புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_c10பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_m10பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_c10 
5 Posts - 63%
heezulia
பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_c10பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_m10பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_c10பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_m10பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 13, 2016 5:17 am

பிறருக்காகவே வாழ்ந்த காவிய நாயகி  Y13UYUgsTYW6EOVtuzVg+panchali_2891857f
-

மகாபாரதக் கதையில் துரோணரைப் பழிவாங்க யாகம்
வளர்த்து துருபதன் பெற்றெடுத்த மகள் பாஞ்சாலி.
அவளைப் பற்றி மாற்றுக் கோணத்தில் அணுகும் நூல் இது.

துருபதனுக்கு முதலில் சிகண்டினி என்ற மகளாகப் பிறந்து
கந்தர்வர் ஆசியால், ஆணாகிய சிகண்டிதான் பாஞ்சாலிக்கு
வழிகாட்டி. “என் விருப்பப்படி என் கணவரைத் தேர்ந்தெடுக்க
முடியாதா, என் வாழ்க்கையை நான் விரும்பியபடி வாழ
முடியாதா?” என்று அண்ணன் சிகண்டியிடம் கேட்கிறாள்
பாஞ்சாலி.

“இந்த நாட்டுக்காக உருவாக்கப்பட்ட பலிகடா நீ.
உன் விருப்பத்திற்கு இங்கே இடமில்லை” என்கிறான்
சிகண்டி.

அர்ச்சுனனுக்குப் பாஞ்சாலியை மணம் முடித்து,
அவனைக் கொண்டு துரோணரைப் பழிவாங்க வேண்டும்
என்பது துருபதன் திட்டம். இப்போது, அர்ச்சுனனை விரைவாகப்
பார்க்க ஆசைப்பட்டாள் பாஞ்சாலி. குடும்பம் நடத்த அல்ல,
கூட்டுச் சேர்ந்து துருபதன் லட்சியத்தை நிறைவேற்ற.
வாழ்க்கை மராத்தானில் பாஞ்சாலி வெற்றிபெற முதலில்
வழிகாட்டியவன் சிகண்டி.

சிறு வயது முதலே எது கிடைத்தாலும் பாண்டவர்கள்
ஐந்து பேரும் பங்கு போட்டுக்கொள்ள வேண்டும் என்று
சொல்லிச் சொல்லியே தன் பிள்ளைகளை வளர்த்தாள்
குந்தி.

“துருபதரே! உங்களுக்கு துரோணர் வீழ்த்தப்பட
வேண்டும். எனக்கு அஸ்தினாபுர சிம்மாசனம் வேண்டும்.
அதற்கு ஒரே வழி பாஞ்சாலி ஐந்து பேரையும் மணப்பதுதான்.”

அதிர்ச்சியடைந்தாள் பாஞ்சாலி. அர்ச்சுனனை நீ மணக்க
வேண்டும் என்று சொல்லித்தானே தந்தை வளர்த்தார்.
இப்போது ஐந்து பேரை மணப்பதா?

இந்தச் சமயத்திலும் சிகண்டி அவளை ஆற்றுப்படுத்தினான்.
பாண்டுவை மணந்துகொண்ட குந்தி, தரும தேவதை,
வாயு பகவான், இந்திரன் ஆகியோரின் துணையுடன்
குழந்தைகளைப் பெற்றதைச் சுட்டிக்காட்டினான். திருமணம்
நடக்கிறது.

பகடையில் தோற்று ஐந்து பேரும் அடிமைகளானபோது
திரௌபதியைப் பார்த்துக் கர்ணன் சொன்னான்,
“அடிமைகளோடு இனி வாழ்வதைவிட, வென்ற அரசன்
துரியோதனனை மணந்து அவனோடு வாழ்க்கை நடத்து”
என்று.

இன்னொரு சம்பவம். மரத்தில் அபூர்வமான நெல்லிக்கனி
இருந்தது. ஒரே கனிதான் காய்க்கும். அதை ஒரு முனிவர்
மட்டுமே பறித்துச் சாப்பிடுவார். பாஞ்சாலி அறியாமல்
அதைப் பறித்துவிட்டாள். முனிவர் கோபத்துக்கு ஆளாகாமல்
இருக்க, பாண்டவர்களும், பாஞ்சாலியும், இதுவரை யாரிடமும்
சொல்லாத ஒரு ரகசியத்தைச் சொன்னால் பழம் மீண்டும்
மரத்தில் போய் ஒட்டிக்கொள்ளும் என்றான் கிருஷ்ணன்.

ஐந்து பேரும் ரகசியம் சொல்ல, மரத்தின் அருகே நெல்லிக்கனி
நெருங்கிவிட்டது. இப்போது பாஞ்சாலியின் முறை.
கிருஷ்ணன் காதில் பாஞ்சாலி தன் ரகசியத்தைச் சொன்னாள்.
கனி உடனே மரத்தில் ஒட்டிக்கொண்டது.

அவள் சொன்ன ரகசியம்: “கர்ணனை நான் நேசிக்கிறேன்”.

பாஞ்சாலி எனும் பாத்திரத்தை நூலாசிரியர் இப்படிப் பண்முகத்
தளத்தில் விவரித்துக்கொண்டுபோகிறார்.

யுத்தத்துக்கு முன் கர்ணனைச் சந்தித்த கிருஷ்ணன்,
“கர்ணா, நீ பாண்டவர் பக்கம் வந்து துரியோதனனோடு போரிடு.
வென்றால் அஸ்தினாபுர சிம்மாசனமும் கிடைக்கும்,
பாஞ்சாலியும் உனக்குக் கிடைப்பாள்” என்றார்.

கர்ணன் குந்தி மகன் என்று பாஞ்சாலிக்கு முன்பே
தெரிந்திருந்ததால் கர்ணனும் அவள் கணவனாகியிருப்பான்.
யுத்தமும் நடந்திராது.

கடைசி நாள் யுத்தம். “துரியோதனா! இப்போதுகூட யுத்தத்தை
நிறுத்திவிடலாம்” என்றார் கிருபர்.
“13 ஆண்டுகளாக, என் ரத்தத்திற்காக, பாஞ்சாலி கூந்தலை
விரித்துப்போட்டுக் கட்டாந்தரையில் படுத் திருக்கிறாள்.
அவளிடம் போய் சமாதானம் பேச முடியுமா?” என்றான்
துரியோதனன்.

இப்படி மகாபாரதத்தின் எல்லாக் கட்டங்களிலும் பாஞ்சாலிக்கு
முக்கிய இடம் இருப்தைப் காட்டுகிறார் விஜயராஜ்.
பாஞ்சாலியே பாண்டவர்களை வழிநடத்தினாள். அவள்
துருபதனுக்காக வாழ்ந்தாள். குந்தி கட்டளையை ஏற்று வாழ்ந்தாள்.
பாண்டவர்கள் நலவாழ்வுக்கு வாழ்ந்தாள்.

அந்தப் பரிபூரண வாழ்க்கையைக் கண்ட உலகம் அவளை
தெய்வமாக்கி ஆராதித்தது. அவள் திரௌபதி அம்மனானாள்.

பாஞ்சாலியை முன்னிட்டு மகாபாரதத்தை இன்னொரு
கோணத்தில் பார்க்கிறார் விஜயராஜ். தன் முடிவுகளைக்
காரணங்களோடு முன்வைக்கிறார். புதிய சிந்தனைகளை
வெறும் வாதமாக அல்லாமல், கதைப் போக்கினூடே இயல்பாகச்
சொல்லியிருப்பதால் இந்த நூலைச் சுவையாகப் படிக்க
முடிகிறது.
-
--------------------------------------------

- சிவக்குமார், நடிகர், ஓவியர், சொற்பொழிவாளர்.
--
நூல் விபரம்த_
பாஞ்சாலி
எஸ். விஜயராஜ்
பூம்புகார் பதிப்பகம்
சென்னை - 600108
தொலைபேசி: 044 25267543
விலை ரூ.425 பக்கம்: 558


Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon Jun 13, 2016 7:24 am

நன்று




http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக