புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_c10.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_m10.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_c10 
107 Posts - 49%
heezulia
.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_c10.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_m10.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_c10.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_m10.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_c10.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_m10.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_c10.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_m10.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_c10 
7 Posts - 3%
prajai
.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_c10.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_m10.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_c10.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_m10.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_c10.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_m10.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_c10.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_m10.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
cordiac
.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_c10.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_m10.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_c10.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_m10.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_c10 
234 Posts - 52%
heezulia
.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_c10.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_m10.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_c10.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_m10.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_c10.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_m10.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_c10.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_m10.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_c10 
18 Posts - 4%
prajai
.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_c10.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_m10.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Barushree
.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_c10.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_m10.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_c10.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_m10.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_c10.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_m10.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_c10.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_m10.  திருமந்திரம்  என்னும் தேன் - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

. திருமந்திரம் என்னும் தேன்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Sep 16, 2016 4:08 pm

First topic message reminder :

தெரிந்துகொள்வோம்  தேன் தமிழை -8 ( திருமூலர் அருளிய திருமந்திரம்)

ஓர் அறிமுகம்:

திருமந்திரம் என்னும்  நூல் தவயோகத் தந்தை திருமூலரின் படைப்பு. அந்த அற்புதம் ஒரு  யோகமும் ஞானமும் தோய்ந்த ஒரு கல்விக் கருவூலக் களஞ்சியம்.  அந்த யோகமும் ஞானமும்  பக்திநோக்கில் பார்க்கப்பட்டு நமது சைவத் திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகின்றது. அந்த அமரகாவியத்தை உலக மக்கள் அனைவருக்கும்  ஆக்கும் வகையில்  அமைக்கப்படுவதே, “தெரிந்து கொள்வோம் தேன் தமிழை -  திருமந்திரம் என்னும் தேன்” என்னும்  ஈகரை தமிழ் களஞ்சியப் பதிவு.  

திருமந்திரம் – ஒரு யோகமும் ஞானமும் நவிலும் நற்றமிழ் காவியம் என்பதே நமது நோக்கம். இந்நோக்கம் சைவ பக்திக்கு   மாறானதோ   அல்லது எதிரானதோ அல்ல. திருமந்திரம் பக்தி மார்க்கத்தைக் கூறுவது என்பது ஒருவழி – அதுவே ஞானமும் யோகமும் ஆகிறது என்பது  நமது இன்னுமொரு பார்வைப் பரிமாணமாகும்  பிறிதொரு வழி என்றே கொள்ளவேண்டும். இதனை நவில்தொரும் நூல் நயம் என்றும் கொள்ளலாம். தோண்டச் சுரக்கும் மணற்கேணிதான் நம் உலகப் பொதுமறை திருமந்திரம்- தமிழ்மறை
திருக்குறள் போலவே.

ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களின் சாரம் உபநிஷதங்கள் எனப்படும் வேதாந்தம். உபநிஷத்களின் சாரம் பிரம்ம சூத்திரம் எனப்படும் வேதாந்த சூத்திரம்( வியாசர் அருளியது) . பிரம்ம சூத்திரத்தின் சாரம் ஸ்ரீமத் பகவத் கீதை ( இதுவும் வியாசர் அருளியது) . பகவத் கீதையின் சாரம்தான் திருமந்திரம் என்னும் தேன் என்பது யோகியர் வாக்கு. இது மானுடத்திற்கு ஞானமும் யோகமும் புகட்டி மேன்மைப் படுத்தும் ஓர் அற்புதம்.


சைவ சமயத்திற்குத் திருமந்திரம் பக்தி நூலாக இருந்து சைவபக்தியை ஊட்டி வளர்க்கட்டும். கூடவே உலக மக்கள் யாவருக்கும் - ஜாதி, மதம், மொழி, இனம், நாடு மற்றும் கலாச்சரம் ஆகியனவற்றை எல்லாம் கடந்த -  அவரவர் உடம்பு, உயிர், மனம் மற்றும் ஆன்மாவை மேம்படுத்தும் யோக நூலாகவும் இருக்கட்டுமே. உலக மக்கள் யாவருக்கும் பயனளிப்பது நன்மை தானே!

உலக மானுடம் யாவையும் பிறப்பு, இறப்பு, உடம்பு, உயிர், மனம் ஆகிய ஐந்தாலும் ஒன்று படுகின்றது. அதுவே நாடு, மதம், மொழி, இனம், கலாச்சாரம் ஆகிய ஐந்தாலும் வேறுபட்டு வீணாகிறது. நாம் இந்த பதிவின் மூலம்  ஒன்றுபடும் ஐந்தையும் அறிந்துகொண்டு, அவற்றை மேன்மைப்படுத்தும் நெறியையும் திருமந்திரத்தில் கிடைக்கக் கண்டு , அவற்றை முயன்றுப் பயின்று - பழகி மேன்மையை  அடைவோம். அதன்  விளைவாக “வாழும்போதும் இன்பம் – வாழ்விற்குப் பிறகும் இன்பம்” பெறுவோம்.

மானுட உலகம் , ஒற்றுமை நீங்கி தாழ்ச்சியை அடையாமல், திருமந்திரம் புகட்டும் மானுட ஞானத்தால்- யோகத்தால், யாவரும்  ஒன்றுபடுவோம் – உயர்வடைவோம். ஆத்மஞானம் அறிந்து அனைவரும் அமரனாக ஆகுவோம்.


பரம்பொருளே ! உலக மானுடத்தை:

“ அழிவிலிருந்து அழியாமைக்கு அழைத்துச் செல் . . .

அஞ்ஞானமாகிய இருளில் இருந்து அறிவுடைமை என்னும் ஒளியைநோக்கி அழைத்துச் செல் . . .

மாயை என்னும்   மயக்கத்திலிருந்து  உண்மை  என்னும்     தெளிவிற்கு அழைத்துச் செல்  . . .”
- சாந்தோக்கிய உபநிஷத் .



+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Wed Oct 19, 2016 8:00 pm


தெரிந்துகொள்வோம் தேன் தமிழை – 1 (திருமூலரின் திருமந்திரம்)

மூன்றாம் தந்திரம் – சந்திரயோகம் - திருமந்திரம் – 856

தரணி சலங்கனல் கால்தக்க வானம்
அரணிய பானு அருந்திங்கள் அங்கி
முரணிய தாரகை முன்னிய ஒன்பான்
பிரணவ மாகும் பெருநெறி தானே

பதப்பொருள் :

தரணி – பஞ்ச பூதங்களில் ஒன்றாகும் நிலம்; பூமி.
சலம் - பஞ்ச பூதங்களில் ஒன்றாகும் நீர்.
கனல் - பஞ்ச பூதங்களில் ஒன்றாகும் நெருப்பு.
கால் - பஞ்ச பூதங்களில் ஒன்றாகும் காற்று.
தக்க வானம் - பஞ்ச பூதங்களில் ஒன்றாகத் தகுதி பொருந்திய ஆகாயம்.
அரணம் – பாதுகாப்பு.
பானு – சூரியன்.
அருந்திங்கள் – நன்மை அளிக்கும் சந்திரன்.
அங்கி –நெருப்பிற்கு அணியாகும் வெப்பம்
முரணுதல் – அதிக அளவில் பெருகிக் காணப்படுதல்.
தாரகை – நட்சத்திரங்கள்.
முன்னுதல் –முற்படுதல் .
ஒன்பான் – ஒன்பதும்.
பிரணவம் –சுத்த மாயை எனப்படும் பரம்பொருள்.
பெருநெறி - பெருமை மிக்க நன்மை பயத்தல்.

அடிதொறும் பொருளுரை:

தரணி சலங்கனல் கால்தக்க வானம்
- நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனப்படும் பஞ்ச பூதங்கள்.

அரணிய பானு அருந்திங்கள்
- உலக உயிர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் சூரியன், நன்மை அளிக்கும் சந்திரன்,
முரணிய தாரகை அங்கி முன்னிய ஒன்பான்

- எண்ணிலடங்காத நட்சத்திரங்கள் மற்றும் இவை அனைத்தையும் முதலாகக் கொண்டு உண்டாகும் வெப்பம் ஆகியன.

பிரணவ மாகும் பெருநெறி தானே
- பெருமை மிக்க நன்மை பயக்கும் சுத்த மாயை எனப்படும் பரம்பொருள்.

தெளிவுரை

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனப்படும் பஞ்ச பூதங்கள், உலக உயிர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் சூரியன், நன்மை அளிக்கும் சந்திரன், எண்ணிலடங்காத நட்சத்திரங்கள் மற்றும் இவை அனைத்தையும் முதலாகக் கொண்டு உண்டாகும் வெப்பம் ஆகியன அனைத்தும் கூடியதே பெருமை மிக்க நன்மை பயக்கும் சுத்த மாயை எனப்படும் பரம்பொருளின் தன்மைகளாவன.

விளக்கவுரை :

ஓம் என்னும் ஒரெழுத்தொரு மொழியைப் பிரணவம் என்பர் ஆன்றோர். அது ஓர் ஆதார ஒலி - சப்தம். இந்த ஒலி பிரபஞ்சத்தில் இயங்கும் அனைத்து வகையான கோள்களின் இயக்கத்தால் உண்டாவது. பிரபஞ்சம் தோன்றிய காலம் முதற்கொண்டே இவ்வொலி மாறாமல் ஒரே மாதிரியாகவே இருக்கின்றது. இந்த ஒலியானது தோற்றம், மாற்றம் , முடிவு ஆகிய அசத் தன்மையை எப்போதும் ஏற்பதில்லை.

பிரபஞ்சப் பேராற்றலாகும் பரம்பொருளுக்கும் தோற்றம், மாற்றம், மற்றும் முடிவு என்பதில்லை. ஆகவே இந்த ஓம் என்னும் ஒலியைப் பரம்பொருள் என்றனர். இந்த ஒலிக்கு உருவம் இல்லாததால் இதுவே பரம்பொருளின் அருவநிலை எனவும் கொள்ளப்படுகிறது.

உருவாயும், அருவாயும் இருப்பதுதானே பரம்பொருள் . ஒலியாய் அருவமாக விளங்கும் பரம்பொருள், பஞ்சபூதங்களாகவும், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் மற்றும் அவைதரும் வெப்பம் ஆகிய உருவங்களை ஏற்று கண்களுக்குக் காட்சியாவதாக இத்திருமந்திரம் பேசுகிறது.

சமணம் போன்ற சமயங்கள் ஆகாயத்தை ஒரு பூதமாகக் கொள்வதில்லை. ஆகையால், ‘தக்க வானம்’ - அதாவது பஞ்ச பூதங்களில் ஒன்றாகக் கருதப்பட அனைத்துத் தகுதிகளும் உடைய வானம் என்று அழுத்தம் கொடுத்துக் கூறுகிறார்.

அரணிய பானு, அருந்திங்கள் என்பன உலக உயிர்களுக்கு நாள் முழுமைக்கும் ஒளியைத் தருவதால் அரணுதல், அருமை போன்ற பெயர் உரிச்சொற்கள் அவைகளை அலங்கரிக்கக் கையாளப்பட்டுள்ளன.
பிரணவம் என்பது ‘உயர்வான ஒன்பது’ எனவும் மற்றும் ‘உயர்வாகும் என்றும் மாறாத புதுமை’ எனவும் கூட பொருள் கொள்ளத்தகும்.





+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Oct 21, 2016 9:47 am

Ramalingam K wrote:தெரிந்துகொள்வோம் தேன் தமிழை – 1 (திருமூலரின் திருமந்திரம்) .

ஏழாம் தந்திரம் – இதோபதேசம் (ஹித உபதேசம்)- திருமந்திரம்-2104.
         
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே   -    


பதப்பொருள் :

ஒன்று –ஒப்பற்றது; தனித்தன்மை வய்ந்தது
குலம் -  சாதி ;  இனம்> மானுட இனம்.
தேவன் - வழிநடத்துபவன் ;
நன்று   வாழ்வின்நோக்கம்; துறக்கம் > அவாவின்மை
நமன் - யமன் > இறப்பு > மயக்கம்.
நாணம் - வெட்கம் >அறிவு.
ஆமே – ஆகுமே.
கதி -  போக்கு>   வழி >  சாதனம்> புகலிடம்.
சித்தம் -மனம் ; முடிவான மனக்கொள்கை ; திண்ணம் ;  
நிற்றல் – நிற்கை
நிலை -  உறுதி ; பூமி ;
உய்தல் – உயிர்வாழ்தல்; ஈடேறுதல்;.

பதவுரை :

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
- மனித குலம் ஒப்பற்ற உயர்வானது;  அதனை  வழிநடத்துபவர்  ஞானம் போதிக்கும் ஸ்ரீகுருதேவரே ஆகிறார்.

நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே
- வாழ்வின் நோக்கமாக  பேராசை இல்லாமையை நினைவில் கொள்ளுங்கள்; அவ்வாறாகில் வாழ்வில் அறியாமையாகிய  உண்மை அல்லாதனவற்றை உண்மை என்று நினைக்கும் மயக்கம் ஏற்படாது. அதுவே தெளிந்த அறிவாகும் .

சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து
- அத்தகையத் தெளிந்த அறிவின் துணைகொண்டு ஸ்ரீகுருதேவரை அடைக்காலமாக அடைந்து ஆத்மஞானம் பயில வேண்டும் என்னும் நினைவு உங்கள் மனத்தில் உண்டாகவில்லையே!

நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே
- தான் இந்த உடம்பு என்பதல்ல  , ஆனாலும் இந்த உடம்பில் இருந்தும் இயங்குவதுமாகும்   பரம்பொருளின் அம்சமாகும் ஜீவாத்மாவே என்ற கருத்தில் உறுதியாக இருந்துகொண்டு, நீங்கள் ஸ்ரீகுருதேவர் கற்பிக்கும் ஆத்ம வித்யா( இராஜயோகம்)வை எப்போதும் மறவாமல் பயின்று பழகி  உயிர்வாழ்ந்துகொண்டு  ஈடேற்றம் பெறுங்கள்.

தெளிவுரை:
மனித குலம் ஒப்பற்ற உயர்வானது. அதனை  வழிநடத்துபவர்  ஞானம் போதிக்கும் ஸ்ரீகுருதேவரே ஆகிறார்.  வாழ்வின் நோக்கமாக  பேராசையைத் தவிர்க்கவேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அவ்வாறாகில், வாழ்வில்  உண்மை அல்லாதனவற்றை உண்மை என்று நினைக்கும் மயக்கமாகிய அறியாமை உங்களுக்கு  ஏற்படாது. அதுவே தெளிந்த அறிவு என்பதாகும் .

அத்தகையத் தெளிந்த அறிவின் துணைகொண்டு ஸ்ரீகுருதேவரை அடைக்காலமாக அடைந்து அவர் போதிக்கும் ஆத்மஞானம் பயில வேண்டும் என்னும் நினைவு உங்கள் மனத்தில் உண்டாகவில்லையே!

தான் இந்த உடம்பு என்பதல்ல என்றும், ஆனாலும் இந்த உடம்பில் இருந்தும் இயங்குவதுமாகும்   பரம்பொருளின் அம்சமாகும் ஜீவாத்மாவே என்னும்  கருத்தில் உறுதியாக இருந்துகொண்டு, நீங்கள் ஸ்ரீகுருதேவர் கற்பிக்கும் ஆத்ம வித்யா( இராஜயோகம்)வை எப்போதும் மறவாமல் பயின்று,அதனை அனுதினமும்  பழகி  உயிர்வாழ்ந்துகொண்டு   ஆன்மவிடுதலையாகிய ஈடேற்றம் எனப்படும் மீண்டும்பிறவா நிலையைப் பெறுங்கள்.

விளக்கவுரை:

வாழ்வில் பேராசையைத் தவிர்த்து, ஸ்ரீகுருதேவரைப் புகலிடமாகக் கொண்டு, அவர் கற்பிக்கும் ஆத்மவித்யா எனப்படும் உடம்பு, உயிர், மனம் ஆகியனவற்றை மேன்மைப்படுத்தி, மீண்டும் பிறவாமை என்னும் அமரநிலையை ஒப்பற்றதாகிய மனித குலம் அடையவேண்டும் என்பது திருமூலரின் கருத்து.
யோகசனங்களால் நோயற்ற ஆரோக்கியமான நிலையான உடல் நலமும்;
பிராணாயாமங்களால் நீடித்த  ஆயுளும் (உயிர் வளமும்);
தியான சாதகத்தால் நிறைவான மனதின் நிம்மதியையும்;
கொடுக்க வல்லது இராஜயோகம் என்னும் ஆத்ம வித்யாவே. இந்த அமர ஞானத்தை ஸ்ரீகுருதேவரிடம் ஒவ்வொரு மனிதனும் பயின்று பழகி வாழ்வில் மேன்மை அடையவேண்டும் என்பது பொருள்.
[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Thu Oct 27, 2016 10:53 am

தெரிந்துகொள்வோம் தேன் தமிழை – 1 (திருமூலரின் திருமந்திரம்)
மூன்றாம் தந்திரம் – பிராணாயாமம் – திருமந்திரம் 569.

வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்
தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
வளியினும் வேட்டு வளியனு மாமே

பதப்பொருள் :

வளி- சுவாசக் காற்று.
வாங்குதல் – உள்ளிழுத்தல்.
வயம் – விரும்புதல்.
அடக்குதல் – நிறுத்துதல்.
பளிங்கு – பளபளப்பாக இருத்தல்.
காயம் – உடம்பு.
பழுத்தல் – வயது முதிர்தல்.
பிஞ்சு – இளமை.
வேட்டல் –விரும்புதல்

அடிதோறும் பொருளுரை :

வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
- சுவாசக்காற்றை நன்கு உள்ளிழுத்து விரும்பும் அளவிற்கு உள்நிறுத்தினால்;

பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்
- அழகிய பளிங்கு போன்ற உடம்பு வயது முதிர்ச்சியானாலும் இளமையாகவே தோற்றம் அளிக்கும்;

தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
- மேலும் ஸ்ரீகுருதேவரிடம் ஆத்ம ஞானம் என்னும் மெய்ஞ்ஞானக் கல்வியை அவரது திருவருளோடு கற்பிக்கப்பெற்றால்;

வளியினும் வேட்டு வளியனு மாமே
- காற்றைப்போல் உடம்பும் மனமும் இலேசாகி எங்கும் எளிதில் சென்று திரும்பலாம்.

தெளிவுரை:

சுவாசக்காற்றை நன்கு உள்ளிழுத்து விரும்பும் அளவிற்கு உள்நிறுத்தினால்,
அழகிய பளிங்கு போன்ற உடம்பு, வயது முதிர்ச்சியானாலும் இளமையாகவே தோற்றம் அளிக்கும்.மேலும் ஸ்ரீகுருதேவரிடம் ஆத்ம ஞானம் என்னும் மெய்ஞ்ஞானக் கல்வியை அவரது திருவருளோடு கற்பிக்கவும் பெற்றால், காற்றைப்போல் உடம்பும் மனமும் இலேசாகி எங்கும் எளிதில் சென்று திரும்பலாம்.

விளக்கவுரை :

முறையான பிராணாயாமமும், ஆத்மஞானமும் ஸ்ரீகுருதேவரின் அருளால் கற்பிக்கப்பெற்றால் வயது முதிர்ந்தபோதும், இளமை மாறாத உடல் அழகோடும் சுறு சுறுப்போடும், இன்மையாக வாழலாம். சோர்வின்றி எங்கும் சுலபமாகச் சென்று வரலாம். தியானம் மற்றும் சமாதி சாதகத்தில் மனத்தால் பிரபஞ்சம் முழுவதும் சென்று திரும்பலாம் என்பதும் கருத்து.




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Oct 28, 2016 4:59 am


தெரிந்துகொள்வோம் தேன் தமிழை – 1 (திருமூலரின் திருமந்திரம்)

மூன்றாம் தந்திரம் – பிராணாயாமம் – திருமந்திரம் 570.

எங்கே இருக்கினும் பூரி இடத்திலே
அங்கே யதுசெய்ய ஆக்கைக் கழிவில்லை
அங்கே பிடித்தது விட்டள வுஞ்செல்லச்
சங்கே குறிக்கத் தலைவனு மாமே

பதப்பொருள் :

பூரி – பூரகம்(பிராணாயாமம்) செய்.
ஆக்கை-உடம்பு
சங்கு - மலை
குறித்தல் – பாவித்தல்; செயல்படுத்துதல்
தலைவன் – சிறந்தவன்; உயர்ந்தவன்.

அடிதோறும் பொருளுரை :
எங்கே இருக்கினும் பூரி இடத்திலே
- காலந்தவறாமல், எந்த இடத்தில் இருந்தாலும் பிரணாயாமத்தைத் தவறாமல் பழகு.

அங்கே அதுசெய்ய ஆக்கைக்கு அழிவில்லை
- அவ்வாறு இடம் முதலியனவற்றைப் பொருட்படுத்தாமல் பிராணாயாமம் குறித்த காலத்தில் தினமும் பழகப்படுமானால், நீண்ட ஆயுளைப் பெற்று வாழலாம்.

அங்கே பிடித்தது விட்டளவும் செல்லச்
- அத்தகைய பிராணாயாம சாதகத்தின்போது சுவாசத்தை உள்ளிழுத்தல் மற்றும்
வெளிவிடுதல் ஆகியன காலகதியுடன் மாறுபடாமல் பழகப்படுமானால்;

சங்கே குறிக்கத் தலைவனும் ஆமே
- மலையைப்போல் நிலைத்து மேலான சிறப்பையுடைய உயர்ந்தவனாகலாம்.


தெளிவுரை:

உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் காலந்தவறாமல், பிரணாயாமத்தைப் பழகவேண்டும்.
அவ்வாறு இடம் முதலியனவற்றைப் பொருட்படுத்தாமல் குறித்த காலத்தில் தினமும் பிராணாயாமம் பழகப்படுமானால், நீண்ட ஆயுளைப் பெற்று வாழலாம். அத்தகைய பிராணாயாம சாதகத்தின்போது சுவாசத்தை உள்ளிழுத்தல் மற்றும் வெளிவிடுதல் ஆகியன சரியான காலகதியுடன் மாறுபடாமல் பழகப்படுமானல், மலையைப்போல் நிலைத்து மேலான சிறப்பையுடைய உயர்ந்தவனாகலாம்.


விளக்கவுரை :

காலந்தவறாதப் பிராணாயாம சாதகத்தால், மேன்மை அடையலாம் என்பது கருத்து.




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக