புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நுங்கம்பாக்கம் படுகொலை: பரபரப்பு நிமிடங்கள்!
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
சென்னையை இன்று காலை உலுக்கியது நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த இளம் பெண் படுகொலை. செங்கல்பட்டில் இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 25 வயதான சுவாதி என்ற இளம் பெண் அடையாளம் தெரியாத நபரால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
சென்னை சூளைமேட்டில் வசித்து வரும் சுவாதியை வேலைக்கு செல்ல காலை 7:30 மணியளவில் அவரது தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பைக்கில் இறக்கி விட்டு சென்றார்.
சந்தான கோபாலகிருஷ்ணன் இறக்கிவிட்டு சென்ற சில நிமிடங்களிலேயே சுவாதி கொலை செய்யப்பட்டார். பச்சை நிற டி-ஷர்ட்டும், கருப்பு நிற பேண்டும் அணிந்து வந்த அந்த அடையாளம் தெரியாத நபர் தான் கொண்டு வந்த பேக்கில் இருந்து கத்தியை எடுத்து சுவாதியின் கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளான்.
ஆள் நடமாட்டம் உள்ள, நெரிசல் மிகுந்த முக்கியமான ஒரு ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு சில மணித் துளிகளிலேயே தப்பியோடியுள்ளான். ரயில் நிலையத்தில் யாருமே கொலை செய்தவனை தடுக்கவில்லை, தாக்கி பிடிக்கவில்லை.
என்ன நடந்தது என உணர்வதற்குள்ளேயே அவன் தப்பித்து ஓடிவிட்டான் என கூறுகின்றனர் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள். 7.30 மணிக்கு படுகொலை நடந்தும் 8.30 மணி வரையிலும் சுவாதியின் உடல் ரயில் நிலையத்திலேயே இருந்துள்ளது.
காவல் துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதிலும் மெத்தனம் காட்டியதாக கூறப்படுகிறது. காலையில் தந்தை ரயில் நிலையத்தில் பைக்கில் இறக்கி விட்ட சில நிமிடங்களிலேயே இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது அவரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ரயில் நிலையத்தில் அவரது தந்தை கதறி அழுத காட்சி ரயில் பயணிகளிடம் அழுகையையே வரவைத்தது.
இதனையடுத்து சுவாதியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர் சுவாதியின் பேக்கையும், அவரது கைப்பேசியையும் கைப்பற்றிய காவல் துறையினர் சுவாதி கடைசியாக பேசிய அவரது ஆண் நண்பரை வரவழைத்து அவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெப்துனியா
சென்னையை இன்று காலை உலுக்கியது நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த இளம் பெண் படுகொலை. செங்கல்பட்டில் இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வரும் 25 வயதான சுவாதி என்ற இளம் பெண் அடையாளம் தெரியாத நபரால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
சென்னை சூளைமேட்டில் வசித்து வரும் சுவாதியை வேலைக்கு செல்ல காலை 7:30 மணியளவில் அவரது தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பைக்கில் இறக்கி விட்டு சென்றார்.
சந்தான கோபாலகிருஷ்ணன் இறக்கிவிட்டு சென்ற சில நிமிடங்களிலேயே சுவாதி கொலை செய்யப்பட்டார். பச்சை நிற டி-ஷர்ட்டும், கருப்பு நிற பேண்டும் அணிந்து வந்த அந்த அடையாளம் தெரியாத நபர் தான் கொண்டு வந்த பேக்கில் இருந்து கத்தியை எடுத்து சுவாதியின் கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளான்.
ஆள் நடமாட்டம் உள்ள, நெரிசல் மிகுந்த முக்கியமான ஒரு ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு சில மணித் துளிகளிலேயே தப்பியோடியுள்ளான். ரயில் நிலையத்தில் யாருமே கொலை செய்தவனை தடுக்கவில்லை, தாக்கி பிடிக்கவில்லை.
என்ன நடந்தது என உணர்வதற்குள்ளேயே அவன் தப்பித்து ஓடிவிட்டான் என கூறுகின்றனர் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள். 7.30 மணிக்கு படுகொலை நடந்தும் 8.30 மணி வரையிலும் சுவாதியின் உடல் ரயில் நிலையத்திலேயே இருந்துள்ளது.
காவல் துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதிலும் மெத்தனம் காட்டியதாக கூறப்படுகிறது. காலையில் தந்தை ரயில் நிலையத்தில் பைக்கில் இறக்கி விட்ட சில நிமிடங்களிலேயே இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது அவரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ரயில் நிலையத்தில் அவரது தந்தை கதறி அழுத காட்சி ரயில் பயணிகளிடம் அழுகையையே வரவைத்தது.
இதனையடுத்து சுவாதியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர் சுவாதியின் பேக்கையும், அவரது கைப்பேசியையும் கைப்பற்றிய காவல் துறையினர் சுவாதி கடைசியாக பேசிய அவரது ஆண் நண்பரை வரவழைத்து அவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெப்துனியா
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
சுவாதி கொலை வழக்கில் குற்றவாளி அடையாளம் தெரிந்தது: விரைவில் பிடிபடுவார் என தகவல்
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி (24) கொலை செய்யப்பட்ட வழக்கில் புதிய ஆதாரங்கள் மூலம் குற்றவாளியின் அடையாளம் தெரிந்துள்ளது. கொலையாளியை நெருங்கிவிட்டதாக ரயில்வே போலீஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்தின் அடிப்படையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவான இளைஞரின் படத்தை ரயில்வே போலீஸ் வெளியிட் டுள்ளது. ரயில்வே போலீஸார் 2 டிஎஸ்பி, 4 இன்ஸ்பெக்டர் கள் தலைமையில் தனிப்படை கள் அமைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். இதுவரையில் 4 வகையான வீடியோக்கள் வெளியிடப்பட் டுள்ளன.
சவுராஷ்டிரா நகர் முதல் தெரு முதல் அங்குள்ள 10 தெருக்கள் வரையிலுள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில் சந்தேகிக்கும் இளைஞர் வந்து போவது பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஒரு மாதம் முன்பு சுவாதியை ஒரு இளைஞர் பின்தொடர்ந்து வந்துள்ளார். அவர் தொடர்ந்து சுவாதிக்கு தொந்தரவு கொடுத்து வந்தாரா, அவர்தான் கொலையில் ஈடுபட்டாரா என்றும் விசாரணை நடக்கிறது.
கொலையாளி என சந்தேகிக் கப்படும் நபரின் புதிய வீடியோ காட்சி ஒன்றும் போலீஸாரிடம் கிடைத்திருக்கிறது. அதில் இளை ஞர் ஒருவர் தண்டவாளத்தில் குதித்து தப்பிச் செல்லும் காட்சி பதிவாகி இருக்கிறது. 2-வது நடைமேடையில் இருந்து தண்டவாளம் இருக்கும் பகுதியில் குதிக்கும் அந்த இளைஞர், ரயில் நிலையம் அருகில் உள்ள சர்வீஸ் சாலை வழியாக தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
நெருங்கிவிட்டோம்
இது தொடர்பாக ரயில்வே போலீஸிடம் கேட்டபோது, ‘‘சுவாதி கொலை வழக்கில் பல்வேறு முக்கிய தடயங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் கிடைத்துள் ளன. அதன் மூலம் குற்ற வாளியை சந்தேகிக்கும் வகை யில் அடையாளம் கண்டறிந்துள் ளோம். அவரை நெருங்கிவிட் டோம். விரைவில் பிடித்து விடு வோம். சந்தேகிக்கும் குற்றவாளி யின் படத்தை வெளியிட்டுள் ளோம். அந்த இளைஞரை நேரில் பார்த்தால் 1512 என்ற எண்ணுக்கு தகவல் அளிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்’’ என்றனர்.
பட்டா கத்தி
கொலை செய்த இளைஞர் பட்டா கத்தியை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே ரயில் பாதையில் போட்டுவிட்டு சென்றுள்ளார். அந்த கத்தியை பறிமுதல் செய்துள்ள ரயில்வே போலீஸார், இதுபோன்ற கத்தி எந்த மாவட்டத்தில் தயாரிக்கப்படுகிறது, அது எப்போது தயாரிக்கப்பட்டிருக்கும் என்றும் விசாரித்து வருகின்றனர்.
நன்றி யாழ்.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி (24) கொலை செய்யப்பட்ட வழக்கில் புதிய ஆதாரங்கள் மூலம் குற்றவாளியின் அடையாளம் தெரிந்துள்ளது. கொலையாளியை நெருங்கிவிட்டதாக ரயில்வே போலீஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்தின் அடிப்படையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவான இளைஞரின் படத்தை ரயில்வே போலீஸ் வெளியிட் டுள்ளது. ரயில்வே போலீஸார் 2 டிஎஸ்பி, 4 இன்ஸ்பெக்டர் கள் தலைமையில் தனிப்படை கள் அமைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். இதுவரையில் 4 வகையான வீடியோக்கள் வெளியிடப்பட் டுள்ளன.
சவுராஷ்டிரா நகர் முதல் தெரு முதல் அங்குள்ள 10 தெருக்கள் வரையிலுள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில் சந்தேகிக்கும் இளைஞர் வந்து போவது பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஒரு மாதம் முன்பு சுவாதியை ஒரு இளைஞர் பின்தொடர்ந்து வந்துள்ளார். அவர் தொடர்ந்து சுவாதிக்கு தொந்தரவு கொடுத்து வந்தாரா, அவர்தான் கொலையில் ஈடுபட்டாரா என்றும் விசாரணை நடக்கிறது.
கொலையாளி என சந்தேகிக் கப்படும் நபரின் புதிய வீடியோ காட்சி ஒன்றும் போலீஸாரிடம் கிடைத்திருக்கிறது. அதில் இளை ஞர் ஒருவர் தண்டவாளத்தில் குதித்து தப்பிச் செல்லும் காட்சி பதிவாகி இருக்கிறது. 2-வது நடைமேடையில் இருந்து தண்டவாளம் இருக்கும் பகுதியில் குதிக்கும் அந்த இளைஞர், ரயில் நிலையம் அருகில் உள்ள சர்வீஸ் சாலை வழியாக தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
நெருங்கிவிட்டோம்
இது தொடர்பாக ரயில்வே போலீஸிடம் கேட்டபோது, ‘‘சுவாதி கொலை வழக்கில் பல்வேறு முக்கிய தடயங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் கிடைத்துள் ளன. அதன் மூலம் குற்ற வாளியை சந்தேகிக்கும் வகை யில் அடையாளம் கண்டறிந்துள் ளோம். அவரை நெருங்கிவிட் டோம். விரைவில் பிடித்து விடு வோம். சந்தேகிக்கும் குற்றவாளி யின் படத்தை வெளியிட்டுள் ளோம். அந்த இளைஞரை நேரில் பார்த்தால் 1512 என்ற எண்ணுக்கு தகவல் அளிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்’’ என்றனர்.
பட்டா கத்தி
கொலை செய்த இளைஞர் பட்டா கத்தியை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே ரயில் பாதையில் போட்டுவிட்டு சென்றுள்ளார். அந்த கத்தியை பறிமுதல் செய்துள்ள ரயில்வே போலீஸார், இதுபோன்ற கத்தி எந்த மாவட்டத்தில் தயாரிக்கப்படுகிறது, அது எப்போது தயாரிக்கப்பட்டிருக்கும் என்றும் விசாரித்து வருகின்றனர்.
நன்றி யாழ்.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
திருச்சியில் இருந்து வந்துள்ள ரயில்வே எஸ்.பி ஆனி விஜயா,
கொலை செய்யப்பட்ட சுவாதி வீட்டில் நேற்றும் இன்றும்
விசாரணை மேற்கொண்டார்.
கொலை குறித்து அறிவியல் பூர்வமாக புலனாய்வு செய்து
வருவதாகவும் எஸ்.பி ஆனி விஜயா தெரிவித்தார்.
கொலை நடந்து 3 நாட்களாகியும், இதுவரை குற்றவாளியை
போலீசாரால் கண்டு பிடிக்க முடியவில்லை. இதற்கு காரணம்,
ரயில்வே போலீசாரும், சென்னை மாநகர போலீசாரும்
குற்றவாளியை பிடிக்க ஒருங்கிணைந்து செயல்படவில்லை என்ற
புகார் எழுந்தது.
இதற்கு நீதிமன்றமும் கண்டனம் தெரிவித்தது.
சுவாதி கொலை வழக்கின் புலன் விசாரணை என்ன நிலையில்
உள்ளது என்ற விவரங்களை இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த
உயர்நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள்
தெரிவித்தனர்.
கொலையாளியைப் பற்றி இரண்டு வீடியோக்கள் கிடைத்த நிலையிலும்
ரயில்வே போலீசாரின் விசாரணை நத்தை வேகத்தில் நகரவே,
இந்த கொலை வழக்கை சென்னை காவல்துறைக்கு மாற்றி டிஜிபி
அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம்
-
-
தமிழ் ஒன் இந்தியா
கொலை செய்யப்பட்ட சுவாதி வீட்டில் நேற்றும் இன்றும்
விசாரணை மேற்கொண்டார்.
கொலை குறித்து அறிவியல் பூர்வமாக புலனாய்வு செய்து
வருவதாகவும் எஸ்.பி ஆனி விஜயா தெரிவித்தார்.
கொலை நடந்து 3 நாட்களாகியும், இதுவரை குற்றவாளியை
போலீசாரால் கண்டு பிடிக்க முடியவில்லை. இதற்கு காரணம்,
ரயில்வே போலீசாரும், சென்னை மாநகர போலீசாரும்
குற்றவாளியை பிடிக்க ஒருங்கிணைந்து செயல்படவில்லை என்ற
புகார் எழுந்தது.
இதற்கு நீதிமன்றமும் கண்டனம் தெரிவித்தது.
சுவாதி கொலை வழக்கின் புலன் விசாரணை என்ன நிலையில்
உள்ளது என்ற விவரங்களை இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த
உயர்நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள்
தெரிவித்தனர்.
கொலையாளியைப் பற்றி இரண்டு வீடியோக்கள் கிடைத்த நிலையிலும்
ரயில்வே போலீசாரின் விசாரணை நத்தை வேகத்தில் நகரவே,
இந்த கொலை வழக்கை சென்னை காவல்துறைக்கு மாற்றி டிஜிபி
அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம்
-
-
தமிழ் ஒன் இந்தியா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
T.N.Balasubramanian wrote:
கிளர்த்தெழ வைக்கும் உடை என்பது , மத சம்பந்தப் பட்டது இல்லை .
நாம் (பெண்கள் ) உடுக்கும் உடை ,ஆண்கள் மத்தியில் ஒரு கிளர்ச்சியை எழுப்பக்கூடாது .
பாவாடையோ / தாவணியோ /புடவையோ /ஜீன்ஸோ /டீ ஷர்ட்டோ --கிளர்ச்சியை எழுப்பாவண்ணம்
உடுக்க முடியாதா ?
ஆண்களை கட்டுப்படுத்த முடியாது என அறிந்தே , அந்த மத தலைவர்கள் பர்தா முறையை கொண்டு வந்தனர் .
இஸ்லாம் மதத்தில், கணவன் ஒருவன் மட்டுமே பெண்ணின் ஆடை அற்ற அங்கங்களை காணமுடியும் .
மற்ற ஆண்களுக்கு அந்த உரிமை இல்லை என அறிகிறேன் . இஸ்லாமிய உறவுகள் இது சரிதானா என்று கூறவும் .
மன்னிக்கவும் அய்யா நீங்கள் தூண்டத்தகாத உடை என்று சொல்லி இருந்தால், ஓரளவுக்கு உடன் படுவேன் தங்கள் கருத்துக்கு - ஆனால் அந்தப் படம் இஸ்லாமிய பெண்களின் படமானதால் தான், எனக்கு கருத்து வேறுபாடு.
ஆடவர் எப்படி வேண்டுமானாலும் இருப்போம், காத்துக்கொள்ள பெண்களே மூடிக்கொள்ள வேண்டும் என்று சொல்வது, நிச்சயம் ஏற்புடையதல்ல.
T.N.Balasubramanian wrote:
ஆடை கிளர்ச்சி எழுப்பும் வண்ணம் அணிவதால் மட்டும் முற்போக்குதன்மை ஆகிவிடுமா ?
2 வீலர்கள் /கார் / விமானம் ஓட்டுங்கள் ராணுவத்தில் /விமானப் படையில் சேருங்கள்
para செய்லிங் பண்ணுங்கள் . ஆண்களுக்கு ஈடாக CEO ஆகுங்கள் வரவேற்கிறேன் .
கட்டுப்பெட்டித்தனமாக ஆடை அணிவதால் ஒரு பெண்ணின் உயிர் காக்கப் படுமெனில் , அதை நான் வரவேற்கிறேன் . .
ரமணியன்
ஏன் பெண்கள் இல்லையா அந்தப் பதவிகளில் - மிகப் பெரிய அளவில் இருக்கிறார்கள். ஆணின் அடக்குமுறை அவர்களின் பால் உள்ள பயத்தில், மென்மேலும் அவர்கள் வளர தடையாக இருக்கிறது.
ஆனெனும் மிருகம் சமூகத்தில் அடக்கமின்றி திரிவதற்கு
பெண்ணெனும் பாவம் வண்டலூரில் அடைபட்டு அல்லல் படனுமா?
அனைத்து ஆண்களையும் சொல்லவில்லை குற்றம்;
அனைத்து பெண்களையும் போற்றவில்லை அஃதே.
அய்யா என் பதில் தங்களுக்கு அல்ல - சமூகத்துக்கு, தவறாக எடுத்து கொள்ளவேண்டாம்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஏன் பெண்கள் இல்லையா அந்தப் பதவிகளில் - மிகப் பெரிய அளவில் இருக்கிறார்கள். ஆணின் அடக்குமுறை அவர்களின் பால் உள்ள பயத்தில், மென்மேலும் அவர்கள் வளர தடையாக இருக்கிறது.
ஆம் ,சிலர் எதிர் நீச்சல் போட்டு முன்னேறுகிறார்கள் அவர்களுக்கு
அனைத்து ஆண்களையும் சொல்லவில்லை குற்றம்;
அனைத்து பெண்களையும் போற்றவில்லை அஃதே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சுவாதி தொடர்பாக கற்பனை செய்தி வேண்டாம்: ராமதாஸ்
-
நுங்கம்பாக்கம் ரயில் நிலையில் படுகொலை செய்யப்பட்ட
சுவாதி தொடர்பாக கற்பனை செய்திகளை வெளியிட வேண்டாம்
என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
சென்னை நுங்கம்பாக்கம் புறநகர் தொடர்வண்டி நிலையத்தில்
சுவாதி என்ற மென்பொருள் பொறியாளர் கொடூரமான முறையில்
படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி இன்னும் விலகாத நிலையில்,அவரது
கொலைக்கு காரணம் கற்பித்து கற்பனையாக பரப்பப்படும்
அவதூறுகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. இத்தகைய செயல்கள்
கண்டிக்கத்தக்கவை.
சுவாதியை ஒருவன் சரமாரியாக வெட்டும்போது, தொடர்வண்டி
நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் அதிகாரிகளில் ஒருவர் குரல்
எழுப்பியிருந்தாலோ தங்களின் கைகளில் கிடைத்த பொருளை
வீசியிருந்தாலோ கொலையாளிக்கு சிறிதளவாவது அச்சம்
ஏற்பட்டிருக்கக் கூடும். சுவாதியின் உயிரைக் காப்பாற்றுவதற்கு அதுவே
போதுமானதாக இருந்திருக்கும்.
-
ஆனால், சுவாதியை கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பி ஓடும்
வரை எவரும் அதற்காக முயற்சி கூட செய்யவில்லை. இது மிகவும்
வருத்தமளிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
-
--------------------------
தினமணி
-
நுங்கம்பாக்கம் ரயில் நிலையில் படுகொலை செய்யப்பட்ட
சுவாதி தொடர்பாக கற்பனை செய்திகளை வெளியிட வேண்டாம்
என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
சென்னை நுங்கம்பாக்கம் புறநகர் தொடர்வண்டி நிலையத்தில்
சுவாதி என்ற மென்பொருள் பொறியாளர் கொடூரமான முறையில்
படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி இன்னும் விலகாத நிலையில்,அவரது
கொலைக்கு காரணம் கற்பித்து கற்பனையாக பரப்பப்படும்
அவதூறுகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. இத்தகைய செயல்கள்
கண்டிக்கத்தக்கவை.
சுவாதியை ஒருவன் சரமாரியாக வெட்டும்போது, தொடர்வண்டி
நிலையத்தில் இருந்த பயணிகள் மற்றும் அதிகாரிகளில் ஒருவர் குரல்
எழுப்பியிருந்தாலோ தங்களின் கைகளில் கிடைத்த பொருளை
வீசியிருந்தாலோ கொலையாளிக்கு சிறிதளவாவது அச்சம்
ஏற்பட்டிருக்கக் கூடும். சுவாதியின் உயிரைக் காப்பாற்றுவதற்கு அதுவே
போதுமானதாக இருந்திருக்கும்.
-
ஆனால், சுவாதியை கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பி ஓடும்
வரை எவரும் அதற்காக முயற்சி கூட செய்யவில்லை. இது மிகவும்
வருத்தமளிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
-
--------------------------
தினமணி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:எனக்கு தோன்றுகின்ற ஒரு யோஜனை .
பெண்கள் யாவரும் ,
இருந்தால்தான் நல்லது என்பேன் .
ஆண்களில் நல்லவர்களும் இருப்பார்கள் .மோசமானவர்களும் இருப்பார்கள் . மனதால் மோசமானவர்களை முகத்தால் அறியமுடியாது . நல்லவர் தோற்றம் அளிப்பவர்களும் ,மிருக மனம் எப்போது கிளர்ந்தெழும் என்று கூறமுடியாது .
கிளர்ந்தெழ வைக்கும் உடை ,நகை, பேச்சு முதலியவை அறவே நிறுத்தமுடிந்தால் இது ஓரளவு சாத்தியமாகும் .
ரமணியன்
வாஸ்த்தவம் ஐயா, இங்கேயே இருந்துவிட்டு, இந்தியா வந்து புடவை கட்டினால் எனக்கு என்னவோ எல்லோரும் என்னையே பார்ப்பது போல இருக்கும்...........ஏதோ 'insecured ' போல சில நாட்களுக்கு உணர்வேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1212765
ஐயா !
இது மிகவும் அபாயகரமான யோசனை . ஆண்களும் பர்தா அணிந்து , பெண்கள் Compartment -ல் புகுந்து சில்மிஷம் செய்வார்கள் .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1212827T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1212797யினியவன் wrote:T.N.Balasubramanian wrote:
கிளர்ந்தெழ வைக்கும் உடை ,நகை, பேச்சு முதலியவை அறவே நிறுத்தமுடிந்தால் இது ஓரளவு சாத்தியமாகும் .
ரமணியன்
அய்யா அந்த உடை ஒரு மதம் சம்பந்தப்பட்டது. எனவே அதை தீர்வாக மற்றவர்க்கு சொல்ல இயலாது.
ஆண்களுக்கு சுய கட்டுப்பாடு வேண்டும்.
மிருகத்தனமாய் இல்லாத மனம் வேண்டும்.
பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை கற்று கொடுக்கும் பெற்றோர் வேண்டும்.
பொத்தாம் பொதுவாக பெண்களை அடங்கி ஒடுங்கி போர்த்திக்கொண்டு
வலம் வர சொல்வது, மிக மிக பிற்போக்குத்தனமான செய்கை என்பது என் கருத்து.
கிளர்த்தெழ வைக்கும் உடை என்பது , மத சம்பந்தப் பட்டது இல்லை .
நாம் (பெண்கள் ) உடுக்கும் உடை ,ஆண்கள் மத்தியில் ஒரு கிளர்ச்சியை எழுப்பக்கூடாது .
பாவாடையோ / தாவணியோ /புடவையோ /ஜீன்ஸோ /டீ ஷர்ட்டோ --கிளர்ச்சியை எழுப்பாவண்ணம்
உடுக்க முடியாதா ?
ஆண்களை கட்டுப்படுத்த முடியாது என அறிந்தே , அந்த மத தலைவர்கள் பர்தா முறையை கொண்டு வந்தனர் .
இஸ்லாம் மதத்தில், கணவன் ஒருவன் மட்டுமே பெண்ணின் ஆடை அற்ற அங்கங்களை காணமுடியும் .
மற்ற ஆண்களுக்கு அந்த உரிமை இல்லை என அறிகிறேன் . இஸ்லாமிய உறவுகள் இது சரிதானா என்று கூறவும் .ஆடை கிளர்ச்சி எழுப்பும் வண்ணம் அணிவதால் மட்டும் முற்போக்குதன்மை ஆகிவிடுமா ?பெண்களை அடங்கி ஒடுங்கி போர்த்திக்கொண்டு
வலம் வர சொல்வது, மிக மிக பிற்போக்குத்தனமான செய்கை என்பது என் கருத்து.
2 வீலர்கள் /கார் / விமானம் ஓட்டுங்கள் ராணுவத்தில் /விமானப் படையில் சேருங்கள்
para செய்லிங் பண்ணுங்கள் . ஆண்களுக்கு ஈடாக CEO ஆகுங்கள் வரவேற்கிறேன் .
கட்டுப்பெட்டித்தனமாக ஆடை அணிவதால் ஒரு பெண்ணின் உயிர் காக்கப் படுமெனில் , அதை நான் வரவேற்கிறேன் . .
ரமணியன்
கட்டுப்பெட்டித்தனமாக ஆடை அணிவதால் ஒரு பெண்ணின் உயிர் காக்கப் படுமெனில் , அதை நான் வரவேற்கிறேன் . .
100% நீங்க சொல்வது சரி ஐயா ............
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
காட்டுமிராண்டியாக ஆண் திரிகையில்
கட்டுப்பெட்டியாக பெண் ஏன் திரிய வேண்டும்?
வீட்டில் அடங்கி ஒடுங்கி அடிமைகளாவே இருந்துவிடலாமே!!!
உயிரையும் உடலையும் காப்பாற்றிக்கொண்டு
அடிமைகளாக வீட்டினுள் நித்தம் வலம் வர
அடிமைகளாக்கும் ஆண் வர்க்கத்தை
போற்றுவீர், பெறுவீர், வளர்ப்பீர்!!!
பாரதி பாடியதை மறப்பீர்:
பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா!-அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!
கட்டுப்பெட்டியாக பெண் ஏன் திரிய வேண்டும்?
வீட்டில் அடங்கி ஒடுங்கி அடிமைகளாவே இருந்துவிடலாமே!!!
உயிரையும் உடலையும் காப்பாற்றிக்கொண்டு
அடிமைகளாக வீட்டினுள் நித்தம் வலம் வர
அடிமைகளாக்கும் ஆண் வர்க்கத்தை
போற்றுவீர், பெறுவீர், வளர்ப்பீர்!!!
பாரதி பாடியதை மறப்பீர்:
பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா!-அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பாரதி கண்ட புதுமைப் பெண்கள் இங்கில்லை
போற்றி போற்றி!ஓர் ஆயிரம் போற்றி!நின்
பொன்ன டிக்குப்பல் லாயிரம் போற்றி காண்!
சேற்றி லேபுதி தாக முளைத்த தோர்
செய்ய தாமரைத் தேமலர் போலொளி
தோற்றி நின்றனை பாரத நாட்டிலே;
துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை
சாற்றி வந்தனை,மாதரசே!எங்கள்
சாதி செய்த தவப்பயன், வாழி நீ!
மாதர்க் குண்டு சுதந்திரம் என்றுநின்
வண்ம லர்த்திரு வாயின் மொழிந்தசொல்
நாதந் தானது நாரதர் வீணையோ?
நம்பிரான் கண்ணன் வேய்ங்குழ லின்பமோ?
வேதம் பொன்னுருக் கன்னிகை யாகியே
மேன்மை செய்தெமைக் காத்திடச் சொலவதோ?
சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமோ?
தையல் வாழ்கபல் லாண்டுப்ல லாண்டிங்கே!
அறிவு கொண்ட மனித வுயிர்களை
அடிமை யாக்க முயல்பவர் பித்தராம்;
நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர்
நேர்மை கொண்டுயர் தேவர்க ளாதற்கே,
சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள்
தீயி லிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்;
நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்
நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ!
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி,இவ் வையம் தழைக்குமாம்;
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாட்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்கடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ!
நிலத்தின் தன்மை பயிர்க்குள தாகுமாம்;
நீசத் தொண்டும் மடமையும் கொண்டதாய்
தலத்தில் மாண்புயர் மக்களைப் பெற்றிடல்
சால வேயரி தாவதொர் செய்தியாம்;
குலத்து மாதர்க்குக் கற்பியல் பாகுமாம்;
கொடுமை செய்தும் அறிவை யழித்துமந்
நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்;
நங்கை கூறும் வியப்புக்கள் கேட்டிரோ!
புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும்
பொய்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச்
சதும றைப்படி மாந்தர் இருந்தநாள்
தன்னி லேபொது வான வழக்கமாம்;
மதுரத் தேமொழி மங்கைய் உண்மைதேர்
மாத வப்பெரி யோருட னொப்புற்றே
முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய
முறைமை மாறிடக் கேடு விளைந்ததாம.
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!
உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,
ஓது பற்பல நூல்வகை கற்கவும்,
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத
தேச மோங்க உழைத்திடல் வேண்டுமாம்;
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம்.
சாத்தி ரங்கள் பலபல கற்பராம்;
சவுரி யங்கள் பலபல செய்வராம்;
மூத்த பொய்மைகள் யாவும் அழிப்பராம்;
மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்;
காத்து மானிடர் செய்கை யனைத்தையும்
கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்;
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்;
இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டிரோ;
போற்றி,போற்றி!ஜயஜய போற்றி!இப்
புதுமைப் பெண்ணொளி வாழிபல் லாண்டிங்கே!
மாற்றி வையம் புதுமை யுறச்செய்து
மனிதர் தம்மை அமரர்க ளாக்கவே
ஆற்றல் கொண்ட பராசக்தி யன்னை,நல்
அருளி னாலொரு கன்னிகை யாகியே
தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்
செல்வம் யாவினும் மேற்செல்வம் எய்தினோம்.!
போற்றி போற்றி!ஓர் ஆயிரம் போற்றி!நின்
பொன்ன டிக்குப்பல் லாயிரம் போற்றி காண்!
சேற்றி லேபுதி தாக முளைத்த தோர்
செய்ய தாமரைத் தேமலர் போலொளி
தோற்றி நின்றனை பாரத நாட்டிலே;
துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை
சாற்றி வந்தனை,மாதரசே!எங்கள்
சாதி செய்த தவப்பயன், வாழி நீ!
மாதர்க் குண்டு சுதந்திரம் என்றுநின்
வண்ம லர்த்திரு வாயின் மொழிந்தசொல்
நாதந் தானது நாரதர் வீணையோ?
நம்பிரான் கண்ணன் வேய்ங்குழ லின்பமோ?
வேதம் பொன்னுருக் கன்னிகை யாகியே
மேன்மை செய்தெமைக் காத்திடச் சொலவதோ?
சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமோ?
தையல் வாழ்கபல் லாண்டுப்ல லாண்டிங்கே!
அறிவு கொண்ட மனித வுயிர்களை
அடிமை யாக்க முயல்பவர் பித்தராம்;
நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர்
நேர்மை கொண்டுயர் தேவர்க ளாதற்கே,
சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள்
தீயி லிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்;
நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்
நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ!
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி,இவ் வையம் தழைக்குமாம்;
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாட்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்கடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ!
நிலத்தின் தன்மை பயிர்க்குள தாகுமாம்;
நீசத் தொண்டும் மடமையும் கொண்டதாய்
தலத்தில் மாண்புயர் மக்களைப் பெற்றிடல்
சால வேயரி தாவதொர் செய்தியாம்;
குலத்து மாதர்க்குக் கற்பியல் பாகுமாம்;
கொடுமை செய்தும் அறிவை யழித்துமந்
நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்;
நங்கை கூறும் வியப்புக்கள் கேட்டிரோ!
புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும்
பொய்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச்
சதும றைப்படி மாந்தர் இருந்தநாள்
தன்னி லேபொது வான வழக்கமாம்;
மதுரத் தேமொழி மங்கைய் உண்மைதேர்
மாத வப்பெரி யோருட னொப்புற்றே
முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய
முறைமை மாறிடக் கேடு விளைந்ததாம.
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்ன உரைப்பது கேட்டிரோ!
உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,
ஓது பற்பல நூல்வகை கற்கவும்,
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத
தேச மோங்க உழைத்திடல் வேண்டுமாம்;
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம்.
சாத்தி ரங்கள் பலபல கற்பராம்;
சவுரி யங்கள் பலபல செய்வராம்;
மூத்த பொய்மைகள் யாவும் அழிப்பராம்;
மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்;
காத்து மானிடர் செய்கை யனைத்தையும்
கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்;
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்;
இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டிரோ;
போற்றி,போற்றி!ஜயஜய போற்றி!இப்
புதுமைப் பெண்ணொளி வாழிபல் லாண்டிங்கே!
மாற்றி வையம் புதுமை யுறச்செய்து
மனிதர் தம்மை அமரர்க ளாக்கவே
ஆற்றல் கொண்ட பராசக்தி யன்னை,நல்
அருளி னாலொரு கன்னிகை யாகியே
தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்
செல்வம் யாவினும் மேற்செல்வம் எய்தினோம்.!
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|