புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_c10பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_m10பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_c10பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_m10பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_c10 
3 Posts - 8%
heezulia
பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_c10பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_m10பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_c10பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_m10பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_c10பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_m10பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 16, 2016 8:50 am


பயங்கரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்தார்.

நாட்டின் 70-ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் திங்கள்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தில்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் முப்படை வீரர்கள் நினைவிடம்

அமைந்துள்ள "அமர் ஜவான்' ஜோதிக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி ஆகியோர் காலையில் வந்து மரியாதை செலுத்தினர்.

ராஜ்காட்டில் மலரஞ்சலி:

இதைத்தொடர்ந்து ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்று மலரஞ்சலி செலுத்தினார். பின்னர் சுதந்திர தின விழா நடைபெறும்

செங்கோட்டை வளாகத்துக்கு வந்த மோடியை பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், முப்படைத் தளபதிகளான ஜெனரல் தல்பீர் சிங் சுஹாக் (ராணுவம்), அட்மிரல் சுனில் லம்பா (கடற்படை),

ஏர் சீஃப் மார்ஷல் அரூப் ராஹா (விமானப்படை) ஆகியோர் வரவேற்றனர்.

வன்முறையைக் கைவிட இளைஞர்களுக்கு அழைப்பு:

செங்கோட்டை வளாகத்தில் முப்படையினரின் அணிவகுப்பைப் பார்வையிட்ட பின், திறந்தவெளி மேடையில் பிரதமர் மூவர்ணக் கொடியை ஏற்றினார். பின்னர் நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய 93 நிமிட

உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

கடந்த சில நாள்களாக பலூசிஸ்தான், கில்கித், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் எனது அணுகுமுறையைப் பாராட்டி நன்றி தெரிவித்து வருகின்றனர். இது 125 கோடி

இந்தியர்களுக்கு கிடைத்த மரியாதை. "ஒரே சமூகம், ஒரே இயக்கம், ஒரே லட்சியம்' என்பதே நமது இலக்காக இருக்க வேண்டும்.

பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள பள்ளியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் ஏராளமான அப்பாவிக் குழந்தைகள் கொல்லப்பட்டனர். அப்போது அவர்களுக்காக

இந்தியாவில் உள்ள குழந்தைகளும், நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களும் கண்ணீர் சிந்தினர். ஆனால், இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெறும்போது பாகிஸ்தானில் அது கொண்டாடப்படும்

சூழ்நிலை உள்ளது. நம்மைத் தாக்குவோரை அவர்கள் (பாகிஸ்தான்) போற்றுகின்றனர்.

இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பரஸ்பரம் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெறும்போது இந்த நாடுகளின் அணுகுமுறையில் உள்ள இந்த வித்தியாசத்தை சர்வதேச சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.பயங்கரவாதத்துக்கும் வன்முறைக்கும் இந்தியா ஒருபோதும் அடிபணியாது. வன்முறையைக் கைவிட்டு அமைதிப் பாதைக்கு ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் திரும்பி வர வேண்டும். அவர்கள் தேசிய

நீரோட்டத்தில் இணைய வேண்டும். இளைஞர்கள் தங்கள் பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும். வன்முறைப் பாதை யாருக்குமே பயனளித்ததில்லை.

சொந்த மக்களுடன் மோதிக் கொள்வது நம்மை நாமே அழித்துக் கொள்வதற்கு ஒப்பாகும். வறுமையை ஒழித்தால் மட்டுமே ஒரு நாடு செழுமை அடையும் என்பதை நட்பு நாடுகளிடம் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

சமூக நல்லிணக்கம்:

சமூக நீதியின் அடிப்படையிலான வலுவான சமூகம் இல்லாமல் ஒரு வலுவான நாட்டை நிர்மாணிக்க இயலாது. ஜாதியவாதம் அல்லது தீண்டாமை போன்ற தொன்றுதொட்டு வரும்

சமூக அவலங்களைச் சமாளிக்க கடுமையான அணுகுமுறை அவசியமாகும்.

சமூக நல்லிணக்கமே நாட்டின் முன்னேற்றத்துக்கு முக்கியமானதாகும். ஸ்ரீ ராமானுஜர்., மகாத்மா காந்தி, புத்தர், பி.ஆர்.அம்பேத்கர் மற்றும் நம் நாட்டின் அனைத்து புனிதத் துறவிகளும் குருமார்களும் சமூக ஒற்றுமையைத்தான் வலியுறுத்தினர்.

சமூகம் சிதறும்போது ஒட்டுமொத்த சாம்ராஜ்யமே சரிந்து விடுகிறது. தீண்டத்தக்கவர்கள் என்றும் தீண்டத்தகாதவர்கள் என்றும் உயர்ஜாதி-கீழ்ஜாதி என்றும் சமூகம் பிளவுபடும்போது அந்தச் சமூகம் நீடித்து நிற்பதில்லை.

அரசு மீதான எதிர்பார்ப்பு: இதற்கு முன் மத்தியில் ஆண்ட அரசு (காங்கிரஸ் கூட்டணி அரசு) மீது குற்றம்சாட்டும் போக்கே அதிகமாகக் காணப்பட்டது. அந்த நிலை இப்போது மாறி, அதிக எதிர்பார்ப்புகள் நிறைந்த அரசாக ஆளும் அரசை மக்கள் பார்க்கின்றனர். வருமான வரித் துறை மீது நடுத்தர வர்க்கத்தினர் அச்சம் கொண்டு வாழ்ந்த நிலை தற்போது மாறி வருகிறது. எளிமைப்படுத்தப்பட்ட வரி செலுத்தும் நடைமுறைகளில் மக்கள் ஆர்வத்துடன் பங்கெடுத்து வருகின்றனர்.

நம் நாட்டில் சராசரியாக இரண்டு கோடி பேர் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) கேட்டு விண்ணப்பிக்கின்றனர். ஏழை மக்களுக்கு விண்ணப்பித்த ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் கடவுச்சீட்டு கிடைக்கிறது.

மத்திய அரசுப் பணியில் குரூப் சி, டி பிரிவுகளில் நிலவி வந்த நேர்காணல் முறை தற்போது ஒழிக்கப்பட்டு விட்டது என்றார் மோடி.

இதுவே முதல் முறை: பலூசிஸ்தான், கில்கித் போன்ற, பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை இந்தியப் பிரதமர் ஒருவர் தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டுப் பேசுவது இதுவே முதல் முறையாகும்.

தினமணி



பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 16, 2016 8:54 am

செங்கோட்டையில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவையொட்டி சுமார் 110 நிமிடங்களை பிரதமர் நரேந்திர மோடி நிகழ்வு நடைபெற்ற பகுதியில் செலவிட்டார்.

அது குறித்த விவரம் வருமாறு:

காலை 7.23 மணி முதல்: செங்கோட்டை வருகை, பாதுகாப்பு அமைச்சர், அத்துறைச் செயலர், முப்படைத் தளபதிகள் வரவேற்பு.

முப்படைகளில் தலா 24 வீரர்கள் அடங்கிய குழு அணிவகுப்பு பார்வை.

சியாச்சின் பனிமலைச் சிகரத்தில் பாதுகாப்பில் ஈடுபட்ட ஜம்மு காஷ்மீர் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் அணிவகுப்பில் பங்கேற்பு.

காலை 7.30 மணி: மூவர்ணக் கொடி ஏற்றுதல், 21 குண்டுகள் விண்ணை நோக்கி முழக்கம், தேசிய கீதத்தை விமானப்படை வீரர்கள் குழு வாசித்தது, பிரதமர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக திறந்தவெளி மேடையில் சுதந்திர தின உரை.

வெள்ளை நிற குர்தா; ஆரஞ்சு, சிவப்பு, பிங்க் என்ற கலவை நிறத்தில் ராஜஸ்தான் டர்பன் அணிந்து பிரதமர் மோடி பேச்சு.

விழா முடிவில் பள்ளி மாணவர்களுடன் வாழ்த்து பரிமாறல். முதலாண்டில் கைப்படம் எடுக்க அனுமதித்தார் மோடி. எனினும், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கைப்படம் எடுக்க அனுமதி மறுத்ததால் மாணவர்கள் ஏமாற்றம். விழா முடிந்து காலை 9.10 மணிக்கு செங்கோட்டை வளாகத்தில் இருந்து பிரதமர் புறப்பட்டார்



பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Tue Aug 16, 2016 10:45 am

பயங்கர வாதத்தை வேறோடு அறுப்போம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக