புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீரிழிவு நோயைக் --  வளமான வாழ்விற்கு உணவே மருந்து Poll_c10நீரிழிவு நோயைக் --  வளமான வாழ்விற்கு உணவே மருந்து Poll_m10நீரிழிவு நோயைக் --  வளமான வாழ்விற்கு உணவே மருந்து Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீரிழிவு நோயைக் --  வளமான வாழ்விற்கு உணவே மருந்து Poll_c10நீரிழிவு நோயைக் --  வளமான வாழ்விற்கு உணவே மருந்து Poll_m10நீரிழிவு நோயைக் --  வளமான வாழ்விற்கு உணவே மருந்து Poll_c10 
284 Posts - 45%
heezulia
நீரிழிவு நோயைக் --  வளமான வாழ்விற்கு உணவே மருந்து Poll_c10நீரிழிவு நோயைக் --  வளமான வாழ்விற்கு உணவே மருந்து Poll_m10நீரிழிவு நோயைக் --  வளமான வாழ்விற்கு உணவே மருந்து Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
நீரிழிவு நோயைக் --  வளமான வாழ்விற்கு உணவே மருந்து Poll_c10நீரிழிவு நோயைக் --  வளமான வாழ்விற்கு உணவே மருந்து Poll_m10நீரிழிவு நோயைக் --  வளமான வாழ்விற்கு உணவே மருந்து Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நீரிழிவு நோயைக் --  வளமான வாழ்விற்கு உணவே மருந்து Poll_c10நீரிழிவு நோயைக் --  வளமான வாழ்விற்கு உணவே மருந்து Poll_m10நீரிழிவு நோயைக் --  வளமான வாழ்விற்கு உணவே மருந்து Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நீரிழிவு நோயைக் --  வளமான வாழ்விற்கு உணவே மருந்து Poll_c10நீரிழிவு நோயைக் --  வளமான வாழ்விற்கு உணவே மருந்து Poll_m10நீரிழிவு நோயைக் --  வளமான வாழ்விற்கு உணவே மருந்து Poll_c10 
19 Posts - 3%
prajai
நீரிழிவு நோயைக் --  வளமான வாழ்விற்கு உணவே மருந்து Poll_c10நீரிழிவு நோயைக் --  வளமான வாழ்விற்கு உணவே மருந்து Poll_m10நீரிழிவு நோயைக் --  வளமான வாழ்விற்கு உணவே மருந்து Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நீரிழிவு நோயைக் --  வளமான வாழ்விற்கு உணவே மருந்து Poll_c10நீரிழிவு நோயைக் --  வளமான வாழ்விற்கு உணவே மருந்து Poll_m10நீரிழிவு நோயைக் --  வளமான வாழ்விற்கு உணவே மருந்து Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நீரிழிவு நோயைக் --  வளமான வாழ்விற்கு உணவே மருந்து Poll_c10நீரிழிவு நோயைக் --  வளமான வாழ்விற்கு உணவே மருந்து Poll_m10நீரிழிவு நோயைக் --  வளமான வாழ்விற்கு உணவே மருந்து Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நீரிழிவு நோயைக் --  வளமான வாழ்விற்கு உணவே மருந்து Poll_c10நீரிழிவு நோயைக் --  வளமான வாழ்விற்கு உணவே மருந்து Poll_m10நீரிழிவு நோயைக் --  வளமான வாழ்விற்கு உணவே மருந்து Poll_c10 
7 Posts - 1%
mruthun
நீரிழிவு நோயைக் --  வளமான வாழ்விற்கு உணவே மருந்து Poll_c10நீரிழிவு நோயைக் --  வளமான வாழ்விற்கு உணவே மருந்து Poll_m10நீரிழிவு நோயைக் --  வளமான வாழ்விற்கு உணவே மருந்து Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீரிழிவு நோயைக் -- வளமான வாழ்விற்கு உணவே மருந்து


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 23, 2009 5:27 am

Diabetes

நீரிழிவு நோயைக் --  வளமான வாழ்விற்கு உணவே மருந்து Diabetesவளமான வாழ்விற்கு உணவே மருந்து

- டாக்டர் றொசாரியோ ஜோர்ஜ், Ph.D.,



நின்று கொல்லும் நீரிழிவும்
கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்


பத்தும் பறந்திடும் பசி வந்தால் மறைந்திடும் என்பது வாழ்க்கையில் ஒவ்வொருவருமே உணர்ந்திருக்கும் வாழ்வியல் யதார்த்தம். அதாவது மானம், கல்வி, அறிவு, தவம், தாளாண்மை, பலம், வன்மை, தானம், முயற்சி, காதல் என்பவையே பசியினால் பறந்திடும் பத்துமாகும். ஆனால் பசிக்கு அளவுடன் புசிக்காதுவிடின் பத்துடன் பதினொன்றாக அரிய உயிரையே பறிகொடுக்கும் பரிதாபம் நமக்கு ஏற்படும்.

மனித வாழ்விலே சந்தோஷம் என்றாலே இனிப்பு என்பதே பொருள். ஆனால் அளவுக்கு மீறினால் அமர்தமும் நஞ்சு என்பது ஆன்றோர் வாக்கு. அவ்வாறே இன்மையைக் கொடுக்கும் இந்த இனிப்பு நமது இரத்தத்தில் அதிகமாகும்போது அதுவே நமது உயிரைக் குடிக்கும் விஷமாக மாறுகிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருந்தால் தான் நமது உடலும் ஆரோக்கியமான நிலையில் இருக்கும்.

நம் வயிற்றுப் பகுதியில், கல்லீரலுக்கு சற்று கீழே கணையம் எனப்படும் சுரப்பி காணப்படுகிறது. இதனால் சுரக்கப்படும் இன்சுலின் (Insulin) என்னும் சுரப்பினாலேயே இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சமநிலையில் பேணப்படுகிறது. நாம் உண்ணும் உணவில் மாச்சத்து (Carbohydrate) அதிகமாகும் போது அது குளுக்கோசாக மாறி இரத்தத்தில் கலக்கும்போது இன்சுலினால் சர்க்கரை சமநிலை பேணப்பட மிகுதி சர்க்கரை நமது உடலில் கிளைக்கோசனாக (Glycogen) சேமித்து வைக்கப்படுகிறது. பிறகு உடலுக்குத் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் இக்கிளைக்கோசன் குளுக்கோசாக மாறி சக்தியைத் தருகிறது. இந்தப் பணி சரிவர நடைபெற வேண்டுமென்றால் நமது கல்லீரலும் எந்தப் பாதிப்பும் இல்லாது நன்கு வேலை செய்ய வேண்டும்.

நீரிழிவு நோய் இன்சுலின் அளவு குறைவதாலும் (Insulin Deficiency) கணையம், கல்லீரல் போன்றவை நோய்க்குட்பட்டு இருக்கும் நிலையில் சுரந்த இன்சுலின் சரிவர உபயோகப்படுத்தப் படாமல் இருப்பதாலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகி Hyperglycemia என்ற நிலை ஏற்படுகிறது. இதையே நாம் சர்க்கரைநோய் அல்லது நீரிழிவு நோய் என்கிறோம்.


நீரிழிவு நோயின் அறிகுறிகள்

1. அடிக்கடி சிறுநீர் கழித்தல் (Polyaria)
2. அடிக்கடி சிறுநீர் கழித்தலால் தாகம் அதிகரித்தல் (
Excesssive Thirst)
3. களைப்புத் தன்மை (Weakness)
4. எடை குறைவு (
Weight Loss)
5. பசி அதிகரித்தல் (
Increased appetite)
6. நாவறட்சி (
Dry mouth)
7. காயம் ஏற்பட்டால் விரைவில் ஆறாமை.



நீரிழிவு நோயினால் பாதிக்கப்படும் உறுப்புகள்

ரெட்டினா பகுதி பாதிப்படைவதனால் கண் பார்வையை இழக்கும் சந்தர்ப்பம் ஏற்பட வாய்ப்புண்டு. இதற்கு டயபடிக் ரெட்டினோபதி (Diabetic Retinopathy) என்று பெயர். அதிகளவு சிறுநீர் கழிப்பதனாலும் சிறுநீரகங்களின் அதிகளவு செயற்பாட்டின் காரணமாகவும் சிறுநீரகங்கள் பாதிப்படைகின்றன. இதற்கு டயபடிக் நெவ்ரோபதி (Diabetic Nepropathy) என்று பெயர். இரத்தக்குழாய்கள் சுருக்கமடைவதினால் கை, கால் என்பனவற்றின் இழையங்களுக்குத் தேவையான போஷாக்குச் சரிவரக் கிடைக்கப் பெறாததினால் கலங்களுக்குத் தேவையான போஷாக்கின்மையால் கலங்கள் இறக்கத் தொடங்குகின்றன. இதன் அறிகுறியாக பாதிக்கப்பட்ட பகுதிகள் கறுத்தும் உணர்ச்சியற்றும் போகின்றன.


இதுவே டயபடிக் கங்கரின் (Diabetic Gangrene) என்றழைக்கப்படுகிறது. இதனால் நாம் பாதிப்பேற்படும் உறுப்பை இழக்க வேண்டியும் வரலாம். இது மட்டுமின்றி மாரடைப்பு, இதய நோய்கள் என்பனவும் ஏற்படவும் வாய்ப்புண்டு.

அத்துடன் சர்க்கரை வியாதி கை, கால் நரம்புகள், எலும்புகளையும் பாதிக்கின்றன. இது டயபடிக் நியூரோபதி (Diabetic Neuropathy) எனப்படும். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தசைப்பிடிப்பு, வலி, எரிச்சல் மற்றும் மூட்டுவலி போன்ற அறிகுறிகள் தெரியும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் சர்க்கரையின் அளவைக் குறைப்பதற்காக உபயோகிக்கும் மாத்திரைகளை எடுத்த பின்னர் உணவு உட்கொள்ளத் தவறுவதும் அதாவது உண்பதில் நேரந்தவறாமை கடைப்பிடிக்கப்படாமையும், பயத்தினால் சர்க்கரையின் அளவை அளவிற்கு மீறிக் குறைப்பதும் கூட ஆபத்தை விளைவிக்கும். சர்க்கரையின் அளவு குறைந்தால் (Low Blood Sugar) மயக்கம், உடல் வியர்த்தல் போன்றவை ஏற்படும்.

இந்நிலையைத் தவிர்க்க நீரிழிவு நோயாளிகள் எப்போதும் சர்க்கரையோ அன்றி இனிப்புகள் எதாவதோ கைவசம் வைத்திருத்தல் அவசியம். சர்க்கரைக் குறைவை கவனித்து நிவர்த்தி செய்யவிடின் மேலும் குறைந்து கோமா (Coma) நிலை ஏற்படும் அபாயம் உண்டு.

நமது உடலில் சர்க்கரை அதிகமானாலும் சரி, குறைந்தாலும் சரி பாதிப்பு நமக்குத்தான். எனவே நீரிழிவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மூலிகைகள், உணவு முறைகள், உடற்பயிற்சி ஆகியவற்றை முறையாக மேற்கொள்வதன் மூலம் எந்தவிதமான பின்விளைவுகளும் இன்றி நன்றாக வாழலாம் என்பது உறுதி.


தேவையான மூலிகைகள்

வேப்பிலை, வில்வம், அத்தியிலை, முருங்கையிலை, அருகம்புல், நெல்லி, நாவல், சிறுகுறிஞ்சான், கீழாநெல்லி, மாவிலை, வெற்றிலை எல்லா இலைகளையும் நன்கு உலர்த்தி பொடி செய்து கொள்ளவும். இதிலிருந்து இரண்டு தேக்கரண்டி தூள் எடுத்து நீரில் கலந்து காலை, மாலை இரவு உணவிற்கு முன்பாக உண்டுவர பலன் கிடைப்பது உறுதி.

உணவு முறைகள்

தானியங்கள், காய்கள், கொட்டை வகைகள், கீரைகள், பழங்கள் ஆகியவை உணவில் அதிகம் இடம் பெற வேண்டும். காய்களில் வெண்டை, வெள்ளரி, புடலங்காய், சுரைக்காய், கொத்தமல்லியிலை, வெங்காயம், முள்ளங்கி, பாகற்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கூடியளவு அவித்துச் சாப்பிடுவதைத் தவிர்த்து பச்சையாக உண்பதே சாலச்சிறந்தது. ஆரம்பத்தில் இயற்கை உணவுகளை உண்பது சற்றுக் கடினமாக இருந்தாலும் தொடர்ந்து பின்பற்றும் போது சர்க்கரை வியாதி விரைவில் குணமடைய வாய்ப்புண்டு. இயற்கையுணவுகளினால் இன்சுலின் இயற்கையாக உடலில் அதிகம் உற்பத்தியாகும். மேலும் சர்க்கரை வியாதியினால் உண்டாகும் பக்க விளைவுகளான பார்வைக் கோளாறு, சிறுநீரகக் கோளாறு, இருதயப் பாதிப்பு, இரத்தக் குழாய்களில் பாதிப்பு, நரம்பு எலும்புகளில் பாதிப்பு என்பவையும் தடுக்கப்படும்.

சாதாரணமாகவே மனிதனாகப் பிறந்த எவரும் கட்டுப்பாடுடன் வாழ்ந்தால் என்றும் நலமாக வாழலாம். கட்டுப்பாடு என்பது உணவில், உடலில், உணர்வில் என்று மூன்றிலும் கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமாக நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

1. அதாவது முதலில் நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்ளல் வேண்டும். அதாவது சுயக்கட்டுப்பாடு (Self Control). தமக்கு வந்திருக்கும் நோயைப் பற்றியே சிந்தித்துப் பயந்து இன்னும் நோயை அதிகரித்துக் கொள்ளாது இது நோயே கிடையாது, இதை என்னால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என உணர்தல் வேண்டும். இந்த உணர்வை வளர்த்துக் கொண்டால் மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பும் தவிர்க்கப்படும்.

2. தம்மை உணரப் பழகிக் கொள்ள வேண்டும். நம்மை உணர்தல் என்பது நம் அன்றாடப் பழக்க வழக்கங்களில் ஒரு முறைப்பாட்டை உண்டாக்கிக் கொள்ளல் என்று பொருள். அதாவது Systematic எதை எப்போது எப்படிச் செய்ய வேண்டும் என்பது. இதில் மருந்து பாவிக்கும் முறைகள், உணவுமுறைகள் என்பன அடங்கும்.

3. தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்ளல்.

4. மனம் ஒரு குரங்கு. எனவே அதை அடக்கியாளப் பழகுதல், அதாவது எதையும் சாதிக்கும் ஆர்வம் நம்மை நாம் தன்னம்பிக்கைக்குள் தோய்ப்பதிலிருந்தே ஆரம்பிக்கின்றது. தன்னம்பிக்கையே எந்த ஒரு வெற்றிக்கும் உரமாக அமைகிறது. இதுவே நோயை வெல்வதற்குரிய சக்தியை வழங்குகிறது.

5. மனவுறுதி என்பது அதாவது எதையும் தாங்கக் கூடிய இதயம். அது இயற்கையாகவே நம்மிடத்தில் அமைத்துக் கொள்ள நாம் பழகிக் கொள்ள வேண்டும்.

இவையே நாம் நீரிழிவு நோயைக் கொண்டிருந்தால் கடைப்பிடிக்க வேண்டிய பயிற்சிகள் ஆகும். இத்தகு பயிற்சிகளை மேற்கொள்வதனாலேயே நாம் இந்த நோயிலிருந்து விடுபடும் உணர்வை (Relax) அடைவதோடு நோயிருப்பினும் நோயற்ற நூற்றாண்டு வாழ்வைப் பெற்றவர்களாவோம். ஆகவே இவற்றைக் கருத்தில் கொண்டு நீரிழிவு நோய் வந்தாலும், அதனை ஒரு நோய் உபாதையாகக் கொள்ளாமல் நோயையே வென்று வாழ்வோமாக

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 23, 2009 5:30 am

மனஉறுதி

நல்ல உடல் மற்றும மன நலம் காக்கும் தூய சிந்தனையோடு நல்ல பழக்கங்களை மேற்கொள்வதை முடிவானதாக்க மன உறுதி வேண்டும். அகலக்கால் வைப்பதைவிட ‘ஒரு நேரத்தில் ஒரு அடி’ என்று காலை எடுத்து வையுங்கள். நீங்கள் மேற்கொண்ட முயற்சியில் வெற்றி பெற முடியும்.

உண்மையிலேயே பயன் பெற விரும்பினால், நான் இன்னது செய்யப்போகிறேன் என்று திட்டவட்டமாகத் தீர்மானித்துச் செயல்படுங்கள். ‘எது மாற வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதைப்போலவே ‘எதற்காக மாற வேண்டும்’ என்பதும் முக்கியம். அனாவசியச் செலவுகளை குறைத்துச் சேமிக்கப் போகிறேன் என்று பொதுப்படையாகத் தீர்மானிப்பதை விட சேமித்து வீடு வாங்குவேன் என்பது சிறந்த தீர்மானம். நான் தவறான உடலை பாதிக்கக்கூடிய தீய பழக்கங்களை விட்டு விடப்போகிறேன் என்ற சபதம் எடுக்கும் ஒருவர், தனக்காக, தன் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளும் எண்ணத்தில் தீர்மானித்திருந்தால் அவருடைய முயற்சி வெற்றியடையும் வாய்ப்பு அதிகம். காரணம், அவருடைய சுயக் கட்டுப்பாட்டுடன் கூடிய விவேகம் தான்.

அதைப்போன்றே ஒரு வேண்டாத பழக்கத்தை விடுவதைக் காட்டிலும் ஒரு விரும்பத்தக்க பழக்கத்தை மேற்கொள்வது சுலபம். வாக்கிங் போவதற்கே நேரம் கிடைக்கவில்லை என்கிறவர் ஆபிஸோ அல்லது தான் தொழில் புரியும் நிறவனத்திலிருந்தோ கொஞ்ச தூரம் நடந்து வருதலும் அதைப்போன்றே விடுமுறை நாட்களில் காலையோ அல்லது மாலையோ ஆலயம், பூங்கா, மால் போன்ற பெரிய அங்காடி வளாகத்தைச் சுற்றி நடந்தாலோ போதும். இது ஆரோக்கியத்திற்கு, முக்கியமாக மன உளைச்சல், இருதய சம்பந்தமான பிரச்னை, கொலஸ்டரால், கொழுப்பு போன்றவற்றை கட்டுப்படுத்துவதோடு, தூய காற்றை சுவாசிப்பதால் அனைத்து வகைகளிலும் பயன் தரும். வாழ்க்கையில் நலமுடன் இருந்து, சிறந்த நிலையைப் பெற முடியும். பலரும், மெச்சத்தக்க வகையில் விளங்க வேண்டும். பேரும் புகழும் பெற்ற, பிறருக்கு உதவி புரிந்து தர்ம சிந்தனையும் பக்தியுணர்வும் மேலிட தன்நம்பிக்கையுடன் வாழ முற்பட வேண்டும். ஆனால் ஒரு சிலரே அத்தகைய நிலையை அடைகிறார்கள்.

முயன்றால் முடியாதது ஏதும் இல்லை. நம்முடைய நல்வாழ்வு, நம்முடைய வளமான எதிர்காலத்தை உருவாக்கும் ஆற்றல், சக்தி, உயர்ந்த எண்ணங்களுடன் கூடிய தன்னம்பிக்கை அனைத்தும் நம்மிடத்திலேயே இருக்கிறது. பிறரைச் சார்ந்து நிற்பதால் பயன் விளையாது என்பதை உணர வேண்டும். சிறப்பாக நலமாய் வாழ வேண்டுமா? அதற்கு அடிப்படையாக அமைவது பின்வரும் வழிமுறைகள் தான்.


அவையாவன :

பசித்துப் புசி - மனதை ஒருமுகப்படுத்தி எப்போதும் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவ முற்படுதல் - நல்ல ஆரோக்கியத்திற்கு உபவாசம் (எகாதசி தினங்கள் உண்ணாவிரதம் மேற்கொள்வது என்பது - தமிழர்களின் கலாச்சார மரபு) கோபத்தை கட்டுபடுத்துவது - இயற்கை உணவு வகைகளான பச்சைக் காய்கறிகள், பழ வகைகள், மூலிகை ஜூஸ், சோயா பால், தயிர், மோர் ஆகியவற்றோடு வேக வைத்த உணவு வகைகள் ஆகியவை உடல் ஆரோக்கியத்திற்கு உதவுபவை - யோகா, தியானம் நடைப்பயிற்சி, ஆலய வழிபாடு - இரவு நிம்மதியான நித்திரை - குடும்ப இயற்கை மருத்துவரை அடிக்கடி கலந்து ஆலோசித்து நோய் வருமுன் காப்பதற்கும், வந்தபின் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகளில் கவனமாக இருத்தல் என் அடுக்கிக்கொண்டே போகலாம்.


இன்றைய கால கட்டத்தில் வியாதி இல்லாத மனிதனே இல்லை என்று சொல்லி விடலாம். ஆனால் வியாதி அதுவா வரலை, நாமாகவே வரவழைச்சுட்டு அப்புறம் நாமே உடம்பு சரியில்லை என புலம்புகிறோம். உதாரணத்துக்குப் பெண்களையே எடுத்துக் கொள்ளுங்கள்.

பொதுவாகவே அனைத்து வீடுகளிலும் அவர்களுக்கு பிசிகல் வொர்க் ரொம்பக் குறைச்சல். காரணம், இந்தக் காலச் சூழ்நிலை, விஞ்ஞான நாகரிக முன்னேற்றம், புதிய புதிய கண்டுபிடிப்புகள் நாளுக்கு நாள் சந்தைப்படுத்தப்படும் விதம், தாயகத்தில் வாழும்போது அன்றாடம் நமது வீட்டில் உள்ள பெண்களின் அன்றாட வேலைகளே ஓய்வின்றி இருக்கும். காலையில் இருந்து மாலை வரை, வீட்டையும் சுற்றுப்புறத்தையும் பெருக்கி சுத்தம் செய்து, மெழுகி கோலம் போட்டு, காலை-மதியம்-இரவு உணவு தயாரித்தல், நெல் குத்தறது, மாவு அரைப்பது என்று இருந்தார்கள்.

இன்று நவீன இயந்திரங்கள் இவற்றைச் செய்கின்றன. ஆனா உடம்பு ஒரே உடம்புதானே? வேலை செய்யாம ஒரு மெஷினை நிறுத்தி வையுங்க. துருப்பிடிச்சுப் போகாதா? அதைப்போலத்தான் மனித உடம்பும், மூளையால் வேலை செய்ய ஆரம்பிச்சு உடம்பு வேலையைக் குறைச்சுட்டோம். எத்தனையோ நவீன தொழில் நுட்பங்களைத் தெரிந்து கொண்டிருக்கும் நாம நம் உடம்பைப் பற்றிய அந்த அடிப்படை விஷயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும், இல்லையா? தெரியுது, ஆனால் அலட்சியப் படுத்துகிறோம். டயட்டில் இருக்கேன். சாப்பாட்டைக் குறைத்து விட்டேன்.

ஆனாலும் உடம்பு பெருத்து விட்டதே என்பதெல்லாம் சரியில்லை. அது தேவையில்லை. நன்றாக பசி இல்லாமல் வயிறு நிறையச் சாப்பிடலாம். ஆனால் என்ன சாப்பிடுகிறோம் என்பதைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

முப்பது வயதிற்கு மேல் ஆண்களாயினும், பெண்களாயினும் நிறைய காய்கறிகளை சாப்பிடலாம். அப்படியென்றால் எண்ணெயில் போட்டு வதக்கிய பொறியல் அல்ல.

வேகவைத்த காய்கறிகள், பாசிப்பயிறு சேர்ந்த கூட்டு, காரட், வெள்ளரி, பச்சை வெங்காயம், அனைத்து கீரை வகைகள், சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். அழகுக்காக லோஷன், கிரிம், பேஸ்ட் என வேஸ்டாக அலைவதை விட்டு, இயற்கை நமக்கு அளித்துள்ள காய்கறிகளோடு டு இன் ஒன்னாக வேலை செய்யும்.

இவை உடம்பை பெருக்க வைப்பதில்லை. அழகிய தோற்றத்தையும் நல்ல ஆரோக்கியத்தையும் கொடுக்கும். அனைத்து உடல் அங்கங்களும் பொலிவும் திடமும் தந்து சிறந்த தோற்றத்தை அளிக்கும்.

நாம் தினமும் குளிப்பது, சாப்பிடுவது என்பதையெல்லாம் வாழ்க்கையில் ஒரு கட்டாய அங்கமாக வைத்திருக்கிறோம். இல்லையா? அதுபோலவே இந்த காய்கறிகளை, முக்கியமாக அனைத்து கீரை வகைகளையும் பழங்களையும் அதிக அளவில் சேர்த்துக் கொள்வதையும் கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும். ஓரளவு நாம் விரும்பும் மற்ற அசைவ உணவுகளையும் சாப்பிடலாம். இப்படி உணவே மருந்தானால் நோயற்ற வாழ்வு என்பது எளிதாகும்.

ஒவ்வொரு உடலிலும் மூலாதாரமான ஒரு சக்தி இருக்கிறது. அந்த சக்தி நல்ல நிலையில் இருந்தால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். அச்சக்தி தன் பலத்தில் குன்றினால் அதன் தன்மைக்கேற்ப வியாதிகள் தோன்றுகின்றன. இதுவே சித்தர்களின் கோட்பாடாகும். இந்த அடிப்படையில் தான் சித்தர்கள் வியாதி வராமல் தடுக்கவும், வந்தபின் தீர்க்கவும் இயற்கை மருத்துவ வழி வகைகளை கண்டுபிடித்து நமக்கெல்லாம் தந்திருக்கின்றார்கள். எனவே இயற்கை மருத்துவ சிகிச்சை என்பது அந்த அளவிற்கு மிகவும் பயனுள்ள அற்புதமான வரமாக நமக்கு இறைவன் அளித்திருக்கிறார்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 23, 2009 5:31 am

ந‌ன்றி - டாக்டர் றொசாரியோ ஜோர்ஜ், Ph.D., நீரிழிவு நோயைக் --  வளமான வாழ்விற்கு உணவே மருந்து 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக