புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முதல் உணவு: காலையில் சாப்பிடாவிட்டால்? Poll_c10முதல் உணவு: காலையில் சாப்பிடாவிட்டால்? Poll_m10முதல் உணவு: காலையில் சாப்பிடாவிட்டால்? Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
முதல் உணவு: காலையில் சாப்பிடாவிட்டால்? Poll_c10முதல் உணவு: காலையில் சாப்பிடாவிட்டால்? Poll_m10முதல் உணவு: காலையில் சாப்பிடாவிட்டால்? Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
முதல் உணவு: காலையில் சாப்பிடாவிட்டால்? Poll_c10முதல் உணவு: காலையில் சாப்பிடாவிட்டால்? Poll_m10முதல் உணவு: காலையில் சாப்பிடாவிட்டால்? Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
முதல் உணவு: காலையில் சாப்பிடாவிட்டால்? Poll_c10முதல் உணவு: காலையில் சாப்பிடாவிட்டால்? Poll_m10முதல் உணவு: காலையில் சாப்பிடாவிட்டால்? Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முதல் உணவு: காலையில் சாப்பிடாவிட்டால்? Poll_c10முதல் உணவு: காலையில் சாப்பிடாவிட்டால்? Poll_m10முதல் உணவு: காலையில் சாப்பிடாவிட்டால்? Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
முதல் உணவு: காலையில் சாப்பிடாவிட்டால்? Poll_c10முதல் உணவு: காலையில் சாப்பிடாவிட்டால்? Poll_m10முதல் உணவு: காலையில் சாப்பிடாவிட்டால்? Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
முதல் உணவு: காலையில் சாப்பிடாவிட்டால்? Poll_c10முதல் உணவு: காலையில் சாப்பிடாவிட்டால்? Poll_m10முதல் உணவு: காலையில் சாப்பிடாவிட்டால்? Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
முதல் உணவு: காலையில் சாப்பிடாவிட்டால்? Poll_c10முதல் உணவு: காலையில் சாப்பிடாவிட்டால்? Poll_m10முதல் உணவு: காலையில் சாப்பிடாவிட்டால்? Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் உணவு: காலையில் சாப்பிடாவிட்டால்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 13, 2016 5:03 am

‘இன்றைக்கு யார் யாரெல்லாம் சாப்பிடலை?
சாப்பிடாதவங்க எல்லாரும் கையைத் தூக்குங்க’-
மருத்துவப் பணி காரணமாகக் கிராமப்புறப் பள்ளிகளுக்குச்
செல்லும்போது மாணவர்களிடம் கேட்கும் முதல் கேள்வி
இதுவாகத்தான் இருக்கும்.

அநேகமாகச் சரிபாதிக் குழந்தைகள் கையைத் தூக்கி
விடுவார்கள். பள்ளிக்கு நேரமாச்சு, பஸ்ஸுக்கு லேட்டாயிருச்சு,
பசிக்கலை, வீட்டில் சமையல் செய்யலை, பழைய சோறு
சாப்பிடப் பிடிக்கலை என்பது போன்ற காரணங்களைச்
சொல்வார்கள்.

‘வீட்டில் சாப்பிட ஒன்றுமில்லை’, ‘பழைய சோற்றைச்
சாப்பிடப் பிடிக்கவில்லை’ என்பதுதான் அதிகமானோர்
சொல்லும் பதில். பொதுவாகக் கிராம ஊராட்சிப் பள்ளிகளின்
நிலைமை இதுதான்.

தொடக்கப்பள்ளி சிறுகுழந்தைகள் காலையில் சாப்பிடாமல்
வருவதைப் பார்ப்பது வேதனைதான். இதனால் பள்ளிக்குச்
செல்லும்போதெல்லாம் ஒரு பிஸ்கெட் பாக்கெட்டை வாங்கிச்
செல்வேன். அதைப் பார்த்துவிட்டு ‘சார், இன்னைக்குக்
கொடுத்துட்டுப் போய்டுவீங்க, நாளைக்கு யார் கொடுப்பாங்க?’
என்று ஒரு ஆசிரியர் கேட்டார்.

மதிய உணவுத் திட்டம்


ஒரு வேளை சாப்பிடாமல் இருந்தால், பெரியவர்களுக்கே
கண்ணைக் கட்டிக்கொண்டு வரும். எதையும் தெளிவாகப்
பார்க்க முடியாது; தலை சுற்றும்; காது அடைக்கும்; எதிலும்
கவனம் செலுத்த முடியாது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 13, 2016 5:05 am


அப்படியென்றால் சிறு குழந்தைகளுக்கு எப்படி இருக்கும்.
பசி மயக்கம், வயது வித்தியாசம் பார்க்குமா என்ன?

பள்ளிகளில் கல்வி இலவசம் என்றிருந்த காலத்திலும்
மாணவர்களின் குறைவான வருகைக்கு வறுமைதான்
காரணம் என்பதையும் உணவு ஒரு முக்கியப் பிரச்சினை
என்பதையும் அறிந்த அன்றைய முதல்வர் காமராஜர்
மிகுந்த சிரமங்களுக்கு இடையில் மதிய உணவுத்
திட்டத்தைக் கொண்டுவந்தார்.

இதன்மூலம் பள்ளியில் பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கை
அதிகமானது. அவர்களுக்கு ஒரு வேளை உணவும் கிடைத்தது.

இத்திட்டத்தைத் தொடங்கி வைத்த காமராஜர், ‘அன்னதானம்
நமக்குப் புதிதல்ல. இதுவரை வீட்டுக்கு வந்தவர்களுக்கு உணவு
அளித்தோம். இப்போது பள்ளிக்கூடத்துக்கு வருபவர்களுக்குச்
சோறு போடுகிறோம்’ என்று கூறினார்.

அதற்கு நிதி ஒரு பிரச்சினை என்றால் இந்தத் திட்டத்துக்காக
ஊர்வலமாகச் சென்று பிச்சை எடுக்கவும் அவர் தயாராக
இருந்தார் என்பதை அறியும்போது, இந்தத் திட்டத்தில் அவருக்கு
இருந்த அளப்பரிய ஆர்வத்தையும் மாணவர்களிடம்
கொண்டிருந்த ஈடுபாட்டையும் அறிய முடிகிறது.

நகர்ப்புறக் குழந்தைகளின் பிரச்சினை

கிராமப்புறக் குழந்தைகளுக்கு உணவு கிடைக்காதது பிரச்சினை
என்றால், நகர்ப்புறக் குழந்தைகளுக்கோ அதுவே தலைகீழ்.
‘என் குழந்தை சரியாகச் சாப்பிடுவதேயில்லை, காய்கறி எதை
வைத்தாலும் தொடுவதே கிடையாது’,

‘காலையில் ஒரு இட்லி அல்லது ஒரு தோசைதான்
சாப்பிடுகிறார்கள். கேட்டால் ‘ஸ்கூலுக்கு நேரமாச்சு’ என்று
சாக்குபோக்கு சொல்கிறார்கள்…

ஸ்கூலுக்குக் கொண்டுசென்ற மதிய உணவையும் அப்படியே
கொண்டுவந்துவிடுகிறார்கள் அல்லது கொட்டிவிடுகிறார்கள்’
- இது நகர்ப்புறப் பெற்றோரின் ஆதங்கம்; வருத்தம். இதைத் தவிர
உடம்பை ‘ஸ்லிம்மாக’ வைத்துக்கொள்ள வேண்டும் என்று
சிலர் காலை உணவைத் தவிர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

‘உனக்குப் பிடித்த காய்கறிகளின் பெயர்களைச் சொல்லு’
என்று குழந்தைகளிடம் கேட்டால், உருளைக்கிழங்கு, தக்காளி
மிஞ்சிப்போனால் கத்திரிக்காய், முருங்கைக்காய்... அதற்கு
மேல் சொல்லத் தெரிவதில்லை.

லேஸ், குர்குரே, பீட்சா, நூடுல்ஸ், பர்கர் தெரிந்த அளவுக்கு
நம் குழந்தைகளுக்குக் காய்கறிகள் தெரியவில்லை.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 13, 2016 5:05 am



இதற்கு பெற்றோரான நாமும் ஒரு காரணம். குழந்தைகளை
மார்க்கெட்டுக்கு, காய்கறிக் கடைக்கு அழைத்துச் செல்ல
வேண்டும். வகை வகையான பச்சை, மஞ்சள் காய்கறி,
கீரைகளைக் காண்பித்து ஒவ்வொன்றின் சிறப்பையும்
எடுத்துச் சொல்லி, நம் வாழ்வில் அவற்றின் பங்கை உணர்த்த
வேண்டும்.

காய்கறிகளை விளைவித்துச் சந்தைக்குக் கொண்டு
வருவதற்கு உழவர்கள் படும் பாடும் துயரங்களும்
அவர்களுக்குத் தெரிய வேண்டும். அதற்குப் பிறகு
காய்கறிகளைக் குழந்தைகள் ஒதுக்கமாட்டார்கள்.

காலை உணவு ஏன் முக்கியம்?

காலை உணவு மிக முக்கியம் என்கிறார்கள் ஊட்டச்சத்து
நிபுணர்கள். உடல்நலனில் காலை உணவு முதன்மையானது,
ராஜா சாப்பிடுவதைப்போல அது இருக்க வேண்டும் என்றும்
சொல்கிறார்கள். சிறப்பான ஊட்டச்சத்து மிகுந்தும்
நிறைவாகவும் அந்த உணவு இருக்க வேண்டும்.

இரவு உணவுக்குப் பின் சுமார் 10 மணி நேரம் கழித்து மறுநாள்
காலை 8 மணிக்குத்தான் காலை உணவைச் சாப்பிடுகிறோம்.
இந்த நீண்ட விரதத்தைப் போக்குவதுதானே காலை உணவு
(Break - fast) . இந்த உணவைத் தவிர்த்துவிட்டால்,
அடுத்து 1 மணிக்குத்தான் மதிய உணவைச் சாப்பிடுவோம்.

அப்போது முழுமையான உணவைச் சாப்பிடாத இடைவெளி
15 மணி நேரமாகிவிடும். இப்படி இருந்தால் வயிற்றுவலி,
வயிற்றுப்புண், நோய் எதிர்ப்பாற்றல் குறைவு, ரத்தச் சோகை
போன்ற உடல்நலக் கேடுகள் ஏற்படுவதற்கான சாத்தியம்
அதிகம்.

இதுபோன்ற இடையூறுகள் அடிக்கடி வாழ்க்கையில்
இடைப்படும்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 13, 2016 5:06 am




பசியோடு இருக்கும் குழந்தையால் பாடத்தில் கவனம்
செலுத்த முடியாது. நினைவாற்றலுக்கு, மேம்பட்ட கவனிப்புத்
திறனுக்கு, நன்றாகப் பேசுவதற்கு, தனித்திறமைக்கு,
சிறந்த முறையில் கல்வி கற்பதற்கு, பிரச்சினைகளுக்கு நல்ல
முறையில் தீர்வு காண்பதற்கு - காலை உணவு மிகவும் அவசியம்
என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காலை உணவைத் தவிர்த்தால், வளரிளம் பெண்களுக்கு
ரத்தசோகை போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
மாதவிடாய்க் காலத்தில் அதிகமான ரத்தப்போக்கு
ஏற்படுவதற்குச் சாத்தியம் உள்ளது. திருமணமான பிறகு
பிரசவக் காலத்திலும் அதிக ரத்தப்போக்கு ஏற்படலாம்,
பிரசவமும் சிக்கலாகலாம்.

அனைவருக்கும் அவசியம்

காலையில் நாம் சாப்பிடும் உணவுதான் நாள் முழுக்கச்
சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் செயல்பட உதவுகிறது.
நலமான வாழ்வு, சுறுசுறுப்பான செயல்பாடு, நீண்ட ஆயுள்
ஆகியவற்றுக்குக் குழந்தைகளுக்குக் காலை உணவு அவசியம்.
இதையெல்லாம் உணர்ந்துகொண்டுதான் ‘வயிற்றிலே
ஈரமில்லாதவன் எப்படிப் படிப்பான்? ஏழைக் குழந்தைகளுக்குப்
பள்ளிக்கூடத்திலேயே சோறு போட்டுப் படிக்க வைக்க வேண்டும்’
என்று காமராஜர் அன்று நினைத்தார்;
செயல்படுத்தியும் காட்டினார்.

நலவாழ்வில் முக்கியப் பங்கை வகிக்கும் காலை உணவு,
பள்ளி மாணவர்களின் உடல்நலனில் மட்டுமல்லாமல்
அவர்களுடைய கல்வியிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை
அறிந்து, தமிழகத்தின் சில பகுதிகளில் பள்ளியிலேயே காலைச்
சிற்றுண்டி வழங்கப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக மாணவர்களின் ஆரோக்கியத்தை
மேம்படுத்தும், கல்வித் தரத்தை உயர்த்தும் காலை உணவை
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கத் தமிழக அரசு
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-
--------------------------------------
-மு. வீராசாமி

- கட்டுரையாளர், மதுரை தேசியக் கண் மருத்துவச்
சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்
-
தமிழ் தி இந்து காம்


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jun 13, 2016 8:37 am

“ஒருவேளை உண்பான் யோகி
இருவேளை உண்பான் போகி
மூவேளை உண்பான் ரோகி
நான்குவேளை உண்பான் பாவி”

என்று ஒரு பாடல் உண்டு . நாமெல்லாம் " ரோகி " இனத்தவர். மூன்று வேளை சாப்பிடுகிறோம் . அதனால்தான் அடிக்கடி நோய்வாய்ப் படுகிறோம் . துறவிகளும் , மகான்களும் தினமும் ஒரே ஒரு கவளம் உணவு மட்டுமே உண்பார்களாம் . அவர்கள் யோகிகள் . சாப்பாட்டு ராமன்கள் எப்போதும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள் , அவர்கள் " பாவி " வகையைச் சார்ந்தவர்கள் . மனிதன் உயிர்வாழ தினமும் இரண்டுவேளை சாப்பிட்டால் போதும் .

சர்க்கரை நோயாளிகள் மூன்றுவேளை உணவை ஐந்து பாகமாகப் பிரித்துக்கொண்டு தினமும் ஐந்து வேளைகள் சாப்பிடவேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள் .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 13, 2016 10:56 am

பள்ளிகளில் கல்வி இலவசம் என்றிருந்த காலத்திலும்
மாணவர்களின் குறைவான வருகைக்கு வறுமைதான்
காரணம் என்பதையும் உணவு ஒரு முக்கியப் பிரச்சினை
என்பதையும் அறிந்த அன்றைய முதல்வர் காமராஜர்
மிகுந்த சிரமங்களுக்கு இடையில் மதிய உணவுத்
திட்டத்தைக் கொண்டுவந்தார்.

இதன்மூலம் பள்ளியில் பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கை
அதிகமானது. அவர்களுக்கு ஒரு வேளை உணவும் கிடைத்தது.

இத்திட்டத்தைத் தொடங்கி வைத்த காமராஜர், ‘அன்னதானம்
நமக்குப் புதிதல்ல. இதுவரை வீட்டுக்கு வந்தவர்களுக்கு உணவு
அளித்தோம். இப்போது பள்ளிக்கூடத்துக்கு வருபவர்களுக்குச்
சோறு போடுகிறோம்’ என்று கூறினார்.


முதல் உணவு: காலையில் சாப்பிடாவிட்டால்? 3838410834 முதல் உணவு: காலையில் சாப்பிடாவிட்டால்? 3838410834 முதல் உணவு: காலையில் சாப்பிடாவிட்டால்? 3838410834 சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 13, 2016 10:57 am

‘வீட்டில் சாப்பிட ஒன்றுமில்லை’, ‘பழைய சோற்றைச்
சாப்பிடப் பிடிக்கவில்லை’ என்பதுதான் அதிகமானோர்
சொல்லும் பதில். பொதுவாகக் கிராம ஊராட்சிப் பள்ளிகளின்
நிலைமை இதுதான்.


பாவம் குழந்தைகள் சோகம்சோகம்சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 13, 2016 10:59 am

இதற்கு பெற்றோரான நாமும் ஒரு காரணம். குழந்தைகளை
மார்க்கெட்டுக்கு, காய்கறிக் கடைக்கு அழைத்துச் செல்ல
வேண்டும். வகை வகையான பச்சை, மஞ்சள் காய்கறி,
கீரைகளைக் காண்பித்து ஒவ்வொன்றின் சிறப்பையும்
எடுத்துச் சொல்லி, நம் வாழ்வில் அவற்றின் பங்கை உணர்த்த
வேண்டும்.


ரொம்ப சரி, 1 வயது ஆகும்போதிலிருந்தே நாம் காய் கறி பழங்கள் எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாய் தந்து பழக்கணும் புன்னகை.அப்போ தான் சாப்பிடுவார்கள் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 13, 2016 11:03 am

இதன் தொடர்ச்சியாக மாணவர்களின் ஆரோக்கியத்தை
மேம்படுத்தும், கல்வித் தரத்தை உயர்த்தும் காலை உணவை
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கத் தமிழக அரசு
நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இப்போ ஆரம்பித்து விட்டார்கள் என்றே எண்ணுகிறேன் ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 13, 2016 11:03 am

M.Jagadeesan wrote:“ஒருவேளை உண்பான் யோகி
இருவேளை உண்பான் போகி
மூவேளை உண்பான் ரோகி
நான்குவேளை உண்பான் பாவி”

என்று ஒரு பாடல் உண்டு . சர்க்கரை நோயாளிகள் மூன்றுவேளை உணவை ஐந்து பாகமாகப் பிரித்துக்கொண்டு தினமும் ஐந்து வேளைகள் சாப்பிடவேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1210938

ம்ம்...அப்போ , அதுக்கு தனி பேர் தான் கண்டுபிடிக்கணும் .....இல்லையா ஐயா? புன்னகை ............சும்மா விளையாட்டுக்கு சொல்கிறேன்   ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக