புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_c10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_m10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_c10 
96 Posts - 49%
heezulia
அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_c10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_m10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_c10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_m10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_c10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_m10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_c10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_m10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_c10 
7 Posts - 4%
prajai
அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_c10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_m10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_c10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_m10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_c10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_m10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_c10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_m10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
cordiac
அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_c10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_m10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_c10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_m10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_c10 
223 Posts - 52%
heezulia
அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_c10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_m10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_c10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_m10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_c10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_m10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_c10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_m10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_c10 
16 Posts - 4%
prajai
அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_c10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_m10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_c10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_m10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_c10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_m10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_c10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_m10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_c10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_m10அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம் - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Sep 24, 2016 12:27 pm

First topic message reminder :

ஸ்ரீ குருவே நம:
அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம்
(வடலூர் இராமலிங்க வள்ளலார் வழங்கிய திரு அருட்பா - அருட்பெருஞ்ஜோதி அகவல்)

வடலூர் அருட்பிரகாச இராமலிங்க வள்ளலார் – மானுட சமயங்களைக் கடந்த ‘சத்’ நெறியாளர். அவர் உலக மக்களுக்குக் கண்பிக்க விழைந்தது  ஒளியாகிய அறிவே வடிவான பரம்பொருள் –  உலக ஜீவராசிகள் அனைத்தும் அறிவைக் கொண்டு வாழ்தலால் அது சமயப் பொதுமை .ஆகையால் அருட்பா அகவல்
ஈகரையில் இலக்கியப் பகுதியில் பதிவிடம் காண்கின்றது.  

தேமதுரத் தமிழில் பரம்பொருளை அழைத்து - வாழ்த்தி மகிழும்  வடலூர்  அருட்பிரகாச இராமலிங்க வள்ளலார் அருளிச்செய்துள்ள “திரு அருட்பா - அருட்பெருஞ்ஜோதி அகவல்”  , உண்மையும் - குழப்பம் இல்லாததும் - உயர்ந்த தத்துவங்களைக் கொண்டதுமான  அழகிய  கருத்துக்களாலாகும் அற்புத மெய்ஞானத் தெளிவு.  அதன் முழு விளக்கத்தையும் எளிய தமிழில் சிக்கல் இல்லாமல் அறிவுப் பூர்வமாக அறிந்து மகிழ்தலே இந்த ‘அருட்பாவிற்குப் பொருட்பார்ப்போம்’ பகுதி நமது ஈகரை வலைதளத்தில் உலகத் தமிழ் உறவுகளுக்காக பதிகின்றோம்.

யாம் பெற்ற இன்பம் முதலில் நம் தமிழ் உறவுகள் பெறட்டும். பின்பு உலக மொழிகளில் பெயர்க்கப்பட்டு இவ்வையகமும் பெறட்டும்.

“அருட்பெருஞ்ஜோதி” என்றால் ,  உலகில் வாழும் எந்த உயிர்களிடத்தும் தனிப்பட்ட விருப்பு – வெறுப்பு என்னும் தன்மை இல்லாமலும் ,அவைகளிடம் இருந்து எவ்வித பிரதிபலன் என்னும் கைம்மாறு கருதாமலும், எல்லா உயிர்களிடத்தும் இயல்பாகவே அளவிட முடியாத இரக்க அன்பு பூண்டு அவைகள் ஒவ்வொன்றினிடத்தும் தத்தம் அறிவு என்னும் ஒளியாகத் திகழும் பரம்பொருள் என்று பொருள்.

“அகவல்” என்றால்  அழைத்தல், கூவுதல்; மயிலின்குரல்; இசைத்தல்; பாடுதல்; கூத்து; கூத்தாடல்; ஆசிரியப்பாவுக்குரியஓசை; ஆசிரியப்பா என்று பொருள்.

திரு அருட்பா - அருட்பெருஞ்ஜோதி அகவல் – 1596 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் பரம்பொருளை அழைத்தல் என்னும் பொருளது.

வடலூரை அடுத்த மேட்டுக்குப்பம் என்னும் பதியில் உள்ள திருமாளிகையில் ஒரே இரவில் வள்ளலாரால்  எழுதி நமக்காக வழங்கப்பட்டதாக சொல்லப்படுவது.

யோகமும் தவமும் கூடிய மெய்ஞான நூற்பாக்கள் இவை.

நாள் ஒன்றுக்கு நான்கு அடிகளாக அறிந்து கொள்ளலாம்.

உருவமற்ற பரம்பொருளோடு கலந்து அதில் தானும் கரைந்து போகும் வள்ளலாரின் சீர்மையும் சிறப்பும் யாவரையும் நெகிழ வைப்பன.

இனி திருவருட்பா – அருட்பெருஞ்ஜோதி அகவல் :

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 2
அருசிவ நெறிசார் அருட்சிவ நிலைவாழ்
அருட்சிவ பதியாம் அருட்பெருஞ்ஜோதி 4

பதப் பொருள் :

அருள் -  தொடர்பு  பற்றாதும் கைம்மாறு கருதாதும்  எல்லா உயிர்களிடத்தும் இயல்பாகச் செல்லும் இரக்க அன்பு; தயை; கருணை.
பெரும் – அளவிட முடியாத
ஜோதி – சோதி – ஒளி; ஞானம்; பரம்பொருள்
சிவம் - மங்களம்; உயர்வு; களிப்பு; நன்மை; முத்தி; பரம்பொருளின்அருவுருநிலை.
நெறி – மார்க்கம்; வழி; ஒழுங்கு.
சார்தல் - பொருந்தியிருத்தல்; கலந்து இருத்தல் ; ஒத்து இருத்தல்.
நிலை – உறுதியாய் நிலைத்து இருத்தல்.
வாழ்தல் - இருத்தல்; செழித்திருத்தல்; விதிப்படிஒழுகுதல்.
பதி - மூத்தோன்; குரு; பரம்பொருள்.

பதவுரை :

அருட்பெருஞ்ஜோதி  
- உலகில் வாழும் எந்த உயிர்களிடத்தும் தனிப்பட்ட விருப்பு – வெறுப்பு என்னும் தன்மை இல்லாமலும் ,அவைகளிடம் இருந்து எவ்வித பிரதிபலன் என்னும் கைம்மாறு கருதாமலும், எல்லா உயிர்களிடத்தும் இயல்பாகவே அளவிட முடியாத இரக்க அன்பு பூண்டு அவைகள் ஒவ்வொன்றினிடத்தும் தத்தம் அறிவு என்னும் ஒளியாகத் திகழும் பரம்பொருளே !

அருசிவ நெறிசார்
- நீ  யாவைக்கும் இரக்கங் காட்டுதல் என்னும் உயர்வு உடையவனாய் எக்காலத்திலும்  இருக்கிறாய்.

அருட்சிவ நிலைவாழ்
- அதுபோலவே நீ  யாவைக்கும் கருணையுடன் நன்மையைக் கொடுப்பதில் எக்காலத்திலும் உறுதியாய் நிலைத்து இருக்கிறாய்.

அருட்சிவ பதியாம்
- அப்படிப்பட்ட நீயே  தயையின் இருப்பிடமாக  உலகம் யாவற்றிற்கும் ஆதியாகவும் விளங்குகின்றாய்.

தெளிவுரை:

இப்பாடலில் உயர்திணை என்னும் உயரிய நிலையில் வாழும் மனிதனின்:

சிறுமூளையின் இயக்கமாகும் மனத்தில் அறிவாக விளங்கும் பரம்பொருளை ஒருமுறை அருட்பெருஞ்ஜோதி என்றும்,  

பெரு மூளையின் இயக்கமாகும் புத்தியில் அறிவாக விளங்கும் பரம்பொருளை  ஒருமுறை அருட்பெருஞ்ஜோதி என்றும்,

முகுளத்தின் இயக்கமாகும் சித்தத்தில் அறிவாக விளங்கும் பரம்பொருளை  ஒருமுறை அருட்பெருஞ்ஜோதி என்று மூன்று முறையும் ,  

மேலும் அஃறிணை உயிர்களாகும் ஏனைய  உயிர்களிடத்தில் அறிவாக  விளங்கும் பரம்பொருளை  அருட்பெருஞ்ஜோதி என்று மீண்டும் ஒருமுறையுமாக  மொத்தம் நான்கு முறை  பரம்பொருள் ,  அருட்பெருஞ்ஜோதி என்று விளிக்கப்பட்டுள்ளது.

உலகில் வாழும் எந்த உயிர்களிடத்தும் தனிப்பட்ட விருப்பு – வெறுப்பு என்னும் தன்மை இல்லாமலும் , அவைகளிடம் இருந்து எவ்வித பிரதிபலன் என்னும் கைம்மாறு கருதாமலும், எல்லா உயிர்களிடத்தும் இயல்பாகவே அளவிட முடியாத இரக்க அன்பு பூண்டு அவைகள் ஒவ்வொன்றினிடத்தும் தத்தம் அறிவு என்னும் ஒளியாகத் திகழும் பரம்பொருளே !

நீ  யாவைக்கும் இரக்கங் காட்டுதல் என்னும் உயர்வு உடையதாய் எக்காலத்திலும்  இருக்கிறாய். அதுபோலவே நீ  யாவைக்கும் கருணையுடன் நன்மையைக் கொடுப்பதில் எக்காலத்திலும் உறுதியாய் நிலைத்து இருக்கிறாய்.

அப்படிப்பட்ட நீயே  தயையின் இருப்பிடமாக  உலகம் யாவற்றிற்கும் ஆதியாகவும் விளங்குகின்றாய்.



+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Thu Oct 13, 2016 12:50 pm


அறிவோம் அருட்பெருஞ்ஜோதி அகவல்
(வடலூர் இராமலிங்க வள்ளலார் வழங்கிய திரு அருட்பா)

ஔவியம் ஆதிஓர் ஆறும் தவிர்த்தபேர்
அவ்வியல் வழுத்தும் அருட்பெருஞ் ஜோதி 26

திருநிலைத் தனிவெளி சிவவெளி எனும் ஓர்
அருள்வெளிப் பதி வளர் அருட்பெருஞ் ஜோதி 28

பதப் பொருள் :

ஔவியம் – அழுக்காறு; பொறாமை; கோபம்.
ஆதி –முதற்கொண்டு
ஓர் ஆறும் – அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல், கொலை, களவு ஆகிய ஆறும்
இயல்- ஒழுக்கம்,
வழுத்து –போற்றுதல், துதித்தல்; வணங்குதல்.
திரு – தெய்வத்தன்மை .
நிலை- குணம்; இடம்;உறுதி;தன்மை.
தனி - ஒப்பின்மை
வெளி- வெட்டவெளி; தூய்மை; மேற்பார்வைக்குக்காணும்காட்சி.; பகிரங்கம்.
சிவம் – அன்பு;மங்களம்; ஆனந்தம்
அருள்- எல்லா உயிர்களிடத்தும் இயல்பாகவே அளவிட முடியாத இரக்கமுடன் செலுத்தும் அன்பு.
பதி – இடம்.
அருட்பெருஞ்ஜோதி – உலகில் வாழும் எந்த உயிர்களிடத்தும் தனிப்பட்ட விருப்பு – வெறுப்பு என்னும் தன்மை இல்லாமலும் , அவைகளிடம் இருந்து எவ்வித பிரதிபலன் என்னும் கைம்மாறு கருதாமலும், எல்லா உயிர்களிடத்தும் இயல்பாகவே அளவிட முடியாத இரக்க அன்பு பூண்டு அவைகள் ஒவ்வொன்றினிடத்தும் தத்தம் அறிவு என்னும் ஒளியாகத் திகழும் பரம்பொருளே !

பதவுரை :

ஔவியம் ஆதிஓர் ஆறும் தவிர்த்தபேர்- அழுக்காறு முதலாகிய அவா, வெகுளி, இன்னாச்சொல், கொலை, களவு ஆகிய ஆறு நற்குணம் அல்லாதவைகளை விலக்கி நன்நெறியில் வாழ்பவர்களின்;

அவ்வியல் வழுத்தும் அருட்பெருஞ் ஜோதி –அந்த வகையான நல்லொழுக்க நெறிகளாகவே அவர்களுக்குக் காட்சி அளிப்பதாகி விளங்குகிறாய்;

திருநிலைத் தனிவெளி சிவவெளி எனும் ஓர் - தெய்வீகத் தன்மையும் ஒப்பற்றதன்மையும் மங்களம் என்னும் ஆனந்தத்தன்மை ஆகியவை கூடி ஒரு;

அருள்வெளிப் பதிவளர் அருட்பெருஞ் ஜோதி- எல்லா உயிர்களிடத்தும் இயல்பாகவே அளவிட முடியாத இரக்கமுடைய அன்பு எப்போதும் நிலைதிருக்கும் நிலையமாகவும் நீயே விளங்குகின்றாய்.

அருட்பெருஞ்ஜோதி - உலகில் வாழும் எந்த உயிர்களிடத்தும் தனிப்பட்ட விருப்பு – வெறுப்பு என்னும் தன்மை இல்லாமலும் ,அவைகளிடம் இருந்து எவ்வித பிரதிபலன் என்னும் கைம்மாறு கருதாமலும், எல்லா உயிர்களிடத்தும் இயல்பாகவே அளவிட முடியாத இரக்கமுடன் அன்பு பூண்டு அவைகள் ஒவ்வொன்றினிடத்தும் தத்தம் அறிவு என்னும் ஒளியாகத் திகழும் பரம்பொருளே

தெளிவுரை:

உலகில் வாழும் எந்த உயிர்களிடத்தும் தனிப்பட்ட விருப்பு – வெறுப்பு என்னும் தன்மை இல்லாமலும் , அவைகளிடம் இருந்து எவ்வித பிரதிபலன் என்னும் கைம்மாறு கருதாமலும், எல்லா உயிர்களிடத்தும் இயல்பாகவே அளவிட முடியாத இரக்கமுடன் அன்பு பூண்டு அவைகள் ஒவ்வொன்றினிடத்தும் தத்தம் அறிவு என்னும் ஒளியாகத் திகழும் பரம்பொருளே!

அழுக்காறு முதலாகிய அவா, வெகுளி, இன்னாச்சொல், கொலை, களவு ஆகிய ஆறு நற்குணம் அல்லாதவைகளை விலக்கி நன்நெறியில் வாழ்பவர்களுக்கு அந்த வகையான நல்லொழுக்க நெறிகளாகவே நீ காட்சி அளிப்பதாகி விளங்குகிறாய்;

தெய்வீகத் தன்மை, எதனிடமும் ஒப்பிடமுடியாத வகையில் ஒப்பற்றதன்மை, மங்களம் என்னும் ஆனந்தத்தன்மை ஆகியவை கூடியதாய் எல்லா உயிர்களிடத்தும் இயல்பாகவே அளவிட முடியாத இரக்கமுடைய அன்பு எப்போதும் நிலைதிருக்கும் நிலையமாகவும் நீயே விளங்குகின்றாய்.
(இப்படிப்பட்ட உன்னை என்னவென்று வியப்பேன் ! ).

கருத்துரை :

உலகில் வாழும் உயிர்கள் ஒவ்வொன்றினிடத்தும் தத்தம் அறிவு என்னும் ஒளியாகப் பரம்பொருள் திகழ்கிறது. அதுவே:
- அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல், கொலை, களவு ஆகிய ஆறு தீய குணங்களை விலக்கி நன்நெறியில் வாழ்பவர்களுக்கு அந்த வகையான நல்லொழுக்க நெறிகளாகவே காட்சி அளிப்பதாக விளங்குகிறது.

- தெய்வீகத் தன்மை, எதனிடமும் ஒப்பிடமுடியாத வகையில் ஒப்பற்றதன்மை, மங்களம் என்னும் ஆனந்தத்தன்மை ஆகியவை கூடியதாய் எல்லா உயிர்களிடத்தும் இயல்பாகவே அளவிட முடியாத இரக்கமுடைய அன்பு எப்போதும் நிலைதிருக்கும் நிலையமாகவும் விளங்குகிறது
என்பது கருத்து.





+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Oct 14, 2016 5:29 pm

அறிவோம் அருட்பெருஞ்ஜோதி அகவல்
(வடலூர் இராமலிங்க வள்ளலார் வழங்கிய திரு அருட்பா)

சுத்தசன் மார்க்க சுகம் தனிவெளியெனும்
அத்தகைச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி 30
சுத்தமெய்ஞ் ஞான சுக உதய வெளியெனும்
அத்து விதச்சபை யருட்பெருஞ் ஜோதி 32

பதப் பொருள் :

சுத்தம் – தூய்மை; உண்மை; முழுமை; பிழையின்மை; கலப்பின்மை; கபடமின்மை; குற்றமற்றது;
சத்மார்க்கம் – மெய்பொருளைக் காணும் வழி; நன்னெறி; ஞானநெறி.
தனி - ஒப்பின்மை
வெளி- வெட்டவெளி; தூய்மை; மேற்பார்வைக்குக்காணும்காட்சி; பகிரங்கம்
அருட்பெருஞ்ஜோதி – உலகில் வாழும் எந்த உயிர்களிடத்தும் தனிப்பட்ட விருப்பு – வெறுப்பு என்னும் தன்மை இல்லாமலும் , அவைகளிடம் இருந்து எவ்வித பிரதிபலன் என்னும் கைம்மாறு கருதாமலும், எல்லா உயிர்களிடத்தும் இயல்பாகவே அளவிட முடியாத இரக்க அன்பு பூண்டு அவைகள் ஒவ்வொன்றினிடத்தும் தத்தம் அறிவு என்னும் ஒளியாகத் திகழும் பரம்பொருளே !

பதவுரை :

சுத்த சத் மார்க்க சுகம் தனிவெளியெனும் – நிம்மதியைத் தரவல்லதும் ஒப்பில்லாததும் பகிரங்க காட்சியாக அனைவருக்கும் அமைந்திருப்பதும் முழுமையான மெய்ப்பொருளைக் காணும் ஞானநெறியாவதும் நீயே.
அத்தகைச் சித் சபை - அவ்வாறான ஞானநெறி ஒழுகலாறுகளினால் திகழும் மெய்ஞானிகளின் சேர்க்கையாவதும் நீயே.
சுத்தமெய்ஞ் ஞான சுக உதய வெளியெனும் – முழுமையான மெய்ஞானத்தெளிவால் ஏற்படும் ஆனந்தமாகிய வெளிப்பாடும் நீயே.
அத்து விதச்சபை யருட்பெருஞ் ஜோதி – அத்வைதம் என்னும் உன்னோடு நான் பிரிவற்று இருக்கும் சேர்க்கையை அளிப்பதும் நீயே .
அருட்பெருஞ்ஜோதி - உலகில் வாழும் எந்த உயிர்களிடத்தும் தனிப்பட்ட விருப்பு – வெறுப்பு என்னும் தன்மை இல்லாமலும் ,அவைகளிடம் இருந்து எவ்வித பிரதிபலன் என்னும் கைம்மாறு கருதாமலும், எல்லா உயிர்களிடத்தும் இயல்பாகவே அளவிட முடியாத இரக்கமுடன் அன்பு பூண்டு அவைகள் ஒவ்வொன்றினிடத்தும் தத்தம் அறிவு என்னும் ஒளியாகத் திகழும் பரம்பொருளே

தெளிவுரை:

உலகில் வாழும் உயிர்கள் ஒவ்வொன்றினிடத்தும் தத்தம் அறிவு என்னும் ஒளியாக விளங்கும் பரம்பொருளே !
நிம்மதியைத் தரவல்லதும் ஒப்பில்லாததும் பகிரங்க காட்சியாக அனைவருக்கும் அமைந்திருப்பதும் முழுமையான மெய்ப்பொருளைக் காணும் ஞானநெறியாவதும் நீயே.
அவ்வாறான ஞானநெறி ஒழுகலாறுகளினால் திகழும் மெய்ஞானிகளின் சேர்க்கையாவதும் நீயே.
முழுமையான மெய்ஞானத்தெளிவால் ஏற்படும் ஆனந்தமாகிய வெளிப்பாடும் நீயே.
தான்வேறு உலக இருப்புகள் வேறு என்று பிரிவு படாத அத்வைதம் என்னும் உன்னோடு நான் பிரிவற்று இருக்கும் சேர்க்கையை அளிப்பதும் நீயே
(இப்படிப்பட்ட உன்னை என்னவென்று வியப்பேன் ! ).

கருத்துரை :

உலகில் வாழும் உயிர்கள் ஒவ்வொன்றினிடத்தும் தத்தம் அறிவு என்னும் ஒளியாகப் பரம்பொருள் திகழ்கிறது. அதுவே:
நிம்மதியைத் தரவல்லது. ஒப்பில்லாத பகிரங்க காட்சியாக அனைவருக்கும்அமைந்திருப்பது.
அதனை அடையும் ஞானநெறியும் ஆவது.அவ்வாறான ஞானநெறி ஒழுகலாறுகளினால் திகழும் மெய்ஞானிகளின் சேர்க்கையாவது. முழுமையான மெய்ஞானத்தெளிவால் ஏற்படும் ஆனந்தமாகிய வெளிப்பாடும் ஆவது.
தான்வேறு உலக இருப்புகள் வேறு என்று பிரிவு படாத அத்வைதம் என்னும் தன்னோடு உலக உயிர்கள் பிரிவற்று இருக்கும் சேர்க்கையையும் அளிப்பது என்பது கருத்து.




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Oct 28, 2016 5:04 am

அறிவோம் அருட்பெருஞ்ஜோதி அகவல்
(வடலூர் இராமலிங்க வள்ளலார் வழங்கிய திரு அருட்பா)

அறிவோம் அருட்பெருஞ்ஜோதி அகவல்
(வடலூர் இராமலிங்க வள்ளலார் வழங்கிய திரு அருட்பா)

தூய கலா அந்த சுகந்தரு வெளியெனும்
ஆய சிற்சபையில் அருட்பெருஞ் ஜோதி 34
ஞான யோக அந்த நடத் திருவெளியெனும்
ஆனியில் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி 36

பதப்பொருள் -

தூய - தூய்மையான, பரிசுத்தமான.
கலா – இச்சையடக்கம்; ஆசையை அடக்கிக் கொள்ளுகை.
அந்தம் - அழகு; முடிவு; எல்லை.
சுகம் - இன்பம்; நன்மைதருவது; நல்வாழ்வு; இணக்கம்.
வெளி- வெட்டவெளி; தூய்மை; மேற்பார்வைக்குக்காணும்காட்சி; பகிரங்கம்
ஆய – ஆகிய
சிற்சபை- ஞானியர் கூட்டம்
ஞானம் – மெய்யறிவு
யோகம் – கடவுளை அகத்தான் வழிபடுகையாகிய நெறி.
நடம்- கூடுமிடம்; வழங்குதல்; பரவி இருத்தல்.
ஆனி – இரட்டை.
அருட்பெருஞ்ஜோதி – உலகில் வாழும் எந்த உயிர்களிடத்தும் தனிப்பட்ட விருப்பு – வெறுப்பு என்னும் தன்மை இல்லாமலும் , அவைகளிடம் இருந்து எவ்வித பிரதிபலன் என்னும் கைம்மாறு கருதாமலும், எல்லா உயிர்களிடத்தும் இயல்பாகவே அளவிட முடியாத இரக்க அன்பு பூண்டு அவைகள் ஒவ்வொன்றினிடத்தும் தத்தம் அறிவு என்னும் ஒளியாகத் திகழும் பரம்பொருள்.

பதவுரை –

தூய கலா அந்த சுகந்தரு வெளியெனும்- ஆசையை அடக்குதலே தூய்மையான நன்மையைத் தரும் நெறி என்று முடிவாகக் கொண்டு அனைவருக்கும் பகிரங்கமாக விளங்கும் வகையில்;

ஆய சிற்சபையில் அருட்பெருஞ் ஜோதி – வாழும் மெய்ஞானியர் கூட்டமாவதும் நீயே.
ஞான யோக அந்த நடத் திருவெளியெனும்

ஆனியில் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி - மெய்யறிவாகிய ஞானம், கடவுளை அகத்தால் வழிபடுகை எனும் நெறியாகும் யோகம் ஆகிய இரண்டும் கூடி சிறந்து உயர்ந்து பரவி தூய்மையாக விளங்கும் மெய்ஞானியர் எனும் யோகியர் கூட்டமாவதும் நீயே.

அருட்பெருஞ்ஜோதி – உலகில் வாழும் எந்த உயிர்களிடத்தும் தனிப்பட்ட விருப்பு – வெறுப்பு என்னும் தன்மை இல்லாமலும் , அவைகளிடம் இருந்து எவ்வித பிரதிபலன் என்னும் கைம்மாறு கருதாமலும், எல்லா உயிர்களிடத்தும் இயல்பாகவே அளவிட முடியாத இரக்க அன்பு பூண்டு அவைகள் ஒவ்வொன்றினிடத்தும் தத்தம் அறிவு என்னும் ஒளியாகத் திகழும் பரம்பொருளே !

தெளிவுரை:

உலகில் வாழும் உயிர்கள் ஒவ்வொன்றினிடத்தும் தத்தம் அறிவு என்னும் ஒளியாக விளங்கும் பரம்பொருளே !
ஆசையை அடக்குதலே தூய்மையான நன்மையைத் தரும் நெறி என்று அனைவரும் பகிரங்கமாக அறியும்படி அக்கொள்கையையே முடிவாகக் கொண்டு வாழும் மெய்ஞானியர் கூட்டமாய் விளங்குவதும் நீயே.
மெய்யறிவாகிய ஞானம், கடவுளை அகத்தால் வழிபடுகை எனும் யோகம் ஆகிய இரண்டும் கூடி சிறந்து உயர்ந்து தன்னகத்தே பரவித் தூய்மையாக விளங்கும் மெய்ஞானியர் எனும் யோகியர் கூட்டமாவதும் நீயே.
(இப்படிப்பட்ட உன்னை என்னவென்று வியப்பேன் !).

கருத்துரை :

உலகில் வாழும் உயிர்கள் ஒவ்வொன்றினிடத்தும் தத்தம் அறிவு என்னும் ஒளியாகப் பரம்பொருள் திகழ்கிறது. அதுவே:
- ஆசையை அடக்குதலே தூய்மையான நன்மையைத் தரும் நெறி என்று அனைவரும் பகிரங்கமாக அறியும்படி அக்கொள்கையையே முடிவாகக் கொண்டு வாழும் மெய்ஞானியர் கூட்டமாய் விளங்குவது.
- மெய்யறிவாகிய ஞானத்துடன் கடவுளை அகத்தால் வழிபடுகை எனும் யோகம் ஆகிய இரண்டும் கூடி சிறந்து உயர்ந்து தன்னகத்தே பரவித் தூய்மையாக விளங்கும் மெய்ஞானியர் எனும் யோகியர் கூட்டமாகவும் இருக்கிறது.
அதாவது பரம்பொருள் , ஆசையை நெறிப்படுத்திய மெய்ஞானியராகவும், தத்துவ ஞானத்தோடு யோகமும் சேர்த்துக் கடைப்பிடித்து வாழும் யோகியராகவும் விளங்குகிறது. ஞானியும் யோகியும் பரம்பொருளின் வெளிப்பாடு என்பது கருத்து.




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக