புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 31 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 31 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 31 Poll_c10 
9 Posts - 82%
heezulia
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 31 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 31 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 31 Poll_c10 
1 Post - 9%
mruthun
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 31 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 31 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 31 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 31 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 31 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 31 Poll_c10 
77 Posts - 49%
ayyasamy ram
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 31 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 31 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 31 Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 31 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 31 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 31 Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 31 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 31 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 31 Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 31 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 31 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 31 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 31 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 31 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 31 Poll_c10 
3 Posts - 2%
manikavi
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 31 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 31 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 31 Poll_c10 
2 Posts - 1%
mruthun
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 31 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 31 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 31 Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 31 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 31 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 31 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 31 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 31 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 31 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் தமிழை முறையாக அறிவோமே !


   
   

Page 31 of 34 Previous  1 ... 17 ... 30, 31, 32, 33, 34  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 17, 2016 8:53 am

First topic message reminder :

காற்பந்தா? கால் பந்தா? எது சரி ?

நாள் + கள் = நாள்கள்
கால் + கள் = கால்கள்
கோள் + கள் = கோள்கள்
வேல் + கள் = வேல்கள்
தாள் + கள் = தாள்கள்

இவ்விதியின் படி கால் + பந்து = கால்பந்து என்றே எழுதப் பெறல் வேண்டும். இவ்வாறு எழுதுவதும் பேசுவதும் ஏற்புடையதுதானா என்பதே நம் ஆய்வு.

இதற்கு நடைமுறையிலுள்ள பல எடுத்துக்காட்டுகளைக் காண்பது நன்று.

மேல் + கணக்கு
கால் + கடுக்க
பால் + பசு
நாள் + கோள்
பால் + பழம்
கால் + சட்டை
மேல் + படிப்பு
கால் + புள்ளி
நூல் + பா
மேல் + கொண்டு
பால் + குடம்

இவற்றுள் திரிவனவும் திரியாதனவும் உள. எல்லா இடங்களிலும் லகர ளகர வீறு வரும் மொழி க ச ப முன் திரியா என்பது தவறு. எங்குத் திரியும் எங்குத் திரியாது என்பதை இக்கால் பார்ப்போம். .

இவ்வகையில் இரண்டாம் வேற்றுமை உருபு தொகையிலும் வினைத் தொகையிலும் லகர ளகர வீறு திரியாது. ஏனையவற்றுள் திரியும்.

எடுத்துக் காட்டு:  

கொல் + களிறு = கொல்களிறு (கொல்லும், கொல்கின்ற, கொன்ற என்பவற்றின் தொகையே கொல்) இது வினைத் தொகையாகும்.  

நாள் + கோள் = நாள்கோள்  நாளும்கோளும் என்பதே உம்மைத் தொகையாக நாள்கோள் என ஆகியிருக்கின்றது.  

பால் + பழம் என்பதும் பால்பழம் என்றே புணரும். இதுவும் உம்மைத் தொகையாகும். இதன் விரி பாலும் பழமும். பாற்பழம் என்று எழுதினால் பால் போன்ற பழம் எனப் பொருள்பட்டு உவமைத்தொகையாகி விடும் .

பால் + குடித்தான் என்பது பால் குடித்தான் என்றே புணர வேண்டும். இது இரண்டாம் வேற்றுமை உருபுத் தொகையாகும். பாலைக் குடித்தான் என்பது இதன் விரி.

 கால் + சட்டை = காலில் அணியப் படும் சட்டை எனும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையாகும். இல் எனும் வேற்றுமை உருபும் அணியப்படும் எனும் பயனும் தொக்கி வருவதால் லகர வீறு திரிந்து காற்சட்டை என்றாகும்.

பால் + பசு - பாலைத்தரும் பசு பாற்பசு என்றாகும்.

மேல் + படிப்பு - மேற்படிப்பு

மேல் + கொண்டு - மேற்கொண்டு

மேல் + சென்று - மேற்சென்று  

கால் + புள்ளி = காற்புள்ளி என்றாகும்.

நூல் + பா = நூற்பா என்றாகும். இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாகும்.

பாலைக் கொண்டிருக்கும் குடம் பாற்குடமாகும். இதுவும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையே. பால் குடம் என்று எழுதினால் பாலும் குடமும் எனப் பொருளாகிவிடும்.

இந்நிலையில் , கால் + பந்து எனும் மொழிப் புணர்ச்சியில் லகர வீறு திரியுமா? திரியாதா? இங்கு வரும் கால் உறுப்பைக் குறித்ததா? பகுதியைக் குறித்ததா? இந்தப் பந்திற்கு ஏன் இப்பெயர் இடப்பெற்றது. கையால் தட்டப்படும் பந்து கைப்பந்தாகும். வலையில் போடப்படும் பந்து வலைப் பந்தாகும். மேசையில் ஆடப்படும் பந்து மேசைப் பந்தாகும். பூப் போன்றிருக்கும் பந்து பூப்பந்தாகும். அது போல காலால் உதைக்கப் படும் பந்தே கால் + பந்து . இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாதலால் நிலை மொழியில் லகரவீறு திரிதலே சரி.


காற்பந்தை கால் பந்து என்று எழுதினால் வேல் கம்பு , நாள் கோள், பால் பழம் போல் உம்மைத் தொகையாகி காலும் பந்தும் என்று பொருள்பட்டு விடும்.

எனவே காற்பந்து என்பதே இலக்கண விதிப் படி சரியானதாகும்.

உதவி : இணையம் . நம் தமிழை முறையாக அறிவோமே



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 14, 2016 11:38 am

M.Jagadeesan wrote:
krishnaamma wrote:
krishnaamma wrote:நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 31 UvqsRp1RlmTIjD07Wo4Y+9539af14-c9fe-4484-82dd-84e7297cace0

இதில் 'காற் பதனி  ' என்று போட்டுள்ளார்கள், அது 'காற்றுப் பதனி' என்று இருக்க வேணாமா ? ......காற் பதனி என்றால் ஏதோ நம் கால்களை சொல்லுவது போல இருக்கிறதே ஐயா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1215784

Air Conditioner என்பதைத்தான் காற்பதனி என்று தமிழில் சொல்கிறார்கள் .

கால் + பதனி = காற்பதனி

கால் என்றால் காற்று என்று ஒரு பொருள் உண்டு .

ஜன்னலுக்கு " காலதர் " என்று ஒரு பெயருண்டு .

கால் + அதர் = காலதர்

கால் என்றால் காற்று
அதர் என்றால் வழி

அதாவது காற்றுவரும் வழியைக் " காலதர் " என்று நம் முன்னோர்கள் குறிப்பிட்டார்கள் .

வரும் காற்றினைப் பதப்படுத்துவதால் " காற் பதனி " என்று அக்கருவிக்குப் பெயர் .
மேற்கோள் செய்த பதிவு: 1215790

ஓ... சரிசரி......விளக்கத்துக்கு நன்றி ஐயா புன்னகை ............. நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 14, 2016 11:39 am

M.Jagadeesan wrote:
krishnaamma wrote:
கார்த்திக் செயராம் wrote:ஆப்பிள் - அறத்தி பழம் என்று கூற கேள்வி பட்டுள்ளேன் இது சரியா ??
மேற்கோள் செய்த பதிவு: 1215788

ம்ம்..தெரியலையே கார்த்தி, ஐயா தான் சொல்லவேண்டும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1215789

ஆப்பிளுக்கு ' குமளிப்பழம் ' , "அறத்திப்பழம் " என்று பெயர்கள் உண்டு .
மேற்கோள் செய்த பதிவு: 1215792

இந்தப் பெயர்களை இப்போது தான் கேள்விப்படுகிறேன் ஐயா !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jul 14, 2016 12:02 pm

அதேபோல "முளரி " என்றால் முட்செடி என்றும் தாமரை என்றும் பொருள் உண்டு .

ரோஜாச் செடியில் முள் இருப்பதால் அதை " முளரி " என்று அழைக்கிறார்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jul 14, 2016 12:13 pm

" அட்டு " என்றால் வெல்லம் என்று பொருள்.

" இன் " என்றால் இனிமையான என்று பொருள் .

எனவே இனிமையான வெல்லம் போல இருப்பதால் சாக்லேட்டுக்கு " இன்னட்டு " என்று பெயர் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jul 14, 2016 7:55 pm

சக்களத்தி , சகக்கழுத்தி எது சரி ?

சகக்கழுத்தி என்பதே சரி .

ஒன்றிற்கு மேற்பட்ட தாரத்தை சகக்கழுத்தி என்று சொல்கிறோம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 14, 2016 8:18 pm

M.Jagadeesan wrote:சக்களத்தி , சகக்கழுத்தி எது சரி ?

சகக்கழுத்தி என்பதே சரி .

ஒன்றிற்கு மேற்பட்ட தாரத்தை சகக்கழுத்தி என்று சொல்கிறோம் .
மேற்கோள் செய்த பதிவு: 1215860

சக கழுத்தி ஒத்துக்கொள்ளக் கூடிய காரண பெயர் .
"சக " என்பது தமிழ் சொல்லா ? வடமொழியா ?

மனைவியின் சகோதரியின் கணவனை , தமிழில் சகலை என்று ஒரு சொல் சொல்லுகிறோம் .இது சரியா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jul 14, 2016 10:02 pm

" சக " என்பது வடசொல்தான் .

சக = உடன்

உடன் பணியாற்றும் ஊழியரை சக ஊழியர் என்று அழைக்கிறோம் .

சக + உதரன் = சகோதரன் .

உதரம் = வயிறு

ஒரே வயிற்றில் உடன் பிறந்தவனை சகோதரன் என்று அழைக்கிறோம் .

மனைவியின் தங்கை /அக்காள் கணவனை சகலை என்றும் சட்டகர் என்று அழைக்கும் வழக்கம் நம்நாட்டில் உள்ளது .

சகலன் என்றால் மனைவியின் உடன் பிறந்தாளின் கணவன் . அதுவே சகலை ஆயிற்று .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jul 14, 2016 10:19 pm

முழு ஆண்டுத்தேர்வு , முழுவாண்டுத் தேர்வு எது சரி ?

முழு + ஆண்டு = முழுவாண்டு

முழு ஆண்டுத்தேர்வு என்றே எழுதிப் பழகிவிட்டோம் .

ஆனால்

முழுவாண்டுத்தேர்வு என்று எழுதுவதே சரி .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 15, 2016 7:00 am

நன்றி Jagadeesan .
சக கழுத்தி என்பது சரியான வார்த்தை .
சக என்பது வடமொழி சொல்
"சககழுத்தி " என்பதற்கு சமமான தமிழ் சொல் ஏதாவது உண்டா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jul 15, 2016 9:57 am

சகக்கழுத்திக்கு தமிழில் என்னபெயர் என்று தெரியவில்லை .

" கூடுதல் வாழ்க்கைத்துணை " என்று வைக்கலாம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 31 of 34 Previous  1 ... 17 ... 30, 31, 32, 33, 34  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக