புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Jenila | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)
Page 8 of 12 •
Page 8 of 12 • 1, 2, 3 ... 7, 8, 9, 10, 11, 12
- முனைவர் ப.குணசுந்தரிபண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
First topic message reminder :
சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர்
(நற்றிணையிலிருந்து)
உடல் உறுப்புக்களுள் குறைத்தால் வளரும் சிறப்புடையது மயிர். என்றாலும் அவ்வுறுப்பை இழப்பதற்கு யாரும் விரும்புவதில்லை. ஏன் பெரியோர் முதல் சிறியோர் வரை ஆணோ? பெணணோ? யாராயினும் அவரவர் நிலைக்கு ஏற்றபடி அவ்வுறுப்பினைப் பேணி பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றனர். இதுகுறித்து இன்று ஊடகங்களில் வரும் விளம்பரங்கள் எத்தனை?
ஊரார்கண் படட்டும் படட்டும்
உற்றார்கண் படட்டும் படட்டும்
ஆடவர்கண் படட்டும் படட்டும்
உண் கண்ணே பட ட் டும்
எனச் சீயக்காய்க்கு வரும் விளம்பரம் பெண்ணின் கூந்தலுக்கானது. (மயிருக்கானது) நீண்டு வளர்ந்த கூந்தலின் (மயிரின்) பின்னல் அசைவு அழகு. கூந்தலின் வளர்ச்சிக்கு ஆரோக்கியத்திற்கு மீரா சீயக்காய் நல்லது என வரும் விளம்பரம் உண்மையில் அழகுதான்.
ம்ருதுவான இயற்கையான தோற்றம் பெற்ற முடிக்காக ........................ (ஃபாரவர் ( forever) இருந்தால் அது வாழ்க்கைக்குப் புன்னகை சேர்க்கும் என வரும் கோத்ரேஜ் ஃபாரவர் விளம்பரம் ஆணின் இளநரைக்கு இயற்கை வண்ணம் ஊட்டுவது தொர்பானது.
மயிர் உதிர்விற்கு, பொடுகுதொல்லைக்கு, இளநரைக்கு, மயிருக்கு வண்ணம் ஊட்ட, மயிர் நீண்டு வளர, என மயிர் சார்ந்து வரும் விளம்பரம் எண்ணிறந்தவை.
எண்சான் உடம்பிற்குச் சிரசே பிரதானம் என்பர். அச்சிரசிற்கு அணி சேர்ப்பதால் மட்டும் இவ்வுறுப்பு முக்கியத்துவம் பெறவில்லை. சிரசில் அதன் இருப்பும் வீழ்வும் மாற்றமும் சமூகத்தில் ஏற்படுத்திய மதிப்பீடுகள் தலையாயவை. நந்த வம்சத்து அழிவும் மகாபாரதத்தில் கௌரவர் அழிவும் இராமாயணத்தில் இராவணன் இலங்கை அழிவும் முடிந்த தலைமயிர் அவிழ்ந்து குலைந்ததால் ஏற்பட்டதாக இலக்கியமும் வரலாறும் பதிவு செய்துள்ளன. அவற்றை அறியுமுன் நம் தமிழ் இலக்கியங்களில் இவ்வுறுப்பு சமூக விழுமியம் சார்ந்து எவ்விதம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய என்னுள் ஆர்வம் எழுந்தது.
மயிர் எனும் உறுப்பு இச்சொல்லால் மட்டுமன்றி கூந்தல், ஓதி, கதுப்பு, குரல், குழல், குஞ்சி, முடி, அளகம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுவதை இலக்கியங்களில் காணலாம். இப்பெயர்கள் யாவும் ஆண் பெண் இருபாலாருக்கும் பொதுவாக அன்றி தனித்தனியாகக் குறிக்கவும் வருகின்றன. என்றாலும் தொடரின் இப்பகுதியில் கூந்தல் எனும் சொல்லாட்சியே மிகுதியும் பயன்படுத்தப்படுகிறது.
கறுத்து பொலிவுபெற்ற கூந்தல் – இளமை
இரவுக்குறி வரும் தலைவன் தன் வரவு அறிந்தால் வல்வில் ஓரியின் காடுபோல மணம் வீசுவதும் கருமையாய்த் திரண்டு தழைத்ததுமாகிய கூந்தலை உடைய தலைவி மகிழ்ந்து மயங்குவாள். ஆனால் தன் வரவைத் தலைவிக்கு உரைப்பார் இல்லையே என்று தோழி கேட்ப தன் நெஞ்சிற்குச் சொல்லும் போது (நற்.6: 9- 11) இளமைத் தன்மையுடன் இருக்கும் தலைவியின் கூந்தல் நிலையைத் தலைவன் மூலம் பரணர் குறிப்பிடுகிறார். இது போன்று தலைவியின் இளமைத் தன்மையைக் குறிக்க நற்றிணையின் பல்வேறு பாடல்களில் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. அவை அவிழ் இணர்த், தேம்பாய் மராஅம் கமழும் கூந்தல் (நற்.20: 2- 3) வடிக்கொள் கூழை (நற்.23: 2) இருஞ்சூழ் ஓதி(நற்.26: 7- 9) பொம்மல் ஓதி (நற்.;.71:11>129:3>274:6>293:7) தண் நறுங் கதுப்பும் (நற். 84:1) தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி (நற்.85:9) அம்சில் ஓதி (நற். 90:8> 105:7-10>324:8>355:8) மெல் அம்சில் ஓதி (நற்.370:7) நாறுமயிர்க் கொடிச்சி (நற். 95:8) தேம்கமழ் ஐம்பால் (நற். 100:4) வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளோடு (நற்.139:7) குவளை நாறுங் கூந்தல் (நற். 262:7) இவள்;> ஒலி மென் கூந்தல்(நற்.265: 8-9) ஒலிவரும் தாழ் இருங் கூந்தல்;> ஆயமும் (நற். 295:2>3) வான்முகை இரும்போது கமழும் கூந்தல் (நற். 298:10>11) புனை இரங் கதுப்பின் மனையோள்(நற்.336:5) மின் நேர் ஓதி (நற்.339:9) இவளொடு போன்றனவாகும்.
நரை கூந்தல் - முதுமை
தலைவியைத் தலைவனுடன் உடன்போக்கு விடுக்கும் நிலையில் தோழி தலைவனிடம்
அண்ணாந்து ஏந்திய வனமுலை தளரினும்
பொன்நேர் மேனி மணியின் தாழ்ந்த
நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்
நீத்தல் ஓம்புமதி ……………………… (நற். 10: 1-4)
என்று வரும் பாடலில் இளமையில் உன்னை நம்பி இன்று உன்னுடன் வரும் தலைவி தழுவலுக்குப் பயன்படாமல் முதிர்ந்தாள் என்று கருதி வயது முதிர்ச்சியிலும் அவளைக் கைவிடாது பாதுகாப்பாயாக என்று கூறுமிடத்து வயதின் முதிர்விற்கு உடல் தளர்தலையும் கூந்தல் நரைப்பதனையும் ஓரம்போகியார் குறிப்பிடுகிறார்.
வேறொரு பாடலில் போதனார் எனும் புலவர் உடன்போக்கில் சென்ற தலைவியை நினைத்து இளமையில் அவள் எடுத்த முடிவின் தன்மையை வியக்கும் செவிலியை
அரிநிரைக் கூந்தற் செம்முது செவிலியர் (நற். 110:6)
என மெல்லிய நரைத்த கூந்தலையுடைய முதுமை உடையவள் என்று குறிப்பிடுகிறார்.
புலவர்கள் இளமையையும் முதிர்வையும் குறிக்க மயிரின் நிலையைப் பயன்படுத்தியதைப் போன்று சூழல் மாற்றத்திற்கு ஏற்ப மனிதர்களுக்குள் தோன்றும் பல்வேறு விதமான உணர்வுகளைக் குறிப்பிடவும் பயன்படுத்தியுள்ளனர். இளமையில் நரை முடித்து முறை செய்த கரிகாலன் பற்றிய குறிப்பு பழமொழி நானூற்றில் வருகின்றது. அன்றி இளநரை குறித்த பதிவைக் காணமுடியவில்லை.
கூந்தல் மணத்தல் – மகிழ்ச்சியின் அடையாளம்
முன்பு வினைவயிற் பிரிந்த காலத்தில் என் வருகையை அறிந்த தலைவி அதுவரையில் நீராட்டாது இருந்த தன் கூந்தலைக் கழுவி தூய்மை செய்து சில மலர்களைத் தன் திரண்ட கூந்தலிலே வைக்க அச்சமயத்தில் நான் உள்ளே நுழைந்தேன். என்னைக் கண்ணுற்ற தலைவி மகிழ்ச்சியில் முடித்திருந்த கூந்தல் அவிழ என்னை நோக்கி விரைந்து வந்து அணைத்துக் கொண்டாள்.
……………………………..மெல்லென
மண்ணாக் கூந்தல் மாசுஅறக் கழீஇ
சில்போது கொண்டு பல்குரல் அழுத்திய
அந்நிலை புகுதலின் மெய் வருத்துறாஅ
அவிழ் பூ முடியினள் கவைஇய
மடமா அரிவை மகிழ்ந்து அயர்நிலையே (நற்.42;7-12)
என்று தலைவன் தேர்ப்பாகனிடம் கூறி விரைந்து செல்லுமாறு கூறுவதாகக் கீரத்தனார் குறிக்கின்றார். கூந்தல் அவிழ்ந்து குலைதல் இங்கு மகிழ்ச்சியின் வெளிப்பாடாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாலத்தனார் எனும் புலவர் தலைவியுடன் தலைவன் கூடியிருக்கும் காலத்தில் மகிழ்ச்சியுடன் இருந்ததைக் காட்ட அவள் கூந்தல் மணமுற்றிருப்பதாகக் கூறுகின்றார்.அப்பாடல் வருமாறு
மாக்கொடி அதிரற் பூவொடு பாதிரித்
தூத்தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல்
மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள்
சுணங்குஅணி ஆகம் அடைய முயங்கி (நற். 52 ;1– 4)
சல்லியங் குமரனார் தன் பாலைப்பாடலில் பொருள்வயிற் பிரியக் கருதிய தலைவன் தன்நெஞ்சுக்குக் கூறுவதாக வருவதில் கிள்ளிவளவனின் அம்பர் நகரைச் சூழ்ந்தோடும் அரிசிலாற்றின் தெளிந்த கருமணல் போன்றது இவளுடைய விரிந்ததும் தழைத்து நீண்டதுமான கூந்தல் . அக்கூந்தலில் துயிலும் போது கிடைக்கும் மகிழ்ச்சியை இழக்க விரும்பவில்லை எனும்போது
அரிசில் அம் தண் அறல் அன்ன இவள்
விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே (நற். 141 ; 11 – 12)
என்ற கருத்து இடம்பெறுகின்றது. மற்றொருபாடலில்
பொன்னும் மணியும் போலும் யாழ நின்
நன்னர் மேனியும் நாறுஇருங் கதுப்பும்
………………………………………………………………………
யாதெனின் பிரிகோ - மடந்தை
காதல் தானும் கடலினும் பெரிதே!. (நற்.166)
மேற்குறித்த பாடல்கள் பொருள்வயிற் பிரிந்தால் தலைவி மட்டுமல்ல தானும் துன்புறுவேன் என்பதைக் கூறவரும் தலைவனின் கருத்தாக அமைவன.
பெருங்கௌசிகனார் தம் முல்லைப் பாடலொன்றில் வினைமுற்றி வீடு வந்த தலைவன் அவ்வமயம் மழை பொழிவதைக் கண்டு வாழ்த்தியதாகக் கூறுகிறார். அதில் தலைவன் தன் மகிழ்ச்சிக்குக் காரணமான தலைவி கடை குழன்ற தாழ்ந்த கூந்தலை உடையவள் என்று கூறுவதாக வருகின்றது. (கடைகுழன்ற கூந்தல் என்றால் கூந்தலின் இறுதிப்பகுதி சுருண்டிருப்பதை இது குறிக்கிறது)
வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளோடு
புணர்ந்துஇனிது நுகர்ந்த சாரல் நல் ஊர் (நற். 139; 7- 8)
நக்கீரர் பாடலில் தலைவியின் தாழ்ந்து நீண்டதாக இருக்கும் கூந்தல் மழை வீழ்ச்சிக்கு உவமை சொல்லப்படுகிறது.
…………………………………………………..நின்
தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு ( நற். 197 :5>6)
இப்பாடலில் இக்காலத்தில் பெண்கள் நீண்ட முடியினராக இருந்துள்ளதனை அறியமுடிகிறது.
கூந்தல் புதுமணம் – தலைவி தலைவனுடன் கொண்டுள்ள நட்பறிய உதவுதல்
திருமணத்திற்கு முன்பு தலைவி தலைவனுடன் நட்பு கொண்டிருக்கும் காலத்து அவள் தோற்றம் பொலிவு பெறுவதுடன் கூந்தலும் புதிதாய் மணக்கிறது. இதைத் தொடக்கத்தில் அறியும் தாய் தலைவியிடம் கேட்கிறாள். தலைவி ஏதும் அறியாதவள் போன்று அன்றைக்கு விலகியதும் பிறகு தலைவனுடன் உடன்போக்கில் ஈடுபட்டவுடன் தாய் தன் ஐயத்தை மீண்டும் நினைத்துப் பார்ப்பதாக வரும் பாடலில்
நறிய நாறும் நின் கதுப்பு என்றோளே (நற். 143 :10)
எனும் கருத்து இடம்பெற்றுள்ளது. தலைவியின் கூந்தலில் மணம் புதிதாக இருந்ததை முன்பே அறிந்தேன் பாதுகாக்கவில்லையே என்று கவலைப்படுவதாக வருகின்றது. மற்றொரு பாடலில் தோழி தலைவனிடம் தாய் எங்களிடம் தோன்றியுள்ள மாற்றத்தினை அறிந்து பெருமூச்செறிந்தாள் நாங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் இற்செறிக்கப்படலாம் என்று வருகின்றது. அப்பாடல் வருமாறு
நெறிபடு கூழைக் கார்முதிர்பு இருந்த
வெறி கமழ் கொண்ட நாற்றமும் சிறிய
பசலை பாய்தரு நுதலும் நோக்கி
வறிது உகு நெஞ்சினள் பிறிது ஒன்று சுட்டி
வெய்ய உயிர்த்தனள் யாயே –
ஐய! – அஞ்சினம் அளியம் யாமே! (நற். 368:5-10)
தலைவியின் செறிந்த கருமையான நறுமணம் கமழும் கூந்தலில் புதுமணம் கமழ்வதைத் தாய் அறிந்துகொண்டாள் என்று கூறப்படுகிறது. தலைவியின் கூந்தல் புதிய மணம் பெறுவதனாலேயே அவள் தலைவனுடன் நட்பு கொண்டிருக்கிறாள் என்று கூறிவிட முடியுமா? ஆம் கூறிவிடலாம் ஏனென்றால் தலைவி செல்லும் இடங்கள் வரையறைக்கு உட்பட்டவை. வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த நம் முன்னோர்கள் அதைத் தெளிவாக தமது நூல்களில் வரையறுத்துக் கூறியிருக்கிறார்கள்.
சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர்
(நற்றிணையிலிருந்து)
உடல் உறுப்புக்களுள் குறைத்தால் வளரும் சிறப்புடையது மயிர். என்றாலும் அவ்வுறுப்பை இழப்பதற்கு யாரும் விரும்புவதில்லை. ஏன் பெரியோர் முதல் சிறியோர் வரை ஆணோ? பெணணோ? யாராயினும் அவரவர் நிலைக்கு ஏற்றபடி அவ்வுறுப்பினைப் பேணி பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றனர். இதுகுறித்து இன்று ஊடகங்களில் வரும் விளம்பரங்கள் எத்தனை?
ஊரார்கண் படட்டும் படட்டும்
உற்றார்கண் படட்டும் படட்டும்
ஆடவர்கண் படட்டும் படட்டும்
உண் கண்ணே பட ட் டும்
எனச் சீயக்காய்க்கு வரும் விளம்பரம் பெண்ணின் கூந்தலுக்கானது. (மயிருக்கானது) நீண்டு வளர்ந்த கூந்தலின் (மயிரின்) பின்னல் அசைவு அழகு. கூந்தலின் வளர்ச்சிக்கு ஆரோக்கியத்திற்கு மீரா சீயக்காய் நல்லது என வரும் விளம்பரம் உண்மையில் அழகுதான்.
ம்ருதுவான இயற்கையான தோற்றம் பெற்ற முடிக்காக ........................ (ஃபாரவர் ( forever) இருந்தால் அது வாழ்க்கைக்குப் புன்னகை சேர்க்கும் என வரும் கோத்ரேஜ் ஃபாரவர் விளம்பரம் ஆணின் இளநரைக்கு இயற்கை வண்ணம் ஊட்டுவது தொர்பானது.
மயிர் உதிர்விற்கு, பொடுகுதொல்லைக்கு, இளநரைக்கு, மயிருக்கு வண்ணம் ஊட்ட, மயிர் நீண்டு வளர, என மயிர் சார்ந்து வரும் விளம்பரம் எண்ணிறந்தவை.
எண்சான் உடம்பிற்குச் சிரசே பிரதானம் என்பர். அச்சிரசிற்கு அணி சேர்ப்பதால் மட்டும் இவ்வுறுப்பு முக்கியத்துவம் பெறவில்லை. சிரசில் அதன் இருப்பும் வீழ்வும் மாற்றமும் சமூகத்தில் ஏற்படுத்திய மதிப்பீடுகள் தலையாயவை. நந்த வம்சத்து அழிவும் மகாபாரதத்தில் கௌரவர் அழிவும் இராமாயணத்தில் இராவணன் இலங்கை அழிவும் முடிந்த தலைமயிர் அவிழ்ந்து குலைந்ததால் ஏற்பட்டதாக இலக்கியமும் வரலாறும் பதிவு செய்துள்ளன. அவற்றை அறியுமுன் நம் தமிழ் இலக்கியங்களில் இவ்வுறுப்பு சமூக விழுமியம் சார்ந்து எவ்விதம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய என்னுள் ஆர்வம் எழுந்தது.
மயிர் எனும் உறுப்பு இச்சொல்லால் மட்டுமன்றி கூந்தல், ஓதி, கதுப்பு, குரல், குழல், குஞ்சி, முடி, அளகம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுவதை இலக்கியங்களில் காணலாம். இப்பெயர்கள் யாவும் ஆண் பெண் இருபாலாருக்கும் பொதுவாக அன்றி தனித்தனியாகக் குறிக்கவும் வருகின்றன. என்றாலும் தொடரின் இப்பகுதியில் கூந்தல் எனும் சொல்லாட்சியே மிகுதியும் பயன்படுத்தப்படுகிறது.
கறுத்து பொலிவுபெற்ற கூந்தல் – இளமை
இரவுக்குறி வரும் தலைவன் தன் வரவு அறிந்தால் வல்வில் ஓரியின் காடுபோல மணம் வீசுவதும் கருமையாய்த் திரண்டு தழைத்ததுமாகிய கூந்தலை உடைய தலைவி மகிழ்ந்து மயங்குவாள். ஆனால் தன் வரவைத் தலைவிக்கு உரைப்பார் இல்லையே என்று தோழி கேட்ப தன் நெஞ்சிற்குச் சொல்லும் போது (நற்.6: 9- 11) இளமைத் தன்மையுடன் இருக்கும் தலைவியின் கூந்தல் நிலையைத் தலைவன் மூலம் பரணர் குறிப்பிடுகிறார். இது போன்று தலைவியின் இளமைத் தன்மையைக் குறிக்க நற்றிணையின் பல்வேறு பாடல்களில் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. அவை அவிழ் இணர்த், தேம்பாய் மராஅம் கமழும் கூந்தல் (நற்.20: 2- 3) வடிக்கொள் கூழை (நற்.23: 2) இருஞ்சூழ் ஓதி(நற்.26: 7- 9) பொம்மல் ஓதி (நற்.;.71:11>129:3>274:6>293:7) தண் நறுங் கதுப்பும் (நற். 84:1) தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி (நற்.85:9) அம்சில் ஓதி (நற். 90:8> 105:7-10>324:8>355:8) மெல் அம்சில் ஓதி (நற்.370:7) நாறுமயிர்க் கொடிச்சி (நற். 95:8) தேம்கமழ் ஐம்பால் (நற். 100:4) வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளோடு (நற்.139:7) குவளை நாறுங் கூந்தல் (நற். 262:7) இவள்;> ஒலி மென் கூந்தல்(நற்.265: 8-9) ஒலிவரும் தாழ் இருங் கூந்தல்;> ஆயமும் (நற். 295:2>3) வான்முகை இரும்போது கமழும் கூந்தல் (நற். 298:10>11) புனை இரங் கதுப்பின் மனையோள்(நற்.336:5) மின் நேர் ஓதி (நற்.339:9) இவளொடு போன்றனவாகும்.
நரை கூந்தல் - முதுமை
தலைவியைத் தலைவனுடன் உடன்போக்கு விடுக்கும் நிலையில் தோழி தலைவனிடம்
அண்ணாந்து ஏந்திய வனமுலை தளரினும்
பொன்நேர் மேனி மணியின் தாழ்ந்த
நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்
நீத்தல் ஓம்புமதி ……………………… (நற். 10: 1-4)
என்று வரும் பாடலில் இளமையில் உன்னை நம்பி இன்று உன்னுடன் வரும் தலைவி தழுவலுக்குப் பயன்படாமல் முதிர்ந்தாள் என்று கருதி வயது முதிர்ச்சியிலும் அவளைக் கைவிடாது பாதுகாப்பாயாக என்று கூறுமிடத்து வயதின் முதிர்விற்கு உடல் தளர்தலையும் கூந்தல் நரைப்பதனையும் ஓரம்போகியார் குறிப்பிடுகிறார்.
வேறொரு பாடலில் போதனார் எனும் புலவர் உடன்போக்கில் சென்ற தலைவியை நினைத்து இளமையில் அவள் எடுத்த முடிவின் தன்மையை வியக்கும் செவிலியை
அரிநிரைக் கூந்தற் செம்முது செவிலியர் (நற். 110:6)
என மெல்லிய நரைத்த கூந்தலையுடைய முதுமை உடையவள் என்று குறிப்பிடுகிறார்.
புலவர்கள் இளமையையும் முதிர்வையும் குறிக்க மயிரின் நிலையைப் பயன்படுத்தியதைப் போன்று சூழல் மாற்றத்திற்கு ஏற்ப மனிதர்களுக்குள் தோன்றும் பல்வேறு விதமான உணர்வுகளைக் குறிப்பிடவும் பயன்படுத்தியுள்ளனர். இளமையில் நரை முடித்து முறை செய்த கரிகாலன் பற்றிய குறிப்பு பழமொழி நானூற்றில் வருகின்றது. அன்றி இளநரை குறித்த பதிவைக் காணமுடியவில்லை.
கூந்தல் மணத்தல் – மகிழ்ச்சியின் அடையாளம்
முன்பு வினைவயிற் பிரிந்த காலத்தில் என் வருகையை அறிந்த தலைவி அதுவரையில் நீராட்டாது இருந்த தன் கூந்தலைக் கழுவி தூய்மை செய்து சில மலர்களைத் தன் திரண்ட கூந்தலிலே வைக்க அச்சமயத்தில் நான் உள்ளே நுழைந்தேன். என்னைக் கண்ணுற்ற தலைவி மகிழ்ச்சியில் முடித்திருந்த கூந்தல் அவிழ என்னை நோக்கி விரைந்து வந்து அணைத்துக் கொண்டாள்.
……………………………..மெல்லென
மண்ணாக் கூந்தல் மாசுஅறக் கழீஇ
சில்போது கொண்டு பல்குரல் அழுத்திய
அந்நிலை புகுதலின் மெய் வருத்துறாஅ
அவிழ் பூ முடியினள் கவைஇய
மடமா அரிவை மகிழ்ந்து அயர்நிலையே (நற்.42;7-12)
என்று தலைவன் தேர்ப்பாகனிடம் கூறி விரைந்து செல்லுமாறு கூறுவதாகக் கீரத்தனார் குறிக்கின்றார். கூந்தல் அவிழ்ந்து குலைதல் இங்கு மகிழ்ச்சியின் வெளிப்பாடாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாலத்தனார் எனும் புலவர் தலைவியுடன் தலைவன் கூடியிருக்கும் காலத்தில் மகிழ்ச்சியுடன் இருந்ததைக் காட்ட அவள் கூந்தல் மணமுற்றிருப்பதாகக் கூறுகின்றார்.அப்பாடல் வருமாறு
மாக்கொடி அதிரற் பூவொடு பாதிரித்
தூத்தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல்
மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள்
சுணங்குஅணி ஆகம் அடைய முயங்கி (நற். 52 ;1– 4)
சல்லியங் குமரனார் தன் பாலைப்பாடலில் பொருள்வயிற் பிரியக் கருதிய தலைவன் தன்நெஞ்சுக்குக் கூறுவதாக வருவதில் கிள்ளிவளவனின் அம்பர் நகரைச் சூழ்ந்தோடும் அரிசிலாற்றின் தெளிந்த கருமணல் போன்றது இவளுடைய விரிந்ததும் தழைத்து நீண்டதுமான கூந்தல் . அக்கூந்தலில் துயிலும் போது கிடைக்கும் மகிழ்ச்சியை இழக்க விரும்பவில்லை எனும்போது
அரிசில் அம் தண் அறல் அன்ன இவள்
விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே (நற். 141 ; 11 – 12)
என்ற கருத்து இடம்பெறுகின்றது. மற்றொருபாடலில்
பொன்னும் மணியும் போலும் யாழ நின்
நன்னர் மேனியும் நாறுஇருங் கதுப்பும்
………………………………………………………………………
யாதெனின் பிரிகோ - மடந்தை
காதல் தானும் கடலினும் பெரிதே!. (நற்.166)
மேற்குறித்த பாடல்கள் பொருள்வயிற் பிரிந்தால் தலைவி மட்டுமல்ல தானும் துன்புறுவேன் என்பதைக் கூறவரும் தலைவனின் கருத்தாக அமைவன.
பெருங்கௌசிகனார் தம் முல்லைப் பாடலொன்றில் வினைமுற்றி வீடு வந்த தலைவன் அவ்வமயம் மழை பொழிவதைக் கண்டு வாழ்த்தியதாகக் கூறுகிறார். அதில் தலைவன் தன் மகிழ்ச்சிக்குக் காரணமான தலைவி கடை குழன்ற தாழ்ந்த கூந்தலை உடையவள் என்று கூறுவதாக வருகின்றது. (கடைகுழன்ற கூந்தல் என்றால் கூந்தலின் இறுதிப்பகுதி சுருண்டிருப்பதை இது குறிக்கிறது)
வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளோடு
புணர்ந்துஇனிது நுகர்ந்த சாரல் நல் ஊர் (நற். 139; 7- 8)
நக்கீரர் பாடலில் தலைவியின் தாழ்ந்து நீண்டதாக இருக்கும் கூந்தல் மழை வீழ்ச்சிக்கு உவமை சொல்லப்படுகிறது.
…………………………………………………..நின்
தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு ( நற். 197 :5>6)
இப்பாடலில் இக்காலத்தில் பெண்கள் நீண்ட முடியினராக இருந்துள்ளதனை அறியமுடிகிறது.
கூந்தல் புதுமணம் – தலைவி தலைவனுடன் கொண்டுள்ள நட்பறிய உதவுதல்
திருமணத்திற்கு முன்பு தலைவி தலைவனுடன் நட்பு கொண்டிருக்கும் காலத்து அவள் தோற்றம் பொலிவு பெறுவதுடன் கூந்தலும் புதிதாய் மணக்கிறது. இதைத் தொடக்கத்தில் அறியும் தாய் தலைவியிடம் கேட்கிறாள். தலைவி ஏதும் அறியாதவள் போன்று அன்றைக்கு விலகியதும் பிறகு தலைவனுடன் உடன்போக்கில் ஈடுபட்டவுடன் தாய் தன் ஐயத்தை மீண்டும் நினைத்துப் பார்ப்பதாக வரும் பாடலில்
நறிய நாறும் நின் கதுப்பு என்றோளே (நற். 143 :10)
எனும் கருத்து இடம்பெற்றுள்ளது. தலைவியின் கூந்தலில் மணம் புதிதாக இருந்ததை முன்பே அறிந்தேன் பாதுகாக்கவில்லையே என்று கவலைப்படுவதாக வருகின்றது. மற்றொரு பாடலில் தோழி தலைவனிடம் தாய் எங்களிடம் தோன்றியுள்ள மாற்றத்தினை அறிந்து பெருமூச்செறிந்தாள் நாங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் இற்செறிக்கப்படலாம் என்று வருகின்றது. அப்பாடல் வருமாறு
நெறிபடு கூழைக் கார்முதிர்பு இருந்த
வெறி கமழ் கொண்ட நாற்றமும் சிறிய
பசலை பாய்தரு நுதலும் நோக்கி
வறிது உகு நெஞ்சினள் பிறிது ஒன்று சுட்டி
வெய்ய உயிர்த்தனள் யாயே –
ஐய! – அஞ்சினம் அளியம் யாமே! (நற். 368:5-10)
தலைவியின் செறிந்த கருமையான நறுமணம் கமழும் கூந்தலில் புதுமணம் கமழ்வதைத் தாய் அறிந்துகொண்டாள் என்று கூறப்படுகிறது. தலைவியின் கூந்தல் புதிய மணம் பெறுவதனாலேயே அவள் தலைவனுடன் நட்பு கொண்டிருக்கிறாள் என்று கூறிவிட முடியுமா? ஆம் கூறிவிடலாம் ஏனென்றால் தலைவி செல்லும் இடங்கள் வரையறைக்கு உட்பட்டவை. வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த நம் முன்னோர்கள் அதைத் தெளிவாக தமது நூல்களில் வரையறுத்துக் கூறியிருக்கிறார்கள்.
- முனைவர் ப.குணசுந்தரிபண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
தோழமைக்கு வணக்கம்.
பிழைதிருத்தம்
முதிர்முந்துதிருந்மைதாலும் - முதிர்ந்திருந்தாலும்
அவன் ஆதரவுடைய நாட்டிலும் - இத்தொடர் இருமுறை வந்துள்ளது.
பிழைதிருத்தம்
முதிர்முந்துதிருந்மைதாலும் - முதிர்ந்திருந்தாலும்
அவன் ஆதரவுடைய நாட்டிலும் - இத்தொடர் இருமுறை வந்துள்ளது.
- முனைவர் ப.குணசுந்தரிபண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
தோழமைக்கு வணக்கம்.
மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர் . ( கூடாவொழுக்கம்- 278 )
இந்தக் குறளில் வந்துள்ள " மாண்டார் "என்ற சொல்லும் ,மேலே கண்ட புறப்பாடலிலே வந்துள்ள " மாண்ட " என்ற சொல்லும் ஒரே பொருளினதா அன்றி வேறுபாடு கொண்டதா ? என்று தாங்கள் எழுப்பிய கேள்விக்கு எனக்குத் தெரிந்த பதிலை அறிஞர்களின் உதவியுடன் அளிக்கின்றேன். இதோ
மாண்டார் என்ற சொல்லுக்கு மாட்சிமையுள்ளவர் என்றும் இறந்தவர் என்றும் பொருள் சொல்லப்படுகிறது. இக் குறளில் வந்துள்ள
மாண்டார் நீராடி என்பதற்கு தவத்தால் மாட்சிமைப்பட்டவர் போற் பலகால் குளிர்ந்த நீரில் மூழ்கி என்று பாவாணரும்
பிறர்க்குத் தவத்தான் மாட்சிமையுயராய் நீரின் மூழ்கிக் காட்டி என்று பரிமேலழகரும்
தவத்தால் மாண்பு பெற்றவரைப் போல நீரில் மூழ்கி என்று மு. வரதராசனாரும்
மாட்சிமைப் பட்டாரது நீர்மையைப் பூண்டு என்று மணக்குடவரும்
மாண்புடையோர் எனும் பெயருக்குள் தம்மை மறைத்துக்கொண்டு என்று கலைஞரும்
பொருள் தருகின்றனர். ஆகையினால் வள்ளுவர் இக்குறளில் மாட்சிமைப்பட்ட, மாண்புடைய , பக்குவமுடைய, பெருமையுடைய என்ற பொருளிலேயே மாண்டார் எனும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். நிற்க.
புறநானூற்றில் வரும் மாண்ட என் மனைவியொடு என்ற அடியில் உள்ள மாண்ட எனும் சொல்லுக்கு மாட்சிமையுடைய என்ற பொருளே பொருத்தமாகும். ஏனென்றால் மாண்டார், மாண்ட எனும் சொற்களுக்கு அகராதிகள் மாட்சிமைப்பட்ட, மாட்சிமையுள்ள, இறந்த என்ற பொருளையே தருகின்றன.
குறளின் பொருள்
நீருக்குள் மூழ்கியோர் தம்மை மறைத்துக் கொள்வது போல,மாண்புடையோர் எனும் பெயருக்குள் தம்மை மறைத்துக்கொண்டு மனத்தில் மாசுடையோர் பலர் உலவுகின்றனர். ஆகையினால் அத்தகையாரோடு சேர்ந்திருத்தல் என்பது வாழ்க்கைக்குப் பயன்தராது
.
புறநானூற்றின் பொருள்
நுமக்குச் சென்ற யாண்டுகள் பலவாயிருக்க நரையில்லை யாகுதல் எப்படி யாயினீரென கேட்பீராயின் என்னுடைய மாட்சிமைப் பட்ட குணங்களையுடைய மனைவியுடனே புதல்வரும் அறிவு நிரம்பினார் யான் கருதிய அதனையே கருதுவர் என்னுடைய ஏவல் செய்வாரும் அரசனும் முறையல்லாதன செய்யானாய்க் காக்கும் அதற்கு மேலே யான் இருக்கின்ற ஊரின்கண் நற்குணங்களால் அமைந்து பணிய வேண்டுமுயர்ந்தாரிடத்துப் பணிந்து ஐம்புலனுமடங்கிய கோட்பாட்டினையுடைய சான்றோர் பலர் இருக்கின்றனர்.
எனவே புறநானூறு, குறள் ஆகிய இரண்டிடத்திலும் வரும் மாண்ட - மாண்டார் எனும் சொற்கள் மாட்சிமைப்பட்ட என்ற பொருளிலேயே வருகின்றன. ஆதலின் ஐயா இரண்டுசொற்களும் ஒரே பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது தெளிவு.
நன்றி.
மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர் . ( கூடாவொழுக்கம்- 278 )
இந்தக் குறளில் வந்துள்ள " மாண்டார் "என்ற சொல்லும் ,மேலே கண்ட புறப்பாடலிலே வந்துள்ள " மாண்ட " என்ற சொல்லும் ஒரே பொருளினதா அன்றி வேறுபாடு கொண்டதா ? என்று தாங்கள் எழுப்பிய கேள்விக்கு எனக்குத் தெரிந்த பதிலை அறிஞர்களின் உதவியுடன் அளிக்கின்றேன். இதோ
மாண்டார் என்ற சொல்லுக்கு மாட்சிமையுள்ளவர் என்றும் இறந்தவர் என்றும் பொருள் சொல்லப்படுகிறது. இக் குறளில் வந்துள்ள
மாண்டார் நீராடி என்பதற்கு தவத்தால் மாட்சிமைப்பட்டவர் போற் பலகால் குளிர்ந்த நீரில் மூழ்கி என்று பாவாணரும்
பிறர்க்குத் தவத்தான் மாட்சிமையுயராய் நீரின் மூழ்கிக் காட்டி என்று பரிமேலழகரும்
தவத்தால் மாண்பு பெற்றவரைப் போல நீரில் மூழ்கி என்று மு. வரதராசனாரும்
மாட்சிமைப் பட்டாரது நீர்மையைப் பூண்டு என்று மணக்குடவரும்
மாண்புடையோர் எனும் பெயருக்குள் தம்மை மறைத்துக்கொண்டு என்று கலைஞரும்
பொருள் தருகின்றனர். ஆகையினால் வள்ளுவர் இக்குறளில் மாட்சிமைப்பட்ட, மாண்புடைய , பக்குவமுடைய, பெருமையுடைய என்ற பொருளிலேயே மாண்டார் எனும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். நிற்க.
புறநானூற்றில் வரும் மாண்ட என் மனைவியொடு என்ற அடியில் உள்ள மாண்ட எனும் சொல்லுக்கு மாட்சிமையுடைய என்ற பொருளே பொருத்தமாகும். ஏனென்றால் மாண்டார், மாண்ட எனும் சொற்களுக்கு அகராதிகள் மாட்சிமைப்பட்ட, மாட்சிமையுள்ள, இறந்த என்ற பொருளையே தருகின்றன.
குறளின் பொருள்
நீருக்குள் மூழ்கியோர் தம்மை மறைத்துக் கொள்வது போல,மாண்புடையோர் எனும் பெயருக்குள் தம்மை மறைத்துக்கொண்டு மனத்தில் மாசுடையோர் பலர் உலவுகின்றனர். ஆகையினால் அத்தகையாரோடு சேர்ந்திருத்தல் என்பது வாழ்க்கைக்குப் பயன்தராது
.
புறநானூற்றின் பொருள்
நுமக்குச் சென்ற யாண்டுகள் பலவாயிருக்க நரையில்லை யாகுதல் எப்படி யாயினீரென கேட்பீராயின் என்னுடைய மாட்சிமைப் பட்ட குணங்களையுடைய மனைவியுடனே புதல்வரும் அறிவு நிரம்பினார் யான் கருதிய அதனையே கருதுவர் என்னுடைய ஏவல் செய்வாரும் அரசனும் முறையல்லாதன செய்யானாய்க் காக்கும் அதற்கு மேலே யான் இருக்கின்ற ஊரின்கண் நற்குணங்களால் அமைந்து பணிய வேண்டுமுயர்ந்தாரிடத்துப் பணிந்து ஐம்புலனுமடங்கிய கோட்பாட்டினையுடைய சான்றோர் பலர் இருக்கின்றனர்.
எனவே புறநானூறு, குறள் ஆகிய இரண்டிடத்திலும் வரும் மாண்ட - மாண்டார் எனும் சொற்கள் மாட்சிமைப்பட்ட என்ற பொருளிலேயே வருகின்றன. ஆதலின் ஐயா இரண்டுசொற்களும் ஒரே பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது தெளிவு.
நன்றி.
- முனைவர் ப.குணசுந்தரிபண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
சமூக விழுமியம் : மயிர் தொடர் – 3
(பதிற்றுப்பத்திலிருந்து)
பதிற்றுப்பத்தில் இடம்பெறும் மயிர் எனும் உறுப்பு குறித்த பதிவுகளை இத்தொடர் முன்வைக்கின்றது.
சேரமாதேவி கூந்தல்
செவ்வியல் இலக்கியங்களில் புலவர்களின் பாடல்களில் மன்னர் தனிப்பட அடையாளப் படுத்தப்பட்டு சிறப்பிக்கப்பட்டது போன்று அரசியர் பதிவு மிகக்குறைவு என்றே சொல்லலாம். பதிற்றுப்பத்திலுள்ள இரண்டாம் பத்தில் இடம்பெறும் 14ஆம் பாடலில் அரசனின் பெருமையை எடுத்துக்கூறி வாழ்த்தும்போது புலவர்
வான்உறை மகளிர் நலன் இகல் கொள்ளும்
வயங்கு இழை கரந்த வண்டுபடு கதுப்பின்
ஒடுங்குஈர் ஓதிக் கொடுங்குழை கணவ!
(இரண்டாம் பத்து 14: 13 – 15)
என்று பாடுகிறார். இப்பாடலில் வானுலகில் உறையும் தெய்வ மகளிர் ஒவ்வொருவரும் பொறாமையில் தத்தமக்குள் முரண்பட்டுக் கொள்ளும் அளவிற்குச் சேரமாதேவி அழகுடையவள் என்று கூறும் புலவர் தலைக்குரிய அணிகலன்களை அணிந்திருப்பதால் அவளின் சுருண்ட கூந்தல் அதனுள் மறைந்து கிடக்கிறது. அத்தகு அழகுடைய வளைந்த குழை அணிந்தவளின் கணவன்தான் சேரன் என்று கணவரின் அடையாளமாக மனைவியைப் புலவர் இங்குப் பதிவு செய்கிறார்.
தொடரும்.............
(பதிற்றுப்பத்திலிருந்து)
பதிற்றுப்பத்தில் இடம்பெறும் மயிர் எனும் உறுப்பு குறித்த பதிவுகளை இத்தொடர் முன்வைக்கின்றது.
சேரமாதேவி கூந்தல்
செவ்வியல் இலக்கியங்களில் புலவர்களின் பாடல்களில் மன்னர் தனிப்பட அடையாளப் படுத்தப்பட்டு சிறப்பிக்கப்பட்டது போன்று அரசியர் பதிவு மிகக்குறைவு என்றே சொல்லலாம். பதிற்றுப்பத்திலுள்ள இரண்டாம் பத்தில் இடம்பெறும் 14ஆம் பாடலில் அரசனின் பெருமையை எடுத்துக்கூறி வாழ்த்தும்போது புலவர்
வான்உறை மகளிர் நலன் இகல் கொள்ளும்
வயங்கு இழை கரந்த வண்டுபடு கதுப்பின்
ஒடுங்குஈர் ஓதிக் கொடுங்குழை கணவ!
(இரண்டாம் பத்து 14: 13 – 15)
என்று பாடுகிறார். இப்பாடலில் வானுலகில் உறையும் தெய்வ மகளிர் ஒவ்வொருவரும் பொறாமையில் தத்தமக்குள் முரண்பட்டுக் கொள்ளும் அளவிற்குச் சேரமாதேவி அழகுடையவள் என்று கூறும் புலவர் தலைக்குரிய அணிகலன்களை அணிந்திருப்பதால் அவளின் சுருண்ட கூந்தல் அதனுள் மறைந்து கிடக்கிறது. அத்தகு அழகுடைய வளைந்த குழை அணிந்தவளின் கணவன்தான் சேரன் என்று கணவரின் அடையாளமாக மனைவியைப் புலவர் இங்குப் பதிவு செய்கிறார்.
தொடரும்.............
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
முனைவர் அவர்களுக்கு ,
நான் கேட்ட வினாவிற்கு விளக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றி !
நான் கேட்ட வினாவிற்கு விளக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றி !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- முனைவர் ப.குணசுந்தரிபண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
பதிற்றுப்பத்தின் தொடர்ச்சி
மற்றொரு பாடலில் சேரமன்னன் நாடுகாத்தற் சிறப்பைப் புகழ்ந்து கூறக்கருதிய பாலைக்கௌதமனார் சேரனை வாழ்த்தும்போது
மண்ணாவாயின் மணம் கமழ்கொண்டு
கார்மலர் கமழும் தாழ் இருங்கூந்தல்
ஓரீஇயின போல இரவு மலர் நின்று
திருமுகத்து அலமரும் பெரு மதர் மழைக்கண்,
அலங்கிய காந்தள் இலங்கு நீர் அழுவத்து
வேய் உறழ் பணைத் தோள், இவளோடு
ஆயிரம் வெள்ளம் வாழிய பலவே!
( மூன்றாம் பத்து 21: 32 – 38)
என்று சேரமாதேவியின் சிறப்பையும் உடன்சேர்த்துக்கூறி வாழ்த்துகிறார்.
தலைவியைப் பிரிந்து வேறுபுலத்தில் நிற்கும் காலத்தில் சேரனுடைய பெருந்தேவி பிரிவு கருதி தன் கூந்தலில் எண்ணெய் முதலியன பூசாத போதும் அவள் கூந்தல் மணமுடையதாக இருக்கும் என்றும் மன்னன் உடனிருக்கும் காலத்தில் அவளது நீண்ட கரிய கூந்தல் நீராடப்பெற்றுக் கார்காலத்தில் பூக்கின்ற முல்லை மலரைச் சூட்டிக் கொள்ளும்போது அம்முல்லை மலரின் மணத்தைப்பெறும் என்றும் குறிப்பிடுகிறார்.
கூந்தலைப்போன்றே அவளுடைய கண்களும் தோள்களும் சிறப்புடையன ஆதலின் அச்சிறப்புடைய பெருந்தேவியோடு பல ஆயிரம் வெள்ளம் ஆண்டுகள்வரை வாழ்வாயாக என்று வாழ்த்துவதாகக் கூறப்படுகிறது.
சாதாரணக் குடிமகளாயினும் அரசியாயினும் கணவனைப் பிரிந்துரையும் காலத்தில் வெளிப்படுத்தும் உணர்வுநிலை ஒன்றே என்பதை இப்பதிவுகள் உணர்த்துகின்றன.
நான்காம் பத்தில் காப்பியாற்றுக்காப்பியனார் எனும் புலவர் சேரனைப் புகழும் காலத்தில் அவன் புகழுக்குரியனவாக இருப்பனவற்றுள் ஒன்றாக அவனுடைய அரசமாதேவியின் கற்பையும் சுட்டிக்காட்டுகிறார்.
வண்டன் அனையைமன் நீயே வண்டுபட
ஒலிந்த கூந்தல், அறம்சால் கற்பின்
குழைக்கு விளக்கு ஆகிய ஒள்நுதல் , பொன்னின்
இழைக்கு விளக்கு ஆகிய அவ்வாங்கு உந்தி
விசும்பு வழங்கு மகளிருள்ளும் சிறந்த
செம்மீன் அனையள், நின்தொல்நகர்ச் செல்வி
(பதிற். நான். பத்து 31: 23 – 28)
இப்பாடலில் செம்மீன் அனைய கற்புடைய அரசமாதேவி வண்டுகள் ஒலிக்கும்படி தழைத்த கூந்தலினை உடையவளாகக் காட்டப்படுகின்றாள்.
பதிற்றுப்பத்தின் எட்டாம் பாடலில் அரிசில்கிழார் மன்னனை வாழ்த்தும்போது நின் கால்வழியைப் (சந்ததியை) பெற்றுத்தரும் அரசி, இறைவியாகிய திருமகளினும் வேறுபட்ட அழகுடைய நுண்ணிய கருமணலைப் போன்ற தாழ்ந்த கூந்தலை உடையவள்
சாய் அறல் கடுக்கும் தாழ் இருங் கூந்தல்
வேறுபடு திருவின் நின்வழி வாழியர்
(பதிற். எட்டாம் பத்து 74:3 – 4)
என்றும் ஒடுங்கு ஈர் ஓதி (பதிற். எட்டாம் பத்து 74: 17, ஒன்பதாம் பத்து 81: 27 - 28) அதாவது சுருள் எனும் பகுப்பமைந்த கூந்தலுடையவள் என்றும் குறிப்பிடப்படுகின்றார். சேர மன்னனை அவன் தேவியுடனே சேர்த்துக் கூறும் பதிவை அதிகம் பதிற்றுப்பத்திலேயே காணமுடிகிறது.
துவராக் கூந்தல்
பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்தில் இடம்பெற்ற கூந்தல் விறலியர் என்ற பெயர்தாங்கிய பாடல் பதிவைப் போன்றே ஒன்பதாம் பத்திலும் துவராக் கூந்தல் என்ற பெயர்ப்பதிவுடைய பாடலொன்றும் இடம்பெற்றுள்ளது.
துவராக் கூந்தல் என்றால் அரசகுலப் பெண்கள் தம் கூந்தல் நறுமணம்பெற தகரச் சாந்து (வாசனை எண்ணெய்) போன்ற பொருள்களைப் பூசுவதால் கூந்தல் எப்பொழுதும் ஈரம் உலராது இருக்குமாம். துவர்தல் எனும் சொல் உலர்தல், வற்றிப் போதல் என்று பொருள்படுகிறது. (செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி பக். 197)
துவரா என்றால் உலராத என்று பொருள். ஈரமுடன் இருக்கின்ற காரணத்தினால் அரசியர் கூந்தல் இப்பெயர் பெற்றது என்று உரையாசிரியர் குறிப்பிடுகின்றார். இக்கருத்துடைய பாடலடி
கனவினும் பிரியா உறையுளொடு தண்ணெனத்
தகரம் நீவிய துவராக் கூந்தல்
(பதிற். ஒன்பதாம் பத்து. 89 : 15 – 16)
என்பதாகும். இப்பாடல் அருந்ததியை ஒத்த கற்புடையவளான சேரமாதேவியுடன் நெடிது வாழ்கவென சேரனை வாழ்த்துவதாக அமைகின்றது. இதைப்போன்றே ஒன்பதாம் பத்தின் இறுதிப்பாடலில்
ஆறிய கற்பின் தேறிய நல்இசை
வண்டுஆர் கூந்தல் ஒண்தொடி கணவ!
(பதிற். ஒன்பதாம் பத்து. 90 : 49 – 50)
என்று சேரமாதேவியைச் சிறப்பித்துக் கூறி சேரனை வாழ்த்துகிறார்.
அரசியரின் கூந்தல் அமைப்பு குறித்து இதுவரை பதிற்றுப்பத்தில் வந்துள்ள பதிவுகளில் அவர்கள் கருமணலை ஒத்த தாழ்ந்த நீண்ட மற்றும் சுருண்ட கூந்தல் உடையவர்களாகவும் ஈரம் உலராது கூந்தலை , என்றும் மணமுடையதாக வைத்திருக்க விரும்புவதையும் அறியமுடிகிறது.
தொடரும்....
மற்றொரு பாடலில் சேரமன்னன் நாடுகாத்தற் சிறப்பைப் புகழ்ந்து கூறக்கருதிய பாலைக்கௌதமனார் சேரனை வாழ்த்தும்போது
மண்ணாவாயின் மணம் கமழ்கொண்டு
கார்மலர் கமழும் தாழ் இருங்கூந்தல்
ஓரீஇயின போல இரவு மலர் நின்று
திருமுகத்து அலமரும் பெரு மதர் மழைக்கண்,
அலங்கிய காந்தள் இலங்கு நீர் அழுவத்து
வேய் உறழ் பணைத் தோள், இவளோடு
ஆயிரம் வெள்ளம் வாழிய பலவே!
( மூன்றாம் பத்து 21: 32 – 38)
என்று சேரமாதேவியின் சிறப்பையும் உடன்சேர்த்துக்கூறி வாழ்த்துகிறார்.
தலைவியைப் பிரிந்து வேறுபுலத்தில் நிற்கும் காலத்தில் சேரனுடைய பெருந்தேவி பிரிவு கருதி தன் கூந்தலில் எண்ணெய் முதலியன பூசாத போதும் அவள் கூந்தல் மணமுடையதாக இருக்கும் என்றும் மன்னன் உடனிருக்கும் காலத்தில் அவளது நீண்ட கரிய கூந்தல் நீராடப்பெற்றுக் கார்காலத்தில் பூக்கின்ற முல்லை மலரைச் சூட்டிக் கொள்ளும்போது அம்முல்லை மலரின் மணத்தைப்பெறும் என்றும் குறிப்பிடுகிறார்.
கூந்தலைப்போன்றே அவளுடைய கண்களும் தோள்களும் சிறப்புடையன ஆதலின் அச்சிறப்புடைய பெருந்தேவியோடு பல ஆயிரம் வெள்ளம் ஆண்டுகள்வரை வாழ்வாயாக என்று வாழ்த்துவதாகக் கூறப்படுகிறது.
சாதாரணக் குடிமகளாயினும் அரசியாயினும் கணவனைப் பிரிந்துரையும் காலத்தில் வெளிப்படுத்தும் உணர்வுநிலை ஒன்றே என்பதை இப்பதிவுகள் உணர்த்துகின்றன.
நான்காம் பத்தில் காப்பியாற்றுக்காப்பியனார் எனும் புலவர் சேரனைப் புகழும் காலத்தில் அவன் புகழுக்குரியனவாக இருப்பனவற்றுள் ஒன்றாக அவனுடைய அரசமாதேவியின் கற்பையும் சுட்டிக்காட்டுகிறார்.
வண்டன் அனையைமன் நீயே வண்டுபட
ஒலிந்த கூந்தல், அறம்சால் கற்பின்
குழைக்கு விளக்கு ஆகிய ஒள்நுதல் , பொன்னின்
இழைக்கு விளக்கு ஆகிய அவ்வாங்கு உந்தி
விசும்பு வழங்கு மகளிருள்ளும் சிறந்த
செம்மீன் அனையள், நின்தொல்நகர்ச் செல்வி
(பதிற். நான். பத்து 31: 23 – 28)
இப்பாடலில் செம்மீன் அனைய கற்புடைய அரசமாதேவி வண்டுகள் ஒலிக்கும்படி தழைத்த கூந்தலினை உடையவளாகக் காட்டப்படுகின்றாள்.
பதிற்றுப்பத்தின் எட்டாம் பாடலில் அரிசில்கிழார் மன்னனை வாழ்த்தும்போது நின் கால்வழியைப் (சந்ததியை) பெற்றுத்தரும் அரசி, இறைவியாகிய திருமகளினும் வேறுபட்ட அழகுடைய நுண்ணிய கருமணலைப் போன்ற தாழ்ந்த கூந்தலை உடையவள்
சாய் அறல் கடுக்கும் தாழ் இருங் கூந்தல்
வேறுபடு திருவின் நின்வழி வாழியர்
(பதிற். எட்டாம் பத்து 74:3 – 4)
என்றும் ஒடுங்கு ஈர் ஓதி (பதிற். எட்டாம் பத்து 74: 17, ஒன்பதாம் பத்து 81: 27 - 28) அதாவது சுருள் எனும் பகுப்பமைந்த கூந்தலுடையவள் என்றும் குறிப்பிடப்படுகின்றார். சேர மன்னனை அவன் தேவியுடனே சேர்த்துக் கூறும் பதிவை அதிகம் பதிற்றுப்பத்திலேயே காணமுடிகிறது.
துவராக் கூந்தல்
பதிற்றுப்பத்தின் இரண்டாம் பத்தில் இடம்பெற்ற கூந்தல் விறலியர் என்ற பெயர்தாங்கிய பாடல் பதிவைப் போன்றே ஒன்பதாம் பத்திலும் துவராக் கூந்தல் என்ற பெயர்ப்பதிவுடைய பாடலொன்றும் இடம்பெற்றுள்ளது.
துவராக் கூந்தல் என்றால் அரசகுலப் பெண்கள் தம் கூந்தல் நறுமணம்பெற தகரச் சாந்து (வாசனை எண்ணெய்) போன்ற பொருள்களைப் பூசுவதால் கூந்தல் எப்பொழுதும் ஈரம் உலராது இருக்குமாம். துவர்தல் எனும் சொல் உலர்தல், வற்றிப் போதல் என்று பொருள்படுகிறது. (செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி பக். 197)
துவரா என்றால் உலராத என்று பொருள். ஈரமுடன் இருக்கின்ற காரணத்தினால் அரசியர் கூந்தல் இப்பெயர் பெற்றது என்று உரையாசிரியர் குறிப்பிடுகின்றார். இக்கருத்துடைய பாடலடி
கனவினும் பிரியா உறையுளொடு தண்ணெனத்
தகரம் நீவிய துவராக் கூந்தல்
(பதிற். ஒன்பதாம் பத்து. 89 : 15 – 16)
என்பதாகும். இப்பாடல் அருந்ததியை ஒத்த கற்புடையவளான சேரமாதேவியுடன் நெடிது வாழ்கவென சேரனை வாழ்த்துவதாக அமைகின்றது. இதைப்போன்றே ஒன்பதாம் பத்தின் இறுதிப்பாடலில்
ஆறிய கற்பின் தேறிய நல்இசை
வண்டுஆர் கூந்தல் ஒண்தொடி கணவ!
(பதிற். ஒன்பதாம் பத்து. 90 : 49 – 50)
என்று சேரமாதேவியைச் சிறப்பித்துக் கூறி சேரனை வாழ்த்துகிறார்.
அரசியரின் கூந்தல் அமைப்பு குறித்து இதுவரை பதிற்றுப்பத்தில் வந்துள்ள பதிவுகளில் அவர்கள் கருமணலை ஒத்த தாழ்ந்த நீண்ட மற்றும் சுருண்ட கூந்தல் உடையவர்களாகவும் ஈரம் உலராது கூந்தலை , என்றும் மணமுடையதாக வைத்திருக்க விரும்புவதையும் அறியமுடிகிறது.
தொடரும்....
- முனைவர் ப.குணசுந்தரிபண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
மகிழ்ச்சி ஐயா. கேள்வியைத் தொடருங்கள்.
- முனைவர் ப.குணசுந்தரிபண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
பதிற்றுப்பத்தின் தொடர்ச்சி
மகளிர் கூந்தல் பாயலாதல்
கூந்தலைப் பயன்படுத்துவதற்கு உரிமை உடையவராகப் பெண்கள் தத்தமக்குரிய தலைமகனைக் கருதினர் என்பதைப் பாடல் பதிவுகள் காட்டினாலும் அத்தலைமக்கள் எவ்வெவ் காலங்களில் எவ்வெவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தனர் என்பதையும் பதிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
பரணர் எனும் புலவர், மன்னன் மகளிரின் விரிந்த மெல்லிய கூந்தலாகிய படுக்கையில் படுத்துறங்கும் நாட்களினும் பாசறையில் துயிலாமல் விழித்திருக்கும் நாட்கள் பல என்று குறிப்பிடுகின்றார். இதன்மூலம் செங்குட்டுவன் தன் வாழ்வில் தலையாயச் செல்வமாகக் கருதியது படையினை என்பதும் மிகவும் விரும்பியது போரினை என்பதும் தெரியவருகிறது. அப்பாடலடி
உருப்பு அற நிரப்பினை ஆதலின் சாந்து புலர்பு
வண்ணம் நீவி வகை வனப்புற்ற
விரிமென் கூந்தல் மெல் அணை வதிந்து
கொல்பிணி திருகிய மார்பு கவர் முயக்கத்து
பொழுது கொள் மரபின் மென்பிணி அவிழ
எவன் பல கழியுமோ – பெரும! பல் நாள்
பகை வெம்மையின் பாசறை மரீஇ
பாடு அரிது இயைந்த சிறுதுயில் இயலாது
…………………………………………………….
(பதிற். ஐந்தாம் பத்து. 50 : 16 – 26)
என்பதாகும். இதற்கு முன்பு நற்றிணையின் பாடல் ஒன்றில் பொருள்வயிற் பிரியக் கருதிய தலைவன் தன் நெஞ்சு நோக்கிக் கூறுவதில் கிள்ளிவளவனின் அம்பர் நகரைச் சூழ்ந்தோடும் அரிசிலாற்றின் தெளிந்த கருமணல் போன்றது இவளுடைய விரிந்ததும் தழைத்து நீண்டதுமான கூந்தல். அக்கூந்தலில் துயிலும் போது கிடைக்கும் மகிழ்ச்சியை இழக்க விரும்பவில்லை என்று கூறுவதில் பொருளைக் காட்டிலும் தலைவியின் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி பெரிது என்ற கருத்து பெறப்படுகிறது. அப்பாடல்
அரிசில் அம் தண் அறல் அன்ன, இவள்
விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே
(நற். 141: 11 – 12)
என்பதாகும்.(சமூக விழுமியம்: மயிர் தொடர் – 1 நற்றிணையிலிருந்து)
இவற்றிலிருந்து மனைவியின் கூந்தலைப் பாயலாக்கி படுத்துறங்குவது பொதுவில் கூறப்பட்டாலும் மன்னன் , குடிமகன் வாழ்வில் அந்நிகழ்வு பதிவு செய்யப்பட்ட நோக்கத்திற்கு ஏற்ப பொருள் வேறுபட்டமைவதை அறியமுடிகிறது.
தொடரும்......
மகளிர் கூந்தல் பாயலாதல்
கூந்தலைப் பயன்படுத்துவதற்கு உரிமை உடையவராகப் பெண்கள் தத்தமக்குரிய தலைமகனைக் கருதினர் என்பதைப் பாடல் பதிவுகள் காட்டினாலும் அத்தலைமக்கள் எவ்வெவ் காலங்களில் எவ்வெவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தனர் என்பதையும் பதிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
பரணர் எனும் புலவர், மன்னன் மகளிரின் விரிந்த மெல்லிய கூந்தலாகிய படுக்கையில் படுத்துறங்கும் நாட்களினும் பாசறையில் துயிலாமல் விழித்திருக்கும் நாட்கள் பல என்று குறிப்பிடுகின்றார். இதன்மூலம் செங்குட்டுவன் தன் வாழ்வில் தலையாயச் செல்வமாகக் கருதியது படையினை என்பதும் மிகவும் விரும்பியது போரினை என்பதும் தெரியவருகிறது. அப்பாடலடி
உருப்பு அற நிரப்பினை ஆதலின் சாந்து புலர்பு
வண்ணம் நீவி வகை வனப்புற்ற
விரிமென் கூந்தல் மெல் அணை வதிந்து
கொல்பிணி திருகிய மார்பு கவர் முயக்கத்து
பொழுது கொள் மரபின் மென்பிணி அவிழ
எவன் பல கழியுமோ – பெரும! பல் நாள்
பகை வெம்மையின் பாசறை மரீஇ
பாடு அரிது இயைந்த சிறுதுயில் இயலாது
…………………………………………………….
(பதிற். ஐந்தாம் பத்து. 50 : 16 – 26)
என்பதாகும். இதற்கு முன்பு நற்றிணையின் பாடல் ஒன்றில் பொருள்வயிற் பிரியக் கருதிய தலைவன் தன் நெஞ்சு நோக்கிக் கூறுவதில் கிள்ளிவளவனின் அம்பர் நகரைச் சூழ்ந்தோடும் அரிசிலாற்றின் தெளிந்த கருமணல் போன்றது இவளுடைய விரிந்ததும் தழைத்து நீண்டதுமான கூந்தல். அக்கூந்தலில் துயிலும் போது கிடைக்கும் மகிழ்ச்சியை இழக்க விரும்பவில்லை என்று கூறுவதில் பொருளைக் காட்டிலும் தலைவியின் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி பெரிது என்ற கருத்து பெறப்படுகிறது. அப்பாடல்
அரிசில் அம் தண் அறல் அன்ன, இவள்
விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே
(நற். 141: 11 – 12)
என்பதாகும்.(சமூக விழுமியம்: மயிர் தொடர் – 1 நற்றிணையிலிருந்து)
இவற்றிலிருந்து மனைவியின் கூந்தலைப் பாயலாக்கி படுத்துறங்குவது பொதுவில் கூறப்பட்டாலும் மன்னன் , குடிமகன் வாழ்வில் அந்நிகழ்வு பதிவு செய்யப்பட்ட நோக்கத்திற்கு ஏற்ப பொருள் வேறுபட்டமைவதை அறியமுடிகிறது.
தொடரும்......
அழகிய தொடர்... தொடர்ந்து நீளட்டும்...
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
" மயிர் " என்பது ஓர் அமங்கலமான சொல் . இச்சொல் சங்க இலக்கியங்களில் வந்துள்ளதா? திருக்குறளில் இச்சொல் வந்துள்ளது.
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை. ( மானம் - 964 )
இக்குறளில் " மயிரனையர் " என்ற சொல்லுக்குப் பதிலாக " முடியனையர் " என்ற சொல்லைப் பெய்தாலும் வெண்பா இலக்கணம் தளை தட்டாது . ஏன் அச்சொல்லைப் பயன்படுத்தவில்லை ? வள்ளுவர் காலத்தில்
" முடி " என்னும் சொல் வழக்கிலில்லையா ? " முடி " என்னும் சொல் மன்னனின் மணிமுடியை மட்டுமே குறித்ததா ?
" முடி திருத்தகம் " என்று இக்காலத்தில் விளம்பரப் பலகையில் பார்க்கிறோம். இந்த " முடி " என்னும் சொல் "மயிர் " கருத்திலே எப்போதிருந்து வழக்கில் வந்தது ?
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை. ( மானம் - 964 )
இக்குறளில் " மயிரனையர் " என்ற சொல்லுக்குப் பதிலாக " முடியனையர் " என்ற சொல்லைப் பெய்தாலும் வெண்பா இலக்கணம் தளை தட்டாது . ஏன் அச்சொல்லைப் பயன்படுத்தவில்லை ? வள்ளுவர் காலத்தில்
" முடி " என்னும் சொல் வழக்கிலில்லையா ? " முடி " என்னும் சொல் மன்னனின் மணிமுடியை மட்டுமே குறித்ததா ?
" முடி திருத்தகம் " என்று இக்காலத்தில் விளம்பரப் பலகையில் பார்க்கிறோம். இந்த " முடி " என்னும் சொல் "மயிர் " கருத்திலே எப்போதிருந்து வழக்கில் வந்தது ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- முனைவர் ப.குணசுந்தரிபண்பாளர்
- பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015
தொடர் – 3 பதிற்றுப்பத்தின் தொடர்ச்சி
செங்குட்டுவன் நாட்டுப் பெண்களின் கூந்தல்
கடல்பிறக்கோட்டிய குட்டுவனின் செல்வ மகிழ்ச்சியைப் பாடவரும் பரணர் தன் மூன்றாம் பாடலில் அவன் நாட்டுப் பெண்களைப் பற்றிக் கூறும்போது
கவரி முச்சி, கார்விரி கூந்தல்
ஊசல் மேவல், சேயிழை மகளிர்
(பதிற். ஐந்தாம் பத்து. 43 : 1 – 2)
என்று குறிப்பிடுகின்றார். இப்பாடலில் வரும் கவரி முச்சி என்பதற்கு உரையில் கவரி அணிந்த உச்சிக் கொண்டையினையும் மேகத்தைப் போன்ற விரிந்த கூந்தலையும் ஊசல் விளையாடுதலையும் செய்யும் செவ்விய ஆபரணங்களையும் உடைய மகளிர் என்று முனைவர் அ. ஆலிஸ் பொருள் தருகிறார். அதே நேரத்தில் பாடலின் விளக்கப்பகுதியில் கவரி என்பது கவரிமானின் மயிர் போலும் கூந்தல் என்றாயிற்று. முச்சியாகிய கூந்தல். முச்சி – கொண்டை, கார் – கருமை முற்றும் கருமை விரிந்த கூந்தல் என்பதனால் கார்விரி கூந்தல் என்றார் என்று விளக்கம் தருகின்றார். (பதிற்றுப்பத்து பக் . 137 நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)
தமிழாய்வாளர் திரு க. கதிரவன் அவர்கள் கவரி என்பதற்கு அது பெண்களின் தலை அலங்காரத்துக்குப் போலி மயிராகப் பயன்பட்டது என்றும் ஊஞ்சலில் ஆடும் பெண்கள் தம் கூந்தலோடு கவரியை இணைத்துப் பின்னியிருந்தமையை இப்பாடல் உணர்த்துவதாகவும் குறிப்பிட்டு இன்றைக்குப் பெண்கள் பயன்படுத்தும் போலிமயிர் சவரி எனப்படுகிறது. யாழ்ப்பாணம் கதிரைவேற்பிள்ளையின் அகராதி சவரி என்னும் சொல்லுக்கு கவரி என்றே பொருளுரைக்கிறது என்பதையும் உரிய ஆதாரங்களுடன் தெளிவாக எடுத்துரைக்கின்றார். அவர் எடுத்துக்காட்டும் பொருளே ஏற்புடையதாக இருக்கின்றது. (காண்க பக். 41 கவரி கருமை காளமேகம் இராசகுணா பதிப்பகம்)
தமிழாய்வாளர் திரு க. கதிரவன் அவர்களின் கவரி கருமை காளமேகம் எனும் தமிழாய்வுக் கட்டுரைத் தொகுப்பினை வாசிக்கத் தவறியிருந்தால் ஒருவேளை முனைவர் அ . ஆலிஸ் அவர்களின் உரையில் இடம்பெறும் பொதுவில் சொல்லப்பட்ட பொருளை ஏற்றுக்கொண்டு விளக்கப்பகுதியின் கருத்துமுரணைச் சுட்டிக்காட்டுவதோடு இத்தொடர் பயணித்திருக்கும்.
அரிசில்கிழார் எட்டாம் பத்தின் மூன்றாம் பாடலில் உயர்திணைமகளிர், ஆன்றோர் ……. மகளிர் என இருவகை மகளிர் பற்றிப் பதிவு செய்கின்றார். அவர்களில் உயர்திணை மகளிரை
……………….கூந்தல் ஒள் நுதல் பொலிந்த
நிறம்திகழ் பாசிழை உயர்திணை மகளிரும்
(பதிற். எட்டாம் பத்து 73: 4 – 5)
என்று குறிப்பிடுகின்றார். கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள பகுதி பாடலில் சிதைந்துள்ளது. அதுபோன்று ஆன்றோர் எனும் வார்த்தையைத் தொடர்ந்து வரும் அடியும் சிதைந்திருப்பதால் அச்சொல்லிற்கான பொருளை முழுமையாக அறியமுடியவில்லை. ஆகையினால் மற்றவரைப் பற்றிய பதிவு இருந்தாலும் கூந்தலுடன் தொடர்புப்படுத்த இயலாததனால் இங்குத் தவிர்க்கப்படுகிறது. எனினும் முனைவர் அ.ஆலிஸ் அவர்கள் தம் உரையில் உயர்திணை மகளிரை குலமகளிர் என்றும் ஆன்றோர் என வருவதைப் பரத்தையர் என்றும் குறிப்பிடுகின்றார். இது ஆய்விற்குரியது.
தொடரும்..............
செங்குட்டுவன் நாட்டுப் பெண்களின் கூந்தல்
கடல்பிறக்கோட்டிய குட்டுவனின் செல்வ மகிழ்ச்சியைப் பாடவரும் பரணர் தன் மூன்றாம் பாடலில் அவன் நாட்டுப் பெண்களைப் பற்றிக் கூறும்போது
கவரி முச்சி, கார்விரி கூந்தல்
ஊசல் மேவல், சேயிழை மகளிர்
(பதிற். ஐந்தாம் பத்து. 43 : 1 – 2)
என்று குறிப்பிடுகின்றார். இப்பாடலில் வரும் கவரி முச்சி என்பதற்கு உரையில் கவரி அணிந்த உச்சிக் கொண்டையினையும் மேகத்தைப் போன்ற விரிந்த கூந்தலையும் ஊசல் விளையாடுதலையும் செய்யும் செவ்விய ஆபரணங்களையும் உடைய மகளிர் என்று முனைவர் அ. ஆலிஸ் பொருள் தருகிறார். அதே நேரத்தில் பாடலின் விளக்கப்பகுதியில் கவரி என்பது கவரிமானின் மயிர் போலும் கூந்தல் என்றாயிற்று. முச்சியாகிய கூந்தல். முச்சி – கொண்டை, கார் – கருமை முற்றும் கருமை விரிந்த கூந்தல் என்பதனால் கார்விரி கூந்தல் என்றார் என்று விளக்கம் தருகின்றார். (பதிற்றுப்பத்து பக் . 137 நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)
தமிழாய்வாளர் திரு க. கதிரவன் அவர்கள் கவரி என்பதற்கு அது பெண்களின் தலை அலங்காரத்துக்குப் போலி மயிராகப் பயன்பட்டது என்றும் ஊஞ்சலில் ஆடும் பெண்கள் தம் கூந்தலோடு கவரியை இணைத்துப் பின்னியிருந்தமையை இப்பாடல் உணர்த்துவதாகவும் குறிப்பிட்டு இன்றைக்குப் பெண்கள் பயன்படுத்தும் போலிமயிர் சவரி எனப்படுகிறது. யாழ்ப்பாணம் கதிரைவேற்பிள்ளையின் அகராதி சவரி என்னும் சொல்லுக்கு கவரி என்றே பொருளுரைக்கிறது என்பதையும் உரிய ஆதாரங்களுடன் தெளிவாக எடுத்துரைக்கின்றார். அவர் எடுத்துக்காட்டும் பொருளே ஏற்புடையதாக இருக்கின்றது. (காண்க பக். 41 கவரி கருமை காளமேகம் இராசகுணா பதிப்பகம்)
தமிழாய்வாளர் திரு க. கதிரவன் அவர்களின் கவரி கருமை காளமேகம் எனும் தமிழாய்வுக் கட்டுரைத் தொகுப்பினை வாசிக்கத் தவறியிருந்தால் ஒருவேளை முனைவர் அ . ஆலிஸ் அவர்களின் உரையில் இடம்பெறும் பொதுவில் சொல்லப்பட்ட பொருளை ஏற்றுக்கொண்டு விளக்கப்பகுதியின் கருத்துமுரணைச் சுட்டிக்காட்டுவதோடு இத்தொடர் பயணித்திருக்கும்.
அரிசில்கிழார் எட்டாம் பத்தின் மூன்றாம் பாடலில் உயர்திணைமகளிர், ஆன்றோர் ……. மகளிர் என இருவகை மகளிர் பற்றிப் பதிவு செய்கின்றார். அவர்களில் உயர்திணை மகளிரை
……………….கூந்தல் ஒள் நுதல் பொலிந்த
நிறம்திகழ் பாசிழை உயர்திணை மகளிரும்
(பதிற். எட்டாம் பத்து 73: 4 – 5)
என்று குறிப்பிடுகின்றார். கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள பகுதி பாடலில் சிதைந்துள்ளது. அதுபோன்று ஆன்றோர் எனும் வார்த்தையைத் தொடர்ந்து வரும் அடியும் சிதைந்திருப்பதால் அச்சொல்லிற்கான பொருளை முழுமையாக அறியமுடியவில்லை. ஆகையினால் மற்றவரைப் பற்றிய பதிவு இருந்தாலும் கூந்தலுடன் தொடர்புப்படுத்த இயலாததனால் இங்குத் தவிர்க்கப்படுகிறது. எனினும் முனைவர் அ.ஆலிஸ் அவர்கள் தம் உரையில் உயர்திணை மகளிரை குலமகளிர் என்றும் ஆன்றோர் என வருவதைப் பரத்தையர் என்றும் குறிப்பிடுகின்றார். இது ஆய்விற்குரியது.
தொடரும்..............
- Sponsored content
Page 8 of 12 • 1, 2, 3 ... 7, 8, 9, 10, 11, 12
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 12
|
|