாட்டில், ‘தேவி குளம், பீர்மேடு பகுதிகள் கேரளாவுக்கே சொந்தம்’ என்று தீர்மானம் போடப்பட்டது. தமிழகக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் அந்தத் தீர்மானத்தை எதிர்க்கவில்லை. கட்சிக் கட்டுப்பாடு என்று சொல்லி ஆமாம் சாமி போட்டனர்.
தமிழ்நாட்டு நிலங்களை மற்ற மாநிலங்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்ததில் இந்தத் தேவி குளம், பீர்மேடு பிரச்சினைதான் பெரிய பிரச்சினை. தேவிகுளம் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது. மூணார் என்ற இடத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு மலைப்பிரதேசம்.
இதற்கு அருகில் இருப்பது பீர்மேடு. இதுவும் அழகிய ஒரு நந்தவனச் சோலை. பெருமேடு எனும் தமிழ்ச் சொல்தான், காலப் போக்கில் பீர்மேடு ஆனது. இது ஒரு மலைவாழிடமாகும். மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்தில் இருந்து 915 மீட்டர் உயரம். கோட்டயத்தில் இருந்து தேக்கடி செல்லும் வழியில் அமைந்து உள்ளது.
பீர்மேடு அழகிய அருவிகளுக்கும், பரந்த புல்வெளிகளுக்கும், நெடிய ஊசி இலை மரங்களுக்கும் பெயர் போனது. பீர்மேட்டில் மிளகு, ஏலம் போன்ற வாசனைப் பொருட்கள் நிறையவே பயிர் செய்யப்படுகின்றன.
ஒரு காலத்தில் திருவிதாங்கூர் மன்னர்களின் கோடை கால தங்கும் இடமாக இருந்து இருக்கிறது. பீர்மேட்டில் இருந்து 43 கிலோமீட்டர் தொலைவில், இந்தியாவின் பெரிய கானுயிர்க் காப்பகங்களில் ஒன்றான பெரியார் கானுயிர்க் காப்பகம் உள்ளது. கானகத்தில் வாழும் உயிரினங்களைக் காக்கும் ஒரு காட்டுப் பகுதிக்குத் தான் கானுயிர்க் காப்பகம் என்று பெயர்.
இந்த இரண்டு இடங்களிலும் தமிழர்கள் அதிகமாக வாழ்கின்றனர். 100-க்கு 95 பேர் தமிழர்கள். இவை இப்போது கேரளாவிடம் இருக்கிறது. 1956-இல் தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டது. இவற்றை மறுபடியும் தமிழ்நாட்டுடன் சேர்க்க வேண்டும் என்று தமிழர்கள் போராட்டம் செய்து வருகிறார்கள். இதுதான் தேவி குளம், பீர்மேடு பிரச்சினை.
மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, தமிழகத்தின் எல்லைகளை வரையறுக்க மூன்று பேர் கொண்ட ஓர் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்தில் கே.மா. பணிக்கர் (கேரளா) ஓர் உறுப்பினர். இன்னோர் உறுப்பினர் இந்திக்காரரான குன்ஸ்ரூ (குஜராத்). அதன் தலைவர் பசல் அலி (பீகார்).
இந்த ஆணையத்தை, அப்போதைய பிரதமர் நேருதான் நியமித்தார். கேரளாவைச் சேர்ந்த பணிக்கரை அந்த ஆணையத்தில் சேர்த்து இருக்கக் கூடாது .ஏன் என்றால், வாதியாக கேரளா நிற்கிறது. ஒரு நடுநிலையான ஆணையத்தில் ஒரு வாதிக்குச் சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கலாம் இல்லையா.
பசல் அலி ஆணையம் தனது அறிக்கையை 1955 அக்டோபர் 10-ஆம் தேதி வெளியிட்டது. அதன் பரிந்துரைகள்:
• சென்னை மாநிலத்தில் உள்ள மலபார் மாவட்டத்தைக் கேரளாவில் இணைக்க வேண்டும். மைசூர் மாவட்டத்தை கர்நாடகாவில் சேர்க்க வேண்டும்.
• திருவாங்கூர் மாநிலத்தில் உள்ள கல்குளம் விளவங்கோடு, தோவாளை அகத்தீசுவரம், செங்கோட்டை ஆகிய தமிழ் தாலுகாக்களை சென்னை மாநிலத்துடன் இணைக்க வேண்டும். சென்னை மாநிலம் என்கிற பெயர் நீடிக்க வேண்டும்.
• சென்னை நகரம் தமிழ் மாநிலத்திற்கே உரியது. அதன் தலைநகரமாய் இருக்க வேண்டும்.
• தேவிகுளம், பீரிமேடு, பாலக்காடு, நெய்யாற்றின்கரை, நெடுமங்காடு, கொச்சின், சித்தூர் ஆகியவை தமிழ்நாட்டுடன் சேர்க்கப்படவில்லை. அதே போல் கோலார் தங்கவயல், கொள்ளேகாலம் ஆகியவை தமிழ்நாட்டுடன் சேர்க்கப்படவில்லை.
தமிழ்நாட்டு நிலங்களை மற்ற மாநிலங்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்ததில் இந்தத் தேவி குளம், பீர்மேடு பிரச்சினைதான் பெரிய பிரச்சினை. தேவிகுளம் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது. மூணார் என்ற இடத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு மலைப்பிரதேசம்.
இதற்கு அருகில் இருப்பது பீர்மேடு. இதுவும் அழகிய ஒரு நந்தவனச் சோலை. பெருமேடு எனும் தமிழ்ச் சொல்தான், காலப் போக்கில் பீர்மேடு ஆனது. இது ஒரு மலைவாழிடமாகும். மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்தில் இருந்து 915 மீட்டர் உயரம். கோட்டயத்தில் இருந்து தேக்கடி செல்லும் வழியில் அமைந்து உள்ளது.
பீர்மேடு அழகிய அருவிகளுக்கும், பரந்த புல்வெளிகளுக்கும், நெடிய ஊசி இலை மரங்களுக்கும் பெயர் போனது. பீர்மேட்டில் மிளகு, ஏலம் போன்ற வாசனைப் பொருட்கள் நிறையவே பயிர் செய்யப்படுகின்றன.
ஒரு காலத்தில் திருவிதாங்கூர் மன்னர்களின் கோடை கால தங்கும் இடமாக இருந்து இருக்கிறது. பீர்மேட்டில் இருந்து 43 கிலோமீட்டர் தொலைவில், இந்தியாவின் பெரிய கானுயிர்க் காப்பகங்களில் ஒன்றான பெரியார் கானுயிர்க் காப்பகம் உள்ளது. கானகத்தில் வாழும் உயிரினங்களைக் காக்கும் ஒரு காட்டுப் பகுதிக்குத் தான் கானுயிர்க் காப்பகம் என்று பெயர்.
இந்த இரண்டு இடங்களிலும் தமிழர்கள் அதிகமாக வாழ்கின்றனர். 100-க்கு 95 பேர் தமிழர்கள். இவை இப்போது கேரளாவிடம் இருக்கிறது. 1956-இல் தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டது. இவற்றை மறுபடியும் தமிழ்நாட்டுடன் சேர்க்க வேண்டும் என்று தமிழர்கள் போராட்டம் செய்து வருகிறார்கள். இதுதான் தேவி குளம், பீர்மேடு பிரச்சினை.
மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, தமிழகத்தின் எல்லைகளை வரையறுக்க மூன்று பேர் கொண்ட ஓர் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்தில் கே.மா. பணிக்கர் (கேரளா) ஓர் உறுப்பினர். இன்னோர் உறுப்பினர் இந்திக்காரரான குன்ஸ்ரூ (குஜராத்). அதன் தலைவர் பசல் அலி (பீகார்).
இந்த ஆணையத்தை, அப்போதைய பிரதமர் நேருதான் நியமித்தார். கேரளாவைச் சேர்ந்த பணிக்கரை அந்த ஆணையத்தில் சேர்த்து இருக்கக் கூடாது .ஏன் என்றால், வாதியாக கேரளா நிற்கிறது. ஒரு நடுநிலையான ஆணையத்தில் ஒரு வாதிக்குச் சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கலாம் இல்லையா.
பசல் அலி ஆணையம் தனது அறிக்கையை 1955 அக்டோபர் 10-ஆம் தேதி வெளியிட்டது. அதன் பரிந்துரைகள்:
• சென்னை மாநிலத்தில் உள்ள மலபார் மாவட்டத்தைக் கேரளாவில் இணைக்க வேண்டும். மைசூர் மாவட்டத்தை கர்நாடகாவில் சேர்க்க வேண்டும்.
• திருவாங்கூர் மாநிலத்தில் உள்ள கல்குளம் விளவங்கோடு, தோவாளை அகத்தீசுவரம், செங்கோட்டை ஆகிய தமிழ் தாலுகாக்களை சென்னை மாநிலத்துடன் இணைக்க வேண்டும். சென்னை மாநிலம் என்கிற பெயர் நீடிக்க வேண்டும்.
• சென்னை நகரம் தமிழ் மாநிலத்திற்கே உரியது. அதன் தலைநகரமாய் இருக்க வேண்டும்.
• தேவிகுளம், பீரிமேடு, பாலக்காடு, நெய்யாற்றின்கரை, நெடுமங்காடு, கொச்சின், சித்தூர் ஆகியவை தமிழ்நாட்டுடன் சேர்க்கப்படவில்லை. அதே போல் கோலார் தங்கவயல், கொள்ளேகாலம் ஆகியவை தமிழ்நாட்டுடன் சேர்க்கப்படவில்லை.
Re: சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம் செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். பகுதி - 2
#1223282- GuestGuest
இவைதான் அந்தப் பரிந்துரைகள். இப்படி சேர்க்கப்படாத பகுதிகளைக் கேட்டு, தமிழ் நாட்டுத் தமிழ்த் தலைவர்கள் ஆத்திரம் அடையவில்லை. தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் போர்க்கோலம் பூணவும் இல்லை. அமைதி நிலவியது.
பசல் அலி ஆணையம், செங்கோட்டை தாலுக்கா முழுவதையும் தமிழகத்திற்கு வழங்கி இருந்தது. ஆனால், நடந்தது வேறு. தமிழகத்தின் அமைதியான நிலையைப் பார்த்த கேரளாவிற்கு மகிழ்ச்சி. மேல்மட்ட அரசியல் செல்வாக்கு பயன்படுத்தப்பட்டது. அந்த வகையில், வளமான காட்டுப் பகுதிகளைக் கொண்ட செங்கோட்டை தாலுக்கா கேரளத்திற்குச் சொந்தமானது. செங்கோட்டை நகரம் மட்டும் தமிழகத்திற்குச் சொந்தம் என்றும் மாற்றம் செய்யப்பட்டது. அதன் பிறகும் தமிழ்நாடு கொந்தளிக்கவில்லை. அமைதியாகவே இருந்தது.
பசல் அலி ஆணைய அறிக்கை வெளிவந்த அன்றே, பெரியாரிடம் தினத்தந்திச் செய்தியாளர் ஒரு பேட்டி நடத்தினார். தேவிகுளம், பீரிமேடு தொடர்பான செய்தியாளர் கேள்வியும் பெரியார் அளித்த பதில்களும் வருமாறு:
நிருபர்: பசல் அலி ஆணையம், தமிழ் தாலுகாக்களாக இருந்த தேவிகுளம், பீர்மேடு, நெய்யாத்தங்கரை, கொச்சின், சித்தூர் தாலுக்காக்களைக் கேரளாவுடன் சேர்த்து விட்டதே. இது பற்றி உங்கள் கருத்து என்ன?
ஈ.வெ.ரா: இதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. கேரளாவுடன் அவற்றைச் சேர்க்க வேண்டியது தான்.
நிருபர்: கவலை இல்லை என்கிறீர்கள். ஆனால், அவை தமிழ் தாலுகாக்கள் தானே.
ஈ.வெ.ரா: ஆமாம். சமீபத்தில் சென்னைக்கு சர்தார் பணிக்கர் வந்து இருந்தார். அவரை நான் சந்தித்துப் பேசினேன். அவர் சொன்னார் ‘தொழிலுக்காகத் தான் தமிழர்கள் அங்கு வந்தார்களே தவிர, நிலம் கேரளாவுக்குத்தான் சொந்தம்’ என்று பணிக்கர் சொன்னார். நானும் ’சரி’ என்று சொல்லிவிட்டேன்.
இவ்வாறு ஈ.வெ.ரா. கூறி முடித்தார். திருச்சியில் உள்ள பெரியார் மாளிகையில் இந்தப் பேட்டி நடந்தது. (தினத்தந்தி 11.10.1955)
பசல் அலி அறிக்கை வெளியானது. தி.மு.க. (அண்ணாதுரை) குறிப்பிடும்படி எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. காமராசரும் காங்கிரசும் அமைதி. அங்கேயும் எதிர்ப்புகள் இல்லை. அது ஒரு பெரிய செய்தியே.
இருந்தாலும் ம.பொ.சி. விடவில்லை. பசல் அலி அறிக்கை தமிழ் இனத்திற்கு அநீதி இழைத்து விட்டது என்று ம.பொ.சி. கொந்தளித்தார். அதோடு அவர் நிற்கவில்லை. பெரியார், அண்ணாதுரை மற்ற மற்ற தலைவர்களையும் தனித்தனியே போய்ச் சந்தித்துப் பேசினார். எப்படியாவது தேவிகுளம், பீர்மேடு தாலுக்காகளை மீட்க வேண்டும் என்று துடியாய்த் துடித்தார்.
இந்தக் கட்டத்தில் இன்னும் ஓர் அதிர்ச்சி. அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்தவர் வர்கீஸ். இவர் கேரளாவைச் சேர்ந்தவர். தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் யாருக்கு சொந்தம் என்பது பற்றிப் பேச, தமிழக - கேரள மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களின் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது.
அப்போது வர்கீஸ், அந்தப் பகுதிகளைக் கேரளாவுக்குத் தர சம்மதம் தெரிவித்துக் கையெழுத்துப் போட்டார். ‘தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருக்கும் நீங்கள் எப்படி தமிழகத்துக்கு எதிராக கையெழுத்துப் போட முடியும்?’ என்று ஒரு நிருபர் கேட்டார். அதற்கு அவர் ‘அந்தப் பகுதிகள் இல்லாவிட்டால் கேரளா ரொம்பக் கஷ்டப்படும்’ என்றார்.
(நன்றி- கே.எஸ்.முத்துக்கிருஷ்னன்,தினக்குரல்,விக்கிபீடியா)
இதையும் படிக்கலாம்.
http://www.eegarai.net/t94039-1-11-1956
பசல் அலி ஆணையம், செங்கோட்டை தாலுக்கா முழுவதையும் தமிழகத்திற்கு வழங்கி இருந்தது. ஆனால், நடந்தது வேறு. தமிழகத்தின் அமைதியான நிலையைப் பார்த்த கேரளாவிற்கு மகிழ்ச்சி. மேல்மட்ட அரசியல் செல்வாக்கு பயன்படுத்தப்பட்டது. அந்த வகையில், வளமான காட்டுப் பகுதிகளைக் கொண்ட செங்கோட்டை தாலுக்கா கேரளத்திற்குச் சொந்தமானது. செங்கோட்டை நகரம் மட்டும் தமிழகத்திற்குச் சொந்தம் என்றும் மாற்றம் செய்யப்பட்டது. அதன் பிறகும் தமிழ்நாடு கொந்தளிக்கவில்லை. அமைதியாகவே இருந்தது.
பசல் அலி ஆணைய அறிக்கை வெளிவந்த அன்றே, பெரியாரிடம் தினத்தந்திச் செய்தியாளர் ஒரு பேட்டி நடத்தினார். தேவிகுளம், பீரிமேடு தொடர்பான செய்தியாளர் கேள்வியும் பெரியார் அளித்த பதில்களும் வருமாறு:
நிருபர்: பசல் அலி ஆணையம், தமிழ் தாலுகாக்களாக இருந்த தேவிகுளம், பீர்மேடு, நெய்யாத்தங்கரை, கொச்சின், சித்தூர் தாலுக்காக்களைக் கேரளாவுடன் சேர்த்து விட்டதே. இது பற்றி உங்கள் கருத்து என்ன?
ஈ.வெ.ரா: இதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. கேரளாவுடன் அவற்றைச் சேர்க்க வேண்டியது தான்.
நிருபர்: கவலை இல்லை என்கிறீர்கள். ஆனால், அவை தமிழ் தாலுகாக்கள் தானே.
ஈ.வெ.ரா: ஆமாம். சமீபத்தில் சென்னைக்கு சர்தார் பணிக்கர் வந்து இருந்தார். அவரை நான் சந்தித்துப் பேசினேன். அவர் சொன்னார் ‘தொழிலுக்காகத் தான் தமிழர்கள் அங்கு வந்தார்களே தவிர, நிலம் கேரளாவுக்குத்தான் சொந்தம்’ என்று பணிக்கர் சொன்னார். நானும் ’சரி’ என்று சொல்லிவிட்டேன்.
இவ்வாறு ஈ.வெ.ரா. கூறி முடித்தார். திருச்சியில் உள்ள பெரியார் மாளிகையில் இந்தப் பேட்டி நடந்தது. (தினத்தந்தி 11.10.1955)
பசல் அலி அறிக்கை வெளியானது. தி.மு.க. (அண்ணாதுரை) குறிப்பிடும்படி எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. காமராசரும் காங்கிரசும் அமைதி. அங்கேயும் எதிர்ப்புகள் இல்லை. அது ஒரு பெரிய செய்தியே.
இருந்தாலும் ம.பொ.சி. விடவில்லை. பசல் அலி அறிக்கை தமிழ் இனத்திற்கு அநீதி இழைத்து விட்டது என்று ம.பொ.சி. கொந்தளித்தார். அதோடு அவர் நிற்கவில்லை. பெரியார், அண்ணாதுரை மற்ற மற்ற தலைவர்களையும் தனித்தனியே போய்ச் சந்தித்துப் பேசினார். எப்படியாவது தேவிகுளம், பீர்மேடு தாலுக்காகளை மீட்க வேண்டும் என்று துடியாய்த் துடித்தார்.
இந்தக் கட்டத்தில் இன்னும் ஓர் அதிர்ச்சி. அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்தவர் வர்கீஸ். இவர் கேரளாவைச் சேர்ந்தவர். தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் யாருக்கு சொந்தம் என்பது பற்றிப் பேச, தமிழக - கேரள மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களின் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது.
அப்போது வர்கீஸ், அந்தப் பகுதிகளைக் கேரளாவுக்குத் தர சம்மதம் தெரிவித்துக் கையெழுத்துப் போட்டார். ‘தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருக்கும் நீங்கள் எப்படி தமிழகத்துக்கு எதிராக கையெழுத்துப் போட முடியும்?’ என்று ஒரு நிருபர் கேட்டார். அதற்கு அவர் ‘அந்தப் பகுதிகள் இல்லாவிட்டால் கேரளா ரொம்பக் கஷ்டப்படும்’ என்றார்.
(நன்றி- கே.எஸ்.முத்துக்கிருஷ்னன்,தினக்குரல்,விக்கிபீடியா)
இதையும் படிக்கலாம்.
http://www.eegarai.net/t94039-1-11-1956
Re: சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம் செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். பகுதி - 2
#1223289- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010
இந்தியன் ஹிஸ்டரி , பிரிட்டிஷ் ஹிஸ்டரி என்று இளங்கலை வகுப்பில் படிப்பார்கள் .
அதே போல் , மெட்ராஸ் ஹிஸ்டரி என்று இதையும் ஒரு பாடமாக சேர்க்கலாம் .
நல்ல தகவல்கள் . என்ன செய்யமுடியும் இப்போது ?
ரமணியன்
அதே போல் , மெட்ராஸ் ஹிஸ்டரி என்று இதையும் ஒரு பாடமாக சேர்க்கலாம் .
நல்ல தகவல்கள் . என்ன செய்யமுடியும் இப்போது ?
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம் செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். பகுதி - 2
#1223296- GuestGuest
எதுவும் செய்ய முடியாது ஐயா. வாக்களிக்கும் போது, சலுகைகள்,இலவசங்களை நினைவில் கொள்ளாது,
இனியாவது நல்லவர்களை இனம் கண்டு தெரிவு செய்யலாம்.
இனியாவது நல்லவர்களை இனம் கண்டு தெரிவு செய்யலாம்.
Re: சுதந்திரத்திற்குப் பின் - தமிழக வரலாறு. நாம் செய்த தவறுகளை எண்ணிப் பார்க்க ஒரு சந்தர்ப்பம். பகுதி - 2
#0- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|