புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10உயில் எழுதி விட்டீர்களா? Poll_m10உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10 
5 Posts - 71%
Manimegala
உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10உயில் எழுதி விட்டீர்களா? Poll_m10உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு
உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10உயில் எழுதி விட்டீர்களா? Poll_m10உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10உயில் எழுதி விட்டீர்களா? Poll_m10உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10உயில் எழுதி விட்டீர்களா? Poll_m10உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10உயில் எழுதி விட்டீர்களா? Poll_m10உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10 
11 Posts - 4%
prajai
உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10உயில் எழுதி விட்டீர்களா? Poll_m10உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10 
9 Posts - 4%
Jenila
உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10உயில் எழுதி விட்டீர்களா? Poll_m10உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10 
4 Posts - 2%
Rutu
உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10உயில் எழுதி விட்டீர்களா? Poll_m10உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10 
3 Posts - 1%
jairam
உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10உயில் எழுதி விட்டீர்களா? Poll_m10உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10உயில் எழுதி விட்டீர்களா? Poll_m10உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10உயில் எழுதி விட்டீர்களா? Poll_m10உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10உயில் எழுதி விட்டீர்களா? Poll_m10உயில் எழுதி விட்டீர்களா? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயில் எழுதி விட்டீர்களா?


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 01, 2016 11:58 am

மனிதனின் பிறப்பு, வாழ்வு மற்றும் முடிவு எல்லாமே அரிது. பிறப்பு எப்படியோ அப்படியே முடிவும். எதுவும் மனிதனின் கையில் இல்லை. வாழும் காலத்தில், கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கும் சொத்துக்களைப் போகும்போது (எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும்) தன்னோடு எடுத்துக் கொண்டு போக முடியாது என்பது யாவரும் அறிந்த உண்மை.

வாழ்நாளுக்குப் பிறகு தமது மனைவி, குழந்தைகள் சுகமாக வாழ, நாம் சேர்த்த சொத்துக்கள் உதவ வேண்டும் என்று எல்லோரும் நினைப்பார்கள். இதில் தவறு ஏதும் இல்லை. அப்படித்தான் நினைக்கவும் வேண்டும். அதற்குத் தேவையானவற்றைத் தனது வாழ்நாளிலேயே செய்து முடிப்பவன் புத்திசாலி. அதற்கு உதவும் ஒரு சாதனம் தான் உயில்.

படித்துப் பெரிய வேலையில் இருப்பவர்கள் மற்றும் கோடிக்கணக்கில் வியாபாரத்தில் புரட்டுபவர்கள் கூட உரிய சமயத்தில் உயில் எழுதாமல் போய்விடுகிறார்கள். இதனால் அவர்களது காலத்துக்குப் பின்பு அவரது வாரிசுகள் சொத்துக்காக அடித்துக் கொண்ட நிகழ்ச்சிகளும் அரங்கேறி வருகின்றன.

உயில் எழுதுவது தேர்வு எழுதுவது போல ஒன்று கடினமானது அல்ல. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் அதற்கும் மேலே. எக்ஸாமில் எதை வேண்டுமானாலும் எழுதி பாஸ் ஆகலாம். ஆனால், உயில் எழுதும் முன்பு சரியாகச் சிந்திக்க வேண்டும்.

உயில் எழுதுவது மிகவும் சுலபம். தேவையானவை பேப்பர், பேனா மட்டுமே. கம்ப்யூட்டர் உதவி கொண்டும் உயில் எழுதலாம். மேலும் உயில் எழுதுபவர் சுயநினைவோடு எழுதுகிறாரா அல்லது யாராவது கட்டாயத்திற்கு உட்பட்டு எழுதுகிறாரா என்பதும் அவசியம்.

உயில் எழுதுவதற்கு முன்னால், உயில் எழுதுபவர் அவரது மனைவி அல்லது கணவரைக் கலந்து ஆலோசிப்பது சாலச்சிறந்தது. சொத்து விவரங்கள் பற்றி (அசையும் மற்றும் அசையா) ஒரு விரிவான ஜபிதா (லி்ஸ்ட்) தயாரித்துச் சரிபார்த்துக் கொண்டால், விடுபடுவதைத் தவிர்க்கலாம்.

கூடியமட்டும் சொத்து எழுதுபவர் தமது காலத்திற்குப் பிறகு தமது மனைவி சொத்துக்களை ஆள உரிமை கொடுத்து உயில் எழுதுவது, அவர் மனைவிக்குக் காட்டும் மரியாதை மட்டும் இல்லாமல், தமது காலத்திற்குப் பிறகு மனைவிக்ப் பாதுகாப்பு அரணாகவும் இருக்க உதவும். பலவகை நாட்டு நடப்புக்களைக் கேட்கும்போது இந்த முறையே சரியானது.

தமது மற்றும் தமது மனைவியின் காலம் முடிந்ததும், உயிலில் குறிப்பிட்டபடி யார் யாருக்கு, எந்த எந்தச் சொத்துக்கள் சேரவேண்டும் என்பதை தெளிவாக எழுதி வைத்தால், பிற்காலத்தில் குழப்பம் இல்லாமல் சொத்துக்களை அவரது (உயில் எழுதுபவரின்) வாரிசுகள் பிரித்துக் கொள்ள வழி ஏற்படும்.

உயில் எழுதுபவர் தம் சுயநினைவோடு எழுதுகிறார் என்பதை உயிலில் மறக்காமல் குறிப்பிட்டு எழுத வேண்டும். யாருடைய கட்டாயத்தின் பேரிலும் எழுதவில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும். உயில் மிகத் தெளிவாக இருப்பது அவசியம். குடும்பத்தில் யார், யாருக்கு எந்தச் சொத்து என்பதையும், அவற்றின் விவரங்களையும் சரியாக எழுத வேண்டும்.

பலர் வங்கிகள் மற்றும் போஸ்ட் ஆபிஸ் போன்றவற்றில் கணக்கு வைத்து இருப்பார்கள். அங்கு அவர்களது கணக்குகள் மற்றும் டிபாசிட் போன்றவற்றிற்கு நாமிநேஷன் செய்து இருந்தால், உயிலில் அந்தக் குறிப்பிட்ட நபருக்குச் சேர வேண்டும் என்று எழுதினால் நலம். பிற்காலத்தில் அனாவசிய குழப்பங்களைத் தவிர்க்கலாம்.

வங்கிகளில் பணம் போடும் போது யாரை நாமினியாகக் குறிப்பிடுகிறோமோ, கணக்குதாரர் இறந்த பிறகு அந்த நாமினிக்கே கணக்கில் உள்ள பணத்தை வங்கிகள் பட்டுவாடா செய்யும்.

தான் சுயமாகச் சம்பாதித்த சொத்துக்களை, தமது விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் உயிலில் எழுதி வைக்கலாம். உதாரணத்திற்கு உயில் எழுதுபவர் குறிப்பிட்ட சொத்தையோ அல்லது பணத்தையோ அநாதை இல்லம், முதியோர் இல்லம், குழந்தைகள் படிப்பிற்குக் கொடுக்கும்படி உயிலில் குறிப்பிட்டு எழுதலாம்.

உயில் எழுதினால், அதை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் கிடையாது. செய்தால் நலம். ஒருவர் எவ்வளவு முறை வேண்டுமானாலும் திருத்தி உயில் எழுதலாம். ஆனால் கடைசியாக எழுதிய உயிலே செல்லும்.

எழுதிய உயிலை ஒருமுறைக்கு மேல் சரிபார்த்து விட்டு கையெழுத்து இடவும். கட்டாயமாக உயிலுக்கு இரண்டு நபர்கள் சாட்சிக் கையெழுத்துப் போட வேண்டும். அவர்களது பெயர், விலாசத்தையும் குறிப்பிட வேண்டும். உயில் எழுதிய விவரம் குறித்து நம்பகமான ஒருவரிடம் தெரிவித்து வைப்பது நல்லது.

வாசுதேவன், நவிமும்பை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 01, 2016 12:01 pm

ம்ம்.... எதுவும் நேரத்தில் செய்யப் பட வேண்டும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jun 01, 2016 12:27 pm

ஒன்றிக்கு மேற்பட்ட குழந்தைகளை வைத்திருப்பவர்கள் அவசியம் எழுதவேண்டியது தான். ஆனால் வாழும் காலத்திலேயே தனக்கு தேவையானதை வைத்துக்கொண்டு மற்றதை பிரிதுகொடுத்துவிடுவது தான் புத்திசாலித்தனம்.



உயில் எழுதி விட்டீர்களா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஉயில் எழுதி விட்டீர்களா? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312உயில் எழுதி விட்டீர்களா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 01, 2016 12:39 pm

விமந்தனி wrote:ஒன்றிக்கு மேற்பட்ட குழந்தைகளை வைத்திருப்பவர்கள் அவசியம் எழுதவேண்டியது தான். ஆனால் வாழும் காலத்திலேயே தனக்கு தேவையானதை வைத்துக்கொண்டு மற்றதை பிரிதுகொடுத்துவிடுவது தான் புத்திசாலித்தனம்.
மேற்கோள் செய்த பதிவு: 1209483

ஆமாம் , கொஞ்சம் தனக்கு வைத்துக்கொண்டு தான் பிரித்துத் தரணும்  விமந்தனி....அப்படி இல்லாமல் மொத்தமும் எழுதிக் கொடுத்துவிட்டு நடு ரோட்டில் நின்றவர்கள் நிறைய பேர் சோகம் ......தன் தலைமாட்டில் எதாவது ரொக்கமோ செக் புக் ஒ இருக்கணும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 01, 2016 2:50 pm

சாவதற்கு சிலநாட்கள் முன்புதான் உயில் எழுதவேண்டும் . கடைசிவரையில் நம்மிடம் பசை இருந்தால்தான் நம்மை மதிப்பார்கள் . இல்லையென்றால் ஹோட்டலுக்குச் சென்று ஒரு காபி சாப்பிடக் கூட , மகனிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82075
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 01, 2016 6:27 pm

உயில் எழுதி விட்டீர்களா? 103459460
-
முதலில் உயில் எழுதும் அளவுக்கு கொஞ்சமாவது
சொத்து சேர்ப்பதும் அவசியம்...!
-

ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 01, 2016 9:31 pm

M.Jagadeesan wrote:சாவதற்கு சிலநாட்கள் முன்புதான் உயில் எழுதவேண்டும் . கடைசிவரையில் நம்மிடம் பசை இருந்தால்தான் நம்மை மதிப்பார்கள் . இல்லையென்றால் ஹோட்டலுக்குச் சென்று ஒரு காபி சாப்பிடக் கூட , மகனிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படும் .
மேற்கோள் செய்த பதிவு: 1209499

சாகும் தினம்தான் யாருக்குமே தெரியாதே ! சாகும் தினம் வரும்போது கையும் ஓடாது காலும் ஓடாது .வாயும் உருளாது .
உயிலில் நாம் எழுதுவது நாம் இறந்த பிறகே அமுலுக்கு வரும் . அதுவரை சொத்து பணம் எல்லாம் நம் வசமே

உயில் எழுதுவதற்கும் மரணத்திற்கும் சம்பந்தம் இல்லை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 01, 2016 11:16 pm

M.Jagadeesan wrote:சாவதற்கு சிலநாட்கள் முன்புதான் உயில் எழுதவேண்டும் . கடைசிவரையில் நம்மிடம் பசை இருந்தால்தான் நம்மை மதிப்பார்கள் . இல்லையென்றால் ஹோட்டலுக்குச் சென்று ஒரு காபி சாப்பிடக் கூட , மகனிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படும் .
மேற்கோள் செய்த பதிவு: 1209499

ஹா...ஹா...ஹா... நம் மேல் எக்ஸ்பயரி டேட்  எழுதி இருக்காங்களா என்ன ஐயா?.............புன்னகை
.
.
.
மேலும்,அது தெரிந்து விட்டால் நம்மால் வாழவே முடியாதே? ...............புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 01, 2016 11:18 pm

ayyasamy ram wrote:உயில் எழுதி விட்டீர்களா? 103459460
-
முதலில் உயில் எழுதும் அளவுக்கு கொஞ்சமாவது
சொத்து சேர்ப்பதும் அவசியம்...!
-

நிஜம் ராம் அண்ணா சூப்பருங்க புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 01, 2016 11:18 pm

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:சாவதற்கு சிலநாட்கள் முன்புதான் உயில் எழுதவேண்டும் . கடைசிவரையில் நம்மிடம் பசை இருந்தால்தான் நம்மை மதிப்பார்கள் . இல்லையென்றால் ஹோட்டலுக்குச் சென்று ஒரு காபி சாப்பிடக் கூட , மகனிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படும் .
மேற்கோள் செய்த பதிவு: 1209499

சாகும் தினம்தான் யாருக்குமே தெரியாதே ! சாகும் தினம் வரும்போது கையும் ஓடாது காலும் ஓடாது .வாயும் உருளாது .
உயிலில் நாம் எழுதுவது நாம் இறந்த பிறகே அமுலுக்கு வரும் . அதுவரை சொத்து பணம் எல்லாம் நம் வசமே

உயில் எழுதுவதற்கும் மரணத்திற்கும் சம்பந்தம் இல்லை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1209535

ரொம்ப சரியா சொன்னீங்க ஐயா ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக