புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 Poll_c10ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 Poll_m10ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 Poll_c10 
53 Posts - 42%
heezulia
ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 Poll_c10ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 Poll_m10ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 Poll_c10ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 Poll_m10ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 Poll_c10ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 Poll_m10ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 Poll_c10ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 Poll_m10ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 Poll_c10ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 Poll_m10ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 Poll_c10ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 Poll_m10ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 Poll_c10ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 Poll_m10ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 Poll_c10 
304 Posts - 50%
heezulia
ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 Poll_c10ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 Poll_m10ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 Poll_c10ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 Poll_m10ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 Poll_c10ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 Poll_m10ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 Poll_c10ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 Poll_m10ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 Poll_c10ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 Poll_m10ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 Poll_c10ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 Poll_m10ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 Poll_c10ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 Poll_m10ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 Poll_c10ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 Poll_m10ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 Poll_c10ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 Poll_m10ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஔவைக் குறள் என்னும் அற்புத இலக்கியம்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Wed Sep 14, 2016 7:24 am

First topic message reminder :

தெரிந்து கொள்வோம்  தேன் தமிழை-2 (ஔவைக்குறள்)
                                          ஔவைக்குறள்  
                                 (ஔவையார் அருளியது)
                                    வீட்டு நெறிப்பால்
                                1.பிறப்பின் நிலைமை.


4.            தருமம் பொருள்காமம் வீடெனு நான்கும்
               உருவத்தா லாய பயன். (1-04)

தெளிவுரை :
உலக உயிர்கள் எவற்றுக்கும் பாவம் செய்யாது அறநெறியில் வாழ்தல், அவ்வாழ்விற்குத் தேவையான பொருட்செல்வத்தை எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாமலும் குற்றமற்ற வழியிலும் ஈட்டுதல், அவ்வாறு  ஈட்டிய பொருளைத் தாமும் பிறரும் அனுபவித்து மகிழ்தல், அச்செய்கையின் விளைவாக உலக இருப்புக்களின்பால் இருக்கும் தீராத பற்றை விடுதல் ஆகிய இந்நான்கு  வகை வாழ்க்கை ஒழுகலாறுகளும்  மானுட உடல் தாங்கி இவ்வுலகில் பிறந்து வாழ்வதால் உண்டாகும் உண்மைப் பயன் ஆவன.


பதப்பொருள் :
தருமம் – அறம்( தர்மம்).
பொருள்- பொருள் (அர்த்தம்).
காமம் – இன்பம ( காமம்).
வீடு – வீடுபேறு ( மோட்சம்).
உருவம் –உடல் ; பிறவி.
ஆய் – நுண்மை; அழகு.
பயன் – பலன்.

பதவுரை :

தருமம் பொருள்காமம் வீடெனு நான்கும்
- உலக உயிர்கள் எவற்றுக்கும் பாவம் செய்யாது அறநெறியில் வாழ்தல், அவ்வாழ்விற்குத் தேவையான பொருட்செல்வத்தை எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாமலும் குற்றமற்ற வழியிலும் ஈட்டுதல், அவ்வாறு  ஈட்டிய பொருளைத் தாமும் பிறரும் அனுபவித்து மகிழ்தல், அச்செய்கையின் விளைவாக உலக இருப்புக்களின்பால் இருக்கும் தீராத பற்றை விடுதல் ஆகிய இந்நான்கு   வகை வாழ்க்கை ஒழுகலாறுகளும்;  
உருவத்தா லாய பயன்
- மானுட உடல் தாங்கி இவ்வுலகில் பிறந்து வாழ்வதால் உண்டாகும் உண்மைப் பயன் ஆவன.

விளக்கவுரை:
 மனிதப் பிறவியின் நோக்கமும் ஆக்கமும் இக்குறட்பாவில் உபதேசமாகின்றன.  அன்றாட மானுட வாழ்வை யோசித்திப் பார்த்தால் அது உண்பதும் உறங்குவதுமாக முடிகிறது என்பதுதானே உண்மை. உலக உயிர்கள் அத்தனையின் அன்றாட வாழ்வின் முடிவும் கூட அதேதான்.  
பிறவிகளில் அரியதாக சொல்லப்படும் மனிதனுக்கு இந்த அன்றாட முடிவைத் தவிறவும்  அவனது பிறவியின் நோக்கமும் ஆக்கமும் வேறு ஒன்றாகவும் இருக்க வேண்டும். இல்லையேல் மனிதப் பிறவி எவ்வாறு அரியதும் உயர்வும் உடையதாகும்!  

நாடு, மதம், மொழி, இனம், காலம்  சமயம், ஆகிய அனைத்தையும் கடந்த உலக மானுடம் முழுமைக்குமாக ஆக்கி வைக்கைப்பட்டுள்ள ரிக், யஜுர், சாம அதர்வண வேதங்களும் அவற்றின் உபநிஷதங்களும் மானுடப் பிறவியின் நோக்கமும் ஆக்கமும் புருஷார்த்தம் என்கின்றன. ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் முயன்று அடைய வேண்டியதே புருஷார்த்தம்- அதாவது அறம், பொருள், இன்பம், வீடு என்பன.

இந்நான்கு  நெறிகளின் ஒழுகலாறுகளால் மனிதனுக்கு இவ்வுலகில் வாழும்போதும் இன்பம் – வாழ்விற்குப் பின் மீண்டும் பிறவாமை அமைவதால் அப்போதும் இன்பம். இதையே நம் ஔவைக் குறள் அழகுற விளக்குகின்றது.

உலக மானுடத்திற்கான நான்மறைகள் சமயச் சாயம் பூசப்பட்டு, நமது  பாரததேசத்தின் உடைமை ஆக்கப்பட்டமை  ஒரு மாபெரும் மானுட விபத்து. அவற்றின் கருத்துக்களை அறிவுப்பூர்வமாக மொழிபெயர்க்காமல் சமயநோக்கோடு மொழி பெயர்த்தமையால், உலகில் இதர சமயத்தவரால் அவற்றில் பொதிந்திருக்கும் அற்புத ஞானம் புறக்கணிக்கப் படுகின்றது என்பதே ஒரு கசக்கும் உண்மை.

உலகில் மனிதனின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் எல்லாம் அனைத்து உலக மக்களுக்கும் ஆகும்போது, நமது வேதகால ஞானிகளின் மெய்ஞ்ஞானத் தேடலின் முடிவாகிய நான்மறைகளை நாம் நமது உடைமையாக்கிக் கொண்டது போன்ற ஒரு தோற்ற மாயை ஏற்படுத்தப்பட்டமை ஒரு  மானுட பாவச் செயல். அச்செயலின் விளைவாய், வேதங்களின் பரந்த பயன் சுருக்கப்பட்டு, வேதக் கருத்துக்கள் மானுடம் முழுமைக்குமாகப் பயன்படாமல் போவதால்  வேதகால ஞானிகளின் சிந்தனைகளுக்குத் தாழ்ச்சியை உண்டாக்கியது கூடுதலான பாவச்செயல் என்பதில் நியாயம் இருக்கத்தானே செய்கிறது!   வேதக் கருத்துக்களை மானுடம் முழுமைக்கும் ஆக்கிவைக்க இனி அறிவுப் பாதையில் சிந்தித்து முயலுவோம்.

அதுவரை , ஏதோ நம் தமிழ்ப்பாட்டி ஔவை, சம்ஸ்க்ருத வேதங்களைத் தம் குறட்பாவில் தமிழ் செய்துள்ளார். வேதங்களின் சாரமாக விளங்கும் இந்த அற்புதக் குறட்பாக்களாவது மானுடம் புரிந்து கொள்ளும் வகையில் இதன் பொருள் உலகம் முழுமைக்கும் ஆகட்டும். மானுடம் மேன்மை அடையட்டும்.
ஸ்ரீகுருவே நம:



+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 27, 2016 1:52 pm

கற்றுக் கொண்டே இருக்கிறோம் அய்யா .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Wed Sep 28, 2016 1:36 pm


தெரிந்து கொள்வோம் தேன் தமிழை-2 (ஔவைக்குறள்)

ஔவைக்குறள்

(ஔவையார் அருளியது)

வீட்டு நெறிப்பால்

அதிகாரம் 3.

உள் உடம்பின் நிலைமை


3- 02. வெள்ளிபொன் மேனிய தொக்கும் வினையுடைய
உள்ளுடம்பி னாய வொளி (22)

தெளிவுரை:

பரு உடம்பாக வெளி உலகிற்குக் காட்சியாகும் மானுட தேகத்தின் உள்ளே, அறிவே வடிவாகி அதன் ஒரு பரிமாணமாக அஞ்ஞானம் அருவ வடிவில் ஜீவாத்மாவாகவும், மறு பரிமாணமாக மெய்ஞ்ஞானம் காரண வடிவமாகிய பரமாத்மாவாகவும் இருந்துகொண்டு, புண்ணிய பாவ வினைப்பயன்கள் பரு உடலால் அனுபவிக்கப்படுகின்றன.

பதப்பொருள்:

வெள்ளி- அஞ்ஞானம் ; அழுக்கு; ஜீவாத்மா; சூட்சும உடல்.
பொன் – அறிவுடைமை;பரம்பொருள்; பரமாத்மா; காரண உடல்.
மேனி – உடல்.
ஒக்கும் – ஒத்திருப்பது.
வினை – பாவம், புண்ணியம் ஆகிய வினைப்பதிவுகள்
ஒளி – அறிவு.

பதவுரை:

வெள்ளிபொன் மேனி அது ஒக்கும் வினையுடைய

- அஞ்ஞானத்தின் வெளிப்பாடாக ஜீவாத்மா என்னும் அரு உடலும், மெய்ஞ்ஞானத்தின் வெளிப்பாடாக பரமாத்மாவாகிய காரண உடலும் இருந்து செயல்பட்டுக் கொண்டு பாவ புண்ணிய வினைகள் அனுபவிக்கப்படுகின்றன.

உள் உடம்பின் ஆய ஒளி

- பரு உடம்பாகத் தோன்றும் மானுட தேகத்தின் உள்ளே அறிவே வடிவாக விளங்குவது.

விளக்கவுரை:

பரு உடல் (ஸ்தூல தேகம்), அரு உடல் (சூட்சும தேகம்), காரண உடல் (ஞானதேகம்) என்று ஒன்றுபோல் காணும் நமது உடம்பில் மூன்று உடம்புகள் விளங்குகின்றன. அவை முறையே மனம் (சிறு மூளை), புத்தி (பெரு மூளை) மற்றும் சித்தம் (முகுளம்) ஆகியவற்றின் இயக்கங்களால் செயல்படுகின்றன. இவற்றில் புத்தி ஜீவாத்மாவாகவும் , சித்தம் பரமாத்மாவாகவும் இருப்பன. ஜீவாத்மாவானது அஞ்ஞானத்தினால், தன் ஏற்றுக்கொண்ட பாவ புண்ணிய வினைப்பயன்களைச் சுக துக்கங்களாக இந்த பரு உடலால் அனுபவிக்கின்றது. பரமாத்மா உடம்பினுள் மனச்சாட்சியாக இருந்துகொண்டு செயல்படுகின்றது என்பது இக்குறளின் கருத்து.




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Sep 30, 2016 8:00 pm


தெரிந்து கொள்வோம் தேன் தமிழை-2 (ஔவைக்குறள்)

ஔவைக்குறள்
(ஔவையார் அருளியது)

வீட்டு நெறிப்பால்

அதிகாரம் 3.

உள் உடம்பின் நிலைமை


3.04 வருபய னுண்டு மகிழ்ந்துடனா நிற்கும்
ஒருபயனைக் காட்டு முடம்பு. (24)

தெளிவுரை :

பிறவியை எடுக்கும்போதே, அனுபவிப்பதற்காகக் கொண்டுவந்துள்ள நுகர்வினை ( ப்ராரப்த கர்மா) யால் விளையும் சுகதுக்கங்களை இப்பூமியில் வாழும் காலத்தில் தான் முழுவதுமாக உடம்பிற்குள் இருந்து அனுபவித்துக் கொண்டு, அவ்வுடம்பிலேயே தொடர்ந்து பிரியாமல் இயங்கும் ஒப்பற்ற மெய்ப்பொருளாகிய ஜீவாத்மனை இந்த உடல் உணர்த்துகின்றது

பதப்பொருள்:

பயன் – நுகர்வினை என்னும் விதியின் பயன்களாகும் சுகம் துக்கம் என்பன; மெய்ம்மை.
உண்ணல் – அனுபவித்தல்.
ஒரு – ஒப்பற்றது
காட்டுதல் – உணர்த்துதல்.
உடம்பு – உடல்.
மகிழ்தல்
பதவுரை:
வருபய னுண்டு மகிழ்ந்துடனா நிற்கும்
- பிறவியை எடுக்கும்போதே, அனுபவிப்பதற்காகக் கொண்டுவந்துள்ள நுகர்வினை ( ப்ராரப்த கர்மா) யால் விளையும் சுகதுக்களை இப்பூமியில் வாழும் காலத்தில் தான் முழுவதுமாக உடம்பிற்குள் இருந்து அனுபவித்துக் கொண்டு, அவ்வுடம்பிலேயே தொடர்ந்து பிரியாமல் இயங்கும்;

ஒருபயனைக் காட்டு முடம்பு
- ஒப்பற்ற மெய்ப்பொருளாகிய ஜீவாத்மனை இந்த உடல் உணர்த்துகின்றது.

விளக்கவுரை:

உடம்பிற்குள் இருப்பதும், உடம்பை இயக்குவதும் ஆகிய ஆத்மனை உடம்பால் மட்டுமே அறியமுடியும் என்பது கருத்து.

“என்னை அறியாமல் எனக்குள்ளே நீயிருக்க
உன்னை அறியாமல் உடல் அலுத்தேன் பூரணமே” - பட்டினத்தார்.




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Oct 01, 2016 4:26 pm

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை-2 (ஔவைக்குறள்)

ஔவைக்குறள்
(ஔவையார் அருளியது)

வீட்டு நெறிப்பால்

அதிகாரம் 3.

உள் உடம்பின் நிலைமை



3- 03. சென்றுண்டு வந்து திரிதரு முள்ளுடம்
பென்றுங் கெடாத திது. (23)


தெளிவுரை:

பரு உடலுக்குள் விளங்கும் சூட்சும உடம்பு என்னும் ஜீவாத்மா, உடலெடுத்து உலகில் வாழும் காலத்தில் அதனுடைய கர்மப் பயன்களைச் சுக துக்கமாக அனுபவிக்கின்றது. மரணத்தின் போது பரு உடலை விட்டு வெளியேறுகிறது. மீண்டும் பிறக்கும் போது பூமிக்கு வேறு ஒரு பரு உடலோடு வருகிறது . இவ்வாறாகப் பிறக்கும்போது ஒரு உடலோடு வருவதும், அவ்வுடலோடு பூமியில் வாழ்வதும் , பின்பு மரணத்தின்போது பரு உடலை விட்டு வெளியேறுவதும், மீண்டும் பிறக்கும்போது வேறு ஒரு பரு உடல்தாங்கி வருவதுமாகத் திரிந்து கொண்டிருக்கும் அந்த ஜீவாத்மா அழியாதது.

பதப்பொருள்:

செல்லுதல் – மரணத்தின் போது உடலை விட்டு வெளியேறுதல்
உண்ணுதல்- கர்மப் பயன்களைச் சுக துக்கமாக அனுபவித்தல்.
வருதல் – மீண்டும் பிறக்கும் போது பூமிக்கு வேறு ஒரு உடலோடு வருதல்
திரிதருதல்- இவ்வாறாகத் திரிந்து கொண்டு இருத்தல்.
உள்ளுடம்பு – பரு உடலுக்குள் விளங்கும் சூட்சும உடம்பு
என்றும் கெடாது- எக்காலத்திலும் அழியாதது.
இது –இந்த ஜீவாத்மா

விளக்கவுரை:

பரு உடலின் உள்ளே சூட்சும உடம்பாக விளங்கும் ஜீவாத்மா என்றும் அழியாத பரமாத்மாபின் அம்சம் என்பதால் அதுவும் பிறத்தல், வாழ்தல், இறத்தல் என்னும் சுழற்சிக்கு ஆட்படுவதுபோல் தோற்றம் அளித்தாலும் அது என்றும் அழியாது என்பது கருத்து





+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Oct 03, 2016 7:26 pm

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை-2 (ஔவைக்குறள்

ஔவைக்குறள்
(ஔவையார் அருளியது)

வீட்டு நெறிப்பால்

அதிகாரம் 3.

உள் உடம்பின் நிலைமை


3.04 வருபய னுண்டு மகிழ்ந்துடனா நிற்கும்
ஒருபயனைக் காட்டு முடம்பு. (24)

தெளிவுரை :

பிறவியை எடுக்கும்போதே, அனுபவிப்பதற்காகக் கொண்டுவந்துள்ள நுகர்வினை ( ப்ராரப்த கர்மா) யால் விளையும் சுகதுக்களை இப்பூமியில் வாழும் காலத்தில் தான் முழுவதுமாக உடம்பிற்குள் இருந்து அனுபவித்துக் கொண்டு, அவ்வுடம்பிலேயே தொடர்ந்து பிரியாமல் இயங்கும் ஒப்பற்ற மெய்ப்பொருளாகிய ஜீவாத்மனை இந்த உடல் உணர்த்துகின்றது

பதப்பொருள்:

பயன் – நுகர்வினை என்னும் விதியின் பயன்களாகும் சுகம் துக்கம் என்பன; மெய்ம்மை.
உண்ணல் – அனுபவித்தல்.
ஒரு – ஒப்பற்றது
காட்டுதல் – உணர்த்துதல்.
உடம்பு – உடல்.

பதவுரை:

வருபய னுண்டு மகிழ்ந்துடனா நிற்கும்

- பிறவியை எடுக்கும்போதே, அனுபவிப்பதற்காகக் கொண்டுவந்துள்ள நுகர்வினை ( ப்ராரப்த கர்மா) யால் விளையும் சுகதுக்களை இப்பூமியில் வாழும் காலத்தில் தான் முழுவதுமாக உடம்பிற்குள் இருந்து அனுபவித்துக் கொண்டு, அவ்வுடம்பிலேயே தொடர்ந்து பிரியாமல் இயங்கும்;

ஒருபயனைக் காட்டு முடம்பு

- ஒப்பற்ற மெய்ப்பொருளாகிய ஜீவாத்மனை இந்த உடல் உணர்த்துகின்றது.



விளக்கவுரை:

உடம்பிற்குள் இருப்பதும், உடம்பை இயக்குவதும் ஆகிய ஆத்மனை உடம்பால் மட்டுமே அறியமுடியும் என்பது கருத்து.

“என்னை அறியாமல் எனக்குள்ளே நீயிருக்க
உன்னை அறியாமல் உடல் அலுத்தேன் பூரணமே” - பட்டினத்தார்.




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Oct 04, 2016 7:22 am


தெரிந்து கொள்வோம் தேன் தமிழை-2 (ஔவைக்குறள்

ஔவைக்குறள்

(ஔவையார் அருளியது)

வீட்டு நெறிப்பால்

அதிகாரம் 3.

உள் உடம்பின் நிலைமை


3.05 அல்லற் பிறப்பை யகற்றுவிக்கு மாய்ந்தாய
தொல்லை யுடம்பின் றொடர்பு. (25)

தெளிவுரை :

துன்பத்தைத் தரும் மானுட உடம்போடு கூடிய பிறவியைத் தவிர்த்து, ஆன்ம முக்தி என்னும் பிறவாநிலைப் பேற்றை அடைவது என்பதை நுணுக்கமாக ஆராய்ந்து பார்த்தால் அத்தகைய முக்தியை அடையவேண்டிய நுண்மையான ஜீவாத்மா, அதனோடு நெருக்கமாக இருக்கும் மானுட உடம்பிலேயே தன்னைத் தொடர்புப் படுத்திக் கொண்டுள்ளது.

பதப்பொருள்:

அல்லல் - துன்பம்.
பிறப்பு - மானுடப் பிறவி.
அகற்றுதல் – நீக்குதல்.
ஆய் – நுண்மை.
ஆயது – முடிவது.
ஒல்லை – நெருக்கம்.
உடம்பு- மானுட உடல்.
தொடர்பு – தொடர்கை.

பதவுரை:

அல்லல் பிறப்பை அகற்றுவிக்கும் ஆய்ந்து ஆயது
- துன்பத்தைத் தரும் மானுட உடம்போடு கூடிய பிறவியைத் தவிர்த்து, ஆன்மமுக்தி என்னும் பிறவாநிலைப் பேற்றை அடைவது என்பதை நுணுக்கமாக ஆராய்ந்து பார்த்தால் அத்தகைய முக்தியை அடையவேண்டிய நுண்மையான ஜீவாத்மா
ஒல்லை உடம்பின் தொடர்பு
- அதனோடு நெருக்கமாக இருக்கும் மானுட உடம்பின் தொடர்கையாகவே உள்ளது.


விளக்கவுரை:

பிறவிக்கு உபகரணமாகும் உடம்பை நீத்து, ஆன்ம முக்தி அடைய வேண்டும் என்பதை ஆராய்ந்து பார்த்தால் முக்தி அடைய வேண்டிய ஜீவாத்மா அந்த உடம்பையே தனக்குத் தொடர்பு படுத்திக் கொண்டுள்ளது என்பது பொருள்.




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Wed Oct 05, 2016 5:47 am


தெரிந்து கொள்வோம் தேன் தமிழை-2 (ஔவைக்குறள்)

ஔவைக்குறள்
ஔவையார் அருளியது)

வீட்டு நெறிப்பால்
அதிகாரம் 3.
உள் உடம்பின் நிலைமை

3.06 நல்வினையுந் தீவினையு முண்டு திரிதருஞ்
செய்வினைக்கும் வித்தா முடம்பு. (26)

தெளிவுரை

மானுட வாழ்வில் உண்டாகும் நன்மைகளுக்குக் காரணமாகும் புண்ணியச் செயல்களையும் , தீமைகளுக்குக் காரணமாகும் பாவச் செயல்களையும் அனுபவித்துக் கொண்டு, உலகாயத காரியங்களில் தீராது ஈடுபடுத்திக்கொண்டு, முக்காலத்திலும் செய்யக் கூடிய எல்லா கர்மப் பயன்களுக்கும் மானுட உடம்பே ஆதாரமாகிய கருவியாகிறது.

பதப்பொருள்:

நல்வினை- நன்மைகளைக் கொடுக்கும் புண்ணியச் செயல்.
தீவினை - தீமைகளைக் கொடுக்கும் பாவச்செயல்.
உண்ணல்- அனுபவித்தல்
திரிதருதல் – திரிந்து கொண்டு இருத்தல்
செய்வினை – செய்த வினை( சஞ்சித கர்மம்); செய்யும் வினை(ப்ராரப்த கர்மம்); செய்யப்போகும்
வினை(ஆகாமிய கர்மம்)
வித்து – காரணம்; ஆதாரம்.
உடம்பு – மனித உடம்பு.

பதவுரை:

நல்வினையும் தீவினையும் உண்டு திரிதரும்
- மானுட வாழ்வில் உண்டாகும் நன்மைகளுக்குக் காரணமாகும் புண்ணியச் செயல்களையும் , தீமைகளுக்குக் காரணமாகும் பாவச் செயல்களையும் அனுபவித்துக் கொண்டு, உலகாயத காரியங்களில் தீராது ஈடுபடுத்திக்கொண்டு;

செய்வினைக்கும் வித்தாம் உடம்பு
- முக்காலத்திலும் செய்யக் கூடிய எல்லா கர்மப் பயன்களுக்கும் மானுட உடம்பே ஆதாரமாகிய கருவியாகிறது.

விளக்கவுரை:
வினைப்பயனின்ஆக்கத்திற்கும், அதனை அனுபவிப்பதற்கும், அதன் அழிவிற்கும் மானுட உடம்பே ஆதாரமாகிய கருவியாகிறது என்பது கருத்து.




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 05, 2016 9:55 am

ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 3838410834 ஔவைக் குறள் என்னும் அற்புத  இலக்கியம் - Page 2 3838410834

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Fri Oct 07, 2016 4:46 pm

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை-2 (ஔவைக்குறள்)

ஔவைக்குறள்
ஔவையார் அருளியது)

வீட்டு நெறிப்பால்
அதிகாரம் 3.
உள் உடம்பின் நிலைமை

3.07 உள்ளுடம்பின் வாழ்வன வொன்பது மேழைக்
கள்ளவுடம் பாகி விடும். (27)


தெளிவுரை :

மானுட உடம்பினுள் இருந்தும் இயங்கியும் விளங்கும் தெய்வத்தன்மையாகிய ஜீவாத்மாவும் பரமாத்மாவும் உணரப்படாமையால் - சூட்சும தேகம், ஞானதேகம் என்ற வகையில் - அவைகள் பரு உடம்பிற்குள் இருக்கும் முகக்கண்களால் அறியப்படாத உடம்புகளாகின்றன.

பதப்பொருள்:

உள்ளுடம்பில் - பரு உடலில் உள்ளாக.
வாழ்வன - இருந்து வினைபடுவன
ஒன்பதும் – தெய்வத்தன்மைய்டைய ஜீவாத்மவும் பரமாத்மாவும்
ஏழை -உணராமை
கள்ளம் -இரகசியம்

பதவுரை:

உள்ளுடம்பில் வாழ்வன ஒன்பதும்
- மானுட உடம்பினுள் இருந்தும் இயங்கியும் விளங்கும் தெய்வத்தன்மையாகிய ஜீவாத்மாவும் பரமாத்மாவும்
ஏழை - உணரப்படாமையால்
கள்ள உடம்பாகி விடும்
- சூட்சும தேகம், ஞானதேகம் என்ற வகையில் முகக்கண்களால் அறியப்படாத உடம்புகளாகின்றன.

விளக்கவுரை:

ஜீவாத்மா என்பது சூட்சும தேகம். பரமாத்மா என்பது ஞானதேகம்- அதாவது காரண தேகம். இவை இரண்டும் மானுட உடம்பினுள் இருந்து இயங்கினாலும் முகக் கண்களுக்குப் புலப்படாத இரகசியங்களாக உள்ள உடம்புகளாவன என்பது கருத்து.




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sun Oct 09, 2016 3:30 pm

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை-2 (ஔவைக்குறள்)

ஔவைக்குறள்
ஔவையார் அருளியது)

வீட்டு நெறிப்பால்
அதிகாரம் 3.
உள் உடம்பின் நிலைமை

3.08 பொய்க்கெல்லாம் பாசனமா யுள்ளதற்கோர் வித்தாகு
மெய்க்குள்ளா மாய வுடம்பு. (28)

தெளிவுரை :

உலக சுகதுக்கங்கள் எனப்படும் அறியாமையாகிய மாயைக்குத் தங்குமிடமாக இருப்பது இந்த உடம்பு. அம்மாயையால் அனுபவிக்கப்படும் சுகம் – துக்கம் என எல்லாவற்றிற்கும் சாதனமாவதாக இருக்கும் அதே சமயத்தில் , எப்போதும் மாறாததும் அழியாததும் ஆகிய பரமாத்மா மற்றும் ஜீவாத்மா ஆகியனவும் தங்கி இருக்கவும் சாதனமாக அமைந்து அதன் விளைவாய் உண்மை –மாயை ஆகிய இரண்டினுடைய இருப்பிற்கும் இந்த மானுட உடம்பே சாதனமாக அமைகிறது.

பதப்பொருள்:

பொய் – உண்மை அல்லாதது ; அஞ்ஞானமாவது; மாயை.
பாசனம்- உண்கலம் ; தங்குமிடம்.
வித்து – சாதனம் ; காரணம்; மூலதனம்.
உடம்பு –மானுட உடல்.

பதவுரை:

பொய்க்கு எல்லாம் பாசனமாய் உள்ளதற்கு
- உலக சுகதுக்கங்கள் எனப்படும் அறியாமையாகிய மாயைக்குத் தங்குமிடமாக இருப்பது இந்த உடம்பு.
ஓர் வித்தாகும்
- அம்மாயையால் அனுபவிக்கப்படும் எல்லாவற்றிற்கும் சாதனமாவதாகவும் இருக்கிறது.

மெய்க்கு உள்ளாம் ஆய வுடம்பு
- ஆனாலும் எப்போதும் மாறாததும் அழியாததும் ஆகிய பரமாத்மா மற்றும் ஜீவாத்மா ஆகியனவும் தங்கி இருக்கவும் சாதனமாக அமைந்து இரண்டுக்கும் சாதனமாவது இந்த மானுட உடம்பு

விளக்கவுரை:

மானுட உடம்பு மெய்ப்பொருளாகிய பரமாத்மா மற்றும் ஜீவாத்மா ஆகிய வற்றின் இருப்பிட சாதனமாகிறது. அதே சமயத்தில் உலக சுக-துக்கம் என்னும் சம்சாரமாகிய மாயைக்கும் தங்குமிடமாவதும் இதே உடம்புதான் . அதாவது சுகதுக்கங்களும் இந்த உடம்பாலேயே அனுபவிக்கப்படுகின்றன என்பது கருத்து.

ஆகையால்தான் உடம்பை மெய் என்று ஞானிகளும், பொய் என்று ஏட்டுக் கல்வி மட்டுமே கற்றப் பண்டிதர்களும் சொல்கிறார்கள். சித்தர்கள் இருவகையாகவும் சொல்கிறார்கள்.




+91 94438 09850
[You must be registered and logged in to see this link.]
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக