புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 8:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:39 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:11 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 7:10 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:58 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 6:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 4:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 4:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 4:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 4:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 4:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 4:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 4:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» புன்னகை
by Anthony raj Today at 11:59 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:52 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:00 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:35 am

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 10:31 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 9:58 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:37 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 9:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:53 am

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 7:49 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:29 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 4:48 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 4:39 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 4:12 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 8:53 am

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:37 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_c10பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_m10பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_c10பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_m10பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_c10 
62 Posts - 34%
i6appar
பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_c10பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_m10பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_c10பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_m10பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_c10பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_m10பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_c10பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_m10பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_c10பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_m10பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_c10பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_m10பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_c10 
3 Posts - 2%
கண்ணன்
பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_c10பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_m10பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_c10பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_m10பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_c10பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_m10பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_c10பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_m10பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_c10 
62 Posts - 34%
i6appar
பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_c10பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_m10பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_c10பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_m10பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_c10பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_m10பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_c10பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_m10பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_c10பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_m10பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_c10பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_m10பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_c10 
3 Posts - 2%
கண்ணன்
பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_c10பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_m10பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_c10பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_m10பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய சோறும் வெங்காயமும் எம்.ஆர் ராதாவும்!


   
   
vasuselva
vasuselva
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 11/08/2014
https://www.youtube.com/channel/UC_lKSRxHNpAJTQlQUL4qiRw

Postvasuselva Sun Sep 18, 2016 8:35 am

எம்.ஆர். ராதா நாடக மேடைகளில் வாழ்ந்தவர். ஆனால் நிஜ வாழ்க்கையில் ஒருபோதும் நடித்திராதவர். நாடகக்காரர், பகுத்தறிவுவாதி, சினிமா நடிகர், பெரியாரின் தொண்டர், அதிரடிப் பேச்சாளார், குடும்பத் தலைவர், சிறைச்சாலைக் கைதி என்று அவருடைய வாழ்க்கையில் ஏகப்பட்ட பாத்திரங்கள். ஆனால் எதிலுமே அவர் அரிதாரம் பூசியதில்லை. ராதா, ராதாவாகவே வாழ்ந்தார்.

தமிழ் நாடகத் துறைக்கு அவர் செய்திருக்கும் பங்களிப்பு மிகப்பெரியது. தமிழகத்தில் நாடகங்களின் பொற்காலத்தில் ‘நாடக உலக சூப்பர் ஸ்டாராக’ வலம் வந்தவர் எம்.ஆர். ராதாவே. அவரது நாடக உலக வாழ்க்கையிலிருந்து சில பகுதிகள் இங்கே.

'பதிபக்தி' என்ற நாடகத்தில் எம்.ஆர். ராதாவுக்கு சி.ஐ.டி வேடம். ஒரு மோட்டார் சைக்கிளிலேயே மேடைக்கு வருவார் ராதா. மக்கள் மேல் பாய்ந்துவிடுவதுபோல மேடையின் ஓரம்வரை வேகமாக ஓட்டிக்கொண்டு வந்து, லாகவமாக பிரேக் பிடித்து அரை வட்டமடித்து நிற்பார். கைதட்டல், விசில்கள் பறக்கும். இப்படிச் சின்னச் சின்ன விஷயங்களால் ராதா பிரபலமடையத் தொடங்கினார். ராதா மேடையேறினாலே மக்களின் ஆரவாரம் அடங்க வெகு நேரம் பிடித்தது.



நாடகத்தில் போலீஸ் வருவதுபோல காட்சி இருக்கும். அப்போது ராதா உடன் நடிப்பவர் பயப்படுவதுபோல நடிப்பார். உடனே ராதா வசனம் பேசுவார். 'ஏன்டா பயப்படுறே? போலீஸ்னா என்ன பெரிய கொம்பா? (ரசிகர்களைப் பார்த்து கைநீட்டி) எல்லாம் ஓசி டிக்கெட்ல முன்னாடி உட்கார்ந்திருக்கான் பாரு. காசு கொடுத்தவன்லாம் பின்னாடி உட்கார்ந்திருக்கான்.' ராதாவின் இந்த நக்கல் தாங்காமல், ஓசி டிக்கெட்டில் வந்தவர்கள் எழுந்து செல்வதும் உண்டு.

சேலத்தில் ஓரியண்டல் தியேட்டர்ஸ் நடத்திய ‘இழந்த காதல்' நாடகப் போஸ்டர்களில் 'எம்.ஆர். ராதாவின் சவுக்கடி ஸீனைக் காணத் தவறாதீர்கள்' என்று விளம்பரப்படுத்தப்பட்டது. அந்தக் காட்சி அவ்வளவு பிரபலம். காரணம், நாடகம் என்றாலே நடிகர்கள் மேடையிலே நின்றபடி ரசிகர்களைப் பார்த்துத்தான் பேச வேண்டும். முதுகைக் காட்டியபடி ஒரு வசனம்கூட பேசக்கூடாதென்பதே நாடக இலக்கணம். ஆனால் 'இழந்த காதல்' இறுதிக் காட்சியில் ராதா, கதாநாயகியைப் பிடித்து நாற்காலியில் தள்ளுவார். தன் இரண்டு கைகளையும் நாற்காலியில் ஊன்றியபடி கதாநாயகியிடம் பேச ஆரம்பிப்பார். பதினைந்து நிமிட வசனம். பதினைந்து நிமிடங்களும் ரசிகர்கள் அவரது முதுகைத்தான் பார்க்க முடியும். முகபாவனைகளை, கைகளின் அசைவினைக் காண முடியாது. இருந்தாலும் ரசிகர்கள் அதனை ஆரவாரமாக ரசித்தார்கள். சுருண்டு கிடக்கும் அவரது தலைமுடிகூட அங்கே நடித்துக் கொண்டிருந்தது.

நாடகம் தொடங்குவதற்கு முன்பு பூஜை செய்வது என்பது பொதுவான பழக்கம். ஆனால் ராதா, தமிழ்த்தாய் வாழ்த்துபாடி தொடங்குவார். ராதா நாடகத்துறைக்குள் நுழைந்த காலத்தில் மைக் எல்லாம் கிடையாது. கடைசி வரிசையில் உட்கார்ந்திருக்கும் ரசிகனுக்கும் வசனம் கேட்கும் வகையில் தொண்டை கிழிய கத்தித்தான் பேச வேண்டியதிருந்தது. எனவே ஒவ்வொரு இரவும் நாடகம் முடிந்தபிறகும் ராதா, மேக்கப் அறைக்குள் வருவார்.

ஒரு பெரிய குண்டா அவருக்காகக் காத்திருக்கும். வாயை மட்டும் நீரால் துடைத்துவிட்டு உட்காருவார். குண்டாவில் பாதி அளவுக்குப் பழைய சோறு, மீதி அளவுக்குச் சிறு வெங்காயம் நிரம்பியிருக்கும். அவ்வளவையும் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார். மற்றவர்கள் என்றால் நள்ளிரவில் பழையதும் சின்ன வெங்காயமும் சாப்பிட்டால் ஜன்னி வந்துவிடும். ஆனால் மேடையில் தன் சக்தியை எல்லாம் பிரயோகித்து நடித்துவிட்டு வந்த பின் அந்த உணவு ராதாவுக்குத் தேவையானதாகவே இருந்தது. அவரது குழுவிலிருந்த சிறுவர்களுக்கு, ராதாவுக்காக வெங்காயம் உரிப்பதுவும் முக்கியமான வேலையாக இருந்தது.

நாடகத்துக்கான வசனங்களை ராதா உள்வாங்கிக் கொள்ளும் விதமே அலாதியானது. ‘அறிவு, ஆரம்பிக்கலாமா?' கேட்டுவிட்டு நாற்காலியில் சாய்ந்து கண்களை மூடி உட்கார்ந்து கொள்ளுவார் ராதா. அவரது குழுவிலிருந்த அறிவானந்தம் என்ற சிறுவன் வசனங்களை வாசிக்க ஆரம்பிப்பான். ராதாவிடமிருந்து பதிலோ, அசைவோ இருக்காது. அவர் தூங்கி விட்டாரோ என்று நினைத்து அறிவு நிறுத்துவான்.

‘ம்..' என்று குரல் கொடுப்பார் ராதா. இப்படி வசனங்களை தொடர்ந்து மூன்று நாள்கள் வாசித்தால் போதும். அதற்குப் பின் ராதாவுக்குப் பாடம் தேவையில்லை. அவரது ஞாபக சக்தி அந்த அளவுக்கு அபாரமானது.

ராதா அரங்கேற்றியதில் அதிக சர்ச்சைகளை உண்டாக்கிய நாடகம் ராமாயணம். ராதாவுக்காக நாடகத் தடை மசோதாவை சட்டமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றுமளவு பிரச்னை வலுத்தது. அதை மீறியும் ராமாயணத்தை பலமுறை வெற்றிகரமாக அரங்கேற்றினார் ராதா. மதுரையில் அன்று மாலை ராமாயணம் நாடகம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நாடகத்தை எப்படி நடத்துகிறாய் என்று பார்க்கிறேன் என்று பகிரங்க மிரட்டல் விடுத்தார் அணுகுண்டு அய்யாவு என்பவர்.

நாடகம் ஆரம்பமானது. அரங்கத்தினுள் சில ரவுடிகளுடன் புகுந்து கலகம் செய்ய ஆரம்பித்தார் அய்யாவு. ராதா, தன் குழுவிலுள்ள பெண்களையும் சிறுவர்களையும் மட்டும் பத்திரமாக வண்டியேற்றி அங்கிருந்து அனுப்பினார். பின்னர் கோதாவில் குதித்தார்.

‘டேய் அந்த ரிவால்வரை எடுடா. குண்டு ஃபுல்லா இருக்கா? ஆறு குண்டு ஆறு பேரு. சுட்டுத் தள்ளிடறேன்' - அரங்கம் அதிரக் கத்தினார். யாருக்கும் ரிவால்வர் இருக்கிறதா என்று கூடத் தெரியாது. ஆனால் அய்யாவு கும்பல் பயந்து சிதறி ஓடியது.

அன்றைய வசூல் தொகை மூவாயிரம் ரூபாய்.

தனது நாடகக் குழுவினருக்கு வாரத்தில் மூன்று நாள்களாவது அசைவம் போட வேண்டுமென்பது ராதாவின் கட்டளை. நேரம் கிடைக்கும்போதேல்லாம் குழுவினருக்கு மட்டன் சமைப்பதில் ஆர்வம் காட்டுவார் ராதா. அவர் சமையலில் எம்டன். தன் குழுவினருக்கு தானே உணவு பரிமாறுவதிலும் ஆர்வம் காட்டுவார். அவரது குழுவில் சுத்த சைவ பார்ட்டிகளும் இருந்தார்கள். அவர்களுக்குத் தனிப்பந்தி நடைபெறும். அப்போது ராதா அடிக்கும் கமெண்ட், ‘அவங்க எல்லாம் தீண்டத்தகாதவங்க. தனியா உட்கார்ந்து சாப்பிடட்டும்.'

தன்னுடைய எம்.ஆர். ராதா நாடக மன்றத்திலிருந்து யாராவது விலகிச் செல்லும்போது, அவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத பெருந்தொகையை கொடுத்து வாழ்த்தி வழியனுப்புவது ராதாவின் பழக்கமாக இருந்தது.

காளிமார்க் சோடா கம்பெனி நடத்தி வந்த பரமசிவம், ‘எம்.ஆர். ராதா சோடா' என்று ஒரு தனி பிராண்ட் போட்டு விற்குமளவுக்கு தமிழ்நாடெங்கும் நாடகங்கள் மூலம் ராதாவின் புகழ் பரவியது. குறிப்பாக ரத்தக் கண்ணீர். தன் வாழ்நாளில் மட்டும் ராதா, புதிய புதிய காட்சிகளுடன், புத்தம் புதிய வசனங்களுடன் கிட்டத்தட்ட ஐயாயிரம் முறைக்கும் மேல் 'ரத்தக் கண்ணீர்' நாடகத்தை மேடையேற்றியிருக்கிறார்.

அந்தக் காலத்தில் நவாப் ராஜமாணிக்கம் கம்பெனி நாடக செட்டுகளுக்காகவே மக்கள் பார்க்க வருவார்கள். பெரிய பாம்பு, பிளக்கும் கடல், சிருங்கார அரண்மனை, பிரம்மாண்ட தேவலோகம் என்று அசர வைத்தார்கள் மக்களை. ஆனால் ராதா அதற்கு நேர் எதிர். நீலநிறப் படுதா, அதில் காடு என்றிருக்கும். காட்சி மாறும். சிவப்பு நிற படுதா, அதில் வீடு என்று இருக்கும். அடுத்து பச்சை நிறப் படுதா. அதில் பொது இடம் என்றிருக்கும். மற்றபடி எந்த செட்டிங்கும் கிடையாது. மக்கள் படுதாவைப் பார்த்து எங்கு காட்சி நடக்கிறது என்று புரிந்துகொண்டு ரசிப்பார்கள்.

‘மக்கள் என் நடிப்பைத்தான் பார்க்க வர்றாங்களே தவிர செட்டிங்கை இல்லே' என்பார் ராதா.

1979, செப்டெம்பர் 17-ல் திராவிடர் கழகத்தினர் பெரியாரின் நூற்றாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்த சமயத்தில் திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் மஞ்சள் காமாலை முற்றி உயிரை இழந்தார் எம்.ஆர். ராதா.

திரையுலகத்தினர், அரசியல் பிரமுகர்கள், நாடகக் கலைஞர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் இறுதி மரியாதை செலுத்தினார்கள். சங்கிலியாண்டபுரம் வீட்டிலிருந்து ராதாவின் இறுதி ஊர்வலம் காவேரிக்கரை ஓயாமாரி இடுகாடு நோக்கிக் கிளம்பியது. வழிநெடுக சுவர்களில் அன்று நடைபெறவிருந்த 'ரத்தக்கண்ணீர்' நாடகத்துக்கான போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 18, 2016 10:29 am

vasuselva அவர்களே ,
அறிமுகப்பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள கூறியிருந்தோமே.

தங்கள் கவனத்திற்கு மீண்டும் கொண்டுவருகிறோம் . அறிமுகப்படுத்திக் கொள்ளவும் .

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Sep 20, 2016 4:34 pm

பழைய சோறும் வெங்காயமும் பயன்படுத்தியவருக்கேத் தெரியும் அதன் அருமையும் பெருமையும். நன்று நன்று அன்பரே.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக