புதிய பதிவுகள்
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 2 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 2 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 2 Poll_c10 
10 Posts - 71%
heezulia
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 2 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 2 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 2 Poll_c10 
2 Posts - 14%
வேல்முருகன் காசி
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 2 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 2 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 2 Poll_c10 
1 Post - 7%
viyasan
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 2 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 2 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 2 Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 2 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 2 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 2 Poll_c10 
202 Posts - 41%
heezulia
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 2 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 2 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 2 Poll_c10 
199 Posts - 40%
mohamed nizamudeen
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 2 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 2 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 2 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 2 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 2 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 2 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 2 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 2 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 2 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 2 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 2 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 2 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 2 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 2 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 2 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 2 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 2 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் தமிழை முறையாக அறிவோமே !


   
   

Page 2 of 34 Previous  1, 2, 3 ... 18 ... 34  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 17, 2016 8:53 am

First topic message reminder :

காற்பந்தா? கால் பந்தா? எது சரி ?

நாள் + கள் = நாள்கள்
கால் + கள் = கால்கள்
கோள் + கள் = கோள்கள்
வேல் + கள் = வேல்கள்
தாள் + கள் = தாள்கள்

இவ்விதியின் படி கால் + பந்து = கால்பந்து என்றே எழுதப் பெறல் வேண்டும். இவ்வாறு எழுதுவதும் பேசுவதும் ஏற்புடையதுதானா என்பதே நம் ஆய்வு.

இதற்கு நடைமுறையிலுள்ள பல எடுத்துக்காட்டுகளைக் காண்பது நன்று.

மேல் + கணக்கு
கால் + கடுக்க
பால் + பசு
நாள் + கோள்
பால் + பழம்
கால் + சட்டை
மேல் + படிப்பு
கால் + புள்ளி
நூல் + பா
மேல் + கொண்டு
பால் + குடம்

இவற்றுள் திரிவனவும் திரியாதனவும் உள. எல்லா இடங்களிலும் லகர ளகர வீறு வரும் மொழி க ச ப முன் திரியா என்பது தவறு. எங்குத் திரியும் எங்குத் திரியாது என்பதை இக்கால் பார்ப்போம். .

இவ்வகையில் இரண்டாம் வேற்றுமை உருபு தொகையிலும் வினைத் தொகையிலும் லகர ளகர வீறு திரியாது. ஏனையவற்றுள் திரியும்.

எடுத்துக் காட்டு:  

கொல் + களிறு = கொல்களிறு (கொல்லும், கொல்கின்ற, கொன்ற என்பவற்றின் தொகையே கொல்) இது வினைத் தொகையாகும்.  

நாள் + கோள் = நாள்கோள்  நாளும்கோளும் என்பதே உம்மைத் தொகையாக நாள்கோள் என ஆகியிருக்கின்றது.  

பால் + பழம் என்பதும் பால்பழம் என்றே புணரும். இதுவும் உம்மைத் தொகையாகும். இதன் விரி பாலும் பழமும். பாற்பழம் என்று எழுதினால் பால் போன்ற பழம் எனப் பொருள்பட்டு உவமைத்தொகையாகி விடும் .

பால் + குடித்தான் என்பது பால் குடித்தான் என்றே புணர வேண்டும். இது இரண்டாம் வேற்றுமை உருபுத் தொகையாகும். பாலைக் குடித்தான் என்பது இதன் விரி.

 கால் + சட்டை = காலில் அணியப் படும் சட்டை எனும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையாகும். இல் எனும் வேற்றுமை உருபும் அணியப்படும் எனும் பயனும் தொக்கி வருவதால் லகர வீறு திரிந்து காற்சட்டை என்றாகும்.

பால் + பசு - பாலைத்தரும் பசு பாற்பசு என்றாகும்.

மேல் + படிப்பு - மேற்படிப்பு

மேல் + கொண்டு - மேற்கொண்டு

மேல் + சென்று - மேற்சென்று  

கால் + புள்ளி = காற்புள்ளி என்றாகும்.

நூல் + பா = நூற்பா என்றாகும். இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாகும்.

பாலைக் கொண்டிருக்கும் குடம் பாற்குடமாகும். இதுவும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையே. பால் குடம் என்று எழுதினால் பாலும் குடமும் எனப் பொருளாகிவிடும்.

இந்நிலையில் , கால் + பந்து எனும் மொழிப் புணர்ச்சியில் லகர வீறு திரியுமா? திரியாதா? இங்கு வரும் கால் உறுப்பைக் குறித்ததா? பகுதியைக் குறித்ததா? இந்தப் பந்திற்கு ஏன் இப்பெயர் இடப்பெற்றது. கையால் தட்டப்படும் பந்து கைப்பந்தாகும். வலையில் போடப்படும் பந்து வலைப் பந்தாகும். மேசையில் ஆடப்படும் பந்து மேசைப் பந்தாகும். பூப் போன்றிருக்கும் பந்து பூப்பந்தாகும். அது போல காலால் உதைக்கப் படும் பந்தே கால் + பந்து . இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாதலால் நிலை மொழியில் லகரவீறு திரிதலே சரி.


காற்பந்தை கால் பந்து என்று எழுதினால் வேல் கம்பு , நாள் கோள், பால் பழம் போல் உம்மைத் தொகையாகி காலும் பந்தும் என்று பொருள்பட்டு விடும்.

எனவே காற்பந்து என்பதே இலக்கண விதிப் படி சரியானதாகும்.

உதவி : இணையம் . நம் தமிழை முறையாக அறிவோமே



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 17, 2016 6:49 pm

இப்போது " கள் " உண்ணும் பழக்கம் இல்லை என்றே எண்ணுகிறேன் . அதான் டாஸ்மாக் வந்துவிட்டதே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
siva.c.r
siva.c.r
பண்பாளர்

பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014

Postsiva.c.r Fri Jun 17, 2016 6:49 pm

இந்த விவாதத்திற்கு வேறொரு கோணம் உள்ளது

என்பது என் தாழ்மையான கருத்து.


சைகைகளாலும் முக பாவங்களாலும் தன் எண்ணங்களைப்

பரிமாறிக் கொண்டிருந்த பழங்கால மனிதன், சற்று

நாகரிகமடைந்ததும் மொழி என்ற ஒன்றை முதன்முதலில்

தன் கூட்டத்தினரிடையே அடிப்படையான

கருத்துப் பரிமாற்றலுக்காக ஏற்படுத்திக்கொண்டான்.

அக்காலங்களில், இலக்கணம் என்று ஒன்று இல்லாமல்தான்

மொழி இருந்தது.

இலக்கணம் இல்லாமலிருந்தாலும், மனித குலத்தின்

கருத்துப் பரிமாற்றத் தேவைகளை மொழி நிறைவேற்றியது.


நாட்பட நாட்பட, இலக்கியமும், இலக்கியத்தை நெறிப்படுத்த

இலக்கணமும் தோன்றின.


மொழிக்கு இலக்கணம் அவசியமானது என்றாலும்,

மொழியின் முக்கிய அவசியம் இருவரிடையே

( அல்லது பலரிடையே ) கருத்துப் பரிமாற்றம்தான்.


இலக்கண ரீதியாக ஒன்றை எழுதி ( அல்லது பேசி )

சொல்லப்படும் கருத்து படிப்பவரையோ

( அல்லது கேட்பவரையோ ) சென்றடையாமல்

இருந்தால் அங்கு மொழியின் பயனே

கேள்விக்குறியாய்விடுகிறது.


காலத்துக்கேற்ப எந்த ஒரு மொழியும்

வளைந்து கொடுக்கத்தான் வேண்டியிருக்கிறது.

அவ்வாறு வளைய மறுக்கும் மொழி

வழக்கொழிந்து போகிறது ( சமஸ்கிருதம் போல ).


இன்று சென்னை போன்ற பெரிய நகரங்களில்

( சொல்லப் போனால் தமிழகம் முழுவதுமே ),

எந்த ஒரு தொழிலாளியிடம் வேலை வாங்கியாக

வேண்டும் என்றால் அவர்களுக்குப் புரியும்

"சென்னைத் தமிழில்" பேசியே செய்விக்க முடியும்.

இலக்கணச் சுத்தமாகப் பேசினால் நம்மை ஏற இறங்கப்

பார்த்துவிட்டுப் போய்விடுவார்கள்.


"காற்பந்து" மிகக் குறைவான இடங்களிலேயே

செல்லுபடியாகும்.

புரியும்படியாகச் சொல்ல வேண்டுமென்றால்

"கால்பந்து" தான்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 17, 2016 7:29 pm

ஒரு சொல்லை பேச்சு வழக்கில் கொண்டுவர வேண்டுமானால் , முதலில் அச்சொல்லை " அச்சில் " ஏற்றவேண்டும் . அதாவது பாட புத்தகங்களில் கொண்டுவரவேண்டும் .

இப்போது " பேருந்து " "கணினி " , " மிதி வண்டி " , மாற்றுத் திறனாளி " ஆகிய சொற்கள் புழக்கத்திற்கு வந்துவிட்டன .

இதுபோல " காற் பந்து " என்ற சொல்லையும் பாட புத்தகங்களில் புகுத்தினால் , மக்கள் அந்தச் சொல்லுக்குப் பழக்கமாகி விடுவர் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 17, 2016 7:38 pm

siva.c.r wrote:

இன்று சென்னை போன்ற பெரிய நகரங்களில்

( சொல்லப் போனால் தமிழகம் முழுவதுமே ),

எந்த ஒரு தொழிலாளியிடம் வேலை வாங்கியாக

வேண்டும் என்றால் அவர்களுக்குப் புரியும்

"சென்னைத் தமிழில்" பேசியே செய்விக்க முடியும்.

இலக்கணச் சுத்தமாகப் பேசினால் நம்மை ஏற இறங்கப்

பார்த்துவிட்டுப் போய்விடுவார்கள்.

.
மேற்கோள் செய்த பதிவு: 1211488

சென்னைத் தமிழ் , தமிழ்நாடு முழுவதும் செல்லுபடியாகாது என்பது என் தாழ்மையான கருத்து. தமிழ்மொழியை எவ்வளவு சிதைக்க முடியுமோ , அவ்வளவு சிதைத்துப் பேசுவதுதான் " சென்னைத் தமிழ் "



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Guest
Guest

PostGuest Fri Jun 17, 2016 9:32 pm

ஜெகதீசன் அவர்கள் சொல்வதே ஏற்றுக்கொள்ளக் கூடியதாகும். சிவா அவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.இன்னொரு விசயம் வரலாற்றுக் கூற்றின்படி சமஸ்கிருதம் பல சந்தர்ப்பங்களில் வளைந்து கொடுத்திருக்கிறது. மாற்றம் பெற்றிருக்கிறது.
மற்றைய மொழிகளில் இலக்கணப் பிழைகளை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நம் தமிழில் எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்றாகி விட்டது.

எல்லா மொழிகளிலும் இரு கிழைகள் உண்டு.தொல்காப்பியம் தமிழை இருவகைகளாக பிரித்தது. ஒன்று செந்தமிழ் (இலக்கியத்தமிழ்). இரண்டு கொடுந்தமிழ் (பேச்சுத்தமிழ்). பேச்சுத்தமிழை வட்டார வழக்காகப் பயன்படுத்தலாம்.தவறில்லை. ஆனால் எழுதும் போது இலக்கணப் பிழை இன்றி எழுதுவதே மரபாகும். எழுத்துத்தமிழ்-உரைநடைத்தமிழ் ஒரே மாதிரியாக இருப்பதால் உலகம் எங்கும் வாழ்பவர்களால் படிக்க முடியும். இன்று உலகெங்கும் தமிழர்கள் வாழ்கிறார்கள். சென்னைத் தமிழில் எழுதினால் யார் படித்துப் புரிந்து கொள்ள முடியும்.

சென்னையில் இருப்பவர் திருநெல்வேலிக்கு சென்று வேலை பார்த்தால் அவர் தமிழ் இவருக்குப் புரியாது. எழுதுவது வேறு பேசுவது வேறு. கூடவே பேச்சுத்தமிழ் நேருக்கு நேர் பேசுவதாகும்.தவறுகளை உடனுக்குடன் திருத்திக் கொள்ளவும் முடியும். எழுத்துத்தமிழ் அப்படி அல்ல. எங்கோ இருக்கும் ஒருவருடன் எந்தக் காலத்திலும் பயன்படுத்துவதாகும்.

நிலை மொழி இறுதியில் லகர, ளகரம் இருப்பின் (ல்,ள்) வருமொழி முதலில் க,ச,த,ப வரும்போது இந்த ல்,ள் என்பவை ற், ட் ஆகத் திரியும் என்பது பொதுவிதி.
கால்(நிலை மொழி)+பந்து (வருமொழி) = காற்பந்து என்பதே இலக்கணப்படி சரியாகும்.
பல் + பொடி= பற்பொடி
முள்+செடி=முட்செடி
வருமொழி முதலில் தகரம் (த)வரின் அது றகர, டகரமாக மாறும்.
புல்+தரை= புற்றரை

நல்ல தமிழ் சொற்கள் இன்று காணாமல் போய் விட்டது. நல்ல தமிழை இலக்கணப் பிழை இன்றி எழுதுவதே சிறப்பாகும்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 17, 2016 9:34 pm

அணுகுண்டா-அணுக்குண்டா- எது சரி?



தங்கக் காசு - தங்கத்தினால் ஆகிய காசு

வெள்ளிக்கொலுசு - வெள்ளியால் ஆகிய கொலுசு

பிளாஸ்டிக் வாளி - பிளாஸ்டிக்கினால் ஆகிய வாளி

எனவே

அணுவினால் ஆகிய குண்டு என்பதால் அணுக்குண்டு என்பதே சரி; ஒற்றெழுத்து மிக வேண்டும்.





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 17, 2016 9:58 pm

கட்டடமா,கட்டிடமா-எது சரி?

கட்டடம் என்றால் கட்டிய வீடு ; அதாவது BUILDING

கட்டு+இடம் = கட்டிடம்.. அதாவது, கட்டுவதற்கு உரிய இடம். அதாவது PLOT

என் வீடு ஒரு அழகான கட்டடம் என்று சொல்லவேண்டும் .

என் வீடு ஒரு அழகான கட்டிடம் என்று சொல்லக்கூடாது .






இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 17, 2016 10:01 pm

மூர்த்தி wrote:ஜெகதீசன் அவர்கள் சொல்வதே ஏற்றுக்கொள்ளக் கூடியதாகும். சிவா அவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.இன்னொரு விசயம் வரலாற்றுக் கூற்றின்படி சமஸ்கிருதம் பல சந்தர்ப்பங்களில் வளைந்து கொடுத்திருக்கிறது. மாற்றம் பெற்றிருக்கிறது.
மற்றைய மொழிகளில் இலக்கணப் பிழைகளை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நம் தமிழில் எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்றாகி விட்டது.

எல்லா மொழிகளிலும் இரு கிழைகள் உண்டு.தொல்காப்பியம் தமிழை இருவகைகளாக பிரித்தது. ஒன்று செந்தமிழ் (இலக்கியத்தமிழ்). இரண்டு கொடுந்தமிழ் (பேச்சுத்தமிழ்). பேச்சுத்தமிழை வட்டார வழக்காகப் பயன்படுத்தலாம்.தவறில்லை. ஆனால் எழுதும் போது இலக்கணப் பிழை இன்றி எழுதுவதே மரபாகும். எழுத்துத்தமிழ்-உரைநடைத்தமிழ் ஒரே மாதிரியாக இருப்பதால் உலகம் எங்கும் வாழ்பவர்களால் படிக்க முடியும். இன்று உலகெங்கும் தமிழர்கள் வாழ்கிறார்கள். சென்னைத் தமிழில் எழுதினால் யார் படித்துப் புரிந்து கொள்ள முடியும்.

சென்னையில் இருப்பவர் திருநெல்வேலிக்கு சென்று வேலை பார்த்தால் அவர் தமிழ் இவருக்குப் புரியாது. எழுதுவது வேறு பேசுவது வேறு. கூடவே பேச்சுத்தமிழ் நேருக்கு நேர் பேசுவதாகும்.தவறுகளை உடனுக்குடன் திருத்திக் கொள்ளவும் முடியும். எழுத்துத்தமிழ் அப்படி அல்ல. எங்கோ இருக்கும் ஒருவருடன் எந்தக் காலத்திலும் பயன்படுத்துவதாகும்.

நிலை மொழி இறுதியில் லகர, ளகரம் இருப்பின் (ல்,ள்) வருமொழி முதலில் க,ச,த,ப வரும்போது இந்த ல்,ள் என்பவை ற், ட் ஆகத் திரியும் என்பது பொதுவிதி.
கால்(நிலை மொழி)+பந்து (வருமொழி) = காற்பந்து என்பதே இலக்கணப்படி சரியாகும்.
பல் + பொடி= பற்பொடி
முள்+செடி=முட்செடி
வருமொழி முதலில் தகரம் (த)வரின் அது றகர, டகரமாக மாறும்.
புல்+தரை= புற்றரை

நல்ல தமிழ் சொற்கள் இன்று காணாமல் போய் விட்டது. நல்ல தமிழை இலக்கணப் பிழை இன்றி எழுதுவதே சிறப்பாகும்.
மேற்கோள் செய்த பதிவு: 1211495


மூர்த்தி அவர்களின் விளக்கத்திற்கு நன்றி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 17, 2016 11:41 pm

மடிக்கணினியா அல்லது  மடி கணினியா  -  எது சரி ?

இரண்டும் சரிதாம்; ஆனால், வேறு வேறு பொருள்.

மடியின் கண் (மீது ) வைத்துப் பார்த்தால் ஒற்றெழுத்து மிக வேண்டும் (மடிக்கணினி).

ஒற்றெழுத்தினை மிகாமல் எழுதினால் மடிக்கப்படும் கணினி என்று பொருள்.

மடித்த, மடிக்கிற, மடிக்கும் கணினி என்று வினைத் தொகையாகவும் கருதலாம்.

மடிக்கணினி = மடியின் கண் வைத்துப் பார்க்கப்படும் கணினி

மடிகணினி = மடித்த, மடிக்கிற மடிக்கும் கணினி

முன்னது ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை; பின்னது வினைத்தொகை.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 18, 2016 6:54 am

என் மகனா அல்லது எனது மகனா - எது சரி ?

திருமண அழைப்பிதழில் சிலவற்றில் " என் மகனுக்கும் " என்று போடுகிறார்கள் . சிலவற்றில் " எனது மகனுக்கும் " என்று போடுகிறார்கள் . இவற்றில் எது சரி ?

உயர்திணைக்கு முன்னே " என் " போடவேண்டும் , அஃறிணைக்கு முன்னே " எனது " போடவேண்டும் .

என் மகன் ,
என் மகள் ,
என் மனைவி

என்று எழுதவேண்டும் . இதுவே அஃறிணையாக இருந்தால்

எனது ஆடு
எனது மாடு
எனது வீடு

என்று எழுதவேண்டும் .

ஒரு பெண் , " எனது கணவன் " என்று சொன்னால் , அவள் கணவனை மதிக்கவில்லை என்று பொருள் .ஆடு , மாடுகளுக்கு சமமாகக் கணவனைக் கருதுகிறாள் என்பது பொருள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 2 of 34 Previous  1, 2, 3 ... 18 ... 34  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக