புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 இந்த வார சினிமா செய்திகள் Poll_m10 இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
5 Posts - 63%
heezulia
 இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 இந்த வார சினிமா செய்திகள் Poll_m10 இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
 இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 இந்த வார சினிமா செய்திகள் Poll_m10 இந்த வார சினிமா செய்திகள் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த வார சினிமா செய்திகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 04, 2016 1:11 pm

கதைக்கு தேவையென்றால் கிளாமராக நடிக்கவும் தயாராக இருக்கிறேன்:
சஞ்சிதா படுகோனே


---
 இந்த வார சினிமா செய்திகள் V22VVe5wTPORdgE9zcZf+சஞ்சிதாபடுகோனே
-

விஜய் நடித்த வேட்டைக்காரன், ஜித்தன் ரமேஷ் நடித்த
பிள்ளையார் கோவில் கடைசி தெரு ஆகிய படங்களிலும்
மட்டுமல்லாது, தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும்
நடித்த சஞ்சிதா படுகோனே.
-
கர்நாடகாவைச் சேர்ந்த மாடல் அழகி.   ராவணா என்ற
கன்னட படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான
இவர்  ஜெயம்ரவி, சிம்பு, தனுஷ், கார்த்தி, விஷால், நட்டி
மற்றும் முன்னணி ஹீரோக்களுடனும் மணிரத்னம்,
கௌதம் மேனன், சுந்தர் சி, சுசீந்திரன், சுராஜ், அறிவழகன்,
ராதா மோகன் மற்றும் புதிய இயக்குனர்கள் இயக்கும்
படங்களிலும் நடிக்க ஆர்வமாய் உள்ளார்.
-
இதுகுறித்து அவர் கூறும் போது.. தமிழ் ரசிகர்களை எனக்கு
மிகவும் பிடிக்கும். தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக
இருக்கிறேன்.தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் சரளமாக
பேசுவேன். நகரத்து பெண், கிராமத்து பெண் வேடம்
இரண்டுமே எனக்கு பொருந்தும். கதைக்கு தேவையென்றால்
கிளாமராக நடிக்கவும் தயாராக இருக்கிறேன்.
-
தமிழ் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் அதுதான் என் லட்சியம்
என்று குறிப்பிட்டுள்ளார்.
-
-----------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 04, 2016 1:37 pm


நடிகர் விகரம் நடிக்கும் இரண்டெழுத்து படத்தின்,
இரண்டாம் பாகத்தில் நடிக்க, த்ரிஷாவுக்கு அழைப்பு
விடுக்கப்பட்டது.
-
ஆனால், முதல் பாகத்தில் நாயகியாக நடித்த தன்னை
கேரக்டர் வேடத்தில் நடிக்க கூறியதால் மறுத்து விட்ட நடிகை,
'தற்போதும், நான் கதாநாயகி தான்; அதுவும், கதையின்
நாயகியாக நடிக்கிறேன்.
-
பெரிய கதாநாயகன் படம் என்பதற்காக, என் தகுதியை
தாழ்த்திக்கொள்ள மாட்டேன்...' என்று தடாலடியாக மறுத்து
விட்டார்.
-
--------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 04, 2016 1:38 pm


கறுப்பு பூனை!
-
சூப்பர் நடிகர் நடித்து, சமீபத்தில் வெளியான மூன்றெழுத்து
படம் வெளியான, இரண்டொரு நாட்களிலேயே,
ஒரு மேடையில், அந்த படம் தோல்வியடைந்து விட்டதாக
கூறினார், பிரபல கவிஞர்.

இதையடுத்து, அதற்கு அவர் ஜகா வாங்கி விட்ட போதும்,
தற்போது, தான் பாடல் எழுதிய படங்களின் ஆடியோ
விழாக்களுக்கே வெளியில் தலைகாட்டுவதில்லை.

காரணம், அப்போது, தன்னை சந்திக்கும் மீடியாக்கள்,
சூப்பர் நடிகரின் படம் குறித்து தான் சொன்ன கருத்து பற்றி,
மேலும் கருத்து கேட்டு, தன்னை சிக்கலில் மாட்ட வைத்து
விடுவர் என்ற பயத்தினால் தானாம்!
-
--------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 04, 2016 1:38 pm


தயாரிப்பாளர் சங்கத்தில் சலசலப்பு!

-
நடிகர் சங்கத் தேர்தலில், போட்டியிட்டு வெற்றி பெற்ற
விஷாலுக்கு, தற்போது, தயாரிப்பாளர் சங்கத்திலும்
போட்டியிட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது.

அதனால், 'திருட்டு வி.சி.டி., விவகாரத்தில், தயாரிப்பாளர்
சங்கம் சரியாக செயல்படவில்லை...' என்று குற்றம் சாட்டி,
பிரச்னையை துவங்கியுள்ளார். இதற்கு பின்னணியில்,
சில தயாரிப்பாளர்களின் ஆதரவு அவருக்கு இருப்பதாகவும்
கூறப்படுகிறது.

இதனால், தயாரிப்பாளர் சங்கத்தில், சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
-
--------------------------------------
— சினிமா பொன்னையா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 04, 2016 1:40 pm


தெலுங்கிலும் மார்க்கெட் பிடிக்கும் கீர்த்தி சுரேஷ்!

-
தமிழில், விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் என, முன்னணி
கதாநாயகர்களுடன் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்,
-
தெலுங்கு மார்க்கெட்டையும், 'ஸ்டெடி' செய்ய வேண்டும் என,
அங்குள்ள முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு கல்லெறிந்து
வந்தார்.
-
அதில், நானி நடிக்கும், நேனு லோக்கல் என்ற படத்தில் நடிக்கும்
வாய்ப்பு கிடைத்துள்ளதாம்
-
பட்ட பாட்டுக்கு பலன் கைமேலே!
-
-------------------------------------------
— எலீசா



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 04, 2016 1:41 pm


மலை உச்சியில் நடித்த நமீதா!

-
கவர்ச்சி கதாநாயகியான நமீதா, பொட்டு படத்தில்,
சுடுகாட்டில் மயான பூஜை செய்து, பேய்களை வசப்படுத்தும்
மந்திரவாதியாக நடித்துள்ளார்.

இப்படத்திற்காக கொல்லிமலை உச்சியில், இரண்டாயிரம் அடி
உயரத்தில் ஒரு காட்சியை படமாக்கியுள்ளனர்.

வாகனங்கள் அங்கு செல்லாது என்பதால், தினமும், 4 கி.மீ., நடந்து
சென்று, அந்த லொகேஷனில் நடித்துள்ளார்.

கூத்துக்கு ஏற்ற கொட்டுக் கொட்டுகிறது!
-
---------------------------------------------
— எலீசா


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 04, 2016 1:41 pm


சிவகார்த்திகேயனின், 'ரேஞ்ச்' எகிறியது!
-
காமெடி கலந்த கதைகளில் நடித்து வந்த சிவகார்த்திகேயன்,
ரெமோ படத்தில், பெண் வேடத்தில் நடித்து, அடுத்த கட்டத்துக்கு
சென்றுள்ளார்.

அத்துடன், இப்படத்தில், பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்,
ஆஸ்கர் விருது பெற்ற, சவுண்ட் இன்ஜினியர் ரசூல் பூக்குட்டி
என முன்னணி டெக்னீஷியன்களை இணைத்து, மெகா
பட்ஜெட்டில் படத்தை தயாரித்துள்ளார்.

அப்படி சிவகார்த்திகேயன் தயாரித்து, நடித்துள்ள, ரெமோ படம்,
தற்போது, தமிழகம் மற்றும் கேரளாவில், 34 கோடி ரூபாய்க்கு
விற்பனையாகி உள்ளது. இதனால், கோலிவுட்டில்,
சிவகார்த்திகேயனின், 'ரேஞ்ச்' எகிற துவங்கியுள்ளது.
-
— சினிமா பொன்னையா
-
------------------------------------------------
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 08, 2016 8:54 am

 இந்த வார சினிமா செய்திகள் QC8Oz06RS7GEQukpZFWv+306766896neha
-
அண்மைக்காலம் வரை சன் தொலைக் காட்சியின்
தரமிக்க படைப்புகளாக விளங்கின ராடன் டி.வியின்
தொடர்கள்.

சன் தொலைக்காட்சி நிர்வாகம் ராடன் நிறுவனத்திற்கும்
அதன் உரிமையாளர் ராதிகாவுக்கும் எல்லா வகையிலும்
முன்னு ரிமையும் முக்கியத்துவமும் அளித்தது.

இந்நிலையில் ராதிகாவுக்கும் சன் தொலைக்காட்சிக்குமான
பந்தம் விரைவில் முடிவுக்கு வருவதாகக் கூறப்படுகிறது.
ராதிகாவின் இடத்தை நிரப்ப வேண்டும் என்றால் அதற்கு
சரியான நபர் யார் என்று எப்படி எப்படியோ
யோசித்தவர்களுக்கு மனதில் தோன்றியவர் குஷ்புதானாம்.

உடனே அவரைத் தொடர்பு கொண்டு பேச, விதவிதமான
நிகழ்ச்சிகளால் ‘சன்’னுக்கு துணை நிற்க சபதம் போட்டு
விட்டாராம் குஷ்பு.

அவரது முதல் அடியே அமர்க்களமாக உள்ளதாகக் கேள்வி.
திருமணமான நாளில் இருந்தே ‘சின்னத்திரைக்கு வந்து
விடுங்கள்’ என்று சினேகாவை நச்சரித்து வந்த
சினிமாக்காரர்களுக்கு பதிலளிக்காத சினேகா, குஷ்பு
அழைத்ததும் ‘சரிக்கா’ என்று கூறிவிட்டாராம்.

விரைவில் இந்த அறிவிப்பு முறைப்படி வரலாம்.
இதற்கிடையில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்கும்
படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்
சினேகா.

——————————–
தமிழ்முரசு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 08, 2016 8:55 am

 இந்த வார சினிமா செய்திகள் Y6NNofCT9q1WixgRWIU2+cine-visakasingh
-


தமிழில், ‘பிடிச்சிருக்கு’, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’, ‘வாலிபராஜா’, ‘பயம் ஒரு பயணம்’ ஆகிய படங்களில் நடித்தவர் விசாகா சிங். விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் குறைவான படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல நடிகை எனப் பெயர் வாங்கியுள்ளார். அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்ற விருப் பம் இல்லையாம். எண்ணிக்கையை விட தரம் தான் முக்கியம் என்பதே விசாகாவின் கொள்கையாம். “ஒரே ஒரு படத்தில் நடித்தாலும் அது மற்றவர்க ளால் பாராட்டப்படுகிறதா எனப் பார்க்க வேண் டும். அது ஒருபுறம் இருக்க, நான் நடிக்கும் பட மும் அதில் ஏற்றிருக்கும் பாத்திரமும் தனிப்பட்ட வகையில் என்னைத் திருப்திப்படுத்துகிறதா? என்பதும் முக்கியம். பந்தயத்தில் ஓடும் பெண் அல்ல நான்.

திரைப்படங்களைத் தவிர சொந்தமாகத் தொழில் செய்கிறேன். அதிலும் என் கவனம் இருக்கிறது,” என்கிறார் விசாகா. பேயாக நடித்த அனுபவம் குறித்து?

“அண்மையில் வெளியான ‘பயம் ஒரு பயணம்’ படத்தில் பேய் வேடத் தில் நடித்தது உண்மையிலேயே வித்தியாசமான அனுபவமாக இருந்தது. மூணாறு பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. அதுவும் இரவு நேரங்களில் படப்பிடிப்பு என்றாலே, படக்குழுவினர் பயந்து நடுங்குவார்கள்.

“கடும் குளிர். பேய் வேடத் துக்கு ஒப்பனை போடவே நிறைய நேரம் ஆகும். வழக்கமான கதாபாத்திரங்களில் நடிப்பதை விட கூடுதல் கவனம் செலுத்தி பேய் வேடத்தில் நடித்தேன். பயமுறுத்த வேண்டும் என்றால் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டு நடித்தால்தான் முடியும். தமிழ்ப் படங்களில்

இடைவெளி விடுகிறீர்களே?

“நான் தமிழில் மட்டுமே நடிக்கவில்லை. இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் என எல்லா மொழிகளிலும் நடிக்கிறேன். மேலும் வெளிநாட்டில் சொந்தமாகத் தொழில் செய்வதால் அதில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அதனால்தான் தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்க முடியவில்லை.

நடிகைகளின் போட்டியால் வாய்ப்பு வரவில்லையா?

“அப்படிச் சொல்ல முடியாது. எனக்கு வர வேண்டிய வாய்ப்பு கள் கண்டிப்பாக வந்தே தீரும் என்ற நம்பிக்கை உண்டு. அதன்படி வாய்ப்புகள் தேடி வந்தன. நிறைய மொழிகளில் நடித்தாலும், தமிழில் நடிப்பதற்கு தனிக் கவனம் செலுத்து கிறேன். பலவித வேடங்களில் நடிக்க ஆர்வத்துடன் காத்தி ருக்கிறேன்,” என்கிறார் விசாகா.

தமிழ்முரசு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 08, 2016 8:56 am

கிராமத்துப் பெண்ணாக மகிமா
-
-
 இந்த வார சினிமா செய்திகள் KfTWgSd1Q3Gd41qBJjwo+cineMahima-Nambiar
-
‘குற்றம் 23’ என்ற படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக
தென்றல் என்ற ஆசிரியை வேடத்தில் நடிக்கிறார் மகிமா.

இந்தப் படம் தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்த
உதவி செய்திருப்பதாகக் கூறுகிறார். “கேரளாவில் நகரத்துப்
பெண்ணாக வளர்ந்த நான் கிராமத்துப் பெண்ணாக நடிக்க
மிகவும் சிரமப்பட்டேன்.

இதைப் புரிந்துகொண்ட இயக்குநர் ராஜ்குமார் படப்பிடிப்பு
நடந்த திருவண்ணாமலை பகுதியிலுள்ள கிராமத்துக்குச்
சென்று அங்குள்ள பெண்களிடம் பேசிப் பழகச் சொன்னார்.

“அதன்படி ஒரு வாரம் அந்தக் கிராமத்தில் தங்கி, அங்குள்ள
பள்ளிக்குச் சென்றதுடன் அங்கிருந்த பெண்கள் எப்படிப்
பேசுகிறார்கள், பழகுகிறார்கள் என்றும் தெரிந்து கொண்டேன்.
அதன் பிறகு என்னால் இயல்பாக நடிக்க முடிந்தது” என்று
சொல்லும் மகிமாவுக்கு தமிழில் பின்னணி (டப்பிங்) பேச
ஆசையும் ஆர்வமும் உள்ளதாம்.

எனினும், அவரது பேச்சில் மலையாள வாடை வீசுவதால்,
வேறொருவர் இவருக்குப் பின்னணி குரல் கொடுத்து வருகிறார்.
அடுத்து வெற்றிமாறன் தயாரிப்பில் தினேஷ் ஜோடியாக
‘அண்ணனுக்கு ஜே’ படத்தில் நடிக்கிறார் மகிமா.

—————————————

தமிழ்முரசு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக