புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  'துணைவேந்தர் பதவி ரூ.8 கோடி!' -ஏலம் போடுகிறதா உயர் கல்வித்துறை?  Poll_c10  'துணைவேந்தர் பதவி ரூ.8 கோடி!' -ஏலம் போடுகிறதா உயர் கல்வித்துறை?  Poll_m10  'துணைவேந்தர் பதவி ரூ.8 கோடி!' -ஏலம் போடுகிறதா உயர் கல்வித்துறை?  Poll_c10 
7 Posts - 64%
heezulia
  'துணைவேந்தர் பதவி ரூ.8 கோடி!' -ஏலம் போடுகிறதா உயர் கல்வித்துறை?  Poll_c10  'துணைவேந்தர் பதவி ரூ.8 கோடி!' -ஏலம் போடுகிறதா உயர் கல்வித்துறை?  Poll_m10  'துணைவேந்தர் பதவி ரூ.8 கோடி!' -ஏலம் போடுகிறதா உயர் கல்வித்துறை?  Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
  'துணைவேந்தர் பதவி ரூ.8 கோடி!' -ஏலம் போடுகிறதா உயர் கல்வித்துறை?  Poll_c10  'துணைவேந்தர் பதவி ரூ.8 கோடி!' -ஏலம் போடுகிறதா உயர் கல்வித்துறை?  Poll_m10  'துணைவேந்தர் பதவி ரூ.8 கோடி!' -ஏலம் போடுகிறதா உயர் கல்வித்துறை?  Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

'துணைவேந்தர் பதவி ரூ.8 கோடி!' -ஏலம் போடுகிறதா உயர் கல்வித்துறை?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 10, 2016 1:53 pm

தமிழகத்தில் காலியாக உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்
பதவிகள் நிரப்பப்பட்டு வருகின்றன. ' கடந்த காலங்களில் 3 கோடி
ரூபாய் அளவுக்குப் பேரம் பேசப்பட்டு வந்த துணைவேந்தர்
பதவிகள், இப்போது எட்டு கோடி ரூபாய் வரை விலை போகிறது'
என வேதனைப்படுகிறார்கள் கல்வியாளர்கள்.
-
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக,
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக போராசிரியர் கணபதி
நியமிக்கப்பட்டிக்கிறார். அதேபோல், தமிழ்நாடு திறந்தவெளிப்
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் பாஸ்கரன்
நியமிக்கப்பட்டிருக்கிறார்.
-
இதனால், இந்த இரண்டு பல்கலைக்கழகங்களிலும் நீடித்து வந்த
குழப்பங்கள் நீங்கிவிட்டன. ஆனால், சென்னைப் பல்கலைக்கழகத்தின்
துணைவேந்தராக இருந்த தாண்டவனின் பதவிக்காலம் நிறைவடைந்து
ஆறு மாதங்கள் ஆகிவிட்டன.
-
அதேபோல், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக
இருந்த கல்யாணி மதிவாணனின் பதவி முடிந்து ஓராண்டு முடிந்துவிட்டது.
இந்தப் பல்கலைக்கழகங்களில், புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும்
மூன்று பேர் கொண்ட கமிட்டி நியமிக்கப்பட்டது. இருப்பினும், பல
மாதங்களாக புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய முடியாமல், தேர்வுக்
குழு தவித்து வருகிறது.
-
காரணம், ' துணைவேந்தர் தேர்வில் வழக்கம்போல் நடக்கும்
அரசியல்தான்' என்கின்றனர் கல்வியாளர்கள்.
-
தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் முன்னாள் தலைவர்
பேராசிரியர் தமிழ்மணி நம்மிடம், " பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்
பதவி என்பது மிக முக்கியமானது. இந்தப் பதவிகளுக்கு வருபவர்கள்
சிறந்த கல்வியாளர்களாகவும் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்களாகவும் இருக்க
வேண்டும் என விரும்புகிறோம்.
-
ஆனால், கடந்த பத்தாண்டுகளில் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில்
அரசியல் சார்புள்ளவர்களும், ஊழலுக்கு துணை போகிறவர்களுமே
நியமிக்கப்பட்டுள்ளனர். துணைவேந்தரை தேர்வு செய்ய, மூன்று பேர் கொண்ட
கமிட்டியை நியமிக்கின்றனர்.
-
ஆளுநரின் பிரதிநிதியாக நியமிக்கப்படுகிறவர் கமிட்டியின்
ஒருங்கிணைப்பாளராக செயல்படுகிறார். தவிர, செனட் சார்பாக ஒரு
பிரதிநிதியும், சிண்டிகேட் சார்பாக ஒரு பிரதிநிதியும் தேர்வு செய்யப்படுகிறார்.
இதில், செனட் சார்பில் தேர்வாகும் பிரதிநிதி அரசியல் கலப்பில்லாத
கல்வியாளராக இருக்கிறார்.

மற்ற இரு பிரதிநிதிகளும் அரசுக்கு வேண்டப்பட்டவர்களாக உள்ளனர்.
இதனால், யார் துணைவேந்தர் பதவிக்கு வர வேண்டும் என்பதை தீர்மானிக்கும்
சக்தியுள்ளவர்களாக இவர்கள் இருக்கின்றனர். இதுதான் நடக்கப்போகும்
ஊழல்களுக்கு தொடக்கப்புள்ளியாக அமைகிறது.
-
அரசியல் புள்ளிகள் சிலர், பல்கலைக்கழகங்களையும் தங்களுக்குள் கோட்டா
சிஸ்டம் அடிப்படையில் பிரித்து வைத்துள்ளனர். ' எந்த பேராசிரியர் எங்கே
நியமிக்கப்பட வேண்டும்' என்பதில் ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் தெளிவாக
உள்ளனர். துணைவேந்தர் தேர்வு என்பது நியாயமான முறையில்,
வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். சிறந்த
கல்வியாளர்கள் தேர்வுக் குழுவில் இடம்பெறும்போதுதான், பல்கலைக்கழகத்திற்கு
சிறந்த துணைவேந்தர் கிடைப்பார்.
-
கல்வித் தகுதி, நிர்வாகத் திறமை என்பதையும் தாண்டி, ஊழலற்றவர்கள் பதவிக்கு
வர வேண்டும்.
-
தற்போது துணைவேந்தர் பதவிகளுக்கு எட்டு கோடி வரையில்,
விலை பேசப்படுவதாக எங்களுக்குத் தகவல்கள் வருகின்றன.
இவ்வளவு தொகை கொடுத்து வருகிறவர்கள் எப்படி சிறந்த கல்வித் தரத்தை
உருவாக்குவார்கள்? கொடுத்த பணத்தை ஈட்டத்தான் விரும்புவார்கள்.
இவர்களின் கீழ் கல்வி பயிலும் மாணவர்களும் ஊழல் செய்வதை சாதாரணமான
விஷயமாகத்தான் பார்ப்பார்கள். உயர் ஊழல் துறையாக உயர்கல்வி மாறிப் போவதை
முதல்வர் தடுக்க வேண்டும்" என்றார் வேதனையோடு.
-
------------------------------------------------------------
ஆ.விஜயானந்த்
விகடன்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 10, 2016 2:04 pm

துணைவேந்தர் பதவி 15 கோடிக்கு ஏலம் விடப்படுவதாக EVKS இளங்கோவன் பேசியிருந்தார் . இது மிகவும் வேதனைக்குரிய விஷயம் .AL முதலியார் போன்ற மேதைகள் அலங்கரித்த துணைவேந்தர் பதவி , வெறும் காசுக்கு விற்கப்படும் பொருளாக மாறிவிட்டது வருந்தத்தக்கது .

என்ன செய்வது ?

பல்லாயிரம் கோடி ரூபாய்கள் செலவுசெய்து ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள் . அதையெல்லாம் சம்பாதிக்கவேன்டாமா ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 10, 2016 4:18 pm

' கடந்த காலங்களில் 3 கோடி ரூபாய் அளவுக்குப் பேரம் பேசப்பட்டு வந்த துணைவேந்தர்
பதவிகள், இப்போது எட்டு கோடி ரூபாய் வரை விலை போகிறது' என வேதனைப்படுகிறார்கள் கல்வியாளர்கள்.


அடப்பாவிகளா..............எதற்குத்தான் விலை என்பது இல்லாமல் போய்விட்டதே ?.............பதவி கிடைத்ததும், இவங்க, கொடுத்த பணத்துக்கு மேல, பணம் சம்பாதிக்க வராங்களா இல்லை கல்லுரி நடத்த வராங்களா என்றே தெரியாமல் போகுமே?................சோகம்சோகம்சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 10, 2016 4:52 pm

krishnaamma wrote:' கடந்த காலங்களில் 3 கோடி ரூபாய் அளவுக்குப் பேரம் பேசப்பட்டு வந்த துணைவேந்தர்
பதவிகள், இப்போது எட்டு கோடி ரூபாய் வரை விலை போகிறது' என வேதனைப்படுகிறார்கள் கல்வியாளர்கள்.


அடப்பாவிகளா..............எதற்குத்தான் விலை என்பது இல்லாமல் போய்விட்டதே ?.............பதவி கிடைத்ததும், இவங்க, கொடுத்த பணத்துக்கு மேல, பணம் சம்பாதிக்க வராங்களா இல்லை கல்லுரி நடத்த வராங்களா என்றே தெரியாமல் போகுமே?................சோகம்சோகம்சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1210505

துணைவேந்தர் பதவி 15 கோடிக்கு விலை போகிறதாம் . இதில் 5 கோடி கவர்னருக்கு ; மீதி 10 கோடி அம்மையாருக்கு என்று EVKS இளங்கோவன் பேசியதால் அவர்மீது கவர்னர் வழக்குப் போட்டிருக்கார் . இது பத்திரிகையில் வந்த செய்தி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
avatar
Guest
Guest

PostGuest Fri Jun 10, 2016 7:08 pm

கல்வியே ஏலம் போய் விட்ட பின்னர் ,இதுவெல்லாம் பெரிய விசயமா? கர்ணன் பரம்பரை கொடுத்துக் கொடுத்துப் பழகி விட்டது. கொடுத்து கைசிவந்த கைகளை மாற்ற முடியாது. அதுபோல் வாங்கிச் சிவந்த கைகளையும் மாற்ற முடியாது.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 10, 2016 7:15 pm

மூர்த்தி wrote:கல்வியே ஏலம் போய் விட்ட பின்னர் ,இதுவெல்லாம் பெரிய விசயமா? கர்ணன் பரம்பரை கொடுத்துக் கொடுத்துப் பழகி விட்டது. கொடுத்து கைசிவந்த கைகளை மாற்ற முடியாது. அதுபோல் வாங்கிச் சிவந்த கைகளையும் மாற்ற முடியாது.
மேற்கோள் செய்த பதிவு: 1210566

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக