புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Sat Jun 15, 2024 7:09 pm
by heezulia Today at 12:57 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Sat Jun 15, 2024 7:09 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறளில் காணும் நிறை
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
தெரிந்து கொள்வோம் தேன் தமிழை -7 – ( திருக்குறள் )
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 40
கல்வி.
பொருட்பாலில் முதல் இயலாக வரும் அரசியலில் இரண்டாவதாவதும் நூலின் 40ஆவதாகவும் வரும் அதிகாரம் கல்வி. இது அரசாட்சிக்குப் பின்பு வைக்கப்படுள்ளதன் நோக்கம், கல்வி இல்வாழ்வாவின் செல்வமாக அமைவதால், நாட்டு மக்கள் அனைவருக்கும் நேர்மையானதும் பொதுவானதும் அவரவர் கற்கும் திறனுக்கும் தகுந்த வகையில் அனைவருக்கும் பொதுவானவனும் உயர்வானவனும் அதிகாரம் உள்ளவனும் ஆகிய அரசனால் மட்டுமே அளிக்க முடியும் என்பதாலாகும்.
கல்வி என்பது புத்தகக் கல்வி மட்டும் அன்று. உலக வாழ்விற்குத் தேவையான அறிவைப் பெறும் அனைத்தைப் பற்றியும் பாடமாகவும் பயிற்சியாகவும் கற்கப்படும் அனைத்தும் கல்விதான் என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டிவது. அவரவர்க்கு எதனில் ஆர்வம் உள்ளதோ அதனைக் முழு முயற்சியுடனும் தெள்ளத் தெளிவாகவும் கற்பது கல்வி.
391. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. (40-01)
தெளிவுரை:
ஒருவர் இவ்வுலகில் தாம் வாழ்வதற்குத் தேவையான பொருளும் அறிவும் கொடுக்கக்கூடியவற்றைப் பிழையும் குறையும் இல்லாமல் முழுமையாகப் பாடமாகவும் பயிற்சியாகவும் அவற்றைப்பற்றிய தெளிந்த ஞானம் உள்ள தகுந்த குருவிடம் கற்கவேண்டும். அதன்பின்பு அவ்வாறு கற்ற வித்தையைத் தம் வாழ்வின் நிமித்தம் அறநெறியோடு தவறாமல் முறையாகக் கடைப்பிடித்துப் பொருளீட்டி வாழவேண்டும்.
பதப்பொருள்:
கற்றல் – யாதொன்றைப்பற்றியும் அறிந்து உணர்தல்.
கசடு – பிழை; குற்றம்.
அற- இல்லாமல் ஆதல்.
நிற்றல்-ஒழுகுதல்.
தகுதல் –ஏற்றவாறாதல்.
பதவுரை:
கற்க கசடறக் கற்பவை
- ஒருவர் இவ்வுலகில் தாம் வாழ்வதற்குத் தேவையான பொருளும் அறிவும் கொடுக்கக்கூடியவற்றைப் பிழையும் குறையும் இல்லாமல் முழுமையாகப் பாடமாகவும் பயிற்சியாகவும் அவற்றைப்பற்றிய தெளிந்த ஞானம் உள்ள தகுந்த குருவிடம் கற்கவேண்டும்.
கற்றபின் நிற்க அதற்குத் தக
- அவ்வாறு கற்ற வித்தையைத் தம் வாழ்வின் நிமித்தம் அறநெறியோடு தவறாமல் முறையாகக் கடைப்பிடித்துப் பொருளீட்டி வாழவேண்டும்
விளக்கவுரை:
ஒருவரது வாழ்வு அவர் விரும்பிக் கற்ற கல்வியால் அமையவேண்டும் என்பது வலியுறுத்தப் படுகிறது. தச்சுத் தொழிலைக் கற்றவர் பொற்கொல்லராகவும், வேதம் படித்தவர் மருத்துவராகவும், சட்டம் படித்தவர் எழுத்தராகவும், மின்பொறியாண்மை கற்றவர் விவசாயமும் செய்ய முனைவது அவர்களது வாழ்வில் அவர்களுக்கு நிம்மதியோ மகிழ்ச்சியையோ கொடுக்காது.
கற்ற தொழிலைச் சார்ந்து வாழ்தலே உலகில் ஒருவருக்குக் களிப்பைத் தருவது என்பதே இங்கு கூறப்படும் கருத்து.
என்றும் பணிவுடன்,
யோகரத்னா. ஸ்ரீசம்பங்கி இராமலிங்கம்.
(+91 94438 09850) [You must be registered and logged in to see this link.]
தெரிந்து கொள்வோம் தேன் தமிழை -7 – ( திருக்குறள் )
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 40
கல்வி.
பொருட்பாலில் முதல் இயலாக வரும் அரசியலில் இரண்டாவதாவதும் நூலின் 40ஆவதாகவும் வரும் அதிகாரம் கல்வி. இது அரசாட்சிக்குப் பின்பு வைக்கப்படுள்ளதன் நோக்கம், கல்வி இல்வாழ்வாவின் செல்வமாக அமைவதால், நாட்டு மக்கள் அனைவருக்கும் நேர்மையானதும் பொதுவானதும் அவரவர் கற்கும் திறனுக்கும் தகுந்த வகையில் அனைவருக்கும் பொதுவானவனும் உயர்வானவனும் அதிகாரம் உள்ளவனும் ஆகிய அரசனால் மட்டுமே அளிக்க முடியும் என்பதாலாகும்.
கல்வி என்பது புத்தகக் கல்வி மட்டும் அன்று. உலக வாழ்விற்குத் தேவையான அறிவைப் பெறும் அனைத்தைப் பற்றியும் பாடமாகவும் பயிற்சியாகவும் கற்கப்படும் அனைத்தும் கல்விதான் என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டிவது. அவரவர்க்கு எதனில் ஆர்வம் உள்ளதோ அதனைக் முழு முயற்சியுடனும் தெள்ளத் தெளிவாகவும் கற்பது கல்வி.
391. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. (40-01)
தெளிவுரை:
ஒருவர் இவ்வுலகில் தாம் வாழ்வதற்குத் தேவையான பொருளும் அறிவும் கொடுக்கக்கூடியவற்றைப் பிழையும் குறையும் இல்லாமல் முழுமையாகப் பாடமாகவும் பயிற்சியாகவும் அவற்றைப்பற்றிய தெளிந்த ஞானம் உள்ள தகுந்த குருவிடம் கற்கவேண்டும். அதன்பின்பு அவ்வாறு கற்ற வித்தையைத் தம் வாழ்வின் நிமித்தம் அறநெறியோடு தவறாமல் முறையாகக் கடைப்பிடித்துப் பொருளீட்டி வாழவேண்டும்.
பதப்பொருள்:
கற்றல் – யாதொன்றைப்பற்றியும் அறிந்து உணர்தல்.
கசடு – பிழை; குற்றம்.
அற- இல்லாமல் ஆதல்.
நிற்றல்-ஒழுகுதல்.
தகுதல் –ஏற்றவாறாதல்.
பதவுரை:
கற்க கசடறக் கற்பவை
- ஒருவர் இவ்வுலகில் தாம் வாழ்வதற்குத் தேவையான பொருளும் அறிவும் கொடுக்கக்கூடியவற்றைப் பிழையும் குறையும் இல்லாமல் முழுமையாகப் பாடமாகவும் பயிற்சியாகவும் அவற்றைப்பற்றிய தெளிந்த ஞானம் உள்ள தகுந்த குருவிடம் கற்கவேண்டும்.
கற்றபின் நிற்க அதற்குத் தக
- அவ்வாறு கற்ற வித்தையைத் தம் வாழ்வின் நிமித்தம் அறநெறியோடு தவறாமல் முறையாகக் கடைப்பிடித்துப் பொருளீட்டி வாழவேண்டும்
விளக்கவுரை:
ஒருவரது வாழ்வு அவர் விரும்பிக் கற்ற கல்வியால் அமையவேண்டும் என்பது வலியுறுத்தப் படுகிறது. தச்சுத் தொழிலைக் கற்றவர் பொற்கொல்லராகவும், வேதம் படித்தவர் மருத்துவராகவும், சட்டம் படித்தவர் எழுத்தராகவும், மின்பொறியாண்மை கற்றவர் விவசாயமும் செய்ய முனைவது அவர்களது வாழ்வில் அவர்களுக்கு நிம்மதியோ மகிழ்ச்சியையோ கொடுக்காது.
கற்ற தொழிலைச் சார்ந்து வாழ்தலே உலகில் ஒருவருக்குக் களிப்பைத் தருவது என்பதே இங்கு கூறப்படும் கருத்து.
என்றும் பணிவுடன்,
யோகரத்னா. ஸ்ரீசம்பங்கி இராமலிங்கம்.
(+91 94438 09850) [You must be registered and logged in to see this link.]
தெரிந்து கொள்வோம் தேன் தமிழை – 7(திருக்குறள் )
குறளில் காணும் நிறை
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 40
கல்வி.
395. உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர். (40-05)
தெளிவுரை:
உலகில் உள்ள அனைத்தையும் ஒருவர் கற்று அறிந்த, மேலான் ஞான வல்லுனராக இருப்பினும் , அவர் புதியதாகக் கற்க விரும்பும் கல்வியைக் கற்பிப்பவரிடம் இடத்தாலும் காலத்தாலும் முன்னதாகவே காத்திருந்து தாம் ஏதும் கற்றறியாதவர் போல் பணிவோடும் அடக்கதோடும் அக்கல்வியைக் கற்க இயலாதவர் எனின், அவர் எவ்வளவுதான் பிற அனைத்துக் கலைகளையும் கற்றவராக இருப்பவராயினும் மற்ற அனைவரிலும் இழிவானவராகவே கருதப்படுவார்.
பதப்பொருள்:
உடையார் – யாதொன்றைக் கற்க வேண்டுமோ அதனை நிரம்பப் பெற்றுள்ளவர்கள்.
முன் – இடத்தாலும் காலத்தாலும் முன்னதாகக் காத்திருத்தல்.
இல்லார்- கற்க வேண்டியதைக் கற்க விழைபவர்.
ஏ – பெருக்கம்; மிகுதி.
ஏக்கற்றல் – அதிகமாக அனைத்தையும் கற்றதாதல்.
கடையர் – தாழ்ந்தவர்; இழிவானவர்.
பதவுரை:
ஏக்கற்றுங் கற்றார்
- உலகில் உள்ள அனைத்தையும் ஒருவர் கற்று அறிந்த, மேலான் ஞான வல்லுனராக இருப்பினும்;
உடையார்முன் இல்லார்போல் கல்லா தவர்
- அவர் புதியதாக கற்க விரும்பும் கல்வியைக் கற்பிப்பவரிடம் இடத்தாலும் காலத்தாலும் முன்னதாகவே காத்திருந்து தாம் ஏதும் கற்றறியாதவர் போல் பணிவோடும் அடக்கதோடும் அக்கல்வியைக் கற்க இயலாதவர் எனின்,
கடையரே
- அவர் எவ்வளவுதான் பிற அனைத்துக் கலைகளையும் கற்றவராக இருப்பவராயினும் மற்ற அனைவரிலும் இழிந்தவராகவே கருதப்படுவார்.
விளக்கவுரை:
எவ்வாறு கற்க விழையும் கல்வியை எவரும் கற்க முயற்சிக்கவேண்டும் என்பது இக்குறளின் உட்கருத்து.
தாம் கற்க விரும்பும் கல்வியைக் கற்பிக்கும் ஆசானின் முன்பாகப் பணிவோடும், காத்திருந்தும் அக்கல்வியைக் தாழ்மையோடும் பணிவோடும் கற்க முற்படவில்லையாயின், அக்கல்வியைக் கற்க விழைபவர் , பிற அனைத்துக் கலை ஞானங்களிலும் எவ்வளவுதான் பாண்டித்யம் பெற்று சான்றோராக இருப்பினும் மற்ற அனைவரையும் விடவும் தாழ்ந்தவரே ஆவார் என்பது கருத்து.
குறளில் காணும் நிறை
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 40
கல்வி.
395. உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர். (40-05)
தெளிவுரை:
உலகில் உள்ள அனைத்தையும் ஒருவர் கற்று அறிந்த, மேலான் ஞான வல்லுனராக இருப்பினும் , அவர் புதியதாகக் கற்க விரும்பும் கல்வியைக் கற்பிப்பவரிடம் இடத்தாலும் காலத்தாலும் முன்னதாகவே காத்திருந்து தாம் ஏதும் கற்றறியாதவர் போல் பணிவோடும் அடக்கதோடும் அக்கல்வியைக் கற்க இயலாதவர் எனின், அவர் எவ்வளவுதான் பிற அனைத்துக் கலைகளையும் கற்றவராக இருப்பவராயினும் மற்ற அனைவரிலும் இழிவானவராகவே கருதப்படுவார்.
பதப்பொருள்:
உடையார் – யாதொன்றைக் கற்க வேண்டுமோ அதனை நிரம்பப் பெற்றுள்ளவர்கள்.
முன் – இடத்தாலும் காலத்தாலும் முன்னதாகக் காத்திருத்தல்.
இல்லார்- கற்க வேண்டியதைக் கற்க விழைபவர்.
ஏ – பெருக்கம்; மிகுதி.
ஏக்கற்றல் – அதிகமாக அனைத்தையும் கற்றதாதல்.
கடையர் – தாழ்ந்தவர்; இழிவானவர்.
பதவுரை:
ஏக்கற்றுங் கற்றார்
- உலகில் உள்ள அனைத்தையும் ஒருவர் கற்று அறிந்த, மேலான் ஞான வல்லுனராக இருப்பினும்;
உடையார்முன் இல்லார்போல் கல்லா தவர்
- அவர் புதியதாக கற்க விரும்பும் கல்வியைக் கற்பிப்பவரிடம் இடத்தாலும் காலத்தாலும் முன்னதாகவே காத்திருந்து தாம் ஏதும் கற்றறியாதவர் போல் பணிவோடும் அடக்கதோடும் அக்கல்வியைக் கற்க இயலாதவர் எனின்,
கடையரே
- அவர் எவ்வளவுதான் பிற அனைத்துக் கலைகளையும் கற்றவராக இருப்பவராயினும் மற்ற அனைவரிலும் இழிந்தவராகவே கருதப்படுவார்.
விளக்கவுரை:
எவ்வாறு கற்க விழையும் கல்வியை எவரும் கற்க முயற்சிக்கவேண்டும் என்பது இக்குறளின் உட்கருத்து.
தாம் கற்க விரும்பும் கல்வியைக் கற்பிக்கும் ஆசானின் முன்பாகப் பணிவோடும், காத்திருந்தும் அக்கல்வியைக் தாழ்மையோடும் பணிவோடும் கற்க முற்படவில்லையாயின், அக்கல்வியைக் கற்க விழைபவர் , பிற அனைத்துக் கலை ஞானங்களிலும் எவ்வளவுதான் பாண்டித்யம் பெற்று சான்றோராக இருப்பினும் மற்ற அனைவரையும் விடவும் தாழ்ந்தவரே ஆவார் என்பது கருத்து.
தெரிந்து கொள்வோம் தேன் தமிழை – 7(திருக்குறள் )
குறளில் காணும் நிறை
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 40
கல்வி.
396. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.. (40-06)
தெளிவுரை:
மண் எவ்வளவுக்கெவ்வளவு ஆழமாகவும் அகலமாகவும் தோண்டப்படுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதிக அளவிலான நீரைச் சுரக்கும் தன்மையது. அதுபொலவே மனிதர்கள் எவ்வளவுக்கெவ்வளவு அறிவுசால் விடயங்களைப் பல்லாற்றானும் பரவலாகவும் ஊன்றியும் கற்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு படிப்பறிவும், போதனைகளாகக் கற்றனவற்றை எவ்வளவுக்கெவ்வளவு பழகிப்பார்க்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அனுபவ அறிவும் அதிகமாக வாய்க்கப்பெறுவர்.
பதப்பொருள்:
தொடுதல் – தோண்டுதல்; அகழ்தல்; குடைதல்.
அனைத்து- அத்தனை; அவ்வளவு.
ஊறுதல்-இடைவிடாது சுரத்தல்; நீர் பெருகுதல்.
கற்றல் – நூல்களையும் அனுபவங்களையும் பயிலுதல்.
மணல்- மண்.
கேணி - கிணறு.
அறிவு – ஞானம், அறியவேண்டியவை.
பதவுரை:
தொட்டனைத் தூறும் மணற்கேணி
- மண் எவ்வளவுக்கெவ்வளவு ஆழமாகவும் அகலமாகவும் தோண்டப்படுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதிக அளவிலான நீரைச் சுரக்கும் தன்மையது
மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு
- மனிதர்கள் எவ்வளவுக்கெவ்வளவு அறிவுசால் விடயங்களைப் பல்லாற்றானும் பரவலாகவும் ஊன்றியும் கற்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு படிப்பறிவும், போதனைகளாகக் கற்றனவற்றை எவ்வளவுக்கெவ்வளவு பழகிப்பார்க்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு அனுபவ அறிவும் அதிகமாக வாய்க்கப்பெறுவர்.
விளக்கவுரை:
எடுத்துக் காட்டு உவமை அணியில் அமைந்த குறள். பரந்ததும் ஊன்றிக் கற்பதுமானக் கல்வி, மணற்கேணியின் அகலத்திற்கும் ஆழத்திற்கும் உவமை காட்டப்படுகிறது. அறிவு நீருக்கு உவமையாகியது.
இக்குறளில் கல்வியை பரவலாகவும் ஒவ்வொன்றையும் ஊன்றி ஆழமாகவும் கற்க வேண்டும் என்பது உபதேசம்.
தெரிந்து கொள்வோம் தேன் தமிழை – 7(திருக்குறள் )
குறளில் காணும் நிறை
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 40
கல்வி.
397. யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு. (40-07)
தெளிவுரை:
யாதாகிலும் கல்வியைக் கற்ற ஒருவன், உலகின் எந்த இடத்திலும் இருந்துகொண்டு , அங்கு வசிப்பவர்களுடன் தன்னூர் மக்கள் போலவே உறவும் நட்புமாக அவனால் உயிர்வாழ முடியும் என்னும் நிலைமை இருக்கும் போது, தனக்கு உகந்த யாதாகிலும் கல்வியைக் கற்றுப் பயனடையாமல், தாம் உடலாலும் மனத்தாலும் சோர்வுற்றுக் கெட்டுப்போகும் வரையிலும் , அவன் காலத்தை வீணாக்குவது ஏனோ!
பதப்பொருள்:
யாதானும் – எல்லாமும் .
நாடு – இடம்.
ஊர் – ஊரில் உள்ளவர்கள்.
ஆமால் – ஆகக்கூடும் என்பதால்.
என் – ஏனோ.
சா – சோர்வு; கெட்டுப்போதல்.
துணை – அளவு.
பதவுரை:
ஒருவன் யாதானும் நாடு ஆமால் ஊர் ஆமால்
- யாதாகிலும் கல்வியைக் கற்ற ஒருவன், உலகின் எந்த இடத்திலும் இருந்துகொண்டு , அங்கு வசிப்பவர்களுடன் தன்னூர் மக்கள் போலவே உறவும் நட்புமாக அவனால் உயிர்வாழ முடியும் என்னும் நிலைமை இருக்கும் போது;
சாம் துணையும் கல்லாத ஆறு என்
- தனக்கு உகந்த யாதாகிலும் கல்வியைக் கற்றுப் பயனடையாமல், தாம் உடலாலும் மனத்தாலும் சோர்வுற்றுக் கெட்டுப்போகும் வரையிலும் ,அவன் காலத்தை வீணாக்குவது ஏனோ!
விளக்கவுரை:
கற்ற கல்வி தன்வசம் இருக்க, உலகில் எங்கும் சுகமாக வாழலாம் என்னும் நிலைமை உறுதியாக இருக்கும்போது, ஒருவன் தனக்கேற்ற கல்வியைக் கற்று இன்பமாக வாழாமல் காலத்தை வீணடித்து உடலாலும், மனத்தாலும் சோர்வடைந்து கெட்டுப்போகத் தேவை இல்லை என்பது கருத்து.
குறளில் காணும் நிறை
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 40
கல்வி.
397. யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு. (40-07)
தெளிவுரை:
யாதாகிலும் கல்வியைக் கற்ற ஒருவன், உலகின் எந்த இடத்திலும் இருந்துகொண்டு , அங்கு வசிப்பவர்களுடன் தன்னூர் மக்கள் போலவே உறவும் நட்புமாக அவனால் உயிர்வாழ முடியும் என்னும் நிலைமை இருக்கும் போது, தனக்கு உகந்த யாதாகிலும் கல்வியைக் கற்றுப் பயனடையாமல், தாம் உடலாலும் மனத்தாலும் சோர்வுற்றுக் கெட்டுப்போகும் வரையிலும் , அவன் காலத்தை வீணாக்குவது ஏனோ!
பதப்பொருள்:
யாதானும் – எல்லாமும் .
நாடு – இடம்.
ஊர் – ஊரில் உள்ளவர்கள்.
ஆமால் – ஆகக்கூடும் என்பதால்.
என் – ஏனோ.
சா – சோர்வு; கெட்டுப்போதல்.
துணை – அளவு.
பதவுரை:
ஒருவன் யாதானும் நாடு ஆமால் ஊர் ஆமால்
- யாதாகிலும் கல்வியைக் கற்ற ஒருவன், உலகின் எந்த இடத்திலும் இருந்துகொண்டு , அங்கு வசிப்பவர்களுடன் தன்னூர் மக்கள் போலவே உறவும் நட்புமாக அவனால் உயிர்வாழ முடியும் என்னும் நிலைமை இருக்கும் போது;
சாம் துணையும் கல்லாத ஆறு என்
- தனக்கு உகந்த யாதாகிலும் கல்வியைக் கற்றுப் பயனடையாமல், தாம் உடலாலும் மனத்தாலும் சோர்வுற்றுக் கெட்டுப்போகும் வரையிலும் ,அவன் காலத்தை வீணாக்குவது ஏனோ!
விளக்கவுரை:
கற்ற கல்வி தன்வசம் இருக்க, உலகில் எங்கும் சுகமாக வாழலாம் என்னும் நிலைமை உறுதியாக இருக்கும்போது, ஒருவன் தனக்கேற்ற கல்வியைக் கற்று இன்பமாக வாழாமல் காலத்தை வீணடித்து உடலாலும், மனத்தாலும் சோர்வடைந்து கெட்டுப்போகத் தேவை இல்லை என்பது கருத்து.
தெரிந்து கொள்வோம் தேன் தமிழை – 7(திருக்குறள் )
குறளில் காணும் நிறை
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 40
கல்வி.
398.ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து. (40-08)
தெளிவுரை:
கற்கப்படும் எத்தகையக் கல்வியையும் மனம் ஒருமித்த ஈடுபாட்டுடன் எவராலும் கற்கப்படுமாகில்,
அவ்வாறு அக்கல்வியைக் கற்பவருக்கு அக்கல்வியே அவருக்கு எல்லாவகையிலும் பாதுகாப்பாக இருந்து வாழ்வில் உயர்வைக் கொடுக்கவல்லது.
பதப்பொருள்:
ஒருமை – மனம் ஒருமித்த ஈடுபாடு.
கண் – உடன்.
எழுமை – உயர்ச்சி.
ஏமாப்பு – பதுகாப்பு; அரணாதல்
உடைத்து – உடையதாவது.
பதவுரை:
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி
- கற்கப்படும் எத்தகையக் கல்வியையும் மனம் ஒருமித்த ஈடுபாடுடன் எவராலும் கற்கப்படுமாகில்;
ஒருவற்கு
- அவ்வாறு அக்கல்வியைக் கற்பவருக்கு ;
எழுமையும் ஏமாப் புடைத்து
- அக்கல்வியே அவருக்கு எல்லாவகையிலும் பாதுகாப்பாக இருந்து வாழ்வில் உயர்வைக் கொடுக்கவல்லது.
விளக்கவுரை:
கவனமுடன் கல்வி கற்கப்பட்டால், அக்கல்வியே அதனைக் கற்பவருக்கு அவரது வாழ்வில் உயர்வைத்தரக் கூடியதாக அமையும்.
குறளில் காணும் நிறை
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 40
கல்வி.
398.ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து. (40-08)
தெளிவுரை:
கற்கப்படும் எத்தகையக் கல்வியையும் மனம் ஒருமித்த ஈடுபாட்டுடன் எவராலும் கற்கப்படுமாகில்,
அவ்வாறு அக்கல்வியைக் கற்பவருக்கு அக்கல்வியே அவருக்கு எல்லாவகையிலும் பாதுகாப்பாக இருந்து வாழ்வில் உயர்வைக் கொடுக்கவல்லது.
பதப்பொருள்:
ஒருமை – மனம் ஒருமித்த ஈடுபாடு.
கண் – உடன்.
எழுமை – உயர்ச்சி.
ஏமாப்பு – பதுகாப்பு; அரணாதல்
உடைத்து – உடையதாவது.
பதவுரை:
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி
- கற்கப்படும் எத்தகையக் கல்வியையும் மனம் ஒருமித்த ஈடுபாடுடன் எவராலும் கற்கப்படுமாகில்;
ஒருவற்கு
- அவ்வாறு அக்கல்வியைக் கற்பவருக்கு ;
எழுமையும் ஏமாப் புடைத்து
- அக்கல்வியே அவருக்கு எல்லாவகையிலும் பாதுகாப்பாக இருந்து வாழ்வில் உயர்வைக் கொடுக்கவல்லது.
விளக்கவுரை:
கவனமுடன் கல்வி கற்கப்பட்டால், அக்கல்வியே அதனைக் கற்பவருக்கு அவரது வாழ்வில் உயர்வைத்தரக் கூடியதாக அமையும்.
தெரிந்து கொள்வோம் தேன் தமிழை – 7(திருக்குறள் )
குறளில் காணும் நிறை
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 40
கல்வி.
399. தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார். (40-09)
தெளிவுரை:
கற்றறிந்த சன்றோர்கள், தாம் கற்றுத்தெளிந்த கல்வி, தனக்கு மகிழ்சியை அளிப்பதை அனுபவத்தில் கண்டு கொண்டு, அது போலவே உலக மக்கள் யாவரும் அக்கல்வியைக் கற்று, அவர்களும் மகிழ்ச்சியடைய வேண்டும் என்று ஆசைப்பட்டு அனைவருக்கும் தாம் கற்ற கல்வியைக் கற்பிப்பர்.
பதப்பொருள்:
இன்புறுதல் – இன்பம் அடைதல்.
காமுறுதல் –விரும்புதல்.
பதவுரை:
கற்றறிந்தார் தாம் இன்புறுவது கண்டு
- கற்றறிந்த சன்றோர்கள் தாம் கற்றுத்தெளிந்த கல்வி தனக்கு மகிழ்சியை அளிப்பதை அனுபவத்தில் கண்டு;
உலகு இன்புறக் காமுறுவர்
- அது போலவே உலக மக்கள் யாவரும் அக்கல்வியைக் கற்று, அவர்களும் மகிழ்ச்சியடைய வேண்டும் என்று ஆசைப்பட்டு அனைவருக்கும் தாம் கற்ற கல்வியைக் கற்பிப்பர்.
விளக்கவுரை:
கல்வி என்பது ஒருவகைச் செல்வம். தான் கற்றுத் தெளிந்த கல்வியால் தனக்குப் பயன் கிட்டி அதனால் தனக்கு மகிழ்ச்சியுண்டாகும் என்றால் அக்கல்வியைப் பிறருக்கும் மறைக்காமல் கற்பிக்க வேண்டும் என்பது இக்குறளின் கருத்து.
தான் கற்ற கல்வியைப் பிறருக்கு விருப்பத்தோடு கற்பிக்காமையும் ஒருவகைத் திருட்டு. ஆகையால்தான் கற்றறிந்த சான்றோர்கள் தாம் கற்ற கல்வியை அனைவருக்கும் கற்பித்து யாவரும் அக்கல்வியால் மகிழ்ச்சியடைய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் என்பது பொருள்.
குறளில் காணும் நிறை
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 40
கல்வி.
399. தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார். (40-09)
தெளிவுரை:
கற்றறிந்த சன்றோர்கள், தாம் கற்றுத்தெளிந்த கல்வி, தனக்கு மகிழ்சியை அளிப்பதை அனுபவத்தில் கண்டு கொண்டு, அது போலவே உலக மக்கள் யாவரும் அக்கல்வியைக் கற்று, அவர்களும் மகிழ்ச்சியடைய வேண்டும் என்று ஆசைப்பட்டு அனைவருக்கும் தாம் கற்ற கல்வியைக் கற்பிப்பர்.
பதப்பொருள்:
இன்புறுதல் – இன்பம் அடைதல்.
காமுறுதல் –விரும்புதல்.
பதவுரை:
கற்றறிந்தார் தாம் இன்புறுவது கண்டு
- கற்றறிந்த சன்றோர்கள் தாம் கற்றுத்தெளிந்த கல்வி தனக்கு மகிழ்சியை அளிப்பதை அனுபவத்தில் கண்டு;
உலகு இன்புறக் காமுறுவர்
- அது போலவே உலக மக்கள் யாவரும் அக்கல்வியைக் கற்று, அவர்களும் மகிழ்ச்சியடைய வேண்டும் என்று ஆசைப்பட்டு அனைவருக்கும் தாம் கற்ற கல்வியைக் கற்பிப்பர்.
விளக்கவுரை:
கல்வி என்பது ஒருவகைச் செல்வம். தான் கற்றுத் தெளிந்த கல்வியால் தனக்குப் பயன் கிட்டி அதனால் தனக்கு மகிழ்ச்சியுண்டாகும் என்றால் அக்கல்வியைப் பிறருக்கும் மறைக்காமல் கற்பிக்க வேண்டும் என்பது இக்குறளின் கருத்து.
தான் கற்ற கல்வியைப் பிறருக்கு விருப்பத்தோடு கற்பிக்காமையும் ஒருவகைத் திருட்டு. ஆகையால்தான் கற்றறிந்த சான்றோர்கள் தாம் கற்ற கல்வியை அனைவருக்கும் கற்பித்து யாவரும் அக்கல்வியால் மகிழ்ச்சியடைய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் என்பது பொருள்.
தெரிந்து கொள்வோம் தேன் தமிழை – 7(திருக்குறள் )
குறளில் காணும் நிறை
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 40
கல்வி.
400. கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை. (40 -10)
தெளிவுரை:
தன் வாழ்நாள் காலம் முழுவதிலும் ஒருவருக்கு அழியாத மேன்மையையும் நன்மையையும் கொடுக்கவல்ல சொத்தாக அமைவது அவர் கற்றுக் கொண்ட கல்வி அறிவே ஆகும். கல்வியறிவைத் தவிர்த்து மற்ற பிற எந்த விதமான செல்வங்களும் அவர் எப்போதும் எங்கு சென்றாலும் அவருடனேயே வருவதில்லை.
பதப்பொருள்:
கேடு –அழிவு
இல் - இல்லாத
விழுப்பம் – நன்மை; மேன்மை
செல்வம் – நன்மை அளிக்கும் சொத்து
கல்வி – ஒருவர் வாழ்வின் நிமித்தமாகக் கற்றுக் கொள்ளும் கல்வி அறிவு.
மாடு – கூடவே வரும் செல்வம்.
பதவுரை:
ஒருவற்கு கேடு இல் விழுச்செல்வம் கல்வி
- தன் வாழ்நாள் காலம் முழுவதிலும் ஒருவருக்கு அழியாத மேன்மையையும் நன்மையையும் கொடுக்கவல்ல சொத்தாக அமைவது அவர் கற்றுக் கொண்ட கல்வி அறிவே ஆகும் .
மாடு அல்ல மற்றை யவை
- கல்வியறிவைத் தவிர்த்து மற்ற பிற எந்த விதமான செல்வங்களும் அவர் எப்போதும் எங்கு சென்றாலும் அவருடனேயே வருவதில்லை.
விளக்கவுரை:
கல்வியறிவு ஒருவருடைய மூளையின் இயக்கமாகிய அறிவால் அடையப்பெறுவது. அந்த அறிவாகிய செல்வம், எவரும் தன் உடம்பை விட்டு அப்புறப்படுத்தி வைக்க இயலாதது. ஆகையால் அவர் எங்கு எப்போது சென்றாலும் சீதனம் போன்று அவர் உடனேயே சென்று அவருக்கு மேன்மையாகிய நன்மையை அளிக்க வல்லது. ஏனைய பிற செல்வங்கள் உடம்பிற்கு அப்பால் இடம் கொள்வதால் அவைகள் அவரை எப்போதும் எங்கும் முழுமையாகத் தொடரமுடியாது என்பது கருத்து.
குறளில் காணும் நிறை
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 40
கல்வி.
400. கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை. (40 -10)
தெளிவுரை:
தன் வாழ்நாள் காலம் முழுவதிலும் ஒருவருக்கு அழியாத மேன்மையையும் நன்மையையும் கொடுக்கவல்ல சொத்தாக அமைவது அவர் கற்றுக் கொண்ட கல்வி அறிவே ஆகும். கல்வியறிவைத் தவிர்த்து மற்ற பிற எந்த விதமான செல்வங்களும் அவர் எப்போதும் எங்கு சென்றாலும் அவருடனேயே வருவதில்லை.
பதப்பொருள்:
கேடு –அழிவு
இல் - இல்லாத
விழுப்பம் – நன்மை; மேன்மை
செல்வம் – நன்மை அளிக்கும் சொத்து
கல்வி – ஒருவர் வாழ்வின் நிமித்தமாகக் கற்றுக் கொள்ளும் கல்வி அறிவு.
மாடு – கூடவே வரும் செல்வம்.
பதவுரை:
ஒருவற்கு கேடு இல் விழுச்செல்வம் கல்வி
- தன் வாழ்நாள் காலம் முழுவதிலும் ஒருவருக்கு அழியாத மேன்மையையும் நன்மையையும் கொடுக்கவல்ல சொத்தாக அமைவது அவர் கற்றுக் கொண்ட கல்வி அறிவே ஆகும் .
மாடு அல்ல மற்றை யவை
- கல்வியறிவைத் தவிர்த்து மற்ற பிற எந்த விதமான செல்வங்களும் அவர் எப்போதும் எங்கு சென்றாலும் அவருடனேயே வருவதில்லை.
விளக்கவுரை:
கல்வியறிவு ஒருவருடைய மூளையின் இயக்கமாகிய அறிவால் அடையப்பெறுவது. அந்த அறிவாகிய செல்வம், எவரும் தன் உடம்பை விட்டு அப்புறப்படுத்தி வைக்க இயலாதது. ஆகையால் அவர் எங்கு எப்போது சென்றாலும் சீதனம் போன்று அவர் உடனேயே சென்று அவருக்கு மேன்மையாகிய நன்மையை அளிக்க வல்லது. ஏனைய பிற செல்வங்கள் உடம்பிற்கு அப்பால் இடம் கொள்வதால் அவைகள் அவரை எப்போதும் எங்கும் முழுமையாகத் தொடரமுடியாது என்பது கருத்து.
தெரிந்து கொள்வோம் தேன் தமிழை – 7(திருக்குறள் )
குறளில் காணும் நிறை
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 41
கல்லாமை.
பொருட்பாலில் முதல் இயலாக வரும் அரசியலில் மூன்றாவதாகவும் நூலின் 41 வது அதிகரமகவும் வருவது கல்லாமை என்பதாகும்.
கல்வி என்பது புத்தகக் கல்வியாகிய கொள்கை அறிவு(Theory) மட்டும் அன்று. உலக வாழ்விற்குத் தேவையான அறிவைப் பெறும் அனைத்தைப் பற்றியும் பாடமாகவும் பயிற்சியாகவும் கற்கப்படும் அனைத்தும் கல்விதான் என்பது கடந்த 40 வது அதிகாரத்தில் உபதேசிக்கப்பெற்றது. இந்த அதிகாரத்தில் அவ்வாறு கல்வியைக் கற்காமையால் ஒருவரது வாழ்வில் உண்டாகும் விளைவுகளையும் இன்ன பிறவற்றையும் நாம் புரிந்து கொள்ள வேண்டுவது இந்த கல்லாமை என்னும் அதிகாரத்தின் நோக்கம் .
401. அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல். (41-01)
தெளிவுரை :
முழுமையானக் கல்வியறிவின் முதிர்ச்சி இல்லா ஒருவன் பேசக்கூடியனவற்றை வேடிக்கைப் பேச்சாகக் கொள்ளவேண்டும். ஏனெனில் அது தகுந்த அரங்கம் என்னும் ஆடுகளம் இல்லாமல் நடனமாடுதல் போன்றதே.
பதப்பொருள்:
அரங்கு – நடன அரங்கம்.
வட்டு -முடிவுசெய்தல்.
ஆடு – கூத்து; நடனம்.
நிரம்புதல் –முதிர்தல்.
நூல் - கல்வியறிவு; ஆலோசனை.
கோட்டி –துன்பம் ; பரிகாசம்; வேடிக்கைப் பேச்சு.
கொள்ளுதல் – கருதுதல்.
பதவுரை:
அரங்கு இன்றி வட்டு ஆடியது அற்றே
- தகுந்த அரங்கம் என்னும் ஆடுகளம் இல்லாமல் நடனமாடுதல் போன்றதே.
நிரம்பிய நூல் இன்றிக் கோட்டி கொளல்
- முழுமையானக் கல்வியறிவின் முதிர்ச்சி இல்லா ஒருவன் பேசக்கூடியனவற்றை வேடிக்கைப் பேச்சாகக் கொள்ளவேண்டும்.
விளக்கவுரை:
தகுந்த ஆடுகளம் என்னும் நடன அரங்கம் இல்லாமல் நடனமாடுதல் என்பது அஞ்ஞானம். அதுபோலவே முழுமையானக் கல்வியறிவின் முதிர்ச்சி இல்லா ஒருவன் தன் கருத்தைக் கூறுவதும் அஞ்ஞானம். அப்பேச்சை வேடிக்கையாகக் கொள்ளவேண்டுமே தவிற அதற்கு முக்கியத்தும் கொடுப்பதும் அஞ்ஞானம் என்பது கருத்து.
குறளில் காணும் நிறை
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 41
கல்லாமை.
பொருட்பாலில் முதல் இயலாக வரும் அரசியலில் மூன்றாவதாகவும் நூலின் 41 வது அதிகரமகவும் வருவது கல்லாமை என்பதாகும்.
கல்வி என்பது புத்தகக் கல்வியாகிய கொள்கை அறிவு(Theory) மட்டும் அன்று. உலக வாழ்விற்குத் தேவையான அறிவைப் பெறும் அனைத்தைப் பற்றியும் பாடமாகவும் பயிற்சியாகவும் கற்கப்படும் அனைத்தும் கல்விதான் என்பது கடந்த 40 வது அதிகாரத்தில் உபதேசிக்கப்பெற்றது. இந்த அதிகாரத்தில் அவ்வாறு கல்வியைக் கற்காமையால் ஒருவரது வாழ்வில் உண்டாகும் விளைவுகளையும் இன்ன பிறவற்றையும் நாம் புரிந்து கொள்ள வேண்டுவது இந்த கல்லாமை என்னும் அதிகாரத்தின் நோக்கம் .
401. அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல். (41-01)
தெளிவுரை :
முழுமையானக் கல்வியறிவின் முதிர்ச்சி இல்லா ஒருவன் பேசக்கூடியனவற்றை வேடிக்கைப் பேச்சாகக் கொள்ளவேண்டும். ஏனெனில் அது தகுந்த அரங்கம் என்னும் ஆடுகளம் இல்லாமல் நடனமாடுதல் போன்றதே.
பதப்பொருள்:
அரங்கு – நடன அரங்கம்.
வட்டு -முடிவுசெய்தல்.
ஆடு – கூத்து; நடனம்.
நிரம்புதல் –முதிர்தல்.
நூல் - கல்வியறிவு; ஆலோசனை.
கோட்டி –துன்பம் ; பரிகாசம்; வேடிக்கைப் பேச்சு.
கொள்ளுதல் – கருதுதல்.
பதவுரை:
அரங்கு இன்றி வட்டு ஆடியது அற்றே
- தகுந்த அரங்கம் என்னும் ஆடுகளம் இல்லாமல் நடனமாடுதல் போன்றதே.
நிரம்பிய நூல் இன்றிக் கோட்டி கொளல்
- முழுமையானக் கல்வியறிவின் முதிர்ச்சி இல்லா ஒருவன் பேசக்கூடியனவற்றை வேடிக்கைப் பேச்சாகக் கொள்ளவேண்டும்.
விளக்கவுரை:
தகுந்த ஆடுகளம் என்னும் நடன அரங்கம் இல்லாமல் நடனமாடுதல் என்பது அஞ்ஞானம். அதுபோலவே முழுமையானக் கல்வியறிவின் முதிர்ச்சி இல்லா ஒருவன் தன் கருத்தைக் கூறுவதும் அஞ்ஞானம். அப்பேச்சை வேடிக்கையாகக் கொள்ளவேண்டுமே தவிற அதற்கு முக்கியத்தும் கொடுப்பதும் அஞ்ஞானம் என்பது கருத்து.
தெரிந்து கொள்வோம் தேன் தமிழை – 7(திருக்குறள் )
குறளில் காணும் நிறை
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 41
கல்லாமை.
409. மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு. (41-09)
தெளிவுரை :
வயதில் மூத்தவராய் இருந்தும் கல்லாதவர்கள் , அவர்களை விடவும் வயதில் குறைந்தவர்கள் கல்வி கற்றவர்களாக இருப்பாராகில், கல்வி கற்காத அத்தகைய வயதில் மூத்தவர்கள் உலகோரின் அனைத்து புகழாரமும் இல்லாதவர்களாவார்கள்.
பதப்பொருள்:
மேல் பிறந்தார் - முன் பிறந்தார் – வயதில் மூத்தவர்கள்
கீழ் - தாழ்வு.
கீழ்ப்பிறந்தார் - வயதில் குறைந்தவர்கள் ; நாட்கள் கடந்து பிறந்த வயதில்குறைந்தவர்
அனைத்து –அத்தனை; அவ்வளவு; எல்லாம்.
பாடு – வாழுத்துதல்
பதவுரை:
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார்
- வயதில் மூத்தவராய் இருந்தும் கல்லாதவர்களானால்;
கீழ்ப்பிறந்தும் கற்றார்
- அவரை விட வயதில் குறைந்தவர்கள் கல்வி கற்றவர்களாக இருப்பாராகில்.
அனைத்து பாடு
- உலகோரின் அனைத்து புகழாரமும்
இலர் - இல்லாதவர்களாவார்கள்.
விளக்கவுரை:
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக வென்னா தவருள்
அறிவுடை யோனா றரசுஞ் செல்லும் -
( பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் புறநானூறு 5-7)
ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது.
குறளில் காணும் நிறை
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 41
கல்லாமை.
409. மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு. (41-09)
தெளிவுரை :
வயதில் மூத்தவராய் இருந்தும் கல்லாதவர்கள் , அவர்களை விடவும் வயதில் குறைந்தவர்கள் கல்வி கற்றவர்களாக இருப்பாராகில், கல்வி கற்காத அத்தகைய வயதில் மூத்தவர்கள் உலகோரின் அனைத்து புகழாரமும் இல்லாதவர்களாவார்கள்.
பதப்பொருள்:
மேல் பிறந்தார் - முன் பிறந்தார் – வயதில் மூத்தவர்கள்
கீழ் - தாழ்வு.
கீழ்ப்பிறந்தார் - வயதில் குறைந்தவர்கள் ; நாட்கள் கடந்து பிறந்த வயதில்குறைந்தவர்
அனைத்து –அத்தனை; அவ்வளவு; எல்லாம்.
பாடு – வாழுத்துதல்
பதவுரை:
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார்
- வயதில் மூத்தவராய் இருந்தும் கல்லாதவர்களானால்;
கீழ்ப்பிறந்தும் கற்றார்
- அவரை விட வயதில் குறைந்தவர்கள் கல்வி கற்றவர்களாக இருப்பாராகில்.
அனைத்து பாடு
- உலகோரின் அனைத்து புகழாரமும்
இலர் - இல்லாதவர்களாவார்கள்.
விளக்கவுரை:
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக வென்னா தவருள்
அறிவுடை யோனா றரசுஞ் செல்லும் -
( பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் புறநானூறு 5-7)
ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
திருக்குறள் ஓர்அமுத சுரபி. அதை காணும் கற்கும் அன்பர்கள் உள்ளம் >> பலநிலைகளில் பொருள் கொள்ளும் அளவிற்கு கருத்து கடல் நிரம்ப உள்ளது. @@@@ நல்ல பொருள் விளக்கம். அருமை...
தெரிந்து கொள்வோம் தேன் தமிழை – 7(திருக்குறள் )
குறளில் காணும் நிறை
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 41
கல்லாமை.
குறளில் காணும் நிறை
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 41
கல்லாமை.
410. விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர். (41-10)
தெளிவுரை :
நல்ல சாத்திர நூல்களைக் கற்று அறிவால் புகழ்பெற்று ஒளிர்பவர்களைத் தவிர்த்த மற்றவர்கள், வாழ்வில் துயரத்தோடு வாழும் மானுட இனத்தவர்கள் ஆவார்கள்.
பதப்பொருள்:
விலங்கு- கதறுதல்; துயரப்படுதல்.
மக்கள் – மானுட இனம்.
அனையர் - அத்தகையவர்.
இலங்கு- ஒளிசெய்; பிரகாசித்தல்.
நூல் – சாத்திரம்; எண்ணம்; அறிவு.
ஏனை –மற்றை; தவிற.
பதவுரை:
விலங்கொடு மக்கள் அனையர்
- துயரதோடு வாழும் மானுட இனத்தவர்களை ஒத்திருப்பவர்கள்.
இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர்
- நல்ல சாத்திர நூல்களைக் கற்று அறிவால் புகழ்பெற்று ஒளிர்பவர்களைத் தவிர்த்த மற்றவர்கள்.
விளக்கவுரை:
கற்றோர்கள் தம் கல்வியறிவால் புகழ்பெற்று விளங்குவதால் உலகில் ஆனந்தித்து வாழ்பவர்கள் ஆகிறார்கள். கல்லாதவரோ வாழ்வில் துயரப்பட்டுக் கொண்டு கதறுபவர்களாகும் மானுட இனத்தவர் என்றே ஆவர்.
குறளில் காணும் நிறை
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 41
கல்லாமை.
குறளில் காணும் நிறை
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 41
கல்லாமை.
410. விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர். (41-10)
தெளிவுரை :
நல்ல சாத்திர நூல்களைக் கற்று அறிவால் புகழ்பெற்று ஒளிர்பவர்களைத் தவிர்த்த மற்றவர்கள், வாழ்வில் துயரத்தோடு வாழும் மானுட இனத்தவர்கள் ஆவார்கள்.
பதப்பொருள்:
விலங்கு- கதறுதல்; துயரப்படுதல்.
மக்கள் – மானுட இனம்.
அனையர் - அத்தகையவர்.
இலங்கு- ஒளிசெய்; பிரகாசித்தல்.
நூல் – சாத்திரம்; எண்ணம்; அறிவு.
ஏனை –மற்றை; தவிற.
பதவுரை:
விலங்கொடு மக்கள் அனையர்
- துயரதோடு வாழும் மானுட இனத்தவர்களை ஒத்திருப்பவர்கள்.
இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர்
- நல்ல சாத்திர நூல்களைக் கற்று அறிவால் புகழ்பெற்று ஒளிர்பவர்களைத் தவிர்த்த மற்றவர்கள்.
விளக்கவுரை:
கற்றோர்கள் தம் கல்வியறிவால் புகழ்பெற்று விளங்குவதால் உலகில் ஆனந்தித்து வாழ்பவர்கள் ஆகிறார்கள். கல்லாதவரோ வாழ்வில் துயரப்பட்டுக் கொண்டு கதறுபவர்களாகும் மானுட இனத்தவர் என்றே ஆவர்.
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|