புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்  Poll_c10படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்  Poll_m10படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்  Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்  Poll_c10படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்  Poll_m10படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்  Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்  Poll_c10படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்  Poll_m10படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்  Poll_c10 
2 Posts - 4%
prajai
படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்  Poll_c10படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்  Poll_m10படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்  Poll_c10 
2 Posts - 4%
Baarushree
படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்  Poll_c10படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்  Poll_m10படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்  Poll_c10 
2 Posts - 4%
viyasan
படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்  Poll_c10படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்  Poll_m10படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்  Poll_c10 
1 Post - 2%
Rutu
படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்  Poll_c10படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்  Poll_m10படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்  Poll_c10 
1 Post - 2%
சிவா
படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்  Poll_c10படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்  Poll_m10படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்  Poll_c10படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்  Poll_m10படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்  Poll_c10 
10 Posts - 83%
Rutu
படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்  Poll_c10படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்  Poll_m10படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்  Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்  Poll_c10படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்  Poll_m10படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்  Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Jun 15, 2016 4:20 pm


ஆச்சிமா என அழைக்கப்படும் சித்தி ஜூனைதா பேகம் எழுதிய பல கதை,கட்டுரை,நாவல்களில் நான் சமீபத்தில் படித்த அவரின் முதல் நாவல் காதலா கடமையா,மற்றும் மகிழம்பூ என்னைக் கவர்ந்தவை. இவர் யார்?

நாகூரில் உள்ள கிறித்துவ தெருப்பள்ளியில் மூன்றாவது படித்தவர் ஆச்சிமா சித்தி. அதற்கு மேல் படிக்க அனுமதி கிடைக்கவில்லை. பன்னிரண்டு வயதில் திருமணம், ஐந்து ஆண்டுகளில் நான்கு குழந்தைகளுடன் விதவைக் கோலம். அவ்வளவுதான் அவரின் வாழ்க்கை. பதினாறு வயதில் எழுதத் தொடங்கினார்.

முதல் நாவலான காதலா கடமையா என்ற நாவலுக்கு உவேசா முன்னுரை எழுதியதே அந்த நாவலுக்கு கிடைத்த சிறப்பாகும். ஆனால் நாவல் எழுதியதை அதுவும் காதல் என்ற தலைப்பில், தெரிந்து கொண்ட இஸ்லாமியப் பெண்கள் கூட்டம் எதிர்ப்பு தெரிவிக்க குவிந்ததாம்.

கேள்விகளைக் கேட்டே அறிவை வளர்த்தவர் சித்தி ஜுனைதா.மீன் சாப்பிடக் கூடாது என வைத்தியர் சொன்னதற்கு அவர் வைத்தியரிடம் கேட்ட கேள்விகள் சந்தேகங்கள் என்ன தெரியுமா? இளநீர் குடிக்கலாமா? கிணற்று நீரை கைகால் கழுவ பயன்படுத்தலாமா? மீன் ஆகாதென்றதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்றுதானே பார்க்கிறீர்கள்? சம்பந்தம் உள்ளது. மீன் சாப்பிடுகின்ற ஒருவன்தானே மரத்தின்மீதேறி இளநீர் பறிக்கிறான்? அவன் கையால் பிடித்த அரிவாளால் வெட்டப்பட்ட தேங்காயினுள் உள்ள இளநீரை குடிக்கலாமா? நாகூரில் கடல் உள்ளது-ஆற்று நீரும் கடல் நீரும் சங்கமமாகின்றது. - அதில் உள்ள மீன்களின் மேல் பட்ட தண்ணீர்தானே கிணற்றுக்கும் வரும்? அதைப் பயன்படுத்தலாமா? என்று கேட்டாராம்.

இப்படி எல்லாம் சிந்திப்பதை விட மீனே சாப்பிடலாம் என்றாராம் வைத்தியர்.

ஆச்சிமா அவர்கள் நோய்வாய்ப்பட்டு 19-3-1998 அன்று இரவு 10 மணி அளவில் (ஹிஜ்ரி 1418, துல்காயிதா மாதம், பிறை 19/20 ல்) இறைவனடி சேர்ந்தார்கள்.

1928 இல் வெளியிடப்பட்ட காதலா கடமையா என்ற நாவலுக்கு உவேசா வின் முன்னுரை இது..............

இப்போது சில காலமாக ஆண் பாலாரைப் போலவே பெண் பாலரும் கல்வி விஷயத்தில் இந்நாட்டில் முன்னேற்றமடைந்து வருகிறார்களென்பதை யாவரும் அறிவர். பெண் பாலாரில் சில சாதியினர் மட்டும் கல்வியில் மிக்க மேம்பாடுற்று விளங்குகின்றனர். தமிழ் சம்பந்தப்பட்ட மட்டில், மகம்மதியப் பெண்மணிகளில் நன்றாகப் படித்தவர்கள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆண் பாலாரில் அந்த வகையிற் பல வித்துவான்கள் உண்டு.

சமீப காலத்தில் நாகூர் சித்தி ஜுனைதா பேகம் என்ற பெண்மணி எழுதிய "காதலா கடமையா" என்ற தலைப்புடன் கூடிய அபிநவ கதையை நான் பார்த்தபோது எனக்கு மிக்க மகிழ்ச்சியும் வியப்பும் உண்டாயின. மகம்மதியர்களுள்ளும் தமிழ் நூல்களை பயின்றுள்ள பெண் மக்கள் இருக்கிறார்கள் என்பதை இப்புத்தகம் நன்கு விளக்குகிறது. எல்லாவற்றிலும் மேலானது கடமையே என்பதும், பரோபகாரச் செயல் ஓவ்வொருவருக்கும் இன்றியமையாததென்பதும், பொருளாசை மேலிட்டவர்கள் எதுவும் செய்யத் துணிவர் என்பதும் இப்புத்தகத்திற்கண்ட முக்கிய விஷயங்கள். இதன் நடை யாவரும் படித்தறிந்து மகிழும்படி அமைந்திருக்கிறது. கதைப் போக்கும் நன்றாக உள்ளது. இடையிடையே பழைய நூல்களிலிருந்து மேற்கோள்கள் கொடுத்திருப்பது இந்நூலை எழுதியவருக்குத் தமிழ் இலக்கிய 'நூல்களில் நல்ல பயிற்சியுண்டென்பதைக் காட்டுகின்றது. பொது மக்கள் இதனை வாங்கிப் படித்து இன்புறுவார்களென்று எண்ணுகிறேன்.
ஆங்காங்குச் சில எழுத்துப் பிழைகளும் இலக்கணப் பிழைகளும் உள்ளன. அவை அடுத்த பதிப்பில் நீக்கப்படுமென்று நம்புகிறேன்.

இந்தப் பெருமைக்கிடையில் கிடைத்த எதிர்ப்பை இப்படி சொல்கிறார் சித்தி ஜுனைதா........
அச்சில் வந்த என் முதல் எழுதோவியத்திற்கு பிற ஊர்களில் எப்படியோ? ஆனால், என் சொந்த ஊரில், நாகூரில் எதிர்ப்பு என்றால்..ஊரே திரண்டு கும்பல் கும்பலாக என்னைப் பார்க்கவந்து கேலி செய்தது!

இந்தப் படிக்காத இலக்கிய மேதையை நினைவு கூருவதில் மகிழ்ச்சியே.

கொடுமைகள் படுகொலைகள் சித்திரவதைகள் ஆதி அமெரிக்கக் குடிகளுக்கு செய்து கொடூரமாக நடந்த கொலம்பசிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ,மின் அஞ்சலைக் கண்டு பிடித்த சிவா ஐயாத்துரைக்கு கொடுக்கவில்லை. மறந்தே விட்டோம்.

இலக்கியவாதிகளை நல்ல மனிதர்களை எப்போதாவது நினைவில் கொண்டு தமிழை எழுத்து மொழியாக்கினால தமிழுக்கும் நல்லது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 15, 2016 4:28 pm

அரிய தகவல் , பகிர்வுக்கு மிக்க நன்றி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 15, 2016 4:46 pm

நல்லத் தகவல் ,நன்றி .மூர்த்தி .
சித்தி ஜூனைத பேகம் ஒரு வேளை , சித்திக் ஜூனைதா பேகமாக இருப்பாரோ ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 15, 2016 5:56 pm

T.N.Balasubramanian wrote:நல்லத் தகவல் ,நன்றி .மூர்த்தி .
சித்தி  ஜூனைத பேகம் ஒரு வேளை , சித்திக் ஜூனைதா பேகமாக இருப்பாரோ ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1211287
-
படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்  00q7XiFvQLHlQadPT1Lw+sithijunaithabegam
-
சித்தி  ஜூனைதா பேகம் என்பதே சரியான பெயர் ஆகும்
-

இவரைப்பற்றி நாகூரு ரூமி  மற்றும் ஜே.எம்.சாலி விரிவாஉக எழுதியுள்ளார்கள்
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 15, 2016 6:02 pm

தமிழில் முதல் முஸ்லிம் பெண் எழுத்தாளர்!
ஜே.எம்.சாலி - தினமலர் 13-11-2011
-

-----------------------------------

-
"காதலா, கடமையா?' - விறுவிறுப்பான ஒரு தமிழ் நாவல்.
தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதய்யர், 1938 பிப்ரவரியில்,
அந்த நூலுக்கு மதிப்புரை எழுதினார்...
-
"சமீப காலத்தில், நாகூர் சித்தி ஜுனைதா பேகம் என்ற பெண்மணி
எழுதிய, "காதலா, கடமையா?' என்ற தலைப்புடன் கூடிய அபிநவ
கதையை நான் பார்த்த போது, எனக்கு மிக்க மகிழ்ச்சியும், வியப்பும்
உண்டாயின.
-
மகம்மதியர்களுக் குள்ளும் தமிழ் நூல்களைப் பயின்றுள்ள பெண்
மக்கள் இருக்கின்றனர் என்பதை இப்புத்தகம் நன்கு விளக்குகிறது.
இதன் நடை யாவரும் படித்தறிந்து மகிழும்படி அமைந்திருக்கிறது.
கதை போக்கும் நன்றாக உள்ளது. இடையிடையே பழைய
நூல்களிலிருந்து மேற்கோள் கொடுத்திருப்பது, இந்நூலை
எழுதியவருக்கு தமிழ் இலக்கிய நூல்களில் நல்ல பயிற்சி உண்டு
என்பதைக் காட்டுகிறது!'
-
தமிழில், முதல் முஸ்லிம் பெண் எழுத்தாளரான சித்தி ஜுனைதா,
21 வயதில், "காதலா, கடமையா?' நாவலை எழுதினார். மூன்றாம் வகுப்பு
வரை தான் படிப்பு. அனுபவப் படிப்பே படைப்புத் திறனுக்கு காரணம் எ
ன்று எழுதி வைத்திருக்கிறார்.
அன்றாடம் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உள்ளவர் இவர்.
-
சித்தி ஜுனைதா, 1917ல் நாகூரில் பிறந்தார்.
16 வயதில் எழுதத் தொடங்கினார். "காதலா, கடமையா?'
18 அத்தியாயங்களைக் கொண்ட சரித்திரப் புதினம்.
-
மதுரை பின்னணியில் எழுதப்பட்ட, இந்த நாவலை, எழுத்தாளர்
புதுமைப்பித்தன் விமர்சித்து எழுதியுள்ளார். "முஸ்லிம் பெண்டிர் எழுத
முன் வருவதை நாம் வரவேற்கிறோம்...' என்று அவர் பாராட்டினார்.
-
இந்த நாவலின் கதைச் சுருக்கமே எம்.ஜி.ஆர்., நடித்த, "நாடோடி மன்னன்'
திரைப்படத்திற்கு மூலக் கதையாக அமைந்தது என்று கூறப்பட்டது.
அதற்கு கதை, வசனம் எழுதிய ரவீந்தர் இதை ஒப்புக் கொண்டார்.
நாகூரைச் சேர்ந்த ரவீந்தரின் இயற் பெயர் காஜா முகைதீன்.
சண்பகவல்லி தேவி அல்லது தென்னாடு போந்த அப்பாசிய குலத்
தென்றல், சித்தி ஜுனைதா எழுதிய விறுவிறுப்பான குறுநாவல்.
1947 ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட இந்த நூலுக்கு சுருக்கமான
முன்னுரையை எழுதியிருக்கிறார்.
-
"சரிதைகளையும் சமூகச் சீர்திருத்த நவீனங்கள், கட்டுரைகள்,
சிறுகதைகள் முதலியவைகளையும் புதுமுறையில் எழுதி வெளியிட
முயற்சிக்கிறோம். இத்தகைய பணி, ஆண் மக்களை விட, பெண்
மக்களுக்கே ஏற்புடையது. ஆண் மக்கள் ஜாதி சமயத்தால் தூண்டப்பட்டு,
சரித்திர உண்மைகளை மறைத்தும், திரித்தும் எழுதலாம்.
-
பெண் மக்கள் இயல்பாகவே ஆழ்ந்து சிந்திக்கும் மனத்தன்மையும்,
இரக்கமும் உடையவர்கள். எனவே, புத்துலகம் - புது மாற்றம் விழையும்
முஸ்லிம் உலகம் - மறுமலர்ச்சி விரும்பும் தமிழர் தம் நாடு பெண்
எழுத்தாளர்களை வரவேற்குமாக!'
-
மகிழம்பூ நல்ல வரவேற்பைப் பெற்ற மற்றொரு நாவல். மலைநாட்டு மன்னன்,
ஹலீமா அல்லது கற்பின் மாண்பு, வனஜா அல்லது கணவனின் கொடுமை,
பெண் உள்ளம் அல்லது சுதந்திர உதயம் முதலான தொடர்கதைகளையும்,
சிறுகதை களையும், அவர் காலத்துக்கு ஏற்ற பாணியில் பத்திரிகைகளில்
எழுதினார்.
-
பல பத்திரிகைகளில் கட்டுரை களையும் எழுதிக் குவித்தார் சித்தி ஜுனைதா.
பெண்கள் சினிமா பார்க் கலாமா, பாராளப் பிறந்தவள் பேயாட் டம் போடுவதா,
இஸ்லாமும் பலதார மணமும், முஸ்லிம் பெண்மணி களும், விவாக விலக்கும்
போன்ற சர்ச்சைக்குரிய கட்டுரைகளும், அவற்றில் அடங்கும்.

பல கட்டுரைகளின் தொகுப்பு நூலாக, "இஸ்லாமும், பெண்களும்' வெளிவந்தது.

திருநாகூர் அண்ணலின் திவ்ய மாண்பு வரலாற்று நூலை, 1946ல் அவர்
வெளியிட்டார். பல மகான்களின் வரலாற்றை கட்டுரைத் தொடராக
பத்திரிகைகளில் எழுதி வந்தார்.

அவருடைய சொந்த வாழ்க்கை எப்படி?
-
அவரின், 12 வயதில் திருமணம். கணவர் பகீர் மாலிமாருடன் நான்கைந்து
ஆண்டுகளே வாழ்ந்தார். நான்கு பெண் குழந்தைகளைப் பெற்று, விதவையானார்.
பிறகு, எழுத்தும், படிப்பும், பிள்ளை வளர்ப்புமே சித்தி ஜுனைதாவின்
வாழ்க்கையாகி விட்டது.
இவருடைய தம்பிகளும் பிரபலமானவர்கள். ஒருவர், இன்றைய கவிஞர் நாகூர் சலீம்.
பிரபல மான எழுத்தாளராக, திரைப்பட வசனகர்த்தாவாக விளங்கிய தூயவன் -
அக்பர் இன்னொரு தம்பி. ஆட்டுக்கார அலவேலு, மனிதரில் மாணிக்கம்,
பொல்லாதவன், வைதேகி காத்திருந்தாள், அன்புள்ள ரஜினிகாந்த், கேள்வியும் நானே
பதிலும் நானே, உள்ளம் கவர் கள்வன் போன்ற திரைப் படங்களுக்கு வசனம்
எழுதி தயாரிப் பாளராகவும் அவர் இருந்தார்.
தூயவனின் துணைவியே எழுத்தாளர் கே.ஜெய்புன்னிசா.
-
"காதலா, கடமையா?' நாவலையும், மற்ற படைப்புகளையும் ஒரு தொகுப்பாக
வெளி யிட்டுள்ளார் சித்தி ஜுனைதாவின் தங்கை மகன் நாகூர் ரூமி.
82 வயதில், (19.3.1998) காலமாவதற்கு நான்கு, ஐந்து நாட்களுக்கு முன் வரை,
சித்தி ஜுனைதா சலிப்பில்லாமல் எழுதிக் கொண்டும், படித்துக் கொண்டும் இருந்தார்.
=
=============================


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 15, 2016 6:16 pm

நல்ல விரிவான தகவல்கள் அய்யாசாமி ராம் . படிக்காத மேதை சித்தி ஜூனைதா பேகம்  1571444738

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக